Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நாட்டை அழிக்க முயற்சித்தால் அந்த சவாலை எதிர்நோக்கத் தயார் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றுக்கு அளித்த பிரத்தியேக செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மூன்றாவது தடவையாக மஹிந்த ராஜபக்ஸ அழிக்க முயற்சிக்கின்றார் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். முதல் தடவையாக சிறிமாவோ பண்டாரநாயக்கவின் பிரஜாவுரிமை பறிக்பக்கப்பட்ட போது, பிரஜா உரிமை பறிக்கப்பட்ட பெண் ஒருவரை கட்சியின் தலைவியாக ஏற்றுக்கொள்ள முடியாது என நாடு முழுவதிலும் மஹிந்த கூட்டங்களை நடத்தினார் என அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது எவ்வாறு கூட்டங்களை நடத்துகின்றாரோ அதே போன்று கட்சி…

    • 0 replies
    • 529 views
  2. சிறிலங்கா குறித்து இந்திய பிரதமர் நரேந்திரமோடி கொண்டுள்ள கொள்கையை வரவேற்று பாரதிய ஜனதா கட்சி தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளர். பெங்களுரில் நடைபெற்ற அந்த கட்சியின் தேசிய மாநாட்டில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் இந்திய அரசாங்கத்தினால் சிறிலங்கா தொடர்பாக பேணப்பட்ட வெளிநாடடுக் கொள்கைகளில் பல குறைபாடுகள் காணப்பட்டன. இதனை திருத்துவதற்கு நரேந்திரமோடி மேற்கொண்ட முயற்சிகள் வரவேற்கத்தக்கன. அத்துடன், சிறிலங்காவுக்கு விஜயம் செய்து, அங்கு கூட்டு சமஸ்ட்டி முறையில் அரசியல் தீர்வு காண மோடி பரிந்துரைத்தமை, 13ம் திருத்தச் சட்டத்துக்கு அப்பால் செல்லுமாறு மோசடி வலியுறுத்தியமை உள்ளிட்ட விடயங்களும் வரவேற்கப்பட்டுள்ளன. http://www.pathivu.com/news/38960/57//d,ar…

    • 0 replies
    • 558 views
  3. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நாளை சனிக்­கி­ழமை மட்­டக்­க­ளப்பு மாவ ட்­டத்­திற்கு விஜயம் செய்­கிறார். மட்­டக்­க­ளப்பு இந்துக் கல்­லூரி மைதா­னத்தில் நடை­பெறும் பஸ்கா பண்­டி­கையில் அவர் பிர­தம அதி­தி­யாகக் கலந்து கொள்­கிறார். மட்­டக்­க­ளப்பு போதகர் ஒன்­றியம் இப்­பண்­டி­கையை ஏற்­பாடு செய்­துள்­ளது. போதகர் ஒன்­றி­யத்தின் தலைவர் குகன் இரா­ச­துரை தலை­மையில் இடம்­பெறும் இப்­பண்­டிகை விழாவில் முக்­கி­யஸ்­தர் கள் பலர் கலந்து கொள்­ள­வுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது. இன்று 3 ஆம் திகதி ஆரம்­ப­மாகும் பஸ்கா பண்­டிகை எதிர்­வரும் 5 ஆம் திக­தி­ வரை நடை­பெ­ற­வு­ள்ளது. இலங்­கையில் நடை­பெறும் 3ஆவது பஸ்கா பண்­டிகை இது­வாகும்.முன்னர் கொழும்பு, கண்டி ஆகிய மாவட்­டங்­களில் இப்­பண்­…

