ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143540 topics in this forum
-
முன்னாள் போராளிகளுக்கு சிங்கப்பூரில் தொழில் வாய்ப்பு முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிப் போராளிகளுக்கு சிங்கப்பூரில் தொழில் வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இறுதிக் கட்ட யுத்தத்தின் போது அரசாங்கப் படையினரிடம் சரணடைந்த முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி போராளிகளுக்கு இவ்வாறு தொழில் வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. புனர்வாழ்வு அளிக்கப்பட்ட 40 முன்னாள் போராளிகளுக்கு தொழில் வாய்ப்பு வழங்க விரும்புவதாக சிங்கப்பூர் அறிவித்துள்ளது. புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஜகத் விஜயதிலக்க இதனைத் தெரிவித்துள்ளார். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/107812/language/ta-IN/article.aspx
-
- 0 replies
- 440 views
-
-
1 தொல்புரம் ஆரம்ப மருத்துவ பராமரிப்பு நிலையம் திறப்பு விழா 2014ம் ஆண்டு ஜூன் மாதம் 5ம் திகதியன்று காலை 10 மணிக்கு இணை பிரதம அதிதியுரை குருர்ப்ரம்மா ........................... கௌரவ ஆளுநர் அவர்களே, விசேட அதிதிகளே, கௌரவ அதிதிகளே, நன்கொடையாளர் இராஜபட்சம் ஸ்ரீரங்கபட்சம் அவர்களே, எனதருமைச் சகோதர சகோதரிகளே! இன்று இப்பிரதேசத்திற்கு ஒரு நன்நாள். கொடையின் சிறப்பையுணர்த்துஞ் சிறந்த நாள். யாழ் மாவட்டத்தில் பதினான்கு ஆரம்ப மருத்துவ பராமரிப்பு நிலையங்கள் இயங்கி வருகின்றன. தொல்புரம் கிராமத்தில் 1957ம் ஆண்டு அம்பலவானர் தையல்பாகர் என்ற இக்கிராமத்தைச் சேர்ந்த கொடையாளி ஒருவரால் இங்குள்ள மருத்துவ நிலையம் ஆரம்பிக்கப்பட்டு சுகாதாரத் திணைக்களத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டத…
-
- 0 replies
- 308 views
-
-
பொன்சேகா இனிமேல் ஜெனரல் அல்ல! - அரசாங்கம் அறிவிப்பு [Thursday, 2014-06-05 07:50:26] முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை ஜெனரலாக அங்கீகரிக்க முடியாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அமைச்சர் தினேஷ் குணவர்தன, பொன்சேகாவுக்கு எதிரான சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு அவர் குற்றவாளியாகக் காணப்பட்டதால், அவர் இராணுவப் பட்டத்தை இழந்தார். படைகளின் தலைமை கட்டளை அதிகாரியான ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, சரத் பொன்சேகாவிற்கு எதிராக இராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்பில் 2010 ஆம் ஆண்டு கையெழுத்திட்டார்.இதனையடுத்து அவரது ஜெனரல் பட்டம், இராணுவத்தில் பெறப்பட்ட பதக்கங்கள் மற்றும் ஓய்வூதியம் என்பன பறிக்கப்பட்ட வேண்டும் என உத்தரவிடப்பட்டத…
-
- 2 replies
- 463 views
-
-
யுத்தத்தின்போது காணாமல் போன தங்களது உறவுகளை கண்டுபிடித்துத் தருமாறு கோரி, முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக காணாமல் போனோரின் உறவினர்கள் ஒன்றிணைந்து இன்று வியாழக்கிழமை (05) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது வடமாகாணசபை உறுப்பினர்களான அனந்தி சசிதரன், துரைராசா ரவிகரன், அன்ரனி ஜெகநாதன், எம்.கே.சிவாஜிலிங்கம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் துரைராசா ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில், 'ஆர்ப்பாட்டத்துக்கு வந்தவர்களை முள்ளியவளை மற்றும் கோப்பாபிலவு ப…
-
- 0 replies
- 318 views
-
-
