ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143520 topics in this forum
-
நிதி ஒதுக்கீடுகள் கடந்த காலத்தில் மக்களுக்காக அல்ல அரசியலுக்காகவே பயன்படுத்தப்பட்டன : யாழ்.மாவட்ட மேலதிக அரச அதிபர் கடந்த காலத்தில் மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியும் ஒதுக்க வேண்டிய நிதியும் மக்களுக்காக அல்லாமல் அரசியல் தேவைகளுக்காகவும் கட்சிகளின் தேவைகளுக்காகவே செலவிடப்பட்டுள்ளன.இது மிகப்பெரிய தவறு என்று யாழ்.மாவட்ட மேலதிக அரச அதிபர் செந்தில் நந்தனன் தெரிவித்தார். நேற்று நல்லூர் மற்றும் ஊர்காவற்றுறை பிரதேச செயலகங்களில் உள்ள வறுமைக் கோட்டிற்குட்பட்ட குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவித்திட்டமாக அவர்களுக்கு ஊக்குவிப்புத் தொகை வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்.மாவட்ட மேலதிக அரச அதிபர் செந்தில் நந்தனன் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர…
-
- 0 replies
- 255 views
-
-
மகிந்தவுக்கு நல்லாசி வேண்டி பாலுட்டும் தாய்மார்கள் புண்ணியதானம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு நல்லாசி வேண்டி ஏற்பாடு செய்யப்பட்ட பாலுட்டும் தாய்மார்களின் புண்ணியதான நிகழ்வு கொழும்பு நாராஹேன்பிட்டி அபயராம விகாரையில் இன்று காலை நடைபெற்றது. முருத்தொட்டுவே ஆனந்த தேரர் இந்த புண்ணியதானத்தை ஏற்பாடு செய்துள்ளார். இந்த நிகழ்வில் இறைச்சிக்காக அறுக்கப்படவிருந்த மாடுகளை முன்னாள் ஜனாதிபதி விடுவித்துள்ளார். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் எதிர்பாராத தோல்வியை தழுவிய மகிந்த ராஜபக்ச மீண்டும் அதிகாரத்தை கைப்பற்ற பல்வேறு வழிகளில் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அதற்காக சோதிடர்களின் ஆலோசனைக்கு அமைய வழிப்பாடுகளிலும் புண்ணிய கருமங்களிலும் அவர் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றார். குருப…
-
- 1 reply
- 549 views
-
-
ராஜபக்ச கிராமப் பகுதியில் உலாவும் பேய்கள்: அச்சத்தில் மக்கள்! தம்புட்டுகம ராஜபக்ச கிராமப் பகுதியில் ஆண், பெண் மற்றும் 14 வயதுடைய பெண் ஆகியோர் பேய் போன்று வெள்ளை உடையில் உலாவி வருவதாகவும் இதனால் பிரதேச மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது இது குறித்து ராஜபக்ச கிராமத்தின் கிராமசேவகர் அசோகா தர்மகீர்த்தி கருத்து தெரிவிக்கையில், கிராமத்தில் பல பேர், இதே போன்று வெள்ளை உடையில் மர்ம உருவங்களை கண்டு அச்சமடைந்துள்ளனர். எனவே கிராமத்தில் பூஜை வழிபாடுகளை மேற்கொள்வதற்காக சூனியக்காரர் ஒருவரை வரவழைக்க உள்ளோம். மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு 50 வயதுடைய இந்திராவதி என்ற பெண் வழமை போன்று தனது பயிர்செய்கை நிலத்துக்கு நீரை திறந்து விடுவதற்காக நள்ளிரவில் தோட்டத்…
-
- 1 reply
- 495 views
-
-
அடியாட்களுடன் கைதான பல்கலைக்கழக மாணவனுக்கு நீதிபதி இளஞ்செழியன் பிணை மறுப்பு யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் 26ம் திகதி பெற்றோல் குண்டுகள். தடிகம்புகள், கோடரி பிடிகள், பொல்லுகள் சகிதம் கைது செய்யப்பட்ட இளைஞர்களுடன் யாழ். பல்கலைக்கழக மாணவன் ஒருவர், இருந்தது ஏன் என, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் கேள்வி எழுப்பியுள்ளார். சுன்னாகம் பகுதியில் இவ்வாறான பத்து இளைஞர்களை பொலிசார் கைது செய்து மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ததையடுத்து, அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் சதீஸ்கரன் உத்தரவிட்டிருந்தார். விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இந்த 10 பேரில் ஒருவர் பாழ் பல்கலைக்கழக மாணவன் என தெரிவித்து, அவர் பரீட்சைக்குத் தோற்ற வேண்டியிருப்பதனால், அவர…
