ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142789 topics in this forum
-
Published By: DIGITAL DESK 2 27 SEP, 2024 | 06:23 PM நா.தனுஜா நாட்டின் சமகால பொருளாதார நிலைவரங்களை கருத்திற்கொண்டு வட்டிவீதங்களை முன்னைய மட்டத்திலேயே பேணுவதற்குத் தீர்மானித்திருக்கும் மத்திய வங்கி, இவ்வாண்டின் முடிவில் பொருளாதார வளர்ச்சி எதிர்வுகூறப்பட்டதை விடவும் உயர்வான மட்டத்தில் பதிவாகும் எனவும் தெரிவித்துள்ளது. நாணயச்சபையின் இவ்வாண்டுக்கான 5ஆவது மீளாய்வுக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை அறிவிக்கும் நோக்கிலான ஊடகவியலாளர் சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை (27) கொழும்பிலுள்ள மத்திய வங்கியின் கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அச்சந்திப்பிலேயே இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவ…
-
- 0 replies
- 107 views
- 1 follower
-
-
கிழக்கு மாகாண ஆளுநர் கடமைகளை பொறுப்பேற்றார் கிழக்கு மாகாண ஆளுநராக ஜயந்த லால் ரத்னசேகர திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் இன்று தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார். ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக செயற்பட்டுள்ள இவர் கந்தளாய் அக்ரபோதி வித்தியாலய பழைய மாணவருமாவார். பேராசிரியர் ஜெயந்த லால் ரத்னசேகர நவம்பர் மாதம் 1962 ஆம் ஆண்டு பிறந்தார். மனைவியின் பெயர் மல்லிகா ரத்ணசேகர. இவர்களுக்கு ஒரு மகன் இருக்கின்றார். இவர் இலங்கையின் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக 2017 பெப்ரவரி முதல் நவம்பர் 2023 வரை பணியாற்றியுள்ளார். தனது ஆரம்பக் கல்வி கந்தளாயில் உள்ள அக்ரபோதி வித்தியாலயத்திலும், இடைநிலைக் கல்வியை கொழும்ப…
-
-
- 5 replies
- 516 views
- 1 follower
-
-
முன்னாள் அமைச்சர்கள் அரச வீடுகளை மீள வழங்க வேண்டும்: காலக்கெடுவும் விதிக்கப்பட்டது முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் அந்தந்த அமைச்சு பதவிகளை வகித்த சந்தர்ப்பத்தில் பயன்படுத்திய அனைத்து அரசாங்க வீடு மற்றும் பங்களாக்களை உடனடியாக மீள ஒப்படைக்குமாறு அரச பொது நிர்வாக அமைச்சு எழுத்து மூலம் அறிவித்துள்ளது. முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் சுமார் 15 பேருக்கு அரசாங்க உத்தியோகபூர்வ இல்லங்கள் மற்றம் பங்களாக்களை ஒப்படைப்பது தொடர்பில் தற்போது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்த அமைச்சின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் அமைச்சர்கள் இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் சில நிறுவனங்களுக்கு அரசாங்கம் 50 கொழும்பு அரச பங்களாக்களை வழங்…
-
-
- 7 replies
- 536 views
- 1 follower
-
-
-
-
- 3 replies
- 1.6k views
-
-
ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க பதவிப் பிரமாணம்! இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க இன்று (23) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் அநுரகுமார திஸாநாயக்க பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் ஈ.எம்.எஸ்.பி ஏக்கநாயக்க மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டிருந்தனர். நேற்று முன்தினம் நடைபெற்ற 2024 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க 5,740,179 வாக்குகளைப் பெற்று சஜித் பிரேமதாசவை தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. h…
-
- 10 replies
- 722 views
- 1 follower
-
-
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வரும் பயணிகளின் பயணப் பொதிகளில் இருந்த பொருட்களை திருடிய குற்றச்சாட்டின் பேரில் கட்டுநாயக்க விமான நிலைய ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விமான நிலையத்தில் உள்ள பொதிகள் சேமிப்பு வளாகத்தில் பணியமர்த்தப்பட்ட சந்தேக நபர், விமான நிலைய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொருட்களை வைக்கும் வளாகத்திற்குள் கடந்த 23-ம் திகதி மலேசியாவில்(malaysia) இருந்து வந்த பயணிகளின் பொருட்களை வைக்கும் வளாகத்திற்குள் மர்மநபர் ரகசியமாக நுழைந்து பொருட்களை திருடிய காட்சிகள் அந்த இடத்தில் உள்ள சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளது. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்( sril lankan airlines) புலனாய்வுப் பிரிவின் ஊழியர்கள் காணொளி…
