ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143516 topics in this forum
-
இனப்பிரச்சினைத் தீ்ர்வுக்கு கூட்டமைப்புக்கு மக்கள் ஆணை தரக் கோருகிறார் செல்வம் அடைக்கலநாதன்! [Friday 2015-07-10 07:00] இந்த தேர்தலில் இனப்பிரச்சினை தீர்வுக்கான ஒரு விடிவை நோக்கிச் செல்லுகின்ற ஒரு சந்தர்ப்பத்தை மக்கள் ஆணையாகத் தர வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வருகின்ற அரசாங்கம் உண்மையிலே இழுபறி அரசாங்கமாக வர இருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூடுதலான ஆசனங்களை கைப்பற்றுகின்ற போது இந்த அரசாங்கத்தை நிபந்தனையின் அடிப்படையிலே செயலாற்றுவதற்கான வழியை நாங்கள் ஏற்படுத்திக் கொள்ள முடியும். இனப்பிரச்சினை தீர்க்கப்படுவதற்கான சூழல், சிறையில் உள்ள இளைஞர்- யுவ…
-
- 8 replies
- 456 views
-
-
பேரம் பேசும் சக்தியை வலுப்படுத்தினாலே நிரந்தர அரசியல் தீர்வை எட்டலாம்!: இரா.சம்பந்தன்: ஐக்கிய இலங்கைக்குள் சுயநிர்ணய உரிமையை கோருதல் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் முக்கிய இடத்தை வகிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியாவில் நேற்று நடந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சந்தப்பில் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பிலும் கருத்து தெரிவிக்கப்பட்டது. வடக்கு கிழக்கில் வாழும் ஒவ்வொரு பொதுமகனின் உள்ளக்கிடக்கையையும் உள்ளீர்த்தவாறே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞானம் அமையும் என்று சம்பந்தர் கூறியுள்ளார். இதேவேளை யுத்தத்திற்குப் பிந்தைய சூழலில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் முழுமையாக உள்ளடக்கப்படும் என்றும் தெரிவிக்கப…
-
- 54 replies
- 2k views
-
-
ஊடக ஒழுங்குமுறைக் குழுவை இலங்கை அரசு மீண்டும் அமைத்துள்ளமைக்கு சர்வதேச ஊடக சுதந்திரத்திற்கான குழு கவலை வெளியிட்டுள்ளது. ஊடகவியலாளர்களை சட்டத்தில் தண்டிக்கவோஇ அவர்களுக்கு அபராதம் விதிக்கவோ அதிகாரம் வழங்கும் ஊடக ஒழுங்குமுறைக் குழுவை இலங்கை அரசு மீண்டும் அமைத்துள்ளது. இலங்கையில் மஹிந்த ராஜபக் ஷ ஜனாதிபதியாக இருந்த போது அமுலில் இருந்த ஊடக ஒழுங்குமுறைக் குழுவை கடந்த ஜனவரி மாதம் பதவியேற்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீக்கினார். மேலும் ஊடகங்களின் மீதான கட்டுப்பாடுகளையும் கலைத்து உத்தரவிட்டார். இந்நிலையில் ஊடக ஒழுங்குமுறைக் குழுவை மீண்டும் அமைத்து இலங்கை ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். எதிர்வரும் ஆகஸ்ட் 17ஆ…
-
- 2 replies
- 353 views
-
-
கொழும்பு சைத்திய வீதியில் 'புட்டு பம்பு' எனும் பெயரிலும் திருகோணமலை கடற்படைத் தளத்தின் இலங்கை கடல் மற்றும் சமுத்திரவியல் விஞ்ஞான பீட வளாகத்தில் நிலத்துக்கு கீழ் 'கன்சைட்' எனும் பெயரிலும் கடற்படையின் இரகசிய தடுப்பு முகாம்கள் இருந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புலிகள் இயக்க சந்தேக நபர்களை தடுத்து வைப்பதாக குறிப்பிட்டே இந்த இரகசிய முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் அந்த முகாம்களில் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் வைத்து கடத்தப்பட்ட 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் தடுத்து வைக்கப்பட்டிருந்துள்ளமைக்கான ஆதாரங்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்துள்ளன. முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் வசந…
-
- 0 replies
- 317 views
-
-
