ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143515 topics in this forum
-
சிறிலங்காவுக்கான தரைவழிப்பாதை திட்டம் விரைவில் சாத்தியமாகும்- இந்திய அரசு நம்பிக்கைAUG 04, 2015 | 2:44by இந்தியச் செய்தியாளர்in செய்திகள் தமிழ்நாட்டின் இராமேஸ்வரத்தையும், சிறிலங்காவின் தலைமன்னாரையும் இணைக்கும் தரைவழி மற்றும் தொடருந்துப் பாதை இணைப்பு விரைவில் சாத்தியமாகக் கூடும் என்று இந்திய மத்திய அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான ராஜ்யசபையில் நேற்று எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு இதுதொடர்பாக பதிலளித்துள்ள இந்திய மத்திய நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து இணை அமைச்சர் பொன் இராதாகிருஸ்ணன், “தமிழ்நாட்டின் இராமேஸ்வரத்தையும், சிறிலங்காவின் தலைமன்னாரையும் இணைக்கும் தரைவழி மற்றும் தொடருந்துப் பாதை இணைப்பு விரைவில் சாத்தியமாகக் கூடும். சிறிலங்க…
-
- 4 replies
- 739 views
-
-
வாக்குப் பொறுக்கப் பயன்படுத்தப்படும் பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலர் வேந்தன்இலங்கை அரசிற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான அதிகாரத் தரகராகச் செயற்பட்டவரும் பரபப்புச் செய்தியாளருமான வித்தியாதரன் ஆரம்பித்துள்ள புதிய கட்சியான ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தேர்தல் வேட்பாளர்களில் ஒருவராக பிரபாகரனின் மெய்பாதுகாவலராகச் செயற்பட்ட வேந்தன் அல்லது சிவானந்தன் நவீந்திரா நியமிக்கப்பட்டுள்ளார். இத் தகவல்களை இலங்கை அரசின் லேக் ஹவுஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இலங்கை ஒற்றையாட்சிப் பாராளுமன்றத்தில் ஆசனங்களைக் கைப்பற்றும் நோக்குடன் வித்தியாதரனால் பயன்படுத்தப்பட்ட வேந்தன் போரில் இரண்டு கால்களையும் இழந்தவர். தவிர, காமினி அல்லது ராசையா தர்மகுலசிங்கம் என்ற மற்றொரு கால்களை இழந்த விடுதலைப்…
-
- 1 reply
- 551 views
-
-
இலங்கையின் வரைபடத்தில் வடக்கு,கிழக்கு இல்லாத புதிய நாட்டை உருவாக்குவதே ரணில் விக்கிரமசிங்க முன்வைத்துள்ள புதிய நாட்டை கட்டியெழுப்பும் கொள்கைத் திட்டமாகும் என்று முன்னாள் ஜனாதிபதியும் ஐ.ம.சு.மு.வின் குருணா கல் மாவட்ட வேட்பாளருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். சமஷ்டிக்கு அப்பால் சென்ற தனிநாடே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கையாகும். இதனோடு ரணில் எவ்வாறு இணங்கினார் என்பது கேள்விக் குறியாகவுள்ளது என்றும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டார். கொழும்பு விஹார மகாதேவி உள்ளக அரங்கில் 64 சிங்கள பௌத்த அமைப்புக்கள் இணைந்து கையெழுத்திட்ட பொது உடன்பாட்டு மாநாட்டில் நேற்றைய தினம் கலந்துகொண்டு உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக…
-
- 2 replies
