ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143554 topics in this forum
-
புலிகளுக்கு எதிரான தடையை உடனடியாக கொண்டு வர வேண்டும்: ஐ.தே. க ஐரோப்பிய ஒன்றியத்தில் மீண்டும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை உடனடியாக கொண்டு வர வேண்டுமென வலியுறுத்தி பாராளுமன்றத்தில் விசேட பிரேரனையொன்றை நிறைவேற்றி அதனை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அனுப்புவற்காக பாராளுமன்றத்தில் விசேட அமர்வொன்றை கூட்டுமாறு பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே. கட்சி சபாநாயகர் சமல் ராஜபக்ஷவிடம் கோரிக்கையை முன்வைத்தது. பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை ஒழுங்கு பிரச்சினையொன்றை எழுப்பிய ஐ.தே. கட்சியின் பிரதித் தலைவரும் அம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாஸவே விடுதலைப் புலிகள் மீதான தடையை வலியுறுத்தி பிரேரணையொன்றை எதிர்தரப்பும் ஆளுந்தரப்பும் இணைந்து ந…
-
- 0 replies
- 483 views
-
-
தமிழீழத்தைக் கைவிட்டால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவேன் என்று இலங்கை ஜனாதிபதி கூறியமை ஒரு கேலிக்குரிய விசயமாகும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். 1972 ஆம் ஆண்டின் அரசியல் சாசனம் நிறைவேற்றப்பட்ட பின்னர் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகள் ஒடுக்கப்பட்ட நிலையிலேயே, மிகவும் நியாயமாக தமிழீழம் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது என்று அவர் கூறியுள்ளார். ஆனால், அதன் பின்னரான படிப்படியான அரசியல் நிகழ்வுகள் காரணமாக ஒன்றுபட்ட இலங்கைக்குள், பிளவுபடாத நாட்டுக்குள் தமிழ் மக்களுக்கு ஒரு நியாயமான தீர்வைக் காணுவது என்ற நிலைமை எப்போதோ எட்டப்பட்டு விட்டது என்றும் அப்படியிருக்க ஜனாதிபதி இப்போது கூறும் விசயம் சிங்கள மக்களை ஏமாற்றி அவர்கள…
-
- 0 replies
- 324 views
-
-
இந்திய அமைதிப்படையால் 1987ஆம் ஆண்டு ஒக்ரோபர் 21 மற்றும் 22ஆம் திகதிகளில் கடமையிலிருக்கும் போது சுட்டுக்கொலை செய்யப்பட்ட வைத்தியசாலை பணியாளர்களின் 27ஆவது ஆண்டு நினைவுதினம் இன்று செவ்வாய்க்கிழமை (21) அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்.போதனா வைத்தியசாலை வளாகத்திற்குள் நுழைந்த இந்திய அமைதி காக்கும் படையினர் வைத்தியர்கள், தாதியர்கள், உத்தியோகஸ்தர்கள் மற்றும் நோயாளிகள் அடங்கலாக 68பேரை சுட்டுக்கொலை செய்திருந்தனர். இன்றை அனுஷ்டிப்பு நிகழ்வில் வைத்தியசாலை வைத்தியர்கள், தாதியர்கள், ஓய்வுபெற்ற வைத்தியசாலை பணியாளர்கள், உயிரிழந்தவர்களின் உறவினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-…
-
- 21 replies
- 1.2k views
-
-
-பொ.சோபிகா தமிழீழ விடுதலைப் புலிகளின் வைப்பகங்களில் இருந்து மீட்கப்பட்ட மக்களின் நகைகளை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 5 வருடங்களாக அடவு வைத்திருந்தாரா? அல்லது தனது மனைவிக்கு அணிய கொடுத்திருந்தாரா? என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கேள்வி எழுப்பினார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்ட கேள்வியை எழுப்பினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து எடுத்த ஏனைய நகைகள் எங்கே? ஐந்து வருடங்களாக இந்த நகைகளை வைத்திருந்து என்ன செய்தார்கள்?' என்றும் கேட்டார். 'வடக்கிலுள்ள மக்களுக்கு காணி அனுமதிப் பத்திரங்களை ஜனாதிபதி வழங்கியிருந்தார். அந்த காணி உறுதிகளை, மாகாண சபையின் அனுமதி பெற்ற…
-
- 2 replies
- 534 views
-
-
