ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143551 topics in this forum
-
சிறிலங்கா சம்பந்தமான கேள்விகளை ஐக்கிய நாடுகளின் செய்தித் தணிக்கை குழு தணிக்கை செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இன்னர்சிட்டிபிரஸ் இணையத்தளம் இதனைத் தெரிவித்துள்ளது. ஐக்கியநாடுகள் சபையின் நாளாந்த செய்தியாளர்கள் சந்திப்பில் வைத்து, சிறிலங்கா தொடர்பான கேள்விகள் எழுப்பபடுவதை தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும் மீறி கேட்கப்படுகின்ற கேள்விகளுக்கு ஐக்கிய நாடுகளின் பிரதான பேச்சாளர் ஸ்டீவன் டுஜாரிக் உள்ளிட்டவர்கள் பதில்கூறுவதில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் திணைக்களங்களின் பிரதானிகளுடன் இடம்பெறுகின்ற விசேட சந்திப்புகளின் போதும் சிறிலங்கா சம்பந்தமான கேள்விகள் தணிக்கை செய்யப்படுகின்றன. சில சந்தர்ப்பங்களில் ஒலிவாங்கி செயலிழக்கச் ச…
-
- 0 replies
- 331 views
-
-
இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் அந்நாட்டுப் படைகளால் ஈழத் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட மனிதாபிமற்ற குற்றங்கள் குறித்து விசாரிக்க ஐ.நா. மனித உரிமை ஆணையம் நியமித்துள்ள பன்னாட்டு விசாரணை குழு, இந்தியாவிற்கும் வந்து, தமிழ்நாட்டிலுள்ள முகாம்களில் இருந்துவரும் ஈழத் தமிழ் ஏதிலிகளிடமும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளது. ஈழத் தமிழரை திட்டமிட்டு இன அழிப்பு செய்த இலங்கை இனவாத அரசு நடத்திய அந்த சாட்சிகளற்ற போரின் வாழும் சாட்சிகளாக இருப்பவர்கள், இன்றளவும் ஈழத்திலும், தமிழ்நாட்டின் முகாம்களிலும் வாழும் தமிழர்களே. போரினால் தங்கள் உறவுகளை இழந்து, உடமைகளை இழந்த பல தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து அயல் நாடுகளுக்கும் சென்று தஞ்சமடைந்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம…
-
- 0 replies
- 459 views
-
-
ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமையகம் எடுத்துள்ள போர்க்குற்ற, இன அழிப்பு விசாரணையானது எமது விடுதலையைப் பெறுவதற்கு வலுச்சேர்க்கும் என்ற நம்பிக்கையுடன் தமிழின அழிப்பை உறுதிப்படுத்துவதற்கான சாட்சியங்களைச் சேகரிக்கும் பணி அனைத்துலக நாடெங்கும் இயங்கி வரும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுக்களாலும், மனிதநேயப் பணியாளர்களாலும், இளையோர்களாலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை தாங்கள் அறிந்ததே. எமது இடைவிடாத போராட்டங்களின் விளைவாக ஐக்கிய நாடுகள் சபையால் சேகரிக்கப்படுகின்ற தமிழினப் படுகொலைக்கான ஆதாரங்களைச் சாட்சியங்கள் ஊடாக வழங்கும் பணிக்கு சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவும் எம்மாலான அனைத்து வழிகளிலும் பலம் சேர்க்க வேண்டும் என்ற உறுதியோடு செயற்படுகிறது. எனவே, எம் அன்பிற்கும், மதிப்புக…
-
- 0 replies
- 493 views
-
-
