ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143540 topics in this forum
-
கிறிஸ்மஸ் தீவில் இருந்து சுமார் 300 கிலோ மீற்றர் தொலைவில் புகலிடக் கோரிக்கையாளர்கள் அடங்கிய படகொன்று தத்தளிப்பதாக தகவல் வெளியான போதிலும், மத்திய அரசாங்கம் ஊர்ஜிதம் செய்ய மறுத்திருக்கிறது. asylum-seekersஇந்தப் படகிலுள்ளதாகக் கூறப்படும் 153 பேரில் இருவரிடம் பேசியதாக Fairfax ஊடக நிறுவனம் அறிவித்துள்ளது. இவர்களில் ஒருவர் தமிழ்ப் பெண்ணாக இனங்காணப்பட்டுள்ளார். தாம் வந்த படகு ஜூன் 13ஆம் திகதி தென்னிந்தியாவில் இருந்து புறப்பட்டதாக அவர் கூறினார். இது பற்றி குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசனின் பேச்சாளர் கருத்து வெளியிடுகையில், கடலில் உயிர்ப் பாதுகாப்பிற்கு தீவிர அச்சுறுத்தலாக அமையக்கூடிய எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கைகளையே அரசாங்கம் ஊர்ஜிதம் செய்யுமெனத் தெரிவித்தார். நீர்க்கசிவு …
-
- 7 replies
- 926 views
-
-
மல்லாகம் புனித சதா சகாய மாதா ஆலயத்தின் வருடாந்த திருவிழா இறுதி நாள் நிகழ்வுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் இடம் பெற்றன. மறைக் கல்வி நிலையத்தின் அதிபர் அருட்தந்தை எம்.சௌந்தரநாயகம் தலைமையில் இடம் பெற்ற விசேட திருப்பலிப் பூசையைத் தொடர்ந்து மாதாவின் திருச் சொருவ பவனியும் இடம் பெற்றது. திருப்பலிப் பூசையில் மல்லாகம் பங்குத் தந்தை அருட்திரு றெக்ஸ் சவுந்தரம், அருட்தந்தை ஜெயசீலன் ஆகியோரும் கலந்து கொண்டனர். - See more at: http://malarum.com/article/tam/2014/06/29/3252/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%A…
-
- 0 replies
- 510 views
-
-
தெற்கில் முஸ்லிம்கள் பொருளாதார ரீதியாக முன்னேறி வருவதைப் பொறுக்க முடியாத பெரும்பான்மை இனத்தவர்கள் முஸ்லிம்களை அங்கிருந்து அடித்துத் துரத்தப்பார்க்கின்றனர். இதேபோல் மேலைத்தேய நாடுகளிலும் குடியேறியுள்ள எம்மவர்க்கும் ஏற்படலாம் என வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார். வடமராட்சி வட இந்து மகளர் கல்லூரியின் பரிசளிப்பு விழா இன்று நடைபெற்றபொழுது நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் பொழுதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்நிகழ்வில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், இன்றைய காலகட்டத்தை எம் மக்கள் முற்றாக அறிந்து கொள்ளும் தருணம் உதயமாகி இருக்கின்றது. இது வரை காலமும் நாங்கள் பழைய முறையிலேயே செல்ல எத்தனித்து வந்துள்ளோம். அதனால் ஓரளவு வெ ற்றி…
-
- 1 reply
- 746 views
-
-
அளுத்கம தர்கா நகர் பேருவளை தாக்குதல்கள் நடைபெற்றதை சுட்டிக் காட்டியும் கோட்டா அதன் பின்னணில் இருப்பதாலும் மகிந்தவை சந்தித்த அரபு நாடுகளின் தலைவர்கள் தம்பியை (கோட்டா) கவனிக்கவும் என்று எச்சரித்துள்ளார்கள். இதில் பங்களாதேஷ்,ஈராக்,ஈரான்,எகிப்து,இந்தோனேசியா, குவைத் மலேசியா, மாலைதீவு, பாகிஸ்த்தான்,பாலஸ்த்தீனம், துருக்கி,ஐக்கிய அரபு இராச்சியம்,சவுதிஅரேபியா,கட்டார், போன்ற நாடுகளின் வெளிநாட்டு தூதுவர்கள் மகிந்தவிடம் இந்த விளையாட்டை நிறுத்த வேண்டும் இல்லாவிட்டால் பாரிய விளைவுகளை எதிர்கொள்ள வேண்டி வரும் என மகிந்தவை எச்சரித்துள்ளனர். இலங்கையில் நடந்த போர்க் குற்றங்களை விசாரணை செய்ய ஐ.நா இலங்கைக்குள் வருவதை எதிர்த்து இலங்கைக்கு ஆதரவாக அரபு நாடுகள் வாக்களித்திருந்தன. அது மட்டும…
-
- 4 replies
- 1.1k views
-
-