வவுனியாவில் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளது. அக் கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் உபாலி சமரசிங்க தலைமையில் காலை 10 மணிக்கு வவுனியா மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்த மக்கள் விடுதலை முன்னணியினர் வவுனியா மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி பந்துல கரிச்சந்திரவிடம் தமது வேட்பு மனுவை கையளித்தனர். மக்கள் விடுதலை முன்னணியின் சார்பில் ரட்ணாயக உபால் கெட்டிகே சமரசிங்க, ஜோசப் ஜோர்ஜ் அலோசியஸ், எ. வி. கருணாதிலக, எம்.ஏ. சமரசிங்க பண்டார, ஆசிர்நுவன் பிரியதர்சன சோமரட்ன,அஜித் இந்திக நிரியல்ல, செபஸ்டியன் லாசரஸ், அப்புகாமிகே அனுரசந்திரசேகர, சிகாமணி ரவிச்சந்திரன் ஆகியோர் போட்டியிடவுள்ளனர். இதேவேளை வவுனியா மாவட்ட செயலகத்தை சூழ பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகா…
-
- 0 replies
- 232 views
-
-
மன்னாரில் எரிவாயு அகழ்வதற்கு சர்வதேச அளவில் கேள்விப்பத்திரம் கோர அனுமதி! [Friday 2015-07-10 07:00] மன்னார் கடற்படுகையில் கண்டுபிடிக்கப்பட்ட எரிவாயுவை அகழ்வ தற்காக சர்வதேச கேள்வி மனு கோர அமைச்சரவை அனுமதி வழங்கி யுள்ளது. தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்ட பகுதியில் எரிவாயு அகழ்வு மேற் கொண்டு வர்த்தக ரீதியில் அபிவிருத்தி செய்யவும் உற்பத்தி செய்யவும் இதனூடாக நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. தகுதியான முதலீட்டாளர்களை தெரிவு செய்வதற்காக அமைச்சரவையினூடாக இணக்கப்பாட்டு குழுவொன்றை நியமிக் கவும் அமைச்சரவை அனுமதி வழங்கி யுள்ளது. அமைச்சர் சம்பிக ரணவக்க இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை சமர்பித்திருந்தார். அந்த அறிக்கையின் அடிப்படையில் மின்சார ரயில் சேவை ஆரம்பிப்பதற்கான வழி வகை…
-
- 0 replies
- 287 views
-
-
மகிந்தவுக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தும் மல்வத்த மகாநாயக்கர்! [Friday 2015-07-10 07:00] மீண்டும் அரசியலில் பிரவேசிப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு வேட்புமனு வழங்கினால் நாடு பின்நோக்கி தள்ளப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் மல்வத்தபீட மகாநாயக்கர் திப்படுவாவே சிறி சுமங்கல தேரர். இம்முறைப் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பு மனு வழங்கியுள்ள நிலையிலேயே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடவுள்ள ஹர்ஷ ராஜகருணா மல்வத்து மாகாநாயக்க தேரரை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார்.இதன்போது நாட்டின் தற்போதைய அரசியல் நிலமைகள் தொடர்பில் கலந…
-
- 0 replies
- 291 views
-
-
மகிந்தவுக்கு வேட்பு மனு வழங்குவது தன்கையில் இல்லையாம்! - மைத்திரி கைவிரிப்பு[Friday 2015-07-10 07:00] முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு வேட்புமனு வழங்குவது தொடர்பான இறுதி முடிவு தமது கைகளில் இருக்கவில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கடந்த ஜனாதிபதி தேர்தலில் தமது வெற்றிக்காக பாடுபட்ட சிவில் குழுக்களை ஜனாதிபதி கடந்த புதன்கிழமை சந்தித்தார்.இதன்போது சிவில் குழுக்கள், மஹிந்த ராஜபக்சவுக்கு வேட்புமனு வழங்கல் தொடர்பில் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டன. இதற்கு பதிலளித்த ஜனாதிபதி தாம் தனிப்பட்ட ரீதியில் மஹிந்தவுக்கு வேட்புமனு வழங்கலை எதிர்த்ததாக குறிப்பிட்டார். எனினும் இறுதி முடிவு தமது கைகளில் இருக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டதாக சிவில் குழுக்களின…
-
- 0 replies
- 237 views
-
-
