ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143530 topics in this forum
-
இலங்கை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஊழல் மூலம் சம்பாதித்த 18 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்துக்களை வெளிநாடுகளில் பதுக்கிவைத்திருப்பதாக இலங்கையின் வெளிநாட்டு அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். வியாழனன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இதை கூறியுள்ளார். மகிந்த ராஜபக்ஷ குடும்பத்தினர் பெயரில் வெளிநாடுகளில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள சொத்துக்கள் தொடர்பாக இலங்கை அரசு விசாரணையொன்றை ஆரம்பித்துள்ளதாக கூறிய மங்கள சமரவீர, அதனடிப்படையில் ராஜபக்ஷ குடும்பத்தினர் பெயரில் சுமார் 18 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேற்பட்ட சொத்துக்கள் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வெளிநாட்டுப் புலனாய்வு நிறுவனங்கள் தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்தார். இந்த சொத்துக்…
-
- 0 replies
- 724 views
-
-
வடக்கு மாகாணத்தில் அரச சேவைக்கு ஆட்களை உள்ளீர்ப்பதில் மோடிசகள் தொடர்வதாக பல தரப்புக்களும் குற்றச்சாட்டுக்களினை எழுப்பி வந்திருந்த நிலையில் மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் உயர்மட்ட அதிகாரிகள் குழுவொன்று அகப்பட்டுள்ளது. வடமாகாணசபையின் கீழான வருமான வரி வசூலிப்பாளர்களிற்கான ஆட்சேர்ப்பிற்கென அண்மையில் நடத்தப்பட்ட போட்டிப்பரீட்சை முடிவுகளில் திருத்தங்களைச் செய்ய முற்பட்ட வேளையிலேயே கையும் மெய்யுமாக மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் உள்ளிட்ட சிலரே அகப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில் ஆட்சேர்ப்பில் லஞ்சம் பெறப்பட்டமை மற்றும் முறைகேடுகள் தொடர்பில் தொடர்ச்சியான குற்றச்சாட்டுக்கள் குறித்த ஆணைக்குழுவின் செயலாளரான தெய்வேந்திரம் மீது முன்வைக்கப்பட…
-
- 1 reply
- 654 views
-
-
நாட்டுக்கு என்று ஒரு சட்டம் இருக்கு அதனைவிடுத்து காட்டுசட்டங்களை அமுல்படுத்த முடியாது என வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற சிவில் பாதுகாப்பு குழு கூட்டத்தில், யாழில் தற்போது வாள்வெட்டு கலாச்சாரம் போதைப்பொருள் பாவனை என்பன அதிகரித்து காணப்படுகின்றது. அதனை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர் அத்துடன், விடுதலை புலிகள் காலத்தில் அவ்வாறான செயற்பாடுகள் இல்லாமல் இருந்தது அதற்கு அவர்களின் கடுமையான சட்டங்களும் , தண்டனைகளுமே காரணம் எனவும் அவர்களால் சுட்டிக்காட்டப்பட்டது. அதற்கு பதிலளிக்கும் போதே சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் மேற்கண்டவ…
-
- 19 replies
- 1.3k views
-
-
இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அமர்வுக்கு முன்னர் உள்நாட்டு பொறிமுறையொன்று உருவாக்கப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். இந்த நாட்டு அரசியலில் தற்போது கட்சிகளுக்கிடையிலான போட்டி காணப்படவில்லை. மாறாக நல்லாட்சி மற்றும் கொள்ளை ஆட்சிகளுக்கு இடையிலான போட்டியே நிலவுகின்றது என கொழும்பில் நேற்று வியாழக்கிழமை (07) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது கூறிய அமைச்சர் புரட்சிக்கு எதிரான எதிர் புரட்சியொன்று தற்போது நாட்டில் இடம்பெற்றுக்கொண்டிருப்பதாக' கூறினார். அங்கு தொ…
-
- 0 replies
- 334 views
-
-
