ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143540 topics in this forum
-
சிறிலங்காவின் பொருளாதாரத்தை முன்னேற்ற அனைத்துலக நிதி நிறுவனங்கள், அமெரிக்காவுடன் பேச்சு FEB 20, 2015 | 9:20by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்காவின் பொருளாதார நிலையை முன்னேற்றுவதற்கு, உலக வங்கி, அனைத்துலக நாணய நிதியம் மற்றும் அமெரிக்காவின் திறைசேரித் திணைக்களம் ஆகியவற்றின் உதவியை புதிய அரசாங்கம் நாடியுள்ளது. அமெரிக்கா சென்றுள்ள சிறிலங்காவின் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, உலக வங்கி, அனைத்துலக நாணய நிதியம் ஆகியவற்றின் உயர் அதிகாரிகளைச் சந்தித்து, நாட்டின் அபிவிருத்தி தேவைகள் குறித்து கலந்துரையாடியுள்ளார். கடந்த 17, 18ம் நாள்களில் வோசிங்டனில் பெயணம் மேற்கொண்ட அவர், உலக வங்கியின் முகாமைத்துவ பணிப்பாளர் முல்யானி இன்ராவதியைச் சந்தித்து, பேசினார். இதன்போது, இந்த சிக்கலான …
-
- 0 replies
- 271 views
-
-
மோடியின் திட்டத்தை நிராகரித்தார் மைத்திரி FEB 20, 2015 | 0:59by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் மீனவர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி முன் வைத்த திட்டத்தை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நிராகரித்து விட்டதாக, சிறிலங்காவின் அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். “இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன சந்தித்த போது, இருநாட்டு மீனவர்களின் பிரச்சினையைத் தீர்க்க, இந்தியப் பிரதமரால் ஒரு யோசனை முன்வைக்கப்பட்டது. சிறிலங்கா மீனவர்கள் எந்தக் கட்டுப்பாடும் இன்றி, இந்திய எல்லைக்குள் ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபடலாம் என்றும், இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடிக்க அனுமதிக்குமாறும்…
-
- 4 replies
- 825 views
-
-
13 பிளஸ் அழுத்தங்களைக் கைவிட்டது இந்தியா FEB 20, 2015 | 0:47by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் இந்தியா 13வது திருத்தச்சட்டத்துக்கு அப்பால் சென்று அரசியல் தீர்வு காணும்படி வலியுறுத்தவில்லை என்று, சிறிலங்காவின் அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். நேற்று கொழும்பில் நடந்த அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் செய்தியாளர் சந்திப்பில், அண்மையில் புதுடெல்லி சென்றிருந்த சிறிலங்கா அதிபர் தலைமையிலான குழுவிடம், 13வது திருத்தச்சட்டத்துக்கு அப்பால் சென்று தீர்வு காண்பதாக முன்னைய ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுமாறு இந்தியப் பிரதமர் வலியுறுத்தினாரா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்ச…
-
- 2 replies
- 517 views
-
-
இலங்கையில் உள்நாட்டு போர் நிறைவடைந்து ஆறு வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் இதுவரையில் பயங்கரவாத தடை சட்டம் நீக்கப்படவில்லையென நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். குற்றச்செயல்களால் பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சிகளுக்குமான உதவி மற்றும் பாதுகாப்பு சம்பந்தமான சட்டமூலம் நேற்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. இதன் போது உரையாற்றிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன், போர் நிறைவடைந்து ஆறு வருடங்கள் ஆகின்ற போதும், பயங்கரவாத தடை சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருக்கின்றமை குறித்து தனது அதிருப்தி வெளியிட்டார். அத்துடன், பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் அவர் வலியுறுத்தினார். இதன் போது ஐக்கிய…
-