-
- 0 replies
- 517 views
-
-
ஜனாதிபதியும் பிரதமரும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாது எம்மை ஏமாற்றி விட்டார்கள் : மாவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , பிரதமர் ரணில் ஆகிய இருவரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. எம்மை அவர்கள் ஏமாற்றி விட்டார்கள்.எனவே குறித்த விடயம் தொடர்பில் எதிர்வரும் 23ம் திகதி நாடாளுமன்றம் கூடும் வேளையில் அவர்களுடன் பேசி ஒரு முடிவை எடுக்க உள்ளோம். என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைமைகளுக்கு இடையில் யாழ்.மார்டீன் வீதியில் உள்ள தமிழரசு கட்சி அலுவலகத்தில் இன்று காலை சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. அந்த சந்திப்பின் பின்னர் ஊ…
-
- 52 replies
- 2.9k views
-
-
2009 மே 18 இல் ஏன் கே.பி தொடர்பு கொண்டார்! கடைசி நிமிடத்தில் நடந்தவை என்ன? அருட்தந்தை ஜெகத் கஸ்பர் [ புதன்கிழமை, 17 யூன் 2015, 12:48.51 PM GMT ] இறுதிக்கட்டப் போரின் போது இராணுவத்தினரிடம் சரணடையும் பணியை, விடுதலைப் புலிகளின் சார்பில் நடேசன் மற்றும் புலிதேவன் ஆகியோர் முன்னெடுத்திருந்தனர். எனினும் இருவரும் தன்னுடன் தொடர்பு கொள்ளவில்லை என அருட்தந்தை ஜெகத் கஸ்பர் தெரிவித்துள்ளார் எனினும் அப்போதைய பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் சந்திரநேரு ஊடாக, இராணுவ பேச்சாளராக இருந்த பாலித்த கோஹன்வுடன் தொடர்புகளை ஏற்படுத்தி சரணடைதல் தொடர்பாக கலந்துரையாடி இருந்தனர். இந்தத் தகவல் பசில் ராஜபக்ஷ ஊடாக அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தெரியப்படுத்தப்பட்டதாக அவர் தெரிவித்த…
-
- 7 replies
- 1.1k views
-
-
ரணில் சேறுபூசும் அரசியல்வாதியல்ல! - என்கிறார் மகிந்த [Wednesday 2015-06-17 07:00] பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சேறுபூசும் அரசியலில் ஈடுபடுபவர் அல்ல என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சிங்கள நாளிதழ் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ரணில் விக்ரமசிங்க சேறுபூசும் அரசியலில் ஈடுபடக்கூடியவரல்ல. என்னிடம் பல்வேறு வழிகளில் உதவிகளைப் பெற்றுக் கொண்டவர்கள் கூட இன்று எனக்கு எதிராக சேறு பூசுகின்றனர். எனினும் ரணில் அவ்வாறு செய்யவில்லை. சேறு பூசுவதிலும் ஒர் எல்லையிருக்க வேண்டும். ஒட்டு மொத்த குடும்பத்திற்கு எதிராகவும் சேறு பூசப்படுகின்றது. நான் இன்று மாத்தறைக்கு செல்ல வேண்டுமென்றாலும் ஒரு சிலர…
-
- 3 replies
- 636 views
-
-
ஜப்பானில் மங்கள சமரவீர – பொருளாதார உதவிகளை குறிவைக்கிறார் JUN 18, 2015 | 1:56by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, ஜப்பானுக்கான முதலாவது அதிகாரபூர்வ பயணத்தை நேற்று ஆரம்பித்துள்ளார். இந்தப் பயணத்தின் போது, அவர், ஜப்பானிய பிரதமர் சின்ஷோ அபே, ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் பியூமியோ கிஷிடா மற்றும் பல்வேறு தரப்பினரையும் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார். ஜப்பானிய வெளிவிவகார அமைச்சரின் அழைப்பின் பேரில், ரோக்கியோ சென்றுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர், அங்கு இருதரப்பு பேச்சுக்களை நடத்தவுள்ளதுடன், சிறிலங்காவுக்கான பொருளாதார உதவிகளை வழங்கும் இரண்டு உடன்பாடுகளிலும் கையெழுத்திடவுள்ளார். ஜப்பானின் அனைத்துலக ஒத்துழைப்பு முகவரகத்தின் தலைவர், அஹிகிக…
-
- 0 replies
- 507 views
-
-