நெடுந்தீவில் கரையொதுங்கிய சடலம் அ.தி.மு.க ஆதரவாளருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது. கடந்த 6ஆம் நாள் கடற்தொழிலுக்காகச் சென்ற தூத்துக்குடி கடற்தொழிலாளர்களில் ஒருவர் கடலில் தவறி விழுந்துள்ளார். கடந்த 7 நாட்களாக குறித்த கடற்தொழிலாளரை தேடியும் அவர் தொடர்பான எதுவித தகவல்களும் கிடைக்காத நிலையில் சடலம் ஒன்று நெடுந்தீவில் கரையொதுங்கியுள்ளது. குறித்த சடலத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் இரட்டை இலைச் சின்னம் மற்றும் சிலுவை என்பன பச்சை குத்தப்பட்டிருந்த நிலையில் அச்சடலம் தனது மகனினது என தந்தையான சிலுவைமுத்து உறுதி செய்துள்ளார். இறந்த மீனவர், சாயல்குடி அருகே கன்னிராசபுரம் சேர்ந்த சிலுவைமுத்து மகன் ஞானபிரகாசம் என தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளார்.http://www.pathivu.…
-
- 0 replies
- 513 views
-
-
தமிழக அரசியல் கட்சிகள் மீண்டும் மீண்டும் குரல் கொடுத்தபோதும் இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது நின்றபாடில்லை. தமிழக மீனவர்களை விடுதலை செய்ய உத்தரவு பிறப்பித்து விட்டேன் என சில நாள்களுக்கு முன்பு இலங்கை ஜனாதிபதி தெரிவித்தார். அப்போதே அதனை ஏமாற்று நாடகம் என நான் கூறியிருந்தேன். அதை உண்மையாக்கும் விதத்தில் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்ந்து வருகிறது. நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம், நாகையைச் சேர்ந்த 53 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களையும் சேர்த்து 78 மீனவர்கள் இலங்கைச் சிறையில் உள்ளனர். தமிழக மீனவர்களின் 72 படகுகளும் அங்குள்ளன. மஹிந்த ராஜபக்ஷவிடம் நேரடியாகப் பேசி மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் விடுவிக்…
-
- 0 replies
- 295 views
-
-
தாயகத்திலும் , தமிழகத்திலும் , புலத்திலும் ஒன்றிணைந்து போராடுவோம் .விடுதலைப் போராட்டத்துக்கு மாவீரர்களை கொடுத்த தமிழ் உறவுகளே , குடும்பம் குடும்பமாக ஐநா பேரணியில் பெரும்திரளாக கலந்து கொள்ளுங்கள் . எமக்கான தேசத்தை நாம் பெறுவதுக்கு தொடர்ந்து போராடுவோம் என ஐநா பேரணிக்கு அழைப்பு விடுத்துள்ளார் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் அவர்கள். http://www.pathivu.com/news/33846/57//d,article_full.aspx
-
- 0 replies
- 224 views
-
-
இலங்கைக்கும் சீனாவிற்க்குமிடையிலான துறைமுகங்கள் குறித்த ஓப்பந்தங்கள் பிராந்தியத்தில் அச்சத்தை தோற்றுவிக்கலாம் என சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது. சீனா ஜனாதிபதியின் இலங்கை விஜயத்தின்போது துறைமுகங்கள் குறித்த உடன்பாடுகள் எட்டப்படலாம். பிராந்திய நாடுகளுக்கு சீனா தனது நல்லெண்ண சமிக்ஞையை வெளிப்படுத்துவதற்காக இந்த விஜயத்தை பயன்படுத்தவுள்ள அதேவேளை இந்தியாவை சுற்றி வளைத்தல் போன்ற நடவடிக்கைகளுக்கு சீனா இந்த துறைமுகங்களை பயன்படுத்தலாம் என்ற அச்சம் உருவாவதற்கான சாத்தியமுள்ளது. சீனா ஜனாதிபதி 19 ம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற் கொள்ளவுள்ளார். அவர் கொழும்பில் மேற்கொள்ளவுள்ள பேச்சுக்களில் துறைமுக அபிவிருத்தி என்பது முக்கியமாக இடம்பெற…
-
- 2 replies
- 569 views
-
-
