Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சிறிலங்கா கொடியுடன், அனைத்துலக கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டு வந்த, சீன மற்றும் ஜப்பானிய மீன்பிடிக் கப்பல்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவின் முதலீட்டுச்சபையின் அங்கீகாரத்துடன், சீனா மற்றும் ஜப்பானைச் சேர்ந்த இரண்டு நிறுவனங்களின் 10 ஆழ்கடல் மீன்பிடிக் கப்பல்கள், சிறிலங்கா துறைமுகத்தில் இருந்து மீன்பிடியில் ஈடுபட்டு வந்தன. இந்தக் கப்பல்களின் மூலம் பிடிக்கப்படும் மீன்களில் 10 வீதத்தை, சிறிலங்கா கடற்றொழில் அமைச்சுக்கு வழங்க வேண்டும் என்றும், சிறிலங்கா துறைமுகம் வழியாகவே ஏற்றுமதி செய்ய வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டிருந்த்து. எனினும், சீன மீன்பிடிக் கப்பல்கள், அனைத்துலக கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்றாலும், வெறும் கையுடன் திரும்புவதாக அ…

    • 0 replies
    • 298 views
  2. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சொந்தமான டொரன்டோ கடைகளில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக கனடாவிற்கான இலங்கையின் முன்னாள் கொன்சோல் அதிகாரி பந்துல ஜயசேகர தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்த பின்னர் இவ்வாறு பாடங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார். புலிகளின் தலைவர் பிரபாகரனின் படங்கள் மட்டுமே காட்சிப்படுத்தப்பட்ட கடைகளில் இவ்வாறு மைத்திரிபாலவின் படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் வலையமைப்பு தொடர்ந்தும் இயங்கி வரும் பல இடங்களிலும் இவ்வாறு மைத்திரிபாலவிற்கு ஆதரவளிப்பதற…

    • 3 replies
    • 604 views
  3. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொது எதிரணி வேட்பாளர் மைத்திபாலவுடன் ஒப்பந்தம் செய்துகொள்ளவில்லை எனில் அவர்களுக்கு எதற்காக ஆதரவளிக்கவேண்டும். இருதரப்புக்கும் இடையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளமை வெளியிடப்பட்டால் சிங்கள மக்களின் வாக்குகளை இழக்க நேரிடும் என எதிரணி அஞ்சுகிறதா? அப்படி ஓர் ஒப்பந்தம் செய்துகொள்ளவில்லை எனில் ஏன் அவர்கள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு ஆதரவளித்திருக்கக்கூடாது. மைத்திரிக்கு ஆதரவளிப்பதன் மூலம் மீண்டும் ஒரு முறை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு துரோகம் செய்கிறது. - இவ்வாறு தெரிவித்துள்ளார் பாதூகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்‌ஷ. தமிழ்ப் பத்திரிகைகளின் ஆசிரியர்களுடன் இன்று செவ்வாய்க்கிழமை பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர…

    • 6 replies
    • 1.6k views
  4. பான் கீ மூன் மீது பாய்கிறது சிறிலங்கா அரசாங்கம் DEC 31, 2014 | 5:01by கார்வண்ணன்in செய்திகள் அமைதியானதும், நம்பகமானதுமான தேர்தலை நடத்த வலியுறுத்திய ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனை சிறிலங்காவின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கடுமையாக கண்டித்துள்ளது. சிறிலங்காவில் அதிபர் தேர்தல் அமைதியாகவும், நம்பகமாகவும் தேர்தல் நடத்தப்படும் என்று தாம் எதிர்பார்ப்பதாக, ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் தெரிவித்திருந்தார். பான் கீ மூன் தவறான அனுமானங்களைச் செய்வதாக, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளதாக சிறிலங்கா அரசாங்கத்தின் அதிகாரபூர்வ வலைத்தளத்தில், செய்தி வெளியிடப்பட்டுள்ளது. “சிறிலங்கா 80 ஆண்டுகளாக ஜனநாயக தேர்தல் நடைமுறையை கொண்டுள்ள ஒரு நாட…