- 0 replies
- 435 views
-
-
இறுதிக்கட்டப் போரின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்களுக்கு சர்வதேச விசாரணை தேவையில்லை .உள்ளக விசாரணையே நடத்தப்படும் என்ற நிலைப்பாட்டில் இலங்கை அரசு உறுதியாகவுள்ளது என அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார். கொழும்பிலுள்ள தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் ஊடகவியலாளர் மாநாடு நேற்று இடம்பெற்றது. அதில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சர்வதேச விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படுவது ஆறு மாதகாலத்திற்குப் பிற்போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஐ.நா. விசாரணைக்குழு இலங்கைக்கு வர அரசு உடன்பட்டுள்ளதா என அமைச்சரவைப் பேச்சாளரிடம் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்குப்பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்…
-
- 0 replies
- 331 views
-
-
இந்த நாட்டில் புலி இருப்பதாக யாராவது கூறுவதாயின், அது தெஹிவள விலங்குகள் சரணாலயத்தில் மட்டுமே. பொய் சொல்லி மக்களை ஏற்மாற்றிய யுகம் முடிவடைந்துள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிரிசேனவுக்கு வாக்களித்தால், அதனால் உயிர் பெறுவது இந்நாட்டிலுள்ள வேறு யாருமல்ல, புலிப் பயங்கரவாதிகளே என நாம் தெரிவித்தோம் என நேற்று நுகேகொடயில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு தூய ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மம்பில தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இதனைக் கூறியுள்ளார். http://seithy.com/breifNews.php?newsID=126908&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 321 views
-
-
யாழ்ப்பாணம் -நீராவியடி பகுதியில் புகையிரதம் மோதியதில் பாடசாலை மாணவன் ஒருவன் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கோப்பாய் பகுதியைச் சேர்ந்த வ.குகப்பிரியன் (வயது18) என்ற மாணவன் யாழ். இந்துக்கல்லூரியில் கல்வி கற்றுவரும் நிலையில், பாடசாலையின் இல்ல மெய்வல்லுனர் போட்டிக்காக தனது இல்லத்தின் சோடனைகளை முடித்துக் கொண்டு, தனது வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த சமயமே இவ்விபத்து இடம்பெற்றிருக்கின்றது. குறித்த பகுதியில் உள்ள புகையிரத பாதைக்கு பாதுகாப்புக் கடவை அமைக்கப்படாத நிலையில் புகையிரதம் வருவதை அவதானிக்காத மாணவன், பாதையை கடக்க முயன்றுள்ளார். இதன்போது குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்ற…
-
- 2 replies
- 426 views
-
-
சர்வதேச நாணய நிதியத்தித்திடமிருந்து இலங்கை அரசாங்கம் கடன் பெற்றுக் கொள்ளவுள்ளது. சுமார் 400 கோடி அமெரிக்க டொலர்கள் இவ்வாறு கடனாக பெற்றுக் கொள்ளப்படவுள்ளது. கடன் பெற்றுக் கொள்வது தொடர்பில் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கும், சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டினா லாகார்ட்டிற்கும் இடையில் வாசிங்டனில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே பெற்றுக் கொள்ளப்பட்ட கடன்களுக்கான தவணைப்பணம் மற்றும் வட்டி ஆகியனவற்றை செலுத்துவதனால் அந்நிய செலாவணி ஒதுக்கம் வீழ்ச்சியடைவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அந்நிய செலாவணி ஒதுக்கத்தை ஸ்திரத்தப்படுத்திக் கொள்ள இந்தக் கடன் பெற்றுக் கொள்ளப்படவுள்ளது. இதேவேளை இலங்கையின் பொருளாதார அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் கண்காணி…
-
- 2 replies
- 389 views
-
-
