ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143530 topics in this forum
-
எனது ஆட்சியில் முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் சில அநீதிகள் நடந்தன. என்னை மீறி இடம்பெற்ற இந்த விடயங்களுக்கு நான் பொறுப்பல்ல என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபகஸஷ தெரிவித்துள்ளார். ஆரம்பம் முதலே தான் முஸ்லிம்களின் நண்பன் என்று கூறியுள்ள அவர் பொய் பிரசாரங்களினாலே முஸ்லிம்கள் தூரமானதாகவும் குறிப்பிட்டார். முன்னாள் ஜனாதிபதிக்கும் முஸ்லிம் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பு நேற்று முன்தினம் மாலை நாரஹேன்பிட்ட அபயாராமவில் நடைபெற்றது. இதில் மௌலவிமார், உள்ளூராட்சி சபை தலைவர்கள், உறுப்பினர்கள், அமைப்பாளர் கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள். இதன்போது கடந்த காலத்தில் பொதுபலசேனா போன்ற இனவாத அமைப்புகளினால் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட அநீதி குறித்து பலரும் கருத்துத் தெரிவித்தன…
-
- 5 replies
- 892 views
-
-
19 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது யாழ். பருத்தித்துறைப் பகுதியில் சுமார் 19 கிலோ எடையுடைய கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்றிரவு பருத்தித்துறை சுப்பர் மடம் பகுதியில் வல்வெட்டித்துறை மற்றும் பருத்தித்துறை பொலிஸார் அதிரடி சுற்றிவளைப்பினை மேற்கொண்டனர். சுப்பர்மடம் கடற்கரைப் பகுதியில் பாரியளவு கஞ்சா கடத்தல் இடம்பெறவுள்ளதாக தமக்கு கிடைத்த தகவலை அடுத்து வல்வெட்டித்துறை மற்றும் பருத்தித்துறை பொலிஸார் உள்ளடங்கிய விசேட குழுவினர் குறித்த பகுதியை சுற்றிவளைத்து சோதனை மேற்கொண்டனர். குறித்த சுற்றிவளைப்பின் போது சந்தேகத்திற்கிடமான ஒரு வீட்டினை சோதனையிடுகையில் அங்கு அன்னளவாக 19 கிலோ எடையுள்ள கேரள கஞ்சா கைப்பற்றப் பட்டதுடன் சந்தேக நபர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளா…
-
- 5 replies
- 651 views
-
-
-நடராசா கிருஸ்ணகுமார் கிளிநொச்சி, பூநகரி, கௌதாரிமுனை பகுதிக்கு கிளிநொச்சி மாவட்டச் செயலர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையிலான குழுவொன்று வியாழக்கிழமை (07) பயணம் செய்து கௌதாரி முனையில் அனுமதியற்ற முறையில் நடைபெறும் மணல் அகழும் இடங்களை பார்வையிட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில், கௌதாரி முனையிலேயே மிகக் கூடுதலான மணல் அகழ்வு இடம்பெற்று வருகின்றது. கடந்த காலங்களில் பூநகரிப் பிரதேச செயலகம் மற்றும் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டங்களில் கௌதாரி முனையில் நடைபெறுகின்ற மணல் அகழ்வு தொடர்பாக ஆதங்கம் தெரிவிக்கப்பட்டன. கௌதாரிமுனையில் மணல் அகழ்வு இடம்பெறக்கூடாதென முடிவுகள் கூட எடுக்கப்பட்டன. ஆனால் தொடர்ச்சியாக கௌதாரி முனையில் மணல் அகழ்வு இடம்பெற்று கொண்டிருக்கின்றது. இம்மணல் தொடர…
-
- 0 replies
- 536 views
-
-
ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவிலிருந்து இராணுவத்தினர் நீக்கம் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவில் இணைக்கப்பட்டிருந்த இராணுவத்தினர் நீக்கப்பட்டுள்ளனர் என இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார். இராணுவ தலைமையகத்தின் ஆலோசனைக்கு அமைய கடந்த 30 ஆம் திகதியிலிருந்து இராணுவத்தினர் நீக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு நீக்கப்பட்டவர்கள் ஏற்கனவே சேவையாற்றிய பிரிவுகளில் இணைக்கப்பட்டுள்ளனர் என்றும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார். ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவில் 1200 இராணுவத்தினர் இணைக்கப்பட்டிருந்தனர்.இந்தப் பிரிவு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் ஏற்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=506294023308713934#sthash.gl9dTCAl.dpuf