தனது நண்பனின் தங்கைக்கு பல நாட்களாக தொடர்ந்து ஆபாசப்படங்கள் அனுப்பியவர் நண்பனாலும் நண்பனின் உறவினர்களாலும் நையப்புடைக்கப்பட்ட சம்பவம் நேற்று மாலை அச்சுவேலிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. தனது நண்பனின் முகப்புத்தகத்தில் தங்கையின் தொடர்பை எடுத்துக் கொண்ட இளைஞர் அவளுக்கு நட்பு தூது அனுப்பியும் தங்கை அதைக் கணக்கில் எடுக்கவில்லை எனத் தெரிகின்றது. இதன் பின்னர் தொடர்ச்சியாக அவளுக்கு ஆபாசப்படங்களை முகப்புத்தகத்தின் ஊடாக அனுப்பியதால் எரிச்சலுற்ற தங்கை தனது அண்ணனிடம் சொல்லி நண்பனின் நடவடிக்கை பற்றி ஏசியுள்ளார். இதன் பின்னர் தொலைபேசி ஊடாக இரு நண்பர்களும் சண்டையிட்டதாகவும் அதன் தொடர்ச்சியாக நேற்று மாலை அச்சுவேலிப் பகுதியில் உள்ள குறித்த இளைஞனின் வீட்டுக்குச் சென்ற நண்பனும் உறவினர்களு…
-
- 2 replies
- 1.2k views
-
-
இலங்கை ஜனாதிபதிக்கும் இந்தியப் பிரதமருக்குமிடையே இடம் பெற்ற பேச்சுவார்த்தைகளின்போது 13 ஆவது திருத்தத்தை அமுல் செய்ய வேண்டுமென்றும் அதற்கு அப்பால் சென்று அதிகாரப் பரவலாக்கலுடன் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை வழங்க வேண்டுமென்றும் இந்தியப் பிரதமர் வலியுறுத்தினார். இதன்போது இலங்கை அரசாங்கம் வழங்கிய பதில் என்னவென்பதை இச்சபையில் அரசு வெளியிட வேண்டுமென்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று சபையில் கேள்வியெழுப்பினர். இந்தியப் பிரதமரின் வலியுறுத்தலை அரசாங்கம் நிறைவேற்றுமா என்பது தொடர்பிலும் பதிலளிக்க வேண்டுமென்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை 23 இன் கீழ் இரண்டின் கீழ் விசேட கூற்றொன்றை சபையில் முன்வைத்து உரையாற்றும் போ…
-
- 1 reply
- 799 views
-
-
பாடசாலைக்கு சென்ற நிலையில் காணாமற்போனதாக கூறப்படும் வவுனியா கனகராஜன்குளம் மகா வித்தியாலயத்தினைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் அனுராதபுரம் பகுதியில் இருந்து புதன்கிழமை (04) இரவு மீட்கப்பட்டதாக கனகராஜன் குள பொலிஸார் வியாழக்கிழமை (05) தெரிவித்தனர். கனகராஜன் பகுதியினைச் சேர்ந்த ஈ.சஞ்சய் (12), வி.நிரோஜன் (14) ஆகிய இரு மாணவர்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மேற்படி மாணவர்கள் வழமைப்போன்று பாடசாலைக்கு புதன்கிழமை (04) காலை சென்றுள்ளனர். இவர்கள், மாலை வரையிலும் வீடு திரும்பாததினையடுத்து தமது பிள்ளைகளைக் காணவில்லையென பெற்றோர்கள் கனகராஜன்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செயதனர். இந்நிலையில் அநுராதபுரம் நகர்ப்பகுதியில் இரண்டு சிறுவர்கள் நடமாடுவ…
-
- 0 replies
- 566 views
-
-
தமிழர் மாகாணத்துக்கு போலீஸ் அதிகாரம் வழங்க முடியாது: இலங்கை திட்டவட்டம் கொழும்பு, ஜுன் 4- தமிழர்கள் அதிகம் வசிக்கும் இடங்கள் உள்பட மாகாண அரசுகளிடம் போலீஸ் அதிகாரத்தை நிச்சயமாக ஒப்படைக்க முடியாது என இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் திட்டவட்டமாக தெரிவித்து விட்டதாக இலங்கையின் வெளியுறவு துறை மந்திரி ஜி.எல்.பெய்ரிஸ் இன்று பாராளுமன்றத்தில் அறிவித்தார். சமீபத்தில் இந்தியா சென்றிருந்த போது இரு நாடுகளுக்கிடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தொடர்பாக அறிய விரும்புவதாக அந்நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கே இன்று பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த மந்திரி ஜி.எல்.பெரிஸ், 'சார்க் அமைப்பு தொடர்பாக இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் எதிர்கால திட்டம்,…
-
- 1 reply
- 816 views
-
-
