ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143516 topics in this forum
-
புலிகளை தோற்கடித்தவர்கள் குருநாகல் பிள்ளைகளே July 20, 20151:10 am நாட்டிலுள்ள சகல பகுதிகளுக்கும் நாளாந்தம் சடலங்கள் செல்லும் யுகத்தை தாமே முடிவுக்குக் கொண்டுவந்ததாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். குருநாகல் மாவட்டத்தில் ஐ.ம.சு.முவின் முதன்மை வேட்பாளராகப் போட்டியிடும் மஹிந்த ராஜபக்ஷ நேற்றையதினம் கல்கமுவ பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார். கல்கமுவ பொல்பிட்டிகம, யாப்பகூவ, இரியால, வாரியபொல, பண்டுவஸ்நுவர, பெல்காவல ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கலந்துகொண்ட பிரசாரக் கூட்டத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அன்று யுத்தம் இருந்த காலத்தில் இந்தக் குருநாகல் மாவட்ட பிள்ளைகள்தான் அதிகமாக யுத்தத்துக்குப் போனார்கள்…
-
- 1 reply
- 752 views
-
-
தமிழ் சமூகம் தோற்றுப்போன சமூகமல்ல. நாம் வலிமையோடு மீண்டெழுந்து முன்வரவேண்டும். தமிழினம் ஒரு தேசிய இனம் என்ற உறுதிப்பாட்டோடு எமது உரிமைக்கோரிக்கையை முன்வைக்க வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் திருமதி பத்மினி சிதம்பரநாதன் பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக ஊடகங்களிற்குக் மேலும் தெரிவித்ததாவது: இன்று தமிழ் மக்களிடம் நிலவும் நம்பிக்கையீனம் மனச்சோர்வு போன்றவற்றை அகற்றி கூட்டு உறவும், செயலாற்றல் வலிமையும் மிக்கஒரு மக்கள் சமூகத்தை நாம் கட்டியெழுப்ப வேண்டும். நேர்மையோடும் உறவுப் பிணைப்போடும் அரசியல் தலைமையும் மக்களும் ஒன்று க…
-
- 1 reply
- 460 views
-
-
பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடீனின் மரணம் குறித்த உண்மைகளை மூடி மறைக்க திட்டமிட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தாஜூடீன் பயணம் செய்த வாகனம் தீப்பற்றி எறிந்து மரணம் சம்பவித்ததாக காவல்துறை விசாரணை அறிக்கை தெரிவித்திருந்தது, எனினும் அரச இரசாயன பகுப்பாய்வு அறிக்கையில் தாஜூடீனின் நுரையீரலில் காபன் மொனொக்சைட் படிமங்கள் இருப்பதாக குறிப்பிடப்படவில்லை. இதன் ஊடாக தாஜூடீனின் பிரேதப் பரிசோதனை அறிக்கைக்கும் அரச இரசாயன பகுப்பாய்வு அறிக்கைக்கும் இடையில் முரண்பாடு காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.நாரஹேன்பிட்டி காவல்துறையினர் விசாரணைகளின் போது உரிய வழிமுறைகளை பின்பற்றவில்லை என குறிப்பிட்டுள்ளது. 2012ம் ஆண்டு மே மாதம் 17…
-
- 0 replies
- 443 views
-
-
மகிந்தவின் மூன்று விசுவாசிகளை தேசியப்பட்டியலில் இருந்து கடைசிநேரத்தில் நீக்கினார் மைத்திரிJUL 19, 2015 | 12:06by கார்வண்ணன்in செய்திகள் மகிந்த ராஜபக்சவினால் தேசியப்பட்டியலில் உள்ளடக்கப்பட்ட மூவரின் பெயர்களை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கடைசி நேரத்தில், நீக்கியுள்ளதாகத் தகவல் வெளியிட்டுள்ளது கொழும்பு ஆங்கில வாரஇதழ். கடந்த செவ்வாய்க்கிழமை ஊடகங்கள் மத்தியில் உரையாற்றுவதற்கு முன்னதாக, மைத்திரிபால சிறிசென கடும் நிலைப்பாட்டை எடுத்திருந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் சுசில் பிரேமஜெயந்தவை சந்தித்து, தேசியப் பட்டியலில் இடம்பெறும் வேட்பாளர்கள் குறித்து கவனமாகப் பரிசீலித்தார். அதில் மகிந்த ராஜபக்சவினால் முன்மொழியப்பட்ட…
-
- 1 reply
- 339 views
-
-
