Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வெள்ளவத்தை மற்றும் தெஹிவளையில் அமைந்துள்ள நோலிமிட் ஆடை நிறுவனத்துக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக கூறப்படும் ஐந்து பேர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த இரண்டு நிறுவனங்களையும் மூடிவிடுமாறு அச்சுறுத்தல் விடுத்தவர்களே கைதுசெய்யபட்டுள்ளனர். மேலும் இரண்டு பேர் இந்த அச்சுறுத்தல் தொடர்பில் கைதுசெய்யப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை பாணந்துறையில் நோலிமிட் ஆடை நிறுவனம் தீக்கிரையான போது அங்கு பொருத்தப்பட்டிருந்த 24 கண்காணிப்பு கமராக்களும் முற்றாக எரிந்துள்ளன. எனவே அதன் தரவுகளை மீளப்பெற முடியுமா என்பது குறித்து ஆராய்ந்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=548623152523317712#sthash.yNMK2C6E.dpuf

  2. இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சாரதி அனுமதிப்பத்திரங்கள் விநியோகிக்கப்படவுள்ளன. மூன்று மாதகாலத்துக்கு என விநியோகிக்கப்படும் இந்த சாரதி அனுமதிப்பத்திரத்தை இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில் மென்ரக வாகனங்களுக்காக சுற்றுலாப்பயணிகள் பயன்படுத்தமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி சுற்றுலா பயணிகளின் நன்மை கருதி ஆகஸ்ட் மாதம் முதல் இந்த நடைமுறை அமுல்படுத்தப்படவுள்ளது. இதேவேளை மோட்டார் சைக்கிள்களை செலுத்துவதற்கான அனுமதிப் பத்திரங்களை வழங்குவது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்படுவதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது. - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=251783153323573169#stha…

  3. இலங்கையில் இனவாத அமைப்புகள் என்ற பெயரில் செயற்பட்டுவரும் தமிழ், முஸ்லிம் அமைப்புகளைத் தடை செய்வது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. சிறுபான்மையினருக்கெதிரான இனவாத தாக்குதல்களை மேற்கொண்டுவரும் பொதுபல சேனாவைத் தடை செய்ய வேண்டுமென்ற கோரிக்கை வலுப்பெற்று வருகின்றது. மேலும் பொதுபல சேனா அமைப்பை அரசாங்கமே பின்னின்று இயக்கி வருவதும் அம்பலமாகி வருகின்றது. இந்த நிலையில் பொது மக்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில் இலங்கையில் இனவாத, தீவிரவாத செயற்பாடுகளை முன்னெடுப்பதாகத் தெரிவித்து ஒன்பது முஸ்லிம் அமைப்புகள், நான்கு தமிழ் அமைப்புகள் மற்றும் ஒரு சிங்கள அமைப்பைத் தடை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எனினும் பொதுபல சேனாவிற்குப் பதில் வேறொரு சிங்கள அமைப்பைத் …

  4. "இலங்கைக்கு எதிராகப் பொருளாதாரத்தடை விதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அனைத்துலக சமூகத்திடம் முன்வைப்பதற்குரிய பொறிமுறைத் திட்டங்களை ஐ.நா. மனித உரிமைகள் சபை தற்போது வகுத்துவருகின்றது. அதற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற் படுவது அரசுக்கு கவலைய ளிக்கின்றது.'' இவ்வாறு தெரிவித்துள்ளார் லங்கா சமசமா ஜக் கட்சியின் தலைவரும் கூட்டணி அரசின் சிரேஷ்ட அமைச்சர்களுள் ஒருவருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண. ""ஐ.நாவிடமோ அல்லது அமெ ரிக்காவிடமோ முறையிடுவதன் மூலம் பிரச்சினைகள் தீரப்போவதில்லை. எனவே, உள்நாட்டுத திட்டங்கள் மீது கூட்டமைப்பு நம்பிக்கை வைக்கவேண்டும்'' என்றும் அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தால் முன்னெ…