- 941 views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் பிரிய முனைவதாக இந்தியாவின் ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் உள்ளக தகவல்களை மேற்கோள்காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடாகவே அவர் வடமாகாணத்தின் முதலமைச்சராக தெரிவாகியுள்ளார். எனினும் இந்த முறை பொதுத் தேர்தலில் தாம் யாருக்கும் ஆதரவாக பிரசாரம் செய்யப் போவதில்லை என்று அவர் அறிவித்துள்ளார். இது கூட்டமைப்பின் அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. அதேநேரம் தமக்கான தனித்துவமான அரசியல் கொள்கைகளை வகுத்துக்கொண்டுள்ள அவர்இ தமிழ் தேசிய கூட்டமைப்பின் உத்தரவுகளை மீறி இனப்படுகொலைகளுக்கு எதிரான தீர்மானத்தை வடமாகாண சபையில் வைத்து நிறைவேற்…
-
- 0 replies
- 393 views
-
-
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் வடக்கு முதலமைச்சர் நடுநிலை வகிக்கப்போவதான அறிவிப்பின் மத்தியில் அவரிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை முன்னெடுத்து பதவி கவிழ்க்கப்போவதாக அவரது சக அமைச்சர்கள் இருவர் அச்சுறுத்தியுள்ளமை தொடர்பான செய்திகள் வெளியாகியுள்ளது. இரு அமைச்சர்கள் சுமந்திரன், மாவையோடு உள்ள அதேவேளையில், முதலமைச்சருக்கு நெருக்கமான இரு அமைச்சர்களே முதலமைச்சருக்க எதிராக நடக்கும் சதிகளை அம்பலப்படுத்தியதாக தெரியவருகிறது. வடமாகாணசபை அமைச்சர்கள் இருவர் முன்னதாக முதலமைச்சரினை நேரில் சந்தித்து தேர்தலில் நடுநிலை வகிக்கும் முடிவை மீள் பரிசீலினை செய்யுமாறு கோரியதாக தெரியவருகின்றது. தங்களது அறிவிப்பினால் மக்கள் குழப்பமடைந்துள்ளனர். மக்களிற்கு தெளிவுபடுத்தவும் கூட்டமைப்பி…
-
- 3 replies
- 714 views
-
-
திருச்சி சிறப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த ஈழத்தமிழர் ஒருவரும் அவரது மனைவியும் சிறைக்கூண்டுக்குள் தற்கொலை செய்ய முயன்று ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு திருச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஈழத்தைச் சேர்ந்த தங்கவேலு மகேஸ்வரன் அவரது மனைவியான திருசாந்தி ஆகியோரே தற்கொலைக்கு முயன்றவர்களாவர். தங்கவேலு மகேஸ்வரன் கடந்த மூன்று வருடங்களாக திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இவரை விடுதலை செய்யுமாறு இந்திய உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்தபோதும் தொடர்ந்து அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையால் மனம் உடைந்த நிலையில் இருந்துள்ளார். இந்த நிலையில் இன்று திங்கட்கிழமை அவரது மனைவி அவரைப் பார்ப்பதற்காக சிறைக்குச் சென்றார். அங்கு இருவரும் அதிக மருந்து வில்லை…
-
- 1 reply
- 714 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்தேர்தல்விஞ்ஞாபனத்தில்சமஷ்டி முறைமையில்தீர்வு என்றுகுறிப்பிட்டதன் மூலம்கூட்டமைப்பின் தலைவர்சம்பந்தன் பெரும் தவறிழைத்துள்ளார். கஜேந்திரகுமார்பொன்னம்பலத்தை தோற்கடிக்கவே அவர் இவ்வாறு செய்துள்ளார் என்று மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முக்கியஸ்தருமான தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார். கஜேந்திரகுமாரின் கொள்கைகளை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஆனால் அவர் ஒரே கொள்கையில் தொடர்ச்சியாக இருந்து வருகின்றார். எனினும் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவ்வப்போது கூட்டமைப்பின் அரசியல் எதிர்காலம் கருதி நிலைப்பாடுகளை மாற்றிவருகின்றார் என்றும் அவர் குறிப்பிட்டார். கூட்…
