Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஜனாதிபதி தேர்தல் முடிவு, தமது எதிர்காலம் குறித்து அறிந்து கொள்வதற்காக பெரும் எண்ணிக்கையிலான அரசியல்வாதிகள் ஜோதிடர்களை நோக்கிப் படையெடுத்து வருகின்றனர். நாட்டின் முன்னணி ஜோதிடர்களிடம் அரசியல்வாதிகள் தங்களது ஜாதகக் குறிப்புக்களை காட்டி தகவல்களை அறிந்து கொள்ள முயற்சித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்காலத்தில் தமக்கு ஏற்படப் போகும் நிலைமை குறித்து அறிந்து கொள்ள அதிகளவான அரசியல்வாதிகள் ஆர்வம் காட்டுகின்றனர். சில அரசியல்வாதிகள் தங்களது தோசங்களை நீக்கிக்கொள்ள பூஜை வழிபாடுகளையும் மேற்கொண்டுள்ளனர். இதேவேளை, ஜோதிடர்களின் கருத்து எதுவாக இருந்தாலும் குறித்த வேட்பாளருக்கு ஆதரவளிக்கப் போவதாக சில அரசியல்வாதிகள் தீர்மானித்துள்ளனர். http://seithy.com/breifNew…

  2. தீவிரவாதத்தை ஆதரிக்கும் டயஸ்போராவுக்கு ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கும் சந்தர்ப்பத்தைப் பெற்றுக்கொடுக்க எதிரணியின் பொதுவேட்பாளர் முயற்சித்து வருவதாக அமைச்சர் டளஸ் அழஹப்பெரும தெரிவித்துள்ளார். இதற்கான சூழல்நிலையை உருவாக்கும் விதத்தில் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் முழு மூச்சுடன் களத்தில் நின்று செயற்படுவதாக தெரியவந்துள்ளது. டயஸ்போரா, எதிரணியிடம் முன்வைத்துள்ள பிரதான மூன்று கோரிக்கைகளில், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமக்கு வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்க வேண்டுமென்பதும் ஒரு கோரிக்கையாகும். இது தீர்க்கமாக ஆராயப்பட வேண்டிய விடயமென்பதனால் நாட்டு மக்களே இது குறித்து உறுதியான நிலைப்பாட்டிற்கு வரவேண்டும். எமது நாட்டிலிருந்து இடம்பெயர்ந்து இன்னுமொரு நாட்டில் த…

  3. ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளித்துள்ள அமைச்சர் ரிசாத் பதியுதீனை கறிவேப்பிலை என்று விமர்சித்துள்ளார் பொது பல சேனாவின் பொதுச்செயலர் கல்கொடத்தே ஞானசார தேரர். ரிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்க முடிவு செய்துள்ளது குறித்து அவர் கருத்து வெளியிட்டுள்ளார். இரண்டு தரப்புகளுமே அதிகாரத்தைக் கைப்பற்ற கடுமையாக மோதுகின்றன. இருதரப்புக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவுகிறது. சில மேலதிக வாக்குகளைப் பெறுவதற்கு சில வேளைகளில் கறிவேப்பிலைகள் தேவைப்படுகின்றன என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ரிசாத் பதியுதீனுக்கும் பொது பல சேனாவுக்கும் இடையில் கடுமையான கருத்து முரண்பாடுகள் இருந்து வருவது க…

  4. சீனாவின் நிதி உதவியுடன் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் இலங்கையின் அபிவிருத்திக்கு உதவியுள்ளன என்று அலரிமாளிகையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் தெரிவித்துள்ளார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ. அம்பாந்தோட்டை துறைமுகம், மாத்தறை விமானநிலையம், நுரைச்சோலை மின்நிலையம் என அனைத்தும் இலங்கை மக்களுக்கு நன்மையை அளித்துள்ளன. இந்த திட்டங்கள் மூலம் இலங்கையின் நிதி வீணடிக்கப்படவில்லை. சிலர் எமக்கு ஏன் பெருந்தெருக்கள் தேவை, நாங்கள் அதனை உண்ணப்போகின்றோமா என கேட்கின்றனர். எங்காவது செல்லும்போது நேரத்தை மிச்சப்படுத்த வேண்டியதன் அவசியம் உங்களுக்கு தெரியும். அதனை அறியாதவர்களே கேள்விகளை எழுப்புகின்றனர். அரச திட்டமொன்றை குறைசொல்வதற்கு ஊழல் குற்றச்சாட்டை முன்வைப்பதே எதிர்க் க…