யாழ் மாதகல்பகுதியில் கடற்படையினர் கெடுபிடி! திகதி: Sep 14, 2014 | இணைத்தவர்: மாலதி யாழ்.மாதகல் பிரதேசத்தில் கடற்படை முகாம் மற்றும் பௌத்த விகாரை ஆகியன அமைந்துள்ள பகுதிகளில் மக்கள் கடற்தொழிலில் ஈடுபடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதுடன், ஒரு சில தினங்களில் உபகரணங்கள் அனைத்தையும் அகற்றுமாறும் படையினர் உத்தரவு பிறப்பித்திருப்பதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். குறித்த பகுதியில் சம்பில்துறை, திருவடிநிலை ஆகிய பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்குச் சொந்தமான நிலம் கடற்படையினராலும், விகாரை அமைப்பதற்காகவும் அபகரிக்கப்பட்டிருக்கும் நிலையில், மக்கள் நீண்டகாலம் வாழ்ந்த நிலங்களில் குடியேற முடியாமல் காட்டுப்புலம் பகுதியில் குடியேறி வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2013ம் ஆண்டு மேற்ப…
-
- 2 replies
- 557 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிப் போராளிகளுக்கு மட்டும் புனர்வாழ்வு அளிப்பது போதுமானதா? 13 செப்டம்பர் 2014 யுத்தகால மன அழுத்தங்களில் இருந்து மீள்வதில் சிக்கல்களை எதிர் நோக்கியுள்ளனர்- குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- தமிழீழ விடுதலைப் புலிப் போராளிகளுக்கு மட்டும் புனர்வாழ்வு அளிப்பது போதுமானதா என்ற கேள்வி எழுந்துள்ளது. யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளை கருத்திற் கொண்டே புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வருகின்றது. எனினும், யுத்தத்தில் பங்கேற்ற படையினருக்கு இவ்வாறான எவ்வித புனர்வாழ்வு அல்லது உளவியல் ஆலோசனைகள் வழங்கப்படவில்லை. யுத்தம் தொடர்பான எண்ணங்களையும் கடுமையான அழுத்தங்களையும் எதிர்நோக்கிய படையினர், அந்த அழுத்தங்களிலிருந்து மீள்வதில் …
-
- 1 reply
- 520 views
-
-
சீனாவின் Maritime Silk Road திட்டத்தில் இலங்கை இணைந்து கொள்ளும் - மகிந்த ராஜபக்ச:- 13 செப்டம்பர் 2014 சீன ஜனாதிபதியால் முன்னெடுக்கப்படும் 21 ம் நூற்றாண்டின் புதிய கடலோர சில்க் பாதை திட்டத்தை Maritime Silk Road, பாராட்டியுள்ள இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இத்திட்டம் இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு முக்கியமானது என குறிப்பிட்டுள்ளார். சின்குவா செய்தி ஸ்தாபனத்திற்க்கு அளித்துள்ள பேட்டியில் இதனை தெரிவித்துள்ள ஜனாதிபதி இலங்கை சீனாவின் இந்த திட்டத்தில் இணைந்துகொள்ளும் என குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது கடந்த 28 வருட காலப்பகுதியில் சீனா ஜனாதிபதி ஒருவர் முதல்தடவையாக இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்,இரு தரப்பு உறவுகளுக்கு இது முக்கியமான விடயம், …
-
- 0 replies
- 452 views
-
-