-
- 1 reply
- 526 views
-
-
இரகசிய முகாம்களின் தகவல்களை தாருங்கள் - மங்கள சமரவீர "இலங்கையில் இருக்கின்றதாகக் கூறப்படும் இரகசிய முகாம்கள் தொடர்பாக தகவல் வழங்கினால், அது குறித்து விசாரணைகளை முன்னெடுக்க அரசு தயாராக உள்ளது'' என்று வெளி விவகார அமைச்சர் மங்கள சமரவீர நேற்றுத் தெரிவித்தார். போரால் பாதிக்கப்பட்ட வடக்கு மக்களின் காயங்களை ஆற்றவேண்டிய நிலையில், அரசு இருக்கின்றது என்றும், இறுதிக் கட்டப் போரில் காணாமல் போனோர் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுகின்றன என்றும், இந்த விடயம் தொடர்பில் கேள்வி எழுப்புவதற்கு தமிழ் மக்களுக்கு உரிமை உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்றுக் காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மேற்கண…
-
- 2 replies
- 888 views
-
-
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா விரைவில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது எங்களுக்கு கிடைத்துள்ள பாரிய சர்வதேச வெற்றியாகும் என்று காணி அமைச்சர் எம்.கே.டி.எஸ். குணவர்த்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் நேற்று முன்தினம் நடைபெற்ற பேச்சுவார்த்தை தொடர்பான விபரங்களை அறிவிக்கும் முகமாகவே இந்த செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில், எமது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிறந்த முறையில் சர்வதேச உறணாவை பேணிவருகின்றார். இந்திய பிரதமர் …
-
- 10 replies
- 726 views
-
-
புலிகளின் சட்டங்களை காட்டுச்சட்டம் என்று கூறவில்லை! - பின்வாங்கிய பொலிஸ் அதிகாரி [Thursday 2015-05-07 19:00] விடுதலைப் புலிகளின் சட்டங்கள் காட்டு சட்டங்கள் என நான் கூறவில்லை என வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஏ.ஜயசிங்க தெரிவித்துள்ளார். இன்றைய தினம் யாழ்.காங்கேசன்துறையில் நடைபெற்ற பத்திரிகையாளர்களுடனான சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். குறித்த சந்திப்பில் மேலும் அவர் குறிப்பிடும்போது, சுன்னாகம் பிரதேச சபை தலைவர் குறிப்பிட்ட கருத்திற்கு நான் காட்டு சட்டங்கள் அதாவது காட்டில் வலிமையான மிருகம் வழிமாற்ற மிருகத்தை அடக்குவது போன்ற காட்டு சட்டத்தை நடைமுறை படுத்த முடியாது என்றே கூறினேன்.அதில் புலிகள் என்ற சொல்லை நான் பயன்பட…
-
- 4 replies
- 707 views
-
-
"இராணுவத்தின் பிடியிலிருக்கும் சம்பூர் கிராமம் மக்களின் மீள்குடியமர்வுக்காக விடுவிக்கப்பட்டது என்ற செய்தியை (நாளை) இன்று வியாழக்கிழமை கேட்பீர்கள்." - இவ்வாறு சம்பூர் மக்களிடம் உறுதி தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட எம்.பியுமான இரா.சம்பந்தன். அனல் மின் நிலையம் அமைப்பதற்காக திருகோணமலையின் சம்பூர் கிராமத்தை உயர்பாதுகாப்பு வலயமாக இராணுவம் அபகரித்துள்ளது. இதனால் 818 ஏக்கர் நிலப்பரப்பில் வாழ்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ளனர். இவர்களை சம்பந்தன் எம்.பி. நேற்று சந்தித்தார். இதன்போது "நாளை (இன்று) வியாழக்கிழமை ஜனாதிபதி, மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் ஆகியோருடன் உயர்மட்ட பேச்சு இடம்பெறவுள்ளது. இதன் பி…
-
- 15 replies
- 906 views
-
-
