Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யுத்த வலயத்தில் பாலியல் வன்கொடுமைகளை தடுக்கும் லண்டன் மாநாட்டில் பங்கேற்கப் போவதில்லை – அரசாங்கம் 10 ஜூன் 2014 யுத்த வலயங்களில் பாலியல் வன்கொடுமைகளை தடுக்கும் லண்டன் மாநாட்டில் பங்கேற்கப் போவதில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. யுத்த வலயங்களில் பாலியல் வன்கொடுமைகளை தடுக்கும் நோக்கிலான பிரகடனமொன்றை அமுல்படுத்தும் பிரித்தானியாவின் திட்டம் வரவேற்கப்பட வேண்டியது என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.எனினும், இந்த மாநாடு கூட இலங்கைக்கு எதிராக பயன்படுத்தக் கூடிய அபாயம் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். யுத்தம் இடம்பெற்ற காலத்தில் அரச படையினர் ஆண் மற்றும் பெண் ஆகிய இரண்டு பாலாரையும் பாலியல் ரீதியாக துன்புறுத்தினார்கள் என விடுதலைப் புலி ஆதரவாளர்கள் குற்றம் சும…

  2. இறுதிப்போர் குறித்து சொல்ஹெய்முக்கு என்ன தெரியும்? - நகைக்கிறது இலங்கை அரசு. [Tuesday, 2014-06-10 09:02:35] இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் சாட்சியமளிக்கவுள்ளதாக நோர்வேயின் முன்னாள் சிறப்பு தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் கூறிய கருத்து நகைப்பிற்குரியது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. போர்க்குற்றம் தொடர்பில் எந்தவொரு சர்வதேச நீதிமன்றிலோ அனைத்துலக தீர்ப்பாயத்திலோ சாட்சியமளிக்கத் தயார் என அண்மையில் ஆங்கில வார இதழுக்கு அளித்த செவ்வியில் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்திருந்தார். போர்க் குற்றச் செயல்கள் தொடர்பில் சாட்சியமளிக்கும் தகுதி கிடையாது எரிக் சொல்ஹெய்மிற்கு இல்லையெனவும் அவரது கருத்து நகைப்பிற்குரியது எனவும் அரசாங்கத்தின் சிரேஸ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளா…

  3. முஸ்லிம்களுக்காக ரமழான் நோன்பை முன்னிட்டு சவூதி அரசாங்கம் அன்பளிப்புச் செய்த 200 தொன் பேரீச்சம் பழங்கள் பிரதி அமைச்சர் ஒருவரினால் பெற்றுக் கொள்ளப்பட்டு அவை அமைச்சர்களிடையே பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி குற்றம் சுமத்துகிறார். கூட்டுறவு உள்நாட்டு வியாபார அமைச்சர் ஜோன்ஸ்டர் பிரனாந்துவுக்கு கடிதம் ஒன்றில் இதுபற்றி அவர் குறிப்பிட்டு எழுதியுள்ளார். அவ்வாறு அமைச்சர்களிடையே பகிர்ந்தளிக்கப்பட்டுள்ள பேரீச்சம் பழங்களை புறக்கோட்டை வியாபார நிலையங்களுக்கு விற்பனை செய்வதற்கு போட்டி நிலவுவதாகவும் அசாத் சாலி குறிப்பிடுகின்றார். இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது - அந்தப் பேரீச்சம்பழ பைக்கற்றுக்களில் விற்பனை செய்வதற்குத் தடை எனவு…