  5. ஐ.நா விசாரணைக்குழுவின் நிபுணராக மார்டி அத்திசாரி 23 ஜூன் 2014 ஐக்கிய விசாரணைக்குழுவின் நிபுணர்களில் ஒருவராக முன்னாள் பின்லாந்து ஜனாதிபதி மார்டி அத்திசாரி நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது, ஐக்கிய நாடுகள்; மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, இலங்கை தொடர்பிலான விசாரணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவிற்கு ஆலோசனை வழங்கும் விசேட நிபுணர்கள் இருவர் நியமிக்கப்பட உள்ளனர். ஆலோசனை வழங்கும் நிபுணர்களில் ஒருவராக நோபள் சமாதான விருது வென்ற முன்னாள் பின்லாந்தின் ஜனாதிபதி மார்டி அத்திசாரி நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்திசாரி கொசோவோவிற்கான ஐக்கிய நாடுகள் பிரதிநிதியாக கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நியூநிலாந்தின…

  6. ஆற்றை திசை திருப்பும் முயற்சியாக மணல் மூட்டைகள் அடுக்கப்படுகின்றன இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மாவிலாறு அங்கை ஆற்றின் நீரைத் தடுத்து மாவிலாறு பக்கம் திருப்புவதற்காக விவசாயிகள் மண் மூட்டைகளை அடுக்கிவருகின்றனர். நீர் இன்றி ஆயிக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் பாதிக்கப்படுவதாக அப்பகுதி விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர். திருகோணமலை மாவட்டத்தில் மூதூர், வெருகல் மற்றும் சேருவில ஆகிய பிரதேசங்களில் மட்டும் சுமார் 22 500 ஏக்கர் செல் வேளாண்மை செய்கை நீர் இன்றி அழியும் ஆபத்தை எதிர்நாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இப்பகுதிகளில் மாவிலாறு நீரை நம்பி நெல் பயிரிட்டுள்ள தமிழ் , சிங்கள மற்றும் முஸ்லிம் விவசாயிகள் தமது பயிர்களை பாதுகாப்பதற்கான முயற்ச்சிகளில் கூட்டாக ஈடுபட்டுள்ளனர். கண்டல…

  7. அடுத்த பாராளுமன்ற அமர்வில் தான் இராஜினாமா செய்யவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியராளர் சந்திப்பின் போது இது குறித்து அவர் மேலும் தெளிவுப்படுத்தினார். "பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்யும் 225 உறுப்பினர்களில் நானும் ஒருவன். பொலிஸார் முன்னிலையில் வெலிபென்ன பிரதேசத்தில் முஸ்லிம் இனத்தவரின் வர்த்தக நிலையம் ஒன்றுக்கு தீ வைப்பதனை நான் கண்டேன். அவ்வாறு செய்ய இடமளிக்க வேண்டாம். அவர்களுக்கு பாதுகாப்பு அளியுங்கள் என கூறினேன். ஆனால் பாதுகாப்பு அளிக்கப்படவில்லை. பொலிஸ் மாஅதிபர் நிச்சயமாக பதவி விலக வேண்டும். அவ்வாறு இல்லை என்றால் சிங்கள இனத்திற்கு ஏற்பட்ட களங்கத்தை நீக்க முடியாது. அடுத்த பாராளும…