நடராஜா குருபரன்... ஜனாதிபதி அவர்களே தசரத சக்கரவர்தியாக முடிசூட்டி உங்கள் ஜனநாயகத்தை ரசிக்கும் கம்பவாருதிகளின் காலத்தையும் தவற விடாதீர்கள் - இலங்கையில் ஆட்சிமாற்றமா? ஆள் மாற்றமா என்ற வாதப் பிரதிவாதங்கள் புலத்திலும் புலப்பெயர்விலும் அதிர்ந்துகொண்டு இருக்கின்றன... ஹம்பாந்தோட்டை கடலில் இருந்து சுனாமி அலைகளாக எழும் ராஜபக்ஸக்கள் மீண்டும் நாட்டுக்குள் புகுந்து விடுவார்களா? எனத் தவிக்கும் நல்லிணக்க அரசாங்கம் சீனப்பெருமதிலை தகர்த்த சிறுபான்மைத் தமிழரை கண்டு கொள்ளவில்லை என்ற ஆதங்கமும் பெரும்பான்மையான தமிழர் மனங்களை அரிக்கத்தான் செய்கின்றன... சுதந்திர இலங்கையில், டீ.எஸ் சேனநாயக்கா முதல் - டட்லிசேனநாயக்கா, பண்டாரநாயக்கா, சிறிமாவோ பண்டாரநாயக்கா, ஜே. ஆர் ஜெயவர்தன, பிரேமதா…
-
- 2 replies
- 456 views
-
-
குறிப்பிட்டு கூறும் அளவிற்கு முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸவிற்கு எவ்வித நோய்களும் கிடையாது என கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி உத்பல ஆட்டிகல தெரிவித்துள்ளார். கடுவெல நீதவான் தம்மிக்க ஹேமபாலவிற்கு சமர்ப்பித்த அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. பசில் ராஜபக்ஸவின் உடல் நலக்குறைவு தொடர்பில் முழு அளவில் சோதனை நடத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். எனினும் அவ்வாறு குறிப்பிட்ட கூறும் அளவிற்கு நோய்கள் எதுவும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார். அம்பியூலன்ஸ் வண்டியில் நீதிமன்றிற்கு ஆஜராகிய பசில் ராஜபக்ஸ, அம்பியூலன்ஸ் வண்டியை விட்டு இறங்காதிருந்தார் என தெரிவிக்கப்படுகிறது. பசில் ராஜபக்ஸவை, நீதவான் ஹேமபால சென்று பார்வையிட்டுள்ளார். திவிநெகுமு…
-
- 0 replies
- 373 views
-
-
மகிந்தவை வெளியே போகச் சொன்ன மைத்திரி! -நேற்றைய பேச்சுத் தோல்வி! [Thursday 2015-05-07 19:00] ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற பேச்சு முற்றாக தோல்வியடைந்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன. பேச்சுகளில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மதியம் 12.45 மணிக்கும் நாடாளுமன்றத்திற்கு சென்றிருந்ததுடன் முன்னாள் ஜனாதிபதி ஒரு மணி நேரம் பிந்தி சுமார் 1.45 அளவில் நாடாளுமன்றத்திற்கு சென்றார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் வந்திருந்திருந்த இரண்டு பிரதிநிதிகளுக்கு எதிர்ப்பை காட்டும் வகையிலேயே முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு …
-
- 1 reply
- 566 views
-
-
பிரிட்டன் செல்வந்தர்களில் அதிக நிதி உதவி செய்த ஈழத் தமிழர் 13வது இடத்தைப் பிடித்துள்ளார்! [Wednesday 2015-05-06 19:00] சண்டே ரைம்ஸ் மற்றும் சி.ஏ.எப் நிறுவனமும் இணைந்து , செல்வந்தர்களில் எவர் தமது பணத்தை பதுக்கிவைக்காமல் , அதனை ஏழை எழிய மக்களுக்கு செலவுசெய்கிறார்கள் என்ற பட்டியலை வெளியிட்டுள்ளார்கள். அதில் 13 வது இடத்தைப் பிடித்திருப்பது வேறு யாரும் அல்ல , ஈழத் தமிழரான சுபாஷ்கரன் அல்லிராஜா தான். உலகில் பலர் பணத்தை சம்பாதிக்கிறார். ஆனால் சம்பாதித்த பணத்தைப் பதுக்கிவைக்கிறார்கள். தாமும் தமது சந்ததியினரும் அனுபவிக்க சொத்தைச் சேர்க்கிறார்கள். ஆனால் சுபாஷ்கரன் அல்லிராஜா முற்றிலும் மாறுபட்ட ஒரு மனிதர். சாதாரண மனிதராக பிரித்தானியா வந்து குடியேறிய அவர் , …
-
- 9 replies
- 1.4k views
-
-
நாவற்குழியில் குடியேறியுள்ள சிங்கள மக்களால், எந்தவொரு அனுமதியும் பெறப்படாது அமைக்கப்பட்ட விகாரை, பௌத்த சாசன அமைச்சின் கீழ் அண்மையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் அங்கு ஏற்கனவே அத்திபாரம் வெட்டப்பட்ட நிலையிலிருந்த வீடுகளை நிர்மாணிக்கும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நாவற்குழியில் தேசிய வீடமைப்பு அதிகார சபைக்குச் சொந்தமான காணியில், ஒரு தொகுதி சிங்கள மக்கள் 2010 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அத்துமீறிக் குடியேறினர். அவர்கள் எந்தவொரு அனுமதியும் பெற்றுக் கொள்ளாது, அடாத்தாகப் பிடித்த காணிகளில் வீடுகளைக் கட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அத்துடன் அவர்கள் தங்கியுள்ள பகுதியில் விகாரை ஒன்றையும் அமைத்தனர். இந்த விகாரை அமைப்பதற்கும் எந்தவொரு முறைப்பட…
