ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143501 topics in this forum
-
யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னார் நோக்கிச் செல்லும் பேருந்து நடத்துனர்களும், சாரதிகளும், அதிக பயணிகளை ஏற்ற வேண்டும் எனும் குறிக்கோளில் அதிவேகமாக பேருந்தை இயக்குவதால் தாம் கடும் பீதியடைவதாக பயணிகள் விசனம் தெரிவிக்கின்றனர். குறிப்பாக யாழ்ப்பாணம் மன்னார் போக்குவரத்து சேவை காலை முதல் மாலை வரை இடம்பெற்று வருகிறது. இந்நிலையில் பயணிகள் தத்தமது வேலைகளுக்காக குறித்த பேருந்துகளில் பயணித்து வருகின்றனர். இந்நிலையில் குறித்த பேருந்து சாரதிகள் அதிக அளவில் பயணிகளை ஏற்றி செல்வதற்கு முண்டியடித்து வேகமாக செல்வதால் பயணிகள் பீதியில் பல அசௌகரியங்களுக்கு முகம்கொடுப்பதாக விசனம் தெரிவிக்கின்றனர். இது இவ்வாறிருக்க போட்டி காரணமாக சில பஸ் தரிப்பிடங்களில் உள்ள பயணிகளை ஏற்றிச் செல்லாத நிலையும் காண…
-
- 0 replies
- 419 views
-
-
இலங்கை இராணுவத்திற்கான பயிற்சிகளை இந்திய அரசாங்கம் தொடர்ந்தும் வழங்கும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மூன்று நாள் பயணமாக நேற்று புதுடெல்லியைச் சென்றடைந்தார். இன்று காலை வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்த அவர், பின்னர் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்புக்குப் பின்னர் இரு நாட்டுப் பிரதமர்களும் கூட்டாக ஊடகவியலாளர்களைச் சந்தித்து தமது சந்திப்புத் தொடர்பாக விளக்கமளித்தனர். இதன் போது இந்தியப் பிரதமர் குறிப்பிடுகையில், இந்திய - இலங்கை உறவில் இந்த ஆண்டு வரலாற்றுச் சிறப்புமிக்கது. முதலில் இலங்கை இலங்கை மைத்திரிபால சிறிசேன பதவியேற்பிற்கு பின்னர் தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியா வந்…
-
- 0 replies
- 500 views
-
-
யாழ்ப்பாணம் தென்மராட்சி விடத்தல் பளை பகுதியில் விவசாயிகளுக்கு தொல்லை கொடுத்துவந்த குரங்குகளை அப்பகுதி விவசாயிகள் பிடித்து வனஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளனர். மேற்படி பகுதியில் குரங்குகள் விவசாயத்திற்கு பெரும் நஷ்டம் விளைவித்து வந்த நிலையில் அப்பகுதி விவசாயிகள் சம்மேளனத்தின் ஒழுங்கமைப்பில் நேற்றைய தினம் 25 குரங்குகள் பொறிவைத்து பிடிக்கப்பட்டன. இவை வனஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டு வில்பத்து வனப்பகுதியில் விடப்படவுள்ளது. நோர்வூட் பகுதியில் குரங்குகளின் தொல்லை! மக்கள் விசனம் நுவரெலியா மாவட்டத்தில் நோர்வூட் வெஞ்சர் பகுதியில் குரங்குகளின் தொல்லை அதிகரித்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். நோர்வூட் காட்டுப் பகுதியில் வாழ்ந்த குரங்குகள் தமது வீடுகளு…
-
- 6 replies
- 850 views
- 1 follower
-
-
எதற்காக மகிந்த இன்னமும் அரசியலில் இருக்கிறார்? – உபுல் ஜோசப் பெர்னான்டோSEP 15, 2015 | 5:29by நித்தியபாரதிin கட்டுரைகள் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கத்தைக் கவிழ்த்து விட்டு பிரதமராகப் பதவி வகிக்கலாம் என மகிந்த விரும்பினால் அவருக்கு மைத்திரியின் ஆதரவும் தேவைப்படும். ஆனால் மைத்திரி ஒருபோதும் மகிந்தவுக்குப் பிரதமர் பதவியை வழங்க முன்வரமாட்டார். இவ்வாறு சிலோன் ருடே நாளிதழில் எழுதியுள்ள பத்தியில் குறிப்பிட்டுள்ளார் உபுல் ஜோசப் பெர்னான்டோ. இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி. மகிந்த ராஜபக்சவின் அரசியல் மீள் பிரவேசம், மற்றும் அவரது எதிர்கால அரசியற் திட்டங்கள் போன்றன தற்போது இராஜதந்திர வட்டாரங்களில் அதிகம் பேசப்படுகின்றது. மகிந்தவின் அரசியல் மீ…