  8. அவுஸ்­தி­ரே­லிய அர­சாங்கம் தற்­கா­லிக பாது­காப்பு விசாக்­களை மீண்டும் அறி­மு­கப்­ப­டுத்த தயா­ரா­கி­றது. அகதி அந்­தஸ்து நிரூ­பிக்­கப்­பட்ட புக­லிடக் கோரிக்­கை­யா­ளர்­க­ளுக்கு வழங்­கப்­படும் நிரந்த விசாக்­களின் எண்­ணிக்­கையை மட்­டுப்­ப­டுத்­து­வது தவ­றா­ன­தென உயர் நீதி­மன்றம் தீர்ப்­ப­ளித்­ததைத் தொடர்ந்து, இதற்­கு­ரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­வ­தாக ஏ.பி.சி. செய்தி ஸ்தாபனம் அறி­வித்­துள்­ளது. தற்­கா­லிக பாது­காப்பு விசா வழங்கும் நடை­மு­றையை அறி­மு­கப்­ப­டுத்த அர­சாங்கம் மேற்­கொண்ட முயற்­சிகள் செனட் சபையில் முடக்­கப்­பட்­டன. இதனைத் தொடர்ந்து, குடி­வ­ரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசன் வரு­ட­மொன்றில் 2,773 விசாக்­களை மாத்­திரம் வழங்­கு­வதெனத் தீர்­மா­னித்­தி­ருந்தார். இந்த…

    • 0 replies
    • 569 views
  9. 'வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இலங்கையின் ஏனைய மாகாணங்களை விட வேறுபட்;ட பிரதேசங்கள் என்பதையும் எமது பிரச்சினைகள் வேறுபட்ட தன்மையுடையன என்பதனையும் நாங்கள் அரசியல் ரீதியாக எடுத்தியம்பி வருகின்றோம்' என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் திங்கட்கிழமை (23) தெரிவித்தார். வடமாகாணக் கல்வித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்று வரும் விளையாட்டுப் போட்டி நிகழ்வுகளின் தடகள மற்றும் மைதான போட்டிகள் யாழ்.துரையப்பா விளையாட்டரங்கில் திங்கட்கிழமை (23) ஆரம்பமாகியது. இந்தப் போட்டிகளினை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், 'வடக்கு கிழக்கு மாகாணங்களின் மொழி வேறு, மதங்கள் வேறு, நிலம் வேறு, மக்கள் வாழ்க்கை முறை…

    • 0 replies
    • 423 views
  10. நவரத்தினம் கபில்நாத் 'முல்லைத்தீவு மீனவ சமுதாயத்தின் வாழ்வாதாரத்;தை நலிவடைய செய்யும் முயற்சி இடம்பெறுகின்றது' என வட மாகாணசபையின் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினர் து.ரவிகரன் ஞாயிற்றுக்கிழமை(22) தெரிவித்தார். மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொர்பாக மீனவர்களால் அவரிடம் முiயிடப்பட்டதையடுத்து மாத்தளன் மற்றும் சாலை மீனவர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இவ் விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 'முல்லைத்தீவு மாவட்டத்தில், 27 கடற்றொழில் சங்கங்களில் உள்ள சுமார் 4143 மீனவர்கள் கடற்றொழிலையே நம்பி வாழ்க்கை நடத்துகின்றனர். இந்நிலையில் வெளிமாவட்ட மீனவர்களுக்கு அனுமதிகள் வழங்கி அவர்கள் சட்டவிரோத தொழில்முறைகளை தொடர்ந்து செய்து கொண்டிருப்பது முல்…

    • 0 replies
    • 341 views
  11. கருத்து சொல்ல முதல், இந்த பழமொழியை நினைவு கூறவேண்டும்.. மூஞ்சூரு போக வளை காணாதம், கெட்டகேட்டுக்கு விளக்குமாத்தையும் இழுத்துக்கொண்டு போச்சாம். எனது கருத்து, எமது நலன்களை கண்காணித்துக்கொண்டு பொத்திக்கொண்டு வேடிக்கை பார்ப்பதே நல்லது. இல்லை, வழக்கம்போல பொல்லை குடுத்து அடிவாங்குவது எண்டு முடிவெடுத்துவிட்டால், அங்கு யாழ்ப்பணத்தில், 1500க்கு அதிகமான முஸ்லீம் குடும்பங்கள் இன்று வந்திரங்கியிருக்கிரார்களாம். அவர்களுக்கு தொழ மசூதி கட்டிக்கொடுங்க்கள். உங்கள் கருத்து? சும்மா சமாதானாமே வா வா என புலம்பாமல் உங்கள் நெஞ்சில் படுவதை எழுதுங்கள்.

