ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143546 topics in this forum
-
சிறிலங்கா அதிபர் தேர்தல் 2015: தமிழ் மக்களுக்கு நன்மையான தெரிவு எது? DEC 28, 2014 | 2:42 சிறிலங்கா அதிபர் தேர்தலில் தமிழ் மக்கள் முன்னால் மூன்று தெரிவுகள்தான் உண்டு. ஒன்று மகிந்த ராஜபக்சவை ஆதரிப்பது. இரண்டு, மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பது. மூன்று இருவரையும் நிராகரிப்பது. இதில் எது தமிழ் மக்களுக்கு நன்மையான முடிவாக இருக்க முடியும்? ராஜபக்சவை ஆதரித்தல் என்பது தமிழர் மனச்சாட்சிக்கு பொருந்தாத ஒன்று. எனவே முதலாவது தெரிவு குறித்து விவாதிப்பதில் பொருளில்லை – யதீந்திரா. இந்தக் கட்டுரை எழுதிக் கொண்டிருக்கும் நாள் வரையில் தமிழ் மக்களின் பிரதான அரசியல் சக்தியான தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதன் உத்;தியோகபூர்வ முடிவை அறிவித்திருக்கவில்லை. கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தல…
-
- 0 replies
- 365 views
-
-
வடமாகாண சபையின் உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு கோரி சிறிலங்காவின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைபாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வடமாகாண சபையின் உறுப்பினர்கள் அனைவரும் கைச்சாத்திட்டு, இது தொடர்பான கடிதம் ஒன்றை வழங்கி இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது மாகாண சபை உறுப்பினர்கள் அதிக அளவில் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில் ஏனைய மாகாண சபை உறுப்பினர்களுக்கு வழங்கப்படுகின்ற காவற்துறை பாதுகாப்பினை போல தங்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்று அவர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். http://www.pathivu.com/news/36398/57//d,article_full.aspx
-
- 0 replies
- 253 views
-
-
சந்திரிகா குமாரதுங்க சென்ற இடத்தின் மீது தாக்குதல் இலங்கையில், பேருவளை பிரதேசத்தில் நேற்று மாலை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் முன்னணி அரசியல்வாதியான ஹிருணிகா ஆகியோர் இரவு உணவுக்காக சென்ற இடத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள்கூறுகின்றன. மேல் மாகாணசபயின் உறுப்பினரான இப்திஹார் ஜாமீல் அவர்களின் வீட்டுக்கு இவர்கள் சென்றிருந்த வேளையிலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இந்த தாக்குதலில் சுமார் 5 பேர் காயமடைந்த போதிலும், சந்திரிகா மற்றும் ஹிருணிகா ஆகியோருக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் இப்திஹார் ஜாமீல் கூறியுள்ளார். தனக்கும் இந்த தாக்குதலில் காயம் ஏற்பட்டதாகவும் அவர் கூறினார். அவரது செவ்…
-
- 0 replies
- 393 views
-
-
மகிந்த ராஜபக்ச பதவிக்காக எதை வேண்டுமானாலும் செய்வதற்கு தயாராக இருக்கின்றார் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சரும் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். யுத்த வெற்றிக்கு நன்றிக் கடனாகவே 2010 இல் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கியது. ஆனால் கடந்த இரண்டு வருடங்களில் எமது இனத்துக்கு எதிராக அநியாயங்களையே இந்த அரசு செய்தது. அதற்கு நல்ல தண்டனையக் கொடுத்துள்ளோம். எமது இனத்தின் மீது கை வைப்பவர் யாராக இருந்தாலும் அவருக்கும் இவ்வாறான தண்டனைகளை வழங்கத் தவற மாட்டோம். நாம் இவ்வாறானதொரு முடிவை எடுப்போம் என ஆட்சியாளர்களே, மக்களோ நினைத்துக்கூடப் பார்க்க மாட்டீர்கள். ஏனெனில் நாம் கடந்த 9 வருடங்களாக அரசுக்குப் பலமாக இருந்து ஜனாதிபதியை உருவாக்கிய பங்காளி…