  4. ஏஞ்சலினா ஜோலி, வில்லியம் ஹேக் இணைத் தலைமையில் மாநாடு நடக்கிறது மோதல்களின் மோது பாலியல் வன்முறைகள் நடப்பதை தடுக்கும்நோக்குடன் நடத்தப்படும் உலகளாவிய மாநாடு ஜூன்- 9ம் திகதி செவ்வாய்க்கிழமை லண்டனில் தொடங்குகின்றது. இந்த நான்கு நாள் மாநாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர். இந்த மாநாட்டில் இலங்கை கலந்துகொள்ளப் போவதில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் வில்லியம் ஹேக் மற்றும் ஐநாவின் அகதிகளுக்கான உயர் ஆணையத்தின் சிறப்புத் தூதரான ஹாலிவூட் நடிகை ஏஞ்சலீனா ஜோலி ஆகியோரின் இணைத் தலைமையில் இந்த மாநாடு நடைபெறுகின்றது. இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்கு இலங்கைக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை எ…

  5. திங்கட்கிழமை, 09 ஜூன் 2014 23:52 0 COMMENTS -எம்.எஸ்.எம்.நூர்தீன் 'ஆலயத்திற்கு போய் வந்துகொண்டிருந்த மகனை சுட்டுக் கொன்றார்கள். இன்னொரு மகன் பாடசாலையிலிருந்து வந்துகொண்டிருந்த போது கடத்தப்பட்டான் என்று ஆரையம்பதி பிரதேசத்தைச் சேர்ந்த பூபாலபிள்ளை நேசம்மா என்ற தாய், காணாமல் போனோர் தொடர்பில் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்தார். மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் நேற்று திங்கட்கிழமை (09) இடம்பெற்ற மட்டக்களப்பு மாவட்ட சாட்சிகளின் இறுதி சாட்சியப் பதிவின் போதே மேற்படி தாய் சாட்சியமளித்தார். மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற ஆணைக்குழு அமர்வில் தொடர்ந்து சாட்சியமளித்த நேசம்மா கூறியதாவது, 'கடந்த 12.7.1989ஆம் ஆண்டு எனது மகன் பூபால…

  6. ஐ.நாவின் புதிய மனிதவுரிமைகள் ஆணையாளராக பதவியேற்க்கவுள்ள ஜோர்தான் இளவரசர் சையிட் அல் ஹூசைன் இலங்கை விவகாரத்தில் கடும் போக்கை வெளிப்படுத்துவார் என நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட சர்வதேச மனிதவுரிமை மற்றும் மனிதாபிமான சட்டமீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் ஆகிய விவகாரங்கள் தொடர்பில் உறுதியான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் எடுக்கத் தவறினால், பக்குவம் வாய்ந்த மனிதவுரிமை ஆர்வலர் சையிட் அல் ஹூசைன் கடும் போக்கைக் கடைப்பிடிக்கக் கூடும் என இவ்வூடகம் குறிப்பிட்டுள்ளது. ஐ.நா மனிதவுரிமைகள் ஆணைக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நிராகரித்துள்ள இலங்கை அரசாங்கம், ஐ.நா விசாரணைக் குழு…

  7. இலங்கைக்கான வியட்நாம் தூதுவரான ரொன் சிங் தங் தலைமையிலான குழுவினர் இன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்தனர் வியட்நாம் தூதர் இன்று முற்பகல் 11.30 மணியளவில் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனை அவரது வாசஸ்தலத்தில் சந்தித்தார். இந்த சந்திப்புக் குறித்து முதலமைச்சர் அலுவலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- வியட்நாமின் அனுசரணையுடன் கிளிநொச்சி, வவுனியா போன்ற இடங்களில் நீர்வாழ் உயிரின மேம்பாட்டுத் திட்டங்களின் நிலைமையை பார்வையிட அந்நாட்டின் தூதர் குழு யாழ்ப்பாணம் வந்தனர். இதன்போது வடக்கு மாகாண முதலமைச்சரை இந்த குழுவினர் சந்தித்துக் கலந்துரையாடினர். இதன்போது - நாட்டின் பல பாகங்களிலும் பரிசீலனை செய்ததில் வடமாகாணமே நீர் வாழ் உயிரினங்களை வளர்த்தெடுக்கும் தொழிலுக…