மகிந்தவின் வருகையோடு எரியும் கிளிநொச்சி நகர மின் விளக்குகள்- கிளிநொச்சி நகரத்தின் மின் விளக்குகள் ஏ-9 பாதை திறப்பு விழாவினை முன்னிட்டு மகிந்த ராஜபக்ச வந்தபோது பொருத்தபட்டு ஒளிரவிடப்பட்டன. எனினும் விழா முடிந்து சில மாதங்கள் ஒளிர்ந்த நகர மின் விளக்குகள் வட மாகாண சபைத் தேர்தல் முடிந்தவுடன் கடந்த ஒரு வருட காலமாக ஒளிராமல்; இருந்தன. இந் நிலையில் கடந்த சில நாட்களின் முன்னர் கிளிநொச்சிக்கு இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வருகை தந்தபோது குறித்த மின் விளக்குகள் எரியத் தொடங்கியுள்ளன. இந்த விளக்குகளுக்கு எண்ணை ஊற்றுவது யார் என்பது தொடர்பில் கிளிநொச்சியில் பெரும் இழுபறி நிலை ஏற்பட்டது. வடக்கு மாகாண சபைத் தேர்தல் பிரசாரத்திற்கு மகிந்த ராஜபக்ச வந்ததுடன் எரியத் தொடங்கிய விளக்குகள…
-
- 0 replies
- 410 views
-
-
நல்லூரில் உள்ள சங்கிலியன் அரண்மனைக்கு உரிமை கோரும் சிங்களவர்! [Wednesday 2014-10-22 07:00] நல்லூரில், அமைந்துள்ள சங்கிலியன் அரண்மணை தனது பரம்பரைச் சொத்து என்றும் அதனை மீட்டுத் தருமாறு கோரியும் தென்னிலங்கையைச் சேர்ந்த சிங்களவர் ஒருவர் யாழ். பொலிஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் முறைப்பாடு செய்துள்ளார். அரண்மனைக்குச் சொந்தமான பரம்பரையின் இப்போதுள்ள வாரிசு நான் தான். ஆனால் இதனை தொல்பொருள் திணைக்களம் உரிமை கொண்டாடி வருகிறது எனவும் அந்த முறைப்பாட்டில் அவர் தெரிவித்துள்ளார். உரிய விசாரணை மேற்கொண்டு எனது பரம்பரைச் சொத்தை மீட்டுத் தரவேண்டும் எனவும் தனது முறைப்பாட்டில் அவர் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாண தமிழ் இராச்சியத்தின் சான்றுகளாக இப்போது எஞ்சியிருப்பது நல்லூர் சங்கிலியன் …
-
- 6 replies
- 1.2k views
-
-
ஜனாதிபதி தேர்தல் தொடர்பாகவும், பாப்பரசர் பிரான்ஸிஸ்சின் இலங்கை வருகை தொடர்பாகவும், ஏற்பட்டுள்ள சந்தேகம் குறித்து இலங்கை கத்தோலிக்க திருச்சபை அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளது. இலங்கை அரசாங்கம் ஜனாதிபதி தேர்தல் திகதியை இன்னமும் அறிவிக்கவில்லை. எனினும் பாப்பரசர் இலங்கை வரவுள்ள ஜனவரியில் தேர்தல் நடைபெறவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில் தேர்தல் ஒன்று நடைபெறும் போது பாப்பரசர் நாடு ஒன்றுக்கு பயணம் செய்ய மாட்டார் என்பதை கத்தோலிக்கத் திருச்சபை சுட்டிக்காட்டியுள்ளது. இது இவ்வாறிருக்க தாம் எதனையும் இன்னும் தீர்மானிக்கவில்லை என்ற இலங்கை கத்தோலிக்க திருச்சபை பேச்சாளர் சிறில் காமினி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இதற்கிடையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் …
-
- 2 replies
- 337 views
-
-
நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் இலங்கை புகையிரத திணைக்களத்தால் யாழ்ப்பாணத்தில் புகையிரத நகரம் ஒன்று அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக யாழ். மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார். அதற்கமைய யாழ். புகையிரத நிலையப்பகுதியைச் சுற்றி 8.5 ஏக்கர் நிலப்பரப்பில் புகையிரத நகரம் அமைக்கப்படவுள்ளதுடன் அதற்கான நிர்மாணப்பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். யாழ். புகையிரத நிலையத்தின் வடக்கு பக்கத்தில் ஸ்ரான்லி வீதி, தெற்கில் யாழ் புகையிரத நிலைய வீதி, கிழக்கு பக்கம் இராசாவின் தோட்ட வீதி, மேற்கு பக்கம் வைத்தியலிங்கம் வீதியையும் இணைத்து இந்த புகையிரத நகரம் நிர்மாணிக்கப்படவுள்ளது. இந்த புகையிரத நகரத்தில், வணிக அபிவிருத்தி, உள்ளக…
-
- 0 replies