-
- 1 reply
- 486 views
-
-
ஜனாதிபதி தேர்தல் குறித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானம் தேர்தல் நடப்பதற்கு, 48 மணித்தியாலங்கள் முன்னதாகவே அறிவிக்கப்படும் என்று சிங்கள ஊடகம் ஒன்று ஊகம் வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரப் பணிகள் நிறைவடையும் எதிர்வரும் ஜனவரி மாதம் 5ம் திகதி நள்ளிரவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது தீர்மானத்தை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் பிரச்சாரக் காலத்தில் தமது நிலைப்பாட்டை அறிவித்தால் பாதக விளைவுகள் ஏற்படக் கூடுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது. முன்கூட்டியே அறிவித்தால் பல்வேறு தரப்பினரும் மாறுபட்ட பிரச்சாரங்களை மேற்கொள்ள வாய்ப்பு உண்டு என்ற காரணத்தினால் இவ்வாறான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசி…
-
- 28 replies
- 1.8k views
-
-
மகிந்தவின் தேர்தல் பரப்புரைக்கு மோடியின் தகவல் தொழில்நுட்ப நிபுணர் உதவி? DEC 26, 2014 | 10:21by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்கள் மூலம் தேர்தல் பரப்புரைகளை மேற்கொள்வதற்கு, இந்திய தகவல் தொழில்நுட்ப நிபுணர் ஒருவர் உதவி வருவதாக தி ஹிந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியின் வெற்றிக்காக சமூக வலைத்தளங்கள் மூலம் பரப்புரைகளை மேற்கொள்வதில் முக்கிய பங்காற்றிய அரவிந்த் குப்தா என்ற தகவல் தொழில்நுட்ப வல்லுனரே, சிறிலங்கா அதிபரின் வெற்றிக்கு பங்காற்றி வருவதாக கூறப்படுகிறது. பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் தலைவரான அவரிடம் இதுபற்றிக் கேள்வி எழுப்பிய போது, தாம் தேவையற்ற வகையி…
-
- 0 replies
- 480 views
-
-
கொழும்பின் அரசியல் சகதிக்குள் புதையுண்டு போகும் ஈழத்தமிழினம்? DEC 27, 2014 | 8:03by புதினப்பணிமனைin கட்டுரைகள் தமிழர்களின் தாயகம் அவர்களின் அடையாளம் தேசிய அளவில் ஒரு இனமாக அவர்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகள் அனைத்தும் பின்தள்ளப்படும் நிலையை உருவாக்குவதும் அரச அதிகாரத்தையும் அதன் கட்டமைப்பையும் வடக்கு கிழக்கில் வாழும் தமிழர்கள் ஏற்று கொள்கின்றார்கள் என்பதை அனைத்துலகுக்கும் எடுத்து காட்டவும் இந்த தேர்தல் உதவ உள்ளது. ‘புதினப்பலகை’க்காக *லோகன் பரமசாமி. சிறி லங்கா அதிபர் தேர்தலில் வடக்கு கிழக்கு தமிழர்களின் அரசியல் விருப்புகளை ஒரு பொருட்டாக கொள்ளாத நிலை இருப்பதை தமிழ் அரசியல்வாதிகள் சுட்டிகாட்டி உள்ளனர். இந்த நிலையை பல கொழும்பு ஊடகங்களும் எடுத்து காட்டுகின்ற போதிலும் அ…
-
- 0 replies
- 416 views
-
-
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ரவூப் ஹக்கீம் உட்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் இன்று காலை அமைச்சர் பசில் ராஜபக்சவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்திருப்பதாகவும் தெரிய வருகின்றது. இந்நிலையில், முஸ்லிம் காங்கிரஸ் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்குவது குறித்து இன்று மாலை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. http://onlineuthayan.com/News_More.php?id=524923756627406550
-
- 3 replies
- 730 views
-
-