-
- 0 replies
- 308 views
-
-
துருக்கியில் இருந்து நாடு திரும்பும் பிரிகேடியர் தேசப்பிரிய குணவர்த்தனவைக் கைது செய்யக் கோரி, கட்டுநாயக்க விமான நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், அவர் பின்கதவால் வெளியேறி தப்பிச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுத்தமான குடிநீர் கேட்டு போராட்டம் நடத்திய ரதுபஸ்வெல பொதுமக்கள் மீது வெலிவேரியவில் துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டவர் பிரிகேடியர் தேசப்பிரிய குணவர்த்தன. இந்தச் சம்பவத்தில் மூன்று பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் 35 இற்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். இதுதொடர்பாக சிறிலங்கா மனித உரிமை ஆணைக்குழு நடத்திய விசாரணைகளில் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்பட்டது. எனினும் முன்னைய அரசாங்கத்தினால், துருக்கியில் உள்ள சிறிலங்கா தூதரகத்தில் பாதுகா…
-
- 0 replies
- 414 views
-
-
நல்லாட்சியென்று கூறிக்கொண்டு இன்று தமிழ் மக்களை அரசாங்கம் இராணுவ ஆட்சிக்குள்ளேயே வைத்துள்ளார்கள். இந்த வகையில் இன்று வடபகுதியில் சுமார் ஒன்றரை லட்சம் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளார்கள். இதனைப் பற்றி எதனையும் கூறாது ஜ.நா சபையில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் வெறுமனே உண்மைக்குப் புறம்பான தகவல்களைக் கூறியுள்ளார் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். நேற்று ஐ.நா.சபையில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆற்றிய உரை சம்பந்தமாக இன்று மதியம் நீர்வேலியில் அவருடை அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே சுரேஷ் பிரேமச்சந்திரன் இதனைத் தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில்…
-
- 1 reply
- 353 views
-
-
புங்குடுதீவில் கூட்டு வன்புணர்வின் பின்னர் படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் சடலத்தின் கண் பகுதியில் இருந்து பெறப்பட்ட விந்தணுவை மரபணு பரிசோதனைக்கு உட்படுத்துமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.குறித்த மாணவி படுகொலை செய்யப்பட்ட வழக்கு ஊர்காவற்துறை நீதவான் எஸ்.லெனின் குமார் முன்னிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.இதன்போது, கொலை செய்யப்பட்ட மாணவியின் சடலத்தின் கண் பகுதியில் இருந்து பெறப்பட்ட விந்தணு மாதிரியை சட்ட வைத்திய அதிகாரி மயூரன் இந்த வழக்கின் மேலும் ஒரு தடயப் பொருளாக, நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.இதற்கமைய குறித்த விந்தணு மாதிரியை மரபணு பரிசோதனைக்காக, அனுப்பி வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.அத்துடன், முன்னதாக …
-
- 0 replies
- 318 views
-
-
இலங்கையில் தமிழர்கள் கௌரவத்துடன் வாழ வழி செய்ய வேண்டும் என இந்தியப் பிரமர் நரேந்திர மோடி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் வலியுறுத்திக் கூறியுள்ளார்.மூன்று நாள்கள் உத்தியோக பயணம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள இலங்கை பிரதமர் ரணில் விக்க்கிரம பிரதமர் நரேந்திர மோடியை அவரது ஹைதராபாத் இல்லத்தில் இன்று சந்தித்தபோது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.இந்த சந்திப்பில் தமிழக மீனவர்கள் பிரச்சினை, இலங்கை மீதான ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் நடவடிக்கைகள் இரு தரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் பற்றி விவாதிக்கப்பட்டதாக என்று கூறப்படுகிறது. இதையடுத்து இரு நாட்டு பிரதமர்களும் கூட்டறிக்கை வெளியிட்டனர்.இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறும் போது நான் …
