Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. முதன்முதலில் இந்திய நீதித் துறையைப் பார்த்து மிரண்டுபோனது, ஷோவா பஷார் பரம்பரையின் வழக்கு தொடர்பாக செய்தி வெளியானபோது. 175 வருஷ பழமையான வழக்கு இது; இன்னும் நிலுவையில் இருக்கிறது என்று அந்தச் செய்தி சொன்னது. கொஞ்ச நாட்களில், “இந்தியாவில்தான் உலகிலேயே அதிகமான வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. நாடு முழுவதிலும் 3.56 கோடி வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன; இவை தவிர ஒவ்வோர் ஆண்டும் புதிதாக 1.5 கோடி வழக்குகள் பதிவாகின்றன” என்று மேலும் அசரடித்தார் அன்றைய சட்டத் துறை அமைச்சர் ஹெச்.ஆர். பரத்வாஜ். ஒடிசா உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த பி.எஸ். சௌகான் இன்னும் ஒருபடி மேலே போய், “இந்திய நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வழக்குகளை விசாரித்து முடிக்க இன்னும் 300 ஆண்டுகள் தேவைப்படும்” என்று பிரம…

    • 0 replies
    • 554 views
  2. சனிக்கிழமை 09.05.2014 அன்று சுவிஸ் பேர்ண் நகரில் ஏறத்தாழ 16,000 போட்டியாளர்கள் சர்வதேச ரீதியாகக் கலந்துகொண்ட "பேர்ண் க்ராண்ட் பிறிக்ஸ் 2015 (GRAND PRIX BERN 2015 )" 16.093 கி.மீ ஓட்டப்பந்தயத்தில் எமது தமிழின உணர்வாளர்கள் 3 விளையாட்டு வீரர்கள் பங்குபற்றிப் பதக்கங்களைப் பெற்றுக்கொண்டனர். அகவணக்கத்துடன் "மே 18 தமிழின இன அழிப்பு நாளை" நினைவுகூர்ந்து எமது இலட்சியமாம் தமிழீழத்தை வென்றெடுக்கும்வரை எமது இலட்சியப் பயணம் எம்மால் முடிந்த வழிகளில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுமென உறுதிமொழி எடுக்கப்பட்டு "தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்" என்ற எமது தாரகமந்திரத்துடன் பயிற்சிகளை ஆரம்பித்தார்கள். 16.00 மணியளவில் போட்டிகள் ஆரம்பமாகின. போட்டிகளில் பங்குபற்றியிருந்த எமது வீரர்கள் "ஸ்ரீல…

    • 0 replies
    • 369 views
  3. தமிழினப்படுகொலைக்கு நீதிக்கேட்டும், ஆண்டுக்கு 30கோடி ருபாய் தமிழகத்தில் இருந்து வர்த்தகம் ஈட்டிவரும் இனப்படுகொலை இலங்கையின் வர்த்தக நிறுவனமான 'தம்ரோ பர்நிச்சர்' உட்பட அனைத்து சிங்கள நிறுவனங்களையும் தமிழகத்தில் இருந்து தடை செய்ய கோரியும் இன்று காலை சென்னை வேளச்சேரியில் உள்ள தம்ரோ கடை முன்பாக அனைத்து மாணவர்கள் மற்றும் இளைஞர் இயக்கங்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக பேசிய மாணவர்கள் :- தமிழனையே கொன்னுட்டு தமிழ்நாட்டிலேயே வந்து மூலைக்கு மூலை கடை வைத்து வியாபாரம் செய்கிறது சிங்கள நிறுவனமான "தாம்ப்ரோ பர்னிச்சர் " .நிறுவனத்தை தமிழகத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும். இலையேல் போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளனர். http://www.pathivu.com/news/39935/57//d,ar…

    • 0 replies
    • 553 views
  4. தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. யுத்தம் நிறைவடைந்து ஆறு ஆண்டுகள் கடக்க உள்ள நிலையில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் டேவிட் டேலி இதனைக் குறிப்பிட்டுள்ளார். பிரச்சினைகளுக்கு அரசியல் ரீதியான தீர்வுத் திட்டங்கள் முன்வைக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார். வடக்கிலிருந்து முற்று முழுதாக இராணுவத்தினர் அகற்றப்பட வேண்டுமென எவரும் கோரிக்கை விடுக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய இலங்கைக்குள் தீர்வுத் திட்டமொன்று எட்டப்பட வேண்டுமென்றே வலியுறுத்தப்படுவதாகத் தெரவித்துள்ளார். அதிகளவில் வடக்கில் இராணுவத்தினர் பிரசன்னமாகியிருப்பதன…