-
- 4 replies
- 635 views
-
-
அரிய வீடியோ காட்சி. )))))))))( 4 ) சந்திரிக்காவின் கணவர் விஜயகுமாரதுங்க 1986ஆம் ஆண்டு யாழ் கோட்டையில் இருந்து வெளியில் வந்து விடுதலைப்புலிகளின் அன்றைய யாழ் மாவட்ட தளபதியாக இருந்த கிட்டண்ணாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய அரிய வீடியோ காட்சி. இதில் காணப்படும் தளபதிமார்கள் தியாகி திலீபன் அண்ணா. கேடி அண்ணா. சூசை அண்ணா .ஜொனி அண்ணா. மற்றும் கோட்டை ராணுவ முகாமுக்கு பொறுப்பாக இருந்த கொத்தலாவலை. https://www.facebook.com/kajan.ellalan/videos/871478296256081/
-
- 1 reply
- 639 views
-
-
சம்பந்தனின் ‘2016 இல் தீர்வு’ அரசியல் மறந்து கதைக்கும் ஒருவரின் கூற்று எனவும் 2016க்குள் எலும்புத் துண்டைத்தானும் சிங்களத்திடமிருந்து பெற்றுவிட முடியாது என தமிழரசுக்கட்சியின் நிறுவன உறுப்பினர் நாதன் ஐயா தெரிவித்துள்ளார். கஜேந்திரகுமார் அவர்களே தந்தை செல்வாவின் எண்ணங்களைச் மனதில் வைத்து செயற்படுவதாகவும், சம்பந்தன் தந்தையின் கொள்கைகளை மறந்து செயற்படுவதாகவும் கூறினார். தமிழ்லீடருக்கு வழங்கிய நேர்காணலில் மாவை, சுமந்திரன் மற்றும் முதல்வர் விக்கினேஸ்வரன் தொடர்பாகவும் தனது எண்ணங்களை வெளிப்படுத்திய நாதன் ஐயா தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் வன்னி மாவட்டத்தில் போட்டியிடுகிறார். வவுனியா நகர சபைத் தலைவராக இருந்த நாதன் ஐயா அதிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னணியையும் விவரிக்கிறா…
-
- 6 replies
- 696 views
-
-
இலங்கை பொலிஸாருக்கு அவுஸ்திரேலிய பொலிஸார் உதவியதாக குற்றச்சாட்டு [ திங்கட்கிழமை, 03 ஓகஸ்ட் 2015, 05:13.49 PM GMT ] இலங்கை பொலிஸாருக்கு அவுஸ்திரேலிய மத்திய பொலிஸார் உதவியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கடத்தல்கள், சித்திரவதைகளில் ஈடுபடுவதாக இலங்கைப் புலனாய்வுப் பிரிவினருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு அவுஸ்திரேலிய பொலிஸார் உதவிகளை வழங்கியுள்ளனர். கருவிகள், இயந்திரங்களை வழங்குதல் மற்றும் பயிற்சி அளித்தல் என பல்வேறு வழிகளிலும் உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இறுதிக்கட்ட போரின் போது இலங்கையிலிருந்து அதிகளவில் அவுஸ்திரேலியாவிற்கு படகு மூலம் அகதிக் கோரிக்கையாளர்கள் செல்லத் தொடங்கினர். இதனை தடுக்கும் நோக்கில் இலங்கையுடன் அவு…
-
- 0 replies
- 324 views
-
-
விக்னேஸ்வரனின் பக்கச்சார்பின்மை! எழுப்பும் கேள்விகள் பாராளுமன்றத் தேர்தலுக்கு இன்னமும், இரண்டு வாரங்களே இருக்கின்ற நிலையில், எல்லாக் கட்சிகளுமே தம்மால் இயன்றளவுக்கு மக்களின் ஆதரவைத் திரட்டிக் கொள்வதற்கான பிரசார உத்திகளைக் கையாண்டு வருகின்றன. வடக்கு தேர்தல் களத்திலும், பிரசாரங்கள் சூடுபிடித்திருக்கின்றன. தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்பதை இதுவரையான தேர்தலில் நிரூபித்து வந்திருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இப்போது வாக்குகளைப் பங்கு போடுவதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஜனநாயகப் போராளிகள் கட்சி போன்ற கட்சிகளும் களமிறங்கியிருக்கின்றன. எப்போதுமே, கொழும்புடன் இணக்க அரசியல் நடத்தி வந்த ஈ.பி.டி.பி.யும், அங்குமிங்குமாக நின்ற தமிழர் விடுதலைக் கூட்டணியும் இம்முறை தனி…
