ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143530 topics in this forum
-
யாழ்ப்பாணம் மூளாய் கொத்தத்துறைப் பகுதியில் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் இளம் பெண்ணொருவரின் சடலம் இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வட்டுக்கோட்டை மாட்டு வண்டிச் சவாரித் திடலைக் கடந்து கொத்தத்துறை இந்து மயாணத்திற்குச் செல்லும் வழியில் மயாணத்திலிருந்து சுமார் 200m தூரத்திலேயே மேற்படி சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொலையுண்ட இளம் பெண் வட்டுக்கோட்டை தெற்கு இன்பச்சோலையைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் யோகேஸ்வரி (வசந்தி) என அடையாளங்காணப்பட்டுள்ளார். கடந்த 2012ஆம் ஆண்டு இவரின் கணவர் பாலசுப்பிரமணியம் வீதிவிபத்தில் இறந்ததைத் தொடர்ந்து தன்னைவிட பத்து வயதுக்கும் குறைந்த அதே இடத்தைச்சேர்ந்த இளைஞர் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். சில நாட்களின்முன் இருவரும் காணாமற்போயிருந்த நிலையில் …
-
- 0 replies
- 384 views
-
-
யாழ்ப்பாணத்திலிருந்து இயங்கும் டண்டணக்கா தொலைக்காட்சியின் இயக்குநருக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று பிடியாணை பிறப்பித்துள்ளது. கடந்த ஜனவரி 8ம் திகதி ஜனாதிபதி தேர்தலில் மக்கள் அன்றைய தினம் மாலை 6.30 மணி வரை வாக்களிக்க முடியும் என பொய் செய்தியை தொடர்ச்சியாக டாண் தொலைக்காட்சி ஒளி பரப்பியிருந்தது. இந்த செய்தியால் பாதிக்கப்பட்ட ஒருவர் நீதிமன்றின் உதவியை நாடியிருந்தார். இதன் வழக்கு விசாரணைக்காக தொலைக்காட்சியின் பணிப்பாளருக்கு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்திருந்தது. ஆனால் அவர் நீதிமன்றுக்கு சமுகமளிக்காதமையை அடுத்து அவருக்கு பிடியாணை பிறப்பித்து உத்தரவிடப்பட்டது. முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாயவை பங்காளராக கொண்டிருப்பதாக குற்றஞ்சாட்டப்படும் இத்தொலைக்காட்சி தனது மாதந்…
-
- 3 replies
- 774 views
-
-
பிரதமர் பதவிக்கு அலையும் மகிந்த! - இது தான் விதி என்று ஜேவிபி பரிகாசம். அன்று பிரதமர் பதவி கேட்டு மைத்திரி மஹிந்தவை சுற்றிவந்தார். இன்று மஹிந்த பிரதமர் பதவி கேட்டு மைத்திரியை சுற்றி வருகிறார். இதுதான் விதியின் விளையாட்டு என பரிகாசம் செயகிறார் ஜே.வி.பி. தலைவர் அனுரகுமார திஸாநாயக்க. பெல்வத்தையில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே ஜே.வி.பி. தலைவரும் எம்பியுமான அநுர திஸாநாயக இவ்வாறு தெரவித்தார்.இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், இன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அன்று தனக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய பிரதமர் பதவியை கேட்டு அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்…
-
- 1 reply
- 488 views
-
-