    • 4 replies
    • 557 views
  4. திருகோணமலை சம்பூர் பிரதேசத்துக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று வெள்ளிக்கிழமை (03) காலை விஜயம் ஒன்றை மேற்கொண்டார். இந்த விஜயத்தின் போது, அகதி முகாம்களில் வாழுகின்ற மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாகவும் கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற 235 ஏக்கர் காணியையும் உரிமையாளர்களிடம் கையளிப்பது தொடர்பாகவும் மக்களுடன் கலந்துரையாடினார். கட்டைபறிச்சான், சம்பூர், கூனித்தீவு ஆகிய பிரதேசங்களில் அமைந்துள்ள இடைத்தங்கல் முகாம்களுக்கும் பிரதமர் சென்று அவற்றைப் பார்வையிட்டார். கடந்த ஆட்சிக் காலத்தில் கூனித்தீவில் தரைமட்டமாக்கப்பட்டிருந்த பத்திரகாளி அம்மன் கோயிலுக்குச் சென்று அவ்விடத்தைப் பார்வையிட்ட பிரதமர், அந்தக் கோயிலை மீள நிர்மாணித்து தருவதாக மக்களிடம் வாக்குறுதி அளித்…

    • 1 reply
    • 439 views
  5. இலங்கை மஹாபோதி சங்கத் தலைவர் பாணகல்ல உபதிஸ்ஸ தேரரின் அழைப்பினை ஏற்றுக் கொண்ட திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய்லாமா நாட்டுக்குள் அனுமதிக்கப்படுவாரா என்பது தொடர்பில் கேள்விகள் எழுந்துள்ளன. கடந்த 1950ஆம் ஆண்டு முதல் இலங்கை செல்ல தலாய் லாமா முயற்சி அவரை ஆண்மீகத் தலைவராகப் பார்ப்பதா அல்லது அரசியல் தலைவராகப் பார்ப்பது என்பது தொடர்பிலும் மாறுபட்ட கருத்துக்கள் வந்துகொண்டிருக்கின்றன. இலங்கை ஒரு அமைதியான பௌத்த நாடு என்பதால் தலாய் லாமாவும் அங்கு வரவேண்டும் என்று தாங்கள் அழைப்பு விடுத்துள்ளதாக இலங்கை மஹாபோதி சங்கத் தலைவர் பாணகல்ல உபதிஸ்ஸ தேரர் பிபிசியிடம் தெரிவித்தார். "கண்டி, அனுராதபுரம் செல்ல விருப்பம்" ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இலங்கை வரும் போது, தலாய் லாமாவும் தமது நாட்டுக…

  6. போருக்குப் பின்னரான உண்மையான நல்லிணக்கம் ஒன்று ஏற்படுவதற்கு, யுத்தத்தின்போது இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்த பொறுப்புக்கூறல் இன்றியமையாதது என்று அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டுள்ள அமெரிக்காவின் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் திணைக்களத்தின் உதவிச் செயலர் டொம் மலினோவிஸ்கி நேற்றையதினம் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே இதனைத் தெரிவித்திருக்கிறார். “போருக்குப் பின்னரான நல்லிணக்கத்தில் பெண்களின் பங்கு” என்ற தலைப்பில் உரையாற்றிய அவர், இலங்கையில் யுத்தகளத்தில் பெற்றுள்ள வெற்றி போரை மட்டுமே முடிவுக்குக் கொண்டுவந்துள்ள போதிலும், அது இனங்களுக்கிடையேயான பிளவுகளை ஆற்றுப்படுத்தவில்லை என்று…

    • 0 replies
    • 621 views
  7. எனது மகளின் இழப்புக்கு காரணமானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும்.