-
- 0 replies
- 241 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பாக, முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணாவிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது. புலனாய்வுப் பிரிவினர் இந்தக் கொலை தொடர்பில் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந்த கொலை தொடர்பில் விசாரணை நடத்த கருணா எதிர்வரும் நாட்களில் புலனாய்வுப் பிரிவிற்கு அழைக்கப்படவுள்ளார். 2006ம் ஆண்டு மட்டக்களப்பில் வைத்து ஜோசப் பரராஜசிங்கம் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை தொடர்பில் அப்போது கிரமமான விசாரணைகள் எதுவும் நடத்தப்படவில்லை. தற்போது இந்தக் கொலை தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் கிரமமான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். http://www.seithy.com/breifNews.php?newsID=140…
-
- 0 replies
- 322 views
-
-
இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் விசாரணை அறிக்கையை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாடுகள் தெரிவித்துள்ளன. நேற்றையதினம் ஜெனீவாவில் ஆரம்பமான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30வது கூட்டத் தொடரில் உரையாற்றிய அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் இதனைத் தெரிவித்தனர். ஐ.நா.மனித உரிமைகள் பேரவை விசாரணை அறிக்கையில் முன்மொழியப்பட்டிருக்கும் விடயங்களை நிறைவேற்றுவதற்கும் நம்பத்தன்மையான பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்துவதற்கும் ஏதுவாக இலங்கை அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் பிரேரணையொன்றைக் கொண்டுவரவிருப்பதாக நேற்றைய அமர்வில் உரையாற்றிய அமெரிக்காவின் சர்வதேச அமைப்புக்களுக்குப் பொறுப்பான பிரதி உதவித் தூதுவர் எரின்.எம்.பார்க்கிள…
-
- 0 replies
- 357 views
-
-
பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாடிய பின்னர் நான்கு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரமவும் இச்சந்திப்பில் கலந்து கொண்டுள்ளனர். பிரதமர் ரணில் பதவியேற்றதன் பின் மேற்கொள்ளும் முதல் விஜயமாக இந்தியா சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இந்திய பிரதமர் நரேந்திரமோடியை புதுடெல்லியில் உள்ள ஹைத்ராபாத் இல்லத்தில் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்த சந்திப்பில் இலங்கை, இந்திய மீனவர்கள் பிரச்சினை உட்பட முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. அதேவேளை பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இன்று காலை …
-
- 0 replies
- 330 views
-
-
மனித உரிமை விவகாரங்கள் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றம்சுமத்தியுள்ளார். இலங்கை மனித உரிமை விவகாரம் தொடர்பில் சில நாடுகளின் தற்போதைய நிலைப்பாடு மனித உரிமை விவகாரம் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளதனை தெளிவாக அம்பலப்படுத்தியுள்ளது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக் காட்டியுள்ளதாக அவரது பேச்சாளர் ரொஹான் வெலிவிட்ட தெரிவித்துள்ளார். யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் ஒரு கட்டத்தில் சர்வதேச சுயாதீன விசாரணை கள் கோரி வந்த அமெரிக்கா தற்போது உள்நாட்டு விசார ணைப் பொறிமுறைமைக்கு ஆதரவளித்து வருகிறது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ஆட்சியில் இருந்தால் அமெரிக்காவும் நட்பு நாடுகளும் சர்வதேச சுயாதீன விசார ணையை வலியுறுத்தி அழுத்தம் கொடுத்திருக்…