வலிகாமம் வடக்கிலுள்ள பொதுமக்களின் எஞ்சிய காணிகள் விடுவிப்பது தொடர்பில் மீண்டும் பேசப்போவதாக மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். அவ்வகையினில் மீள்குடியேற்ற அமைச்சு, மீள்குடியேற்றம் தொடர்பான குழுவின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவோம் என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். மீள்குடியேற்றம் தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று யாழ். மாவட்டச் செயலகத்தில இன்று இடம்பெற்றிருந்தது. சந்திப்பு தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து கூறுகையில் அரசாங்கம் 1,100 ஏக்கர் காணிகளை விடுவித்துள்ளது. அவற்றில் பல காணிகளில் இராணுவத்தினர் தடைகளை போட்டுள்ளனர். அவற்றை முழுமையாக அகற்றி மக்களுக்கு வழங…
-
- 0 replies
- 504 views
-
-
புத்தூர் கலைமதி பகுதியில் பாடசாலை செல்லாமல் வீடுகளில் இருந்த 9 சிறுவர்கள் வியாழக்கிழமை (07) கண்டுபிடிக்கப்பட்டதுடன் அவர்கள் மீண்டும் பாடசாலை செல்வதற்கான ஊக்குவிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அச்சுவேலி பொலிஸார், வலிகாமம் கிழக்குப் பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் யோகேஸ்வரி சுரேஸ்குமார், புத்தூர் கலைமதி சனசமூக நிலையத்தினர், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் இணைந்து நடத்திய சோதனை நடவடிக்கையில் பாடசாலைக்குச் செல்லாதிருந்த 9 சிறுவர்கள் அடையாளம்; காணப்பட்டனர். அவர்கள் மீட்கப்பட்டு, அச்சுவேலி பொலிஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டு, சிறுவர்கள் பாடசாலைக்குச் செல்லாமல் இருப்பதற்கான காரணங்கள் அறியப்பட்டன. அதிகமான சிறுவர்கள் வறுமை, பெற்றோரின் அக்கறையின்மை போன்ற காரணங…
-
- 2 replies
- 444 views
-
-
விடுவிக்கப்பட்ட சொந்த நிலங்களில் மீளக்குடியேற 993 குடும்பங்கள் பதிவு வலி. வடக்கு மீள்குடியேற்றம் தொடர்பான கூட்டமொன்று இன்று யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடல் தொடர்பாக அரச அதிபர் கருத்து தெரிவிக்கையில், இன்று இடம்பெற்ற குறித்த கூட்டம் மீளக்குடியமர்ந்த மக்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்குவது தொடர்பாகவும் உடனடியாக அவர்களுக்குத் தேவையான தற்காலிக கொட்டகைகளை அமைப்பது மற்றும் அவர்களது தேவைகள் தொடர்பாகவுமே இன்றைய இக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. இதுவரை விடுவிக்கப்பட்ட 1013 ஏக்கர் காணிகளில் 993 குடும்பங்கள் பதிவு செய்துள்ளனர். அவர்களுக்கான ஒரு லட்சத்து நாற்பதாயிரம் ரூபா பெறுமதியான இருப்பிடங்களை அமைப்பதற்கும் அத்துடன் நிரந்தரமான மலசலகூடங்களை…
-
- 2 replies
- 1k views
-
-
மஹிந்தவின் சொத்து விவரம்அம்பலம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குடும்பத்தின் சொத்து மதிப்பு 2 இலட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபா (18 பில்லியன் அமெரிக்க டொலர்) என்ற தகவலை நேற்று வெளியிட்ட வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, சர்வதேச நாடுகளின் புலனாய்வுப் பிரிவினரின் தொழில் நுட்ப உதவிகளின் அடிப்படையிலேயே மஹிந்தவின் சொத்து விவரம் மதிப்பிடப்பட்டுள்ளது என்றும் உறுதிப்படுத்தினார். ராஜபக்ச குடும்பத்தின் சொத்து மதிப்பானது, நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியில் நான்கில் ஒரு பங்கு என்றும், இலங்கையின் மிகப்பெரிய நிதியமான ஊழியர் சேமலாப நிதியின் இரு மடங்கு என்றும், 100 தலைமுறைகளுக்குப் போதுமானது என்றும் தெரிவித்த வெளிவிவகார அமைச்சர், அமெரிக்காவில் கூட குறிப்பிட்ட சிலரிடம் மட்டுமே இதுபோன…
-
- 0 replies
- 874 views
-
-