    • 0 replies
    • 334 views
  5. வாழைச்சேனை பிரதேச சபைக்குரிய காணியில் பள்ளிவாசல் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக மட்டக்களப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன் குற்றம் சாட்டியுள்ளார். மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் இக்குற்றச்சாட்டை முன்வைத்த அவர் பேசியதாவது, குறித்த காணி 60 வருட காலமாக பிரதேச சபையினால் பராமரிக்கப்படுகின்றது. 1958ம் ஆண்டில் பிரதேச சபையினால் கட்டப்பட்ட கிணறும் 1986ம் ஆண்டில் கட்டப்பட்ட கட்டிடமும் அக்காணியில் இருக்கின்றன. இப்படி இருக்கையில் இந்தக் காணிக்கான உறுதி தனி நபரின் பெயரில் எழுதப்பட்டு அவரால் பள்ளிவாசலுக்கு கையளிப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இது விடயமாக தெளிவுபடுத்துமாறு கூட்டத்துக்கு தலைமை வகித்த பிரதியமைச்சர்…

    • 0 replies
    • 275 views
  6. 2009ஆம் ஆண்டிலிருந்து மே 18 ஆம் திகதி கொண்டாடப்பட்டு வந்த 'போர் வெற்றி நாள்' ஆயுதப்படைகள் நாள்' என்று பெயர்மாற்றப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. இந்த நாளில், கடந்த 30 வருடங்களாக யுத்தத்தில் உயர்நீத்த சகலரும் நினைவு கூறப்படுவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. http://www.tamilmirror.lk/145784#sthash.YRkgjx5H.dpuf

    • 0 replies
    • 308 views
  7. தமிழ்த்தேசியத்தை அடகுவைத்து அரசியல் செய்யும் அனைவருக்கும் ஓர் எச்சரிக்கை!! - ஈழத்தமிழ் இளையோர் அமைப்பு ஒரு மாபெரும் இன அழிப்பு நடைபெற்ற காயங்கள் இன்னமும் ஆறவில்லை ஆனாலும் ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டன நேற்று நடந்ததைப்போல நெஞ்சத்தில் அந்த நினைவுகள் முட்களைப்போல நெருடிக்கொண்டிருக்கின்றன கண்ணைத்திறந்தாலும் மூடினாலும் அவலங்களின் அந்த நாட்கள் கண்ணைவிட்டு அகலாது கண்ணுக்குள்ளேயே ஓடிக்கொண்டிருக்கின்றன . அபிவிருத்தி என்றும் நல்லாட்சி என்றும் கூறியபடி சிங்கள தேசத்தின் சிம்மாசனத்தில் புதியவர் ஒருவர் இப்போது அமர்ந்துகொண்டுள்ளார் ஆனாலும் தமிழர்களின் நிலை என்ன? இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ன?சிங்களதேசத்தின் கொடிய இனவெறி இரானுவத்தினால் படுகொலை செய்யப்பட்ட லட்சக்கனக்காண மக்களின் அழிவு…

    • 5 replies
    • 847 views
  8. மீண்டும் விரைவில் மேடைக்கு வருவேன் என்கிறார் மகிந்த MAY 09, 2015 | 2:29by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் தாம் விரைவில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மேடைக்கு வரவுள்ளதாகத் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச. குருநாகலில் நேற்று நடந்த மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான கூட்டத்துக்கு அனுப்பி வைத்துள்ள செய்தியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்சவை மீண்டும் அரசியலுக்கு அழைத்து வருவதற்கான, கூட்டம் நேற்று குருநாகல், வெலகெதர மைதானத்தில், இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையின் தடையையும் மீறி சுமார் 55 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றிருந்தனர். இந்தக் க…