  5. பெண்கள் மீதான வன்முறைகள் தொடர்பான விடயங்களை மோசமாக பிரசுரிப்பதை தவிர்த்து வன்முறைக்கானதீர்வை ஊடகங்கள் உள்வாங்கிக் கொள்ள வேண்டும் என யாழ்.பல்கலைக்கழக ஊடகத்துறை விரிவுரையாளர் கிருத்திகா தெரிவித்தார். இன்று இடம்பெற்ற பால்நிலை வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் அவர் உரையாற்றுகையில், பெண்கள் வன்முறைக்குள்ளாக்கப்படும் விடயத்தை தவிர்த்து வன்முறைக்குள்ளான பெண்ணுக்கு உதவிகள் கிடைக்கப் பெற்றிருந்தால் அதனை பத்திரிகையில் பிரசுரித்தால் அது வன்முறைக்கான தீர்வாக அமையும். இதனை விளங்கிக் கொண்டு செயற்படுவது ஊடகங்களின் பாரிய பொறுப்பு. குறிப்பாக தென்னிந்திய ஊடகங்கள் பெண்கள் தொடர்பான துஸ்பிரயோகங்களில் கதற…

  6. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராபஜக்ஸவிற்கு ஆதரவளிக்கப் போவதாக கைத்தொழில் அமைச்சர் ரிசாட் பதியூதீன் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் அமைச்சர் பதியூதீன் உள்ளிட்ட கட்சிப் பிரதிநிதிகள் அலரி மாளிகையில் ஜனாதிபதியை சந்தித்துள்ளனர். எதிர்வரும் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு ஆதரவளிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் அமுல்படுத்தப்பட வேண்டிய பரிந்துரைகள் சிலவற்றை அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் யோசனைத் திட்டமாக முன்வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதேவேளை, மதச் சுதந்திரத்தை உறுதி செய்வதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உறுதியளித்துள்ளார். இலங்கையின் அனைத்து தரப்பினரும் தமக்கு விரும்பிய மத வழிபாடுகளில் ஈடுபட …

  7. ராஜீவ் காந்தி கொலை தொடர்பான தகவல்களை விடுதலைப் புலிகளின் ஆயுத விநியோகத்தராக செய்ற்பட்டு வந்த குமரன் பத்மநாதனிடமிருந்து பெற்றுத்தருமாறு சிபிஐ, இன்டர்போலிடம் கோரிக்கை விடுத்துள்ளது. ராஜீவ் கொலை வழக்கு பல வருடங்களாக இடம்பெற்று வருகின்றது. இந்தநிலையில் இலங்கையிடமிருந்து அனைத்து தகவல்களையும் பெற்றுவிட்டால் அந்த வழக்கை முடிவுக்கு கொண்டுவர முடியும் என்று சிபிஐ சுட்டிக்காட்டியுள்ளது. 2009ஆம் ஆண்டு மலேசியாவில் வைத்து கைது செய்யப்பட்ட கே.பி இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். 2012ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்ட இவர் தொடர்ந்தும் அரசின் பாதுக்காப்புடன் கிளிநொச்சியில் சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகிறார். இந்தநிலையில் ராஜீவ் கொலை தொடர்பில் குமரன் பத்தநாதனின் தொடர்பு குறி…

  8. சமூகசீர்கேடான பிரச்சினைகள் தலைதூக்கும் போது அவற்றை சம்பந்தப்பட்டவர்களுடன் பேசி முடிவுக்கு கொண்டு வருவதை விடுத்து சட்டத்தை உங்கள் கையில் எடுத்துக்கொண்டு செயற்படுவதை சட்டம் பார்த்துக் கொண்டு இருக்காது என மன்னார் நீதிபதி செல்வி ஆனந்தி கனகரட்ணம் 54 பெண்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். மன்னார் இலுப்பைக்கடவை அந்தோனியார் புரப்பகுதியில் கள்ளுத் தவறணையில் போத்தல் கள்ளு விற்பனை செய்யப்படுவதால் தங்கள் கணவர்மார் அதை குடித்துவிட்டு வீடு திரும்பும்போது குடும்ப அமைதிக்கு பங்கம் ஏற்படுத்துவதை பொறுக்க முடியாத அக்கிராம பெண்கள் கூட்டம் கடந்த மாதம் 16ஆம் திகதி போத்தல் கள்ளு விற்பனை செய்த தவறணைக்குள் புகுந்து சேதப்படுத்தினர் என 54 பெண்களைப் பொலிஸாரால் கைது செய்தனர். இவர்களை…