  12. http://www.youtube.com/watch?v=eM96PXClMnI குருணாகல் மாவட்டம் பன்னல இப்பாகமுவ நகரத்திலுள்ள முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான கடையொன்றை மூடுமாறு சிலர் எச்சரித்துவிட்டு, தாக்கிவிட்டுச் சென்றுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் 7.30 அளவில் வந்த மூவர், கடையை மூடுமாறு அச்சுறுத்திய பின்னர், கடையில் இருந்த கண்ணாடிப் பெட்டியை தேசப்படுத்திவிட்டுச் சென்றதாக குறித்த கடையில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, குருணாகல் மாவட்டம் இப்பாகமுவ - பன்னல பள்ளிவாசல் மீது இனந்தெரியாதோரால் கல் வீச்சுத் தாக்குதல் மேறகொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்தச் சம்பவங்களை அடுத்து பள்ளிவாசலில் பொதுமக்கள் கூடியிருந்தனர். எனினும், அனைவரது பாதுகாப்பும் உறுதிசெய்யப்படும் எனவும்…

    • 3 replies
    • 738 views
  13. முகாம்களில் உள்ள அகதிகள் நாடு திரும்ப விரும்பினால் 10 ஆயிரம் டொலர்கள் வரை வழங்கப் போகிறதாம் அவுஸ்ரேலியா! [Monday, 2014-06-23 10:59:24] அவுஸ்ரேலியாவின் தென்கிழக்கு ஆசிய முகாம்களிலுள்ள புகலிடக் கோரிக்கையாளர்களில் தாமாக முன்வந்து நாடு திரும்புவோருக்கு 10,000 அவுஸ்திரேலிய டொலர்களை வழங்கு வதற்கு அவுஸ்திரேலியா தீர்மானித்துள்ளது. பப்புவா நியூகினி, மானுஸ் தீவு உள்ளிட்ட தடுப்பு முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களுக்கே இவ்வாறு பணம் வழங்க அவுஸ்திரேலியா தீர்மானித்திருப்பதாக த சிட்னி மோர்னிங் ஹெரால்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. தடுப்பு முகாம்களில் உள்ளவர்கள் தாமாக முன்வந்து நாடு திரும்புவதற்கு ஏற்கனவே பணம் வழங்கப்பட்டு வந்த நிலையில் இந்தத் தொகையை அதிகரிக்க அவுஸ்திரேலிய அ…

  14. ஐ.நா. வில் சாட்சியமளிப்போரின் விபரம் பாதுகாக்கப்படும் news ஐ.நா. விசாரணையில் சாட்சியமளிக்கும் தமிழர்களுக்குரிய பாதுகாப்பு வழங்குவதற்கு இலங்கை அரசுக்கு உரிய அழுத்தங்கள் கொடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார் ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் ஒஸ்கார் பெர்னாண்டஸ். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் நேற்று நடத்திய சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நேற்றுமுன்தினம் அவருடன் நடத்திய சந்திப்பின்போது, ஐ.நா. விசாரணையில் சாட்சி யமளிக்கும் தமிழ் மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்திருந்தது. அதுகுறித்துக் கூறும் போதே ஐ.நா உதவிச் செயலர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல…

  15. தமிழரான நவநீதம்பிள்ளையாலும் பிரச்சினை, முஸ்லிமான செயிட் ஹு சைனாலும் பிரச்சினை! - ஜனாதிபதி மகிந்த விசனம் [sunday, 2014-06-22 09:11:49] ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளராக இருக்கும் நவநீதம்பிள்ளை தென்னாபிரிக்காவின் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவர். இவரது இடத்துக்கு இப்போது புதிய ஆணையாளராகத் தேர்வு செய்யப்பட்டிருப்பவர் ஜோர்தான் இளவரசரான ராட் செயிட் அல் ஹுசைன் ஒரு முஸ்லிம். என்று கடந்த வியாழக்கிழமை மாலை நடைபெற்ற அமைச்சரவையின் கூட்டத்திற்குத் தலைமை வகித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ கருத்து வெளியிட்டிருக்கின்றார். கடந்த வார இறுதியில் நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள் குறித்து அந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தனர்…