- 406 views
-
-
கடற்படை கடலோர ரோந்துக் கப்பல்கள் இரண்டையும் ஏனைய இராணுவ உபகரணங்களையும் இலங்கைக்கு வழங்குவதற்கு இந்தியா தீர்மானித்துள்ளதாக த ரைம்ஸ் ஒப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/130577-2014-10-21-10-51-52.html
-
- 1 reply
- 521 views
-
-
விடுதலைப்புலிகளை நினைக்க வைக்கும் சம்பவங்கள் யாழ்ப்பாணத்தில் அதிகரித்துச் செல்கின்றன. விடுதலைப் புலிகள், கடந்த காலத்தில் செய்தவைகள் நல்ல செயல்களா? தீமையான செயல்களா என பட்டிமன்றம் போட்டு வாதிட்டால் புலிகள் நல்லதே செய்தார்கள் என்ற பக்கத்தில் வாதிடுபவா்களுக்கு சிறந்த உதாரணமாக இருப்பது புலிகளால் முற்றாக அழித்தொழிக்கப்பட்ட ரவுடிகளின் சாம்ராஜ்யமே ஆகும். அத்துடன் புலிகளின் காலத்தில் பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் மற்றும் கொலை கொள்ளை போன்றவைகளும் மிகச் சொற்ப வீதத்திலேயே காணப்பட்டன. இது யாழ்ப்பாணம் மாத்திரமல்லாது புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த அனைத்து இடங்களிலும் இவ்வாறான நிலை இருந்தது. இதே வேளை புலிகள் இல்லாத காலப்பகுதியிலும் போர் நடைபெற்றுக் கொண்டிருந்ததால் யாழ்ப்பாணத்தில் அட…
-
- 10 replies
- 3.1k views
-
-
மட்டக்களப்பு சந்திவெளி பாலையடித்தோணா பிரதேசத்தில் நாக கன்னி ஆலயமொன்று இனந்தெரியாக நபர்களால் தீவைக்கப்பட்டுள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். சந்திவெளி பாலையடித்தோணா கடலூர் ஸ்ரீ நாககன்னி அம்மன் ஆலயம் நேற்று இரவு இனந்தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. தீ பற்றி எரிவதை அவதானித்த பிரதேச மக்கள் ஏறாவூரப் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். தீப்பற்றியதில் ஆலயம் முற்றாக எரிந்துள்ளதாகவும் பழமையும் தொன்மையுமான இவ் ஆலயம் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் இந்து மக்களுக்கு பெரும் கவலையளிப்பதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். குறித்த ஆலயம் தொடர்பாக பிரதேசத்தில் இரு குழுக்கிடையே மோதல் நிலை காணப்பட்டதாகும் அதன் காரணமாக ஆலயத்திற்கு தீ…
-
- 1 reply
- 632 views
-
-
தடையை நீக்கியதால் புலி வரும் - தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் நீக்கியமையால் புலிகள் அமைப்பு சர்வதேச ரீதியில் மீளவும் செயற்படுவதற்கான வாய்ப்பு ஏற்படலாம். ஆனால், அதனை உறுதியாக சொல்ல முடியாது என்று அமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச்செயலாளருமான சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையககத்தில் நேற்று திங்கட்கிழமை(20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, அவர் இதனை கூறினார். ஐரேப்பிய ஒன்றிய நீதிமன்றம், தமிழீழ விடுதலை புலிகள் மீதான தடையை நீக்கியுள்ளது. இலங்கையின் ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ 2005ஆம் ஆண்டு பதவியேற்றார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்று ஒருவருடம் கடந்து அதா…
-
- 6 replies
- 915 views
-
-
யாழ்ப்பாணம், நாகர்கோவில் கிழக்கு பகுதியைச் சேர்;ந்த இரண்டு பிள்ளைகளின் தாயொருவரை கடந்த 20ஆம் திகதியிலிருந்து காணவில்லை என அவரது கணவன் செவ்வாய்க்கிழமை (21) முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் புதன்கிழமை (22) தெரிவித்தனர். கலியுகமூர்த்தி சுகந்தி (வயது 36) என்பவரே இவ்வாறு காணாமற்போயுள்ளார். கடந்த 20ஆம் திகதி, வீட்டிலிருந்து புறப்பட்ட மனைவி பருத்தித்துறையிலுள்ள நண்பி வீட்டுக்குச் சென்று வருவதாக சென்றவர் இதுவரையில் வீடு திரும்பவில்லையென கணவன் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். http://www.pathivu.com/news/34770/57//d,article_full.aspx