    • 1 reply
    • 654 views
  8. தமிழருக்கான உரிமைகளை பெற்றுக்கொடுக்க அமைச்சர் டக்ளஸினால் மட்டுமே முடியும் - கம்பவாரிதி இ. ஜெயராஜ் 08 ஜூன் 2014 கம்பன் கழக அம்மன் ஆலயத்திற்கு டக்ளஸ் ரூ. 5 இலட்சம் நன்கொடை மக்களுக்கான சிறந்த தலைமைத்துவம் உள்ளவராக மட்டுமல்லாமல் இனம் பற்றிய உண்மையான அன்பும், அக்கறையும் கொண்டவராகவும் சுயமாக முடிவெடுக்கக் கூடியவருமாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மட்டுமே விளங்கி வருகின்றார் என கம்பன் கழக ஸ்தாபகர் கம்பவாரிதி இ-ஜெயராஜ் தெரிவித்துள்ளார். கொழும்பு வெள்ளவத்தையில் அமைந்துள்ள கம்பன் கழக கேட்போர் கூடத்தில் கழகத்தைச் சார்ந்தோருடன் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடிய போதே ஜெயராஜ் இவ்வாறு தெரிவித்துள்ளார். தமிழர்களுக்…

  9. மலையகத்து நிலைமைகளை ஆய்வு செய்வதால் மாத்திரம் மலையகத்தில் மாற்றும் வராது. அந்த ஆய்வின் முடிவுகளை மலைய சமூகத்தின் ஊடாக அரசியல் செயற்பாட்டாளர்கள் எடுத்து செல்லவேண்டும். ஆய்வுகள் மூலமாக கனவுகள் காண மட்டுமே முடியும். அந்த ஆய்வு கனவுகளை, நனவாக்க அர்ப்பணிப்பு கொண்ட களப்பணியாளர்கள் தேவை. இதுதான் தென்னிலங்கையில் நடந்தது. இதுதான் வடகிழக்கிலும் நடந்தது. இதுதான் மலையகத்திலும் நடக்க வேண்டும். களத்தில் இறங்கி மக்கள் மத்தியில் அரசியல் பணியாற்ற மலையக இளைஞர்கள் முன்வராத வரைக்கும் மலைநாட்டில் மாற்றம் வராது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார். மலையக ஆய்வு மையம் கொழும்பு மிலாகிரிய புனித. போல் தேவாலய மண்டபத்தில் நடத்திய, "பெரட்டுக்களம்" காலாண்டு சஞ்சிகை ஆய்வு நிகழ…

    • 0 replies
    • 432 views
  10. வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்துக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற இளைஞர்கள் இருவர் பரந்தன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் இன்று நண்பகல் 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. அடுத்தடுத்துச் சென்ற இரு டிப்பர் வாகனங்களுக்கு இடையில் இவர்கள் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் சிக்கி விபத்துக்குள்ளானது. இந்தச் சம்பவத்தில் இளைஞர்களும் இருவரும் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர் . யாழ்ப்பாணம், ராச வீதி, கோப்பாயைச் சேர்ந்த உதயராசா விதுசன் (வயது 21), சிவானந்தராசா ஜேமஸ் நெல்சன் (வயது 25) ஆகியோரே உயிரிழந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சடலங்கள் கிளிநொச்சி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன. கிளிநொச்சிச் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர…

    • 0 replies
    • 548 views
  11. நரேந்திர மோடியைச் சந்தித்தார் ஜெயலலிதா இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகளைப் பிரித்து தனி ஈழம் அமைக்க இலங்கைத் தமிழர் மத்தியும் புலம் பெயர்ந்த தமிழர்களிடமும் பொது வாக்கெடுப்பு நடத்தக்கோரி ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா தீர்மானம் கொண்டுவர வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார். இன்று செவ்வாய்க்கிழமை,இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியைச் சந்தித்த தமிழக முதலமைச்சர் ஜெயல்லிதா, இலங்கை, தமிழகம் தொடர்பான பிரச்சனைகள் குறித்து கோரிக்கை மனு ஒன்றையும் அளித்தார். நதி நீர்ப் பிரச்சினைகள்இலங்கை பிரச்சினை குறித்து, அக்கடிதத்தில். ஜெயலலிதா, இலங்கையில் நடந்த இனப் படுகொலையைக் கண்டித்து ஐநாவில் இந்தியா கண்டனத் தீர்மானம் கொண்டுவர வேண்டும், தனி…