சம்பந்தனிடம் தேசியப் பட்டியல் ஆசனம் கோரும் மூதூர் முஸ்லிம்கள்JUL 18, 2015by திருக்கோணமலைச் செய்தியாளர்in செய்திகள் கிழக்கில், மட்டுமன்றி வட-கிழக்கிலும் கூட முஸ்லிம் ஒருவரை முதலமைச்சராக ஏற்றுக் கொள்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராகவே இருக்கிறது என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். மூதூர் அரசியல் விழிப்புணர்வு ஒன்றியத்தின் முஸ்லிம் பிரமுகர்களுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் நேற்று மூதூரில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இந்தச் சந்திப்பில் பங்கேற்ற மூதூர் அரசியல் விழிப்புணர்வு ஒன்றியத்தின் பிரமுகர்கள், மூதூரைச் சேர்ந்த ஒருவருக்கு நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தை தேசியப்பட்டியல் மூலம் பெற்றுத் தருமாறு இரா.…
-
- 8 replies
- 1k views
-
-
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் கையினைப் பலப்படுத்த தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு வாக்களிக்குமாறு கூட்டணியின் முதன்மை வேட்பாளர் இ.த.விக்னராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், அர்ப்பணிப்புடன் செயலாற்றுவார் என்ற நீதியரசர் விக்னேஸ்வரனின் செயற்பாட்டினை, அரசியல் எதிரிகள் அல்ல தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருப்பவர்களே, விமர்சிப்பதுடன், கொள்கை பற்றுள்ள தமிழ் மக்களின் உள்ளம் வெந்து கொண்டிருப்பதை இந்த மண்ணில் வாழ்ந்து கொண்டிருப்பவன் என்ற ரீதியில் அடையாளம் கண்டுள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார். தேர்தலில் புறந்தள்ளப்பட்ட தமிழர் விடுதலைக்கூ…
-
- 0 replies
- 349 views
-
-
எஞ்சிய பகுதிகளை விடுவிக்க சிறிலங்கா இராணுவம் மறுப்பு – மகிந்த கொடுத்துள்ள உற்சாகம்JUL 19, 2015by யாழ்ப்பாணச் செய்தியாளர்in செய்திகள் வலி.வடக்கில் மீள்குடியமர்வுக்கு அனுமதிக்கப்பட்ட பகுதிகளுக்கான பாதைகளை விடுவிப்பதற்கும், உறுதியளிக்கப்பட்ட எஞ்சிய காணிகளை விடுவிப்பதற்கும் சிறிலங்கா இராணுவம் மறுப்புத் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று யாழ்ப்பாணத்துக்கு மேற்கொண்ட முதலாவது அதிகாரபூர்வ பயணத்தின் போது, பாதுகாப்புச் செயலர் பஸ்நாயக்க இராணுவத்தின் வசமுள்ள எஞ்சிய காணிகளை விடுவித்தல் மற்றும், விடுவிக்கப்பட்ட காணிகளுக்கான வீதிகளைத் திறந்து விடுவதில் முக்கியமான முடிவுகளை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்று இது தொடர்பாக நடத்தப்பட்ட கூட்டங்களில், அத்த…
-
- 1 reply
- 390 views
-
-
வட கிழக்கின் தேர்தல் களத்தில் நுழைந்திருக்கும் புலனாய்வாளர்களும் றோவும் [ ஞாயிற்றுக்கிழமை, 19 யூலை 2015, 01:44.16 PM GMT ] நடக்க இருக்கும் பொதுத் தேர்தலில் முக்கிய தமிழின உணர்வாளர்கள் நாடாளுமன்றம் செல்வதை தடுக்கும் சூழ்ச்சித் திட்டங்களை இலங்கை, இந்திய புலனாய்வு அமைப்புக்கள் மேற்கொண்டு வருகின்றமையை அண்மைய நாட்களில் நிகழ்ந்து கொண்டிருக்கும் சம்பவங்கள் தெளிவாக உணர்த்துகின்றன. தமிழீழ தேசியத் தலைவரின் சிந்தனையில் இருந்து பிறந்ததே தமிழ் தேசிய கூட்டமைப்பு. தமிழ் மக்களின் போராட்டம் ஆயுதப் போராட்டமாக மட்டும் நின்றுவிடாது, இலங்கை நாடாளுமன்றத்திற்குள் எமது மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் எம்மக்களின் குரலாய் ஒலிக்க வேண்டும் என்பதன் உயரிய நோக்கின் அடிப்படையிலேயே, ஆயுதப் ப…
-
- 0 replies
- 310 views
-
-