-
- 0 replies
- 454 views
-
-
இராணுவபேச்சாளர் – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- வடபகுதிக்கு செல்வதற்காக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் கால வரையறையற்றவை என தெரிவித்துள்ள இராணுவபேச்சாளர் இது அவசரஅவசரமாக எடுக்கப்பட்ட முடிவல்ல, வட பகுதி; நிலவரம் குறித்த குறிப்பிட்ட காலத்திற்க்கொரு முறை ஆராய்வதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெறவேண்டுமென்ற நடைமுறை வடபகுதியின் தற்போதைய நிலையை கவனமாக ஆராய்ந்த பின்னரே எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சின் உத்தரவின்றி செல்லும் வெளிநாட்டவர்கள்(வெளிநாட்டு கடவுச்சீட்டையுடவர்கள்) ஒமந்தையில் திருப்பி அனுப்ப படுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தேசிய பாதுகாப்பிற்க்கு குந்தகம் விள…
-
- 0 replies
- 592 views
-
-
பல பில்லியன் அமெரிக்க டொலர் சொத்துக்களை ராஜபக்ஸக்கள் கைப்பற்றுவர் – மங்கள சமரவீர – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடை நீக்கத்தை மஹிந்த ராஜபக்ஸக்கள் பூரணமாக பயன்படுத்திக்கொள்வர் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். தடை நீக்கத்தின் பூரண நலன்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும் அவரது குடும்பத்தினரும், சுற்றத்தவர்களுமே நன்மை அடைவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலித் தலைவர்களின் ஊடாக முடக்கப்பட்ட புலிகளின் சொத்துக்களை மீளப்பெற்றுக்கொள்ள அரசாங்கம் முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடை நீக்கத்தின் ஊடாக அரசாங்கமே முழுமையான அளவில்…
-
- 0 replies
- 481 views
-
-
முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவை நாடு கடத்த வேண்டும் என்று பல பல சேனாவின் பொதுச்செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.கிருலப்பனையில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இது தொடர்பாக கருத்து வெளியிட்ட அவர், நாட்டில் எதிர்க்கட்சிகள் பலவீனமடைந்து இல்லாமல் போனதற்கு சரத் என் சில்வா வழங்கிய தீர்ப்பே காரணமாகும். கட்சித் தாவலை நியாயப்படுத்தி சரத் என் சில்வா தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பு வழங்கப்பட்டிருக்காவிட்டால் இன்று வலுவான ஓர் எதிர்க்கட்சி இருந்திருக்கும். இவ்வாறான ஓர் நபர் 19ம் திருத்தச் சட்டத்தை உருவாக்க எந்தனிப்பது நியாயமானது. அவ்வாறு புதிய அரசியல் அமைப்பு ஒன்றை உருவாக்கும் தார்மீக பொறுப்பும் சரத் என் சில்வாவிற்கு கிடையாது. தூய்மையா…
-
- 0 replies
- 365 views
-
-
வடகிழக்கு தமிழர் தாயகத்தில் நடைபெற்றதும், நடைபெற்றுக் கொண்டிருப்பதும் திட்டமிட்ட இன அழிப்பே என்று தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன். யாழ். ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதுகுறித்துக் கருத்து தெரிவித்த அவர், ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தினால் அமைக்கப்பட்டிருக்கும் சர்வதேச விசாரணைக் குழு போர்க்குற்றங்கள், மனிதாபிமானத்திற்கு மாறான குற்றங்கள் உள்ளிட்ட பல குற்றங்கள் தொடர்பில் ஆய்வு செய்கின்றது. அதனுள் இன அழிப்பு அல்லது இனப்படுகொலையும் உள்ளடங்கும். எனவே பல குற்றங்கள் தொடர்பில் ஆய்வு செய்யும் ஒரு விசாரணைக் குழுவிடம் ஒரு குற்றத்தை மட்டும் நாம் தூக்கிக் காண்பிக்க முடியுமா? அவ்வாறெனில் நாம் ம…