  8. அநீதிகளுக்கு பரிகாரம் காணத் தயார்! - மங்கள சமரவீர [Friday 2015-04-03 09:00] இலங்கையில் ஏற்பட்ட அநீதிகளுக்கு காரணங்களை கண்டறிந்து, அதற்கு பரிகாரம் காணத் தயார் என்று ஐரோப்பிய ஒன்றியத்திடம் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர உறுதிமொழி அளித்துள்ளார். இலங்கையின் பல்கலாச்சார, பல்லின அடிப்படையில் அனைவருக்கும் நீதிகிடைக்க அரசாங்கம் தீவிரமாக செயற்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டார். இலங்கை- ஐரோப்பிய ஒன்றிய 19வது அமர்வு நேற்று வெளியுறவு அமைச்சில் இடம்பெற்றபோதே அமைச்சர் இதனை தெரிவித்தார். வடக்கு கிழக்கில் ஏற்கனவே 425 ஏக்கர் காணி சொந்தக்காரர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. தேசியகீதம் தமிழ்மொழியில் பாட சந்தர்ப்பம் அளிக்கப்பட்டுள்ளது. இதேவேளை முன்னைய அரசாங்கத்தி…

  9. உக்ரேன் பிரிவினைவாதப் போராளிகளுக்கு, ஆயுதங்களை விற்பனை செய்தார் என்ற குற்றச்சாட்டில் சிக்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் மரு மகனும், அவரது ஆட்சிக்காலம் முழுவதும், ரஷ்யாவுக்கான தூதுவராகப் பணியாற்றியவருமான உதயங்க வீரதுங்க, நைஜீரியாவில் இயங்கும் போகோ ஹராம் தீவிரவாதிகளுக்கும் ஆயுதம் விற்பனை செய்திருக்கலாம் என இலங்கை அரசு சந்தேகம் வெளியிட்டுள்ளது. இறுதிப்போரின்போது புலிகளிடம் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் இவ்வாறு நடுக்கடலில் வைத்து விற்பனை செய்யப்பட்டிருக்கலாம் எனவும், இது தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான டாக்டர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று வெள…

    • 0 replies
    • 571 views
  10. தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் தங்கள் அடையாளத்தை காப்பாற்றுவதற்காக அவ்வப்போது குரலெழுப்புவார்கள்- சந்திரிக்கா இலங்கையில் நல்லிணக்கம் ஏற்படுத்தப்படாவிட்டால் தேசிய ஐக்கியத்தை ஏற்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சிகள் தோல்வியடையும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். இந்திய ஊடகமொன்றிற்கு வழங்கியுள்ள பேட்டியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில் உருவாக்கப்பட்ட நல்லிணக்கத்திற்கான ஜனாதிபதி செயலணியை தேசிய ஐக்கியம் மற்றும் நல்லிணக்கத்திற்கான நிரந்தர அலுவலகமாக மாற்றவுள்ளோம். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மோசமான ஆட்சிக்காகவே மக்கள் அவரை தோற்கடித்தார்கள். மகிந்த ஆட்சியில், அவரது குடும்பத்தின் ஊழல்கள், மனித உரிமை மீறல், பல கொலைகள் மற்…

    • 0 replies
    • 454 views
  11. பிரதமர் ரணில் விக்ரமசிங்க அம்பாறை மாவட்ட ஐக்கியதேசிய கட்சியின் முக்கியஸ்தர்களுடனான சந்திப்பொன்றினை மேற்கொள்வதற்காக எதிர்வரும் ஞாயற்றுக்கிழமை அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் செய்யவுய்யதாக சம்மாந்துறைத் தொகுதிக்கான ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளர் எம்.ஏ. ஹசன் அலி தெரிவித்தார். இதன் போது பிரதேசங்களினதும், தொகுதிகளினதும், மாவட்ட ரீதியான ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி முக்கியஸ்தர்களுடன் பிரதமர் கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இச்சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு அம்பாறை தயாகமகே மண்டபத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://virakesari.lk/articles/2015/04/03/%E0%AE%B0%E…

