Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிப்பதாக கூட்டமைப்பினர் அறிவித்திருந்தனர். அதன் படி யாழ் மாவட்டங்களில் தற்போது மைத்திரிக்கு ஆதரவாக முதல்கட்டமாக தேர்தல் துண்டு பிரசுரங்கள் மூலம் பிரச்சாரங்களை ஆரம்பித்துள்ளனர்.மாவை சேனாதிராசா மற்றும் சுமந்திரன் ஆகிய இருவரும் இப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர். http://www.pathivu.com/news/36592/57//d,article_full.aspx

  2. இலங்கையின் மீன் ஏற்றுமதிக்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை! – 15ம் திகதி அமுலாகிறது. [sunday 2015-01-04 09:00] இலங்கை மீது எதிர்வரும் 15ம் திகதிக்குப் பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்தின் மீன் ஏற்றுமதி தடை அமுலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நிலைமையை சமாளிக்க அரசாங்கம் தயாராகவுள்ளதாக மீன்பிடித்துறை அமைச்சர் சரத்குமார குணரத்ன தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் நடவடிக்கைகள் காரணமாகவே இந்த தடை மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை மீது எதிர்வரும் 15ம் திகதிக்குப் பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்தின் மீன் ஏற்றுமதி தடை அமுலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நிலைமையை சமாளிக்க அரசாங்கம் தயாராகவுள்ளதாக மீன்பிடித்துறை அமை…

  3. வியாழன்று நாடாளுமன்றத்தைக் கலைக்க திட்டம் – தோல்வி அச்சம் மகிந்தவைத் தொற்றியது JAN 04, 2015 | 2:03by கார்வண்ணன்in செய்திகள் அதிபர் தேர்தல் முடிந்தவுடன், வரும் 8ம் நாள் நாடாளுமன்றத்தைக் கலைக்க சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றால், அவரது 100 நாள் செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாமல் தடுக்கும் நோக்கிலேயே, நாடாளுமன்றத்தைக் கலைக்க மகிந்த ராஜபக்ச திட்டமிட்டுள்ளார். இந்த தகவல் எதிரணியின் உயர்மட்டத்தினர் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. தாம் வெற்றி பெற்றால், 100 நாட்களுக்குள் சிறிலங்கா அதிபரின் அதிகாரங்களை மட்டுப்படுத்துவதாக, மைத்திரிபால சிற…

    • 1 reply
    • 477 views
  4. தோல்வியை ஏற்றுக் கொண்டுள்ள ராஜபக்சவின் அடிவருடிகள் தமது பெறுமதியான ரேஸ் பந்தய கார்களை யாருக்கும் தெரியாமல் வெளிநாட்டுக்கு அனுப்பியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தகவல் வெளியிட்டுள்ளார். கடந்த 31ம் திகதியே 4 ஆடம்பர கார்களை வெளிநாட்டுக்கு ஏற்றப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர் சம்பிக்க ரணவக்க, சமையல் எரிவாயு ஒப்பந்த பேரங்களுடன் சம்பந்தப்பட்ட இரண்டு பிரதான அதிகாரிகள் மூல கோப்புகளை எதிர்க்கட்சிக்கு கிடைக்கச் செய்து விட்டு நாட்டில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், எதிர்வரும் 9ம் 10ம் திகதிக…

  5. பிரபாகரன் மற்றும் ராஜபக்சவின் சர்வாதிகாரம் தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்க்காது!! சம்பந்தனின் கருத்துக்கு காசி ஆனந்தனின் பதில்!! தமிழர்களின் பிரச்சிரச்சினை சனாநாயக அமைப்பின் கீழ் மட்டுமே தீர்க்க முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் இந்தியன் எக்பிறஸ் நாளேட்டுக்கு வழங்கிய நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக பிரபாகரனின் சர்வாதிகாரமோ அல்லது மகிந்த ராஜபக்சவின் சர்வாதிகாரமோ தமிழர்களின் பிரச்சினையைத் தீர்க்காது என சம்பந்தன் விளக்கியுள்ளார். சம்பந்தனின் இக்கருத்துக்கு உணர்ச்சிப்பாவலர் காசி ஆனந்தன் அவர்கள் தமீழீழ மக்களுக்கு வழங்கும் விளக்கமும் சம்பந்தனிடம் கேட்கப்படும் கேள்வியும் https://soundcloud.com/pathivucom/kasi-ananthan ht…