ஒக்ரோபர் 19 – படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களை நினைவு கூரும் நாளாக பிரகடனம்JUL 20, 2015 | 0:19by ஐரோப்பியச் செய்தியாளர்in செய்திகள் வடக்கு, கிழக்கில் படுகொலை செய்யப்பட்ட அனைத்து தமிழ் ஊடகவியலாளர்களையும் பொதுவாக நினைவு கூரும் நாளாக, ஒக்ரோபர் 19ஆம் நாள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை லண்டனில், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பங்கேற்ற, சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியத்தின் கூட்டத்திலேயே இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. லண்டனைத் தளமாக கொண்ட ஊடகவியலாளர்கள், பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். பிபிசியின் முன்னாள் ஊடகவியலாளர் ஆனந்தி சூரியப்பிரகாசமும் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தார். இந்தக் கூட்டத்தில் வெளியிடப்பட்ட பிரகடனத்தி…
-
- 0 replies
- 649 views
-
-
50 போர்க்குற்றவாளிகளின் பட்டியலுடன் ஐ.நாவின் போலி போர்க்குற்ற அறிக்கை – வெளிவரப் போகிறதுJUL 20, 2015 | 0:02by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சிங்கள மக்களின் கவனத்தை திசை திருப்பி, மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான அனுதாப அலையைத் தோற்றுவிக்கும் நோக்கில், போலியான ஐ.நா போர்க்குற்ற அறிக்கை ஒன்றை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உயர்மட்ட அரசாங்கப் பேச்சாளர் ஒருவரை மேற்கோள்காட்டி, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது. அடுத்த மாத முதல் வாரத்தில்- நாடாளுமன்றத் தேர்தலுக்கு இரண்டு வாரங்கள் முன்னதாக, இந்த போலியான போர்க்குற்ற அறிக்கை வெளியிடப்படக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிக்கையில் சுமார் 50 ப…
-
- 0 replies
- 395 views
-
-
குருநாகல தேர்தல் பரப்புரைகளில் போர்வெற்றி உணர்வுக்கு உசுப்பேற்றுகிறார் மகிந்தJUL 20, 2015 | 0:00by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் குருநாகல மாவட்டத்தில் போட்டியிடும் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச, அங்குள்ள சிறிலங்கா படையினர் மற்றும், முன்னாள் படையினர், உயிரிழந்த படையினரின் குடும்பங்களின் வாக்குகளை இலக்கு வைத்தே பரப்புரைகளை ஆரம்பித்துள்ளார். போர் வெற்றிப் பரப்புரையை மேற்கொண்டு இலகுவாக வெற்றி பெறலாம் என்ற அடிப்படையில், சிறிலங்காப் படையினரின் குடும்பங்கள் அதிகம் வசிக்கும் குருநாகல மாவட்டத்தில் போட்டியிட முடிவு செய்த மகிந்த ராஜபக்ச, அங்கு போர் வெற்றிவாதத்தை முன்னிறுத்தியே பரப்புரைகளை மேற்கொண்டுள்ளார். நேற்று கல்கமுவவில் நடந்த கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அவர், நாட்டிலுள்…
-
- 0 replies
- 371 views
-
-
அடிவாங்கிய கோத்தாவின் உயிரைக் காப்பாற்றிய மேர்வின் சில்வாJUL 19, 2015 | 10:47by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவைத் தாமே ஒருமுறை காப்பாற்றியதாக தகவல் வெளியிட்டுள்ளார் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா. மகிந்த ராஜபக்சவுக்கு முன்னர் நெருக்கமாக இருந்த மேர்வின் சில்வா அண்மைக்காலங்களாக ராஜபக்ச சகோதரர்களுக்கு எதிராகத் திரும்பியுள்ளார். அவருக்கு இந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பும் மறுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தானே ஒரு முறை கோத்தாபய ராஜபக்சவின் உயிரைக்காப்பாற்றியதாக மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். ‘1970ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ச முதல் தேர்தலை எதிர்கொண்டிருந்த போதே, நானே அவரது தலைமைப் பேச்சாள…
-
- 0 replies
- 280 views
-
-