மகிந்தவும் கைவிட்டதால் சஜின் சுயேட்சையாக போட்டி! [Friday 2015-07-10 07:00] ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாக தேர்தலில் போட்டியிட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்தனவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ள நிலையில், அவர் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சஜின்வாஸ் குணவர்தன காலி மாவட்டத்தில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு மிக நெருக்கமான நபரான சஜின், ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை முறைகேடான முறையில் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.seithy.com/breifNews.php?newsID=135616&categor…
-
- 0 replies
- 304 views
-
-
மட்டக்களப்பில் கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலில் சௌந்தரராஜன் இணைப்பு! [Friday 2015-07-10 07:00] தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் தெரிவு இழுபறி நிலைக்குப் பின்னர் பூர்த்தியடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இறுதியாக தெரிவு செய்யப்பட்டு மட்டக்களப்பு கல்குடா தொகுதியில் தமிழரசுக்கட்சி சார்பாக போட்டியிடவிருந்த சித்தாண்டியைச் சேர்ந்த சி.சாமித்தம்பி நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக குணசீலன் சௌந்தரராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். அதனடிப்படையில் தமிழரசுக் கட்சி சார்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பிரதிக் கல்விப் பணிப்பாளர் சிறிநேசன், முன்னாள் பாராளுமன…
-
- 0 replies
- 216 views
-
-
இன்று பிரதான கட்சிகள் வேட்புமனுத் தாக்கல்! - யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு.[Friday 2015-07-10 07:00] பிரதான கட்சிகள் இன்று வேட்புமனு தாக்கல் செய்யவுள்ள நிலையில் யாழ். மாவட்ட செயலகம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் சட்டவிரோத கூட்டம் கூடுதல், வேட்புமனு தாக்கல் செய்வதை தடைசெய்தல், இடையூறு செய்தல் போன்ற சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு யாழ்ப்பாண பொலிஸார் தடை விதித்துள்ளதுடன் அதனை மீறி செயற்படும் நபர்களுக்கு எதிராக பாரபட்சமற்ற சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வூட்லர் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இன்று பிரதான கட்சிகள் வேட்புமனு தாக்கல் செய்யவுள்ள நிலையில் சட்டவிரோத செயற்பாடுகளுக்கும் நாம் தடை விதிக்கின்றோ…
-
- 0 replies
- 288 views
-
-
ஒரே நேரத்தில் தமிழரசுக் கட்சி 5 மாவட்டங்களில் வேட்புமனு வடக்கு, கிழக்கிலுள்ள 5 தேர்தல் மாவட்டங்களிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று ஒரே நேரத்தில் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யவுள்ளது. யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்திற்குரிய வேட்புமனு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் யாழ். மாவட்ட செயலகத்திலும், வன்னித் தேர்தல் மாவட்டத்திற்குரிய வேட்புமனு ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் வவுனியா மாவட்ட செயலகத்திலும், திருகோணமலை தேர்தல் மாவட்டத்திற்குரிய வேட்புமனு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் திருகோணமலை மாவட்ட செயலகத்திலும், மட்டக்களப்பு தேர்தல் மாவட்டத்திற்குரிய வேட்புமனு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட …
-
- 0 replies
- 290 views
-
-
நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயம் மற்றும் முருக மூர்த்தி ஆலயத்தில் மீது மேற்கொள்ளப்பட்ட விமான குண்டுத்தாக்குதலில் கொல்லப் பட்டவர்களின் நினைவேந்தல் நிகழ்வு வியாழக்கிழமை இடம்பெற்றது. யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயம் மற்றும் முருக மூர்த்தி ஆலயத்தில் மக்கள் தஞ்சம் புகுந்திருந்த மக்கள் மீது கடந்த 1995ம் ஆண்டு யூலை மாதம் 9ம் திகதி மேற்கொள்ளப்பட்ட விமான குண்டு தாக்குதலில் 147 பேர் கொல்லப்பட்டதுடன் 360 பேர் காயங்களுக்கு உள்ளாகி இருந்தனர். அன்றைய தினம் கொல்லப்பட்ட மக்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி இறைவழிபாடும் இரங்கல் திருப்பலியும் நடைபெற்றது. அதில் கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் கலந்து கொண்டு கொல்லப்பட்டவர்களின் திருவுருவ படங்களுக்கு விளக்கேற்றி அஞ்ச…
-
- 9 replies
- 581 views
-
-
திருகோணமலையில் தோண்டத்தோண்ட எலும்புக்கூடுகள் 5 மணி நேரங்களுக்கு முன்னர்பகிர்க இதுவரை பத்து எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளனஇலங்கையின் கிழக்கே திருகோணமலை நகரத்தில் மனிதப்புதைகுழி என சந்தேகிக்கப்பட்ட இடத்தில் நடக்கும் அகழ்வுப்பணிகளில் தொடர்ந்து மனித எலும்பு கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டு வருகின்றன. இன்று வியாழக்கிழமை மேலும் 6 மனித எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதையடுத்து இதுவரை இங்கே கண்டுபிடிக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. திருகோணமலை நகரிலுள்ள விளையாட்டு மைதானத்திற்கு அண்மித்த பகுதியில் இடம் பெற்று வரும் அகழ்வுப்பணிகளின் போது இவை கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 17ம் தேதி மக்கெய்ஸர் விளையாட்டு மைதானம…
-
- 4 replies
- 342 views
-
-
மருத்துவர் துரைராஜா வரதராஜா தமிழில் குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- 2009ம் ஆண்டு இறுதிக் கட்ட யுத்தம் இடம்பெற்ற காலத்தில் வன்னியில் கடமையாற்றிய மருத்துவர்களுக்கு, ஊடகவியலாளர் சந்திப்பில் என்ன பேச வேண்டுமென்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டதாக வன்னியில் கடமையாற்றிய மருத்துவர் துரைராஜா வரதராஜா தெரிவித்துள்ளார். இறுதிக் கட்ட யுத்தம் இடம்பெற்ற காலத்தில் இராணுவத்தினர் வைத்தியசாலைகள் மீது எறிகணைத் தாக்குதல்களை நடத்தியதாக சர்வதேச ஊடகங்களுக்கு தகவல் வழங்கிய மருத்துவர்கள், பின்னர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். இராணுவ விசாரணைகளின் பின்னர் அவர்கள் வன்னியில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் பிரயோகிக்கப்பட்ட அழுத்தம் காரணமாக இராணுவத்தினர் சிவிலியன்…
-
- 0 replies
- 253 views
-
-
கொழும்பு சைத்திய வீதியில் 'புட்டு பம்பு' எனும் பெயரிலும் திருகோணமலை கடற்படைத் தளத்தின் இலங்கை கடல் மற்றும் சமுத்திரவியல் விஞ்ஞான பீட வளாகத்தில் நிலத்துக்கு கீழ் 'கன்சைட்' எனும் பெயரிலும் கடற்படையின் இரகசிய தடுப்பு முகாம்கள் இருந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புலிகள் இயக்க சந்தேக நபர்களை தடுத்து வைப்பதாக குறிப்பிட்டே இந்த இரகசிய முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் அந்த முகாம்களில் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் வைத்து கடத்தப்பட்ட 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் தடுத்து வைக்கப்பட்டிருந்துள்ளமைக்கான ஆதாரங்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்துள்ளன. முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் வசந்த…
-
- 0 replies
- 183 views
-
-