-
- 10 replies
- 805 views
-
-
தமிழர் விடியல் கட்சி மே மாதத்தை "தமிழினப் படுகொலைக்கான நீதி கேட்கும் போராட்ட மாதம்" என்று அறிவித்ததை தொடர்ந்து நேற்று (5/05/15) மாலை கோவையில் உள்ள சிங்கள வணிக நிறுவனமான "டாம்ரோ பர்னிச்சர் (DAMRO FURNITURES)" கடையை முற்றுகையிட முயன்றனர். அங்கு வந்த காவல்துறை அவர்களை கைது செய்தனர். இந்த போராட்டத்தை கட்சியின் இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் நவீன் முன்னிலை வகிக்க, மாநில ஒருங்கிணைப்பாளர் உ. இளமாறன் தலைமை தாங்கினார். தமிழர் விடியல் கட்சி இந்த முற்றுகை போராட்டத்தை அறிவித்ததை ஒட்டி, நேற்று ஒரு நாள் முழுக்க அந்நிறுவனம் கடையை அடைத்துவிட்டனர். . இதே போல் நாம் தொடர்ந்து போராடினால் இனப்படுகொலை இலங்கை நிறுவனங்களை தமிழ் மண்ணிலிருந்து முழுமையாக அகற்றிவிடலாம்! என தமிழர் விடியல் கட்சிய…
-
- 0 replies
- 643 views
-
-
முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலைக்கு உள்ளான தமிழ் மக்களுக்கு ஒரு நினைவுத்தூபியை கட்டியெழுப்புங்கள்! [Thursday 2015-05-07 19:00] நல்லிணக்கம் பற்றி பேசும் சிங்கள அரசிடம் நல்லிணக்கத்தின் பேரால் மக்களின் மன ஆறுதலுக்காக கொல்லப்பட்ட மக்களுக்கு ஒரு நினைவு ஸ்தூபியை எழுப்பி நல்லிணக்கத்தை அங்கிருந்து கட்டியெழுப்ப தொடங்குங்கள். கி.மு.480ஆம் ஆண்டு பாரசீக படையெடுப்புக்கு எதிராக ஸ்பார்ட்டா மன்னன் லியோனிடாஸ் (Leonidas) தலைமையில் பல்லாயிரக்கணக்கான பாரசீக படையினரை எதிர்த்து 300 கிரேக்க வீரர்கள் Thermopylae என்ற இடத்தில் போரிட்டு அனைவரும் மாண்டனரே ஆயினும் அதன் விளைவாக கிரேக்கர்கள் ஒன்றுதிரண்டு பெரும் பாரசீகப் படையை இறுதியில் தோற்கடித்தனர். அந்த 300 வீரர்களும் மாண்ட…
-
- 0 replies
- 760 views
-
-
பழைய நிலையை மறக்கவில்லை! - என்கிறார் ஜனாதிபதி மைத்திரி [Thursday 2015-05-07 07:00] நாட்டில் ஜனநாயகத்தை வெற்றி கொள்ளும் போராட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து செயற்பட்டுள்ளேன். நானும் ரணில் விக்கிரமசிங்கவும் ஒன்றிணைந்து மிகப்பெரிய அரசியல் முடிச்சை அவிழ்த்துள்ளோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். கொழும்பில் நேற்று கலைஞர் உபுல் சாந்த சன்னஸ்கலவின் புத்தக வெளியீட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். ஜனாதிபதி அங்கு மேலும் தெரிவிக்கையில், நான் இன்று ஜனாதிபதியாக இருந்தாலும் எனது முன்னைய நிலைமை தொடர்பில் நான் இன்னும் மறக்கவில்லை. பலகாலம் அமைதியாகவும் மற்றவர்களில் கதைகளுக்கு செவி…
-
- 0 replies
- 623 views
-
-
மகிந்தவுக்கு சேறு பூசுவதாக இருந்தால் 500 பக்கங்களுக்கு சேறுபூச வேண்டும் : அசாத்சாலி மகிந்த ராஜபக்சவின் விடயத்தில் மைத்திரிபால சிறிசேன அவதானமாக நடக்க வேண்டும் என்று நவசமாசக் கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்ச மைத்திரிபாலவை சந்திக்கும்போது சூழ்ச்சியோடு சந்தித்துள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். குறிப்பாக ஜனாதிபதிக்கு உயிரச்சுறுத்தல் விடுவிக்கப்பட்டமையையும் இந்த இடத்தில் கவனத்தில் கொள்ள வேண்டுமென அவர் கூறியுள்ளார். மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றும் நோக்கில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சில நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இடமளிக்ககூடாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சில குற்றங்கள்…