-
- 35 replies
- 2.2k views
-
-
சிங்கள தேசத்தைக் கட்டியெழுப்ப 61 பௌத்த சிங்கள பேரினவாத அமைப்புடனுடன் மகிந்த உடன்பாடுAUG 04, 2015by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிங்கள தேசத்தைக் கட்டியெழுப்புவதாக வாக்குறுதி அளித்து, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச 61 சிங்கள, பௌத்த பேரினவாத அமைப்புகளுடன் புரிந்துணர்வு உடன்பாடு ஒன்றில் கையெழுத்திட்டுள்ளார். கொழும்பு விகாரமாதேவி உள்ளக அரங்கில் நேற்று இந்த உடன்பாடு கையெழுத்திடும் நிகழ்வு இடம்பெற்றது. 61 சிங்கள, பௌத்த அமைப்புக்கள் இணைந்து 5 விடயங்களை வலியுறுத்தும் வகையில், தேசிய உடன்பாடு என்ற இந்த புரிந்துணர்வு உடன்பாடு செய்து கொள்ளப்பட்டுள்ளது. இந்த உடன்பாட்டில், மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; அனைத்துலகப் புலனாய்வுப் பிரிவுகளின் சதித்திட்டத்தி…
-
- 0 replies
- 344 views
-
-
சுதந்திரக் கட்சியில் இருந்து சந்திரிகாவையும் வெளியேற்ற வேண்டும் என்கிறார் சுசில்AUG 04, 2015 | 1:27by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கவையும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து நீக்குவது குறித்து, கட்சியின் அடுத்த மத்திய குழுக் கூட்டத்தில் ஆராயப்படும் என்று, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் சுசில் பிரேமஜெயந்த தெரிவித்துள்ளார். ஐதேகவுடன் இணைந்து கொண்டதற்காக, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உஎறுப்பினர்கள் சிலர் இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு ஆதரவளிக்கும் சந்திரிகா குமாரதுங்க மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் நடத்தப்படும் முதலாவது மத்திய குழுழுக் கூட்…
-
- 0 replies
- 430 views
-
-
இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பகுதியிலுள்ள பள்ளிவாசல்களில் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த முஸ்லிம்கள் மீது விடுதலைப்புலிகளினால் நடத்தப்பட்ட தாக்குதலின் 25வது ஆண்டு நினைவு இன்று உள்ளுர் முஸ்லிம்களினால்அனுசரிக்கப்படுகிறது துப்பாக்கிச் சூடுகளின் தாக்கம் இன்றும் பள்ளிவாசல் சுவர்களில் காணப்படுகிறது அச்சம்பவத்தில் உயிரிழந்த முஸ்லிம்களின் நினைவாக தாக்குதல்கள் நடத்தப்பட்ட பள்ளிவாசல்களில் மதரீதியான நிகழ்வுகளும் நடைபெற்றன. கடந்த 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3ஆம் திகதி இரவு மஸ்ஜிதுல் ஜும்மா பள்ளிவாசலில் இஷாத் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த முஸ்லிம்கள் மீது முதலில் தாக்குதல் நடத்திய விடுதலைப்புலிகள் பின்னர் மஞ்சந்தொடுவாய் ஹுசைனியா பள்ளிவாசலில் அவ்வேளை காணப்பட்…
-