    • 5 replies
    • 1.6k views
  5. தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு மைத்திரிபால சிறிபால சேனவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்தமை தொடர்பான முடிவால் பலருக்கும் பலவிதமான ஐயப்பாடுகள் எழுந்துவரும் நிலையில் அவர்கள் எடுத்த முடிவு தவறா? தவிர்க்க முடியாததா? என்பது தொடர்பில் தமிழகத்திலிருந்து வெளியாகும் தந்தி தொலைக்காட்சியில் இடம்பெற்ற காரசாரமான விவாதம் இடம்பெற்றது. இதில் த.தே.கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் எம்.பி யான எம்.ஏ.சுமந்திரனும் கலந்துகொண்டார். நேற்றையதினம் மகிந்த ராஜபக்சேவை இதே தொலைக்காட்சி நேர்கண்டமை குறிப்பிடத்தக்கது. http://seithy.com/breifNews.php?newsID=123659&category=TamilNews&language=tamil

    • 9 replies
    • 787 views
  6. மைத்திரியைத் தோற்கடிக்க குமார் குணரத்தினத்துக்கு கதவைத் திறந்தது சிறிலங்கா JAN 01, 2015 | 0:00 by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்கா அரசாங்கத்தினால் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்ட, குமார் குணரத்தினத்தை மீண்டும் கொழும்புக்குத் திரும்பி வருவதற்கு, அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது. சிறிலங்கா அதிபர் தேர்தலில் எதிரணியின் வெற்றி வாய்ப்பை பாதிக்கச் செய்யும் தந்திரோபாயங்களில் ஒன்றாகவே, குமார் குணரத்தினத்துக்கு சிறிலங்கா வருவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜேவிபியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்த குமார் குணரத்தினம், 1990களின் துவக்கத்தில் நாட்டை விட்டுத் தப்பிச் சென்று அவுஸ்ரேலியாவில் அடைக்கலம் தேடியிருந்தார். அவர், நொயல் முதலிகே என்ற பெயருடன…

  7. "2015 புதுவருடத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கின்றோம். எனவே, எதிர்வரும் 8ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் அனைத்து மக்களும் ஆட்சி மாற்றத்திற்கு ஏற்றவகையில் தமது வாக்குகளைப் பயன்படுத்தவேண்டும்.'' - இவ்வாறு வலியுறுத்தியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன். அவர் மேலும் தெரிவித்ததாவது:- "இலங்கையின் தற்போதைய ஆட்சி மோசமடைந்து வருகின்றது. எனவே, இந்த நிலைமையில் கட்டாயம் ஒரு மாற்றம் ஏற்படவேண்டும். இது இந்த நாட்டில் வாழும் மூவின மக்களின் விருப்பமாக உள்ளது. விசேடமாக நாட்டில் வாழும் தமிழ் மக்களின் பிரச்சினை நீண்டகாலமாகத் தொடர்கின்றது. இந்தப் பிரச்சினைக்குத் தீர…

    • 10 replies
    • 486 views
  8. பல்இளித்து வாழ்வதற்காக தமிழ்மக்கள் போராடவில்லை – முதலமைச்சர் விக்னேஸ்வரன் JAN 01, 2015 | 0:39by புதினப்பணிமனைin செய்திகள் சிறிலங்கா அதிபரை நாடிச்சென்று, அவர் தம் சகோதரர்களுக்குப் பல்லிளித்து, வாழ்வதற்காக தமிழ் மக்கள் போராட்டம் நடத்தவோ, உயிர்த் தியாகங்களைச் செய்யவோ இல்லை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வட மாகாணசபையின் அமைச்சர்கள், உறுப்பினர்கள், அதிகாரிகளுக்கான ஆண்டுஇறுதி கருத்துப் பரிமாற்றக் கூட்டம் யாழ் பொது நூலக மண்டபத்தில் நேற்று மாலை மாலை 5 மணியளவில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் உரையாற்றினார். அந்த உரையில் அவர்- ”பழையது போகின்றது. நாளை புதியது பிறக்கப் போகின்றது! நாம் சேர்ந்து நன்றாக மகிழ்வடை…