விடுதலைப்புலிகள் இறுதி யுத்தத்தினில் தமிழ் மக்களை கேடயமாகப்பயன்படுத்தினார்கள் என்பது தொடர்பினில் ஜ.நா அறிக்கைவரை பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது. ஆனால் நடந்த இன அழிப்பிற்கு அதனை ஈடாக்குவது ஏற்றுக்கொள்ளப்படமுடியாதவொன்றென தெரிவித்துள்ளார் தமிழ் சிவில் சமுக அமையத்தின் பேச்சாளர் குமாரவடிவேல் குருபரன். சட்டத்தரணி; மற்றும் விரிவுரையாளரான அவர் அமையத்தின், இணைப்பேச்சாளருமாவார்.பொதுமக்களால் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையினிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். நினைவு கூர்வதற்கான உரிமை எனும் தலைப்பினிலான கருத்துப்பரிமாற்ற நிகழ்வொன்று சிவில் சமூக அமைய ஏற்பாட்டினில் யாழ்.பொதுசன நூலக கேட்போர் கூட மண்டபத்தினில் இன்று நடைபெற்றிருந்தது.வைத்திய கலாநிதி. பூ.லக்ஸ்மன் (இதய சிகிச்சை நிப…
-
- 1 reply
- 700 views
-
-
மட்டக்களப்பில் உள்ள கிரிமிச்சை கிராமத்தில் பிரதி அமைச்சர் அமீர் அலி மீண்டும் காணிக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரதேச வாசிகள் இதனைத் தெரிவிக்கின்றன. இந்த பகுதி பூர்வீகமாக தமிழர்களுக்கு சொந்தமானது.பதிவு இணைய செய்தி கடந்த 2004ம் ஆண்டு காலப்பகுதியில் இதனை ஆக்கிரமிக்க அந்த நாட்டிகளில் அமைச்சராக இருந்த அமீர் அலி நடவடிக்கை எடுத்த போதும், பின்னர் அது நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் புதிய அரசாங்கத்தில் அவர் அமைச்சுப் பதவியை பெற்றுள்ள நிலையில் இந்த ஆக்கிரமிப்பு மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.பதிவு இணைய செய்தி இதனுடன் காத்தான்குடி பகுதியில் உள்ள செல்வந்த முஸ்லிம்களும் சம்பந்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.http://www.pathivu.com/…
-
- 3 replies
- 637 views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடுமையான கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மீன்பிடி நடவடிக்கைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன. புதிய காத்தான்குடி, ஏத்துக்கால்,பூநொச்சிமுனை, பாலமுனை, நாவலடி, பாலமீன்மடு உட்பட பல இடங்களில் கடற்றொழில் நடவடிக்கைகள் முற்றாக செயலிழந்துள்ளன. இதனால் கடல் மீன்களுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.கடற்றொழிலாளர்கள் தமதுபடகுகளையும் வள்ளங்களையும் கரையிலிருந்து நீண்ட தூரத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். இடம்மாவட்டத்தில் சுமார் 26 ஆயிரம் குடும்பங்கள் கடற்றொழிலை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை இம்மாவட்டத்தில் நேற்றிரவு முதல் கடும் மழை பெய்துள்ளது.24 மணிநேரத்தில் 19.2மில்லிமீற்றர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட காலநிலை அவதான நிலையம் தெரி…
-
- 0 replies
- 443 views
-
-
ஜுலை இறுதியில் பொதுத் தேர்தல்? 20ஆவது திருத்தச்சட்டம் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல் ஜுலை மாத இறுதியில் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த வாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அரச அதிகாரிகளுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துந்துரையாடலில் இணக்கம் தெரிவித்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. புதிய தேர்தல் முறைமை உள்ளடக்கப்பட்ட 20ஆம் திருத்தச்சட்டம் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் எதிர்வரும் பொதுத் தேர்தல் தற்போதைய முறையில் நடத்துவதற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் இணக்கம் தெரிவித்துள்ளனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது. புதிய முறைமையின் கீழ் தேர்தல் தேர்தல் பிரிவுகள் மறுபங்கீடு செய்யப்படுவது மற்றும…