- 5 replies
- 465 views
-
-
சுமந்திரனை வெல்ல வைப்பதற்காக என்னை புறந்தள்ளுகிறது கூட்டமைப்பு! வேட்பாளர் மதினி நெல்சன் Aug 03, 20150 பெண்கள் மீதான வன்முறைகள் முடிவுக்கு கொண்டு வரப்படவேண்டும். அத்தகைய சம்பவங்களின் பின்னணியினில் கூட்டமைப்பினை சேர்ந்தவர்கள் இருந்தால் கட்சி தலைமை தயவுதாட்சணமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டுமென அழைப்பு விடுத்துள்ளார் கூட்டமைப்பின் பெண் வேட்பாளர் மதினி நெல்சன். யாழ்ப்பாணத்தில் களம் குதித்துள்ள அவர் இன்று யாழ்.நகரினில் நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டினில் ஊடகவியலாளர்களது கேள்விகளிற்கு பதிலளித்தார். பெண்கள் மீது மேற்கொள்ளப்படும் பாலியல் துஸ்பிரயோகங்களிற்கு எதிராக நான் பெண்கள் அமைப்புக்களுடன் இணைந்து போராட்டங்களை நடத்தியுள்ளேன். அவ்வகையினில் கூட்டமைப்பின் உள்ளுராட்சி மன்ற…
-
- 4 replies
- 1.9k views
-
-
கூட்டமைப்பு அழைத்தால் இணையத் தயார்! சங்கரி August 01, 20156:59 pm தமிழ் தேசியக் கூட்டமைப்பு அழைத்தால் தமிழர் விடுதலைக் கூட்டணி இனத்தின் நன்மை கருதி மீள இணைந்து கொள்ள தயார் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று வவுனியாவில் வெளியிட்டு வைக்கப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு அழைத்தால் தமிழர் விடுதலைக் கூட்டணி இனத்தின் நன்மை கருதி மீள இணைந்து கொள்ள தயார் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று வவுனியாவில் வெளியிட்டு வைக்கப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில், இன ஒற்றுமையை வலியுற…
-
- 12 replies
- 1.4k views
-
-
வாகனங்களைப் பயன்படுத்த சிறிலங்கா இராணுவ அதிகாரிகளுக்கு புதிய கட்டுப்பாடுAUG 03, 2015 | 7:47by கார்வண்ணன்in செய்திகள் மீரிஹானவில் சிறிலங்கா இராணுவத்தினரின் பயன்பாட்டில் இருந்த வெள்ளை வான் ஒன்று காவல்துறையினரிடம் அகப்பட்டதை அடுத்து, பிரிகேடியர் மற்றும் அதற்கு மேற்பட்ட பதவிகளில் உள்ள சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் வாகனங்களைப் பயன்படுத்துவது குறித்து புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளார். பிரிகேடியர் மற்றும் அதற்கு மேற்பட்ட பதவி நிலைகளில் உள்ள அதிகாரிகள் தமது அதிகாரபூர்வ வாகனங்களிலோ. வாகனத் தொடரணியிலோ பொதுமக்கள் பயன்படுத்தும் இலக்கத் தகடுகளைப் பயன்படுத்தக் கூடாது. குறிப்பிட்ட அதிகா…
-
- 1 reply
- 311 views
-
-
‘சிந்தியுங்கள்’ வேலைத்திட்டத்திற்கு மக்கள் பாரிய ஆதரவு வழங்கி வருகின்றனர் Aug 03, 2015 Sujithra Chandrasekara Local, News Ticker, Top Slider தகுதியானவர்களுக்கு வாக்களிக்க வேண்டியதன் முக்கியத்துவதம் தொடர்பில் ஆரம்பிக்கப்பட்ட ‘சிந்தியுங்கள்’ திட்டம் இன்றும் முன்னெடுக்கப்பட்டது. நியூஸ்பெஸ்ட் , சக்தி மற்றும் சிரச ஆகியன கெஃபே நிறுவனத்துடன் இணைந்து இந்த திட்டத்தை முன்னெடுக்கின்றது. கதிர்காமத்தில் பயணத்தை தொடங்கிய சிந்தியுங்கள் திட்டத்திற்கு தனமல்விலவில் பாரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. மக்களின் வாக்கு, மோசடிகள் அற்ற சட்டத்தை மதிக்கும் நபர்களுக்கு வழங்க வேண்டும் என்பதற்காக தனமல்விலவில மக்கள் உறுதிமொழி வழங்கினார்கள். இதன் பின்னர் சிந்தியுங்கள் திட்டம் உடவலவ பிரதேசத்த…