இலங்கையில் இடப்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குறங்கள் தொடர்பில் ஐ.நா. சபையூடாகச் சர்வதேச விசாரணை ஒன்று நடத்தப்படும் சந்தர்ப்பத்தில் இலங்கைப் பிரச்சினை தொடர்பில் தென்னாபிரிக்க மத்தியஸ்தத்துடன் இலங்கை அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் பேச்சு இடம்பெறுவதற்கான சாத்தியமும் உள்ளது. இவ்வாறு பேச்சு நடைபெற்றால் அதன்போது தீர்வுத்திட்டம் ஒன்றைத் தயாரித்துச் சமரப்பிப்தற்கு கூட்டமைப்பு முடிவுசெய்துள்ளது. இந்தத் தீர்வுத்திட்டத்தில் உள்ளடக்கப்படவேண்டிய விடயங்கள் குறித்து மக்களின் கருத்தறியத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளது. எனவே இந்த மாத இறுதிக்குள், பொது மக்கள்,பொது அமைப்புக்கள், புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் தத்தமது கருத்துக்களைக் கூட்டமைப்பினரிடம் சமர…
-
- 2 replies
- 565 views
-
-
கூட்டமைப்பே எழுமின்! எழுமின்! கோரிக்கையை மாற்றுமின்! மாற்றுமின்! இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா நேற்றைய தினம் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். மோடிக்கு அடுத்தபடியாக இந்தியாவின் பிரதமராக வரக்கூடியவர் என்ற எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த செல்வி ஜெயலலிதா, தமிழகத்தின் 37 ஆசனங்களைத் தனதாக்கிய பெருமையுடன் பாரதேசத்தில் மூன்றாவது பலமான சக்தி என்ற இறுமாப்புடன் பிரதமர் மோடியைச் சந்தித்துள்ளார். பரந்த பாரத தேசத்தில் மோடியின் பாரதிய ஜனதாக் கட்சிக்கு இரண்டு ஆசனங்களை மட்டும் விட்டுக் கொடுத்து வேறு எவருக்கும் எதுவும் கிடையாது என்று தமிழக மாநிலத்தில் முழு ஆசனங்களையும் தனதாக்கிய வகையில்; செல்வி ஜெயலலிதா, சோனியாகாந்தி மற்றும் ராகுல்காந்தியை விட பலமடங்…
-
- 0 replies
- 589 views
-
-
திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 5 மாதங்களில் 385பேர் டெங்கு நோய் தாக்கத்துக்கு உள்ளானதுடன் இருவர் உயிரிழந்துள்ளனர் என பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் அனுஷியா ராஜ் மோகன் தெரிவித்தார். அவர் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது :- கடந்த மே மாதத்தில் மாத்திரம் 9 பேர் இந்நோயின் தாக்கத்துக்கு ஆட்பட்டுள்ளனர். இவர்களில் 7 பேர் கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்தவர்களாவர். இருவர் மூதூர் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. கிண்ணியா பிரதேசத்தில் இந்த நோயின் கடுமை காரணமாக ஒருவர் மார்ச் மாதத்திலும் மற்றொருவர் மே மாதத்திலும் மரணமாகியுள்ளனர். எனவே, டெங்கு நோயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர மாவட்டம் முழுவதும் சிரமதானப்பணிகள் …
-
- 0 replies
- 404 views
-
-
வெல்லம்பிட்டிய, மீதொடமுல்ல பிரதேசத்தில் மூன்று மாதங்கள் மட்டுமேயான ஆண் குழந்தை சுன்னத் கத்னாவின்போது உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய வைத்தியர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் இன்று (04) புதியகடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியவேளை எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். இஸ்லாமிய முறைப்படி முஸ்லிம் ஆண் குழந்தைக்கு செய்யப்படும் சுன்னத் கத்னா இந்த மூன்று மாத குழந்தைக்கு நேற்று (03) செய்யப்பட்டுள்ளது. இந்த குழந்தைக்கு சுன்னத் கத்னா செய்த வைத்தியர் பதிவு செய்யப்படாத வைத்திய நிலையத்தையே வைத்திருந்தார் என தெரிவிக்கப்படுகிறது. (அத தெரண - தமிழ்)
-
- 3 replies
- 777 views
-
-
மட்டக்களப்பு,ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொம்மாதுறை பகுதியில் இன்று பிற்பகல் கணவன் மனைவிக்கிடையே இடம்பெற்ற வாய்த்தர்க்கம் கத்திக்குத்தில் முடிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. கணவன் வெளிநாடு சென்று வந்து சில தினங்களேயான நிலையில் கணவன் மனைவிக்கிடையே சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டுவந்துள்ளது. இந்த நிலையில் இன்று பிற்பகல் இருவருக்கும் இடையே இடம்பெற்ற வாய்த்தர்க்கத்தின்போது ஆத்திரமடைந்த கணவன் கத்தியால் மனைவியை குத்தியுள்ளார்.அதனைத்தொடர்ந்து தன்னைதானே குத்தி தற்கொலைசெய்ய முற்பட்டுள்ளார். இதன்போது அப்பகுதி அயலவர்கள் ஓடிவந்து இருவரையும் செங்கலடி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.அதனைத்தொடர்ந்து அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக இருவரும் மட்…