-
- 0 replies
- 426 views
-
-
பெரும்பரபரப்புடன் ஆரம்பிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் மற்றும் மாவீரர் குடும்பங்களது தகவல் திரட்டு கிடப்பினில் போடப்பட்டுவிட்டதாவென கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. வடமாகாணசபையின் மீன்பிடி அமைச்சர் டெனீஸ்வரன் குறித்த தகவல்களை தனது அமைச்சினூடாக திரட்டுவதாக அறிவித்ததுடன் அதற்குரிய விண்ணப்ப படிவங்களையும் விநியோகிக்க நடவடிக்கை எடுத்திருந்தார். எனினும் இவ்வறிவித்தல்களை நம்பி பெருமளவினில் மாவீரர் குடும்பங்களை சேர்ந்தவர்கள் மற்றும் முன்னாள் போராளிகள் தகவல்களை பதிவு செய்திருந்தனர். எனினும் தமது படிவங்களிற்கு பின்னராக என்ன நடந்ததென்பதை தாம் அறிந்திருக்கவில்லையென அவர்கள் குற்றச்சாட்டுக்களினை எழுப்ப தொடங்கியுள்ளனர்.குறிப்பாக வடமாகாணசபை ஆரம்பிக்கப்பட்டு மூன்றாவது வருடத்தை அண்மித்துள்ள…
-
- 0 replies
- 724 views
-
-
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ பிரித்தானியாவின் போலியான நிறுவனம் ஒன்றுக்கு மிக்27 வகை விமானக் கொள்வனவின் போது நிதி வழங்கியமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த விமானக் கொள்வனவில் 10 மில்லியன் டொலர்கள் மோசடி செய்யப்பட்டன. இந்த நிதி பிரித்தானியாவின் பெலிமிசா என்ற நிறுவனத்துக்கு வழங்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சின் ஆவணங்களில் கணக்கு காண்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவ்வாறான நிறுவனம் ஒன்று பிரித்தானியாவின் எந்த பாகத்திலும் இல்லை என்று இன்டர்போல் உறுதி செய்துள்ளது. இந்த நிலையில் கோட்டாபய ராஜபக்ஷ மீதான குற்றச்சாட்டு உறுதியாகி இருக்கிறது. எனினும் அவர் இப்போதைக்கு கைது செய்யப்படமாட்டார் என்று கூறப்படுகிறது. http://www.pathivu.com/news/39964/57//d,article_…
-
- 0 replies
- 715 views
-
-
மத்திய வங்கியில் இடம்பெற்று மோசடியை மையமாக வைத்து, பிரதமர் ரணில்விக்ரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை முன்வைக்க எதிர்கட்சிகள் தீர்மானித்துள்ளன. மகிந்தவுக்கு ஆதரவான தரப்பு இதற்கான நடவடிக்கையை எடுத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. மத்திய வங்கின் ஆளுனர் அர்ஜுனமகேந்திரனினால் முறிகள் விநியோகத்தில் பாரிய நிதி மோசடி செய்யப்பட்டதாக முன்னர் குற்றம் சுமத்தப்பட்டிருந்தாலும், பின்னர் அது இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. எனினும் இதனை மையமாக வைத்து அவருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவர எதிர்கட்சிகள் நடவடிக்கை எடுத்திருந்தன. இதே காரணத்துக்காக ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராகவும் நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்று தயாரிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவ…
-
- 0 replies
- 686 views
-
-