  16. வட்டரக்க விஜித்த தேரர் தன்னைத் தானே தாக்கிக்கொண்டார்: என்கிறது இலங்கைப் பொலிஸ்:- மஹியங்கனை பிரதேச சபை உறுப்பினரும் ஜாதிக பல சேனாவின் தலைவருமான வட்டரக்க விஜித்த தேரர், பொய்யான முறைப்பாட்டை செய்துள்ளார் என்றும் இது தொடர்பில் நீதிமன்றில் அவர் பதிலளிக்க வேண்டி ஏற்படும் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. தன்னை சிலர் தாக்கியதாக வட்டரக்க விஜித்த தேரர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இருப்பினும் இது தவறான முறைப்பாடாகும். விஜித்த தேரர், தன்னைத் தானே தாக்கிக் கொண்டுள்ளார் என்பது பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என்று பொலிஸ் தலைமையகம் மேலும் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, தேரருக்கு ஏற்பட்ட காயங்கள் குறித்து அவதானிக்கும் போது அவை அவராலேயே ஏற்…

    • 10 replies
    • 940 views
  17. பட்டிப்பளை பிரதேச செயலகம் மற்றும் கலாசார பேரவை ஆகியன இணைந்து நடாத்திய கொம்பு முறி நிகழ்வின் இறுதி அம்சமான தாய்க்கொம்பு முறிக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (20) முனைக்காடு இராமகிருஷ்ணா விளையாட்டு மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது. மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளரும் கலாசார பேரவைத் தலைவருமான திருமதி.சிவப்பிரியா வில்வரெத்தினம் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது. மகிழடித்தீவு கண்ணகியம்மன் ஆலயத்தில் இருந்து வட சேரி, தென் சேரி கொம்புகள் ஏடகத்தில் வைத்து அலங்கரிக்கப்பட்டு வீதி ஊர்வலமாக முதலைக்குடா கண்ணகியம்மன் ஆலயத்தை சென்றடைந்த பின்னர் அங்கு விசேட பூசை வழிபாடுகள் நடைபெற்றன. பல்லாயிரக்கணக்கான மக்கள் புடைசூழ நடைபெற்ற இவ் விளையாட்டில் தமிழர்களின் பாரம்பரிய கலைகளான வசந்தன் கூத்து, காவட…

    • 0 replies
    • 599 views
  18. இந்த நாட்டின் பொலிஸ் படையும், ஆயுதப் படைகளும் சிங்களமே என்று சூளுரைத்துப் பேசினார் வணக்கத்துக்குரிய ஒரு மதகுரு. கடும் சொற்பிரயோகங்களுடன், வன்முறையைத் தூண்டும் விதத்தில் அமைந்த அந்த மிக மோசமான பேச்சுக்கு, அங்கு திரட்டப்பட்டிருந்த மக்கள் ஆரவாரத்துடன் வரவேற்புக் கொடுத்தனர். அதன் பின்னர் இடம்பெற்ற ஊர்வலத்தின் போதே முஸ்லிம்கள் இலக்கு வைத்துத் தாக்கப்பட்டனர். சட்டத்தை நிலைநிறுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் வாளாயிருந்தனர். - இப்படி நாடாளுமன்றத்தில் விடயத்தைப் போட்டுடைத்திருக்கின்றார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். பேருவளை, அளுத்கம நிலைமை குறித்து கடந்த செவ்வாயன்று நாடாளுமன்றத்தில் நீண்ட உரை ஒன்றை இரா.சம்பந்தன் எம்.பி. ஆற்றினார் என்பது தெரிந்ததே.…