  9. மகிந்த ராஜபக்ச : தெற்கிலிருந்து தோற்றம் பெற்ற அளப்பரிய ஒரு அரசனின் நாட்கள் எண்ணப்படுகின்றனவா? DEC 31, 2014 | 19:13 by நித்தியபாரதிin சிறப்பு செய்திகள் வழமையை விட இரண்டு ஆண்டுகள் முன்னதாக அதிபர் தேர்தலை நடாத்தவுள்ளதாகவும் இதனை ஜனவரி 08 அன்று நடாத்தவுள்ளதாகவும் அதிபர் மகிந்த ராஜபக்ச அறிவித்த போது இவர் தான் வெற்றி பெறுவேன் என்கின்ற நம்பிக்கையைக் கொண்டிருந்திருப்பார். அண்மையில் இடம்பெற்ற மாகாண சபைத் தேர்தல்கள் மகிந்த ராஜபக்ச வெற்றி பெறுவார் என்கின்ற சாத்தியத்தைக் குறைத்தது. ஆனால் எதிர்க்கட்சிக்குள்ளும் பிளவுகள் ஏற்பட்டன. சிறிலங்காவின் பொருளாதாரம் முன்னேற்றமடைந்தது. சிறிலங்காவின் தெற்கிலிருந்து தோற்றம் பெற்ற அளப்பரிய ஒரு அரசனாக மகிந்த ராஜபக்ச தன்னைச் சித்தரித்தார். இ…

    • 0 replies
    • 601 views
  10. மகிந்தவா – மைத்திரியா ? – பல்கலைக்கழக கருத்துக்கணிப்புகளில் முரண்பாடு DEC 31, 2014 | 16:17by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்கா அதிபர் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெறுவார் என்று கொழும்பு பல்கலைக்கழகமும், மகிந்த ராஜபக்ச வெற்றி பெறுவார் என்று களனிப் பல்கலைக்கழகமும் நடத்திய கருத்துக் கணிப்புகளில் தெரியவந்துள்ளது. கொழும்பு பல்கலைக்கழகம் நடத்திய கருத்துக் கணிப்பில், மைத்திரிபால சிறிசேன 53 வீத வாக்குகளுடன் வெற்றி பெறுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மைத்திரிபால சிறிசேனவுக்கு இரண்டு இலட்சம் வாக்குகள் அதிகமாக கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. கடந்த அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கு வாக்களித்த 28 வீதமான வாக்காளர்கள், இந்தமுறை மைத்திரிபால சிறிசேனவுக்க…

    • 0 replies
    • 527 views
  11. நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் எந்த ஒரு வேட்பாளரையும் ஆதரித்துப் பிரசாரம் செய்ய மாட்டேன் என வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். தமிழ் மண்ணில் இருந்து தமிழர்களின் உரிமைகளுக்காக நியாயமாகக் குரல் கொடுப்பவர்களைத் தவிர வேறு எவரையும் ஆதரித்து பிரசாரம் செய்வதில்லை என்பது தனது கொள்கை சார் முடிவு என்றும் அவர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:- எங்கள் மண்ணில் வரலாறு, அதற்கு முன் கண்டிராத சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட யாழ். மக்களின் இடப்பெயர்வை எங்களுக்கு பரிசளித்தவர் சந்திரிக்கா. செம்மணிப்புதைகுழி உள்ளிட்ட பல பேரவலங்களை இவரது ஆட்சியில்தான் தமிழர்கள் முகம்கொடுத்தோம். தமிழர்களுக்கெதிரான போரில் 75% வெற்றி தன்னுடையது என்று அவரே உ…

  12. ஹக்கீம், ரிசாத்தை விடமாட்டேன் – கோத்தா ஆவேசம் DEC 31, 2014 | 0:50by கார்வண்ணன்in செய்திகள் அரசாங்கத்தை விட்டு விலகிச் சென்ற ரவூப் ஹக்கீமையோ, ரிசாத் பதியுதீனையோ, மீண்டும் அரசாங்கத்துடன் இணைந்து கொள்வதற்குத் தான் விடமாட்டேன் என்று தெரிவித்துள்ளார் சிறிலங்கா பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச. சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சர் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியிருக்கிறார். “2005ம் ஆண்டு அதிபர் தேர்தலில் ரவூப் ஹக்கீம், மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக பணியாற்றினார். தேர்தலில், மகிந்த ராஜபக்ச வெற்றி பெற்றதும், அவருடன் இணைந்து அமைச்சுப் பதவியையும், எல்லா சலுகைகளையும் பெற்றுக் கொண்டார். மீண்டும் 2010ம் ஆண்டு, சரத் பொன்சேகாவை ஆதரித்தார். அந்த தேர்தலில் …