    • 0 replies
    • 683 views
  6. தீர்வு வழங்க நான் தயார்; என்கிறார் ஜனாதிபதி news தமிழ் தேசியக் கூட்டமைப்பு பொது எதிரணிக்கு ஆதரவளித்தாலும் தமிழ் மக்கள் எதிரணியினை ஆதரிக்க மாட்டார்கள் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பை மையமாக கொண்டு இயங்கும் ஞாயிறு வார இதழுக்கு வழங்கிய செவ்வியிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிரணிப்பக்கம் சென்று விட்டதால் மக்களும் அந்தப் பக்கமே சென்றுவிடுவார்கள் என நினைத்துக் கொண்டே கருத்துக்கள் வெளியிடப்படுகின்றன. ஆனால் 'வடக்கில் எங்களுக்கும் பிரதிநிதிகள் இருக்கின்றார்கள்' கூட்டமைப்பு எதிரணிக்கு ஆதரவளித்தாலும் மக்கள் ஆதரிக்க மாட்டார்கள். இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்க…

  7. வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் பணிகளை துவக்கினர் JAN 04, 2015by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் வரும் வியாழக்கிழமை சிறிலங்காவில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலைக் கண்காணிக்க வந்துள்ள வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்கள் நேற்று தமது பணிகளை ஆரம்பித்துள்ளனர். ஆசிய மற்றும் கொமன்வெல்த் கண்காணிப்பாளர்கள் ராஜகிரியவில் உள்ள சிறிலங்கா தேர்தல் திணைக்களத்தில், தேர்தல் ஆணையாளரை இவர்கள் நேற்று சந்தித்து பேசினர் இதையடுத்து தேர்தல் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக அவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் புறப்பட்டுச் சென்றனர். வெளிநாட்டு கண்காணிப்பாளர் குழுவில் இந்தியாவின் முன்னாள் தேர்தல் ஆணையர் குரேசியும் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.puthinappalakai.n…

  8. தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பிலான குற்றச்சாட்டுக்களை மறுப்பவர்கள் இல்லை என்ற வகையிலே எழுந்தமானத்திலேயே பேசப்படுகிறது. மகிந்த ராஜபக்சவை வெற்றி பெற வைப்பதற்காக புலிகள் புலிகள் பணத்தைப் பெற்றுக்கொண்டார்கள் என்று. http://www.pathivu.com/news/36572/57//d,article_full.aspx https://soundcloud.com/pathivucom/mrksivagilingam-press-meet-03012015mp3

  9. அரலகன்விலவில் மைத்திரியை குறிவைத்து துப்பாக்கிச் சூடு JAN 03, 2015 | 18:04 by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் பொலன்னறுவ, அரலகன்விலவில் எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன பங்கேற்றிருந்த தேர்தல் பரப்புரைக் கூட்ட மேடை மீது இன்றிரவு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. மைத்திரிபால சிறிசேன உரையாற்றி விட்டு இறங்கிச் சென்ற பின்னரே மேடை மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவத்தில் மைத்திரிபால சிறிசேனவுக்கு காயங்கள் ஏதும் ஏற்படவில்லை. எனினும், இந்த சம்பவத்தில் ஐதேகவின் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஒருவர் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலுக்கு ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் றொசான் ரணசிங்கவே ப…