-
- 4 replies
- 681 views
- 1 follower
-
-
Published By: VISHNU 26 SEP, 2024 | 08:35 PM (நா.தனுஜா) எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆராய்ந்து, எதிர்வரும் இரு தினங்களுக்குள் தமது தீர்மானத்தை அறிவிப்பதாக தமிழ் பொதுக்கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் சிவில் சமூகத்தினர் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியிடம் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் கடந்த செவ்வாய்கிழமை நள்ளிரவுடன் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதுடன், எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறுமென அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதனையடுத்து புதன்கிழமை (25) பி.ப 3.00 மணிக்கு யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியொன்றில் கூடிய ஜனநாயக தமிழ் தேசியக்கூட்டணியின் ஒருங்கிணைப்புக்குழ…
-
-
- 14 replies
- 882 views
- 1 follower
-
-
நாட்டு மக்களுக்காக ஜனாதிபதி இன்று விசேட உரை! ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று (25) இரவு 7.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றினை ஆற்றவுள்ளார். இதன்போது, அவர் விசேட அறிவிப்பொன்றை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்று (24) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்து ஜனாதிபதியினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அதேநேரம், புதிய பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/2024/1400983
-
-
- 2 replies
- 723 views
-
-
பாடசாலை நிகழ்வுகளில் இனிமேல் அரசியல் வாதிகளுக்கு இடமில்லை -பிரதமர் உத்தரவு. கல்விக்காக அதிக ஒதுக்கீடுகளை ஒதுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். கல்வி அமைச்சு மற்றும் பரீட்சை திணைக்களம் தொடர்பில் மக்கள் மத்தியில் எழுந்துள்ள அவநம்பிக்கையை நீக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்ததாக பிரதமர் மேலும் சுட்டிக்காட்டினார். இதுவரை காலதாமதமாகி வரும் அனைத்து தேர்வு முடிவுகளையும் வெளியிடுமாறு பரீட்சை திணைக்கள அதிகாரிகளுக்கு பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளார். இதேவேளை,பாடசாலை நிகழ்வுகளுக்கு அரசியல்வாதிகளை அழைத்து வருவதை உடனடியாக நிறுத்துமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் செயலகம்…
-
-
- 5 replies
- 561 views
-
-
27 SEP, 2024 | 10:59 AM இரண்டு நிறுவனங்களிடமிருந்து 750,000 என் கடவுச்சீட்டுகளை கொள்வனவு செய்வதற்கு அனுமதி வழங்கும் முன்னைய அரசாங்கத்தின் அமைச்சரவை தீர்மானத்திற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று இடைக்கால தடையை பிறப்பித்துள்ளது. ஐந்து மில்லியன் கடவுச்சீட்டுகளை வழங்குவதற்காக இரண்டு நிறுவனங்களிடமிருந்து 750,000 என் கடவுச்சீட்டுகளை கொள்வனவு செய்வதற்கு அனுமதி வழங்கும் முன்னைய அரசாங்கத்தின் அமைச்சரவை தீர்மானத்திற்கே நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. அமைச்சரவையின் தீர்மானம் கேள்விப்பத்திர நடைமுறையை மீறிய செயற்பாடு, ஊழல் என எபிக்லங்கா நிறுவனமும் அதன் நிறைவேற்று தலைவரும் தாக்கல் செய்த மனுவை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிம…
-
- 0 replies
- 205 views
- 1 follower
-
-
மனோவிடமிருந்து வெளியேறினார் குருசாமி ஜனநாயக மக்கள் முன்னணியின் பொது செயலாளர் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் குழு உறுப்பினர் ஆகிய பதவிகளில் இருந்து தான் உடன் பதவி விலகுவதாக கே.டி. குருசுவாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர், குறித்த கட்சிகளின் தலைவர் மனோகணேசனுக்கு அனுப்பியுள்ள உத்தியோகபூர்வ கடிதம் ஒன்றிலேயே அறிவித்துள்ளார். அந்த கடிதத்தில் அவர், “நாட்டில் நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் முடிவுகளையும், அதன் பின் நடக்கின்ற நிகழ்வுகளையும் உற்று நோக்கும் பொழுது, மக்களின் மனதில் மிகப் பெரிய மாற்றத்தையும், அவர்களின் எதிர்பார்ப்பு உயர்ந்திருப்பதையும் காண்கின்றோம். இந்நிலையில், மக்களோடு நேரடியாக களத்தில் பணிசெய்ய விரும்புவதால், கட்சி…