    • 1 reply
    • 1.2k views
  12. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமது கட்சியை வளர்க்கவும் நிலைநாட்டவுமே இங்கு வந்தார். அதற்கும் எமக்கும் எந்த சம்பந்தமுமில்லை. இது முற்றிலும் ஓர் அரசியல் ரீதியான பயணம். எனவே நான் மக்களின் பிரதிநிதி என்ற முறையில் பிரதமரின் கூட்டங்களில் கலந்துகொள்ளவில்லையே என்ற குற்றச்சாட்டு அர்த்தமற்றது. அவர் ராணுவத்தினரை படிப்படியாக வெளியேற்றுவேன் என உத்தரவாதம் தந்தால் நான் அவருடன் கைகுலுக்குவேன். - இவ்வாறு தெரிவித்தார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். இன்று வியாழக்கிழமை முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை விடுதித் தொகுதி மற்றும் இரத்த வங்கி திறப்பு விழாவில் இணை பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும…

    • 10 replies
    • 885 views
  13. “ஒரு சில கேந்திர ஸ்தானங்கள் தவிர மற்றைய இடங்களில் இருக்கும் இராணுவத்தினரைப் படிப்படியாக ஒரு குறிப்பிட்டகால எல்லைக்குள் வெளியே அனுப்புவேன் என்று பிரதம மந்திரி தரமான ஒரு உத்தரவாதத்தைத் தரட்டும். உடனே அவருடன் கைகுலுக்குவேன்” என வடமாகாண முதலமைசசர் சி.வி.விக்னேஸ்வரன் இன்று ◌பகிரங்கமாக அறிவித்திருக்கின்றார். “இராணுவ முகாம் ஒன்றைத்தானும் வெளியேற்றாமல், வலி வடக்கில் உறுதியளித்த ஆயிரம் ஏக்கர்களில் 400 ஏக்கரை மட்டும் விடுவித்து விட்டு அரசியல் ரீதியாகத் தமக்கு இலாபம் தேடும் பிரதமருடன் நான் எவ்வாறு கைகுலுக்கி மகிழ்ச்சியைத் தெரிவிப்பது?” எனவும் அவர் கேள்வி எழுப்பியிருக்கின்றார். முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை விடுதித் தொகுதி மற்றும் இரத்த வங்கி திறப்பு விழ…

  14. ஈழத்தமிழ் மக்களுக்காகவும் அவர்களுக்கு இழைக்கப்பட்ட படுகொலைக் கெதிராகவும் தனது தள்ளாத வயதிலும் குரல் கொடுத்த பிரான்சு ஈழத்தமிழ் மக்களால் வெள்ளை தமிழிச்சி என்று அழைக்கப்பட்ட மடம் பவுல் சாவடைந்துள்ளார். நீண்ட காலமாய் தமிழர்களின் உரிமைப்போராட்டங்களுக்கு கால நேரம் பார்க்காமல் முதல் ஆளாய் நிற்பவர். பிரான்ஸ் தொட்டு ஜெனீவா முன்றல் வரை கால் பதியாத இடமே இல்லை. அத்தனை எம் போராட்டங்களிலும் கலந்து கொண்டு எமது விடுதலை பயணத்தில் தன்னை இணைத்துகொண்டவர் மடம் பவுல் லுயிய் வியோலெத் .இவரது நல்லடக்கம் தொடர்பான தகவல் பின்னர் அறியத்தரப்படும். மேலதிக தொடர்புகளுக்கு : தமிழர் ஒருங்கிணைப்புக்குழு- பிரான்சு 01 43150421 குறிப்பு - அவரின் இறுதி நிகழ்வில் பிரான்சு வாழ் தமிழீழ மக்களை கலந்துகொள்ளு…

