ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143551 topics in this forum
-
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் மைத்திரிபால சிறிசேன பொது வேட்பாளராக களமிறங்கப் போவதாக அறிவித்ததை அடுத்து அவருக்கு சார்பான பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சி மாறுவதைத் தடுக்க அரச தரப்பினர் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருவதாக தெரிய வருகிறது. காணி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் சிரேஷ்ட அமைச்சர் பியசேன கமகே ஆகியோர் அரசிலிருந்து வெளியேறி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்கப்போவதாக செய்திகள் வெளியானதை அடுத்து அரச தரப்பினர் அவர்களுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதேவேளை வரவு செலவுத் திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு நாளை திங்கட்கிழமை நடைபெறவுள்ளது. அதன் பின்னர் மேலும் பலர் எதிர்தரப்பில் இணையலாம் என்றும் எதிரணியினர் தெரிவிக்கின்றனர…
-
- 2 replies
- 377 views
-
-
அரசாங்கம் மாற்றுக் கொள்கையாளர்களை பழிவாங்க முயற்சிக்கின்றது. சிலவேளைகளில் நான் சிறையில் தூங்கிய அதே மேசையில் முன்னாள் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவும் தூங்கக் கூடும் என் முன்னாள் இராணுவத்தளபதியும் ஜனநாயக கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்தாவது, மைத்திரிபால சிறிசேனவின் பாதுகாப்பு முற்று முழுதாக அரசினால் அகற்றப்பட்டுள்ளது. மைத்திரி மீது அரசுக்கு தற்போது குரோத உணர்வே உள்ளது. எவ்வாறான வழக்கை தொடுத்து உள்ளே அனுப்ப முடியும் என மகிந்த அரசு யோசித்துக் கொண்டிருக்கின்றது. வெலிக்கடை சிறையில் நான் தூங்கிய அதே மேசையில் மைத்திரியும் தூங்க நேரிடலாம். எனவே இப்போதிருந்து உடற்பயிற்சி செய்து உடம்பை தெம்படைய வைத்திருப்பது மை…
-
- 0 replies
- 269 views
-
-
-எஸ்.சசிக்குமார் திருகோணமலை மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக, பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. பட்டணமும் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவில் சுமேதகம, கிருஷ்ண புரம் பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கி உள்ளன. பல வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளநிலையில், பிரதேச செயலக அதிகாரிகள் ஸ்தலத்துக்கு சென்று நிலமைகளை அவதானித்து வருகின்றனர். நீர் மட்டம் உயரும் பட்சத்தில் வீடுகளில் உள்ளோர் அங்கிருந்து இடமாற்றம் செய்யப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-15-52/134316-2014-11-22-06-31-32.html
-
- 1 reply
- 484 views
-
-
எதிர்க்கட்சிகளின் கூட்டணி தனது பொது வேட்பாளரை அறிவித்துவிட்டது. முதல்வன் படத்தில் வரும் ஒரு நாள் முதல்வரைப்போல மைத்திரிபால சிறிசேனாவும் 100 நாள் ஜனாதிபதியாக இருப்பாராம். அதாவது, அவர் 100 நாட்களிற்குரிய ஒரு டம்மிதான். பொதுவேட்பாளராக தெரிவு செய்யப்படக் கூடும் என்று ஊகிக்கப்பட்ட திருமதி சந்திரிகா, கரு ஜெயசூரிய, ரணில் போன்றவர்களோடு ஒப்பிடுகையில் அவர்கள் அளவிற்கு மைத்திரிபால சிறிசேனா நட்சத்திர அந்தஸ்து உடையவர் அல்ல.கட்சியின் மூத்த உறுப்பினர்களில் ஓருவராகவும் கட்சியின் பொதுச்செயலாளராகவும் இருப்பதால் கட்சியை குடைந்து அதிக தொகை அதிருப்தியாளர்களை வெளியில் கொண்டு வரக்கூடியவர் என்ற ஓர் எதிர்பார்ப்பில் அவரைத் தெரிவு செய்திருக்கிறார்கள். ரணில் விக்கிரமசிங்க ஏற்கனவே, தோற்றவர் என்பத…
-
- 0 replies
- 341 views
-
-