  12. தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் பெயரில் பல்வேறு மோசடிகள் இடம்பெற்று வருவதனால் தமிழ் பெண்களும் இளைஞர்களும் மிகவும் அவதானமாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் என பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான அஜித் ரோஹன தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கொழும்பு பொலிஸ் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இதனை தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் யுத்தம் நிறைவடைந்த பிற்பாடு விடுதலை புலிகள் இயக்கத்தின் பெயரில் பல்வேறு மோசடிகள் இடம்பெற்று வருகிறது. இதற்கமைய கடந்த மே மாதம் 31 ஆம் திகதி மானிப்பாய், கோப்பாய் ஆகிய பொலிஸ் நிலையங்களுக்கு நள்ளிரவு 12.30 மணிக்கு கிடைத்த விஷேட தொலைபேசி அழைப்பினூடாக இலங்கை பெண்ணொருவரின் தொலைபேச…

  13. வடக்கில் வாகனச் சோதனைகளில் இறங்கியது விசேட அதிரடிப்படை! [Monday, 2014-06-09 10:35:06] வடக்கில், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே பணியாற்றி வரும் பொலிஸாருடன் தாமும் இணைந்து செயற்பட்டு வருவதாக என வடமாகாண பொலிஸ் விசேட அதிரடிப்படைப் பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள ஜே.கே.ஆர்.ஏ. பெரேரா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், வடமாகாணத்தில் தற்போது திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. எனவே பொதுமக்களின் நலனைக் கருத்திற்கொண்டு வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம். அதன்படி பொலிஸாருடன் எமது படையினரும் இணைந்து விசேட செயற்றிட்டம் ஒன்றினை நேற்று முன்தினம் முதல் முன்னெடுத்துள்ளனர். யுத்தம் முடிந்த பின்னரும் வீதிச்சோதனைகள் நடாத…

  14. கடல் அலையில் கால் நனைப்­ப­தற்கே சிலர் பயப்­ப­டு­வ­துண்டு. கடல் பற்­றிய மர்­மங்­களும் நம்மால் ஊகிக்க முடி­யாத அத­னது இயங்­கு­நி­லையும் தொலை­வி­லி­ருந்தே கடலை இரசிப்­ப­தோடு நம்மை நிறுத்தி விடு­கின்­றன. ஆனால் பலரின் வாழ்க்கை கடலை நம்­பித்தான் ஓடிக் கொண்­டி­ருக்­கின்­றது. இவ்­வாறு திரை­க­ட­லோடி திர­வியம் தேடச் சென்ற நிலையில் சோமா­லிய கடற்­கொள்­ளை­யர்­களால் கப்­ப­லோடு சேர்த்து கடத்­தப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த இலங்­கையர் இருவர் உட்­பட 11 பேர் மூன்று வரு­டங்கள் 7 மாதங்கள் கழித்து உயி­ருடன் கடந்த வெள்ளிக்­கி­ழமை மீண்டு வந்­தி­ருக்­கின்­றனர். கடற் கொள்­ளை­யர்­களால் பிடிக்­கப்­பட்டு, திக்குத் தெரியாத கடற்­ப­ரப்­பிலும் ஜன­சஞ்­சா­ர­மற்ற காட்­டுப்­பு­றங்­க­ளிலும் தடுத…