  15. வெள்ளவத்தை ஹோட்டலில் இந்தியத் தம்பதியின் சடலங்கள் மீட்பு! [Friday 2015-04-03 09:00] கொழும்பு, வெள்ளவத்தை ஹோட்டல் அறை ஒன்றில் இருந்து இந்தியர்களான இளம் ஆணினதும் பெண்ணினதும் சடலங்கள் நேற்று இரவு மீட்கப்பட்டுள்ளன. 28வயதான யுவதியும், 30 வயதான ஆணும் கடந்த 27ம் திகதியன்று இலங்கை வந்து குறித்த ஹோட்டலில் தங்கியிருந்தனர். நேற்று முன் தினம் இரவு வேளையில் வெளியே சென்­ற இந்த தம்­ப­தி­யினர் மீண்டும் பின்­னிரவில் ஹோட்­ட­லுக்கு திரும்­பி­னர். இத­னை­ய­டுத்து தமது அறைக்கு சென்­றுள்ள அந்த தம்­ப­தி­யினர் நேற்று மாலை வரை அந்த அறையில் இருந்து வெளி­யே­றா­ததை அடுத்து சந்­தேகமடைந்த நிலை­யி­லேயே பொலி­ஸா­ருக்கு தகவல் வழங்­கப்­பட்டது. இதனையடுத்து அறையை உடைத்துப் பார்த்…

  16. வடக்கு மாகாணசபையின் வெற்றிடத்துக்கு புதிய உறுப்பினரை நியமிப்பதில் இழுபறி! [Friday 2015-04-03 09:00] வடக்கு மாகாணசபை ஆளுங்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முல்லைத்தீவு மாவட்டத்துக்கான உறுப்பினர் பதவி வெற்றிடமாகி ஒரு மாதம் கடந்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முல்லைத்தீவு மாவட்ட மாகாணசபை உறுப்பினர் வீ.கனகசுந்தரசுவாமி கடந்த பெப்ரவரி மாதம் சுகவீனம் காரணமாக இறந்தார். அவரது மாகாண சபை உறுப்பினர் பதவி வெற்றிடமாகியுள்ளது. இந்த வெற்றிடத்துக்கு புதிய உறுப்பினர் ஒருவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் நியமிக்கவில்லை. அந்த வெற்றிடத்துக்கு புதிய ஒருவரை நியமிப்பதில் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளிடையே இழுபறி நிலை காணப்படுகிறது. htt…

  17. இனவாதப் பேய்கள் நாட்டை ஆக்கிரமிக்க முயற்சிக்கின்றன! - சட்டத்தரணி ஜயம்பதி விக்ரமரட்ன எச்சரிக்கை. [Friday 2015-04-03 09:00] இனவாதப் பேய்கள் நாட்டை ஆக்கிரமிக்க முயற்சித்து வருவதாக ஜனாதிபதி சட்டத்தரணி ஜயம்பதி விக்ரமரட்ன தெரிவித்துள்ளார். அண்மையில் நுகேகொட, கண்டி மற்றும் இரத்தினபுரி போன்ற இடங்களில் கூடிக்குழுமிய இனவாதப் பேய்கள் நாட்டை மீளவும் பின்தங்கிய நிலைக்குத் தள்ள முயற்சிக்கின்றன. நாடு விழுந்திருந்த அதள பாதாள நிலைமை குறித்து இனவாதப் பேய்கள் இன்று மறந்து விட்டன. நாம் அனைவரும் அச்சத்துடனும், சந்தேகத்துடனும் வாழ்ந்த காலமொன்று இருந்தது. நாம் எமது சொந்த செல்லிடப் பேசியில் அழைப்புக்களை ஏற்படுத்துவதில்லை, அவ்வாறான ஒர் நிலைமை காணப்பட்டது. நிறைவேற்று …

  18. முப்பதாண்டுகாலப் போருக்குப் பின்னர், 2009ம் ஆண்டு நாட்டை ஒன்றுபடுத்தக் கிடைத்த வாய்ப்புகளை சிறிலங்கா பயன்படுத்திக் கொள்ளத் தவறியுள்ளதாகவும், இதனால், நல்லிணக்கத்தை அடைவதற்கு மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக போராடும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. சிறிலங்காவுக்கு தற்போது, நல்லிணக்கம், நீதி, உண்மையான அமைதியை அடையும் வாய்ப்புக் கிடைத்துள்ளதாகவும், ஜனநாயகம், மனித உரிமைகள், தொழிலாளர் விவகாரங்களுக்கான, அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் ரொம் மாலினோவ்ஸ்கி தெரிவித்துள்ளார். சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அவர், நேற்று கொழும்பில், போருக்குப் பிந்திய நல்லிணக்கத்தில் பெண்களின் பங்கு என்ற தலைப்பில் உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “ஒருதரப…