மகிந்தவை வெற்றிபெறச் செய்யும் பொறுப்பு கோத்தாவிடம் ஒப்படைப்புJUL 19, 2015 | 10:22by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் குருநாகல மாவட்ட தேர்தல் பரப்புரைகளுக்குப் பொறுப்பாக, முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச குருநாகல மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதன்மை வேட்பாளராகப் போட்டியிடுகிறார். இந்தநிலையிலேயே அவரது சகோதரரான கோத்தாபய ராஜபக்ச ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பரப்புரைக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பரப்புரைத் தலைவராக மகிந்த ராஜபக்ச கடந்தவாரம் நியமிக்கப்பட்டது கு…
-
- 0 replies
- 370 views
-
-
உரிய காலத்தில் அரசியல்வாதிகள் ஓய்வு பெற்றுக்கொள்ள வேண்டுமென மல்வத்து பீடாதிபதி திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார். அரசியல்வாதிகள் மிகப் பொருத்தமான நேரத்தில் ஓய்வு பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியமானது என அவா தெரிவித்துள்ளார். ஆயுட் காலம் முழுவதிலும் செய்யும் தொழிலாக அரசியலை கருத முடியாது என அவர் தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையாளர் மிகச் சிறந்த ஓர் அரச அதிகாரி எனவும் சிறந்த முறையில் கடமையாற்றி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் அபிவிருத்திக்காக அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார். பிரதி நீதி அமைச்சர் சுஜீவ சேனசிங்க, மல்வத்து பீடாதிபதியை சந்தித்து ஆசி பெற்றுக்கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளா…
-
- 2 replies
- 239 views
-
-
அமெரிக்க அதிகாரிகள் அழுத்தம் கொடுக்கவில்லை – முதலமைச்சர் விக்னேஸ்வரன்JUL 18, 2015 | 16:55by கார்வண்ணன்in செய்திகள் இனப்படுகொலை விவகாரத்துக்கு முக்கியத்துவம் அளிக்காமல் அடக்கி வாசிக்குமாறு, அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் தமக்கு அழுத்தம் கொடுத்ததாக வெளியான செய்தியை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நிராகரித்துள்ளார். அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், கடந்தவாரம் அமெரிக்காவின் தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வாலை சந்தித்துப் பேசியிருந்தார். இதன் போது, இனப்படுகொலை குறித்து அடக்கி வாசிக்கும்படி அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால், வடக்கு மாகாண முதலமைச்சருக…
-
- 2 replies
- 519 views
-
-
தென்னிலங்கையில் வரவிருக்கின்ற புதிய அரசாங்கத்தை தீர்மானிக்கும் முக்கிய சக்தியாக கூட்டமைப்பே விளங்கும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளரும் முன்னாள் எம்.பியுமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். வவுனியா, உள்வட்ட வீதியில் உள்ள ஈபிஆர்எல்எப் கட்சியின் பிரசாரக் கூட்டத்தின் போதே இதனைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்து அங்கு கருத்து தெரிவிக்கையில், தென்னிலங்கையில் ஆட்சி அதிகாரத்தை யார் பெறுவது என்ற போட்டி நடைபெறுகிறது. எங்களைப் பொறுத்த வரை ஜனவரி மாதம் 8 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களே ஜனாதிபதியைத் தீர்மானித்தனர். இதனை அரசாங்கத்திற்கும், சர்வதேசத்திற்கும் செய்து காட்டியுள்ளோம். குறிப்பாக முன்னைய ஜனாதிபதி தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதவை பெறாமல் 7…
-
- 1 reply
- 333 views
-
-