புலிகளுக்கு கப்பலில் ஆயுதங்களைக் கடத்திய கனேடியத் தமிழருக்கு சிறிலங்காவில் சிறைத் தண்டனை [ வியாழக்கிழமை, 26 யூன் 2014, 08:59 GMT ] [ கார்வண்ணன் ] விடுதலைப் புலிகளின் முக்கியமான ஆயுதக்கடத்தல் காரர் என்று கூறி, தற்போது கனடாவில் வசிக்கும், தமிழர் ஒருவருக்கு எதிராக சிவப்பு அறிவித்தல் ஒன்றை சிறிலங்கா காவல்துறை வெளியிட்டுள்ளது. வவுனியா நீதிமன்றத்தினால், 30 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள, கனகராஜா ரவிசங்கர் என்பவருக்கே இந்த சிவப்பு அறிவித்தல் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் அணியின் கப்டனான இவர், புலிகளுக்காக ஆயுதங்களைக் கடத்தியது தொடர்பான மூன்று குற்றச்சாட்டுகளுக்காக தலா 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. …
-
- 1 reply
- 519 views
-
-
அளுத்கம, பேருவளை, தர்கா நகர், வெலிப்பிட்டிய பிரதேசங்களில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை தொடர்பாக விசாரணை செய்ய பொலிஸாரும் புலனாய்வு பிரிவினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதை ஏற்க முடியாது. இது தொடர்பாக விசாரணை செய்ய மூன்று சமூகங்களையும் உள்ளடக்கிய ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட வேண்டுமென்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளது. முஸ்லிம்கள் மீதான வன்முறைச் சம்பவங்களை விசாரணை செய்வதற்கு மூவினங்களையும் உள்ளடக்கிய ஜனாதிபதி ஆணைக்குழு அவசியம் எனத் தெரிவித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, தர்கா நகர், பேருவளை, வெலிப்பிட்டிய, அதி…
-
- 1 reply
- 472 views
-
-
இன்றைய சமுகத்தில் சினிமா என்பது ஒரு மிகப்பெரிய சக்தியாக மாறி உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலான மக்கள் ரசிக்கும் பொழுதுபோக்காக உருவெடுத்துள்ளது.அப்படிப்பட்ட சினிமாவில் ஒரு புரட்சிகரமான விஷயத்தை புகுத்தி அதை வெளி உலகில் பூதாகரமாக வெடிக்க வைக்க முடியும்.அதிலும் தமிழ் சினிமாவை பொறுத்தவரை சினிமாவின் தாக்கம் சற்று அதிகமாகவே அன்றாட வாழ்வியலுடன் பின்னிப் பிணைந்துள்ளது என்பதற்கு மாற்று கருத்து இல்லை.உடல்மொழி, வசனங்கள், உடை என சினிமாவின் தாக்கம் இங்கு மிக அதிகம். அதனால் தான் என்னவோ அரசியல்வரை இதன் தாக்கம் கெட்டியாகப் பிடித்துள்ளது!!!இப்படி ஒரு பிரதான கலையை தன் சுயநலத்துக்காகவும், ஈழ மக்களின் குரல்களை வேரோடு அழிப்பதற்காகவும் ஒரு கருவியாக பயன்படுத்த உள்ளார் இலங்கை அதிபர் ராஜபக்ஷ. தன…
-
- 1 reply
- 938 views
-
-
-எஸ்.றொசேரியன் லெம்பேட் சிறுபான்மையினர் தமது கைக்கு அடங்கும் விதத்தில் வாழ்வதையே இலங்கையிலுள்ள பெரும்பான்மையினர் விரும்புகின்றனர். மாறாக சிறுபான்மையினர் அபிவிருத்தி அடைந்து நல்ல நிலையை அடைந்து சென்றால் பெரும்;பான்மையினத்தவர்கள் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். மாந்தை மேற்கு பிரதேச சபையின் சிறுவர் பூங்கா மற்றும் விளையாட்டு மைதானம் திறப்பு விழா நேற்று சனிக்கிழமை (28) மாலை இடம்பெற்றது. இந்நிகழ்வில் இணைப் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், சிறுபான்மையினர் முன்னேறினால், எங்களையும் பார்க்க விரைவில் முன்னேற இவர்களுக்கு என்ன உரித்து இர…
-
- 1 reply
- 541 views
-
-