-
- 0 replies
- 345 views
-
-
வடக்குக்கான அதிவேக நெடுஞ்சாலை கட்டுமானப்பணி இன்று ஆரம்பம்! [ திங்கட்கிழமை, 03 ஓகஸ்ட் 2015, 02:35.47 PM GMT ] வடக்குக்கான அதிவேக நெடுஞ்சாலையின் ஒரு பகுதியான கொழும்பு - கண்டிக்கான நெடுஞ்சாலையின் கட்டுமானப்பணிகள் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் சமன் பண்டார தெரிவித்துள்ளார். இதன் முதற்கட்டப் பணியாக கடவத்தையிலிருந்து மீரிகமை வரையிலான அதிவேக நெடுஞ்சாலைக்கான கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து மீரிகமை-குருநாகல், குருநாகல்-கண்டி என்று இந்த கட்டுமானப்பணிகள் தொடரும் என்றும் குருநாகலில் இருந்து தம்புளை வரையிலான நெடுஞ்சாலையும் அ…
-
- 1 reply
- 540 views
-
-
சுமந்திரனுக்கு வடமாகாணசபை செருப்படி ‘புலிகள் இயக்கம் ஒரு பயங்கரவாத அமைப்பு புலிகளுக்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு வேலை செய்திருக்கவில்லை. புலிகளுடன் எவ்வித கூட்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு கிடையாது. புலிகளின் கொள்கைகளையும் ஏற்கவில்லை. தமிழ்தேசிய கூட்டமைப்பு தமிழர் உரிமைக்காகப் பாடுபடுகின்றது. அதற்காக பயங்கரவாதத்தை ஊக்குவிக்கவோ ஆதரிக்கவோ இல்லை. புலிகள் மீண்டும் ஒன்று திரள்வார்கள். இலங்கைளில் மீண்டும் பயங்கரவாதம் புலி வருகை என்பது உண்மைக்கு புறம்பானது அப்படி ஒரு நிலை வந்தாலும் மக்கள் அவர்களை ஆதரிக்கவோ அனுமதிக்கவோ மாட்டார்கள்.’ இது இரா.சம்பந்தன் அவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக இறக்குமதி செய்யப்பட்ட சட்டத்தரணி ம.அ. சுமந்திரன் அவர…
-
- 1 reply
- 2k views
-
-
விடுதலைப்புலிகளை கூண்டில் ஏற்ற ஆணை கேட்கிறது கூட்டமைப்பு!? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடமாகாண சபைத் தேர்தலுக்கான தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை முன்வைத்துள்ளது. அதாவது அவ் அமைப்பு தனது கொள்கைகளையும் எதிர்கால வேலைத்திட்டங்களையும் முன் வைத்து தமிழ் மக்களிடம் அவர்களின் ஆணையைக் கோரியுள்ளது.தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் இன்றைய போராட்டத்தின் தலைமை சக்தியாகவே எதிர்பார்க்கின்றனர். அவ்வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒவ்வொரு நகர்வும் இலட்சிய உறுதி கொண்டதாகவும், நேர்மையானதும் தூய்மையானதுமாக இருக்கவேண்டியது ஒரு கட்டாயமான தேவையாகும். எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்ட ஒரு முக்கியமான தமிழ் ம…
-
- 2 replies
- 438 views
-
-