  9. ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை இராஜினாமா செய்துள்ள திஸ்ஸ அத்தநாயக்க எம்முடன் இணைந்து விட்டார் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எம்மை குறைத்து மதிப்பிட வேண்டாம். எமது கட்சியின் செயலாளரை எடுத்துகொண்டால் இந்த மஹிந்த ராஜபக்ஷவால் மற்றைய கட்சியின் செயலாளரையும் எடுக்க முடியும் என்றார் அரசுடன் இணைந்துள்ள திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு சுகாதார அமைச்சு மற்றும் அரச உயர் பதவிகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. http://virakesari.lk/articles/2014/12/08/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E…

  10. நாட்டில் மத சுதந்திரத்தை ஏற்படுத்தி புதிய கலாசார யுகமொன்றை உருவாக்கவே மஹிந்த ராஜபக்ஷ மீதான நட்பினை மறந்து கொள்கையை அடிப்படையாகக் கொண்டே அரசிலிருந்து வெளியேறினோம். எமக்கு நட்பை விடவும் கொள்கையே முக்கியத்துவம் வாய்ந்தது என முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். யுத்தம் நிறைவடைந்து பின்பு நாட்டில் மத நல்லிணக்கத்தை இந்த அரசு ஏற்படுத்தவில்லை. ஆகவே, ஜனவரி 9 ஆம் திகதி இலட்சக்கான விருப்பு வாக்கு வித்தியாசத்தில் பொது வேட்பாளர் வெற்றி பெறுவார். குறித்த பெறுபேறானது மத சுதந்திரத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். கொழும்பு தெவட்டகஹ பள்ளிவாசலுக்கு பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன விஜயம் செய்த பின்பு கருத்து தெரிவிக்கையி…

  11. –வடிவேல் சக்திவேல் மட்டக்களப்பு மாவட்டத்தில் சனிக்கிழமையிலிருந்து (06) மழை பெய்துவருகின்ற நிலையில் வெள்ளம் தேங்கி நிற்க முடியாதவாறு கடலைச் சென்றடைவதுடன், வெள்ளநீர் வடிந்தோட மட்டக்களப்பு முகத்துவாரம் வெட்டப்பட்டுள்ளதாகவும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் எஸ்.இன்பராஜன் தெரிவித்தார். இது இவ்வாறிருக்க, திங்கட்கிழமை (08) காலை 8.30 மணிவரையான கடந்த 24 மணித்தியாலங்களில் மட்டக்களப்பு நகரில் 17.2 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் நவகிரி ஆற்றுப்பகுதியில் 65.0 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் தும்பங்கேணிப் பிரதேசத்தில் 19.8 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் வாகனேரிப் பிரதேசத்தில் 7.1 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் உன்னிச்சைப் பகுதியில் 53.0 மில்லிமீற்றர் மழ…

  12. முன்றாவது தடவையாகவும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் மஹிந்த ராஜபக்ஷவிற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான குழுவினர் நேற்று மாலை அலரிமாலிகையில் வைத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தனர். இதன்போது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமது கட்சியின் ஆதரவை உத்தியோகபூர்வமாக வெளிப்படுத்தினார். http://virakesari.lk/articles/2014/12/08/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81 -ரஞ்சித் ராஜபக்ஷ ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவை தெரிவித்து ம…

  13. திங்கள், டிசம்பர் 8, 2014 - 09:12 மணி தமிழீழம் | சயந்தன் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் மகிந்த ராஜபக்சவுக்கு ஆறுமுகன் தொண்டமான் ஆதரவு! சிறிலங்கா அதிபர் தேர்தலில், மீண்டும் போட்டியிடும் மகிந்த ராஜபக்சவுக்கு, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது. அலரி மாளிகையில் நேற்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை சந்தித்த, இதொகா தலைவரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான், இதனை அதிகாரபூர்வமாகத் தெரிவித்துள்ளார். ஆறுமுகன் தொண்டமானுடன், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை சந்தித்த இதொகா குழுவினர், மலையகத் தமிழர்கள், அவரது வெற்றிக்கு உறுதுணையாக இருப்பர் என்றும் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, பிரதியமைச்சர் திகாம்பரம் சிறிலங்கா அரசாங்கத்தின் மீது வெறுப்படைந்துள்ளதாகவு…