-
- 0 replies
- 384 views
-
-
இறுதிப்போரில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றனவா என தமிழர் தரப்பினருக்கும் சர்வதேச தரப்புக்கும் ஏற்பட்டிருக்கும் சந்தேகங்களை தீர்க்கவேண்டியது அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பாகும். குற்றங்கள் இடம்பெற்றிருப்பின் நியாயம் நிலைநாட்டப்பட வேண்டும் என ஜேவிபி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது பொதுமக்களின் மனித உரிமைகளை மீறும் செயற்பாடுகள் எவையும் நடந்துள்ளனவா என்பது தொடர்பில் பாரிய சந்தேகக் கேள்விகள் அனைத்து தரப்பினாலும் எழுப்பப்பட்டுள்ளன. இலங்கையில் தமிழ் பேசும் மக்களின் சார்பில் கேள்வி எழுப்பும் வேளையில் சர்வதேச அமைப்புக்களும் மனித உரிமைகள் ஆணைக்குழுவும் இலங்கை மீது…
-
- 0 replies
- 358 views
-
-
இறுதி யுத்தம் முடிந்த பின்னர் விடுதலைப் புலிகளின் தலைவர் பற்றிய செய்தி 2009ம் ஆண்டு மே மாதம் 17ம் திகதி இலங்கை முழுவதும் ஒரு பரபரப்பான செய்தியாக வெளியானது. அதாவது கடந்த 30 ஆண்டுகளாக வடகிழக்கில் நிலவி வந்த விடுதலைப் புலிகளின் யுத்தம் முடிவடைந்து விட்டது. புலிகளின் தலைவர் உயிரோடு சிங்கள இராணுவத்தால் பிடிக்கப்பட்டு அடித்து சித்திரவதை செய்யப்;பட்டு அவரது தலையை வெட்டி கொல்லப்பட்டார் என்ற செய்தி நாடு முழுவதும் பரவியது. அதற்கு ஏற்றால் போல் புலிகளின் தலவர் பிரபாகரனின் இறந்து போன சடலம் சிங்கள தேசத்தின் தொலைக் காட்சியில் காண்பிக்கப்பட்டது. சிங்கள தேசம் மகிழ்ச்சி ஆரவாரத்தில் பட்டாசு கொளுத்தி மகிழ்ந்தது. சிங்கள தேசத்தின் இராணுவப் படையினரால் காண்பிக்கப்பட்ட பிரபாகரனின் சடலத்தை புலி…
-
- 4 replies
- 1.2k views
-
-
மகிந்தவுடன் இப்போது மிஞ்சியுள்ள 47 பேர்SEP 12, 2015 | 9:42by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 47 நாடாளுமன்ற உறுப்பினர்கள், எதிர்க்கட்சி வரிசையில் அமரத் தீர்மானித்துள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். ”சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 36 நாடாளுமன்ற உறுப்பினர்கள், தேசிய அரசாங்கத்தில் அமைச்சர் அல்லது இராஜாங்க அமைச்சர் அல்லது பிரதி அமைச்சர் பதவியையோ, மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் பதவியையோ ஏற்காமல் உள்ளனர். அவர்கள் நிச்சயமான எதிர்க்கட்சியில் அமர்ந்து கொள்ளுவர். மேலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் உள்ள ஏனைய கட்சிகளின் 11 உறுப்பினர்களும் எதிர்க்கட்சியில் அமர்ந்து கொள்ளவுள்ளனர். எமக்கு எதிர்க்கட்சித் தலைவர…
-
- 4 replies
- 1.4k views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனின் முக்கிய கடிதத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தலைமையிலான சட்ட வல்லுநர் குழுவொன்று ஜெனிவா சென்றுள்ளது. ஐ.நா மனித உரிமை பேரவையின் 30வது கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகவுள்ள நிலையிலேயே கூட்டமைப்பின் சட்ட வல்லுனர்கள் குழு நேற்று முன்தினம் ஜெனிவா விரைந்துள்ளது. இக்குழுவினர் ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் உறுப்பு நாடுகள் உட்பட பல்வேறு நாடுகளின் உயர் மட்ட இராஜதந்திரிகளுடன் விசேட சந்திப்புக்களை நடத்தவுள்ளனர். இதன்போது இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்கள் குறித்து விசேட கவனம் செலுத்தவுள்ளனர். இது தொடர்பில் ஜெனீவா சென்றுள்ள தமி…