குருக்கள்மடம் புதைகுழியை அடையாளம் காட்டுவதில் முரண்பாடு! - சுனாமியில் பலியான தமிழர்களின் சடலங்கள் கிளறப்படும் ஆபத்து. s [sunday 2014-09-14 07:00] மட்டக்களப்பு, குருக்கள்மடத்தில் 24 வருடங்களுக்கு முன்பு விடுதலைப் புலிகளினால் கடத்தி, படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் முஸ்லிம்களின் புதைகுழிகள் என அடையாளம் காணப்பட்ட இடங்கள் தொடர்பில் முரண்பாடுகள் எழுந்துள்ளன. இந்த முரண்பாடு காரணமாக நேற்று அந்த இடத்தை பார்வையிட்டு, அகழ்வுப் பணிகள் தொடர்பாக தீர்மானம் எடுப்பதற்காக வருகை தந்திருந்த நிபுணர்கள் குழு எந்தவொரு தீர்மானமும் இன்றி கொழும்பு திரும்பியது. களுவாஞ்சிகுடி மஜிஸ்திரேட் நீதிமன்ற உத்தரவின் பேரில் குறித்த மனிதப் புதைகுழியில் எதிர்வரும் நவம்பர் மாதம் 11ம் திகதி அகழ்வுப் பணிக…
-
- 0 replies
- 335 views
-
-
காணாமற்போனோர் குறித்த ஐ.நா குழுவை அனுமதிக்க முடியாது! – அரசாங்கம் அறிவிப்பு! [sunday 2014-09-14 09:00] காணாமற்போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் முடிவடையும் வரையிலும், பலவந்தமாக காணமற்போகச் செய்யப்பட்டோர் தொடர்பான ஐ.நா குழு இலங்கைக்குள் நுழைவதற்கு அனுமதி வழங்கப்படாது என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. ஐ.நா மனித உரிமை சபையின் 27 வது அமர்வில் சமர்ப்பித்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை முடிவுகளிற்கும், ஐ.நா குழுவின் தகவல்களுக்கும் தொடர்பு காணப்படலாம் என கருதுவதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. எனினும் ஐ.நாவின் குழுவுடன் தொடர்ந்தும் பேச்சுக்களில் ஈடுபடப் போவதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. http://www.seithy.…
-
- 0 replies
- 386 views
-
-
திருகோணமலை மாவட்டம் சம்பூர் மண்ணில் இருந்து ஸ்ரீலங்கா அரசால் துரத்தப்பட்ட தமிழ்மக்கள் இன்னமும் அடிப்படை வசதிகளற்ற முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர், இவர்களில் கனவான சொந்த மண்ணில் எப்போது குடியேறுவார்கள்? யுத்தம் முடிந்து எல்லோரும் சிறப்பாக, வசதியுடன் வாழ்கின்றனர் என்று யாராவது நினைத்துக் கொண்டிருந்தால் அது தவறு. மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டிய பட்டியலில் வலி வடக்கு, சம்பூர் ஆகிய பிரதேசங்கள் இன்றும் இருக்கின்றன. 2006ஆம் ஆண்டு முதல் இடம்பெயர்ந்து அடிப்படை வசதிகள் எதுவுமின்றி வாழ்ந்த மக்கள் இன்று சொந்த இடத்திற்குள் சென்று வாழ முடியும் என்ற நம்பிக்கையிலேயே இருக்கின்றனர். ஆனால், அவர்களை சொந்த நிலத்தில் குடியமர்த்துவதற்கான எவ்வித முயற்சியும் எடுக்கப்படுவதாக தெரியவில்லை. …
-
- 11 replies
- 760 views
-
-
யாழ். கோட்டைக்கு அருகில் பண்ணைக் கடற்கரையோரமாக பொழுதுபோக்குப் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. இந்தப் பூங்கா பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் "கிறீன் பார்க்" திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு வருகிறது. 12 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படும் இந்தப் பூங்காவின் பணிகள் தற்போது 75 வீதம் பூர்த்தியடைந்துள்ளன என்று வடமாகாண நகர அமைச்சின் பணிப்பாளர் குறிப்பிட்டார். இந்த வருட இறுதிக்குள் இந்த பொழுதுபோக்கு மையம் திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பூங்கா திறப்பதற்கு முன்னரே அதைப் பயன்படுத்த் தொடங்கிவிட்டனர் இயற்கையை விரும்பும் பலர். யாழ்ப்பாணம் வரும் தென்னிலங்கைச் சுற்றுலாப் பயணிகளும் இங்கு பொழுதைக் களித்து புகைப்படங்களை எடுப்பதைக் காணக்கூடியதாகவுள்ளது. படங்…