    • 4 replies
    • 474 views
  10. முன்னாள் பிரதமர் ரட்ணசிறி உள்ளிட்ட மகிந்தவின் அமைச்சர்கள் பலரும் எதிரணிக்கு பாய்கின்றனர் JAN 04, 2015 | 1:36by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவின் முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும், இந்தவாரம் எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவிக்கவுள்ளதாக, கூறப்படும் அமைச்சர்களில், முன்னாள் பிரதமரும் மூத்த அமைச்சருமான ரட்ணசிறி விக்கிரமநாயக்க, அமைச்சர்கள் எஸ்.பி.நாவின்ன, ஜீவன் குமாரதுங்க ஆகியோரும் அடங்கியுள்ளனர். மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவாக பரப்புரையில் ஈடுபட்டு வரும் முன்ன…

    • 0 replies
    • 433 views
  11. மக்களை நான் பிழையான வழியில் வழி நடத்தவில்லை. மக்களிடம் நான் வாக்கு கேட்கும் போது தாயகம், தேசியம், சுயநிர்ணயம் மற்றும் காணமல் போனோர் தொடர்பில் மாகாணட்டம், தேசிய மட்டம், சர்வதேச மட்டம் ஆகியவற்றில் கதைப்பதற்கு அங்கீகாரம் தருமாறு கேட்டிருந்தேன். இதேநேரம் நான் இன்னாருக்கு வாக்கைப் போடுமாறு கேட்பதே பிழை. நாங்கள் விலைபோகிறவர்கள் அல்ல. நான் என்னுடைய இன விடுதலைக்காக உயிரைக் கொடுப்பேனே ஒழிய ஒரு துரோகியாக உயிர் விடுகிற நிலையிலும் நான் இல்லை எனக் கூறியுள்ளார் அனந்தி சசிதரன். இன்று ஊடக அமையத்தில் நடைபெற்ற சந்திப்பில் அவர் வழங்கிய முழுமையான கருத்துப்பதிவை இங்கே கேட்கலாம்.http://www.pathivu.com/news/36587/57//d,article_full.aspx https://soundcloud.com/pathivucom/mrssanaththi-press-m…

  12. இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் கடுமையாக சூடு பிடித்துள்ள நிலையில் கடந்த சில தினங்களாக போர்க்குற்றம் இனப்படுகொலையை ஒப்புக் கொள்ள வேண்டிய நிலைக்கு தற்போதைய அரசு தள்ளப்பட்டுள்ளது. நான்தான் ஒரு பிசாசு என்பதை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச யாழ்ப்பாணத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் ஒப்புக் கொண்டிருந்தார். இதன் மூலம் தனது தமிழ் மக்கள்மீதான ஒடுக்குமுறையை அவர் ஒப்புக்கொண்டுள்ளார். அதேவேளை ராஜபக்சவின் அரசின் இரண்டு அமைச்சர்கள் இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றத்தை நேற்று ஒப்புக்கொண்டுள்ளனர். யுத்த வெற்றிக்கு உரிமை கோரும் சந்திரிக்கா மற்றும் சரத்பொன்சேகா ஆகியோர் தமிழ் மக்களின் உயிரிழப்புக்களுக்கு பொறுப்புக் கோருவார்களா? எனக்கூறியதன் மூலம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த மக்கள் இனப்படுகொலை செய்யப்ப…

  13. கிளிநொச்சி மாவட்டத்தின் கிராமங்களில் வவுனியா மற்றும் வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட சிறுவர், சிறுமிகள் பிரச்சாரத்திற்காக அலைய விடப்பட்டுள்ளனர். பன்னிரண்டு மற்றும் பதின்மூன்று வயதுகளையுடைய இந்த சிறுவர், சிறுமிகள் மகிந்தவின் படம் பொறித்த சட்டை அணிவித்து கொண்டு திரிகின்றனர். மிகமோசமான சிறுவர் துஸ்பிரயோகமாக இந்த நடவடிக்கை காணப்படுவதுடன், இந்த சிறுமிகள் பாலியல் துஸ்பியோகத்திற்கு உள்ளாக்கப்படக்கூடிய அபாய நிலையும் இருப்பதாக சமுக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். எனவே சிறுவர் சிறுமியர்கள் தொடர்பாக பெற்றோர்கள் விழிப்புடன் இருக்குமாறும் வேண்டப்படுகின்றனர். http://www.kalpitiyavoice.com/2015/01/blog-post_4.html