மாளிகாவத்தையில் இன்றிரவு ஏற்பட்ட பதற்ற நிலைமை தற்போது முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கிடையே இன்று ஆர்.பிரேமதாஸ விளையாட்டரங்கில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக பார்வையாளர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இதன்போது வெளியே வந்த தரப்பினர் வெளியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனங்கள் சிலவற்றின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் சில வாகனங்கள் சேதமடைந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இதனால் மாளிகாவத்தையில் பதற்ற நிலை ஏற்பட்டதாகவும் உடனடியாக பொலிஸ், அதிரடிப்படை, இராணுவ வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் எமது செய்தியாளர் மேல…
-
- 0 replies
- 413 views
-
-
தேர்தலில் மக்கள் ஆணை கிடைத்தால் தமிழர் தாயகப் பகுதியை ஒருங்கிணைத்து வடக்கு கிழக்கை உள்ளடக்கிய ஒரு அதிகார மையம் உருவாக்கப்பட்டு அதற்குத் ‘தமிழ்த் தேசிய அவை’ எனப் பெயரிடப்படும் எனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. இந்த அதிகார மையமானது 2001க்குப் பின்பு இருந்த நிழல் அரசாங்கத்தைப்போல் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது. அரசியல்சார்ந்த வேலைகளில் ஈடுபடும் அதேநேரம் எமது மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் செயற்திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படும் எனத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பளர் திரு விஸ்வலிங்கம் மணிவண்ணன் எதிர்கால செயற்திட்டங்கள் தொடர்பான விரிவான விளக்கத்தை காணொலியூடாகத் தெரிவித்துள்ளார். http://tamilleader.com/?p=50072
-
- 0 replies
- 440 views
-
-
ஓகஸ்ட் 10 ஆம் திகதி வரை வாக்காளர் அட்டை விநியோகம்;தேர்தல் செயலகம் அறிவிப்பு. ஓகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான உத்தியோக பூர்வ வாக்காளர் அட்டைகள் அச்சடிக்கும் பணிகள் தற்போது ஆரம்பமாகியுள்ளது என தேர்தல் செயலகம் அறிவித்துள்ளது. அந்தவகையில் 22 மாவட்டங்களிலும் சுமார் ஒருகோடியே 50 இலட்சத்து 496 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர். இவர்களுக்கான வாக்காளர் அட்டைகள் அஞ்சல் திணைக்களத்தின் ஊடாக அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. அதற்கமைய இம்மாதம் 29 ஆம் திகதி நாட்டிலுள்ள தபால் நிலையங்களுக்கு கையளிக்கப்பட்டு ஓகஸ்ட் 10 ஆம் திகதிக்குள் வீடு வீடாக வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படும். ஓகஸ்ட் 2 மற்றும் 9 ஆகிய இரண்டு ஞாயிற்றுக்கிழம…
-
- 0 replies
- 664 views
-
-
சுமந்திரனோடு இளைஞர்கள் காரசாரமான விவாதம்(காணொளி)
-
- 5 replies
- 719 views
-
-
திம்புக் கோட்பாடுகளின் அடிப்படையில் நிலையான அரசியல்தீர்வே தேவை – விக்னேஸ்வரன்JUL 18, 2015 | 17:41by ஐரோப்பியச் செய்தியாளர்in செய்திகள் மனிதாபிமான உதவியை வழங்குதல் குறுங்கால இலக்காகவும், இனஅழிப்புக்கு நீதி பெறுவதை மத்திம கால இலக்காகவும், திம்புக் கோட்பாடுகளின் அடிப்படையில் நிலையான அரசியல் தீர்வைக் காணுதல் எமது நீண்டகால இலக்காகவுங் கொண்டு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். சர்வதேச தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியம் லண்டனில் நேற்று நடத்திய “சிறப்புரையும் கலாச்சார மாலையும்” நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன்: அமெரிக்க ஐக்கிய நாடுகளின் பயணத்தின் பின்னர் என் தங்கையார் கு…
-
- 9 replies
- 1.6k views
-
-