பலாலி விமான நிலையமே இலங்கையின் பிரதான விமான நிலையம் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையமும் இலங்கையின் பிரதான விமான நிலையமாக் கப்படும். அத்துடன் திருகோண மலைத் துறைமுகமும் திருத்தப்பட்டு இலங்கையின் சிறந்த பொருளாதார வலயமாக்கப்படும். இவ்வாறு மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்தார். கிளிநொச்சி அறிவியல் நகரில் நேற்று முன்தினம் நடைபெற்ற இலங்கை மத்திய வங்கியின் காரியாலய திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 100 நாள் காலத்திலே பெருந்தொகையான மகிழ்ச்சிகரமான முக்கியத்துவத்தைக் கொண்டு வரமுடியாத நிலைமையிலும் அந்தக் கால எல்லைக்குள் எங்கள் சமுதாயத்திற்கும் எங்கள் மக்களுக்கும் ஒரு விழிப்புணர…
-
- 0 replies
- 690 views
-
-
டைனமற் உபயோகித்து மீன்பிடித்த மூன்று பேருக்கு பிணை யாழ்ப்பாணம், குருநகர், வெண் புரவிநகர் பகுதியில் டைனமட் வெடிவைத்து மீன்பிடித்த மீனவர்கள் மூவரையும் படகுகளையும் தலா 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான ஆட்பிணையில் விடுவிக்க ஊர்காவற்றுறை நீதிவான் செல்வநாயகன் லெனின்குமார், நேற்று முன்தினம் அனுமதியளித்தார். மீன வர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட மீன்களை நாரா நிறுவனத்துக்கு பரிசோதனைகளுக்காக அனுப்பி, அடுத்த வழக்குத் தவணையின் போது அறிக்கையை சமர்ப்பிக் குமாறு கடற்றொழில் நீரியல் வளத் துறை அதிகாரிகளுக்கு நீதிவான் உத்தரவிட்டார். யாழ்.கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகள் கடந்த 2 ஆம் திகதி நடத்திய சோதனை நடவடிக்கையில் டைனமட் வெடி வைத்துப் பிடித்த மீனவர்கள் மூவரையும் பிடித்ததுடன…
-
- 0 replies
- 326 views
-
-
கிளி. மாவட்ட கூட்டுறவுப் பணியாளருக்கு முப்பது சதவீத சம்பள உயர்வு கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவுப் பணியாளர்களுக்கான முப்பது வீத சம்பள உயர்வு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்டக் கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் வி.கே.அருந்தவநாதன் தெரிவித்தார். இந்த மாவட்டத்தில் உள்ள பல நோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள், பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் இரண்டாம் படி சங்கங்கள் போன்றவற்றில் பணியாற்றும் சகல பணியாளர்களுக்கும் புதிய சுற்றறிக்கைக்கு அமைவாக முப்பது வீத சம்பள உயர்வு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. சங்கங்களின் தலைவர், பொது முகாமையாளர்களுக்கான மாதாந்தக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். மாவட்டத்தில் உள்ள சகல கூட்டுறவுச் சங்கங்களும் இந்தப் புதிய சம்ப…
-
- 0 replies
- 826 views
-
-
மரக்கறி விலைகள் சடுதியாக அதிகரிப்பு யாழ்.குடாநாட்டில் மரக்கறி வகைகளின் விலை திடீரென சடுதியாக அதிகரித்துள்ளது. தற்போது ஆலயங்களின் மஹோற்சவங்கள் ஆரம்பமான நிலையிலும் மற்றும் சுபகாரியங்கள் நடைபெறும் காலப் பகுதியாகையாலும் மரக்கறி பாவனை அதிகரித்துள்ளது. இதன் காரணத்தால் சந்தைகளில் மரக்கறி வகைகளுக்கு பற்றாக்குறை ஏற்படுவதோடு, அவை சடுதியாக விற்றுத் தீர்ந்தும் விடுகின்றன. கடந்த வாரத்தில் மரக்கறி வகைகளின் விலை சற்று வீழ்ச்சியடைந்து காணப்பட்டதோடு இந்த வாரத்தில் அவற்றின் விலை அதிகரித்துக் காணப்படுகின்றது. இந்த மரக்கறி வகைகள் தற்போது கிலோ 80 ரூபாவுக்கு மேல் விற்கப்படுகின்றன. அதனைவிட மழையும் சீரற்றுப் பெய்வதால் மரக்கறிப் பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதோடு அவை நோய்த் தாக்கத்துக்கு…
-
- 0 replies
- 378 views
-
-