அம்பாந்தோட்டையில் இருந்து கொண்டு வரப்பட்ட 5000 குடும்பங்களை 'கலாபோகஸ்வேவ' என்ற கொக்கச்சாங்குளத்தில் குடியேற்றியுள்ளனர். அங்கு இராணுவமும் ஓர் அரசியல்வாதியும் அரசாங்க அதிபரும் மாத்திரமே செல்ல முடியும். பதிவு இணைய செய்தி வேறு எவரும் செல்ல முடியாது. அங்குள்ள சிங்களவர்களை கோழிக்குஞ்சு வளர்ப்பதை போன்று வளர்க்கின்றனதென குற்றஞ்சாட்டியுள்ளார் வடமாகாணசபை உறுப்பினர் ரி.லிங்கநாதன் வட மாகாணசபைக்கு புதிதாக தெரிவு செய்யப்பட்ட எம்.பி.நடராஜாவின் வரவேற்பு நிகழ்வு வவுனியாவில் நேற்று இடம்பெற்றது. பதிவு இணைய செய்தி இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய அவர் அங்கு தெரிவிக்கையினில் ஏனெனில் அடுத்த தேர்தலில் தமிழர்களின் வாக்குகளை சமப்படுத்…
-
- 0 replies
- 395 views
-
-
அரச பணியாளர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு கூட அரசாங்கத்திடம் பணம் இல்லை!- சந்திரிகா அரச பணியாளர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கு கூட நிதியில்லாமல் அரசாங்கம் சிக்கலில் உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர், திறைசேரியின் பணம் உரியமுறையில் பயன்படுத்தப்படாமை காரணமாக இந்தநிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். முன்னாள் அரசாங்கம், மேற்கொண்ட அபிவிருத்தி திட்டங்களின் போது வெளிப்படைத்தன்மை கடைப்பிடிக்காமையே இதற்கான காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். tamilwin
-
- 0 replies
- 442 views
-
-
வடக்கு, கிழக்கில் போசாக்கு குறைபாட்டினால் சிறுவர்கள் பாதிப்பு – அனைத்துலக அறிக்கை MAY 11, 2015 | 4:06by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவின் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளில் உள்ள சிறுவர்கள் போசாக்கு குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாக, சிறுவர் பாதுகாப்பு அமைப்பு (Save the Children) உலகளாவிய அறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிறுவர்கள் மற்றும் தாய்மாரின் வாழ்க்கைத் தரத்தை அடிப்படையாக கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வை உள்ளடக்கிய அறிக்கை ஒன்றை, ஐ.நா அமைப்பான சிறுவர் பாதுகாப்பு (Save the Children) அமைப்பு கடந்த 5ம் நாள் வெளியிட்டுள்ளது. போசாக்கு குறைபாட்டினால், அம்பாறை, திருகோணமலை, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் …
-
- 0 replies
- 209 views
-
-
தமிழ்நாட்டில் இருந்து படகை கடத்தி செல்ல முயன்ற பருத்தித்துறை இளைஞர் கைது MAY 11, 2015 | 3:15by அ.எழிலரசன்in செய்திகள் தமிழ்நாடு மீனவரின் படகை கடத்திக் கொண்டு, சிறிலங்காவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற வடமராட்சி இளைஞர் ஒருவர், தமிழ்நாடு மீனவர்களால் நடுக்கடலில் மடக்கிப் பிடிக்கப்பட்டார். வினோத்குமார் என்ற பருத்தித்துறையைச் சேர்ந்த, 26வயதுடைய, இந்த இளைஞர் கடந்த ஏப்ரல் 26ம் நாள் சட்டவிரோதமாக படகு மூலம் தமிழ்நாட்டுக்கு வந்திருந்தார். வேளாங்கண்ணி பகுதியில் தங்கியிருந்த அவர், உள்ளூரில் உள்ள சிவானந்தம் என்பவருடன் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு. அவரது படகில், மீன்பிடிக்கச் சென்று வந்தார். இந்தநிலையில், அவர், நேற்று சிவானந்தத்தின் படகை எடுத்துக் கொண்டு பருத்தித்துறைக்குத் தப்பி…
-
- 0 replies
- 332 views
-
-