-
- 11 replies
- 1.5k views
- 1 follower
-
-
கூட்டமைப்புக்குள் எந்தப் பிரச்சினைகளும் கிடையாது. சில கருத்து முரண்பாடுகள் அவ்வப்போது ஏற்படலாம். அதைப் பெரிதுபடுத்துவதில் ஒரு சில ஆங்கில, சிங்கள ஊடகங்கள் முனைப்பாக உள்ளன எனத் தெரிவித்துள்ளார் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன். தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் முரண்பாடுகள் அதிகரித்து வருவதாக வெளியாகும் செய்திகள் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவர்- தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஓர் ஜனநாயகக் கட்சி என்ற வகையில் கருத்து மோதல்கள் இடம்பெறுவது சர்வசாதாரண விடயம். அதனை ஏன் பெரிதுபடுத்த வேண்டும்? இவை அனைத்தையும் நாம் பெரிதுபடுத்துவதில் எவ்வித அர்த்தமும் இல்லை. எமது நோக்கம் நன்றாக அமைய வேண்டும். அது மாத்திரமன்றி எவரும் தனது கருத்தைக் கூற பரிபூரணமான உரிமையுடையவர்களாவார். அந்தவக…
-
- 16 replies
- 1.6k views
- 1 follower
-
-
இலங்கையில் வருடம் ஒன்றுக்கு ஒரு மில்லியனுக்கும் மேல் பாலியல் உணர்வுகளை தூண்டும் மருந்து, மாத்திரைகள் விற்பனையாவதாக ஆபத்தான ஔடதங்கள் தொடர்பான தேசிய கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது. வலி நிவாரணி மாத்திரையான பெரசிட்டமோல் மாத்திரை விற்பனைக்கு நிகராக, இந்த பாலியல் உணர்வுகளை தூண்டும் மாத்திரைகள் விற்பனையாகி வருவதாக சபையின் தலைவர் மருத்துவர் சமீர திலங்க தெரிவித்துள்ளார். போதிளவுக்கு மேலதிக இவ்வாறான மருந்து, மாத்திரைகளை பயன்படுத்துவது பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதுடன் உயிரிழப்பையும் ஏற்படுத்தும். பாலியல் உணர்வுகளை தூண்டும் மாத்திரைகளை பயன்படுத்தியதன் காரணமாக சில உயிரிழப்புகள் ஏற்பட்டதாக அண்மையில் செய்திகள் வெளியாகி இருந்தன. மாரவில – மூதுகட்டுவ பிரதேசத்தில் விடுதி ஒன்றில் ஆணும…
-
- 2 replies
- 1.1k views
-
-
ஐ.நா. மனித உரிமை பேரவையின் 30 ஆவது கூட்டத்தொடர் நாளை ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில் அதில் பங்கேற்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சட்டத்தரணிகள் அடங்கிய குழுவினர் நேற்று அதிகாலை ஜெனீவா சென்றுள்ளனர். ஜெனீவா சென்றுள்ள கூட்டமைப்பின் குழுவினர் அங்கு ஐ.நா. உறுப்பு நாடுகளுடன் விரிவான கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவரும் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். இலங்கைக்கு எதிரான ஐ.நா. விசாரணை அறிக்கை எதிர்வரும் 16ஆம் திகதி ஜெனீவாவில் வைத்து உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவுள்ள நிலையில் அதில் உள்ள பரிந்துரைகளை சர்வதேச மத்தியஸ்தத்துடன் நிறைவேற்ற வேண்டும் என கூட்ட…
-
- 9 replies
- 1.2k views
- 2 followers
-
-
கடந்த 75 நாட்களில் யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த வாகன விபத்தில் மாத்திரம் 48 பேர் உயிரிழந்துள்ளதாக யாழ் மாவட்ட வைத்தியசாலை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். அத்துடன் விபத்தில் காயமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 700 என குறிப்பிடப்படுகின்றது. கிட்டத்தட்ட நான்கு ஆயிரம் வாகன விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக செய்தி அறிக்கைகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் தகவலுக்கமைய இவ் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. வேகமாக வாகனம் ஓட்டுகின்றமையே இவ்வாறான விபத்துக்களுக்கு காரணம் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். http://www.tamilwin.com/show-RUmtyJSYSVjt7C.html