-
- 0 replies
- 582 views
-
-
பொது ஒழுங்கை நிலைநாட்ட முப்படையினருக்கு அழைப்பு adminSeptember 27, 2024 இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் பொது ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக முப்படையினரை அழைக்கும் வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ளது. இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையினரை அழைக்கும் உத்தரவு அடங்கிய இந்த விசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டது. ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தனது கடமைகளை பொறுப்பேற்றதன் பின்னர் முதன்முறையாக ஆயுதப்படையினரை அழைக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது https://globaltamilnews.net/2024/206952/
-
- 0 replies
- 1.1k views
-
-
யாழ். பல்கலை மாணவர்களுக்கு 30 இலட்சம் ரூபா நன்கொடை இலங்கையின் வடக்கு - கிழக்கு பிராந்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்களுக்கு இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படும் கல்விக்கான நிதியுதவித் திட்டத்தின் கீழ், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கான புலமைப்பரிசில் உதவித் தொகை வழங்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை இடம்பெற்றது. இந்திய அரசாங்கத்தின் உதவித்திட்டத்தின் கீழ், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அனைத்துப் பீடங்களிலும் இருந்தும் சுமார் 100 மாணவர்கள் இதற்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இத் திட்டத்துக்கான ரூபா 30 இலட்சம் ரூபா இன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தரிடம் கையளிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் தூ…
-
- 0 replies
- 817 views
-
-
விபத்தில் நாதஸ்வர வித்துவான் உயிரிழப்பு adminSeptember 27, 2024 யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த நாதஸ்வர வித்துவான் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல நாதஸ்வர வித்துவான்களில் ஒருவரான, திருநெல்வேலி பகுதியை சேர்ந்த பாலசேகர் ஹரிபிரசாத் என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த 14ஆம் திகதி இரவு முல்லைத்தீவு பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் நாதஸ்வர கச்சேரி நிகழ்வை முடித்துக்கொண்டு, மறுநாள் 15ஆம் திகதி காலை வேளை மோட்டார் சைக்கிளில் யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த வேளை சாவகச்சேரி பகுதியில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மதிலுடன் மோதி விபத்துக்க…
-
- 0 replies
- 1.1k views
-
-
இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் சூடு பிடித்து ஓய்ந்துள்ள நிலையில், பொதுத் தேர்தலுக்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. அடுத்து வரும் ஆறு வாரங்களில் பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடைபெறும் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசியல்வாதிகள் தமது நாடாளுமன்ற பதவிகளை பெற்றுக்கொள்ள மக்களிடம் வாக்குகளை கேட்கத் தயாராகின்றனர். இவ்வாறான நிலையில் தமிழ் அரசியல்வாதிகள் எவ்வாறான நிலைப்பாட்டை எடுக்கப் போகின்றார்கள் என்பது ஒட்டுமொத்த தமிழ் மக்களின் எதிர்ப்பார்ப்பாகும். புள்ளிவிபரங்கள் முன்னரை விட தற்போது மாறுபட்ட அரசியல் களம் உருவாகி உள்ளது. இலகுவாக மக்களை ஏமாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் எவ்வாறான பொய்களை…
-
-
- 20 replies
- 1.3k views
- 1 follower
-
-