கோத்தாவுக்கு அழைப்பு விடுக்கவில்லை – என்கிறது பொது பலசேனா MAY 11, 2015 | 2:27by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் தாம் ஆரம்பிக்கவுள்ள புதிய கட்சியில், இணைந்து கொள்ளுமாறு, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கு அதிகாரபூர்வமான அழைப்பு விடுக்கப்படவில்லை என்று பொது பலசேனா அமைப்புத் தெரிவித்துள்ளது. சிங்கள கடும்போக்குவாத பொது பலசேனா அமைப்பு, தாம் புதிய அரசியல் அமைப்பு ஒன்றை ஆரம்பித்து தேர்தலில் போட்டியிடவுள்ளதாகவும், சிங்கள பௌத்தர்களுக்குத் தலைமை தாங்கும், தேசியத் தலைவர் ஒருவரை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும், அறிவித்திருந்தது. இதையடுத்து, கோத்தாபய ராஜபக்சவை புதிய கட்சியில் இணைந்து கொள்ளுமாறு பொது பலசேனா அழைப்பு விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகின…
-
- 0 replies
- 245 views
-
-
இந்திய வம்சாவளி தமிழர்கள் செறிந்து வாழும் நான்கு மாகாணங்களில் அரசியல் கட்சிகளின் புதிய கூட்டமைப்பை உருவாக்க, வடக்கு மற்றும் கிழக்குக்கு வெளியே செயற்படும் மூன்று கட்சிகள் தீர்மானித்துள்ளன. வடக்கு மற்றும் கிழக்கில் பெரும்பான்மை அங்கத்துவத்தை கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை போன்று மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி, கல்வி இராஜங்க அமைச்சர் வி.இராதாகிருஷ்ணனின் மலையக மக்கள் முன்னணி, அமைச்சர் பழனி திகாம்பரத்தின் தேசிய தொழிலாளர் சங்கம் ஆகியவை இணைந்தே ஒரு கூட்டமைப்பை உருவாக்கவுள்ளன. இது தொடர்பில் பூர்வாங்க பேச்சுக்கள் நடந்துள்ளதாகவும் புதிய கூட்டமைப்பு பற்றி அடுத்த வாரம் அறிவிக்கப்படுமெனவும் மனோ கணேசன் தெரிவித்தார். 'தமிழர்கள் செறிந்து வாழும் மேல், ஊவா, சப்ர…
-
- 0 replies
- 228 views
-
-
யாழ்ப்பாணத்தில் இயங்கும் தொலைக்காட்சியின் இயக்குநருக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று பிடியாணை பிறப்பித்துள்ளது. ஜனாதிபதி தேர்தலில் மக்கள் அன்றைய தினம் மாலை 6.30 மணி வரை வாக்களிக்க முடியும் என பொய் செய்தியை தொடர்ச்சியாக ஒளி பரப்பியிருந்தது. இந்த செய்தியால் பாதிக்கப்பட்ட ஒருவர் நீதிமன்றின் உதவியை நாடியிருந்தார். இதன் வழக்கு விசாரணைக்காக தொலைக்காட்சியின் பணிப்பாளருக்கு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்திருந்தது. ஆனால் அவர் நீதிமன்றுக்கு சமுகமளிக்காதமையை அடுத்து அவருக்கு பிடியாணை பிறப்பித்து உத்தரவிடப்பட்டது. http://www.malarum.com/article/tam/2015/05/10/9993/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0…
-
- 0 replies
- 226 views
-
-
இறுதி யுத்தத்தின் இரத்த சாட்சியாக விளங்கும் வணபிதா அருளானந்தம் அன்ரன் ஸ்ரீபன் அடிகளார் தனது அனுபவங்களை கவிதையாக வழங்கியிருந்தார்.https://youtu.be/oFlZnqnDqqA இவர்; தனது வலிகளை கவிதைகளாகி அதை நூலாக வெளியிட்ட போது இவருக்கு சிறீலங்கா அரசாங்கத்தால் கடுமையான அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது.அத்துடன் பலாலிக்கு அழைக்கப்பட்டிருந்த அவர் படையினரது விசாரணைகளையும் எதிர்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. நினைவு கூர்வதற்கான உரிமை எனும் தலைப்பினிலான கருத்துப்பரிமாற்ற நிகழ்வொன்று சிவில் சமூக அமைய ஏற்பாட்டினில் யாழ்.பொதுசன நூலக கேட்போர் கூட மண்டபத்தினில் இன்று நடைபெற்றிருந்தது. வைத்திய கலாநிதி. பூ.லக்ஸ்மன் (இதய சிகிச்சை நிபுணர்-யாழ் போதனா வைத்தியசாலை)தலைமையினில் இன்று காலை இடம்பெற்…