-
- 29 replies
- 4.2k views
-
-
-ஏ.எச்.ஏ.ஹுஸைன் மட்டக்களப்பு, வாகரை – மதுரங்கேணி, எல்வத்துமடு குளத்தைப் புனரமைக்கும் வேலைகள் பிரதேச செயலாளர் எஸ்.ஆர். ராகுலநாயகி தலைமையில் வியாழக்கிழமை (11.09.2014) ஆரம்பமாகின. பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தூர்ந்துபோன குளங்களைப் புனரமைத்து உள்ளுர் விவசாயத்தையும் மீன்பிடியையும் அபிவிருத்தி செய்யும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, 40 வருடங்களுக்குப் முன்னர் தூர்ந்துபோன நிலையிலிருந்த இக்குளம் புனரமைக்கப்படவுள்ளது. கிராம மக்களின் முழுமனித வளத்தையும் பயன்படுத்தி 'வேலைக்கான கொடுப்பனவு' என்ற திட்டத்தின் அடிப்படையில் எல்வத்துமடு குளம் புனரமைப்பு வேலைகளுக்காக 48 இலட்சத்து 68 ஆய…
-
- 1 reply
- 389 views
-
-
இலங்கையின் படையதிகாரிகள் கனடா செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையின் இராணுவம், விமானப்படை, கடற்படை உள்ளிட்ட முப்படையினர் கனடாவிற்கு பயணங்களை மேற்கொள்ள முடியாது என கனேடிய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. யுத்தக் குற்றச் செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுக்கள் இலங்கைப் படையினருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளதாகவும் இதனால் கனேடிய வீசா வழங்கப்பட மாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மனித உரிமை மற்றும் யுத்தக் குற்றச் செயல்களை காரணம் காட்டி இலங்கை படையதிகாரிகளுக்கு வீசா வழங்க முடியாது என கனடா நேரடியாகவே அறிவித்துள்ளமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மனித உரிமை மற்றும் யுத்தக் குற்றச…
-
- 0 replies
- 659 views
-
-
'பேயரசு செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள்' கடந்த வாரம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக் கட்சியான தமிழரசுக் கட்சியின் 15வது தேசிய மாநாடு நடைபெற்றது. அதே தலைமைத்துவம், அதே அறைகூவல்கள். அரசாங்கம் தமது கோரிக்கைகளை நிறைவேற்றாமல் போனால் அடுத்த வருடம் ஜனவரி முதல் சாத்வீகப் போராட்டம் என சூளுரைத்திருக்கின்றார் கட்சியின் பதிய தலைவராக தெரிவு செய்யப்பட்ட திரு மாவை சேனாதிராஜா. நாய்வாலை நிமிர்த்த முடியுமா? மோடி சொன்னாலும் என்ன சொல்லாவிட்டாலும் என்ன ராஜபக்ஸ அரசு இப்பொழுது போகும் வழியில்தான் போய்க்கொண்டிருக்கும். இந்த நிலையில் சாத்வீகப் போராட்டத்தை ஆரம்பிப்பதற்கு ஜனவரி மாதம் வரை காத்திருக்க வேண்டுமா? ஒருவிதமான வேலைத்திட்டமும் இன்றி வெற்று வார்த்தைகளுடன் எமது கட்சிகள் தொடர்வதும்…
-
- 0 replies
- 663 views
-
-
வடக்கில் எலிகளாக பொந்துகளுக்குள் இருந்தவர்களை புலிகளாக்கியவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த போராளிகளாம் என மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட முதலைக்குடாவில் பொது விளையாட்டு மைதான புனரமைப்பு வேலைகள் ஆரம்பமாகியது. இதன்போது உரையாற்றுகையிலேயே முரளிதரன் கூறினார். இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், கிழக்கு மாகாணத்தில் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இருந்திருக்கவில்லை. ஆனால், வடபகுதியில் உள்ளவர்களின் பிரச்சினைகளுக்காக நாங்கள் அங்கு சென்று போராடினோம். இந்த அநாவசியப் போராட்டத்தால் கிழக்கு மாகாணத்திலிருந்த தமது உறவுகளான 9,000 போராளிகளை இழந்துள்ளதாகவும் அவர் கூற…