நியூசிலாந்தின் ஆசியா,பசுபிக் பசுமைக் கட்சி கூட்டத்தில் இன அழிப்பு தீர்மானம் நிறைவேற்றம் நியூசிலாந்து நாட்டில் நடைபெற்ற ஆசியா, பசுபிக் பசுமைக் கட்சியின் கூட்டமைப்பு மாநாட்டில் ஈழத்தமிழர்கள் தொடர்பான இன அழிப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக நியூசிலாந்து நாட்டில் நடைபெற்ற ஆசியா, பசுபிக் பசுமைக் கட்சியின் கூட்டமைப்பு மாநாட்டில் தமிழின அழிப்பு தொடர்பான தீர்மானம் ஒன்று அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் கெதரின் டெலாஹன்டியஜனால் முன்வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இடம்பெற்ற விவாதத்தின் போது அவுஸ்திரேலிய பசுமைக் கட்சியின் சார்பில் கலந்துகொண்டவர்களினால் வழுவில்லாதாக்கப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினரால் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தில் ஈழத்தமிழர்களுக்கு கட்டமை…
-
- 0 replies
- 340 views
-
-
ஜூன் 30இற்குப் பின்னர் நாடாளுமன்றம் வருகிறது 20ஆவது திருத்தச்சட்டம் JUN 18, 2015 | 1:39by கார்வண்ணன்in செய்திகள் தேர்தல் முறையை மாற்றியமைப்பதற்கான 20ஆவது திருத்தச் சட்டமூலம், இம்மாதம் 30ஆம் நாளுக்குப் பின்னர், நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 237 பேர் கொண்ட நாடாளுமன்றத்தை தெரிவு செய்வதற்கான புதிய தேர்தல் முறையைக் கொண்ட 20ஆவது திருத்தச்சட்டம் தொடர்பான யோசனை நேற்றுமுன்தினம் நள்ளிரவு வர்த்தமானியில் வெளியிடப்பட்டது. அமைச்சரவையில் ஒரு மாதத்துக்கு மேலாக நடத்தப்பட்ட விவாதங்களின் முடிவில் இந்த யோசனையை ஏற்றுக் கொள்ளப்பட்டது. அரசியலமைப்புச் சட்டத்தின்படி, சட்டமூலம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டு, 14 நாட்களுக்குப் பின்னர், நாடாளுமன்றத்தில்…
-
- 0 replies
- 459 views
-
-
ஒபாமாவின் சிறிலங்கா வருகை குறித்து அமெரிக்க தூதரகத்துக்கு தெரியாதாம் JUN 17, 2015 | 1:54by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சிறிலங்காவுக்கு வருகை தரவுள்ளது தொடர்பான அதிகாரபூர்வ தகவல் ஏதும் தமக்குத் தெரியப்படுத்தப்படவில்லை என்று கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று நடந்த செய்தியாளர் மாநாட்டில் சிறிலங்காவின் பெருந்தோட்டத்துறை அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இந்த ஆண்டு இறுதியில் சிறிலங்காவுக்கு வருகை தரவுள்ளதாக தெரிவித்திருந்தார். அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் சிறிலங்கா பயணம் தொடர்பாக வெளியாகும் தகவல்கள் தொடர்பாக அமெரிக்கத் தூதரகம் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இது தொடர்பாக த…
-
- 2 replies
- 436 views
-
-
மகிந்தவுக்கு இடமளிக்க முடியாது – மைத்திரி திட்டவட்டமாகத் தெரிவிப்பு JUN 18, 2015 | 0:46by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதமர் வேட்பாளராக மகிந்த ராஜபக்சவை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நிறுத்தமாட்டார் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மைத்திரிபால சிறிசேன தலைமையில் செவ்வாய்க்கிழமை நடந்த கூட்டத்தில், மகிந்த ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர்கள் சிலர் வலியுறுத்தியிருந்தனர். இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக ஆராய ஆறு பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது. சுசில் பிரேம் ஜெயந்த, அனுர பிரியதர்சன யாப்பா, குமார …
-
- 0 replies
- 542 views
-
-