  19. ஜனாதிபதி அள்ளிவீசிய வாக்குறுதிகளில் முஸ்லீம் அமைச்சர்களின் மயக்கம் தெளிவதற்குமுன் தொடர்கிறதுஅடாவடி:- 22 ஜூன் 2014 தெஹிவளை வர்த்தக நிலையம் மீது தாக்குதல் - தொடருகிறது பதற்றம்:- தெஹிவளை பொலிஸ் நிலையத்தில் இருந்து சுமார் 100 மீற்றர் தொலைவில் அமைந்துள்ள முஸ்லிம் வர்த்தக நிலையத்தின் மீது இன்று அதிகாலை (22.06.14) தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தெஹிவளை ஹில் வீதியில் அமைந்துள்ள பெண்களுக்கான ஆடை நிலையம் மீது அதிகாலையில் கற்கள் வீசித் தாக்கப்பட்டுள்ளதுடன்- கட்டிடத்துக்கும் சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இதேவேளை நேற்றிரவு பாணந்துறை- சரிக்கமுல்லை மற…

  20. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் 10 நிமிடங்களில் சாரதி அனுமதிப்பத்திரம்! [sunday, 2014-06-22 09:06:34] News Service வெளிநாட்டில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் தங்களது நாட்டின் செல்லுபடியான சாரதி அனுமதிப் பத்திரத்தை வைத்திருந்தால், கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பத்து நிமிட நேரத்தில், இலகுரக வாகனங்களுக்கான மூன்று மாத காலத்துக்குச் செல்லுபடியாகும் உள்நாட்டு சாரதி அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். இந்த ஏற்பாடு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதல் நடைமுறைக்கு வருவதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் எஸ்.எம்.ஹரிச்சந்திரா தெரிவித்துள்ளார். இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தால் உல்லாசப்பயணிகள் விமான நிலையத்திலேயே சட்ட ரீதியான…

  21. பொது­பல சேனா அமைப்பை நம்பும் நாட்­டுப்­பற்­றுள்ள சிங்­கள மக்கள் வதந்­தி­களை நம்­பாமல், பொறு­மை­யுடன் செயற்­பட வேண்டும். ஞான­சார தேரரைக் கைது செய்ய வேண்டும். பாதுகாப்புச் செய­லா­ளரின் பின்னால் நின்று செயற்­ப­டு­கின்றார் என கூச்­ச­லிடும் அமைச்­சர்­களும் எதிர்க்­கட்சித் தலைவர் உட்­பட எம்.பிக்­களும் இந்த சம்­ப­வத்தின் ஆரம்பம் என்ன? என்­பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்று பொது­பல சேனா அமைப்பின் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் நேற்று வேண்­டுகோள் விடுத்தார். கொழும்பு, கிரு­லப்­ப­னை­யி­லுள்ள பொது­பல சேனா அமைப்பின் தலை­மை­ய­கத்தில் நேற்று மாலை நடை­பெற்ற செய்­தி­யாளர் மாநாட்­டி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் கூறு­கையில், இலங்கை சர்­வ­தேச அழுத்­தத்­திற்கு ம…

  22. - நா.நவரத்தினராசா தெல்லிப்பழை துர்க்காபுரம் பேரம்பல வைரவர் ஆலயத்தின் வருடாந்த வேள்வித் திருவிழா இன்று சனிக்கிழமை (21) அதிகாலை இடம்பெற்றது. நீதிமன்ற கட்டளைக்கமைய மூடி மறைக்கப்பட்ட மாதிரி கொள்கலனில் வைத்து தனித்தனியாக 250 இற்கும் மேற்பட்ட கிடாய் ஆடுகள் இந்த வேள்வியின் போது வெட்டப்பட்டன. ஒவ்வொரு ஆட்டினையும் தெல்லிப்பளை பிரதேச சபையின் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் பரிசோதனை செய்த பின்னரே வெட்டப்பட்டன. இதற்கு முன்னர் கடந்த சனிக்கிழமை (14) கவுணாவத்தை நரசிம்ம வைரவர் ஆலயத்தின் வேள்வியின் போது 400 இற்கும் மேற்பட்ட கிடாய் ஆடுகள் வெட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/115114-2014-06-21-10…