  14. ஜனாதிபதித் தேர்தல் 2015: தென்னிலங்கை நிலைமை 37 நிமிடங்களுக்கு முன்னர் இலங்கை ஜனாதிபதித் தேர்தலுக்கு சில நாட்களே இருக்கும் நிலையில், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவும் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இறுதிக் கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இம்முறைத் தேர்தலில் ராஜபக்ஷவுக்கு கடுமையான நெருக்கடியை கொடுத்துவருகிறார் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன. தேர்தல் நெருங்க நெருங்க போட்டி கடுமையாவதுடன், வன்முறைச் சம்பவங்களும் அதிகரித்தபடி உள்ளன. சுமார் ஒன்றரைக் கோடி வாக்காளர்களைக் கொண்ட இலங்கையில், சிங்கள கிராமப் புறங்கள் நிறைந்த நாட்டின் தென்பகுதி ராஜபக்ஷவுக்கு சாதகமான பகுதியாகவே கருதப்பட்டுவருகிறது.…

    • 0 replies
    • 699 views
  15. கிராமிய அப்பாவிச் சிங்களரின் வாக்கு வங்கியை தனதாக்கும் திறன் மகிந்தவுக்கு உண்டா? JAN 03, 2015 | 15:31by நித்தியபாரதிin கட்டுரைகள் சிறிலங்காவின் அதிபர் தேர்தலில் போட்டியிடும் இரண்டு பிரதான வேட்பாளர்களும் நாட்டின் கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்களாவர். இது ஒரு அரிதான சம்பவமாகும். ஏனெனில் இதுவரை சிறிலங்காவில் போட்டியிட்ட அதிபர்களில் ஒருவர் கிராமப்புறத்தைச் சேர்ந்தவராகவும் இன்னொருவர் நகரப்புறத்தைச் சேர்ந்தவராகவும் இருந்துள்ளனர். இவ்வாறு சென்னையை தளமாகக் கொண்ட The Hindu ஆங்கில நாளேட்டின் சிறப்பு செய்தியாளர் MEERA SRINIVASAN எழுதியுள்ள சிறிலங்கா தேர்தல பற்றிய ஆய்வில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. ஜனவரி 08 அன்று இடம்பெறவுள்ள அதிப…

    • 0 replies
    • 442 views
  16. Joint New Year Message from World-wide Tamil Organizations and Entities: A Solemn Pledge to Work for Justice, Protection, and Freedom of the Tamil People January 01, 2015 On this New Year’s Day, January 1, 2015, Tamil organizations and entities around the world pledge our renewed commitment to bring dignity, freedom, justice, and peace to our Tamil brethren living in the occupied NorthEast region constituting the Tamil Nation in the island of Sri Lanka. We are united in our quest for freedom for our people who have been oppressed by successive Sri Lankan regimes. We thank the International Community for leading and supporting the Resolution at the March 2014 Sessi…

    • 1 reply
    • 1.6k views
  17. ஐதேக தலைமையகத்துக்குள் குடும்பக் காட்டைத் தேடியது சிறிலங்கா காவல்துறை JAN 03, 2015 | 11:07by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் கொழும்பில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகோத்தாவுக்குள் நுழைந்து சிறிலங்கா காவல்துறையினர் தேடுதல்களை நடத்தியுள்ளனர். கங்கொடவில நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட ஆணைக்கு அமையவே, இன்று பிற்பகல் இந்த தேடுதல் இடம்பெற்றுள்ளது. சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை இழிவுபடுத்தும், புத்தகங்கள் இருப்பதாக கூறியே சிறிலங்கா காவல்துறை இந்த தேடுதலை மேற்கொண்டது. மகிந்த ராஜபக்சவை இழிவுபடுத்தும் வகையில், குடும்பக் காடு என்ற பெயரில் புத்தகங்களை ஐதேக வெளியிட்டுள்ளதாகவும், அவற்றைக் கண்டுபிடிக்கவே தேடுதல் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நாமல்…