மகிந்த அரசு இந்தியாவைப் புறக்கணித்து செயற்படவில்லையாம்- அனுர யாப்பா கூறுகிறார்AUG 03, 2015 | 12:40by கி.தவசீலன்in செய்திகள் முன்னைய மகிந்த ராஜபக்ச அரசாங்கம் இந்தியாவைப் புறக்கணித்து செயற்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை நிராகரித்துள்ளார் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் அனுர பிரியதர்சன யாப்பா. குருநாகலவில் உள்ள தனது இல்லத்தில் வைத்து, தி ஹிந்து நாளிதழுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ”எப்படி இந்தியாவைப் புறக்கணிக்க முடியும்? உணவுப் பொருட்கள் உள்ளிட்ட பெரும்பாலான சிறிலங்காவின் இறக்குமதிகள் இந்தியாவில் இருந்து தான் மேற்கொள்ளப்படுகிறது. பெரும் எண்ணிக்கையான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். பெருமளவு இந்திய நிறுவனங்கள் இங்கு செயற்படுகின்றன…
-
- 0 replies
- 480 views
-
-
மகிந்த ஆட்சியமைத்தால் இந்தியாவுடனான உறவு மைல்கல்லாக அமையும் – தயான் ஜெயதிலகAUG 03, 2015 | 10:38by கார்வண்ணன்in செய்திகள் வரும் 17ஆம் நாள் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றி பெற்று ஆட்சியமைத்தால், சிறிலங்கா அரசாங்கத்தின் வெளிவிவகாரக் கொள்கையில் முக்கியமானதொரு மைல் கல்லாக இந்தியாவுடனான உறவுகள் அமைந்திருக்கும் என்று கலாநிதி தயான் ஜெயதிலக தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெளிவிவகாரக் கொள்கை ஆலோசகராக அண்மையில் பொறுப்பேற்றுள்ள கலாநிதி தயான் ஜெயத்திலக, வெளிநாட்டுச் செய்தியாளர் சங்கத்தில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற சந்திப்பு ஒன்றிலேயே இந்த தகவலை வெளியிட்டுள்ளார். “ஜனவரி 8ஆம் நாள் நடந்த அதிபர் தேர்தலில் எதிரணியின் பொதுவேட…
-
- 0 replies
- 346 views
-
-
மகிந்தவிடம் கௌரவமாக ஓய்வுபெறும் திட்டமில்லையாம் – அவரது பேச்சாளர் கூறுகிறார்AUG 03, 2015 | 6:46by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் அரசியலில் இருந்து கௌரவமான முறையில் விலக இடமளிக்குமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச கோரிக்கை விடுக்கவில்லை என்று அவரது பேச்சாளர் ரொகான் வெலிவிட்ட தெரிவித்துள்ளார். இது மகிந்த ராஜபக்சவுக்கு வாக்களிக்கவுள்ள மக்களை நம்பிக்கையிழக்கச் செய்வதற்கான பொய்யான பரப்புரை என்று அவர் பிபிசி சிங்கள சேவைக்குத் தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்ச நிச்சயம் வெற்றி பெற்று பிரதமராக வருவார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றி பெற்றால், பிரதமராக மகிந்த ராஜபக்சவை நியமித்து …
-
- 0 replies
- 247 views
-
-
முன்னாள் போராளிகளை கைது செய்யும் படலம் தொடர்கிறது: பா.அரியநேத்திரன் [ செவ்வாய்க்கிழமை, 28 யூலை 2015, 06:14.10 AM GMT ] தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தங்களை ஈடுபடுத்தி தமது மக்களின் விடுதலைக்காக போராடி இன்று இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ள முன்னாள் போராளிகளை கைது செய்யும் படலம் இன்றும் தொடர்வதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் வைத்து முன்னாள் போராளியான தங்கராசா குணநாயகம் கைது செய்யப்பட்டுள்ளார். 34 வயதான இவரது சொந்த இடம் வந்தாறுமூலை தற்போது மணம் முடித்து சந்திவெளியில் வாழும் இவர் தமது குடும்ப சூழ்நிலை காரணமாக கட்டாரில் தொழில்புரிந்து வருகின்றார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த…
-
- 2 replies
- 430 views
-