வடமாகாணத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விதவைகள் இருப்பதுடன், அவர்களில் 50 சதவீதமானவர்கள் இளம் விதவைகள் என வடமாகாண சபை உறுப்பினர் கந்தையா சர்வேஸ்வரன், ஞாயிற்றுக்கிழமை (23) தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், இவ்வாறான பெண் தலைமைத்துவ குடும்பங்கள், பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ளனர். அவர்களின் பொருளாதாரத்தை முன்னேற்றுவது முக்கியமாகும். பெண்கள் பொருளாதார தன்னிறைவு அடைவது என்பது, பால்நிலை சமத்துவத்தை கட்டியெழுப்புவதற்கான முக்கிய படியாகும். குறிப்பாக கிராமிய பெண்கள் விடயத்தில் இது மேலும் முக்கியத்துவம் பெறுகின்றது. யுத்தத்தால் அங்கவீனமுற்ற கணவன்மாரை கொண்ட குடும்பங்களும் பல்லாயிரக்கணக்கில் உள்ளனர். இவர்களின் பொருளாதார பலவீனங்களால் அவர்கள் பல்வேறு…
-
- 0 replies
- 233 views
-
-
சத்தமில்லாமல் வந்து சல்மான் வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட ஜூனியர் ராஜபக்சே Posted by: Siva Published: Sunday, November 23, 2014, 10:39 [iST] மும்பை: இலங்கை அதிபர் ராஜபக்சேவின் மகன் நமல் மும்பை வந்து நடிகர் சல்மான் கான் தங்கை அர்பிதாவின் திருமண வரவேற்பில் கலந்து கொண்டுள்ளார். பாலிவுட் நடிகர் சல்மான் கானின் தங்கை அர்பிதாவுக்கும், டெல்லியைச் சேர்ந்த தொழில் அதிபர் ஆயுஷ் சர்மாவுக்கும் கடந்த 18ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள பாலக்நுமா பேலஸில் பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது. சல்மான் தனது தங்கைக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார், மும்பையில் தன் வீட்டுக்கு அருகில் ரூ.16 கோடி மதிப்புள்ள ஃபிளாட் ஆகியவற்றை திருமண பரிசாக அளித்தார். இந்நிலையில் மும்பையில் வெள்ளிக்கிழமை இரவு திருமண வரவேற்பு நடைபெற…
-
- 0 replies
- 504 views
-
-
ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பு - கத்தோலிக்கத் திருச்சபை ஏமாற்றம்! [sunday 2014-11-23 09:00] பாப்பரசர் முதலாவது பிரான்ஸிஸ் இலங்கைக்கு வருகை தரும் தினத்துக்கு நெருக்கமான நாளில், ஜனாதிபதி தேர்தல் தினம் குறிக்கப்படும் என்று தாம் எதிர்பார்க்கவில்லை என இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் பதுளை பேராயர் வணக்கத்துக்குரிய வின்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். ஏற்கனவே பாப்பரசர் வருகையின் 10 நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவியது.குறித்த 10 நாட்களுக்குள் நாட்டில் இயல்பு ஏற்படும் என்ற அடிப்படையிலேயே இந்த திகதி நிர்ணயிக்கப்பட்டது. பாப்பரசர் முதலாவது பிரான்ஸிஸ் இலங்கைக்கு வருகை தரும் தினத்துக்கு நெருக்கமான நாளில், ஜனாதிபதி தேர்தல் தினம் குறிக்கப்படும…
-
- 1 reply
- 680 views
-
-
தாய் நாட்டின் தீர்ப்பு மகிந்தவாம்; யாழில் சுவரொட்டி news யாழ். நகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தாய் நாட்டின் தீர்ப்பு மகிந்த என்று எழுதப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. ஜனாதிபதி தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்ற நிலையில் மூன்றாவது தடவையாகவும் மகிந்த ராஜபக்சவே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியும் என உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது. அதனையடுத்து திடீர் மாற்றங்களுடன் மகிந்த அரசுக்கு பேரிடி விழும் வகையில் எதிர்க்கட்சி தனது பொது வேட்பாளர் பெயரை அறிவித்துள்ளது. அத்துடன் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாரும் எதிர்க்கட்சிக்குள் இறங்கியியுள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலானது பெரும் சவாலாகவே அமையும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலைய…
-
- 0 replies
- 547 views
-
-
வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்படுமா? – பரபரப்புடன் எதிர்பார்க்கப்படும் நாளைய நாடாளுமன்ற அமர்வு [sunday 2014-11-23 09:00] நாடாளுமன்றில் நாளை 2015 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளதால் இலங்கை அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான மைத்ரிபால சிறிசேன அரசாங்கத்திலிருந்து விலகி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை எதிர்த்து எதிர்வரும் ஜனவரி எட்டாம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்த நிலையிலேயே இந்த வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளதாலேயே இது குறித்து அனைவரினதும் கவனமும் திரும்பியுள்ளது. நாடாளுமன்றில் நாளை 2015 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் ம…
-
- 0 replies
- 317 views
-
-
ஜனவரி மாதம் நடைபெறப் போகும் இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கு முன் கோக்தபாஜா ராஜபக்சாவால் அரங்கேற்றப் போகின்ற அரசியல் கொலைப் பட்டியல் தயார் நிலையில் இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. வரும் தேர்தலில் மகிந்த ராஜபக்சா தோல்வியடைந்தால், அந்தப் பரம்பரையின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாக அமையும். அப்படி ஒரு நிலைமையை வரவிடாமல் தடுப்பதற்காக கோத்தபாஜா எதையும் செய்ய துணிந்துவிட்டார். இந்த ராஜபக்சா குடும்பம் அரசியல் கொலைகளை செய்து அதனை விடுதலைப் புலிகள் அமைப்பின் மேல் வீண்பழிகள் போடும் திட்டத்தை வகுத்துள்ளார்கள். மேற்குலக நாடுகளினதும் மற்றும் மனிதவுரிமை அமைப்புக்களின் உதவிகளும் இருந்தால் மட்டும் தான் கோத்தபாஜாவின் திட்டத்தை முறியடிக்கலாம். http://www.jvpnews.com/srilanka/87590.…
-
- 2 replies
- 905 views
-
-
கோப்புப் படம் போதைப்பொருள் கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், தமிழக மீனவர்கள் 5 பேருக்கு மரண தண்டனை விதித்து கொழும்பு உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நவம்பர் 2011ல் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற தங்கச்சிமடம் மீனவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். போதைப்பொருள் கடத்தியதாக பிரசாத், அகஸ்டஸ், வில்சன், எமர்சன், லாங்லட் என்ற 5 பேரும் வெளிக்கடை சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு கொழும்பு உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இன்று தமிழக மீனவர்கள் 5 பேருக்கும் மரண தண்டனை விதித்து கொழும்பு உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதேபோல் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக இலங்கையைச் சேர்ந்த மூன்று பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இவர்கள் 8 ப…
-
- 48 replies
- 3.2k views
-
-
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மீட்கும் போரில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா- முரண்பாட்டிலும் ஓர் உடன்பாடு என்ற அடிப்படையில் செயற்படும் பொது எதிரணியின் அரசியல் நகா்வுகள் தென்பகுதியில் புதிய அரசியல் கலச்சாரத்தை உருவாக்கலாம். ஆனால் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்ந்தும் இருட்டறைக்குள் இருக்கும் ஆபத்து. பொது வேட்பாளர் வெற்றிபெற்றால் ஆறுமுகன், டக்ளஸ், ஹக்கீம், கருணா, றிஷாட் பதியுதீன் ஆகியோரை அழைத்து அமைச்சுப் பதவி கொடுத்து மீண்டும் அந்த அசிங்கமான அரசியலை தொடருவாரா? ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மீட்கும் போரில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா -அ.நிக்ஸன்- ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளர் யார் என்பதும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச போட்டியிட்டு மூன்றாவது முறையாகவும் …