தேர்தலைப் புறக்கணிக்கக் கூடாது – மாவை சேனாதிராசா DEC 21, 2014 | 19:36by VANNIin செய்திகள் சிறிலங்காவில் வரும் ஜனவரி 8ம் நாள் நடக்கவுள்ள அதிபர் தேர்தலைப் புறக்கணிப்பதில்லை என்றும், கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்று தமிழ் மக்களைக் கோருவதென்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. வவுனியாவில் இன்று காலை முதல் பிற்பகல் வரை நடந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின், நாடாளுமன்ற, மாகாணசபை, உள்ளூராட்சி சபை உறுப்பினர்களின் கலந்துரையாடலுக்குப் பின்னர், நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா இந்த அறிவிப்பை வெளியிட்டார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அதிபர் தேர்தலைப் புறக்கணிக்கக் கோருவதில்லை என்று முடிவு செய்துள்ளோம். தேர்தலில் எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்று தமிழ்த் த…
-
- 75 replies
- 4.1k views
-
-
தற்போதைய ஜனாதிபதி மஹிந்தவைத் தோற்க்கடிக்கும் அதே நேரம் அதற்கு மாற்றீடாக பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனாவை ஆதரிப்பதென்பதையும் ஏற்றுக் கொள்ள முடியாது என ஐக்கிய சோசலிசக் கட்சியின் தலைவரும் ஐனாதிபதி வேட்பாளருமான சிறிதுங்க ஐயசூரிய தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கு மலையகம் தென்பகுதி என நாட்டின் அனைத்துப் பகுதிகளிலுமுள்ள மக்கள் ஐனாதிபதி மகிந்த ராஐபக்ஷவைத் தோற்கடிக்கும் எண்ணத்துடனும் இத் தேர்தலுடன் மஹிந்தவை வீட்டுக்கு அனுப்ப வேண்டுமென்ற கோசத்துடனுமே உள்ளதாகவும் கூறினார். கடந்த 1994 ஆம் ஆண்டும் இதே போன்றதான கொடுங்கோல் ஆட்சி நடைபெற்று வந்த நிலையிலையே மாற்றம் ஏற்பட்டு மக்களுக்கு விடிவு வேண்டுமென்று ஜனாதிபதியாக சந்திரிக்கா பண்டார நாயக்கா குமாரதுங்க தெரிவு செ…
-
- 1 reply
- 396 views
-
-
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கும் பொதுக் கூட்டம் ஒன்று நேற்று இரவு பேருவளை கடற்கரை மைதானத்தில் நடைபெற்றது. குறித்த கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக மற்றும் மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர ஆகியோரது வாகனங்கள் மீது சிலர் தாக்குதல் நடாத்தியுள்ளனர். இந்த சம்பவம் நேற்று இரவு 11:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதனால் அங்கு பதற்றமான நிலைமை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கூட்டத்தில் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அங்கிருந்து வெளியேறும் போது ஐக்கிய தேசிய கட்சியின் பேருவளை அமைப்பாளர் இப்திகார் ஜமாலின் வீட்டிற்கு முன்னால் ஆளுமை கட்சி ஆதரவாளர்கள் சிலர்…
-
- 0 replies
- 338 views
-
-
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்கள் இருவரது தரப்புகளிலிருந்தும் சாதகமான சமிக்ஞைகள் கிடைத்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மு.காவுக்கு வழங்கப்பட்டுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு அரச தரப்பில் பின்னடைவு காணப்படுமானால், எதிரணி வேட்பாளரை ஆதரிக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் என்று முகாவின் தலைவர் ஹக்கீம் கூறியுள்ளார் என்றும் அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முக்கிய கோரிக்கைகளை அரசு தேர்தலுக்கு முன்னர் நிறைவேற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என நம்பிக்கை தெரிவித்துள்ள கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம், தமத…
-
- 12 replies
- 504 views
-
-
