ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143551 topics in this forum
-
வடமாகாண மீன்பிடி அமைச்சரினால் மீன் குஞ்சு வைப்பிலிடும் நிகழ்வு கட்டுக்கரைக்குளத்தில் நடைபெற்றது. நன்னீர் மீன்பிடியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் மன்னார் மாவட்டத்தில் உள்ள கட்டுக்கரைக் குளத்தில் நேற்று வியாழக்கிழமை மீன்குஞ்சுகள் வைப்பிலிடும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வானது வட மாகாண மீன்பிடி அமைச்சின் நிதி அனுசரணையில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதன்மூலம் கட்டுக்கரைக் குளத்தில் மீன்பிடியை வாழ்வாதாரமாகக் கொண்டு வாழும் ஏழு சங்கங்களைச் சார்ந்த 634 குடும்பங்கள் பயன் பெறுவர் என நம்பப் படுகிறது. இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர் பா.டெனிஸ்வரன்- வட மாகாணத்தில் உள்ள பல குளங்களில் மீன் குஞ்சுகள் விட வேண்டிய தேவை இருந்த போதிலும் தற்போதைய வரட்சி காரணமாக பல குளங்களி…
-
- 1 reply
- 570 views
-
-
கடும்போக்கு வாத சிங்கள அமைப்புகளின் முற்றுகையால் துன்ப துயரங்களில் முஸ்லிம் சமூகம் "சமூகங்களுக்கிடையில் சமாதான விரும்பிகளான முஸ்லிம் சமூகம், இன்று கடும் போக்குவாத சிங்கள, பௌத்த அமைப்புகளின் முற்றுகையால் துன்ப, துயரங்களை இந்த நாட்டில் அனுபவித்துக் கொண்டிருக்கிறது" - இவ்வாறு, இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் அரசறிவியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளரும், மலேசிய பல்கலைக்கழக கலாநிதி மாணவருமான எஸ்.எம்.பாஸில் சம்மாந்துறையில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரபின் 14 ஆவது வருட நினைவு தின நிகழ்வில் நினைவுப் பேருரையாற்றுகையில் கூறினார். மர்ஹும் அஷ்ரபின் பிறந்த மண்ணான சம்மாந்துறையில், வேர்கள், விழுதுகள் சமூக நல ஒன்றியம், சம்மாந்துறை அப்து…
-
- 0 replies
- 434 views
-
-
வவுனியாவில் ஆசிரியர் தாக்கி மாணவி வைத்தியசாலையில்! வவுனியா, வைரவப்புளியங்குளம் பகுதியில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் ஆசிரியர் ஒருவரால் தாக்கப்பட்ட மாணவி வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று வைத்தியசாலைப் பணிப்பாளர் கு.அகிலேந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது- வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் உள்ள சர்வதேச பாடசாலையில் தரம் 4 இல் கல்வி பயிலும் மாணவி ஒருவர், ஆசிரியரால் கூறப்பட்ட மரக்கன்று ஒன்றை கடந்த புதன்கிழமை பாடசாலைக்கு எடுத்துச் செல்லவில்லை. இதனால் கோபமடைந்த ஆசிரியர் குறித்த மாணவியை பயில் மட்டையால் கன்னம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தாக்கியுள்ளார். இதனால் கழுத்துப் பகுதியில் உபாதை ஏற்பட்ட நிலையில் குறித்த மாணவி வவுன…
-
- 0 replies
- 392 views
-
-
வேலணைப் பகுதியில் மின்மாற்றி நிறுவுவதற்காக வெட்டப்பட்ட குழியில் மனித மண்டையோடுகள் பல தென்பட்ட நிலையில் அந்தப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகிறது. இன்று வெள்ளிக்கிழமை காலை குறித்த பகுதியில் மின்மாற்றி நிறுவுவதற்காக கிடங்கு வெட்டப்பட்டது என்றும், இதன்போது அதிலிருந்து சில மனித மண்டையோடுகள் வெளிக் கிளம்பின என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த இடத்தை விட்டு வேறொரு இடத்தில் கிடங்கு வெட்டப்பட்டது. அதிலும் எச்சங்கள் தென்பட வேறொரு இடத்தில் மீண்டும் தோண்டியபோது அங்கும் மனித எலும்பு எச்சங்கள் வெளிவந்துள்ளன. அதனையடுத்து அந்தப் பணிகளை இடைநிறுத்திய அதிகாரிகள் ஊர்காவற்றுறைப் பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். பொலிஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணைகளை ஆரம்பித்ததுடன்,…