    • 1 reply
    • 450 views
  19. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விலை கொடுத்து வாங்க முடியாது தன்னையோ அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள எந்த உறுப்பினரையோ எவரும் விலைக்கு வாங்க முடியாது என்று கிழக்கு மாகாணசபையின் புதிய பிரதி தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா நேற்று தெரிவித்துள்ளார். தனது பதவி பணம் கொடுத்து பறிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் பிரதி தவிசாளர் எம்.எஸ்.சுபைர் ஊடகங்களில் வெளியிட்ட கருத்துக்கு பதிலளித்தபோதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில், 'கிழக்கில் மலர்ந்துள்ள தமிழ், முஸ்லிம், சிங்கள சமூகங்களின் இன ஐக்கியத்தை கொச்சைப்படுத்தவும் சீர்குலைக்கவும் நினைக்கின்ற சுயநல வங்குரோத்து அரசியல்வாதிகளின் கொக்கரிப்புக்களை மக்கள் பெரி…

    • 4 replies
    • 415 views
  20. முல்லைத்தீவு, மாந்தை கிழக்கு, விநாயகர்புரம் கிராமத்துக்கான ஏற்றுநீர்ப்பாசனத் திட்ட புனரமைப்புப் பணிகள் முடிவடைந்துள்ளதாக விநாயகபுரம் கமக்கார அமைப்பு புதன்கிழமை (01) தெரிவித்தது. முல்லைத்தீவு மாவட்டத்தின் வவுனிக்குளத்தின் கீழ் சுமார் 6,000 ஏக்கர் நெற்செய்கை மேற்கொள்ளக்;கூடியதாகவும் 10க்கும் மேற்பட்ட ஏற்று நீர்ப்பாசனத் திட்டங்களையும் கொண்ட ஓர் பாரிய குளமாக காணப்படுகின்றது. 1980ஆம் ஆண்டுக்கு பின்னர் யுத்தம் காரணமாக குளத்தின் ஏற்று நீர்ப்பாசனத்திட்டங்கள் செயலிழந்;த நிலையில் காணப்பட்டன. முரண்பாடுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் 600 மில்லியன் ரூபாய் நிதியில் வவுனிக்குளம் புனரமைக்கப்பட்டதுடன், அதன் கீழான ஏற்று நீர்ப்பாசனத்திட்டங்களும் அபிவிரு…

  21. வடக்கு கடற்பரப்பில், மீன்பிடிக்கும் விவகாரம் தொடர்பாக, தமிழ்நாடு மற்றும் இலங்கை மீனவர்களுக்கு இடையில் நிலவும் பிரச்சினைகள் குறித்து, நேற்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் முக்கிய கூட்டம் ஒன்று இடம்பெற்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையிலேயே இந்தக் கூட்டம், இடம்பெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இரா.சம்பந்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், மற்றும் வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர் டெனீஸ்வரன் மற்றும் கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்தச் சந்திப்பில், இலங்கை மீனவர்களின் நலன்கள் குறித்து விவாதிக்கப்பட…