  14. பீல்ட் மார்சல் பட்டமும், பாதுகாப்பு அமைச்சர் பதவியும் தரப்பட வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே, எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு, சரத் பொன்சேகா ஆதரவு அளித்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு, ஆதரவளிப்பதாக, முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனநாயக கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகா கடந்தவாரம் அறிவித்திருந்தார். இதுதொடர்பாக அவர் மைத்திரிபால சிறிசேனவுடன் புரிந்துணர்வு உடன்பாடு ஒன்றையும் செய்து கொண்டுள்ளார். இதன் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய மைத்திரிபால சிறிசேன, தாம் ஆட்சிக்கு வந்ததும், சரத் பொன்சேகாவிடம் இருந்து பறிக்கப்பட்ட ஜெனரல் பட்டம் உள்ளிட்ட அனைத்து இராணுவ விருதுகள், சலுகைகளையும் மீள …

    • 2 replies
    • 632 views
  15. அண்மையில் வன்னியிலிர் விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்கத்தின் ஒரு தொகுதியை வன்னி மக்களுக்கு வழங்கப்படும் நிகழ்வு இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் அலரி மாளிகையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வுக்கு நானும் போயிருந்தேன். அங்கு நடந்த சில விடயங்களை குளோபல் தமிழ் செய்தியாளர் ஒருவர் இந்த விடயங்களை பகிர விரும்புகின்றேன். இராணுவம் எங்களை அதிகாலையிலேயே வரச் சொன்னது. நாங்கள் போனோம். இன்று நாங்கள் உள்ள நிலமையில் 16பவுண் தங்கம் எங்களுக்கு கிடைத்தால் பேருதவி என்று அப்பா சொன்னார். அப்பாவும் நானும் போனோம். வீட்டில் உள்ள எல்லாரையும் அழைத்து வரும்படி இராணுவத்தினர் சொன்னார்கள். எங்களை அறிவியல் நகரில் முதலில் கொண்டு சென்றார்கள். எங்களை முள்வேலி முகாங்களுக்குள் கொண்டு …

    • 3 replies
    • 991 views
  16. தமிழீழ விடுதலைப் புலிகளால் முல்லைத்தீவு - வெள்ளமுள்ளி வாய்க்கால் பகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த மசகு எண்ணெய் பெரல்கள் ஒன்பது இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. வெல்லமுள்ளி வாய்க்கால் கடற்கரைப் பகுதியில் இருந்து இராணுவத்தினர் இதனை மீட்டுள்ளனர். இறுதி யுத்தத்தின் போது, கடற் புலிகளினால் தங்களது படகுகளுக்கு பயன்படுத்த இவை பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் என இராணுவம் குறிப்பிட்டுள்ளது. மேலும் யுத்த காலத்தில் அந்தப் பகுதியில் கடற்புலிகளின் முகாம் அமைந்திருந்ததாக தெரியவந்துள்ளது. http://www.pathivu.com/news/35904/57//d,article_full.aspx

  17. அப்போது எங்கள் ஊருக்குள்ளால் யாழ்தேவி ஓடிக்கொண்டிருக்கும் . எண்பத்துமூன்று கலவரத்துக்கு பின்னர் பிறந்த நாங்களெல்லாம் முப்பது வயதுகளை கடந்தோம் என்பது ஒன்றும் இயல்பாய் நடந்துவிடவில்லை. ஒவ்வொரு கணங்களும் இயல்புக்கு மிஞ்சி நாங்களும் இந்த உலக மாந்தர் என்பதை ஒப்புவித்தே வருகிறோம். அந்நேரம் எம் மந்து தெருவைத்தாண்டி ஊர்ப்பள்ளி கனவுகளுடன் வந்தோம் . எம் ஊர்த்தெருவெல்லாம் இந்தியன் ஆமிகளை நிறைத்து வைத்திருந்தீர்கள். அரிவரி பள்ளிக்கு போகமுன்னம் எம் ஊரெல்லாம் உங்களால் அநியாயமாய் செத்தவர்களுக்காய் அழுதோம் சீக்கியனும், குறுக்காசும் கண்டபடி சுட்டுக்கொண்டெ போகும் போதெல்லாம் அட்டாங்கமாய் விழுந்துதானே படுத்தோம். எங்கள் தென்னை மரங்களின் சாய்நது நிற்கிற உங்களை எண்ணிக்கொண்டே மருந்துக்…