-
- 0 replies
- 707 views
-
-
வங்கி அட்டை மோசடியில் ஈடுபட்ட இலங்கையர்களுக்கு பிரித்தானியாவில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் க்ளோஸ்டஷெயார் பிரதேசத்தின் வங்கி தான்னியக்க நிலையங்களில் மோசடிகளில் ஈடுபட திட்டமிட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. 13 ஏ.ரீ.எம். நிலையங்களின் வாடிக்கையாளர் தகவல்களை திரட்டி அவற்றின் ஊடாக மோசடியில் ஈடுபட திட்டமிடப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. பசீர் எப்ராஹிம், அசோக் பாலசுப்பரமணியம் மற்றும் தங்கவேல் வில்வானந்தம் ஆகியோர் இவ்வாறு குற்றச் செயலில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டுள்ளனர். 2013ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையில் இந்தக் குற்றச் செயல்கள் இடம்பெற்றுள்ளன. எப்ராஹிம் என்பவருக்கு 16 மாத கால சிறைத்தண்டனையும், ஏனைய இருவருக்கும் ஒரு ஆண்…
-
- 6 replies
- 631 views
-
-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீமிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானமொன்றை நிறைவேற்றத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆளும் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாக இணைந்து இவ்வாறு நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்ற உத்தேசித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. சட்டக் கல்லூரிக்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பிலான புதிய நடைமுறையை ஏற்றுக்கொள்ள முடியாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 30 வயதுக்கும் மேற்பட்டவர்கள் சட்டக் கல்லூரியில் அனுமதி பெற்றுக்கொள்ள முடியாது என புதிய நடைமுறையொன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சட்ட ரீதியான அங்கீகாரம் இல்லாத நிலையில் ஹக்கீம் இவ்வாறான ஓர் நடவடிக்கையை எடுத்துள்ளதாக ஐக்கிய…
-
- 1 reply
- 530 views
-
-
இலங்கை நாடாளுமன்றத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினர்கள் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டு, அந்நாட்டின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஷ்வாலைச் சந்தித்து கலந்துரையாடினர். இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள்பற்றி எழுந்துள்ள நெருக்கடிகள் குறித்து இந்தச் சந்திப்பில் இலங்கை எம்.பி.க்கள், நிஷாவிடம் விளக்கினர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இலங்கையில் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் ஆராயப்பட்டது என்று தெரியவந்தது. malarum.com
-
- 0 replies
- 646 views
-
-
மாகாண சபைகளுக்கான பொலிஸ் அதிகாரங்களை கொடுப்பது தமிழ் மக்களுக்கான தீர்வாக அமைய போவதில்லை. தமிழ் மக்களை பாதுகாக்க வேண்டுமாயின் சுயாதீன விசாரணையினை நடைமுறைப்படுத்த வேண்டும் என ஜே.வி.பி. யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார். சர்வதேச விசாரணையினைக் கோருவது கூட்டமைப்பின் சுயநலப் போக்கினையே வெளிப்படுத்துகின்றது. தமிழர்கள் விடயத்தில் தமிழ் கட்சிகள் கூடிய கவனமெடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். மாகாண சபைகளுக்கான பொலிஸ் அதிகாரம் வழங்கப்படாது என்ற அரசாங்கத்தின் கருத்து தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்; மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் வழங்குவதனாலோ அல்லது தவிர்ப்பதனாலோ தமிழ் மக்களுக்கான தீர்வு…