-
- 0 replies
- 524 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக ராஜா பரமேஸ்வரி:- இலங்கை வரலாற்றிலேயே நிறைவேற்று அதிகாரத்தின் உச்சத்தில் நிறு சதிராடிய மெத முலன மகிந்த ராஜபக்ஸ கடந்த 9 வருட ஆட்சியில் சந்திக்காத பாரிய சவாலை முதன் முறையாக சந்திக்கிறார். வரலாற்றில் சர்வாதிகாரிகள் தமது வீழ்ச்சியின் இறுதிக் கணம் வரை தாம் வெற்றியின் உச்சத்தில் இருப்பதாகவே எண்ணிக் கொள்வார்கள்... தமது தோல்விகளில் இருந்து மீண்டெழுவோம் - அல்லது தப்பித்துக் கொள்வோம் என்ற மிகையான நம்பிக்கையில் இறுதி வரை தமது கோரத்தனங்களை அரங்கேற்றிக் கொண்டே இருப்பார்கள்... தமக்கெதிரான நெருக்குதல்கள் அதிகரிக்க அதிகரிக்க மக்களுக்கு எதிராக துப்பாக்கிகளை நீட்டவும் தயங்கமாட்டார்கள்... இந்தக் கட்டத்தை கிட்த்தட்ட நெருங்கிவிட்டார் மகிந்த ராஜபக…
-
- 0 replies
- 547 views
-
-
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களினால் நிலை குலைந்துள்ள இலங்கை அரசாங்கம் பல வகையான போலி பிரசாரங்களில் ஈடுபடுகிறது. அண்மையில் மன்னார் ஆயர் மூவின மக்களையும் சமமாக கருதும் ஒருவரையே ஜனாதிபதியாக ஆதரிக்க முடியும் என்று தெரிவித்திருந்தார். இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவே மூவின மக்களையும் சமமாக கருதுகிறார் என்றும் அவரை ஆதரிக்குமாறே மன்னார் ஆயர் கூறினார் என்றும் இலங்கை அரச பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை ஆட்டம் காணத் தொடங்கியுள்ள இலங்கை அரசாங்கம் வடக்கு கிழக்கில் தோல்வியடைந்த சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்களை வைத்து "மக்களின் பக்கம் மகிந்த என்றும் செய்தியை வெளியிட்டுள்ளது. http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/article…
-
- 0 replies
- 340 views
-
-
சித்திரைப் புத்தாண்டுக்கு பின்னர் புதிய அரசாங்கம் உருவாகும் – ரணில் விக்ரமசிங்க பாரிய மாற்றம் நேற்று (21.11.14) ஏற்பட்டது, 20 என்றார்கள் 21இல் ஆரம்பிக்கப்பட்டது. இன்னும் 35 நாட்கள் உள்ளன. 30 நாட்களும் சரியாக வேலை செய்தால் வெற்றிபெற முடியும். எங்களுடைய மோதல் சிறீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இல்லை. நாங்கள் ஒன்றிணைந்து வேலை செய்யவுள்ளோம். மைத்ரிபால சிறிசேன சிறீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து வந்துள்ளார். அவருக்கு நன்றிகளை தெரிவிக்க வேண்டும். தற்போது சிறீலங்காவும் இல்லை, யூ.என்.பியும் இல்லை. இதன் காரணமாக நான் புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்க உள்ளேன். 500 கோடி ரூபாவை செலவிட்டு எனக்கெதிராக சுவரொட்டிகளை அச்சிட்டமைக்காக நான் கவலை அடைகிறேன். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக…
-
- 4 replies
- 560 views
-
-
No Fire Zone: The Killing Fields of Sri Lanka was one of 5 documentaries to win Britdoc Impact award on Friday. As a consequence of winning this award, No Fire Zone has been nominated for “Netflix High 5” award which would be worth $5000 for the campaign. You have to be on twitter to vote. Go to: http://www.britdocimpactaward.org/films/nofirezone and hit the Netflix Hi 5 button (half way down on the right hand side). You can also send a tweet containing these words: #NetflixHi5 to @nofirezonemovie http://britdocimpactaward.org/ via @C4BRITDOC Please add a few words about why No Fire Zone should win. https://m.facebook.com/tamilrefugeecounciloz/ph…
-
- 0 replies
- 338 views
-
-