யாழ்ப்பாணத்திலிருந்து மாத்தறை நோக்கி பயணித்த ரயில் மதவாச்சி ரயில் நிலையத்துக்கு அருகில் தடம்புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் யாழ்ப்பாணத்திற்கான ரயில் போக்குவரத்து முற்றாக பாதிப்படைந்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. http://virakesari.lk/articles/2015/07/19/ரயில்-தடம்புரண்டது யாழ்ப்பாணம்- மாத்தறைக்கு இடையில் சேவையில் ஈடுபடும் கடுகதி ரயில் மதவாச்சி ரயில் நிலையத்துக்கு அருகில் சற்று முன்னர் தடம்புரண்டுள்ளது என்று ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. ரயில் பெட்டிகளில் நான்கு, தடம்புரண்டுள்ளதால் வடக்குக்கான ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக அனுராதபுரம் ரயில் கட்டுப்பாட்டு அறை அறிவித்துள்ளது. - See more at: http://www.tamilmirror.lk/150456#s…
-
- 0 replies
- 592 views
-
-
விசுவமடு பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் வனவளப்பாதுகாப்புப் பிரிவு நாட்டிய தேக்குமரக்காட்டுப் பகுதி இப்போது இராணுவமுகாமாக காட்சியளிக்கிறது. அழகும் ரம்மியமும் மிக்க அந்தப் பகுதி கடந்த காலத்தில் மக்களின் பொழுது போக்கு அடமாக முக்கியத்துவம் பெற்றிருந்தது. இப்போது அந்தப் பகுதிக்கு பொதுமக்கள் செல்ல முடியாது என்கிறார் எமது செய்தியாளர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தமிழீழ வனவளப் பாதுகாப்புத் துறை அன்றைய காலத்தில் மரம் நாட்டும் திட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்தது. யுத்தத்தின்போது மரங்கள் அழிக்கப்பட்டாலும் புதிய மரங்களை உருவாக்குவதிலும் காடுகளைப் பேணுவதிலும் விடுதலைப் புலிகளின் வனவளப்பாதுகாப்புத்துறை ஒரு கொள்கையுடன் நடைமுறையில் ஈடுபட்டது. மண்ணுக்கு உகந்த தேக்குமரங்களை…
-
- 1 reply
- 1.1k views
-
-
யாழ்ப்பாணத்தில் வசிக்கும் ஒரு மருத்துவ நிபுணர் அண்மையில் தனிப்பட்ட உரையாடல் ஒன்றின் போது சொன்னார். “கடந்த ஆறு ஆண்டுகால அரசியலில் எமது மிதவாதிகளிடம் நிறைய எதிர்பார்த்தோம். தமிழ் நாட்டு அசரியல்வாதிகளைப் போலன்றி இவர்கள் வித்தியாசமான புதிய போக்கு ஒன்றைக் காட்டுவார்கள் என்றும் எதிர்பார்த்தோம். ஆனால் இவர்களும் தமிழ் நாட்டு அரசியல்வாதிகளைப் போலவே ஆகிவிடுவார்கள் போலிருக்கிறதே என்று.” அவர் ஏன் அப்படிச் சொன்னார்? சுமார் 38 ஆண்டுகால ஆயுதப் போராட்டத்தின் பின்னணியில் வைத்தே அவர் அப்படிச் சொல்லியிருந்திருக்கக் கூடும். ஏனெனில் முழு உலகிற்கும் ஒரு புதிய அனுபவமாகக் கிடைத்த ஆயுதப் போராட்டம் அது. அது தோற்கடிக்கப்பட்ட பின் அந்த வெற்றிடத்தை நிரப்பும் மிதவாதிகளைக் குறித்து தமிழ் மக்களிடம் …
-
- 0 replies
- 389 views
-
-
மூன்று ஆண்டுகளில் 785 மில்லியன் ரூபாவை விமானப் பயணங்களுக்காகச் செலவிட்ட மகிந்தJUL 19, 2015 | 3:45by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச கடந்த மூன்று ஆண்டுகளில் வெளிநாடுகளுக்கு மேற்கொண்ட பயணத்துக்காக, சிறிலங்கன் எயர்லைன்ஸ் விமானங்களை 785 மில்லியன் ரூபாவுக்கு வாடகைக்கு அமர்த்தியுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தெரிவித்துள்ளது. 2012ஆம் ஆண்டு தொடக்கம், 2014ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில், சிறிலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்தின், விமானங்களை 90 பயணங்களுக்குப் பயன்படுத்தியுள்ளார் மகிந்த ராஜபக்ச. இதற்கான கட்டணம் 785,079,185 ரூபாவாகும். மகிந்த ராஜபக்ச, சிறிலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்தின் ஒன்று அல்லது இரண்டு எயர்பஸ் ஏ-340 விமானங்களை…
-
- 3 replies
- 2.2k views
-