-
- 0 replies
- 357 views
-
-
பிரிவினையால் நாம் பட்ட வேதனை இப்போது புரிகிறதா? - டேவிட் கெமரூனை கிண்டலடிக்கிறார் அமைச்சர் டலஸ். [Thursday 2014-09-18 17:00] பிரிட்டனிலிருந்து ஸ்கொட்லாந்து பிரிவது வேதனையளிப்பதாக தெரிவித்துள்ள பிரதமர் கமெரூனுக்கு, நாம் எந்தளவுக்கு வேதனை அடைந்திருப்போம் என்பது இப்போது புரிந்திருக்கும் என அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். கொழும்பில் நடந்த ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய அவர், பிரிட்டனிலிருந்து ஸ்கொட்லாந்து பிரியக்கூடாதென்றும் ஐக்கியமான பிரிட்டனின் இவ்வாறான பிரிவை தாங்கிக்கொள்ள முடியாதென்றும் வேதனையளிப்பதாகவும் தெரிவித்துள்ளார் பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமெரூன். தனது அரசாங்கத்தில் அல்லது தன் மீது எதாவது பிழைகள் இருக்குமானால் பிரதமர் ப…
-
- 1 reply
- 499 views
-
-
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தை எக்சிம் வங்கியூடாக சீனாவிற்கு வழங்க இரகசிய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக ஐ.தே.க. பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க குற்றம் சுமத்தினார். மேலும் கொழும்பு துறைமுக நகரத்தை அமைத்து அரசாங்கம் அந்த நிலப்பகுதியினை சீன அரசிற்கே முழுமையாக வழங்கவுள்ளது. இதற்கமைய இலங்கை நாட்டின் வளங்களை வெளிநாடுகளுக்கு தாரை வார்ப்பதாகவும் அவர் சாடினார். ஐ.தே.க. தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், சீன அரசின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் முகாமைத்துவப் பணிகளுக்கு சீன நாட்டை சேர்ந்த பொறியிய…
-
- 0 replies
- 331 views
-
-
அடுத்த ஆண்டில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பில் சிந்திப்பதாக பிரதான எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன. அதேபோல் ஜனாதிபதி தேர்தலில் தமது நிலைப்பாடு என்னவென்பதை வெகு விரைவில் அறிவிப்போம் என தமிழ் தேசிய கூட்டமைப்பும் தெரிவித்துள்ளது. ஊவா மாகாண சபைத்தேர்தலின் பின்னர் வெகு விரைவில் ஜனாதிபதித் தேர்தலை நடத்தும் திட்டம் அரசாங்கத்திற்கு இருப்பதாக தகவல்கள் வெளிவருகின்ற நிலையில் எதிர்க்கட்சிகளின் நிலைப்பாட்டினை வினவியபோது பொது வேட்பாளரை களமிறக்கும் திட்டம் தொடர்பில் ஆராய்வதாக தெரிவித்தனர். இது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவிக்கையில், ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஐக்கிய தேசியக் …
-
- 0 replies
- 214 views
-
-
இலங்கையில் சதிப்புரட்சி இடம்பெறலாம் என அஞ்சிய முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்த்தன, இந்தியாவின் உதவியை நாடினார் என முன்னாள் இந்திய வெளிவிவகார அமைச்சர் நட்வர்சிங் தெரிவித்துள்ளார். சென்னையில் நிகழ்வொன்றில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் காணப்படும் குழப்பங்களைத் தவிர்த்திருக்க முடியுமா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் - ஆரம்பத்திலிருந்தே பல தவறுகள் இடம்பெற்றுள்ளன. புதுடில்லிக்கென ஒரு கொள்கை காணப்பட்ட அதேவேளை, முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி. இராமச்சந்திரன் வட இலங்கை தமிழ்நாட்டின் ஒரு பகுதி என்ற கொள்கையை பின்பற்றினார். இந்த நிலையில் ஆட்சிக் கவிழ்ப்பு இடம்பெறலாம் என்ற அச்சத்திலேயே இந்தியாவின் உதவியை அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்த்தன கோரி…