    • 0 replies
    • 341 views
  22. தெற்கு அதிவேக வீதியை ஹம்பாந்தோட்டையில் இருந்து மாத்தறை வரை நீடிப்பதற்கென கலந்தாய்வு செயற்பாடுகளில் ஒரு கிலோ மீற்றருக்கு மாத்திரம் 124 மில்லியன் ரூபா கடந்த மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ளதாக பெருந்தெருக்கள் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் கபீர் ஹசிம் தெரிவித்துள்ளார். மேலும் லுனுகம்வெஹர - கதிர்காமம் வீதியில் ஒரு கிலோ மீற்றருக்கு 255 மில்லியன் ரூபாவும் போக்குவரத்து நெரிசலை குறைக்க கேகாலையில் அமைக்கப்பட்ட மாற்று வீதியின் கிலோ மீற்றர் ஒன்றிற்கு 722 மில்லியன் ரூபாவும் செலவிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் அதிக செலவில் நிர்மாணிக்கப்பட்ட மாற்று வீதியில் இன்னும் மண்சரிவு ஏற்படுவதாக அவர் கூறினார். இந்த நிதி மோசடியை மூடி மறைக்க பலரு…

    • 1 reply
    • 861 views
  23. சிறுமி துஸ்பிரயோகம் : பாதிரியாருக்கு விளக்கமறியல் வவுனியாவில் தாய், தந்தையை இழந்த சிறுமி ஒருவரை கடந்த 5 வருடங்களாக துஷ்பிரயோகம் செய்தார் எனக் குற்றஞ்சாட்டப்பட்ட கிறிஸ்தவ பாதிரியார் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 9ஆம் திகதி வரை நீதிமன்ற உத்தரவுக்கமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:- வவுனியாஇ வெளிக்குளம் பகுதியில் உள்ள சிறுவர் இல்லம் ஒன்றில் சேர்க்கப்பட்ட சிறுமி ஒருவரை அந்தச் சிறுவர் இல்ல பாதிரியார் தனது செட்டிகுளம், துடரிகுளம் பகுதியில் உள்ள வீட்டில் வைத்து கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் 5 வருடங்களாக துஷ்பிரயோகம் செய்து வந்தார் என கடந்த ஞாயிற்றுக்கிழமை பாதிக்கப்பட்ட யுவதியால் (தற்போது வயது 20) முறைப்பாடு செய்யப…

  24. சகோதரியுடன் சேட்டை புரிந்த இராணுவத்தினருடன் முரண்பட்ட சகோதரன் மீது இராணுவத்தினர் தாக்குதல் நடத்தி உள்ளனர். அச்சுவேலி பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, அச்சுவேலி பகுதியில் வசிக்கும் பாடசாலை மாணவி ஒருவரை புதிதாக இராணுவத்தில் இணைந்த தமிழ் இளைஞர் ஒருவர் அண்மைக்காலமாக தன்னை காதலிக்குமாறு தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். அவரது காதலை பாடசாலை மாணவி ஏற்க மறுத்து வந்ததால் கடந்த செவ்வாய் கிழமை மாலை நேரம் மாணவியின் வீட்டுக்கு இரண்டு இராணுவத்தினருடன் குறித்த இளைஞரும் சிவில் உடையில் சென்று மாணவியின் தகப்பனாருடன் முரண்பட்டுள்ளார்கள். அவ்வேளை வீட்டுக்கு வந்த மாணவியின் மூத்த சகோதரன் தகப்பனாருடன் முரண்பட்டுக் கொண்டு இருந்தவர்கள் மீது தாக்குதல் மேற்கொள…

    • 0 replies
    • 649 views
  25. எதிர்க்கட்சி தலைவராவதற்கு சம்பந்தனுக்கு அனைத்து தகுதியும் உண்டு ஒரு சமூகத்தின் குரலாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் திகழ்கின்றார். இந்த நாட்டின் எதிர்க்கட்சி தலைவராக வருவதற்கு கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எல்லா தகுதிகளும் உண்டு என்பதை பெருமையுடன் நான் கூறிக்கொள்கின்றேன்' என சமுர்த்தி வீடமைப்பு பிரதியமைச்சர் எம்.எஸ்.அமீர் அலி தெரிவித்துள்ளார். பட்டிப்பளை பிரதேசத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள யுவதிகளுக்காக நடத்தப்பட்ட கைப்பணி மற்றும் அழக்குக்கலை பயிற்சியை பூர்த்திசெய்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு, மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.