எரிபொருள் விலையை அதிகரிக்குமாறு கோரிக்கை எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்குமாறு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் என்பன கோரிக்கை விடுத்துள்ளன. லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் கடந்த காலங்களில் பல தடவைகள் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளது என்று மின்சக்தி மற்றும் எரி சக்தி அமைச்சின் செயலாளர் சுரேன் படகொட தெரிவித்தார். பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் சில உற்பத்திகளால் நட்டம் ஏற்படுகின்றது என்று அந்த நிறுவனங்கள் அமைச்சுக்கு தெரியப்படுத்தியுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார். எனினும் எரிபொருள்களின் விலைகளை அதிகரிக்கப் போவதில்லை என்று சுட்டிக்காட்டிய அவர், மாற்று வழியில் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐ.ஓ.சி. நிறுவனங்களின் நட்டத்…
-
- 0 replies
- 209 views
-
-
செப்ரெம்பருக்கு முன்னர் உள்நாட்டு விசாரணை! - என்கிறார் மங்கள [Friday 2015-05-08 08:00] இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அமர்வுக்கு முன்னர் உள்நாட்டு பொறிமுறையொன்று உருவாக்கப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது கருத்த வெளியிட்ட அவர், 'அரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்டமூலத்தை ஒரு வாரத்துக்குள் நிறைவேற்றிக்கொண்டு தற்போதுள்ள தேர்தல் முறைமையின் கீழ் பொதுச் தேர்தலுக்குச் செல்ல வேண்டும்' என சுட்டிக்காட்டினார்.…
-
- 0 replies
- 297 views
-
-
இயந்திரத்தில் கோளாறு புனேயில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது சிறிலங்கா விமானம்: [Friday 2015-05-08 08:00] சிறிலங்கா இராணுவத்தினருக்கான குதிரைகளை, பாகிஸ்தானில் இருந்து ஏற்றி வந்த, சிறிலங்கா விமானப்படையின், சி-130 விமானம், நடுவானில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறை அடுத்து, இந்தியாவின் புனே விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. இஸ்லாமாபாத்தில் இருந்து 8 குதிரைகள மற்றும் 13 பேருடன் கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த போதே, நடுவானில் கோளாறு ஏற்பட்டது. உடனடியாக இந்த விமானம் நேற்றுமாலை 5.40 மணியளவில் புனே அனைத்துலக விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. அந்த விமானத்தில், விமானிகளுடன், 8 சிறிலங்கா படையினர், மற்றும் ஒரு பாகிஸ்தான…
-
- 0 replies
- 179 views
-
-
வலி.வடக்கில் விடுவிக்கப்பட்ட பகுதிகளை ஊடறுத்து புதிதாக படையினர் அமைக்க முயற்சித்த வீதி வேலைகள் இன்று பொதுமக்களினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.படையினரால் மீள்குடியமர்விற்கென விடுவிக்கப்பட்ட வசாவிளான் கிழக்கு பகுதியினில் மக்கள் குடியிருப்புக்களினை ஊடறுத்து பலாலி வீதியினையும் வல்லை-அராலி வீதியையும் இணைக்கும் புதிய பாதையொன்றினை அமைக்கும் நடவடிக்கையினை தற்போது ஆரம்பித்திருந்தனர். எனினும் இதற்கு காணி உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டதையடுத்து இம்முயற்சி இன்று தடைப்பட்டு போயுள்ளது.நூற்றுக்கணக்கான படையினர் கனரக வாகனங்கள் சகிதம் இவ்வேலையினில் காலை முதல் குதித்திருந்தனர்.எனினும் தமது காணிகள் ஊடாக அவ்வாறு வீதிகள் அமைக்கப்படுவதற்கு மக்கள் கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டத…
-
- 0 replies
- 336 views
-
-
பிள்ளைகளின் மீது மண்ணெண்ணை ஊற்றிய தந்தை! [ வெள்ளிக்கிழமை, 08 மே 2015, 06:06.10 AM GMT ] பொகவந்தலாவ வானகாடு தோட்டத்தில் இரண்டு பிள்ளைகள் மீது மண்ணெண்னை ஊற்றி தீ வைக்க முயன்ற தந்தை ஒருவரை பொகவந்தலாவ பொலிஸார் நேற்று இரவு கைது செய்துள்ளனர். குறித்த பிள்ளைகளின் தாய் மலேசியா நாட்டிற்கு வீட்டு பணிபெண்ணாக சென்றுள்ளார். குறித்த நபரின் மனைவி வெளிநாடு சென்று நான்கு மாதங்கள் நிறைவடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. தான் பெற்ற பிள்ளைகளை மண்ணெண்னை ஊற்றி தீ வைக்க முயற்சித்ததாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் மீட்கப்பட்ட 08வயது மற்றும் 04வயது கொண்ட பிள்ளைகள் இருவரும் பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்த…