சிறிலங்காவில் உள்ள மக்களில் 80 சதவீதமானவர்கள் மகிந்த ராஜபக்ஷ ஊழல் புரிந்துள்ளமையை ஏற்றுக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தினால் அமெரிக்க ராஜாங்க திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட இரகசிய ஆவணம் ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவிற்காக மக்கள் கருத்துக் கணிப்புகளை மேற்கொண்டு வரும் சுனிமல் பெர்ணான்டோ, முன்னாள் அமெரிக்க தூதுவர் பெற்றீசியா புட்டினிஸிடம் இந்த தகவலை கூறியுள்ளார். அதேநேரம் மகிந்தவின் குடும்பத்தினர் ஊழலில் ஈடுபட்டுள்ளதாக 85 சதவீதமான மக்கள் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். http://www.pathivu.com/news/36390/57/80/d,article_full.aspx
-
- 0 replies
- 423 views
-
-
மகிந்த அரசில் இருந்து வெளியேறுகிறது முஸ்லிம் காங்கிரஸ்? – 48 மணிநேரத்தில் அறிவிப்பு DEC 21, 2014 | 12:46by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அடுத்த 48 மணிநேரத்தில், மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தில் இருந்து விலகும் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் மூத்த பேச்சாளர் ஒருவர் தகவல் வெளியிடுகையில், தமது கட்சி வரும் அதிபர் தேர்தலில் எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்க ஏற்கனவே முடிவு செய்து விட்டதாக கூறியுள்ளார். எனினும், இரண்டு அல்லது மூன்று பேர் சிறிலங்கா அரசாங்கத்துடன் இணைந்திருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாகவும், அவர்கள் கட்சியை விட்…
-
- 10 replies
- 1k views
-
-
ஜனாதிபதி தேர்தலின் தபால் வாக்களிப்பில் யாழ்.மாவட்டத்தில் 90 வீதமான வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியும் மாவட்டச் செயலருமான சுந்தரம் அருமைநாயகம் புதன்கிழமை (24) தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், யாழ்.மாவட்டத்தில் தபால் மூலமான வாக்குப்பதிவு செவ்வாய்க்கிழமை (23) முதல் 250 வாக்குச் சாவடிகளில் 200 தேர்தல் கண்காணிப்பாளர்களின் கண்காணிப்பின் கீழ் இடம்பெற்றது. தபால் மூலம் வாக்களிப்பதற்கு யாழ். மாவட்டத்தில் 14,328பேர் தகுதி பெற்றிருந்ததுடன், அவர்களில் 90 வீதமானவர்கள் வாக்களித்திருந்ததாக அவர் தெரிவித்தார் : http://www.tamilmirror.lk/136400#sthash.K5ArCr6K.dpuf
-
- 3 replies
- 689 views
-
-
பேருவளையில் நேற்றிரவு மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவாளர்களும், ஆளும் கட்சியின் ஆதரவாளர்களுக்கும் மோதலில் ஈடுபட்டனர். இதையடுத்து அப்பகுதியில் நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக விசேட அதிரடிப் படையினர் அனுப்பி வைக்கப்பட்டனர் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார். பேருவளையில் நேற்று இடம்பெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருணிகா ஆகியோர் பங்கேற்றனர். இந்தக் கூட்டம் முடிவடைந்த பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் பேருவளை அமைப்பாளரின் வீட்டில் தேர்தல் பிரசாரம் குறித்து ஆலோசனைகளில் ஈடுபட்டனர். இதன்போது அப்பகுதிக்கு வந்த ஆளும் கட்சியின் ஆதரவாளர்கள் ஐ.தே.க. அமைப்பாளரின் வீட்டின் மீது கற்களை வீசித் தாக்கினர். இந்தத் தாக்குதலில் ஐ.தே.வ…
-
- 2 replies
- 393 views
-
-