    • 0 replies
    • 417 views
  15. ஐ.நா. விசாரணைக் குழுவுக்கு நாட்டுக்குள் அனுமதியில்லை news இலங்கையில் இடம்பெற்ற இறுதிப்போர் தொடர்பில் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் முதல் ஐக்கிய நாடுகளின் சபையால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை முற்று முழுதாக இலங்கை அரசு நிராகரித்துள்ள நிலையில், ஐ.நா. விசாரணைக் குழுவை நாட்டிற்குள் அனுமதிப்பதா, நுழைவிசைவு வழங்குவதா, உள்நாட்டில் பல பகுதிகளுக்கும் செல்ல ஆவன செய்து கொடுப்பதா போன்ற கேள்விகள் அர்த்தமற்றவை இவ்வாறு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார் இலங்கை வெளிவிவகார அமைச்சின் வெகுசன தொடர்புப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் ஏ.எம்.ஜே.சாதிக். இலங்கைக்கான ஐ.நா. விசாரணைக்குழுவின் இணைப்பாளராக சண்ட்ரா பெய்டாஸ் நியமிக்கப்பட்டுள்ளார் என்று ஐ.நா. அறிவிப்பு வெளியாகியுள்ளது. அத்துடன…

  16. வடக்கு முதலமைச்சர் மீது கடந்த சில மாதங்களாக மிக மோசமான அணுகுமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக சில ஊடகப்பிரிவினர் அதிக குற்றச்சாட்டை மேற்கொண்டு வருகின்றனர். இது இரண்டு பிரதான கேள்விகளை ஏற்படுத்தியுள்ளது. ஒன்று முதலமைச்சரின் இயல்பினை புரிந்துகொண்டு அவரிடமிருந்து தமிழ் மக்கள் பெறவேண்டியதை பெறமுடியாதவர்களாக உள்ளனரா? அல்லது தமிழ்மக்களின் இயல்புக்கு இசைய முடியாது தன்னை மாற்றிக்கொள்ள முடியாது முதலமைச்சர் தத்தளிக்கிறாரா? என்பதேயாகும். இந்தக் கட்டுரையும் ஏறக்குறைய இவ்விரண்டு பக்கங்களையும் அலசுவதன் மூலம் முதலமைச்சர் மீதான அவதூறுகளின் உண்மைகளை கோடிட்டுக் காட்ட முயலுகிறது. வடக்கு முதலமைச்சர் மீது இலங்கை ஆளும்தரப்பும் பௌத்த தீவிரவாத சக்திகளும் எதிர்த்தரப்பும…

    • 2 replies
    • 1.3k views
  17. சிராணி பண்டாரநாயக்க விவகாரமும் ஜெனிவாவில் எதிரொலிக்கும்! [Monday, 2014-06-09 07:54:12] முன்னாள் பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்க, குற்றப் பிரேணை மூலம் பணி நீக்கம் செய்யப்பட்டமை குறித்து, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் கேள்வி எழுப்பப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாளை ஜெனிவாவில் ஆரம்பமாகும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 26வது அமர்வில், இலங்கையின் நீதிமன்றக் கட்டமைப்பு குறித்தும் கேள்வி எழுப்பப்பட உள்ளது. அசிய சட்ட வள மையம் என்ற தன்னார்வ அமைப்பினால் இந்தக் கேள்வி எழுப்பப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. தென் ஆசிய பிராந்திய வலய நாடுகளில் நீதிமன்றக் கட்டமைப்பு சுயாதீனமாக இயங்கவில்லை என ஆசிய சட்ட வள மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக இலங்கை பங…