    • 3 replies
    • 468 views
  9. மன்னார் மற்றும் வவுனியாவில் காணி சுவீகரிப்பை மேற்கொள்ள சிறிலங்காவின் ஜனாதிபதி தடை விதித்துள்ளார். இந்த பகுதியில் காட்டை அழித்து பாரிய காணியை சுவீகரித்த றிசாட் பதியுதீன், தமக்கு ஆதரவான முஸ்லிம் மக்களுக்கான குடியேற்ற கிராமங்களை உருவாக்கி இருந்தார். எனினும் இந்த குற்றச்சாட்டை மறுத்து வந்தார். இந்த நிலையில் இந்த விடயத்தில் தலையிட்டுள்ள ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ, அந்த பகுதியில் காணிகளை சுவீகரிக்கவும், காடுகளை அழிக்கவும் தடை விதித்துள்ளார். மேலும் அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறும் உரிய தரப்பினருக்கு அவர் பணிப்புரை விடுத்துள்ளார். ஜனாதிபதியின் ஊடப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. http://www.pathivu.com/news/39928/57//d,article_full.asp…

    • 3 replies
    • 437 views
  10. மகிந்த அனுமதி மறுத்த ஐ.நா குழுவுக்கு மைத்திரி அனுமதி – ஓகஸ்ட்டில் சிறிலங்காவுக்குப் பயணம் MAY 10, 2015 | 1:41by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் காணாமற்போகச் செய்யப்பட்டவர்கள் தொடர்பான ஐ.நா பணிக்குழு வரும் ஓகஸ்ட் மாதம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது. வரும் ஓகஸ்ட் 3ம் நாள் தொடக்கம், 12ம் நாள் வரை இந்தக் குழு சிறிலங்காவில் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு முன்னர் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ள அனுமதி கோரியிருந்தது. எனினும், முன்னைய மகிந்த ராஜபக்ச அரசாங்கம் இந்தக் குழுவின் பயணத்துக்கு அனுமதி வழங்கவில்லை. புதிய அரசாங்கம் அனுமதி அளித்துள்ளதையடுத்தே, காணாமற்போகச் செய்யப்பட்டவர்கள் தொடர்பான ஐ.நா பணிக்குழு ஓகஸ்ட் மாதம் சிறிலங்காவுக்க…

    • 0 replies
    • 356 views
  11. பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தலில் விடுதலைப் புலிகள் ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் தோற்கடிக்கப்பட்டுள்ளதானது, சிறிலங்காவுக்கு நல்ல செய்தி என்று சிறிலங்காவுக்கான கொன்சர்வேட்டிவ் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த அமால் அபேகுணவத்தன தெரிவித்துள்ளார். இதுகுறித்து கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில், முன்னைய நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்த விடுதலைப் புலிகள் ஆதரவு கொன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்களான, லீ ஸ்கொட் மற்றும், நிக் டி பொய்ஸ் ஆகிய இருவரும், கடந்த வியாழக்கிழமை நடந்த தேர்தலில் தோல்வியைச் சந்தித்துள்ளனர். இவர்கள் தோல்வியடைந்தமை, பிரித்தானியாவில், விடுதலைப் புலிகளின் பரப்புரைக்கு பாரிய பின்னடைவாகும் என்று அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர். பிரித்த…

    • 2 replies
    • 334 views
  12. ’18 பில்லியன் டொலர்’ குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகுவேன்- நாமல் சவால் MAY 09, 2015 | 3:04by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் தனது தந்தையோ அல்லது குடும்பத்தினரோ, வெளிநாடுகளில் 8 பில்லியன் டொலர் சொத்துக்களை வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருப்பதை, நிரூபித்தால் தாம் அரசியலை விட்டே விலகுவதாக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுக்குச் சவால் விடுத்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச. மகிந்த ராஜபக்சவும் அவரது குடும்பத்தினரும், 18 பில்லியன் டொலர் சொத்துக்களை வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ளதாக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கடந்த வியாழக்கிழமை குற்றம்சாட்டியிருந்தார். இதுகுறித்து, மகிந்த ராஜபக்ச வெளியிட்ட அறிக்கை ஒன்றில், இந்தக் …