-
- 0 replies
- 599 views
-
-
வலி.வடக்கினில் விடுவிக்கப்பட்ட பகுதிகளை ஊடறுத்து புதிதாக படையினர் அமைக்க முயற்சித்த வீதி வேலைகள் இன்று பொதுமக்களினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. படையினரால் மீள்குடியமர்விற்கென விடுவிக்கப்பட்ட வசாவிளான் கிழக்கு பகுதியினில் மக்கள் குடியிருப்புக்களினை ஊடறுத்து பலாலி வீதியினையும் வல்லை-அராலி வீதியையும் இணைக்கும் புதிய பாதையொன்றினை அமைக்கும் நடவடிக்கையினை தற்போது ஆரம்பித்திருந்தனர்.பதிவு இணைய செய்தி எனினும் இதற்கு காணி உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டதையடுத்து இம்முயற்சி இன்று தடைப்பட்டு போயுள்ளது.நூற்றுக்கணக்கான படையினர் கனரக வாகனங்கள் சகிதம் இவ்வேலையினில் காலை முதல் குதித்திருந்தனர்.எனினும் தமது காணிகள் ஊடாக அவ்வாறு வீதிகள் அமைக்கப்படுவதற்கு மக்கள் கடுமையான எ…
-
- 0 replies
- 499 views
-
-
பாஜக இல. கணேசன் இலங்கைக்கு பயணம்! வடக்கு மாகாண அவைத் தலைவருடன் சந்திப்பு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான இல. கணேசன், வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானத்துடன் கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன் போது வடக்கு மாகாணத்தின் பொருளாதார கட்டுமானங்களை மேம்படுத்தல், போரினால் பாதிக்கப்பட்ட விதவைகள் மற்றும் பொதுமக்களுக்கு வாழ்வாதார உதவிகளை மேம்படுத்தல் உள்ளிட விடயங்களுக்கு இந்திய அரசாங்கம் வடக்கு மாகாணத்துக்கு உதவி செய்யவேண்டும் என அவைத் தலைவர் கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்றுக்கொண்ட இல. கணேசன், இந்தியா திரும்பியதும் இந்த விடயங்கள் தொடர்பில் உரிய அமைசர்களுடன் கலந்துரையாடி நல்லதொரு பதிலை பெற்றுத்தருவதாக த…
-
- 0 replies
- 451 views
-
-
மஹிந்த வந்தால் தேசிய அரசாங்கம் சாத்தியமில்லை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிரதமர் ஆசை பகல் கனவாக மாறியுள்ளது. மக்களின் ஆணையை ஏற்றுக்கொண்டு தனது 70 வயதில் அரசியல் செய்வதனை விடுத்து வீட்டில் இருந்து நன்மையான காரியங்கள் செய்து புண்ணியம் தேட வேண்டுமென்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். இதேவேளை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் மக்களினால் நிராகரிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூட்டு சேர்வதாக இருந்தால் புதிய பாராளுமன்றத்தில் தேசிய அரசாங்கம் சாத்தியமில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகத்தில் நேற்று இடம் பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு தெரிவ…
-
- 0 replies
- 567 views
-
-
புதிய அரசு மக்களின் பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வைப்பெற்றுத் தரும் என்ற நம்பிக்கை காணப்படுகின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் மொறவெவ பிரதேச மக்கள் மத்தியில் தெரிவித்தார். திருகோணமலை மாவட்டத்தில் மொறவெவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பின்தங்கிய கிராமங்களான நொச்சிக்குளம், சாந்திபுரம், அவ்வை நகர் போன்ற பகுதிகளுக்கு நேற்று வியாழக்கிழமை நேரில் சென்று மக்களுடன் கலந்துரையாடியபோதே சம்பந்தன் எம்.பி. மேற்கண்டவாறு கூறினார். இந்தக் கலந்துரையாடலின்போது பல வருடங்களாக மீள்குடியமர்த்தப்பட்டும் இருப்பதற்கு இருப்பிடம் கூட இன்னும் வழங்கப்படவில்லை எனவும், தாம் போருக்கு முன்னர் விவசாயம் செய்துவந்த காணிகள் பெரும்பா…
-
- 0 replies
- 348 views
-