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸுக்கு கிடைத்த கெளரவம். 2024 ஆம் ஆண்டுக்கான தெற்காசிய பயண விருதுகள் நிகழ்வில் (SATA) பயணிகள் தெரிவு விருதுகள் பிரிவின் கீழ் தெற்காசியாவின் முன்னணி சர்வதேச விமான சேவையாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளதாவது” தெற்காசியாவின் விமானப் போக்குவரத்துத் துறையில் விமான சேவை மற்றும் விருந்தோம்பலின் நிகரற்ற மரபு மற்றும் தெற்காசிய பிராந்தியத்தில் 85% சேவை செய்யும் விரிவான விமான அட்டவணையுடன், விமான சேவையின் அதிகார மையமாக விமானத்தின் நிலையை வலுப்படுத்துகிறது. SATA இன் வருடாந்திர நிகழ்வானது, தெற்காசியாவின் சிறந்த விருந்தோம்பல் மற்றும் பயணத் தொழில்களைக் கொண்டாடுகிறது மற்றும் 18 க்கும் ம…
-
- 0 replies
- 970 views
-
-
நாடாளுமன்ற தேர்தலில் இளைஞர்களுக்கு வழிவிடும் வகையில் விக்னேஸ்வரன் போட்டியிடமாட்டார். தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் இளைஞர்களுக்கு வழிவிடும் வகையில் இம்முறை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடமாட்டார் என கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு நவம்பர் 14 ம் திகதியன்று நாடாளுமன்ற தேர்தல் நடாத்தப்படவுள்ள நிலையில் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக தமிழ் மக்கள் கூட்டணியின் கட்சியினரிடையே நடைபெற்ற கூட்டத்தில் குறித்த தகவலை விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார் என அறிய முடிகிறது. 2013 ஆம் ஆண்டு வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் அரசியலில் பிரவேசித்து வடக்கு மாகாண முதலமைச…
-
- 0 replies
- 288 views
-
-
அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரே சின்னத்தில் போட்டி? எதிர்வரும் பொதுத் தேர்தலில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரே சின்னத்தில் போட்டியிடுவது தொடர்பான கலந்துரையாடல் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கொழும்பில் நேற்று (26) இடம்பெற்றது. ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதிக்கு ஆதரவளித்த பொதுஜன பெரமுன குழுக்களுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கும் இடையில் இந்த கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. இங்கு கருத்துத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க, பொதுத் தேர்தலில் ஒன்றிணைந்து போட்டியிடுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியுடனான பேச்சுவார்த்தைகள் சாதகமான நிலையில் இருப்பதாகத் தெரிவித்தார். பொதுத்தேர்தலில் அனை…
-
-
- 1 reply
- 594 views
-
-
அநுரகுமாரவின் வெளிப்பாடு அச்சுறுத்தல் அல்ல : பாதுகாக்கும் சுமந்திரன் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க வடக்கில் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் அவரைப் பாதுகாக்க முன்வந்துள்ளார். “தெற்கில் உள்ள மக்கள் மாற்றத்திற்காக அணிதிரளும் போது, அந்த மாற்றத்தை நீங்கள் எதிர்த்தால், தென்னிலங்கை மக்களின் மனநிலையை கற்பனை செய்து பாருங்கள். அந்த மாற்றத்தின் எதிர்ப்பாளர்களாக யாழ்ப்பாணம் பார்க்கப்படுவதை நீங்கள் விரும்புகிறீர்களா?” என்று அநுரகுமார வடக்கில் தெரிவித்திருந்தார். …
-
-
- 14 replies
- 1.2k views
-
-
26 SEP, 2024 | 06:36 PM எதிர்வரும் தேர்தலில் சகல கட்சிகளும், ஒற்றுமை என்று சொல்லி காலத்தை வீணடிக்காமல் தமிழ் தேசியக் கூட்டமைப்பாக தமிழரசுக் கட்சியின் வீட்டு சின்னத்தில் ஒன்றாக போட்டியிட வேண்டும் என்று வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்தார். வவுனியாவில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இன்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து அவர் கூறுகையில், எதிர்வரும் பொதுத்தேர்தலானது தமிழர்களின் ஒற்றுமையை வலுப்படுத்தி இருப்பை காக்கவேண்டிய ஒரு தேர்தல். அந்த ஒற்றுமையை வலியுறுத்தும் வண்ணம் முன்னாள் இந்நாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் என 1…
-
- 1 reply
- 299 views
- 1 follower
-
-