    • 0 replies
    • 313 views
  13. புனேயை விட்டுப் புறப்பட்டது சிறிலங்கா விமானம் – இந்திய அதிகாரிகள் நிம்மதிப் பெருமூச்சு MAY 09, 2015 | 2:55by இந்தியச் செய்தியாளர்in செய்திகள் பாகிஸ்தானில் இருந்து குதிரைகளை ஏற்றி வந்த சிறிலங்கா விமானப்படை விமானம், நேற்று அதிகாலையில், புனே விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்ற பின்னரே, இந்திய அதிகாரிகள் நிம்மதி அடைந்துள்ளனர். பாகிஸ்தான் இராணுவம் சிறிலங்கா இராணுவப் பயிற்சி அகடமிக்கு அன்பளிப்புச் செய்த எட்டுக் குதிரைகளை ஏற்றி வந்த, சிறிலங்கா விமானப்படையின் சி-130 விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதையடுத்து, புதன்கிழமை மாலை புனே விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. விமானத்தின் நான்கு இயந்திரங்களில் ஒன்று பழுதடைந்த நிலையில், அந்த விமானம் தரையிறக்கப்பட…

    • 0 replies
    • 327 views
  14. இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் மற்றும் மனிதத்திற்கு எதிரான குற்றங்கள் பற்றி அய். நா மனித உரிமைக் குழுவின் விசாரணை அறிக்கை எதிர் வரும் செப்டம்பர் மாதம் வெளிவர உள்ளது. ஏற்கனவே கடந்த 2011-ஆம் ஆண்டு அய். நா செயலாளர் நாயகத்தின் நிபுணர் குழு இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்த அடிப்படை விசாரணைகள் நடத்தி போர்க்குற்றங்கள் நடந்திருப்பகத உறுதி செய்து அறிக்கை வெளியிட்டது. அதன் தொடர்ச்சியாக அய். நா .மனித உரிமை ஆணையம் அடுத்தக் கட்ட விசாரணையை மேற்கொள்ள ஒரு குழுவை அமைத்தது. http://www.pathivu.com/news/39924/57/2009/d,article_full.aspx

    • 0 replies
    • 244 views
  15. ஐக்கிய நாடுகள் சபையின் காணாமல் போனோர் சம்பந்தமான செயற்குழு எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 3ம் திகதி சிறிலங்காவுக்கு விஜயம் செய்யவுள்ளது. 3ம் திகதி முதல் 12ம் திகதி வரையில் இந்த குழு சிறிலங்காவில் தங்கி இருந்து பல்வேறு விசாரணைகளை நடத்தும் என்று, ஐக்கிய நாடுகளின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த செயற்குழுவுக்கு 30 நாடுகள் தொடர்பான 400க்கும் அதிகமான முறைபாடுகள் கிடைத்துள்ளன. அவற்றில் சிறிலங்கா சம்பந்தமான முறைபாடுகளும் காணப்படுகின்றன. இதன்அடிப்படையிலேயே இந்த குழு சிறிலங்காவுக்கு செல்லவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழு சிறிலங்காவில் விசாரணை நடத்துவதற்கு, சிறிலங்கா அரசாங்கமும் அனுமதி வழங்கியுள்ளது. http://www.pathivu.com/news/39925/57/3/d,article_full.aspx

    • 0 replies
    • 185 views
  16. வரும் மே 18ம் நாள் சிறிலங்காவில் போரில் இறந்த அனைவரையும் நினைவு கூரும் நாளாக அனுஷ்டிக்கப்படவுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை வெற்றி கொண்ட மே 18ம் நாள், சிறிலங்காவில் ஆயுதப்படையினரின் நாளாகப் பிரகடனம் செய்யப்பட்டு, போர் வெற்றி விழாவாக கொண்டாடப்பட்டு வந்தது. மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால், ஒழுங்கு செய்யப்பட்டு வந்த நிகழ்வு இந்த ஆண்டு மாத்தறையில் நடைபெறும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கம், மே 18ம் நாளை வித்தியாசமான முறையில் கடைப்பிடிக்கவுள்ளது. இந்த நாள், சிறிலங்காவில் போரில் இறந்த அனைவரையும் நினைவு கூரும் நாளாக கடைப்பிடிக்கப்படவுள்ளது என்று அரசாங்க அதிகாரி ஒ…