-
- 0 replies
- 498 views
-
-
வடக்கு பொலிஸ்மா அதிபருக்கும் யாழ். ஊடகவியலாளர்களுக்கும் விசேட கலந்துரையாடல் யாழ். மாவட்டத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்று வரும் குற்றச்செயல்கள், பொலிஸாரது செயற்பாடுகள் மற்றும் பொதுமக்களிடத்தில் உள்ள பிரச்சினைகள் குறித்து வடக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் .ஏ ஜயசிங்கவிற்கும் ஊடகவியலாளர்களுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று காங்கேசன்துறையில் உள்ள அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கலந்துரையாடலில், யாழ். குடா நாட்டில் உள்ள மக்களிடத்தில் இருக்கும் பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. அத்துடன் போக்குவரத்துப் பொலிஸார் இலஞ்சம் பெறுவது உள்ளிட்ட அவர்களது சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பிலும் சுட்டிக்காட்டப்பட்டது. மேலும் போதைப்பொருள் பாவனையும் யாழ்.குடா…
-
- 0 replies
- 467 views
-
-
எந்தத் தடை வந்தாலும் மகிந்த ஆதரவுக் கூட்டம் குருணாகலில் நடக்கும்! - பிரசன்ன ரணதுங்க [Thursday 2015-05-07 08:00] எவ்வாறான தடைகள் ஏற்படுத்தப்பட்டாலும் குருணாகலில் நாளை மகிந்த ஆதரவுக் கூட்டம் நடத்தப்படும் என மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு முன்னாள் ஜனாதிபதி மஹிந்தனை பெயரிட வேண்டுமெனக் கோரி நாட்டின் பல பகுதிகளிலும் கூட்டம் நடத்தப்பட்டு வருகின்றது. எந்தவொரு அரசியல் காரணிகள் தேவைகளுக்காக இந்தக் கூட்டம் நிறுத்தப்பட மாட்டாது. கடந்த கூட்டங்களை விடவும் அதிகளவானவர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டுமென பிரசன்ன ரணதுங்க கோரியுள்ளார். http…
-
- 2 replies
- 489 views
-
-
இந்த ஆண்டும் சுடரேற்றுவேன் - ரவிகரன் இந்த வருடமும் மாவீரர் நாளன்று ஈகச்சுடர் ஏற்றுவேன். எங்கள் உறவுகளை, பிள்ளைகளை, நினைவு கூர்வதை யாராலும் தடுக்க முடியாது. இவ்வாறு பொலிஸாருக்கு வாக்குமூலம் அளித்ததாகத் தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன். கடந்த ஆண்டு நவம்பர் 27 ஆம் திகதி மாவீரர் தினமன்று ஈகச்சுட ரேற்றியமை தொடர்பில், விசாரணைக்கு வருமாறு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினர் து.ரவிகரனுக்கு பொலிஸாரால் அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. அதற்க மைய முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்துக்கு நேற்று முன்தினம் செவ்வாய்க் கிழமை காலை 9 மணிக்கு, வாக்குமூலம் வழங்குவதற்கு மாகாணசபை உறுப்பினர் சென்றிருந்தார். சுமார் 2 மணி நேரம் விசாரணை இடம்பெற்றது. …
-
- 0 replies
- 501 views
-
-
May 7th, 2015 அன்று பிரசுரிக்கப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் திருகோணமலை மாவட்டத்தின் மொறவெவ பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பின் தங்கிய கிராமமான நொச்சிக்குளம், சாந்திபுரம், அவ்வை நகர் போன்ற பகுதிகளுக்கு சென்று மக்களுடன் கலந்துரையாடினார். அக்கலந்துரையாடலின் போது பல வருடங்களாக மீள் குடியமர்த்தப்பட்டும் இருப்பதற்கு இருப்பிடம் கூட இன்னும் வழங்கப்படவில்லை எனவும் தாம் யுத்தத்துக்கு முன்னர் விவசாயம் செய்து வந்த காணிகள் பெரும்பான்மை இனத்தவர்களால் களவாடப்பட்டுள்ளதாகவும் தமக்கு விவசாய நிலங்களை பெற்று தருமாறும் கோரிக்கை விடுத்தனர். அத்துடன் கூடிய விரைவில் அரசியல் தீர்வு கிடைக்கும் எனவும் புதிய அரசாங்கம் இப்படியான பிரச…