கடந்த 1999ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது கடுமையான மோசடிகளில் ஈடுபட்டதாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க ஊடகங்களில் தெரிவித்துள்ளார். 1999ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் நியாயமான முறையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க வெற்றியீட்டவில்லை என அவர் தெரிவித்துள்ளார். கடுமையான மோசடிகளில் ஈடுபட்டே சந்திரிக்காவை தாம் வெற்றிபெறச் செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார். போலியான வாக்குகளைப் போட்டதாகவும், ஜே.வி.பி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்களை தாக்கி விரட்டியதாகத் தெரிவித்துள்ளார். மேலும் வாக்குச் சாவடிகளில் இருந்த அதிகாரிகளை அச்சுறுத்தி விரட்டியடித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இறந்தவர்கள், வீடுகளில் இல்லாதவர்கள், வெளிநாடு ச…
-
- 1 reply
- 496 views
-
-
மிக ரகசியமாக பேணப் பட்ட அரசியல் வியூகத்தின் படி சுதந்திர கட்சியின் மைத்திரிபால பொது வேட்பாளராகிறார். இதற்கு ஐதேக ஆதரவு அளிக்கிறது. 100 நாட்களுக்குள் ஜனாதிபதி ஆட்சி முறை நீக்குவேன் என்பதே எனது தேர்தல் சுலோகம் என அவர் அறிவித்துள்ளார். இலங்கை வரலாறில் இரு வேட்பாளரும் சுதந்திரக் கட்சியிணையச் சேர்ந்தவர்களாக இருப்பதால், சுதந்திரக் கட்சி ஆதரவாளர்கள் பிரியப் போகின்றனர். இது ஒரு உற்சாக நிலையினை எதிர்கட்சிகளிடையே உண்டாக்கி உள்ளது.
-
- 8 replies
- 1.3k views
-
-
புலம்பும் அமைச்சர்கள் - ஒரே பார்வையில்:- முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கட்சிதாவலை ஊக்குவிப்பதாக குற்றம்சாட்டியுள்ள அரசாங்கம் நாட்டை ஸ்திரத்தன்மை இழக்க செய்வதற்கான பாரிய நாடகமொன்றின் ஒரு பகுதியாகவே இது இடம்பெறுவதாகவும் குறிப்பிட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ள அமைச்சர் சுசில்பிரேமஜயந்த சந்திரிகா குமாரதுங்கவின் நாடகத்தில் மைத்திரிபால சிறிசேன முக்கிய கதாபாத்திரத்தை வகிப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். இதேவேளை இந்த முழு நாடகமும் மேற்குலக சதி என குறிப்பிட்டுள்ள அமைச்சர் டலஸ் அலகபெரும இலங்கையின் உள்விவகாரங்களில் இராஜதந்திரிகளை தலையிடவேண்டாம் என்றும் எச்சரித்துள்ளார். விடுதலைப்புலிகள் சார்பு புலம்பெயர் தமிழர் அமைப்புகளும் சில நாடுகளும் நாட்டை …
-
- 0 replies
- 723 views
-
-
ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவின் தோல்வி நிச்சயம் என்று ராவய இதழின் பிரதம ஆசிரியர் விக்டர் ஐவன்கூறியுள்ளார். நேற்றிரவு பீ.பீ.சி. சந்தேசய சிங்கள செய்திச் சேவைக்கு அளித்த நேர்காணலில் அவர், தொடர்ந்தும் குறிப்பிடுகையில், தற்போதைய நிலையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது மஹிந்த ராஜபக்ஷவின் தோல்வி நிச்சயிக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றது. எனினும் தில்லுமுல்லுகள் மூலம் நூலிழை வாக்குகள் வித்தியாசத்தில் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த வெற்றி பெற்றாலும் அந்த வெற்றி நிலைக்காது. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலின் போது எதிர்க்கட்சிகள் தான் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெறும். அதன் பின்னர் ஜனாதிபதியின் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுவிடும். தற்போதைய அரசியல் சூழலி…
-
- 23 replies
- 1.6k views
-
-