    • 0 replies
    • 386 views
  18. ஜெனிவாவுக்கான இந்தியாவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியான திலிப் சின்ஹா, ஓய்வுபெற்றுள்ள நிலையில், அவரது இடத்துக்கு இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சையிட் அக்பருதீன் நியமிக்கப்படலாம் என்று இந்திய வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஜெனிவாவில் உள்ள ஐ.நாவுக்கான நிரந்தர விதிவிடப் பிரதிநிதியாகப் பணியாற்றிய திலிப் சின்ஹா, கடந்த 31ம் நாளுடன் ஓய்வு பெற்றுள்ளார். இதையடுத்து, ஜெனிவாவில் அவர் வகித்து வந்த பதவி வெற்றிடமாகியுள்ளது. இதுவரை அந்தப் பதவிக்கு இந்திய அரசாங்கத்தினால் புதியவர் எவரும் நியமிக்கப்படவில்லை. ஏற்கனவே பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாகப் பணியாற்றிய பி.என்.. ரெட்டி, பதில் பிரதிநிதியாக பணியாற்றி வருகிறார். திலிப் சின்ஹா ஜெனிவாவில் பணியாற்றிய…

  19. சுய நிர்ணய கோரிக்கையை கோரிப் போட்டியிடுகிறார் சிறிதுங்க. மகிந்தவுக்கும் மயித்திரிக்கும் இடையில் நடக்கும் அடுத்த மன்னர் யார் என்ற போட்டியில் மக்களின் கோரிக்கைகள் நசுங்கிச் செத்துக்கொண்டிருக்கிறது. நிறைவேற்று அதிகாரத்தை வழங்கிய கையோடு மக்கள் மீட்சி பெற்றுவிடுவார்கள் என்ற போலி நம்பிக்கையில் எதிர்கட்சி பக்கம் திரண்டவர்களும்கூட இன்று தடுமாறிக்கொண்டிருக்கிறார்கள். மயித்திரியின் சிந்தனையும் மகிந்த சிந்தனையாகவே இருக்கிறது. தமிழ் மக்களின் அடிப்படைக் கோரிக்கைகளை யாராவது கதைத்தால் அது மகிந்தவைப் பலப்படுத்திவிடும் என்ற பயக்காட்டுதலை செய்து உரிமைக் கோரிக்கைகள் நசுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதையும் மீறி ஒருவர் தனித்து நிற்கிறார். மயித்திரி மகிந்த என்று பல பெயர்களில் …

  20. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சோதிடராக பணியாற்றிய காலி சுமனதாஸ அபேகுணவர்தன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையிலேயே அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடன் நிலைமை மோசமானதாக இல்லை என்றும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. http://www.tamilmirror.lk/136925

  21. ராஜபக்ஸக்களாகும் தொண்டமான்கள்... தபால்காரர் மீது செந்தில் தொண்டமான் தாக்குதல் - 03 ஜனவரி 2015 தேர்தல் வன்முறைகளை கண் காணிக்கும் மத்திய நிலையம் தெரிவிப்பு:- இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முக்கியஸ்தரும் ஊவா மாகாண அமைச்சருமான செந்தில் தொண்டமானால் தாக்கப்பட்டதாக கூறப்படும் தபால்காரர் ஞானசேகரன், பதுளை தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக தேர்தல் வன்முறைகளை கண்காணிக்கும் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/115103/language/ta-IN/article.aspx