-
- 12 replies
- 1.2k views
-
-
சாவகச்சேரி நகராட்சி மன்றத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தித் திட்டங்களுக்காக ஆஸ்திரேலியா அரசாங்கம் 8 மில்லியன் ரூபாவை ஆசிய மன்றத்தின் ஊடாக வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசியா மன்றத்தினால் கடந்த மே மாதம் நகராட்சி மன்றப் பகுதியில் பயிற்றப்பட்ட உத்தியோகத்தர்கள் மூலம் நடத்திய இலத்திரனியல் குடிமக்கள் அறிக்கை அட்டை தயாரித்தலின் பெறுபெறுகளின்படி மன்றத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தித் திட்டங்களுக்காக 8 மில்லியன் ரூபாவை ஆஸ்திரேலியா அரசாங்கம் வழங்கியுள்ளதாக ஆசிய மன்றத்தினர் அறிவித்துள்ளதாக நகராட்சி மன்றத் தவிசாளர் இ.தேவசகாயம்பிள்ளை தெரிவித்தார் http://malarum.com/article/tam/2014/09/12/5360/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A…
-
- 0 replies
- 481 views
-
-
இலங்கைத் தமிழரசுக் கட்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் நாட்டின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் தீர்மானமாக அமைவதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஐபக்ஷ தெரிவித்துள்ள கருத்தை நிராகரித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன். அறியாமை தொடர்பிலேயே பாதுகாப்பு செயலர் மேற்படி கருத்து வெளியிட்டிருக்கிறார் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா நேற்று யாழ்ப்பாணம் வந்ததையடுத்து அவருக்கு கட்சி உறுப்பினர்களினால் வரவேற்பு அளிக்கப்பட்ட நிழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவி…
-
- 0 replies
- 515 views
-
-
இலங்கைப் படையினரை ஐ.நா அமைதி காக்கும் படையில் இணைக்கப்பட்டுள்ளமைதொடர்பில் இன்னர் சிட்டிபிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. கடந்த 2009ம் ஆண்டு பல்லாயிரக்கணக்கான பொதுமக்களை கொன்று குவித்து யுத்தக் குற்றத்தில் ஈடுபட்டமை தொடர்பில் இலங்கை இராணுவத்தினருக்கு எதிராக போர்க்குற்ற விசாரணைகள் இடம்பெற்று வருகிறன. எனினும் ஐ.நாவின் அமைதிகாக்கும் படையில் இலங்கை இராணுவத்தினர் இணைக்கப்பட்டுள்ளதுடன், மத்திய கிழக்கு ஆபிரிக்காவில் அவசர ஹெலிக்கொப்டர் சேவையை நடத்தும் முக்கிய பொறுப்பும் படையினரிடம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவர்களை ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படையில் எவ்வாறு இணைத்துக் கொள்ள முடியும் என்று கேள்வி எழுப்பப்பட்டது. எனினும் மத்திய ஆபிரிக்க நாடுகளில் உள்ள அமைதி காக்கும் பட…
-
- 1 reply
- 434 views
-
-