    • 0 replies
    • 269 views
  17. தமிழின அழிப்புக்கு நீதி கோரி அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவையால் பல நாடுகளில் பல்வேறு அரசியல் சந்திப்புகள் நடைபெற்றுகொண்டிருகின்றது . அவ்வகையில் இத்தாலி ஈழத்தமிழர் மக்கள் அவையால் வெளிவிவகார அமைச்சில் முக்கிய சந்துப்பு நடைபெற்றது . இச் சந்திப்பில் இத்தாலி ஈழத்தமிழர் மக்கள் அவை பிரதிநிதிகளும் பிரான்ஸ் நாட்டில் இருந்து வருகை தந்த அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவையின் வெளிவிவகார அரசியல் குழுவின் இணைப்பாளரும் கலந்துகொண்டனர் . இச் சந்திப்பில் தமிழின அழிப்புக்கு பரிகார நீதி கிடைக்கும் வண்ணம் அனைத்துலக சுயாதீன விசாரணைக்கு இத்தாலி அரசு ஆதரவு வழங்க வேண்டும் என்பதையும் அத்தோடு தமிழ் மக்கள் தமது அரசியல் அபிலாசையை வெளிபடுத்தும் வகையில் ஐநாவின் கண்காணிப்பில் தாயகத்திலும் புலத்திலும் …

    • 0 replies
    • 195 views
  18. "திருகோணமலை மாவட்டத்தின் சம்பூர் பகுதி முதலீட்டு வலயத்துக்காக முன்னைய அரசால் சுவீகரிக்கப்பட்டது. தற்போதைய அரசு மக்களிடமே சம்பூரை மீளக் கையளித்தமையை நாம் வரவேற்கின்றோம். இது தமிழ் மக்களின் மண் மீட்புப் போராட்டத்திற்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.'' - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். "தாம் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த சொந்த மண்ணில் மீள்குடியேறி - தொழில் செய்து - சுதந்திரமாக வாழவேண்டும் என்ற தமிழ் மக்களின் இலட்சியக் கனவு நனவாகி வருகின்றது" என்றும் அவர் குறிப்பிட்டார். திருகோணமலை மாவட்டத்தில் சம்பூர் பகுதியில் முதலீட்டு வலயத்துக்காக சுவீகரிக்கப்பட்ட பொதுமக்களின் 818 ஏக்கர் காணி மீளக் கையள…

  19. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் சேற்றுக் குளியல் கொண்டாட்ட புகைப்படங்கள் கீழே தரப்பட்டுள்ளன. முன்னைய காலங்களில் பகிடிவதையின் போது சேற்றுக்குள் புதுமுக மாணவர்களை தள்ளி விட்டு பல பிரச்சினைகளும் யாழ் பல்கலைக் கழகத்தில் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.jvpnews.com

    • 18 replies
    • 2.2k views
  20. வெளிநாட்டில் பணிபுரிவதற்காக மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி பஸ்ஸில் வந்த இரு சகோதரர்கள் கொழும்பு சுகந்ததாஸ விளையாட்டு அரங்குக்கு அருக்கில் வைத்து இன்று அதிகாலை 4 மணியளவில் விபத்துக்குள்ளானத்தில் இருவரும் படுகாயமடைந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, மட்டக்களப்பைச் சேர்ந்த 35 வயதுடைய சிறிதரன் மற்றும் 24 வயதுடைய டிலக்சன் ஆகியோர் வெளிநாட்டில் பணிபுரிவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்குச் செல்வதற்காக மட்டக்களப்பிலிருந்து கொழும்புக்கு பஸ்ஸில் வந்துள்ளனர். கொழும்பு சுதந்ததாஸ விளையாட்டுக்கு அரங்குக்கு அருகில் பஸ்ஸில் இருந்து இறங்கி பஸ்ஸின் பின்புறமாக இருந்த தமது பொதிகளை எடுத்துகொண்டிருந்த போது வேகமாக வந்த டிப்பர் ரக வாகனமொன்று குறித்த நபர்கள் மீது மோதியுள்ள…