-
- 2 replies
- 1.6k views
-
-
180 நாள்களுக்குள், 53 பேர் மட்டு.வில் விபத்தில் சாவு. 180 நாள்களுக்குள் வீதி விபத்துக்களினால் மட்டக்களப்பில் 53 பேருக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக வீதி அபிவிருத்தி அதிகா ரசபை மட்டக்களப்பு மாவட்ட நிறை வேற்றுப் பொறியியலாளர் என். சசிநந்தன் தெரிவித்துள்ளார். மே 4 ஆம் திகதியிலிருந்து 10 ஆம் திகதி வரை வீதிப்பாதுகாப்பு வாரம் நாடு முழுவதும் அனுஷ்டிக்கப்பட்டது. அதற்கமைய கடந்த 6 ஆம் திகதி மட்டக்களப்பு வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் நிறைவேற்றுப் பொறியியலாளர் அலுவலகத்தில் இதன் ஆரம்பவிழா கொண்டாடப்பட்டது. இதன்போது, வீதிகளில் பயணிக்கும்போது கடைப்பிடிக்கப்பட வேண்டியுள்ள வீதிச் சட்டங்களில்பின் பற்றப்பட வேண்டியுள்ள பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து மக்களுக்கு விளக்கமளிக்கப்…
-
- 0 replies
- 359 views
-
-
இனப்பிரச்சியை தீர்க்க அரசாங்கம் முனையவில்லை - ஐரோப்பிய ஒன்றியம் சிறிலங்கா அரசாங்கம் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைளை தீர்க்க முனைப்பு காட்டவில்லை என்று ஐரோப்பிய ஒன்றியம் குற்றம் சுமத்தியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் சிறிலங்காவுக்கான தூதுவர் டேவிட் டேய்லி ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வி ஒன்றில், இதனைத் தெரிவித்துள்ளார்.பதிவு இணைய செய்தி யுத்தம் நிறைவடைந்து ஆறு வருடங்கள் ஆகின்றன. இனப்பிரச்சினையை தீர்க்க போதுமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இனிவரும் காலத்திலேனும் இனப்பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். பதிவு இணைய செய்தி அதேநேரம் முரண்பாடுகளுக்கு பேச்சுவார்த்தைகள் மூலமே தீர்வு காணப்பட வேண்டும் என்றும…
-
- 6 replies
- 691 views
-
-
தமிழர்களை வெற்றி கொள்வது எப்படி?- பலாலியில் படையினருக்கு பாடம் கற்பித்த ருவான் MAY 09, 2015by யாழ்ப்பாணச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவில் 30 ஆண்டுகளாக நீடித்த போருக்கு, மொழிப் பிரச்சினை முக்கியமானதொரு காரணம் என்று சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார். பலாலி படைத்தளத்தில் நேற்று நடந்த நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தமிழ்மொழிப் பயிற்சி பெற்ற 320 சிறிலங்கா படையினருக்கு, சான்றிதழ்களை வழங்கும் நிகழ்வில், சிறிலங்காவின் பொது நிர்வாக அமைச்சர் கரு ஜெயசூரியவுடன், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தனவும், கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் உரையாற்றிய ருவான் விஜேவர்த்தன, “சிறிலங்காவில் 30 ஆண்…
-
- 2 replies
- 567 views
-
-