சுன்னாகம், புஸ்பமணியம் வீதியில் கஞ்சா நுகர்ந்த பூசகர் ஒருவரை, இன்று வியாழக்கிழமை (09) காலை கைது செய்ததாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவரிடமிருந்து 5 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. பிரதேசத்தில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட இரகசியப் பொலிஸார், பூசகர் மீது சந்தேகம் கொண்டு விசாரணை செய்த போதே, பூசகர் கஞ்சா நுகர்ந்தமை தெரியவந்தது. பூசகரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் கூறினர். : http://www.tamilmirror.lk/149989#sthash.TKbHTAua.dpuf
-
- 3 replies
- 339 views
-
-
இலங்கையின் மோதலால் பாதிக்கப்பட்ட வடபகுதியில் உள்ள தனது வீட்டிற்கு பல வருடங்களிற்கு பின்னர் செல்வதற்கு அனுமதிக்கப்பட்ட பாலசுந்தரம் இராசமலர் எதிர்பராத பிரச்சினையொன்றை எதிர்கொண்டார். அவரது வீட்டின் மலசலகூடம் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்குள் காணப்பட்டதே அந்த பிரச்சினை. இலங்கை இராணுவம் தனது ஆக்கிரமிப்பின் கீழிலிருந்த பகுதிகளை இவ்வருடம் அதன் உரிமையாளர்களிடம் மீள ஓப்படைக்க தொடங்கியுள்ளது. இலங்கை ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன தெரிவுசெய்யப்பட்ட பின்னரே இது இடம்பெற ஆரம்பித்துள்ளது. சிறுபான்மை இனத்தவர்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்தப்போவதாக வாக்குறுதி அளித்தவர் சிறிசேன எனினும் நிலங்களை விடுவிக்கும் நடவடிக்கை புதிய எல்லைகளை உருவாக்கியுள்ளதுடன்,சமூகங்களை பிளவு…
-
- 1 reply
- 198 views
-
-
விடுதலைப் புலிகளுடன் பேச்சு தொடர்ந்திருந்தால் பல உயிர்களை காப்பாற்றியிருக்க முடியும்!- ரணில் [ திங்கட்கிழமை, 06 யூலை 2015, 02:41.36 AM GMT ] 2002 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளுடன் நடத்தப்பட்ட சமாதான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்திருந்தால், போரின் மூலம் இழக்கப்பட்ட பல உயிர்களை காப்பாற்றியிருக்க முடியும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார் சந்திரிகா குமாரதுங்கவின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதமர் உரையாற்றினார். போர் நிறுத்த உடன்பாட்டின் கீழ் விடுதலைப்புலிகளுடன் பேச்சு நடத்தப்பட்ட போது சந்திரிகா தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அதனை புரிந்துக்கொள்ளவில்லை. 2003ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக்கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிய…
-
- 16 replies
- 824 views
-
-
கூட்டமைப்பின் வாக்குகளைச் சிதறடிக்க முயற்சி! - என்கிறார் அரியநேத்திரன்[Wednesday 2015-07-08 07:00] வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்குகளை சிதறடிப்பதற்கு பல்வேறுபட்டவர்கள் ஊடுருவி வருவதாக கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார். இது தொடர்பில் கருத்துரைத்த அவர், 'எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்குகளை சிதறடிப்பதற்காக பல்வேறுபட்டவர்கள் ஊடுருவியுள்ளனர். இந்த ஊடுருவலிலிருந்து விலகிச்சென்று எங்களின் அரசியல் பலத்தை தக்கவைக்கும் கட்சியை மக்கள் இனங்காணவேண்டும்' என்றார். 'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தனது பணியை திறமையாக ஆற்றிவருகின்றது. நாங்கள் எட்டு வேட்பாளர்களை மட்டக்களப்…
-
- 5 replies
- 350 views
-
-