-
- 1 reply
- 511 views
-
-
கருணா பிரிந்த பின் கூறுவது அனைத்தும் சரியா? ஒஸ்லோவில் நடந்தது உண்மையா? கருணாவின் பிரிவால் வெளிவரும் உண்மைகள்..... கருணா பிரிந்ததற்கு பல காரணங்கள் கூறலாம்? அவை அனைத்தும் சரியானவையா? கருணாவின் அடுத்த இலக்கு என்ன? வடக்கு முதல்வரின் கூற்று சரியா? தமிழரசுக் கட்சி மற்றும் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன? என லங்காசிறி வானொலியின் அரசியற் களம் வட்டமேசை நிகழ்ச்சியில் விபரிக்கிறார் கனடாவில் வசித்து வரும் மூத்த அரியல் ஆய்வாளர் நேரு குணரெட்னம். http://www.tamilwin.com/show-RUmtyJSYSVjt4A.html
-
- 0 replies
- 784 views
-
-
கடுமையான நிபந்தனையுடன் சிறிலங்காவிடம் கையளிக்கப்பட்ட ஐ.நா விசாரணை அறிக்கைSEP 14, 2015 | 2:08by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் ஐ.நா விசாரணை அறிக்கையின் உள்ளடக்கம் எக்காரணம் கொண்டும் வெளியே கசியவிடப்படக் கூடாது என்ற கடுமையான நிபந்தனைகளின் அடிப்படையிலேயே, சிறிலங்கா அரசாங்கத்துக்கு அறிக்கையின் முற்பிரதியை ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு கையளித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் மேற்கொண்ட விசாரணையின் அறிக்கையின் பிரதி சிறிலங்கா அரசாங்கத்திடம் கடந்த வெள்ளிக்கிழமை கையளிக்கப்பட்டது. இந்த அறிக்கை வெளிவிவகார அமைச்சு மூலம் சிறிலங்கா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது…
-
- 0 replies
- 683 views
-
-
பொதுத்தேர்தல் காலத்தில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வெளியிட்ட அறிக்கைகள் குறித்து அவருடன் பேசவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். விக்னேஸ்வரனை விரைவில் சந்தித்து முரண்பாடுகள் குறித்து பேச்சு நடத்தவுள்ளதாகவும் சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார். தமிழரக்கட்சியின் மத்திய குழுக் கூட்டம் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் நேற்றுக் கொழும்பில் இடம்பெற்றிருந்தது. இதன்போது தமிழரசுக்கட்சியின் தலைவர் மற்றும் ஏனைய உறுப்பினர்களால் பொதுத்தேர்தல் காலத்தில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் செயற்பட்ட விதம் மற்றும் அவரது அறிக்கைகள் குறித்து பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சேனாத…
-
- 15 replies
- 1.7k views
- 2 followers
-
-
அப்பா எங்கள் அப்பா!!!!! நெஞ்சு வெடிக்கின்றது.
-
- 21 replies
- 2.5k views
-
-
வெளிநாடுகளிலுள்ள புலம்பெயர் உறவுகளிடமிருந்து சேகரிக்கப்படும் நிதிக்கான கணக்குகளை சமர்ப்பதில்லை என வடக்கு முதல்வர் என்னிடம் கூறியதாக சில இணைத்தளங்களில் வெளிவந்த செய்தியில் உண்மையில்லை என வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள மறுப்பறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பில் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் மாகாண முதலமைச்சர் அவர்களுக்கு எதிராக சில குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தது. அதில் கனடாவில் நிதி சேகரிப்புக்காக முதலமைச்சர் செல்ல மறுத்தமை தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக முதலமைச்சர் அவர்களுடன் ஏற்கனவே கலந்துரையாடியவன் என்ற வகை…
-
- 0 replies
- 541 views
-