-
- 0 replies
- 289 views
-
-
வேலணைப் பகுதியில் மின்மாற்றி நிறுவுவதற்காக வெட்டப்பட்ட குழியில் மனித மண்டையோடுகள் சில மீட்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகிறது. இன்று வெள்ளிக்கிழமை காலை குறித்த பகுதியில் மின்மாற்றி நிறுவுவதற்காக கிடங்கு வெட்டப்பட்டது என்றும், இதன்போது அதிலிருந்து சில மனித மண்டையோடுகள் வெளிக் கிளம்பின என்றும் தெரிவிக்கப்பட்டது. எனினும் சம்பவம் குறித்து பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்படவில்லை என்றும், அவற்றை மறைத்து மீண்டும் தோண்டும் பணிகள் இடம்பெற்றன என்றும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். - http://malarum.com/article/tam/2014/09/19/5558/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%…
-
- 0 replies
- 507 views
-
-
-எம்.றொசாந்த் கடற்படை முகாம் அமைப்பதற்காக மாதகல் கோணாவளை (ஜே - 150) பகுதியிலுள்ள 4 ஏக்கர் காணிகளை பொலிஸ் பாதுகாப்புடன் அளவீடு செய்வதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலையொன்று உருவாகியது. மக்களின் கடும் எதிர்ப்பால் நிலஅளவையாளர்கள் அளவிடும் பணியை கைவிட்டு திரும்பிச் சென்றனர். மாதகல், கீரிமலை, சேந்தான்குளம் ஆகிய பகுதிகளில் பொதுமக்களுக்கு சொந்தமான காணியில் கடற்படை முகாம் அமைக்கும் நோக்கில் பொலிஸ் பாதுகாப்புடன் காணி அளவீடு செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளவிருப்பதாக பொதுமக்களுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், சுரேஸ் பிரேமச்சந்தின், வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்…
-
- 0 replies
- 383 views
-
-
பிய்ந்த செருப்புடன், சீன அதிபரை சந்தித்த இலங்கை அமைச்சர். கொழும்பு : இலங்கை அதிபர் ராஜபக்சே முன்னிலையில் சீன அதிபருடன் இலங்கை அரசு போட்டுக் கொண்ட ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட வந்த ஒரு இலங்கை அமைச்சர், அதுவும் அந்த நாட்டு கலாச்சார அமைச்சர், பிய்ந்து போன ஷூவுடன் வந்தது பெரும் களேபரத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் பிய்ந்த ஷூவுடன் மெல்ல மெல்ல நடந்து வந்ததையும், உட்கார்ந்ததையும் வெளிநாட்டு புகைப்படக்காரர்கள் போட்டோ எடுத்து பேஸ்புக்கில் போட்டு மானத்தை வாங்கியுள்ளனர். ஒப்பந்தத்தில் கையெழுத்து போட வந்த இடத்தில் அவரது ஷூவின் கீழ்ப்பகுதி பிய்ந்து போய் விட்டதாக தெரிகிறது. அந்த நேரத்தில் மாற்ற முடியாமல் போனதால் வேறு வழியில்லாமல் பிய்ந்து போன ஷூவுடனேயே அவர் சீன அதிபருடன் கை …
-
- 11 replies
- 1.8k views
-
-
-
ஹரின் மீதான அச்சமே எரிபொருட்களின் விலைகளை சடுதியாக குறைக்க வைத்துள்ளது :அசாத்சாலி ஹரின் பெர்னாண்டோ மீதான அச்சமே ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவை ஊவாவில் வீடு வீடாக சென்று மக்களை சந்திக்க வைத்துள்ளதோடு மின்சாரம் உட்பட எரிபொருட்களின் விலைகளை சடுதியாக குறைக்க வைத்துள்ளது என்று மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத்சாலி தெரிவித்தார். உலக சந்தையில் பெற்றோல் விலை குறைந்தும் எம் நாட்டில் குறையவில்லை. பெற்றோல் 100 ரூபாய்க்கு கொடுக்க வேண்டும் என்று ரவிகருணாநாயக்க வழக்கு தொடர்ந்து அதில் வெற்றி பெற்ற போது கூட நீதிமன்ற தீர்ப்பை மீறி தான் நிர்ணயித்த விலையில் பெற்றோலை விற்பனை செய்த ஜனாதிபதி இன்று சடுதியாக எரிபொருட்களின் விலைகளை குறைத்தமை ஊவா தேர…