இலங்கைப்போரில் பாதிக்கப்பட்டு, புலம்பெயர்ந்து கனடாவில் வாழும் தமிழர்கள் அனைவரும் ஐ.நா.விசாரணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கவேண்டும். இதற்காக ஐ.நா. விசாரணைக்குழு கனடாவுக்கு வந்து சாட்சிகளைப் பதிவுசெய்ய வேண்டும் என்று கனேடிய தமிழர் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்த பேரவை ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:- இலங்கை மீது விசாரணைகளை முன்னெடுக்கவுள்ள ஐக்கிய நாடுகள் விசாரணைக்குழு மற்றும் ஆலோசனைக்குழு என்பவற்றின் பொறுப்பைக் கனடிய தமிழர் பேரவை வரவேற்கிறது. கடந்த ஜூன் 25 திகதி ஐ.நா. மனித உரிமைகள் கவுண்ஸிலின் ஆணையாளர் நவிப்பிள்ளை விசாரணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்கும் மூவர் குழுவை நியமித்தார். அந்த குழுவில், பின்லாந்தின் முன்னாள் ஜ…
-
- 0 replies
- 511 views
-
-
இராணுவத்தினரும் பௌத்த பிக்கு ஒருவரும் சேர்ந்து வவுனியா இந்து மயானத்தில் சடலமொன்றை தகனம் செய்ய தடைவிதித்ததாக தெரியவருகின்றது. வவுனியா, கொக்குவெளி வீதியில் அமைந்துள்ள பேயாடிகூழாங்குளம் இந்து மயானத்தில் இன்று காலை சடலமொன்றைத் தகனம் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்ய உறவினர்கள் அங்கு சென்றுள்ளனர். இதனையடுத்து மயானத்திற்கு வந்த இராணுவத்தினர், குறித்த காணி தங்களது கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் இங்கு சடலத்தை எரியூட்டமுடியாது என்றும் கூறி தடுத்துள்ளனர். இதனால் அங்கு சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. சற்று நேரத்தின்பின் அப்பகுதியின் கிராமசேவகர், வடக்கு சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வவுனியா பிரதேச செயலாளர் ஆகியோர் அங்கு வந்துள்ளனர். காலம் காலமாக இந்த பகுதியில் மயானம் இருந்தது என்றும், …
-
- 0 replies
- 494 views
-
-
ரமழான் தலைப்பிறை நாட்டின் பல பாங்களில் தென்பட்டுள்ளதால் புனித ரமழான் நோன்புக் காலம் நாளை ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகவுள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. - See more at: http://www.metronews.lk/article.php?category=news&news=5955#sthash.Nd37lUjW.dpuf
-
- 1 reply
- 313 views
-
-
முகமாலைப் பகுதியில் இன்று சனிக்கிழமை மிதிவெடியகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த ஒருவர் அது வெடித்ததில் படுகாயமடைந்தார். இச்சம்பவத்தில் துணுக்காய் ஆரோக்கியபுரத்தைச் சேர்ந்த மகாலிங்கம் நகுலேஸ்வரன் (வயது 35) என்பவரே காயமடைந்தவராவார். இன்று நண்பகல் 10.45 மணியளவில் வழமைபோன்று முகமாலைப் பகுதியில் மிதிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த ஹலோ ட்ரஸ்ட் பணியாளர் அது தவறுதலாக வெடித்ததில் காயமடைந்தார். உடனடியாக சாவகச்சேரி வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்ட இவர், மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். http://malarum.com/article/tam/2014/06/28/3237/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE…
-
- 0 replies
- 344 views
-
-
-எம்.எஸ்.எம்.நூர்தீன், எம்.சசிகுமார் கல்முனையில் தமிழ் பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுவதால் முஸ்லிம்களுக்கு எந்தவொரு ஆபத்தும் ஏற்படப்போவதில்லை. இது தொடர்பில் முஸ்லிம்கள் அச்சமடையத் தேவையில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும் ஜனாதிபதியின் இணைப்பாளருமான அருண் தம்பிமுத்து தெரிவித்தார். மட்டக்களப்பிலுள்ள அவரது அலுவலகத்தில் சனிக்கிழமை (28) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'கல்முனையில் தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோருவது எமது அடிப்படை உரிமையாகும். தமிழ் பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுவதால், முஸ்லிம்களுக்கு எந்தவொரு ஆபத்தும் ஏற்படப்போவதில்லை. இது தொடர்பில் முஸ்லிம்கள…