தேர்தலில் போட்டியிட அனுமதிக்குமாறு அனந்தி எம்மிடம் இதுவரை கோரவில்லை; மாவை தமிழரசுக் கட்சி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானங்களுக்கு புறம்பாகவே செயற்பட்டு வரும் திருமதி அனந்தி சசிதரன் வேட்பாளராக தன்னை அனுமதிக்கவில்லை என ஊடகங்களில் தெரிவித்து வரும் கருத்துக்கள் உண்மைக்கு புறம்பானவை என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்தார். நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழரசுக் கட்சி தன்னை வேட்பாளராக நியமிக்கவில்லை என்றும் தன்னுடைய வாய்ப்பினை மாவை சேனாதிராசா நிறுத்திவிட்டார் என்று கூறிவருகின்றார். இது குறித்து தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவுடன் உதயன் இணையத்தள செய்திப்பிரிவு தொடர்புகொண்டு கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேல…
-
- 16 replies
- 582 views
-
-
இலங்கைக்கு ஜி.எஸ்.பி. வரிச்சலுகையை வழங்குவதற்கு அனுமதி வழங்கி அதற்கான ஆவணத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கையெழுத்திட்டார் என வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் பேச்சாளர் மஹேஷினி கொலன்னே தெரிவித்தார். 2013 ஆம் ஆண்டு ஜி.எஸ்.பி. வரிச் சலுகை நிறுத்தப்பட்டு தற்போது இரண்டு வருடங்கள் கழிந்து மீளக் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கொழும்பில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே பேச்சாளர் மஹேஷினி கொலன்னே இதனை தெரிவித்தார். இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு அமெரிக்கா ஜி.எஸ்.பி.வரிச் சலுகை வழங்கும். இவ்வாறு 122 நாடுகளுக்கு இச் …
-
- 0 replies
- 385 views
-
-
யாழ்ப்பாணம் தமிழரசுக்கட்சி – 6 ஈபிஆர்எல்எவ் - 2 புளொட் 1 ரெலோ 1 வன்னி தமிழரசுக்கட்சி – 3 ரெலோ 3 ஈபிஆர்எல்எவ் - 2 புளொட் - 1 மட்டக்களப்பு தமிழரசுக்கட்சி –5 ஈபிஆர்எல்எவ் - 1 புளொட் 1 ரெலோ 1 அம்பாறை தமிழரசுக்கட்சி – 6 ஈபிஆர்எல்எவ் - 2 ரெலோ 1 புளொட் 1 திருகோணமலை அதிக ஆசனம் தமிழரசுக் கட்சிக்கு அதிக ஆசனம்.. தமிழரசுக் கட்சி - 3 ஈபிஆர்எல்எவ் - 1 ரெலோ 1
-
- 22 replies
- 1.2k views
-
-
இலங்கையில் பொதுமக்களின் உயிர்களைப் பாதுகாப்பதற்கு ஐக்கிய நாடுகள் அமைப்பு தவறியுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்ன் தெரிவித்துள்ளார். 2009ம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது பொதுமக்களின் உயிர்கள் காவு கொள்ளப்படுவதனை ஐக்கிய நாடுகள் அமைப்பு தடுக்கத் தவறியதாகக் குறிப்பிட்டுள்ளார்.ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவைக்கு வீடியோ தொழில்நுட்பம் ஊடாக இந்த கருத்துக்களை தெரிவித்துள்ளார். பொஸ்னியா மற்றும் ஹெர்செகோவினா ஆகியன தொடர்பில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையில் கலந்துரையாடப்பட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சிவிலியன் பாதுகாப்பு தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பு பொதுவான இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டு, பொதுவான ஓர் ந…
-
- 0 replies
- 419 views
-
-
இலங்கையிற் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டு விட்டது. தேர்தற் கால மயக்கங்களையும் கிறக்கங்களையும் மக்களுக்கு ஊட்டுவதற்கு அரசியற்கட்சிகள் தயாராகிக்கொண்டிருக்கின்றன. ஒரு நாட்டின் அதிகாரமையம் பாரளுமன்றம். அதனுள் நுளைவதற்கு அரசியல்வாதிகளுக்கு மக்களின் வாக்குகள் தேவைப்படுகின்றன.( மக்களின் வாக்குச்சீட்டுக்களை அபகரித்துத் தமக்கே அவற்றைப் போட்டுக்கொள்கிற அரசியல்வாதிகள் இதில் சேர்த்தி இல்லை) மக்களின் வாக்குளைப்பெறுவதற்காக அரசியல்வாதிகள் செய்யும் வேலைகளையும் பேசும் பேச்சுக்களையும் பார்க்கும் போதும் கேட்கும் போதும் தோன்றுகிற உணர்வை என்னவென்று விபரிக்க முடிவதில்லை. கோபம் எரிச்சல் கவலை அருவருப்பு என யாவும் கலந்த ஒரு உணர்வுக்கு அனேகமானவர்கள் ஆளாவார்கள். தற்போதைய ஜனநாயகச் சூழலில் தமி…
-
- 0 replies
- 308 views
-