கருணாவின் வலது கரங்களில் ஒன்றாக இருந்து பல கொலைகளை அரங்கேற்றிய இனியபாரதிக்கெதிராக மக்கள் போராட்டங்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. அவ்வகையில் கடந்த மஹிந்த ஆட்சிக்காலங்களில் அம்பாறை மாவட்டங்களில் கடத்தப்பட்டு காணாமல் போனவர்களின் உறவினர்கள் இன்று போராட்டமொன்றை நடத்தியுள்ளனர். அரசுகளுடன் ஒத்துழைத்து செயற்பட்ட கருணா மற்றும் பிள்ளையான் போன்ற ஒட்டுக்குழுக்களினாலேயே கடத்தல்களும், காணாமல் போதல்களும் நடந்ததாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். திருக்கோவில் மத்திய சந்தைக்கு அண்மையில் இந்த போராட்டம் நடந்தது. போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அம்பாறை இணைப்பாளர் இனியபாரதிக்கு எதிராக சுலோக அட்டைகளை தாங்கியிருந்ததுடன், அவரிற்கு எதிர…
-
- 8 replies
- 912 views
-
-
இறுதிப்போரின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் குறித்த விடயத்தில் உள்ளக விசாரணையே நடத்தப்படும் என்ற நிலைப்பாட்டில் இலங்கை அரசு உறுதியாகவுள்ளதுடன் இதற்கு அமெரிக்காவும் ஐ.நாவும் இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார். இலங்கை விடயத்தில் விசாரணை மேற்கொள்வதற்கு வெளிநாட்டவர்கள் அவசியமல்ல எனக் குறிப்பிட்ட அவர், சர்வதேசத் தராதரத்திற்கு அமைவாக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டியது அரசின் முன்பாகவுள்ள கடப்பாடெனக் குறிப்பிட்டார். கொழும்பிலுள்ள தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்ஸிலின் சர்வதேச விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப…
-
- 1 reply
- 427 views
-
-
யாழ்ப்பாணம் இந்து கல்லூரியின் முச்சக்கரவண்டி, பஸ் வண்டி ஆகியவற்றின் கண்ணாடிகளை உயர்தர மாணவர்கள் அடித்து நொருக்கியுள்ளதாக அதிபர் ஐயம்பிள்ளை தயானந்தராசா, செவ்வாய்க்கிழமை (10) முறைப்பாடு செய்துள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் கூறினர். ஆசிரியர் ஒருவருடன் முரண்பட்டுக்கொண்ட மாணவர்கள், இவ்வாறு கண்ணாடிகளை அடித்து நொருக்கியுள்ளனர். உடைந்த கண்ணாடிகள் 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியுடையவை என அதிபர் முறைப்பாட்டில் கூறியுள்ளதாகவும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் நுழைவாயிலுக்கு பெயின் ஊற்றிய சம்பவம் அண்மையில் இடம்பெற்றிருந்த நிலையில் செவ்வாய்க்கிழமை (10) கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன. http://www.tamilmirror.lk/139510#s…
-
- 36 replies
- 3k views
-
-
இலங்கையின் புதிய அரசாங்கம், பொறுப்புக்கூறல் பொறிமுறை தொடர்பில் ஆரம்ப முன்னேற்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளமையை அமெரிக்கா வரவேற்றுள்ளது. 30 வருடங்களுக்கு பின்னர் மனித உரிமைகள் காப்பு மற்றும் நல்லிணக்கத்துக்காக இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மகிழ்ச்சியளிப்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பிரதிநிதி கெய்த் ஹாப்பர் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை இலங்கை தொடர்பான விசாரணை அறிக்கை தாமதிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் ஸ்ரீலங்கா அரசாங்கம் ஒத்துழைத்து செயற்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதன்காரணமாகவே பேரவையில் மார்ச் மாதத்தில் சமர்ப்பிக்கப்படவிருந்த இலங்கை தொடர்பான அறிக்கையை காலம் தாமதிக்க அமெரிக்கா இணங்கியதாக அவர் …
-
- 0 replies
- 277 views
-
-