-
- 0 replies
- 294 views
-
-
-எஸ்.றொசேரியன் லெம்பேட் மன்னார் மாவட்டத்தின் அடம்பன் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட சிறுவர் பூங்காவும் விளையாட்டு மைதானமும் சனிக்கிழமை (28) திறந்துவைக்கப்பட்டுள்ளன. நெல்சிப் திட்டத்தின் கீழ், 9.1 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில்; மாந்தை மேற்கு பிரதேச சபையால் சிறுவர் பூங்காவும் விளையாட்டு மைதானமும் அமைக்கப்பட்டன. குறித்த விளையாட்டு மைதானத்தில் மரமும் நாட்டப்பட்டது. இதன் பின்னர் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்;பட்ட அணிக்கும் மடு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குட்;பட்ட அணிக்குமான கால்பந்தாட்ட போட்டியும் நடைபெற்றது. மாந்தை மேற்கு பிரதேச சபையின் தலைவர் எஸ்.வரப்பிரகாசம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், கைத்தொழில் மற்றும் வர…
-
- 0 replies
- 375 views
-
-
ஜெனிவாவில் ஐநா முன்பாக ஐரோப்பிய முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் இலங்கையின் தென்பகுதியில் அளுத்கம உள்ளிட்ட நகரங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்செயல்களுக்கு கண்டனம் தெரிவிக்குமுகமாக சுவிஸ் நாட்டின் ஜெனிவா நகரில் ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்துக்கு முன்பாக ஐரோப்பிய முஸ்லிம்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது. ஐரோப்பிய இஸ்லாமிய தகவல் நிலையம் என்ற அமைப்பினால் அந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு கூடிய நூற்றுக்கணக்கான இலங்கையின் புலம்பெயர்ந்த முஸ்லிம்கள், வன்செயலுக்கு எதிராகவும் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினார்கள். இந்தப் போராட்டம் குறித்து ஐரோப்பிய இஸ்லாமிய தகவல் நிலையத்தின் தலைவரான ஹனிஃப் முஹமட் அவர்களின் செவ்வியை இங…
-
- 2 replies
- 461 views
-
-
ஆண்மையில் கூட்டப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் உயர் மட்டக் குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளை அந்த அமைப்பின் தலைவரான அத்த ஞானசார தேரர் ஊடகங்களுக்கு தனது அமைப்பின் கடித தலைப்புடனும், தனது கையப்பத்துடனும் வழங்கியிருக்கிறார். அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ள விபரங்கள் வருமாறு, தமது அமைப்பினைப் பாதுகாக்க பாதுகாப்பு அமைச்சுடனும், பர்மாவவின் தீவிர பெளத்த அமைப்பான 969 உடனும் சேர்ந்து ராணுவப் பிரிவொன்றை நிறுவுதல். ஒவ்வொரு சிங்கள பெளத்த பாடசாலையிலும் தமது அமைப்பின் கிளைகளை நிறுவி பெளத்தரல்லாதவர்களை பாடசாலையிலிருந்து வெளியேற்றுதல். மாவனல்ல, மட்டக்களப்பு, அம்பாறை, பேருவளை ஆகிய இடங்களில் ஹலால் மற்றும் பர்தா அணிவதற்கு எதிராக ஆர்ப்பாட்ட ஊர்வலங்களை ஏற்பாடுசெய்து அங்கிருக்கும் ச…
-
- 0 replies
- 508 views
-
-
-வடிவேல்-சக்திவேல் மட்டக்களப்பு களுதாவளை சுயம்பு லிங்கப் பிள்ளையார் ஆலய வருடாந்த அலங்கார உத்சவத் திருவிழாவின் மூன்றாம் நாள் திருவிழா வெள்ளிக்கிழமை (27) இரவு இடம்பெற்றது. ஆலய பிரதம குரு சிவஸ்ரீ.மு.கு.சச்சிதானந்தக் குருக்கள் தலைமையில் பூஜைகள் மற்றும் கிரியைகள் என்பன நடைபெற்றன. ஆலயத்தின் தீர்த்தோற்சவம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை(07) நடைபெறவுள்ளது. http://tamil.dailymirror.lk/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%88/2010-08-09-09-39-45/115992-2014-06-28-06-02-08.html