  18. மேற்கு அவுஸ்ரேலியாவில் உள்ள பேர்த் தடுப்பு முகாமில் இருந்து, இளம் இலங்கைக் குடும்பம் ஒன்றை நௌருவில் உள்ள தடுப்பு முகாமுக்கு கொண்டு செல்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. எட்டு மாதங்களுக்கு முன்னர் அவுஸ்ரேலியாவில் புகலிடம் தேடிய இலங்கையைச் சேர்ந்த இளம் தம்பதிகள், பின்னர், நௌரு தடுப்பு முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு குழந்தை பிறக்கவிருந்த நிலையில், மீண்டும் பேர்த்தில் உள்ள தடுப்பு முகாமுக்கு கொண்டு வரப்பட்டனர். தற்போது அவர்களுக்கு குழந்தை பிறந்து ஆறு மாதங்களான நிலையில், மீண்டும் இன்று நௌரு தடுப்பு முகாமுக்கு அனுப்பி வைக்கப்படுவதற்காக, டார்வினில் உள்ள தடுப்பு நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். பேர்த் தடுப்பு முகாமில்…

  19. எம்மை அழிக்கப் பலவித சதிவேலைகள் திரை மறைவில் நடக்கின்றன என்பதை அறியாத நிலையில் எம்மக்கள் வாழ்வதைப் பார்க்கப் பரிதாபமாக இருக்கின்றது. நீரிலே எண்ணெய். நிலத்திலே நச்சு, பாரிலே பாவையர் பரிதவிப்பு, போதைப் பொருட் பாவனையில் ஏற்றம் - இவையெல்லாம் தற்செயலாக நடக்கின்றன என்பதை என்னால் ஏற்க முடியாது இருக்கிறது. இவ்வாறு வடக்கு மாகாணசபையின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கவலை வெளியிட்டுள்ளார். சிறு நீரக நோயாளர்களிற்கான இரத்த சுத்திகரிப்பு சிகிற்சை நிலையத்திறப்பு விழா வவுனியா பொது வைத்தியசாலையில் இன்று முற்பகல் 10 மணிக்கு இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், வடமாகாண சுகா…

  20. சீருடை அணிந்தாலும் நாமும் மனிதர்கள் தான் உங்கள் பிரச்சினைகளை எங்களால் நன்றாக புரிந்து கொள்ள முடியும். எனது பதவிக்காலத்தில் முடிந்தவரை தங்களுடைய பிரச்சினைகளைத் தீர்ப்பேன் என யாழ்.மாவட்டத்தின் புதிய கட்டளைத் தளபதி கண்ணகி நலன்புரி மக்களிடம் தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதியாக புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட ஜெகத் அல்விஸ் நேற்று கண்ணகி நலன்புரி நிலையத்திற்குச் சென்று அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தார். அதன்போது மக்களுடன் கலந்துரையாடிய கட்டளைத்தளபதி மேற்கண்டவாறு அவர்களுக்கு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், நலன்புரி நிலையங்களில் வாழும் மக்களுடைய நிலைமைகளை நான் நன்கு அறிவேன். முன்னாள் கட்டளைத் தளபதி உங்களுக்கு எவ்வாறான செய…

  21. இராணுவ தேவைக்காக சுவீகரிக்கப்பட்ட காணிகளை மீள ஒப்படைக்குமாறு கோரி, வவுனியா செட்டிகுளம் ஆண்டியாபுளியங்குளம் மக்கள் தொடங்கிய போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் இடம்பெற்றது. வவுனியா பிரதேச செயலாளரால், விளையாட்டு மைதானம், ஆரம்ப சுகாதார மையம், ஆரம்ப பாடசாலை என்பவற்றுக்காக ஒதுக்கப்பட்ட காணிகளை மக்கள் நேற்று முன்தினம் துப்பரவு செய்ய முற்பட்ட போது, குறித்த நிலம் தமக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் துப்பரவு செய்யும் பணியை நிறுத்துமாறும் அப்பகுதி மக்களுக்கு இராணுவத்தினர் பணித்தனர். இதனையடுத்து நேற்றைய தினம் இராணுவத்தினர் ஒதுக்கப்பட்ட காணியை சுற்றி வேலி அமைக்க முற்பட்ட வேளை, அப் பிரதேச மக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதனையடுத்து இராணுவ அதி…