அடுத்தமாதம் 13ம் நாள் சிறிலங்கா வருகிறார் மோடி – அதிகாரபூர்வமாக அறிவிப்பு FEB 19, 2015 | 11:56 by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அடுத்தமாதம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்வார் என்பதை சிறிலங்கா அரசாங்கம் அதிகாரபூர்வமாக இன்று அறிவித்துள்ளது. கொழும்பில் இன்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில், அமைச்சர் ராஜித சேனாரத்ன இதனை அறிவித்தார். ”அடுத்தமாதம், 13ம் நாள் கொழும்பு வரும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, 15ம் நாள் வரை சிறிலங்காவில் தங்கியிருப்பார். இந்தியப் பிரதமர் ஒருவர் கடந்த 25 ஆண்டுகளில், சிறிலங்காவுக்கு மேற்கொள்ளும் முதல் அதிகாரபூர்வ பயணம் இதுவாகும்.” என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். …
-
- 0 replies
- 277 views
-
-
மகிந்தவின் காதுகளைத் திருகிய மோடி – உபுல் ஜோசப் பெர்னான்டோ FEB 19, 2015 | 11:36by நித்தியபாரதிin கட்டுரைகள் இக்கோரிக்கையை சிறிசேன அரசாங்கத்தின் ஊடாக இந்தியா நிறைவேற்றியதன் மூலம், இந்தியாவுக்குப் பாடம் கற்பிக்கலாம் எனக் கருதும் தென்னாசியத் தலைவர்களுக்கு இந்தியா நல்லதொரு பாடத்தைக் கற்பித்துள்ளது. இவ்வாறு ‘சிலான் ருடே’ ஆங்கில நாளிதழில், எழுதியுள்ள செய்தி ஆய்வில் ‘உபுல் ஜோசப் பெர்னான்டோ’ குறிப்பிட்டுள்ளார். இதனை ‘புதினப்பலகை’க்காக மொழியாக்கம் செய்தவர் ‘நித்தியபாரதி’. வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்த போது வடக்கு மாகாணத்திற்கு சிவில் ஆளுநர் ஒருவரை நியமிக்குமாறு சிறிலங்கா அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்குமாறு கோரியி…
-
- 0 replies
- 405 views
-
-
எனது கணவர் அன்ரன் பாலசிங்கம் அவர்களால் எழுதப்பட்டடு அவர் உயிருடன் இருந்த பொழுது 2005ம் ஆண்டு பிரித்தானியாவில் பெயர்மக்ஸ் பதிப்பகத்தின் வெளியீடாகப் பிரசுரிக்கப்பட்ட ''போரும் சமாதானமும்'' என்ற தமிழ் நூல் தற்போது இந்தியாவில் ''தமிழர் தாயகம் வெளியீடு'' என்றழைக்கப்படும் நிறுவனத்தினால் மீள்பிரசுரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. ''தமிழர் தாயக வெளியீடு'' என்ற குறிப்பிட்ட நிறுவனத்திற்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதோடு, எனது கணவரின் எழுத்தாக்கங்கள் அனைத்துக்மான காப்புரிமையைக் கொண்டவராக எனது அனுமதியின்றியே இந்நூலை சம்மந்தப்பட்ட நிறுவனம் மீள்பிரசுரம் செய்துள்ளது என்பதை அனைவரின் கனத்திற்கும் கொண்டுவர விரும்புகிறேன் என திருமதி. அடேல் …
-
- 4 replies
- 2.4k views
-
-
இலங்கையில் இடம்பெற்ற இன அழிப்புத் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்ற விசாரணை அறிக்கை மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐ.நா. மனித உரிமை அமர்வில் கண்டிப்பாக சமர்ப்பிக்கப்படுமென எதிர்பார்ப்பு தமிழ் மக்கள் மத்தியில் நிலவியிருந்தது . இருப்பினும் இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம் உள்ளிட்ட சில விடயங்களை அடிப்படையாகக் கொண்டு இலங்கை தொடர்பான அறிக்கையை வெளியிடுவதை மேலும் ஆறு மாதம் ஒத்திவைக்க ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகின்றது. அந்தவகையில் ஐ.நா.வின் விசாரணை அறிக்கையை கண்டிப்பாக மார்ச் இல் நடைபெற இருக்கும் ஐ.நா. மனித உரிமை அமர்வில் சமர்ப்பிக்கப்படவேண்டுமென எதிர்வரும் 24.02.2015 தாயகத்தி…
-
- 0 replies
- 372 views
-
-
ஈழத்து தமிழினத்தின் மீது இலங்கை அரசு கட்டவிழ்த்த இந்த நூற்றாண்டின் மிகக் கொடிய இனப்படுகொலை பற்றி உலகமே அறிந்திருந்தும் ஐ. நா. வினால் மார்ச் மாதம் நடைபெற இருந்த அனைத்துலக விசாரணையை இலங்கை அரசின் வேண்டுதலுக்கு ஏற்ப ஐ.நா. பிற்போட்டு இருப்பது உலகத் தமிழ் மக்களை வேதனையும் ஏமாற்றமும் அதிருப்தியும் கொள்ள வைத்திருக்கின்றது. தமிழின அழிப்புகள், போர்க்குற்றங்கள், மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் போன்ற அனைத்து அநீதிகளுக்கும் அனைத்துலக சுயாதீன விசாரணையை நடத்த வலியுறுத்தியும் தாயகம், தேசியம்இ தன்னாட்சி உரிமை ஆகியவற்றை வலியுறுத்தியும் தமிழீழ தாயகத்திலும் உலகெங்கும் தமிழர் வாழும் தேசங்கள் எங்கும் நீதி வேண்டி எழுகை கொண்ட கவனஈர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. பெப்…