  22. ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்துக்காக நேற்று மன்னார் மாவட்டத்துக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ மடுதேவாலயத்துக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார். மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப் ஜனாதிபதியை வரவேற்றார். அங்கு இடம்பெற்ற பிரார்த்தனையில் கலந்து கொண்டு ஜனாதிபதி மடு அன்னையை வழிபட்டார். அதனைத் தொடர்ந்து அங்கு அருட்தந்தையர்களுடனும் கலந்துரையாடினார். http://seithy.com/breifNews.php?newsID=123857&category=TamilNews&language=tamil

  23. வடக்கு கிழக்கு மக்களை தோல்வியடையச் செய்து அவையின்ட போராட்டத்தை தோல்வியடை செய்யிறதில மகிந்தவுக்கு இருக்கிற சிங்களப் பேரினவாத வெறியை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.. அதே மகிந்த வடக்கிலயே தோல்வி வடிய வடிய பேசுற ஒரு காலம் வந்துட்டுது பாருங்கோ. மனுசன் பயப்பிடுது… சுதந்திரக் கட்சி தேர்தல் பிரசாரம் ஒண்டு கொழும்பில நடந்தது. அதில சுசந்திகா பேசும்போது தங்கட சனாதிபதியில சில சில குறைபாடுகள் இருக்கலாம் எண்டா… பிறகு அவரின்ட நடவடிக்கையால எங்களுக்கு சில சில பாதிப்ப வந்திருக்கலாம் எண்டா… அப்பிடி இப்பிடி மகிந்தவ சொந்தக் கட்சியே கூட்டத்திலே போட்டு உடைச்சிட்டே? சரி அதுவும் கொழும்போட போகட்டும்… நேற்று யாழ்ப்பாணத்தில நடந்த நீங்கள் பாத்தியள் எண்டால் வாய் விட்டு சிரிச்சு நோய்விட்டு வாழ…

  24. யுத்த காலத்தில் பனை மரங்கள் அழிக்கப்பட்டு வந்ததை தொடர்ந்து தற்போது பல்வேறு தேவைகளுக்காக அனுமதியின்றி பனை மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன. இதனால் யாழ். குடாநாட்டுப் பகுதியில் பலகிப் பெருகி காணப்பட்ட பனை உற்பத்திப் பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவி வருவதாக பனை அபிவிருத்திச் சபைத் தலைவர் பசுபதி சீவரட்ணம், வெள்ளிக்கிழமை (02) தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் பனை மரங்கள் அதிகளவில் அழிக்கப்பட்டுவருவதால் யாழ் மாவட்டத்தில் கடந்த ஆண்டு பனம் விதை உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதுடன் பனம் பொருள் உற்பத்தியும் வீழ்ச்சி அடைந்துள்ளது. பனை அபிவிருத்தி சபையின் கொள்வனவு விற்பனையை விட தனியார் துறையின் விற்பனையும் கொள்வனவுமே அதிகரித்து காணப்படுகின்றது. தொடர்ந்து பனை மரங்கள் …

  25. யாழ்ப்பாணத்தில் நேற்று நடந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பிரச்சாரக் கூட்டத்தில், சுதந்திரக்கட்சி அமைப்பாளர் அங்கஜன் இராமநாதன் அணியினரிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் சகோதரர் அடிவாங்கிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் ஜனாதிபதியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதன்போது ஈ.பி.டி.பி அணியினரும், அங்கஜன் அணியினரும் ஜனாதிபதிக்கு அதிகம் விசுவாசம் உள்ளவர்கள் யார் என்பதை காண்பிப்பதற்காக தேர்தல் பிரசுரங்களை விநியோகித்துக் கொண்டிருந்தனர். இதன்போது அங்கஜன் அணியினரில் சில இளைஞர்களை, ஈ.பி.டி.பி டக்ளஸ் தேவானந்தாவின் சகோதரர் தள்ளிவிட்டுள்ளார். இதனையடுத்து ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளவிருந்த மேடைக்கு அருகிலிருந்த அங்கஜனின் சாரதி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.