தனுஷ்கோடி வழியாக இலங்கைக்கு கடத்தப்படவிருந்த கஞ்சா பறிமுதல்: இந்திய கடலோர காவல்படை நடவடிக்கை ஆதாம் பாலம் அருகே இலங்கைக்கு கடத்தவிருந்த 687 கிலோ கஞ்சாவை இந்திய கடலோர காவல்படை பறிமுதல் செய்துள்ளனர். இராமநாதபரம் மாவட்டம் கடலோர பகுதியிலிருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்த இருப்பதாக கடலோர காவற்படையினருக்கு தகவல் கிடைத்ததையடுத்து பொலிஸார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுவந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் தனுஷ்கோடிக்கும் ஆதாம் பாலத்திற்கு இடையே மூன்றாவது மணல் திட்டில் பதக்கி வைத்திருந்த 23 மூட்டை கஞ்சா கைப்பற்றப்பட்டு மண்டபம் கடலோரகாவல்படை முகாமிற்கு கொன்டுவரப்பட்டது. இராமேஸ்வரம் சுங்கத்துறை அதிகாரிகளிடம் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை ஒப்படைத்தனர். ஒப்படைக்கப்பட்ட கஞ்சா…
-
- 1 reply
- 390 views
-
-
சிறிலங்காவுடன் தரைவழி இணைப்பை ஏற்படுத்த இந்தியா திட்டம் – 23 ஆயிரம் கோடி ரூபா செலவாகும் JUN 17, 2015 | 6:00by இந்தியச் செய்தியாளர்in செய்திகள் இந்தியாவையும் சிறிலங்காவையும் தரைவழிப் போக்குவரத்து மூலம் இணைக்கும் திட்டத்தை இந்திய அரசாங்கம் கொண்டிருப்பதாக இந்தியாவின் தரைவழிப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். கடலுக்கு மேலாக அமைக்கப்படும் பாலம் மூலமோ அல்லது கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை மூலமோ, பாக்கு நீரிணை ஊடாக தரைவழிப்பாதை இணைப்பை ஏற்படுத்துவது சாத்தியம் என்றும் அவர் கூறியுள்ளார். “கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டாலும் கூட, அதற்கு மேலாக கப்பல்கள் பயணம் செய்ய முடியும். தனுஸ்கோடிக்கும், சிறிலங்காவின் எல்லைக்கும் இடை…
-
- 7 replies
- 633 views
-
-
விக்னேஸ்வரனிடம் விளக்கம் கேட்போம்: மாவை சேனாதிராஜா 16 ஜூன் 2015 பகிர்க தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொழும்புக்கு வருமாறு அழைக்கப்பட்டு அவர்களிடம் வேலைத்திட்டங்களுக்காகப் பணம் வழங்கப்பட்டது என்று வடமாகாண முதல்வர் சி வி விக்னேஷ்வரன் கூறியிருந்ததாக, ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருப்பது தொடர்பில் அவரிடம் விளக்கம்கேட்டு கடிதம் அனுப்பப்போவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு அரசால் பணம் வழங்கப்பட்டதாக வந்திருக்கும் செய்திகள் குறித்து, விக்னேஷ்வரனிடம் கேட்கப்படும் என மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.விக்னேஷ்வரனிடமிருந்து வருகின்ற பதிலையடுத்து, உண்மை நிலைமையை செய்தியாளர…
-
- 1 reply
- 614 views
-
-
இலங்கை நாடாளுமன்றம் ஜூன் 24 நள்ளிரவு கலைப்பு: மனோ கணேசன் 24 நிமிடங்களுக்கு முன்னர் இலங்கையின் நடப்பு நாடாளுமன்றம் ஜூன் 24ஆம் தேதி நள்ளிரவு கலைக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியதாக மனோ கணேசன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். தமிழ் முற்போக்கு கூட்டணியின் துணைத் தலைவர்களும் அமைச்சர்களுமான திகாம்பரம் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோருடன் தலைவர் என்ற முறையில் தானும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து உரையாடியபோதே அவர் இதைக் கூறியதாக மனோ கணேசன் கூறுகிறார். நடப்பு நாடாளுமன்றம் ஜூன் 24 நள்ளிரவு கலைக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனக்கு உத்தரவாதம் வழங்கியுள்ளார் என ரணில் விக்ரமசிங்க தமது குழுவினரிடம் தெரிவித்தார் எனவும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் த…
-
- 0 replies
- 447 views
-
-
இலங்கை- இந்தியாவுக்கிடையில் நெடுஞ்சாலை அமைப்பு; ஆசிய அபிவிருத்தி வங்கி உதவி! இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நெடுஞ்சாலையொன்றை அமைப்பது தொடர்பில் இந்தியா ஆர்வம் காட்டி வருகின்றது. இதற்காக, ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் இந்தியா உதவி கோரியுள்ளது. இந்தியாவுடன் இலங்கையை தரைவழியாக இணைப்பதற்காக இந்திய பெறுமதியில் 23 ஆயிரம் கோடி ரூபாய் செலவிலான திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக இந்திய மத்திய அரசின் நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். பங்களாதேஷ், பூட்டான், நேபாளம் ஆகிய நாடுகளுடன் மோட்டார் வாகனங்களுக்கான ஒப்பந்தத்தில் இந்தியா நேற்று செவ்வாய்க்கிழமை கையெழுத்திட்டது. அப்போது இந்தியா - இலங்கையை தரைவழியாக இணைப்பது குறித்து மத…