-
- 0 replies
- 292 views
-
-
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வருடத்துக்குள் அமெரிக்காவுக்கும் விஜயம் செய்வார் என்று அரசாங்க பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். விரைவில் சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விஜயம் செய்யவுள்ளதாக கூறப்படும் அதேவேளை, இவ்வருடம் அமெரிக்காவுக்கும் விஜயம் செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதியாக பொறுப்பேற்ற மைத்திரிபால சிறிசேன கடந்த திங்கட்கிழமை இந்தியா சென்று நேற்று புதன்கிழமை நாடு திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://seithy.com/breifNews.php?newsID=126865&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 282 views
-
-
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை மார்ச் 31ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் தலைமையிலான மூன்று நீதியரசர்களை கொண்ட குழு இந்த உத்தரவை பிறப்பித்தது. முன்னிலை சோசலிஸக் கட்சியின் தலைவர் துமிந்த நாகமுவ தாக்கல் செய்த மனுவின் அடிப்படையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு அடுத்த நாள் ஜனவரி 9ஆம் திகதியன்று கொழும்பில் முப்படைகளையும் தயார்படுத்தி நாட்டில் குழப்ப சூழ்நிலையை ஏற்படுத்த முனைந்தார் என்ற குற்றச்சாட்டே மஹிந்த ராஜபக்ச மீது சுமத்தப்பட்டுள்ளது. இது அரசியல் அமைப்பின்படி அடிப்படை உரிமை மீறல் செயலாகும் என்று மனுதாரர் தமது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார். …
-
- 0 replies
- 314 views
-
-
தமிழக மீனவர்களை கடற்படையுடன் சேர்ந்து தாக்கிய இலங்கை மீனவர்கள் கச்சதீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த இராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்திவிட்டு வலைகளை வெட்டி மீன்களை அபகரித்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இராமேஸ்வரத்தில் இருந்து நேற்று 600க்கும் மேற்பட்ட விசைப்படகில் 2500க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். நேற்று இரவும் இன்று அதிகாலையும் கச்சத்தீவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு 5 ரோந்து கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர் மீன்பிடிக்கவிடாமல் விரட்டியடித்ததோடு 10க்கும் மேற்பட்ட வலைகளை கடலில் வெட்டிவிட்டு 30க்கும் மேற்பட்ட படகுகளில் இருந்த மீன்களை அள்ளிச் சென்றுள்ளனர், இதனையடுத்து தாங்கள் மீன்பிடிக்க முடியாமல் பாதியி…
-
- 1 reply
- 258 views
-
-
"ஐ.நா அறிக்கை திட்டமிட்டபடி வௌியிடப்பட வேண்டும்" வலியுறுத்தி மாபெரும் அமைதிப்பேரணி - யாழ். பல்கலைக்கழக சமூகம் இலங்கையில் இறுதிக்கட்ட போரில் இடம்பெற்ற போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பான ஐ. நா மனித உரிமைகள் சபையின் விசாரணை அறிக்கையை ஒத்திவைப்பதற்கு இலங்கை அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அறிகிறோம். அவ்வாறு பிற்போடப்படுவதை நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. எனவே திட்டமிட்டபடி எதிர்வரும் மார்ச் மாதம் குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி அமைதி வழியில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை எதிர்வரும் 24 ஆம் திகதி முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.பதிவு இணைய செய்தி யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், ஊழியர்…