  18. ஜனாதிபதியின் உண்மையான முகம் அம்பலமாகியுள்ளது: ஜி.கே ஞாயிற்றுக்கிழமை, 08 ஜூன் 2014 16:57 இந்தியாவுக்கு வந்து மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்று, நல்லெண்ண அடையாளமாக மீனவர்களை விடுவிப்பதாகவும் கூறிய இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உண்மையான முகம், மீனவர்களின் தொடர் கைது மூலம் அம்பலமாகியுள்ளது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். ஈரோடில் செய்தியாளர்களிடம் பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், இலங்கை கடற்படையினரால் கடந்த 24 மணி நேரத்திற்குள் 131 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 53 மீனவர்களை இலங்கை கடற்படையினர் விடுவித்துள்ளனர். ராமேஸ்வரத்திலிருந்து சனிக்கிழமை அதிகாலை 750 விசைப்படகுகளில் 90…

  19. புலிகளுடன் தொடர்புடைய ஒருவரைத் தேடுகிறதாம் பொலிஸ்! [sunday, 2014-06-08 19:21:48] அண்மையில் மடு பிரதேசத்தில் இடம்பெற்ற சோதனை நடவடிக்கைகளின் போது, தப்பிச் சென்ற விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய ஒருவர் குறித்து தகவல் தருமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன கோரியுள்ளார். விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட குண்டுகளை தோண்டி எடுத்து அவற்றில் இருக்கும் ரி.என்.ரி வெடி மருந்தை இந்த சந்தேக நபர், மீனவர்களுக்கு ஏனையவர்களுக்கும் விற்பனை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினரான திலங்க ஜூட் அன்டனி என்ற இந்த நபரை தாம் தேடி வருவதாகவும், அவரை கண்டவர்கள் 011-24451636 அல்லது 011 -2452634 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்ப…

  20. இலங்கை யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச நீதிமன்றங்களில் சாட்சியமளிக்க தயார் – சொல்ஹெய்ம் 08 ஜூன் 2014 இலங்கை யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச நீதிமன்றங்களில் சாட்சியமளிக்கத் தயார் என முன்னாள் நோர்வேயின் சர்வதேச விவகார அமைச்சரும், முன்னாள் இலங்கை சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அல்லது அதற்கும் நிகரான வேறும் சர்வதேச நீதிமன்றில் சாட்சியமளிக்கத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்தக் குற்றச் செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சாட்சியமளிக்குமாறு கோரினால் எந்தவொரு சர்வதேச நீதிமன்றிலும் சாட்சியமளிக்கத் தயார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 2009 மே 17ம் திகதி சிரேஸ்ட தமிழீழ விடுதலைப் புலி உறுப…

    • 2 replies
    • 1k views
  21. அரசாங்கத்தின் முக்கிய இரகசியங்களை வெளிநாடுகளுக்கு விற்ற ஆறு அமைச்சர்கள்! [sunday, 2014-06-08 08:22:07] பணத்துக்காக இலங்கை அரசாங்கத்தின் உள்ளகத் தகவல்கள் பலவற்றை ஆறு அமைச்சர்கள் வெளிநாடுகளுக்கு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை நாட்டின் அமைச்சரவை மற்றும் பாதுகாப்பு இரகசியங்கள்- அரசியல் திட்டங்கள் முக்கியமான வெளிநாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஒருவரால் நடத்தப்படும் இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. உயர்மட்ட வெளிநாட்டு விசாரணை குழுவினரே இத்தகவல்களை தெரிந்து கொண்டுள்ளதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டிற்கு தகவல் வழங்கிய அமைச்சர்கள் கண்டி- கம்பஹா- மட்டக்களப்பு- புத்தளம்- அம்பாறை மாவட்டங்களை சேர்ந்தவர்கள் எனவும் இரண்டு பிரதி அமைச்சர்கள் …