-
- 0 replies
- 483 views
-
-
கிளிநொச்சியில் முன்னாள் பெண் போராளி மீது அடையாளம் தெரியாதோர் தாக்குதல்! கிளிநொச்சி- செல்வாநகர் பகுதியில் போரில் காயமடைந்து நிரந்த அங்கவீனமாக்கப்பட்ட முன்னாள் பெண் போராளியின் வீட்டினுள் புகுந்த மர்ம நபர்கள் குறித்த பெண்ணின் கணவர் எங்கே எனக்கேட்டு பெண்ணை கடுமையாக தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கிளி.செல்வாநகர் நாகதம்பிரான் ஆலயத்திற்கு சமீபமாக உள்ள வீடொன்றில் வசிக்கும் அனுஸ்குமார் சுமதி என்ற இரு பிள்ளைகளின் தாயான முன்னாள் போராளியின் வீட்டிற்கு நேற்று மாலை 5மணியளவில் முழுமையாக முகம் மறைக்கப்பட்ட தலைக்கவசங்கள் அணிந்தவாறு இரு மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம நபர்கள் வீட்டினுள் புகுந்து உன்னுடைய கணவர் எங்கே என குறித்…
-
- 1 reply
- 602 views
-
-
யாழில் தனிசிங்களத்தில் எழுத்தப்பட்ட கடித்தில் கையெழுத்து பெறும் நடவடிக்கை! ஜூன் 4, 2014 யாழில் காணி சுவிகரிப்பு அறிவித்தல்கள் விடுக்கப்பட்ட காணிகளின் உரிமையாளர்களிடம் தனிச் சிங்களத்தில் எழுதப்பட்ட கடிதங்களில் கையெழுத்து பெற்றுக் கொள்ளும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இச் செயற்பாடானது மக்களை முழுமையாக ஏமாற்றி அவர்களுடைய காணிகளை அபகரிக்கும் நோக்கிலேயே செயற்படுத்தப்பட்டு வருகின்றது.இச் செயற்பாடுகளுக்கு சில கிராமசேவர்களும் உடந்தடையாக இருப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்காக அல்வாய் திக்கம் பகுதியில் உள்ள மக்களின் 8 ஏக்கர் காணியை கையகப்படுத்தி வைத்துள்ள சிறிலங்கா படையினர், அக் காணிகளை சுவிகரிக்கப் போவதாக அறிவித்தல் விடுத்துள்ளனர். இந்ந…
-
- 0 replies
- 466 views
-
-
ஜனாதிபதி தேர்தலில், ரணிலுக்கு ஆதரவாக களமிறங்குகிறார் சந்திரிகா! [Wednesday, 2014-06-04 08:05:30] எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், ஐதேக தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பிரசாரங்களை மேற்கொள்ளவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் நொவம்பர் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்ற ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே எதிர்கட்சிகளின் பொதுவேட்பாளராக போட்டியிடுவார் என்று உறுதியாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் அவருக்கு ஆதரவாக சிங்கள மக்களின் வாக்குகளை திரட்டுவதற்காக, சந்திரிகாவை பிரசாரத்துக்கு அழைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமக்கு அரசியலில் ஈடுபட நாட்டமில்லாத போதும், எதிர்க்கட்சித் தலைவருக்காக அவர் இத…
-
- 0 replies
- 562 views
-
-
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்துள் அடாத்தாக இராணுவம் நுழைந்தது:- தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.நகரின் 3ம் குறுக்குத் தெருவிலுள்ள தலைமை அலுவலகத்திற்கு இன்று மாலை படையினர் அடாத்தாக உள் நுழைந்துள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது. இன்று மாலை ஜந்து மணியளவில் சிவிலுடையில் சென்ற இராணுவத்தினரே கட்சி அலுவலகத்தில் விபரங்களை திரட்டிச்சென்றுள்ளனர். எனினும் விபரங்கள் சேகரிப்பதாயின் பொலீசார் வந்திருக்க முடியுமெனவும் அப்படியிருக்க இராணுவத்தினர் அலுவலகத்திற்கு வந்தமை தம்மை அச்சுறுத்தும் செயற்பாடு என கட்சித்தலைமை கருத்து வெளியிட்டுள்ளது. சம்பவ வேளையில் கட்சியின் தலைவர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் எவரும் இருந்திருந்திருக்கவில்லை என கூறப்படுகின்றது. h…