-
- 0 replies
- 313 views
-
-
விபத்தில் சிக்கிய செந்தில் தொண்டமான் உட்பட்ட 25 பேர் காயம்! ஒருவர் பலி! ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆதரவாளர்களை ஏற்றிச் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானதுடன், முன்னாள் அமைச்சர் செந்தில் தொண்டமான் உட்பட 25 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பதுளை மாவட்டத்தில் போட்டியிடும் செந்தில் தொண்டமானின் ஆதரவாளர்களை ஏற்றிச் சென்ற வாகனமே பண்டாரவளையில் விபத்துக்குள்ளாகியுள்ளது. காயமடைந்தவர்கள் பண்டாரவளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்த அமைச்சா் செந்தில் தொண்டமான், கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. http://tamilleader.com/?p=41345
-
- 3 replies
- 717 views
-
-
பொதுபலசேனாவை பயன்படுத்தி இலங்கையில் முஸ்லீம்கள் மத்தியில் ஆழமாக காலூன்றும் ISI:- தென்னிந்தியாவில் செயற் படுவதற்கான ஆட்களை திரட்டுகிறது – தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்:- பொதுபலசேனாவை பயன்படுத்தி இலங்கையில் முஸ்லீம்கள் மத்தியில் ஆழமாக காலூன்றும் பாக்கிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. தென்னிந்தியாவில் செயற்படுவதற்கான ஆட்களை திரட்டுவதாக இந்தியாவின் இணையத்தளமொன்று தெரிவித்துள்ளது . அந்த இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளப்பட்டுள்ள விடயங்கள் குறித்த குளோபல் தமிழ் நியுசின் தமிழாக்கம். இலங்கையில் பொதுபலசேனனாவின் தோற்றம் என்பது மிக முக்கியமான விடயம், பௌத்தர்களின் ஆதிக்கத்தை நிலை நாட்டுவதற்காக 2012 இல் ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பின் முக்கிய நோக்கம் முஸ்லீம்களையும்…
-
- 0 replies
- 460 views
-
-
இலங்கை விவகாரத்தில் சர்வதேசம் பொறுப்புணர்ச்சியுடன் செயற்படவில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இலங்கை விவகாரத்தில் உரிய நேரத்தில் சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுத்திருந்தால் உயிர்ச் சேதங்களை வரையறுத்திருக்கலாம் என குறிப்பிட்டுள்ளது. இலங்கை உள்ளிட்ட சில நாடுகள் விவகாரங்களில் சர்வதேச சமூகத்தின் தீர்மானங்கள் திருப்தியளிக்கவில்லை என தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா இந்த கருத்தை வெளியிட்டுள்ளது. சில அனர்த்தங்களை தவிர்த்துக் கொள்ளச் சாத்தியங்கள் காணப்பட்ட போதிலும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என அமெரிக்கப் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். ருவாண்டா, டார்பூர், பொஸ்னியா, சிரியா மற்றும் இலங்கை விவாகரங்களில் சர்வதேச சமூகத்தின் நடவடிக்க…
-
- 1 reply
- 479 views
-
-
ஆசிய அரசியல் கட்சிகளின் மாநாடு கொழும்பில் இன்று ஆரம்பம்! [Friday 2014-09-19 07:00] ஆசிய அரசியல் கட்சிகளின் 8 வது சர்வதேச மாநாடு இன்று காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது. “ஆசிய நாடுகளுக்கிடையேயுள்ள சமூகத்தை கட்டியெழுப்புவோம்” என்ற தொனிப் பொருளில் இன்று ஆரம்பமாகவுள்ள 8 வது சர்வதேச மாநாட்டிற்காக ஆரம்ப வைபவம் மஹிந்த ராஜபக்ஷ தாமரைத் தடாக கலையரங்கில் இன்று காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது. ஆசிய நாடுகளைச் சேர்ந்த 33 நாடுகளிலுமுள்ள சுமார் 75 க்கும் அதிகமான கட்சிகளைச் சேர்ந்த சுமார் 300 பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளனர். இந்த மாநாட்டுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக…