-
- 0 replies
- 520 views
-
-
இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட காணிகள் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியாகாமல், பொது மக்கள் குறித்த காணிக்கு உரிமையாளர்களாக மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தின் முன்னாள் காணி ஆணையாளர் கதிர்காமத்தம்பி குருநாதன் இதனைத் தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் கூறியுள்ளார். அரசாங்கம் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த 1000 ஏக்கர் காணியை விடுவித்துள்ளதாக தெரிவித்துள்ளது. ஆனால் அது குறித்த இன்னும் வர்த்தமானியில் அறிவிக்கப்படவில்லை. இது சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. வர்த்தமானி அறிவிப்பின் ஊடாக உறுதி செய்யப்பட்டால் மாத்திரமே, அதன் உரிமையாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளவர்கள் சட்டரீதியாக அத…
-
- 3 replies
- 465 views
-
-
தமிழினப் படுகொலை தொடர்பில் கனேடிய பாராளுமன்றத்தில் ஒலித்த குரல் நம்பிக்கை தருகின்றது: - அமைச்சர் நிமால் விநாயகமூர்த்தி [Thursday 2015-05-07 08:00] கனேடிய ஒன்ராறியோ மாநிலத்திற்கான கொன்சர்வேற்றிவ் கட்சியின் தலைவருக்கான கட்சித் தேர்தலில் போட்டியிடும் பற்றிக் பிரவுண் (Patrick Brown)அவர்களது தமிழினப்படுகொலை தொடர்பிலான கருத்து நம்பிக்கை தருகின்றதென நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர் நிமால் விநாயகமூர்த்தி தெரிவித்துள்ளார். இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலையே கனடியப் பாராளுமன்றத்தில் கருத்துரைத்திருந்த திரு.பற்றிக் பிரவுண் அவர்கள் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் இறுதி யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்றும்;, இலங்கைத்தீவில் சிறிலங்கா அ…
-
- 2 replies
- 497 views
-
-
போர்க்குற்றங்களுக்கு சர்வதேச விசாரணை கோரி 10 இலட்சம் கையெழுத்து திரட்டும் போராட்டம்! [Thursday 2015-05-07 08:00] போர்க்குற்றம் தொடர்பாக இலங்கை அரசு மீது சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை நடத்துவதற்கு ஐ. நா வலியுறுத்த வேண்டும் என்று நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் ருத்ரகுமாரன் வலியுறுத்தியுள்ளார். அமெரிக்காவில் இருந்து இணையதள வழி காணொளி காட்சி மூலமாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் ஐ. நா. சபைக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது என்றார். சென்னையில் நடைபெற்ற கையெழுத்து இயக்க தொடக்க விழாவில், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், தீராவிடர் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த கொளத்தூர் மணி உள்ளிட்டோர் கலந…
-
- 1 reply
- 311 views
-
-
-செல்வநாயகம் கபிலன் யாழ்ப்பாணம், வடமராட்சி மணற்காட்டுப் பகுதியில் பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய மணற்கொள்ளையர்கள் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவமொன்று இன்று வியாழக்கிழமை (07), இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் உட்பட இருவர் படுகாயமடைந்துள்ளனர். கொள்ளையர்களின் தாக்குதலில் படுகாயமடைந்த எம்.அச்சல (வயது 32) என்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும், பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த துன்னாலை, குடவத்தையைச் சேர்ந்த தயவுலிங்கம் தர்சன் (வயது 27) என்ற நபரும் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியம் பிரிவு 2க்கு பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எம்.ஜவ்பர் தெரிவித்தார். மணற்கொள்…