-
- 0 replies
- 384 views
-
-
வெளிநாடுகளில் தொழில் புரியும் இலங்கையர்களுக்கு இங்கு இடம்பெறும் தேர்தல்களில் வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்குவதற்கான சட்ட ஏற்பாடுகளை அரசு மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தும் பொது பல சேனா கொரியாவில் தொழில் புரியும் எமது இளைஞர்கள் உயிரை பணயம் வைத்தே தொழில் செய்கின்றனர். இத்தொழில்களுக்கு கொரியர்களே செல்வதில்லை என்றும் தெரிவித்தது. கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற பொதுபல சேனாவின் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. இங்கு உரையாற்றிய பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், மத்திய கிழக்கு, கொரியா மற்றும் இத்தாலி அவுஸ்திரேலியா என வெளிநாடுகளில் பெருந்தொகை இலங்கையர்கள் தொழில் புரிகின்றனர். இவர்களுக்கு இங்கு நடைபெறும் தேர்தல்களில் வாக…
-
- 0 replies
- 440 views
-
-
-வடமலை ராஜ்குமார் தென்னைமரவாடி கிராம மக்களின் காணி விவகாரம் தொடர்பில் கிழக்கு மாகாண எதிர்கட்சித் தலைவரும் தழிழ்த்தேசிய கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினருமான சி.தண்டதயுதபாணி கிழக்கு மாகாண சபையின் 21ஆம் திகதிய அமர்விலே தனிநபர் பிரேரணையொன்றை கொண்டுவரவுள்ளார். தென்னைமரவாடி கிராம மக்களின் பூர்வீக வயல் நிலங்களை அத்துமீறி ஆக்கிரமித்த பெரும்பான்மை இன விவசாயிகளுக்கும் அக்காணியை பங்கிட்டு வழங்க முயற்சி செய்துவரும் கிழக்;கு மாகாண காணி ஆணையாளரின் செயற்பாடு குறித்து கிழக்கு மாகாண எதிர் கட்சித் தலைவரும் தழிழத் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த பிரேரணை கொண்டுவரப்படவுள்ளது. இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, த…
-
- 0 replies
- 264 views
-
-
புலிகளின் சொத்துக்களை பெற்றுக்கொள்ளக் கூடிய சட்ட ரீதியான உரிமை குமரன் பத்மநாதனுக்கு உண்டு: 22 அக்டோபர் 2014 பல பில்லியன் அமெரிக்க டொலர் சொத்துக்களை ராஜபக்ஸக்கள் கைப்பற்றுவர் – மங்கள சமரவீர – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடை நீக்கத்தை மஹிந்த ராஜபக்ஸக்கள் பூரணமாக பயன்படுத்திக்கொள்வர் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். தடை நீக்கத்தின் பூரண நலன்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும் அவரது குடும்பத்தினரும், சுற்றத்தவர்களுமே நன்மை அடைவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலித் தலைவர்களின் ஊடாக முடக்கப்பட்ட புலிகளின் சொத்துக்களை மீளப்பெற்றுக்கொள்ள அரசாங்கம் முயற்சிப்…
-
- 1 reply
- 457 views
-
-
இலங்கை இராணுவத்திற்க்கு மேலும் பயிற்சிகளையும் ஆயுத தளபாடங்களையும் வழங்க இந்தியா இணக்கம்:- 22 அக்டோபர் 2014 இலங்கை இராணுவத்திற்க்கு மேலும் பயிற்சிகளையும் ஆயுத தளபாடங்களையும் வழங்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக டைம்ஸ் ஒவ் இந்தியா நாளிதழ் தெரிவித்துள்ளது. இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. இலங்கையுடனும் மாலைதீவுடனும் பாதுகாப்பு உறவுகளை இந்தியாமேலும் வலுப்படுத்தவுள்ளதாகவும் இரு நாட்டு இராணுவங்களுக்கும் பயிற்சியையும் ஆயுத தளபாடங்களையும் வழங்கி அவற்றின் திறனை மேலும் அதிகரிப்பதற்க்கு உதவப்போவதாகவும் இந்திய பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன/ இலங்கை பாதுகாப்பு செயலளர் கோத்தாபய ராஜபக்சவுடன் திங்கட்கிழமை இந்திய பாதுகாப்பு அமைச்சர் அருண்ஜெட்லி இருதரப்பு பதுகாப…
-
- 1 reply
- 454 views
-
-