-
- 0 replies
- 389 views
-
-
பிரதி அமைச்சர் சனத் ஜயசூரியவின் அடியாட்கள் பல்கலைக்கழக மாணவர்களை தாக்கியுள்ளனர் – ஜே.வி.பி. பிரதி அமைச்சர் சனத் ஜயசூரியவின் அடியாட்கள் பல்கலைக்கழக மாணவர்களை தாக்கியுள்ளதாக ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது. முன்னாள் கிரிக்கட் வீரரும், பிரதி அமைச்சருமான சனத் ஜயசூரியவின் அடியாட்களும், சில மாகாணசபை உறுப்பினர்களும் ருஹூனு பல்கலைக்கழகத்தின் உள் அத்து மீறி பிரவேசித்து, மாணவர்களை தாக்கியதாக ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் அவர் குறிப்பிட்டுள்ளார். சம்பவத்தில் ஏழு மாணவர்கள் காயமநைந்ததாகவும், இவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக்கொள்ளக் கூடிய சந்தர்ப்பம் கிடைக்கவில்…
-
- 0 replies
- 268 views
-
-
தம்புள்ளைப் பள்ளிவாசல் விவகாரம் தொடர்பில் கேள்வி ஒன்றை எழுப்புவதற்கு அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கான அனுமதி பாராளுமன்றத்தில் மறுக்கப்பட்ட அதேவேளை அமைச்சர் ரவூப் ஹக்கீமை பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியொன்றின் தலைவராக ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்தாலும் சபையில் சிறு சர்ச்சை நிலை ஒன்று உருவானது. தான் கட்சித் தலைவராகவே செயற்பட்டு வருவதாகவும் அதனடிப்படையிலேயே பாராளுமன்றத்தில் முன்வரிசை ஆசனம் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தமது கருத்து வாதத்தை முன்வைத்த போதிலும் பாராளுமன்றத்தை நான்கு கட்சிகளே பிரதிநிதித்துவப்படுத்துகின்றன என்றும் எனவே ரவூப் ஹக்கீமை கட்சித் தலைவராக ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற…
-
- 0 replies
- 248 views
-
-
தமிழர்கள் தமது மரணத்தின் பின்னரும் நிம்மதியாக கல்லறைகளில் உறங்கமுடியாத பரிதாபம் திருகோணமலையில் ஏற்பட்டள்ளது என திருகோணமலை நகரசபை உறுப்பினர் சி.நந்தகுமார் தெரிவித்துள்ளார. திருகோணமலை அன்புவழிபுரம் பொது மயானத்தில் இருக்கும் கல்லறைகளில் உள்ள தமிழ் பெயர்கள் அடங்கிய கல்வெட்டுக்கள் கடந்தவாரம் சேதமாக்கப்பட்டுள்ளமை வேதனைக்குரிய விடயமாகும்; என அவர் அவர் வெளியிட்டுள்ளா ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். சண்டையிட்ட நாடுகள் சண்டையின் பின் ஒரு நாடு மற்றைய நாட்டினை கைப்பற்றினாலும் எதிரி நாட்டில் உள்ள கல்லறைகள், பிரமுகர்களின் நினைவிடங்களை பாதுகாப்பளிப்பது சர்வதேச நாடுகளில் உள்ள தார்மீக சட்டமுறையாகும். அனால் தமிழர்கள் என்ற காரணத்தால் தமிழர்கள் தமதுமரணத்தின் பின்னரும் மயானங்களில் உள்…
-
- 0 replies
- 267 views
-
-
குறுகிய காலத்தில் பாரிய அபிவிருத்தியாம் – உகண்டா அமைச்சர்! யுத்தம் நிறைவடைந்து குறுகிய காலத்தில் பாரியளவில் அபிவிருத்தி ஏற்பட்டுள்ளதாக உகண்டாவின் உள்துறை அமைச்சர் ஒகெல்லோ ஓரியம் (Okello Oryem) தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள உகண்டா உள்துறை அமைச்சர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்த போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.உகண்டாவும் பயங்கரவாத பிரச்சினைகளை எதிர்நோக்கியதாகவும் அதனால் பாதிப்புக்களை நன்கு உணர்ந்து கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். உகண்டாவிற்கு விஜயம் செய்தமைக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும், முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷவிற்கும் நன்றி பாராட்டுவதாகத் தெரிவித்துள்ளார். இதேவேளை, ஆபிரிக்க நாடுகளுக்கான தமது விஜயம் வெற்றியளித்துள்ளதாக ஜனாதிபதி …
-
- 2 replies
- 554 views
-