  13. ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை மாற்றி அமைக்கும் முயற்சியில் இந்திய கணினி நிபுணர் குழுவொன்று இலங்கைக்கு வந்து கடும் வேலையில் ஈடுபட்டுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இக்குழு பொரளை லெஸ்லி ரணகல வீதியில் அமைக்கப்பட்டுள்ள 'Head End' இல் இருந்து தமது பணிகளை முன்னெடுத்து வருகின்றனர். ஸ்ரீலங்கா டெலிகோம் நிறுவனத்திற்குச் சொந்தமான 'Pure TV' இன் திருத்தத்திற்கு எனக்கூறி இந்திய குழு தமது பரீட்சார்த்த முயற்சியை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்திய குழு 'Pure TV' திருத்தம் எதனையும் செய்யவில்லை என குழுவின் கணினி நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்த 'Head End' அலுகதத்தில் கணினி தரவு தயாரித்து வேறு இடங்களுக்கு அனுப்பும் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் கணினி த…

    • 2 replies
    • 543 views
  14. இன்றைய தினம் முதல் பத்து நாடுகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட உள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. விண்ணப்பதாரிகள் நேர்முகத் தேர்வு ஒன்றுக்கு தோற்ற வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதிய நடைமுறையின் கீழ் இலங்கையர்கள் நேரடியாகவே இரட்டைக் குடியுரிமை பெற்றுக்கொள்ள முடியும் என சிவில் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி மேலதிக செயலாளர் தமயந்தி ஜயரட்ன தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் இலங்கையர்கள் முதலில் ஐந்து ஆண்டுகள் வதிவிட உரிமையை மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அதன் பின்னரே இரட்டைக் குடியுரிமை பெற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. வெளிநாடுகளில் வாழ்ந்து பெரும் எண்ணிக்கையிலான இலங்கைப் பிரஜைகளின் வேண்டுகோள…

  15. எதிர்வரும் 8 ஆம் திகதி இடம்பெறவுள்ள மிகமுக்கியமான ஜனாதிபதித் தேர்தலில் தேர்தல் சட்டங்கள் முழுமையாகக் கடைப்பிடிக்கப்படல் வேண்டுமென்றும், பிரச்சார நடவடிக்கைகளுக்கு அனைவருக்கும் சமமான வாய்ப்பு வழங்கப்பட வேண்டுமெனவும் பொதுநலவாயத்தின் செயலாளர் நாயகம் கமலேஷ் ஷர்மா வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இது குறித்து பொதுநலவாய அமைப்பு விடுத்துள்ள அறிக்கையொன்றில், “பொதுநலவாயத்தின் பழமையான ஜனநாயக பாரம்பரியத்தை கொண்ட நாடான இலங்கை, தனது நாட்டின் மக்கள் தங்கள் வாக்குகளை, வெளிப்படைத்தன்மை, சமவாய்ப்புகள், சட்டம் மற்றும் விதிமுறைகள் பின்பற்றப்படும் சூழலில் செலுத்தப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்,” என்று தெரிவித்திருக்கிறது. தேர்தல் ஆணையாளரின் அழைப்பின் பேரில் ஜனாதிபதித் தேர்தலைக் கண்காணிக்க பொது…

  16. அபிவிருத்தி வேலைகளை முன்னெடுக்கும் பொருட்டு தாம் இந்த முறை ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்‌ஷவையே ஆதரிக்க முடிவு செய்துள்ளனர் என்று கிளிநொச்சி பச்சிலைப்பள்ளிப் பிரதேச சபை தலைவர், உபதலைவர் மற்றும் உறுப்பினர்கள் இருவருமாக நால்வரும் தெரிவித்துள்ளனர். இன்று புதன்கிழமை வவுனியா தனியார் விடுதி ஒன்றில் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் ஊடக மாநாடு இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு ஜனாதிபதி மஹிந்தவுக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தும்போதே இவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் டொமினிக் அன்ரன், உப தவிசாளர் ரிஷிதாசன், உறுப்பினர்களான பேரின்பகரன், சிவராஜா ஆகிய நால்வருமே இவ்வாறு ஜனாதிபதி மஹிந்தவுக்கு ஆதரவு தெரிவித்து ஊடக சந்திப்பில் கலந்துகொண்டனர். - http://www.…