-
- 0 replies
- 552 views
-
-
விசாரணைப் பொறிமுறை குறித்து உயர்மட்டத்தில் உள்ளக கலந்துரையாடல் JUN 17, 2015 | 14:20by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்துக்கான நம்பகமான பொறிமுறைகளை உருவாக்குவது தொடர்பாக, சிறிலங்காவின் உயர்மட்ட அதிகாரிகள் உள்ளக கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருவதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மஹேஷினி கொலன்னே தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று வாராந்த செய்தியாளர் சந்திப்பிலேயே இவர் இவ்வாறு குறிப்பிட்டார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 29வது கூட்டத் தொடரில் ஆரம்ப உரையாற்றிய ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன், சிறிலங்கா குறித்து வெளியிட்ட கருத்து தொடர்பாக அவர் கருத்து வெளியிடுகையில், “ ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் கருத்து கவன…
-
- 0 replies
- 539 views
-
-
அரசாங்கம் உருவாவதில் ஊடகத்தின் பங்கு பெரிது நிறைவேற்று அதிகாரம், அரசியலமைப்பு சட்டம், நீதி மற்றும் ஊடகம் என்பவற்றினால் ஒரு நாடு அபிவிருத்தியை நோக்கி நடைபோடும் என பிரதி ஊடக அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சுக்களின் ஊடக செயலாளர்களுக்கான கருத்தரங்கில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்திருந்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், ஒரு அரசாங்கத்தை உருவாக்குவதில் ஊடகம் பாரிய பங்களிப்பை வழங்குகிறது. எனவே அது நல்லபடியாக நடக்கவேண்டும். அரசியல்வாதிக்கு ஊடகம் என்பது மிகவும் அவசியம். அரசியல்வாதியின் ஒரு புகைப்படத்தினால் அவரை பற்றிய பாரிய எண்ணத்தை மக்களிடையே ஊடகத்தால் விதைக்க முட…
-
- 1 reply
- 311 views
-
-
சிறிலங்காவில் சீனாவின் உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் குழு JUN 17, 2015 by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்கா இராணுவத்தின் தியத்தலாவ இராணுவப் பயிற்சி முகாமில் ஆய்வுகளை மேற்கொள்வதற்காக சீனாவின் உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் குழுவொன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது. தியத்தலாவ பயிற்சி முகாமில், சீனாவினால் அமைக்கப்படும் மண்டபத் தொகுதி கட்டுமானத்தின் தொழில்நுட்ப அம்சங்கள் குறித்து மீளாய்வு செய்யவே சீன இராணுவ அதிகாரிகள் குழு சிறிலங்காவுக்கு வந்திருக்கிறது. சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்தின் அதிகாரிகள் தலைமையகத்தின் இராணுவப் பயிற்சி திணைக்கள அரசியல் ஆணையாளர் மேஜர் ஜெனரல் செங் ஜியாங் தலைமையிலான ஆறு பேர் கொண்ட நிபுணர் குழுவே இந்த ஆய்வை மேற்கொள்கிறது. …
-
- 0 replies
- 593 views
-
-
பாராளுமன்றத்தைக் கலைக்க முயன்றால் புதிய அரசாங்கத்தை அமைப்போம்! - அத்துரலிய ரத்ன தேரர் [Wednesday 2015-06-17 07:00] சிறுபான்மை அரசாங்கம் என்ற காரணத்தை முன்னிலைப்படுத்தி பாராளுமன்றத்தை கலைப்பதே ஐக்கிய தேசியக் கட்சியின் உறுதியான நிலைப்பாடாக இருந்தால், நல்லாட்சி திட்டங்களை நிறைவேற்றுவதற்கு தற்போதைய பாராளுமன்றத்திற்குள் புதிய அரசாங்கமொன்றை அமைப்போம் என்று ஜாதிக ஹெல உறுமயவின் இணைத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அத்துரலிய ரத்ன தேரர் எச்சரிக்கை விடுத்தார். தேர்தல் மறுசீரமைப்பின் போது சிறுபான்மை மற்றும் சிறிய கட்சிகளின் இணக்கபாடும் மிகவும் அவசியமாகும். எனினும் தற்போது சிறுபான்மை கட்சிகளினால் முன்மொழியப்பட்டுள்ள இரட்டை வாக்கு சீட்டு முறைமை ஒ…