வாழ்வின் எழுச்சித் திட்டத்துக்கான நிதிப் பங்கீட்டில் தமக்கு அநீதி இழைக்கப்பட்டது எனக் கூறி வவுனியா முதலியாகுளம் மக்கள் செட்டிக்குளம் பிரதேச செயலகம் முன்பாக இன்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன் இந்த முறைகேட்டுக்கு முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிஷாட் பதியுதீனே காரணம் எனவும் மக்கள் குற்றஞ்சாட்டினார். மீள்குடியேறி அன்றாட வாழக்கையை கொண்டு நடத்த முடியாமல் தடுமாறி வரும் தங்களுக்கு வாழ்வின் எழுச்சி திட்ட நிதி வழங்கப்படாமல் ரிஷாட் பதியுதீனின் ஆதரவாளர்களுக்கு அந்த நிதி வழங்கப்பட்டது. இதற்கு சில சமுர்த்தி உத்தியோகத்தர்களும் உடந்தையாக செயற்பட்டனர் எனத் தெரிவித்தே மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முடிவில் செட்டிக்குளம் பிரதேச ச…
-
- 3 replies
- 377 views
-
-
நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலையின் காரணமாக பல பாகங்களிலும் கடும் மழை பெய்து வருகின்றது. தொடர்ச்சியாக பெய்து வரும் மழையின் காரணமாக மன்னார் மாவட்டத்தில் இதுவரையில் 7,293 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 26,155 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் மன்னார் மாவட்ட உதவிப்பணிப்பாளர் எம்.ஏ.சி.முஹமட் றியாஸ் தெரிவித்துள்ளார். பாதிப்பிற்கு உள்ளானவர்கள் தற்காலிகமாக இடம்பெயர்ந்துள்ளனர். மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் 472 குடும்பங்களைச் சேர்ந்த 1591 பேரும், நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் 6200 குடும்பங்களைச் சேர்ந்த 22,350 பேரும், முசலி பிரதேசச் செயலாளர் பிரிவில் 120 குடும்பங்களைச் சேர்ந்த 520 பேரும், மடு பிரதேசச் செயலாளர் பிரிவில் 381 குடும்பங்களைச் சேர…
-
- 2 replies
- 330 views
-
-
யாழில் மஹிந்தவிற்கு வாக்களிக்க கோரி 2500 ரூபா லஞ்சம்- கடவுளர் படங்களின்முன் சத்தியம் வாங்கியது EPDP: 27 டிசம்பர் 2014 எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மஹிந்தவிற்கு வாக்களிக்குமாறு கோரி யாழ்.குடாநாட்டில் குடும்பங்களிற்கு தலா இரண்டாயிரத்து ஜநூறு பணம் அரச தரப்பினால் பகிர்ந்தளிக்கப்பட்டு வருகின்றது. சமுர்த்தி வங்கிகளினில் வைத்து இப்பணம் ஈபிடிபியின் பிரதேச அமைப்பாளர்களினால் பகிர்ந்தளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களது வறுமையினை கேடயமாக்கி அவர்களினை சமூர்த்தி வங்கிகளிற்கு அழைத்து இவ்வாறு பணம் பகிர்ந்தளிக்கப்படுவதுடன் மஹிந்தவிற்கு வாக்களிப்போமென தமிழ்நாடு பாணியில் கடவுள் படங்கள் முன்னிலையில் சத்தியமும் பெறப்பட்டதாக பலனை பெற்ற …
-
- 2 replies
- 713 views
-
-
ஐ.தே.க தலைமை அலுவலகம் முன்பாக மோதல் https://www.facebook.com/video/video.php?v=10152464036305163
-
- 1 reply
- 367 views
-
-
பசில் ராஜபக்ஸ - குளோல் தமிழ்ச் செய்தியாளர் - கொழும்பு:- லிபியாவின் முன்னாள் அதிபர் முஹம்மர் கடாபி குடும்பத்தைப் போன்றே, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ குடும்பத்தையும் இலக்கு வைத்து மேற்குலக நாடுகள் சதித் திட்டங்களை முன்னெடுத்து வருவதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். கடாபி குடும்ப ஆட்சி நடத்தி வருவதாகவும், ஊழல் மோசடிகளில் ஈடுபடுவதாகவுமே குற்றம் சுமத்தப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார். 2011ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் கடாபி வீதியில் வைத்து படுகொலை செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். பலம்பொருந்திய மேற்குலக நாடுகளின் ஊடகங்கள் போலியான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட சில மக்களை திசை திருப்வும் வகையில் மேற்…