  22. குளோபல் தமிழ் செய்தியாளர்:- வன்னிப் பகுதியில் இராணுவத்தினர் தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக தேர்ல் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக குளோபல் தமிழ் செய்திகளுக்குத் தெரிய வருகின்றது. பிரதான வீதிகள், நகரங்களில் ஜனாதிபதி மகிந்தவின் தேர்தல் பிரசார பதாகைகளை பொருத்தும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். ஏ-9 வீதியின் அருகில் உள்ள மரங்களில் மகிந்தவுக்கு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே கிளிநொச்சி, யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடபகுதியின் பல இடங்களில் மகிந்தவின் பாரிய பதாகைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு திறப்பு விழாக்களின்போதும் நிரந்தர பதாகைகளாக அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் ஆணையாளரின் உத்திரவிற்கிணங்க இவற்றை அகற்ற வேண்டியபோதிலும் அவை அகற்றப்படாமல…

  23. குளோபல்தமிழ்ச்செய்தியாளர்கொழும்பு விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் இறுதி தருணங்களில் கடற்படைத்தளபதி வசந்தகரனாகொடவிற்கும் தனக்கும் கருத்து வேறுபாடு நிலவியதாக முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். கடற்படைத்தளபதி விடுத்தவேண்டுகொள் ஒன்று தரைப்படையின் முன்னேற்றத்தை பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் தான் ஏற்றுக்கொள்ள மறுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஒரு தடவை வடக்கில் விடுதலைப்புலிகளுடன் நேரடி மோதல் நடைபெற்றுக்கொண்டிருந்த பகுதிக்கு அருகில் தனது கடற்படை படகுகளை நிறுத்த கடற்படை தளபதி அனுமதியை கோரியதாகவும், இராணுவம் கடற்படை படகுகள் மீது தவறுதலாக தாக்குதலை மேற்கொள்ளலாம் என்பதால் தான் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். …

  24. (க.கிஷாந்தன்) மனித அபிவிருத்தி, மனித உரிமைக்கான ஆணைக்குழுவின் செயலகத்தினால் இன்று காலை 10 மணியளவில் ஹட்டன் பஸ் தரிப்பிடத்தில் வீதி நாடகம் ஒன்றையும் அதன் பின் பஸ் தரிப்பிடத்திலிருந்து ஹட்டன் கத்தோலிக்க ஆலயம் வரை பேரணியும் நடைபெற்றது. இதில் மலையக பெருந்தோட்ட மக்களும், நகரவாசிகளும் கலந்து கொண்டனர். இவ் பேரணியில் வெளிநாட்டுக்கு பணிப்பெண்ணாக வேலைக்கு செல்லும் தாய்மார்களினால் பாதிக்கப்படும் சிறுவர்களின் எதிர்காலம், பிள்ளைகளின் கல்வி நிலை, குடும்ப நிலை, எதிர்கால சமுதாயத்தின் நிலை என்பன ஏற்பாடு குழுவினால் விழிப்புணர்வு உரையும், அதற்கான பதாதைகளும் காட்சி படுத்தப்பட்டதுடன் “இனி யாரும் வெளிநாடு போக வேண்டாம்” என்ற கருத்தை கொண்ட துண்டுபிரசுரமும் விநியோகிக்கப்பட்டது. இதில் …

  25. வவுனியா – செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட ஆண்டிபுளியங்குளம் பகுதியில் பொது மக்களுக்காக வழங்கப்பட்ட காணி பகுதியை இராணுவம் இரவோடு இரவாக சுவீகரித்துள்ளது. இந்த பகுதியில் விளையாட்டு மைதானம், ஆரம்ப பாடசாலை மற்றும் சுகாதார நிலையம் ஒன்றை அமைப்பதற்காக பிரதேச சபையினால் இந்த காணி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த வேலைத்திட்டங்கள் நேற்று ஆரம்பிக்கப்பட்ட வேளையில், அந்த காணி தங்களுடையது என்று தெரிவித்து இராணுவம் குழப்பம் விளைவித்தனர். இதனை அடுத்து பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று இரவு மீண்டும் அந்த பிரதேசத்துக்கு வந்த இராணுவத்தினர் குறித்த காணி பரப்பை சுற்றி முள்வேலி அமைத்து சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து மீண…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.