-
- 0 replies
- 345 views
-
-
வித்தியா படுகொலை சந்தேகநபர்களிடம் எதற்காக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் விசாரணை? [Wednesday 2015-06-17 08:00] புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையை வெறுமனே படுகொலையாகவோ, வன்புணர்வு நிகழ்வாகவோ எடுக்க முடியாது. வித்தியா படுகொலை செய்யப்பட்ட பின்னர், அவரது சடலம் இருந்த கோலம், இது வெறும் வன்புணர்வு, படுகொலை என்பதைக் காட்டி நிற்கவில்லை. எனவே, இவ்வழக்கில் உண்மை நிலை என்னவென்று கண்டறியப்பட வேண்டும். அதற்கு சந்தேக நபர்கள் உரிய முறையில் தடுத்து வைத்து விசாரிக்கப்பட வேண்டும். அதற்காகவே, சந்தேக நபர்களை 30 நாட்கள் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வைத்து விசாரிப்பதற்கான ஆணையை நீதிபதி வழங்கியிருந்தார் என சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி.தவராஜா தெரிவித்துள்ள…
-
- 0 replies
- 599 views
-
-
20வது திருத்தச்சட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது! - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவிப்பு [Wednesday 2015-06-17 08:00] சிறுபான்மை தேசிய இனங்களைப் பாதிக்கும் வகையில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ள தேர்தல்முறை மாற்ற யோசனையினை உள்ளடக்கிய 20ஆவது திருத்தச் சட்ட மூலத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சித் தலைவர்கள் செயலாளர்களுக்கிடையிலான ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் நேற்று இலங்கை தமிழரசுக் கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை. சேனாதிராஜா, ஈ.பி.ஆர்.எல்.எப். சார்பில் சுரேஷ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், டெலோ சார்பில் செல்வ…
-
- 0 replies
- 427 views
-
-
உயிருக்கு அச்சுறுத்தல்; கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் உப தவிசாளர் கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவரை அச்சுறுத்தியமை தொடர்பாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது. கிளிநொச்சி தொண்டமான் நகர் கிராமத்தில் புகையிரத வீதி, மற்றும் ஏ9 வீதி புனரமைக்கப்பட்டதன் பின்னர் கரைச்சி பிரதேச சபைக்கு சொந்தமான குடியிருப்பு வீதிகள் மக்கள் பயணிக்க முடியாத நிலையில் சேதமடைந்து காணப்படுகின்றன. இந்த வீதிகளை புனரமைத்து தருமாறு குறித்த கிராம மக்கள் பல்வேறு தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்திருந்தனர். எனினும் இதுவரை புனரமைக்கப்படாத நிலையில் இப்பகுதி மக்கள் கவனஈர்ப்பு போராட்டம் ஒன்றினை நடார்த்துவதற்கு ஏற்பாடு செய்திருந்…
-
- 0 replies
- 282 views
-
-
அராஜக செயற்பாடுகளுக்கு பாதை அமைக்கும் முயற்சியில் சு.க விக்கிரமபாகு சுட்டிக்காட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ரத்தனதேரரின் கருத்தானது இந்த நாட்டில் மீண்டும் ஒரு யுத்தத்தை ஏற்படுத்தும் வல்லமைக் கொண்டுள்ளதாக நவசமசமாஜ கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன எச்சரித்துள்ளார். அதிகாரத்தைப் பகிர்ந்து நாட்டை ஐக்கியப் படுத்தும் அமைப்பினால் இன்று புதன்கிழமை நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்..... '20 ஆம் திருத்தச்சட்டத்தை நிறைவேற்ற ஐக்கிய தேசியக் கட்சியே தடையாக இருந்து வந்ததாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர் கூறி வந்தனர். அப்படி அவர்கள் த…
-
- 0 replies
- 195 views
-