காவல்துறை அதிகாரங்களைக் கூட ஓரளவூக்குப் பகிர்ந்துகொள்ள தயாராக இருப்பதாகவூம் வடக்கு முதலமைச்சரைச் சந்திப்பதற்கான ஏற்பாட்டைச் செய்துதருமாறும் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ கோரியதாக அந்தச் சந்திப்பின்போது உடன் இருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.யோகராஜன் தெரிவித்தார். எவ்வாறாயினும், இந்த அழைப்பு எந்தளவு இதயசுத்தியுடன் இருக்கும் என்பது சந்தேகமே என அவர் மேலும் கூறினார். - INTERTAM
-
- 1 reply
- 679 views
-
-
உதயன் பத்திரிகைக்கு எதிராக இழப்பீடு கேட்டு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தாக்கல் செய்த மான நஷ்ட வழக்கு தொடர்பான விசாரணை நேற்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது டக்ளஸ் தேவானந்தாவின் எதிர்தரப்பில் வாதிட்ட சட்டத்தரணியான எம்.ஏ. சுமந்திரன் இரண்டு மணி நேரத்துக்கும் அதிகமாக குடைந்தெடுக்கப்பட்டு குறுக்கு விசாரணை மேற்கொண்டார். தனது சாட்சியத்தில் அமைச்சர் டக்ளஸ், உதயன் பத்திரிகையில் குறிப்பிட்டிருந்த தகவல்களை மறுத்தார். தானோ தனது கட்சியினரோ கொலைகளில் சம்பந்தப்பட்டிருக்கவில்லை அது தமது கொள்கையும் இல்லை என்றார். கடத்தல்களிளோ, கப்பம் வாங்குவதிலோ தனக்கும் தனது கட்சிக்கும் தொடர்பு எதுவும் இல்லை என்றுகூடச் சொன்னார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன…
-
- 0 replies
- 371 views
-
-
வவுனியா பிரதேசத்தில் மரக்கறிச் செய்கையில் ஈடுபடுபவர்கள் வறட்சியாலும் தென்பகுதி வியாபாரிகளாலும் பாதிப்படைந்துள்ளனர் என்று தெரிவிக்கின்றனர். கடும் வரட்சி காரணமாக நீர் நிலைகளும் கிணறுகளும் வற்றி விட்டன. இதனால் நீரின்றி பயிர்கள் கருகுகின்றன. தப்பி ஒட்டி நிற்கும் பயிர்களைப் பாதுகாத்து அதிலிருந்து கிடைக்கும் உற்பத்திகளை சந்தைக்கு கொண்டு சென்றால், அவற்றுக்கு நியாயமான விலை கிடைப்பதில்லை என்கின்றனர் விவசாயிகள். மகாவலி ஆற்று நீரின் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட மரக்கறிகள் தென் பகுதியில் இருந்து வருவதால் அவை குறைந்த விலையில் விற்கப்படுகின்றன. அவர்களுக்கு தண்ணீர் கிடைக்கிறது. அதற்கு செலவு இல்லை. எமக்கு தான் மின்சாரம், மண்ணெண்ணெய் என செலவு. அவர்களுடன் நாம் போட்டிபோட முடியாது. எனவே எங…
-
- 0 replies
- 420 views
-
-
வவுனியா பிரமனாளங்குளம் கிராமத்தின் மக்களது பொருளாதார மேம்பாட்டுக்காக வெதுப்பகமொன்றினை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (12.9) பிரமனாளங்குளத்தில் இடம்பெற்றது. வட மாகாண கிராமிய அபிவிருத்தி அமைச்சின் 1.5 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் அமைக்கப்பட்டு பிரமனாளங்குளம் கிராம அபிவிருத்தி சங்கத்திடம் கையளிக்கப்படவுள்ள இவ் வெதுப்பகம் அக் கிராம மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு வழிசமைக்கவுள்ளது. இந் நிகழ்வுக்கு வட மாகாண கிராமிய போக்குவரத்து மீன்பிடி அமைச்சர் பா. டெனிஸ்வரன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களான வினோ நோகதாரலிங்கம், சிவசக்தி ஆனந்தன், மாகாண சபை உறுப்பினர்களான இ. இந்திரராஜா, எம். தியாகராஜா, அமைச்சின் செயலாளர் ஆர். வரதீஸ்வரன், கிராம அபிவிருத்தி திணைக்கள பண…
-
- 1 reply
- 433 views
-