-
- 0 replies
- 424 views
-
-
இலங்கைக்கு வெளியில் விடுதலைப் புலிகளின் பலமானதொரு அரசியல் களம் இயங்கிக் கொண்டிருக்கின்றது. இது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகவுள்ளது. இவ்வாறானதொரு நிலையில் வடக்கில் இருந்து ஒருபோதும் இராணுவத்தை வெளியேற்ற முடியாது என தெரிவிக்கும் அரசாங்கம், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கை எமது அரசாங்கத்தினால் நிறைவேற்றப்படமாட்டாது எனவும் குறிப்பிட்டது.அரசாங்கத்தினால் நேற்று கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பின போதே அமைச்சர் டலஸ் அழகப்பெரும மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், விடுதலைப் புலிகளுடனான யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதையடுத்து யுத்தத்திற்கு பின…
-
- 0 replies
- 341 views
-
-
ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை தமிழ் மக்கள், தாங்களாகவே தீர்மானிக்க வேண்டும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவரையும் சுட்டிக்காட்டக்கூடாது எனவும் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். யாழ்.ஊடக அமையத்தில் வெள்ளிக்கிழமை (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், நாட்டின் 7ஆவது ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் 8ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இந்நிலையில் தேர்தல் தொடர்பான முடிவுகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் அறிவிக்கவில்லை. மக்கள் தமது தீர்மானத்தின் பிரகாரம் தபால் மூலமான வாக்களிப்பில் வாக்களித்தனர். மக்கள் தீர்மானித்துவிட்டனர் தாம் என்ன செய்யவேண்டும் என்று. மீதமுள்ள மக்கள…
-
- 0 replies
- 277 views
-
-
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட வவுனியா தெற்கு தமிழ்ப் பிரதேச சபையின் உறுப்பினர்கள் மூவர், ஐ.தேக. உறுப்பினர் ஒருவருமாக நால்வர் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர் என அறிவித்துள்ளனர். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு இந்த முடிவை அறிவித்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதேச சபை உறுப்பினர்களான இராஜசேகரன், சுபாஸ்கரன், பார்த்தீபன் ஆகிய மூவரும் ஐ.தே.க.வைச் சேர்ந்த பிரதேச சபை உறுப்பினர் பிரசாத் ஆகியோரே இவ்வாறு கட்சி தாவியுள்ளனர். http://malarum.com/article/tam/2014/12/26/7690/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%A…
-
- 4 replies
- 739 views
-
-
அமைச்சுப்பதவி முக்கியம் அல்ல என்பதுடன், சமூகமே முக்கியம் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிசாட் பதியுதீன் தெரிவித்தார். இதனாலேயே, அனைத்தையும் தூக்கி எறிந்துவிட்டு சமூகத்துக்காக அரசாங்கத்தை விட்டு வெளியேறியுள்ளதாகவும் அவர் கூறினார். காத்தான்குடியில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர், பொறியியலாளர் சிப்லி பாறூக்கின் இல்லத்தில் நேற்று மாலை நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'கடந்த 2005ஆம் மற்றும் 2010ம் ஆண்டு காலப்பகுதிகளில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வெற்றியடையச் செய்வதற்கு கடுமையாக உழைத்தோம். சமாதானத்தை கொண்டுவந்துவிட்டார். அவருக்கு இன்னுமொரு சந்தர்ப்பத்தை கொடுக்கவேண்டும் என்று நாடு ம…
-
- 2 replies
- 300 views
-