கோத்தாபயவின் ஆட்டம் ஆரம்பம்- எம்.ரீ.வி/எம்.பீ.சி ஊடக வலையமைப்பிற்கு சொந்தமான சிரச ரீ.வி, சக்தி ரீ.வி. மற்றும் எம்.ரீ.வி. ஸ்போர்ட்ஸ் ஆகிய அலைவரிசைகளை பியோ ரீ.வி மற்றும் டயலொக் ரீ.வி வலையமைப்புக்களின் ஊடாக பார்வையிடும் வசதியை அரசாங்கம் தடை செய்துள்ளது. இவற்றைப் பார்வையிடும் நேயர்கள், யூ.எச்.எவ். மற்றும் வி.எச்.எவ் அலைவரிசைகள் ஊடாக பார்வையிட முடியும் என அவ்வவலைவரிசை நிறுவனம் அறிவித்துள்ளது. பியோ ரீ.வி மற்றம் டயலொக் ரீ.வி ஆகிய இரண்டு வலையமைப்புக்களின் ஊடாகவும் தமது அலைவரிசைகளை பார்வையிட முடியாதுள்ளதாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தொடர்ச்சியாக நேயர்கள் தமக்கு முறைப்பாடுகளை தெரிவித்த வண்ணம் உள்ளதாக சிரச எம்ரீவி நிறுவனம் அறிவித்துள்ளது. இதேவேளை, இரவு 7.…
-
- 0 replies
- 347 views
-
-
முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் ஒரு தமிழினத் துரோகி என்று ஐக்கிய தேசிய கட்சியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற காணி, காணி அபிவிருத்தி அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். விஜயகலா எம்.பி. அங்கு மேலும் கூறுகையில்- எனது சொந்த ஊரான காரைநகரைச் சேர்ந்த 200 குடும்பங்களுக்கு சொந்த-மான காணி கடற்படை வசம் இருப்பதாலும் அந்தக் காணிகள் மீண்டும் கிடைக்கப்பெற முடியாது என்பதால் நட்ட ஈடுகள் பெற்றுக் கொடுக்கப்பட்டிருப்பதையிட்டு எனது சார்பிலும் எனது ஊரின் சார்பிலும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். எனினும் வடக்கில் இராணுவம…
-
- 1 reply
- 663 views
-
-
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரான மைத்திரிபால சிறிசேன அவர்கள் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நிலைமைகளை ஆராய்ந்தே முடிவெடுக்கும் என்று அந்த அமைப்பின் தலைவரான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். மைத்திரிபால சிறிசேன அவர்கள் பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டதையும், தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அவரது செவ்வியையும் தான் கேட்டதாகக் கூறிய சம்பந்தன் அவர்கள், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிப்பதாக அவர் கூறிய சில அம்சங்களை வரவேற்ற போதிலும் அவை குறித்தும், யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது குறித்தும் தமது கட்சியே ஆராய்ந்து முடிவெடுக்கும் என்றும் கூறினார். இந்த விடயங்கள் குறித்த சம…
-
- 13 replies
- 1.2k views
-
-
முன்னாள் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன பாரிய துரோகம் இழைத்து விட்டதாக, அரசதரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் நேற்று வரவு செலவுத்திட்ட விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நேற்று வரையில் அமைச்சராக பதவி வகித்த மைத்திரிபால சிறிசேன, குடும்ப அரசியல் பற்றி எவ்வாறு குற்றம் சுமத்த முடியும்? சிறிமாவோ பண்டாரநாயக்க நாட்டை சிறந்த முறையில் ஆட்சி செய்தார். எனினும் அவரது மகள் சந்திரிகா, மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து சூழ்ச்சி செய்கின்றார். மக்களுக்கு நலன்களை ஏற்படுத்திய மதத் தலைவர்கள் அரசியல் தலைவர்களுக்கு எதுவும் நடக்காது. மைத்திரிபாலவின் நடவடிக்கை பாரியளவிலான துரோகமாகும்.சர்வதேச சூழ்ச்சித் திட்டமொன்று ம…
-
- 17 replies
- 786 views
-
-
சிறிலங்காவில் ஆட்சியை கவிழ்க்க, மேற்குலக நாடுகள் மேற்கொள்ளும் சூழ்ச்சிக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க துணைபோவதாக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. அரசாங்கத்தின் அமைச்சர் டளஸ் அழகப்பெரும இதனைத் தெரிவித்துள்ளார். சிறிலங்காவில் ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்த வேண்டிய அவசியம் பல மேற்கத்தேய நாடுகளுக்க இருக்கிறது. இதன் பொருட்டு அந்த நாடுகள் மேற்கொண்ட சூழ்சிகளுக்கான கருவியாக சந்திரிகாவை பயன்படுத்தி வருகின்றன என்று அவர் குற்றம் சுமத்தியுள்ளார். http://www.pathivu.com/news/35553/57//d,article_full.aspx
-
- 0 replies
- 337 views
-