-
- 0 replies
- 352 views
-
-
ஜ.நா விசாரணை அறிக்கையினை உடனடியாக வெளியிடக்கோரி திட்டமிட்டபடி எதிர்வரும் 24ம் திகதி தமது போராட்டம் முன்னெடுக்கப்படுமென யாழ்.பல்கலைக்கழக சமூகம் அறிவித்துள்ளது.தமது போராட்டத்திற்கு குடாநாட்டின் ஒட்டுமொத்த சமூகமும் ஆதரவளிக்க முன்வந்துள்ளதாக பல்கலைக்கழக ஆசிரிய சங்க தலைவர் பேராசிரியர்.இராசகுமாரன் தெரிவித்துள்ளார். இன்று காலை குடாநாட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் சிவில் சமூக அமைப்புக்கள் உள்ளிட்ட தரப்புக்கள் பல்கலைக்கழக நூலகத்தினில் சந்திப்பொன்றை நடத்தியிருந்தன.அவ்வேளை பல்கலைக்கழக சமூகம் முன்னெடுக்கும் போராட்டங்களிற்கான தமது முழுமையான ஆதரவை சிவில் சமூகம் உள்ளிட்ட தரப்புக்கள் தெரிவித்துள்ளன. அன்றைய தினம் காலை யாழ்.பல்கலைக்கழக முன்றலில் புறப்படும் பேரணி பலாலி வீதியினூடாக அம…
-
- 0 replies
- 441 views
-
-
மாவீரர்கள, போராளிகள், அரசியல் கைதிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கோடு தரவுகள் பெறப்படும் படிவங்களை மார்ச் 10 ஆம் திகதிக்கு முன் பூர்த்தி செய்து கையளிக்குமாறு வட மாகாண மீன்பிடி போக்குவரத்து கிராமிய அபிவிருத்தி அமைச்சர் பா. டெனிஸ்வரன் கோரியுள்ளார். வடக்கு மாகாண மீன்பிடி போக்குவரத்து கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரனால் முன்வைக்கப்பட்ட மாவீரர்களின் குடும்பங்கள், புனர்வாழ்வு பெற்ற போராளிகள், அரசியல் கைதிகளின் குடும்பங்கள் ஆகியோருக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வேலைத்திட்டமானது வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தினூடாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதன் பிரகாரம் நாளை முதல் சகல கிராம, மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களிடமும் படிவங்களை பெற்று சரியான தர…
-
- 0 replies
- 330 views
-
-
இலங்கையின் புதிய அரசாங்கம் தமக்கு வழங்கப்பட்டுள்ள கால அவகாசத்தை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்துடன் இணைந்து செயற்படுவதற்காக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பிரித்தானிய வெளியுறவு அலுவலக அமைச்சர் ஹூகோ ஸ்வைர் தெரிவித்துள்ளார். இலங்கையின் போர்க்குற்ற விசாரணை அறிக்கை எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கட்டாயமாக பகிரங்கப்படுத்தப்படல் வேண்டும் வேண்டும் அவர் கேட்டுள்ளார். இலங்கையில் நல்லிணக்கம் ஏற்பட வேண்டும் என்பதற்காகவே ஐக்கிய நாடுகளின் போர்க்குற்றச்சாட்டு விசாரணையையும் அதேபோன்று 6 மாதக்கால அறிக்கை தாமதத்தையும் பிரித்தானியா ஏற்றுக்கொண்டது என்று ஸ்வைர் குறிப்பிட்டுள்ளார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இ…
-
- 0 replies
- 257 views
-
-
இந்து ஆலயங்களில் சேர்த்துவைக்கப்படும் பணத்தின் ஒருபகுதியை அந்தந்தப் பிரதேசங்களில் வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள மாணவர்களின் கல்விக்கு பயன்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சம்பந்தப்பட்டவர்களிடம் தான் வேண்டுகோள் விடுத்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று -1 கோட்டக்கல்வி அதிகாரி எம்.பாலசுப்பிரமணியம் வியாழக்கிழமை (19) தெரிவித்தார். தமிழரசுக் கட்சியின் இந்து விவகார அலுவல்களுக்கு பொறுப்பானவரும் மட்டக்களப்பு இந்து இளைஞர் பேரவைத்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரனிடமே இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளதாகவும் அவர் கூறினார். இது பற்றி எம்.பாலசுப்பிரமணியம் மேலும் தெரிவிக்கையில், கடந்த …
-
- 5 replies
- 577 views
-