    • 2 replies
    • 638 views
  22. இலங்கை விசாரணை குழுவிற்கு நியூசிலாந்து நீதவான் தலைமை தாங்கவுள்ளார்:- 08 ஜூன் 2014 ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் இலங்கை தொடர்பான விசாரணைக் குழுவிற்கு நியூசிலாந்து நீதவான் ஒருவர் தலைமை தாங்க உள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. நியூசிலாந்தின் முன்னாள் ஆளுனர் நாயகமும். மாவட்ட பிரதம நீதவானுமான 70 வயதான டேமி சில்வியா கார்ட்ரைட் (Dame Silvia Cartwright) இலங்கை தொடர்பான சர்வதேச விசாரணைக் குழுவிற்கு தலைமை தாங்கவுள்ளார். எதிர்வரும் ஜூலை மாதம் இந்த விசாரணைகள் நடத்தப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். கார்ட்ரைட் ஓர் சர்வதேச நீதவான் என்பது குறிப்பிடத்தக்கது. கம்போடிய தொடர்பான சர்வதேச நீதிமன்றில் கார்ட்ரைட் கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது…

  23. முல்லைத்தீவில் பெரும் விபச்சார வலையமைப்பு: காவல்த்துறை வெளியிடும் அதிர்ச்சி தகவல்கள்! முல்லைத்தீவில் பெரும் விபச்சார வலையமைப்பொன்றை காவல்த்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். வெளிமாவட்டங்களிலிருந்து இளம்பெண்களை கொண்டு வந்து இங்கு விபச்சாரத்தில் ஈடுபடுத்திய கணவன் மனைவியான இரண்டுபேரை நேற்று காவல்த்துறை கைது செய்தது. முல்லைத்தீவின் சிலாவத்தை தெற்கில் பெரும் விபச்சார விடுதியொன்றை இவர்கள் நிர்வகித்து வந்தார்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் இருவருடனும் சேர்த்து மொத்தம் மூன்றுபேர் இந்த விபச்சார வலயத்தில் இருந்து கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மூவரும் நேற்று நீதவான் முன்னிலையில் நிறுத்தப்பட்டனர். இவர்களை எதிர்வரும் 19ம் திகதி வரை தடுப்பு காவலில் வைக்…

    • 1 reply
    • 1.1k views
  24. பயிற்சிப் பட்டறைகளையும் இனவாத சாயம்பூசி அரசு தடுக்கமுற்படுவதை யாழ்ஊடக அமையம் வன்மையாக கண்டிக்கிறது 08 ஜூன் 2014 ஊடகவியலாளர்களது பயிற்சிப்பட்டறை குழப்பப்பட்டமை இலங்கையில் ஊடகத்துறை எதிர்கொண்டுள்ள நெருக்குவாரங்களின் அடையாளமே என தெரிவித்துள்ள யாழ்.ஊடக அமையம் அதனை வன்மையாக கண்டித்துமுள்ளது. இன்று யாழ்.ஊடக அமையத்தினால் இன்று வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுகையில், இலங்கையின் வடபுலத்தில் ஊடகங்கள் மீதும் ஊடகவியலாளர்கள் மீதும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் மிக மோசமான கட்டத்தினை அடைந்துள்ள நிலையில் அவர்களது துறைசார் அறிவு மேம்பாட்டிற்கான பயிற்சிப்பட்டறைகளை கூட இனவாத சாயம் பூசி அரசு தடுக்க முற்படுவதை யாழ்.ஊடக அமையம் வன்மையாக கண்…

  25. தலைமன்னார் கடற்பரப்பில் அத்துமீறிய 42 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது! [sunday, 2014-06-08 07:55:55] இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 42 இந்திய மீனவர்களை தலைமன்னார் கடற்படையினர் நேற்று கைதுசெய்துள்ளனர். அவர்கள் கடற்றொழிலுக்கு பயன்படுத்திய 8 படகுகளையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் தலைமன்னார் கடற்படைமுகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று மன்னார் மாவட்ட கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அதிகாரிகளிடம் கடற்படையினர் ஒப்படைக்கவுள்ளனர். இவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மன்னார் மாவட்ட கடற்றொழில் நீரியல் வள திணைக்களம் முன்னெடுக்கவுள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=11090…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.