நவிக்கு கடிதமெழுதிய கூட்டமைப்பினருக்கு நீதிமன்றம் அழைப்பாணை news ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் முன்னாள் ஆணையாளர் நவனீதம்பிள்ளைக்கு கடிதம் அனுப்பி வைத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர்களை, நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் அழைப்பாணை உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு,கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த 33 மாகாணசபை உறுப்பினர்கள் நவனீதம்பிள்ளைக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்திருந்தனர். வட மாகாணசபையைச் சேர்ந்து 28 உறுப்பினர்களும், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 5 உறுப்பினர்களும் இவ்வாறு கடிதம் அனுப்பியிருந்தனர். நாட்டின் நன்மதிப்பிற்கு களங்கம் ஏற்படும் வகையிலும்,…
-
- 0 replies
- 668 views
-
-
தளராத துணிவினால் தங்கம் வென்ற ரஜிதா சுழிபுரம் விக்ரோரியா கல்லூரியின் 138 ஆன்டு வரலாற்றில் விளையாட்டுப் போட்டியில் முதன் முறையாக தேசிய ரீதியில் தங்கப்பதக்கத்தினை வென்று சாதனை படைத்துள்ளது. செவிப்புலன் இழந்தும் தளராத துணிவோடு தன்னம்பிகையுடன் போராடி 2014 ஆம் ஆண்டுக்கான தேசிய மெய்வல்லுநர் போட்டியில் ஈட்டி எறிதலில் சுழிபுரம் விக்ரோரியா கல்லூரியின் மாணவி ரஜிதா பாலச்சந்திரன் தங்கப்பதக்கத்தினை வென்றுள்ளார். மூலாய் தெற்கு பகுதியை சேர்ந்த ரஜிதா பாலச்சந்திரன் யுத்தம் காரணமாக ஆரம்ப கல்வியை பல்வேறு பாடசாலைகளில் கற்ற நிலையில் தரம் ஆறு முதல் இங்கு கல்வி கற்றுள்ளார். இந்த காலகட்டத்தில் பல்வேறும் பட்ட விளையாட்டுக்களில் ஈடுபட்ட இவர் நான்கு தடவைகள் ஈட்டி எறிதல் போட்டியில் தே…
-
- 1 reply
- 382 views
-
-
இலங்கையிலும் ஒரு சோமாலியா இந்து சமுத்திரத்தின் முத்து என வர்ணிக்கப்படுகின்ற இலங்கையை ஆசியாவின் ஆச்சரியம் மிக்க தேசமாகக் கட்டியயழுப்புவதற்கு அரசு பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. விமானநிலையம் அமைத்தல், அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணிப்பு, மாடி வீட்டுத் திட்டம் என அந்தப் பட்டியலை நீடித்துக்கொண்டே செல்லலாம். திவிநெகும, மகநெகும என பல வேலைத்திட்டங்களை மஹிந்த சிந்தனையின் கீழ் அரசு முன்னெடுத்தாலும் அவை பின்தங்கிய பகுதிகளுக்கு உரிய வகையில் சென்றடையவில்லை என்பது கசப்பான உண்மையாகும். எனவே, அத்தகைய பிரதேசங்களில் நிலவும் பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டி அவற்றை அரசினதும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளினதும் கவனத்துக்குக் கொண்டுவந்து மக்கள் குறை தீர்க்கும் ந…
-
- 0 replies
- 423 views
-
-
தேவியனின் தாய் கனடா செல்லத் தடை தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை மீளக்கட்டியெழுப்புவதற்கு முயன்றதாக கூறப்படும் தேவியனின் தாயாரான சுந்தரலிங்கம் ரஞ்சித மலர், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று அதிகாலை 4.35 மணிக்கு கட்டார் விமான சேவையின் மூலம் கட்டார் ஊடாக கனடா செல்ல ரஞ்சிதமலர் முயற்சித்திருந்தார். ரஞ்சிதமலரின் பெயர் குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தின் கறுப்புப் பட்டியலில் இணைத்து கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பில் குடிவரவு குடியகழ்வுத் திணைக்கள அதிகாரிகள் புலனாய்வுப் பிரிவினருக்கு அறிவித்துள்ளனர். இதனை அடுத்து அரச புலனாய்வுப் பிரிவினர் ரஞ்சிதமலரை கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது http://onlineuth…
-
- 0 replies
- 334 views
-