-
- 0 replies
- 368 views
-
-
மீனவர் பிரச்சினை குறித்து இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை:- 19 செப்டம்பர் 2014 மீனவர் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் தொடர்பில் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. ஆசிய அரசியல் கட்சிகளின் சர்வதேச மாநாட்டில் பங்கேற்பதற்காக இலங்கை விஜயம்செய்துள்ள பாரதீய ஜனதா கட்சியின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவரான முரளீதர் ராவோ, இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸை சந்தித்துள்ளார். இலங்கைத் தமிழர் பிரச்சினை மற்றும் மீனவர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் குறித்து இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது. பல்வேறு மிக முக்கியமான விடயங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. புதிய அ…
-
- 0 replies
- 206 views
-
-
இலங்கையில் நடைபெறும் மாநாட்டில் பாரரதீய ஜனதா கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். ஆசிய அரசியல் கட்சிகளின் உலக மாநாடு கொழும்பில் நடைபெறவுள்ளது. கட்சியின் தேசிய செயலாளர் முரளீதர் ராவோ மற்றும் கட்சியின் மற்றுமொரு சிரேஸ்ட உறுப்பினரான விஜய் ஜோலி ஆகியோர் இலங்கை அமர்வுகளில் பங்கேற்க உள்ளனர். இந்த அமர்வுகள் இன்று முதல் எதிர்வரும் 21ம் திகதி வரையில் கொழும்பு தாமரைத் தடாகம் மஹிந்த ராஜபக்ஸ அரங்கில் நடைபெறவுள்ளது. இந்த மாநாடில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பிரதம உரையாற்றுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது. நாற்பது நாடுகளைச் சேர்ந்த 360 கட்சிகளின் பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/11…
-
- 1 reply
- 291 views
-
-
தமிழ் பேசும் மக்கள் குருதியில் நனைந்தழிந்த கொடுந்துயரில் குளிர்காய்ந்து, அதில் அரசியல் பிழைப்பு நடத்திக் கொண்டிருந்த மாவை சேனாதிராஜா இன்று இன அழிப்பு என்று நீலிக்கண்ணீர் வடிக்கின்றமை மக்களையும் உலகத்தையும் ஏமாற்றவே என ஈ.பி.டி.பியின் சர்வதேச முக்கியஸ்தர் எஸ்.விந்தன் தெரிவித்துள்ளார். வறிய மக்களது வாழ்வாதாரத்தையும் அவர்களது இதர தேவைகளையும் மேம்படுத்திக் கொள்வதற்காக நல்லூர்ப் பகுதி சமுர்த்தி உத்தியோகத்தரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்களுடனான சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் கூறியவை வருமாறு:- அழிவு யுத்தம் நடந்து கொண்டிருந்த காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் புலம் பெயர் நாடுகளில் பதுங்கியிருந்தார்கள். கூட்டங்களை நடத்தினார்க…
-
- 1 reply
- 432 views
-
-
இன்று எமக்கு போடப்படும் மாலைகளும் பொன்னாடைகளும் எம்மை மேலும் போராடவேண்டும் என்றே தூண்டுகின்றன. போருக்கு செல்வதற்கான தூண்டுதலாகவே அவை அமைக்கின்றன. போருக்கு செல்வதற்கான ஆடை அணிகளாகவே நான் அவற்றைப் பார்க்கின்றேன். - இவ்வாறு தெரிவித்தார் தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா. இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவராக தெரிவுசெய்யப்பட்டமையை பாராட்டி காங்கேசன்துறை தமிழரசுக் கட்சி அலவலகத்தில் வழங்கப்பட்ட வரவேற்புக் கூட்டத்தில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு: - நாங்கள் தோற்றுப் போனவர்கள் அல்லர். இதனால்தான் நாம் இன்று அஹிம்சை வழியிலான போராட்டத்தை தேர்ந்தெடுத்துள்ளோம் அஹிம்சைப் போராட்டம் என்றும் தோற்றுப்…
-
- 1 reply
- 634 views
-
-