    • 3 replies
    • 844 views
  23. மாத்தளை கோயிற் காணி போலி பத்திரத்தினூடாக பிரான்சில் இருப்பவருக்கு விற்பனை ஜூன் 21, 2014 நாட்டில் பல இடங்களிலும் பெறுமதியான காணிகளை, போலி காணி உறுதிப்பத்திரங்களுடாக விற்பனை செய்து பல கோடி ரூபாய்களை மோசடியான முறையில் பெற்று வந்த குழு தொடர்பில் தகவல்கள் அம்பலமாகியுள்ளன. மாத்தளையிலுள்ள, கோடிக்கணக்கில் பெறுமதியான காணியன்று இவ்வாறு விற்பனை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. ஒரு குழுவாக இணைந்தே இந்த காணி மோசடி முன்னெடுக்கப்படுவதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பில் உயர்மட்ட விசாரணைகள் ஆரம்பிக்கபட்டுள்ளதாக சிறீலங்கா இரகசியக் காவல்துறையினர் தெரிவித்தனர். மாத்தளை, மந்தண்டாவளை ஆதிலட்சுமி கோயிலும் முற்றாக அழிக்கப்பட்டு, அந்த கோவிலிருந்த காணி துண்டாடப்பட்டு போலி காணி உறுதிப்பத்திர…

  24. - சுப்பிரமணியம் பாஸ்கரன் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராகத் துண்டுப்பிரசுரங்கள் முல்லைத்தீவு மாவட்டத்தின் பல இடங்களில் நேற்று சனிக்கிழமை (21) ஒட்டப்பட்டிருந்தது. வடமாகாண மீனவர் சங்க ஒன்றியம் என்று பெயரிடப்பட்டு ஒட்டப்பட்டுள்ள அந்த துண்டுப்பிரசுரத்தில், "முதலமைச்சர் விக்னேஸ்வரன் தமிழக மீனவர்களின் பிரச்சினைகளுக்காக முன்வரும் தலைவரா அல்லது இலங்கை தமிழ் மீனவர்களின் பிரச்சினைகளுக்காக முன்வரும் தலைவரா?" என தலையங்கமிடப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு, மூங்கிலாறு, வலைஞர்மடம், புதுமாத்தளன் ஆகிய இடங்களிலே இவ்வாறு துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10…

    • 0 replies
    • 666 views
  25. யாழ்ப்பாண நகரம் மற்றும் அதனை அண்மித்த பகுதியிலுள்ள பள்ளிவாசல்களுக்கு நாவாந்துறை சூரியவெளி இராணுவ முகாம் இராணுவத்தினர் பாதுகாப்பு வழங்குவார்கள் என யாழ். பண்ணை இராணுவ முகாம் பிரிகேடியர் வி.வி.டி.பி.அபயநாயக்க நேற்று சனிக்கிழமை (21) இரவு தெரிவித்தார். யாழ். உலமா சபைத் தலைவர் ஏ.என்.ஏ.அசீப், யாழ். முஸ்லீம் பள்ளிவாசல்களின் நிர்வாகத்தினர் மற்றும் பண்ணை இராணுவ முகாம் அதிகாரிகளுக்கிடையிலான கலந்துரையாடலொன்று பண்ணை இராணுவ முகாமில் நேற்று சனிக்கிழமை (21) இரவு 9 மணிக்கு இடம்பெற்றது. இதன்போது, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முஸ்லீம் தொழுகை அறை மீது கழிவொயில் வீச்சுத் தாக்குதல் மற்றும் எம்.ஓ வீதியிலுள்ள கமால் பள்ளிவாசல் ஐன்னல் கண்ணாடிகள் மீது தாக்குதல் உள்ளிட்ட சம்பவங்களினால் முஸ்லீம்கள் தங்…

    • 0 replies
    • 324 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.