  17. மத்திய அரசானது மாகாணத்தை மடக்கி ஆள முடியும் என்பதை உணர்த்துவதாக எமது 14 மாத அனுபவங்கள் அமைந்துள்ளன. வடமாகாண மக்களால் ஒதுக்கித் தள்ளப்பட்ட ஒரு கட்சியின் தலைவர் மத்தியின் மதிப்பு தன்பால் இருப்பதால் தொடர்பில்லாதவரைக் கூட்டத்திற்குக் கொண்டு வந்து ஒவ்வாத நடவடிக்கைகள் இடம்பெற இடமளித்தார். இவை யாவும் “கருடா சௌக்கியமா?” என்ற கலாசாரத்தையே முன்னிறுத்துகின்றது. இதுதான் மத்திய அரசின் தந்திரம். இவ்வாறு தெரிவித்தார் வடக்கு மாகாணமுதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன். வட மாகாண சபை வருட இறுதி அமைச்சர்கள், உறுப்பினர்கள், அலுவலர்கள் ஆகியோரின் கருத்துப் பரிமாற்றக் கூட்டம் யாழ் பொது நூலக மண்டபத்தில் இன்று மாலை மாலை 5 மணிக்கு நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு முதலமைச்சர் மேலும் தெரிவித்தவை வருமாறு:- …

  18. கிராமங்களில் வாழ்பவர்கள் தங்களுடன் இருக்கின்றனர் எனவும் நகரங்களிலேயே எதிரணிக்கு செல்வாக்கு இருப்பதாகவும் அரசாங்கம் ஒரு கட்டுக்கதையை அவிழ்த்து விட்டுள்ளது. இது அப்பட்டமான பொய். கிராமங்களையும், நகரங்களையும் சேர்ந்த தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் ஒருசேர ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த தயாராகி விட்டார்கள். மலரும் புதிய ஆண்டில் எனது இந்த கூற்று உண்மை என சந்தேகமற நிரூபிக்கப்படும். இந்த நாடு இந்தியாவோ, சீனாவோ இல்லை. இது ஒரு சிறிய நாடு. இங்கு குக்கிராமங்கள் இல்லை. இங்கே நகரங்களில் வாழ்பவர்களுக்கும், கிராமங்களில் வாழ்பவர்களுக்கும் நிரந்தர உறவுகள், தொடர்புகள் இருக்கின்றன. சித்திரை புதுவருட தினங்களில் பாருங்கள். இந்த கொழும்பு நகரமே யாரும் இல்லாத மாயானமாகி விடும். கடைகள் மூடப்பட்டு, உண…

  19. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஜோதிடர்களின் மாநாடு ஒன்றில் பங்கேற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.நாரஹேன்பிட்டி சாலிகா மைதானத்தில் தற்போது அகில இலங்கை ஜோதிடர்களின் மாநாடு நடைபெற்று வருகின்றது. பெரும் எண்ணிக்கையிலான ஜோதிடர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். சபரகமுவ மாகாண ஆளனர் டபிள்யூ.ஜே.எம். லொக்குபண்டார மற்றும் கலாச்சார அமைச்சர் டி.பி. ஏக்கநாயக்க ஆகியோர் இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ளனர். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/115003/language/ta-IN/article.aspx

  20. உயர்தர பரீட்சை - கணிதத்தில் யாழ் இந்து முதலிடம். இம்முறை கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று மாலை வெளியாகின. இதில் அகில இலங்கை ரீதியாக விஞ்ஞான பிரிவில் மாத்தறை சுஜாதா மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த எச்.ஜீ.ஹிருணி உதாரா முதலாம் இடத்தைப் பிடித்துள்ளதோடு, மூன்றாம் இடத்தினை திருகோணமலையைச் சேர்ந்த சிவகுமார் இந்துஜன் பெற்றுக் கொண்டுள்ளார். மேலும் கணிதப் பிரிவில் யாழ் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த பாகியராஜ் தருகீசன் முதலிடத்தை வசப்படுத்தியுள்ளார். வர்த்தகப் பிரிவில் காலி சவுத்லண்ட் வித்தியாலயத்தின் பியூமி தனஞ்சனா முதலிடத்தைப் பெற்றுள்ளார். மேலும் கலை பிரிவில் கொழும்பு விஷாகா பாலிகா மகா வித்தியாலயத்தின் நெத்சலா பதிரண முதலிடத்தைப் பிடி…