இன்று (26) நள்ளிரவு 12.00 மணி முதல் பழைய முறைப்படி விசா வழங்கும் நடைமுறையைச் செயற்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனை அறிவித்துள்ளது. விசா வழங்கும் நடைமுறை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டமையால் குளறுபடிகள் ஏற்பட்டிருந்தன. இதனை அடுத்து அந்தச் செய்முறையை இரத்து செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் தலையீட்டால், நீதிமன்றத் தீர்ப்பின்படி, கடந்த 24 மணி நேரத்திற்குள், பழைய முறைப்படி விசா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டவர்கள் விசா பெறுவதில் சிக்கல் இது தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் விடுத்துள்ள அறிக்கையில், VFS நிறுவனத்துக்கு விசா வழங்கும் வசதி வழங…
-
-
- 20 replies
- 1k views
- 1 follower
-
-
தியாகி திலீபனின் 37ஆம் ஆண்டு நினைவேந்தல் Vhg செப்டம்பர் 26, 2024 தியாக தீபம் திலீபனின் 37ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று (26-09-2024) வியாழக்கிழமை தமிழர் தாயகமான வடக்கு - கிழக்கிலும், புலம்பெயர் தேசங்களிலும் கடைப்பிடிக்கப்படவுள்ளது. பிரதான நினைவேந்தல் நிகழ்வு யாழ். நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபன் நினைவுத்தூபியில் இன்று (26-09-2024) முற்பகல் 10.48 மணிக்கு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, தொடர்ந்து அஞ்சலி நிகழ்வுகள் நடைபெறும். இதேநேரம், யாழ். பல்கலைக்கழகம், தீவகம், கிழக்கு மாகாணம் உட்பட வடக்கு, கிழக்கின் பல இடங்களிலும் புலம்பெயர் தேசங்களிலும் திலீபனை நினைவேந்தும் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. இராசையா பார்த்தீபன் என்ற இயற்பெயரை கொண்ட தி…
-
- 3 replies
- 688 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 26 SEP, 2024 | 01:44 PM தமிழ் மக்கள் சொந்த நாட்டில் இரண்டாம் தர பிரஜைகள் போல உணர்வதற்கு காரணமான நீண்ட கால துயரங்களிற்கு தீர்வை காண்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க அர்த்தபூர்வமன நடவடிக்கைகளை எடுப்பார் என எதிர்பார்க்கின்றோம் என உலகதமிழர் பேரவை தெரிவித்துள்ளது. அறிக்கையொன்றில் இதனை தெரிவித்துள்ள உலகதமிழர் பேரவை மேலும் குறிப்பிட்டுள்ளதாவது. சாதாரண பின்னணியில் ஆரம்பித்து தனது அரசியல் வாழ்க்கை முழுவதும் சாதாரண பொதுமக்களின் நபராக விளங்கிய அனுரகுமார திசநாயக்கவின் அரசியல் பயணம் அவரது சாதனைகள் அனைத்து பின்னணியை சேர்ந்த இளைஞர்களும் பெரும் கனவு காணத்தூண்டும். புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள ஹரிணி அ…
-
- 0 replies
- 219 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 2 26 SEP, 2024 | 05:44 PM கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் 31 இலட்சத்து 43 ஆயிரத்து 871 சதுரமீற்றர் பரப்பளவு நிலப் பகுதியிலிருந்து 77,908 அபாயகரமான வெடிபொருட்கள் அகற்றப்பட்டுள்ளதாக ஸார்ப் நிறுவனத்தின் நடவடிக்கை முகாமையாளர் ஓய்வுபெற்ற கப்டன் பிரபாத் நாரம்பனவ தெரிவித்துள்ளார். இன்று (26) அவர் அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்ட விபரத்தை தெரிவித்துள்ளார். இலங்கையின் வட பகுதியில் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றலில் ஜப்பான் மற்றும் அமெரிக்கா நாட்டு நிதி உதவியுடன் ஈடுபடும் ஸார்ப், மனிதாபிமானக் கண்ணிவெடி அகற்றும் அரச சார்பற்ற நிறுவனமானது 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடக்கம் 2024 செப்டெம்பர…
-
- 0 replies
- 251 views
- 1 follower
-
-
24 SEP, 2024 | 11:18 AM 2024 ஜனாதிபதி தேர்தலில் தமிழ் வேட்பாளர் ஒருவர் போட்டியிட்டு 1.69% வாக்குகளை பெற்றது குறித்து தனது கருத்தினை தமிழ் தேசிய கூட்டடமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் விளக்கமளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், 2024 ஜனாதிபதி தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தவேண்டும் என்ற எண்ணக்கரு உதயமான பொழுதிலிருந்தே அதனை மிகக் கடுமையாக நான் எதிர்த்தது அனைவரும் அறிந்ததே. அவ்வெதிர்ப்புக்கான காரணங்கள் பல தருணங்களிலே வெளிப்படுத்தப்பட்டிருந்தாலும் இச் சமயத்திலே மீண்டும் அவற்றை நினைவுபடுத்துவது நல்லது என்று நினைக்கின்றேன். 1. கள யத…
-
-
- 131 replies
- 7.3k views
- 2 followers
-