-
- 2 replies
- 392 views
-
-
மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பு பொதுமாயனத்தில் உள்ள மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் பிரபல கணித ஆசிரியர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கிரான்குளம் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்பிக்கும் புதுக்குடியிருப்பினை கணபதிப்பிள்ளை சிவநேசன் (48வயது)என்னும் ஆசிரியரே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளது. இரவு முதல் ஆசிரியர் காணமல்போனநிலையில் குடும்பத்தினர் தேடிவந்ததாகவும் இந்த நிலையில் இன்று காலை சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டுபிடித்ததாகவும் உறவினர்கள் தெரித்தனர். - See more at: http://thinakkural.lk/article.php?local/pkeievdzbq6421ebbdfea21216714teb1se3a756a1fded7b35578525cxene#sthash.r63r4Z3y.dpu…
-
- 0 replies
- 854 views
-
-
நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று சனிக்கிழமை பகல் 12 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. தொடர்ந்து 16 தினங்கள் திருவிழா நடைபெறவுள்ளது. எதிர்வரும் யூலை மாதம் 11 ம் திகதி தேர்த்திருவிழாவும் மறுநாள் சனிக்கிழமை தீர்த்தத்திருவிழாவும், யூலை 13 ம் திகதி தெப்பத் திருவிழாவும் நடைபெறும். ஆலய மகோற்சவத்தை முன்னிட்டு அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். இன்றைய கொடியேற்றத் திருவிழாவில் பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=450823169728606872#sthash.Bs8yNSdv.dpuf
-
- 0 replies
- 374 views
-
-
வடமராட்சியின் கற்கோவளம் பகுதியில் மாணவன் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலில் தலையில் படுகாயமடைந்த மாணவன் மந்திகை ஆதார வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடற்கரை வீதியைச் சேர்ந்த ஸ்ரீ மனோகரன் கௌசிகன் (வயது 16) என்பவரே படுகாயமடைந்துள்ளார். இவர் தனியார் கல்வி நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த போது ஒரு குழுவினர் இடைமறித்து இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். இவருடன் கல்வி கற்கும் சில மாணவர்களும் இணைந்தே இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக காயமடைந்த மாணவனின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=536763171128240812#sthash.h9dRGeme.dp…
-
- 0 replies
- 359 views
-
-
னித பாப்பரசரின் இலங்கை விஜயத்தை தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்று எரிக் சொல்ஹய்ம் புலம்பெயர் தமிழ் அமைப்புகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கையில் இனக்குரோத நடவடிக்கைகள் தொடரும் அதே வேளை அண்மையில் அளுத்கமவில் முஸ்லிம்களுக்கு எதிரான இன வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தன. இதனைக் கருத்திற் கொண்டு பாப்பரசர் இலங்கைக்கான விஜயத்தை கைவிட வேண்டும் என்று உலகத் தமிழர் பேரமைப்பின் சுரேன் சுரேந்திரன் வலியுறுத்தியிருந்தார். அதன் மூலம் இலங்கை அரசுக்கு பாப்பரசர் தனது எதிர்ப்பை வெளிக்காட்ட வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார். இது தொடர்பாக அவர் ருவிட்டர் பதிவொன்றையும் வெளியிட்டிருந்தார். இதற்குப் பதிலளிக்கும் வகையில் பாப்பரசரின் விஜயம் தடுக்கப்ப…