சிறிலங்காவில் இந்தியாவின் கண்காணிப்பு ரேடர்கள் – இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் தகவல் MAY 09, 2015 | 12:58by இந்தியச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவில் இந்தியா கடலோரக் கண்காணிப்பு ரேடர்களையும், தன்னியக்க அடையாளப் பொறிமுறைகளையும் நிறுவியுள்ளதாக, இந்திய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிக்கர் தெரிவித்துள்ளார். சீனா தனது கடலடி ஆற்றலை திடீரெனக் கட்டியெழுப்பி வரும் நிலையில், இந்தியாவின் நீர்மூழ்கிப் படைப்பிரிவு வலுவாக இல்லை என்று இந்திய நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுக்கு, நேற்று எழுத்து மூலம் அளித்த பதில் ஒன்றிலேயே இந்த தகவலை அவர் வெளியிட்டுள்ளார். “இந்தியா தனது கடல்சார் நலன்களில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய விடயங்களை கண்காணித்து வருகிறது. தேசிய பாதுகாப…
-
- 2 replies
- 551 views
-
-
புலிகள் இறுதி யுத்தத்தில் மக்களை கேடயமாகப் பயன்படுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டை இன அழிப்பிற்கு ஈடாக்க முடியாது:- விடுதலைப் புலிகள் இறுதி யுத்தத்தில் தமிழ் மக்களை கேடயமாகப் பயன்படுத்தினார்கள் என்பது தொடர்பில் ஜ.நா அறிக்கைவரை பிரஸ்தாபிக்கப்பட்டு உள்ளது. ஆனால் நடந்த இன அழிப்பிற்கு அதனை ஈடாக்குவது ஏற்றுக் கொள்ளப்பட முடியாதவொன்றென தெரிவித்துள்ளார் தமிழ் சிவில் சமுக அமையத்தின் பேச்சாளர் குமாரவடிவேல் குருபரன். சட்டத்தரணி மற்றும் விரிவுரையாளரான அவர் அமையத்தின், இணைப பேச்சாளருமாவார். பொதுமக்களால் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். நினைவு கூர்வதற்கான உரிமை எனும் தலைப்பினிலான கருத்துப்பரிமாற்ற நிகழ்வொன்று சிவில் சமூக அமைய ஏற்பாட்ட…
-
- 2 replies
- 923 views
-
-
இன்றைக்கு உலக அன்னையர் தினம். இலங்கை அன்னையர்கள் கண்ணீர் சிந்தும் நாடு என்ற அடையாளத்துடன் இருக்கிறது. அன்னையர்கள் கண்ணீர் சிந்தும் ஒரு நாட்டில் அரசியலும் மனித உரிமையும் எப்படியானது என்பதை புரிந்துகொள்ள இயலும். கண்ணீர் சிந்தும் அன்னையர்கள் பலரை பார்த்துவிட்டேன். இன்றைய நாளில் அந்த அன்னையர்கள்தான் என் கண்ணின் முன்னால் வருகின்றனர். மனத்திரையில் வந்து காணாாமல் போன பிள்ளைகளின் படங்களை ஏந்தியபடி அழுகின்றனர். ஆறுமுகம் செல்லம்மா பூநகரியை சேர்ந்தவர். காணாமல் போன பிள்ளை வருவான் என்ற மகிழ்ச்சியை தனக்குள் உருவாக்கியிருப்பவர். ஏன் அழ வேண்டும்? என்பதுதான் அவரது கேள்வி. இலங்கை அரசு உத்தரவாதமளித்து இலங்கை இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட எங்கள் பிள்ளைகளை திருப்பித் தரவேண்டியது அரசின் கட…
-
- 1 reply
- 343 views
-
-
தேர்தலுக்கு முன்னதாக ராஜபக்ச, அவரது குடும்பத்தினர் மற்றும் அவரது ஆதரவாளர்களின் நம்பகத்தன்மையை அம்பலப்படுத்தி அழிப்பதற்கு அரசாங்கம் தயாராகி வருவது தெளிவாகின்றது. இதற்கான தந்திரோபாயமொன்றை வகுப்பதற்கு உயர்மட்ட ஊடககுழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் பிரதமரும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவும் இடம்பெற்றுள்ளனர் என கொழும்பிலிருந்து வெளியாகும் சண்டே ரைம்ஸ் தெரிவித்துள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது தேர்தல் சீர்திருத்தங்களை உள்ளடக்கிய 20 வது திருத்தம் நிறை வேற்றப்பட்வுடன் பாராளுமன்றத்தை கலைத்து விடுவேன் என அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சி தலைவர்களுக்கும் ஜனாதிபதி தெளிவுபடுத்தியுள்ளார். 19 வது திருத்த்திற்கான அங்கீகாரத்தை சபாநாயகர் சமல்ரா…
-
- 0 replies
- 660 views
-