    • 0 replies
    • 470 views
  21. வட மாகாண சுற்றாடல் அமைச்சால் வலசைப் பறவைகள் (இனப்பெருக்கம் செய்யும் நாட்டிலிருந்து வேறொரு நாட்டுக்கு பனிக்காலத்தில் இடம்பெயரும்; பறவைகள்) பற்றி மாணவர்களுக்கு அறிவூட்டும் விதமாக, கருத்தமர்வும் வெளிக்கள பயிற்சியும் யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்தது. இது தொடர்பில் அமைச்சால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, சர்வதேச ரீதியாக ஆண்டுதோறும் மே மாதத்தின் இரண்டாவது வார இறுதி நாட்களில் உலக வலசைப் பறவைகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதன்படி இம் மாதம் 9 ஆம் 10ஆம் திகதி உலக வலசைப் பறவைகள் தினம் ஆகும். இந்த தினத்தைக் கொண்டாடும் விதமாக வடமாகாண சுற்றாடல் அமைச்சு வலசைப் பறவைகள் பற்றிய கருத்தமர்வு மற்றும் வெளிக்கள…

  22. ஹாட்லி கல்லூரி முன்னாள் அதிபர் விபத்தில் சாவு பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியின் முன்னாள் அதிபர் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தார். மோட்டார் சைக்கிளில் பயணித்த இவரை பருத்திதுறை முதலாம்கட்டை சந்தியில் அரச திணைக்கள வாகனம் ஒன்று மோதியுள்ளது. விபத்தில் கனகசபாபதி அருளானந்தம் (வயது 61) என்பவரே உயிரிழந்தார். விபத்துகுறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். http://www.malarum.com/article/tam/2015/05/09/9980/%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%A…

  23. திருகோணமலை மாவட்டத்தில் சம்பூர் பகுதியில் முதலீட்டு வலயத்துக்காக சுவீகரிக்கப்பட்ட பொதுமக்களின் 818 ஏக்கர் காணி மீளக் கையளிக்கப்படவுள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று வியாழக்கிழமை கையெழுத்திட்டார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். சம்பூர் மக்கள் தமது காணிகளை நாளை வெள்ளிக்கிழமை முதல் பார்வையிட முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். சம்பூர் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று நடைபெற்ற கூட்டத்தின் பின்னர் மேற்படி வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி மைத்திரிபால கையெழுத்திட்டார் என்று சுமந்திரன் எம். பி.மேலும் தெரிவித்தார். இதேவேளை, திருகோணமலை சம்பூர் பகுதியில…

  24. இலங்கை அரசாங்கத்தை 13 திருத்தத்தின் கீழ் ஜனநாயக சீர்திருத்தங்களை மேற்கொண்டு தமிழர் பகுதிகளுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படுவதை உறுதிசெய்யுமாறு இலங்கைக்கு சமீபத்தில் விஜயம் மேற்கொண்ட பாராதிய ஜனதா பிரமுகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இலங்கைக்கான தனது விஜயத்தின்போது அமைச்சர்கள் ராஜித சேனரத்தின மற்றும் சுவாமிநாதனுடன் 13 திருத்தம் குறித்து விவாதித்ததாக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த பாரதிய ஜனதாவின் தேசிய நிறைவேற்று குழு உறுப்பினர் இல .கணேசன் தெரிவித்துள்ளார். கம்பன்கழகத்தின் நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக பி.ஜே.பியின் தமிழ்நாட்டு கிளையின் துணைத்தலைவர் சக்கரவர்த்தியுடன் இலங்கை வந்திருந்த இல கணேசன் இராஜதந்திர நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளார்.அவர் தமிழ்மக்களுடனும் அம…

  25. நாட்டில் ஜன­நா­ய­கத்தை வெற்­றி­கொள்ளும் போராட்­டத்தில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுடன் இணைந்து செயற்­பட்டுள்ளேன். நானும் ரணில் விக்கிரமசிங்கவும் ஒன்­றி­ணைந்து மிகப்­பெ­ரிய அர­சியல் முடிச்சை அவிழ்த்­துள்ளோம் என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார். நாட்டில் ஜன­நா­யகவாதிகள் இனியும் வாய்­மூடி இருக்­காது சமூ­கத்தின் நல­னுக்­காக குரல் எழுப்­ப­வேண்டும் எனவும் அவர் குறிப்­பிட்டார். கொழும்பில் நேற்று கலைஞர் உபுல் சாந்த சன்­னஸ்­க­லவின் புத்­தக வெளி­யீட்டில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். ஜனாதிபதி அங்கு மேலும் தெரி­விக்­கையில், நான் இன்று ஜனா­தி­ப­தி­யாக இருந்­தாலும் எனது முன்­னைய நிலைமை தொடர்பில் நான் இன்னும்…

    • 5 replies
    • 651 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.