ஜப்பானிய சர்வதேச கலை மற்றும் விஞ்ஞான புக்குஓகா பெண்கள் பல்கலைக் கழக பேராசிரியர்களும் மாணவிகளும் புதனன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூருக்கு வந்து சுவையான ஜப்பானிய சமையல் செய்து கிராமத்தவர்களுக்குப் பரிமாறி மகிழ்ந்தனர். ஏறாவூர் மீராகேணி கிராமத்தில் உள்ள முஸ்லிம் கிராமத்தவர்களுடன் தங்கி அவர்களது நிகழ்வுகளிலும் இந்த ஜப்பானிய சர்வதேச கலை மற்றும் விஞ்ஞான புக்குஓகா பெண்கள் பல்கலைக் கழக பேராசிரியை மோமோ வகூரி யும் அப்பல்கலைக் கழகத்தின் 9 மாணவிகளும் கலந்து கொண்டனர். இந்த ஜப்பானிய பல்கலைக் கழக குழுவினரால் பெரிய விருந்து வைபவம் ஒன்று ஏறாவூரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் ஜப்பானிய சர்வதேச கலை மற்றும் விஞ்ஞான புக்குஓகா பெண்கள் பல்கலைக் கழக பேராசிரியை மோமோ வகூரி, …
-
- 1 reply
- 496 views
-
-
எஸ்.றொசேரியன் லெம்பேட் அவுஸ்திரேலியா அரசாங்கத்தின் நிதியுதவியுடன் ஐக்கிய நாடுகள் வாழ்வக ஸ்தாபனத்தின் பங்களிப்புடன் மன்னார் பள்ளிமுனை மேற்கு கிராமத்தில் அமைக்கப்படவுள்ள கடல் நீர் உள்வருவதை தடுக்கும் தடுப்புச்சுவர் அமைக்கும் வேளைத்திட்டம் நேற்று புதன் கிழமை(17) மாலை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. மன்னார் நகரசபையின் அனுசரனையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள இவ்வேளைத்திட்டத்திற்கு அவுஸ்திரேலியா அரசாங்கம் 9 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. வடக்கு,கிழக்கு மாகாணங்களில் திடீர் அனர்த்தத்தை தாக்குபிடிக்கும் வகையில் குறித்த வேளைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகர சபை பிரிவுக்குற்பட்ட பள்ளிமுனை மேற்கு கிராம பகுதியில் குறித்த தடுப்புச்…
-
- 0 replies
- 377 views
-
-
-பொ.சோபிகா நகர அபிவிருத்தி அதிகார சபையின் வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கை புகையிரத திணைக்களத்தால் யாழ்;.புகையிரத நிலையத்தில் 8.5 ஏக்கர் நிலப்பரப்பில் புகையிரத நகரம் அமைக்கப்படவுள்ளதாக யாழ்.மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் வியாழக்கிழமை (18) தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 'யாழ்ப்பாண புகையிரத நிலையத்தின் வடக்கு பக்கமாகவுள்ள ஸ்ரான்லி வீதி, தெற்கு பக்கமாகவுள்ள யாழ்.புகையிரத நிலைய வீதி, கிழக்குபக்கமாகவுள்ள இராசாவின் தோட்ட வீதி, மேற்கு பக்கமாகவுள்ள வைத்திலிங்கம் வீதியையும் இணைத்து இந்த புகையிரத நகரம் அமைக்கப்படவுள்ளது. இந்த புகையிரத நகரத்தில், வணிக அபிவிருத்தி, உள்ளக அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி செயற்திட்டங்கள் தொடர்பான வேலைத்திட்டங்கள் முன…
-
- 3 replies
- 877 views
-
-
சீனா வழங்கியது கடன் தான், ஆனால் கடனல்ல! – விந்தை விளக்கம் கொடுக்கிறார் அமைச்சர் பந்துல [Thursday 2014-09-18 17:00] சீனா இலங்கைக்கு வழங்கியது கடன் தான். ஆனால் அந்தக் கடன் சலுகை அடிப்படையில் வழங்கப்பட்டதால் அதனை நிதியுதவி என்றே அழைக்க வேண்டும் என்று கடனுக்கு புதியதொரு விளக்கத்தை கொடுத்துள்ளார் அமைச்சர் பந்துல குணவர்த்தன. கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்ட அவர், இலங்கை இப்போது வறுமைக் கோட்டிலுள்ள நாடல்ல. மத்திய தர வருமானம் கொண்ட நாடாகும். எனவே, எமக்கு கடன் வழங்கப்படுவதில்லை. நிதியுதவிகளே வழங்கப்படுகின்றன. சீன ஜனாதிபதி இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டு அபிவிருத்திகளுக்காக குறைந்த வட்டியில் நீண்டகால திருப்பிக்கொடுக்கும் வி…
-
- 0 replies
- 274 views
-