  21. பொதுவேட்பாளர் மைத்திரிபாலசிறிசேனா 53 வீத வாக்குகளை பெற்று வெற்றிபெறுவார் என கொழும்புபல்கலைக்கழகத்தின் கருத்துக்கணிப்பின் மூலமாக தெரிய வந்துள்ளது. 2010 இல் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு வாக்களித்தவர்களில் 28 வீதமானவர்கள் பொதுவேட்பாளர் மைத்திரிபாலசிறிசேனவிற்கு வாக்களிப்பார்கள்,11 வீதமானவாகள் இன்னமும் முடிவெடுக்காத நிலையில் காணப்படுவதாகவும் இந்த கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது. இம்முறையே முதன்முதலாக வாக்களிப்பவர்களில் 38 வீதமானவர்கள் மகிந்தராஜபக்சவிற்கும்,33 வீதமானவர்கள் மைத்திரிக்கும் வாக்களிக்கவுள்ளனர். தமிழ்முஸ்லீம் கட்சிகள் ஆதரவளித்துள்ளதன் காரணமாக மைத்திரி 900.000 அதிகப்படியான வாக்குகளால் வெற்றிபெறுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://global…

  22. புதிய ஜனாதிபதி மைத்திரிபால உங்கள் மீள்குடியேற்றம் தொடர்பான பிரச்சினைக்கு சரியாக முறையில் தீர்வு காண்பார். பாதுகாப்பிற்கு பங்கம் ஏற்படாத வகையில் தான் நாம் மீள்குடியேற்றத்தை மேற்கொள்ள உள்ளோம் என்று தெரிவித்தார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க. எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபாலவை ஆதரித்து நல்லூர் சங்கிலியன் தோப்பில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- இன மோதல் , இராணுவ மோதல் காரணமாக எனது நாட்டில் பல்வேறு துன்பங்களையும் துயரங்களையும் அனுபவித்த நீங்கள் இன்று ஓரளவு மகிழ்ச்சியுடன் உள்ளீர்கள் இதனால் நான் மகிழ்ச்சியடைகின்றேன். 1994 இல் எனது ஆட்சி அமைக்கப்பட முன்னரும் பின…

  23. மைத்திரிக்கு ஆதரவளிக்க கூட்டமைப்பு முடிவு! – இன்று முறைப்படி அறிவிப்பார் சம்பந்தன். [Tuesday 2014-12-30 09:00] ஜனாதிபதித் தேர்தலில் எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாகவும், கூட்டமைப்பின் இந்த முடிவு இன்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பில் ஜானகி ஹோட்டலில் இன்று காலை 10.30 மணிக்கு கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெறவுள்ள விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் இந்த அறிவிப்பு வெளியிடப்படும். ஜனாதிபதித் தேர்தலில் எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாகவும், கூட்டமைப்பின் இந்த முடிவு இன்று …

  24. பொது எதி­ர­ணி­யி­னது நாடக தொடரில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் பங்­கு­பற்­ற­லா­னது எதிர்­பார்த்த ஒன்றே என குறிப்­பிடும் ஆளும் கட்­சி­யான ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்னணி, பொது எதி­ர­ணி­யிடம் மேற்­கொள்­ளப்­பட்ட உடன்­ப­டிக்­கையின் அமை­வா­கவே தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பின் ஆத­ரவு பெறப்­பட்­டுள்­ள­து. குறிப்­பிட்ட அந்த உடன்­ப­டிக்கை தொடர்­பி­லான இரக­சி­யங்­களை பொது எதி­ர­ணி­யினர் மக்­க­ளுக்கு வெளிப்­ப­டுத்த வேண்டும் எனவும் தெரி­வித்­தது. ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்பின் தலைமை காரி­யா­ல­யத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த ஊட­க­வி­ய­லாளர் மாநாட்­டி­லேயே அமைச்சர் டலஸ் அழ­கப்­பெ­ரும மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். இதன் போது அவர் தொடர்ந்து…

  25. யுத்தம் புரிந்த போது மக்கள் எவருக்கும் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாத வகையிலேயே படை நடவடிக்கைகளை முன்னெடுத்தோம் என்று முன்னாள் இராணுவ தளபதியும் ஜனநாயக கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகா தெரிவித்தார். யாழ். நல்லூர் சங்கிலியன் பூங்காவில் (கிட்டு பூங்கா) செவ்வாய்க்கிழமை (30) மாலை இடம்பெற்ற, பொது எதிரணி ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பொன்சேகா இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில், 'இந்த அரசாங்கம் நிராயுதபாணிகளை ஆயுதங்களை கொண்டு அச்சுறுத்துகின்றது. நாங்கள் ஜனநாயக ரீதியாக போராட்டங்களை நடத்தும்போது, பொய் குற்றச்சாட்டுக்களை சுமத்தி சிறைகளில் அடைக்கின்றனர். என்னையும் அவ்வாறே சிறையில் அடைத்தார்கள…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.