-
- 0 replies
- 479 views
-
-
பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கும் முஸ்லீம் அமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சந்திப்பு தொடர்பாக ஊடகங்களுக்கு தகவல்களை வழங்க வேண்டாமென கடும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது. இறுதி முடிவொன்று எட்டப்படும் வரை சந்திப்பு தொடர்பாக எதனையும் தெரிவிக்ககூடாதென கோட்டபாய ராஜபக்ச முஸ்லீம் அமைப்பின் பிரதிநிதிகளுக்கு கண்டிப்பான உத்தரவோன்றை பிறப்பித்துள்ளார். பொது பல சேனாவின் செயற்பாடுகள்,கோட்டாவின் ஆதரவுடனேயே இடம்பெறுவதாக சுட்டிக்காட்டப்பட்ட வேளை அதனை மறுத்துள்ள அவர், முஸ்லீம் சமூகம் தொடர்பாக பௌத்த மதகுருமார் தம்மிடம் பல கரிசனைகளை வெளியிட்டுவருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/art…
-
- 0 replies
- 299 views
-
-
மாலைதீவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு ஜனாதிபதி சீஷெல்சிற்கு விஜயத்தை ஆரம்பித்துள்ளார். ஜனாதிபதியுடன் அவரது பாரியார் ஷிராந்தி ராஜபக்ஷவும் சீஷெல்சிற்கான விஜயத்தில் இணைந்து கொண்டுள்ளார். சீஷெல்சின் ஜனாதிபதி ஜேம்ஸ் மிச்செல் (James Michel) உடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். சீஷெல்சின் தலைநகர் விக்டோரியாவில் இலங்கைக்கான தூதரகமொன்று அமைக்கப்பட உள்ளது.இரு நாடுகளுக்கும் இடையில் சில உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மிகக் குறைவான மக்கள் தொகையை கொண்ட சீஷெல்சில் தூதரகம் அமைப்பதற்கும் குறுகிய காலத்தில் 2 தடவைகள் பயணம் செய்வதற்கும் என்ன அவசியம் ஏற்பட்டது என குளோபல் தமிழ்ச் செய்திகள் அறிய முற்பட்ட போது பல விடயங்களை தொகு…
-
- 0 replies
- 589 views
-
-
இலங்கையின் சிறுபான்மை சமூகமொன்றின் மீதான சமீபத்தைய தாக்குதல்கள் கடும் போக்கு பொதுபல சேனா- இராணுவம், ராஜபக்சாக்கள் மத்தியிலான தொடர்புகள் குறித்து உண்மயை கண்டறிய வேண்டிய தேவையை உருவாக்கியுள்ளது என நியுயோhக் டைம்ஸ் தனது ஆசிரிய தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது. பௌத்த பல சேனா என்ற அதிதீவிர தேசியவாத அமைப்பு - ஏற்பாடு செய்திருந்த முஸ்லீம் எதிர்ப்பு பேரணிக்கு பின்னரே இந்த வனமுறைகள் இடம்பெற்றன. இந்த அமைப்பிற்கு ஆளும் ராஜபக்ச குடுமபத்தின் தொடர்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் பெரும்பான்மை பௌத்தர்கள் உட்பட பலருக்கு பொதுபலசேனாவுடன் எந்த தொடர்பும் இல்லை. நாடு காயங்களுக்கு மருந்து போட வேண்டிய நிலையில் உள்ளது. வன்முறைகளுக்கு காரணமானவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கு…
-
- 0 replies
- 256 views
-
-
மீண்டும் தலைதூக்கும் காணித் தகராறுகள் - மோதலில் வயோதிபர்கள் இருவர் படுகாயம்- யாழ். மீசாலைப் பகுதியில் தந்தையின் வாள்வெட்டிற்கு இலக்காகி 22 வயதுடைய கோடீஸ்வரன் தர்மிகா என்ற இளம்பெண் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (27.06.14) இரவு இடம்பெற்றுள்ளது. தந்தைக்கும் தாய்க்கும் இடையில் இடம்பெற்ற சண்டையினை நிறுத்தச் சென்ற மகளை தந்தை வாளால் வெட்டியதில் மகள் கையிலும், தலையிலும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் குறிப்பிட்டனர். இதேவேளை, யாழ். மீசாலை வடக்கில் காணித் தகராறு காரணமாக சண்டையிட்டுக் கொண்ட இரண்டு வயோபதிபர்களை அவர்கள் இருவரின் மைத்…
-
- 0 replies
- 352 views
-