-
- 1 reply
- 354 views
-
-
தமிழ் பேசும் மக்களையும் ஒன்றிணைத்து பயணித்தால் மட்டுமே ஐக்கிய இலங்கையை கட்டியெழுப்ப முடியும். இனவாத அரசாங்கம் ஒருபோதும் வெற்றியளிக்காது. அதை நாம் தெளிவாக விளங்கியுள்ளோம். என அமைச்சர் லக் ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். சர்வதேசம் இன்று இலங்கையை நட்பு நாடாக கருதவும் இதுவே காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். நேற்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் அவர் தெரிவிக்கையில், இத்தனை காலமும் ஆட்சி செய்த இனவாத அரசாங்கம் மாற்றப்பட்டு இப்போது ஜனநாயக அரசாங்கம் அமையப்பெற்றுள்ளது. சிங்கள மக்களின் உரிமைகளை பாதுகாப்பதைப் போல் தமிழ்இ முஸ்லிம் மக்களின் உரிமைகளையும்…
-
- 0 replies
- 314 views
-
-
கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் இடைநிறுத்தப்பட்டது இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் தேவையற்ற இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. பீஜிங்கில் நேற்று நடந்த செய்தியாளர் மாநாட்டிலேயே, சீனாவின் இந்தக் கருத்து வெளியிடப்பட்டுள்ளது. கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் குறித்த சர்ச்சை மற்றும், சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தினால், சீன- சிறிலங்கா உறவுகளிலும், அபிவிருத்தித் திட்டங்களிலும் பாதிப்பை ஏற்படுத்துமா என்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஹுவா சுன்யிங், “சீனாவும், சிறிலங்காவும் ஒன்றை ஒன்று மதிக்கின்ற நட்பு நாடுகள். கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் உள்ளிட்ட, பெருமளவிலான உட்கட்டமைப்புத் திட்டங்கள் உள்ளூர்…
-
- 0 replies
- 373 views
-
-
வடமாகாணத்திலுள்ள சுண்டிக்குளம், மடு மற்றும் நெடுந்தீவு ஆகிய காடுகளை தேசிய சரணாலயங்களாக மாற்றுவதற்கு வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் திட்டமிட்டுள்ளது. தேசிய சரணாலயங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டத்துக்கமையவே வடக்கில் இது நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதற்குரிய சட்ட நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எச்.டி.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன், வடமாகாண காடுகளில் காணப்படுகின்ற வன விலங்குகளை பாதுகாக்கவும் புதிய சாரணாலயங்கள் உருவாக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். பருவக்காலங்களில் இந்தியாவில் இருந்து வரும் பறவைகள் வடமாகாண காடுகளில் தங்குகின்றதாகவும் அவ்வாறான இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்…
-
- 0 replies
- 323 views
-
-
பாலங்கள் மற்றும் வீதி அபிவிருத்திப் பணிகள் காரணமாக வடக்குக்கான ரயில் சேவையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாற்றமானது, எதிர்வரும் 9ஆம் திகதி சனிக்கிழமை முதல் 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை அமுலில் இருக்கும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்தது. இதற்கமைய எதிர்வரும் 9ஆம் திகதி கொழும்பு, கோட்டையிலிருந்து தலைமன்னார் மற்றும் சுன்னாகம் வரையான இரவு நேர தபால் ரயில் சேவை இரத்து செய்யப்படவுள்ளது. அத்துடன், 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, வவுனியாவிலிருந்து மாத்தறை வரை பயணிக்கும் ரஜரட்ட ரெஜிண எக்பிரஸ் ரயில் சேவை, அநுராதபுரத்திலிருந்து 30 நிமிடங்கள் தாமதமாகவே பயணிக்கும். இதேவேளை, 10 மற்றும் 11ஆம் திகதிகளில் கொழும்பிலிருந்து தலைமன்னார் மற்றும் யாழ்ப்பாணம் நோக்கிய வடக்குக்கா…
-
- 0 replies
- 374 views
-