Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. முஸ்லிம் வர்த்தகரின் கடைக்கு பிக்குகள் தலைமையில் தீவைப்பு! - அளுத்கமவில் சம்பவம். [saturday, 2014-05-10 09:34:14] அளுத்கம நகரில் முஸ்லிம் வர்த்தகரின் இரண்டு மாடிக் கடை ஒன்று பௌத்த பிக்குகள் தலைமையிலான 250 இற்கும் மேற்பட்ட சிங்கள பௌத்த குண்டர்களால் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளது. வர்த்தக நிலையத்தின் உரிமையாளரின் சகோதரரால், சிறுவன் ஒருவன் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டதாக குற்றம்சாட்டியே பௌத்த அடிப்படைவாதிகளால் இந்தக் கடைக்குத் தீவைக்கப்பட்டுள்ளது. இது தமக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சதி என்று கடைஉரிமையாளரான மொகமட் நயீம்கான், பிபிசியிடம் தெரிவித்துள்ளார். சிறுவர் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டில் தமது சகோதரர் கைது செய்யப்பட்டு, கடைக்குள் எடுக்கப்பட்ட எல்லா வீடியோ பதி…

  2. சர்வதேச விசாரணைகளை தவிர ஏனைய அனைத்து கோரிக்கைகளையும் ஏற்றுக்கொள்ளத் தயார் - ஜனாதிபதி சர்வதேச விசாரணைகளை தவிர ஏனைய அனைத்து கோரிக்கைகளையும் ஏற்றுக்கொள்ளத் தயார் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் உறுப்பு நாடுகளினால் விடுக்கப்பட்ட கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஜப்பானிய துணை வெளிவிவகார அமைச்சர் செஜீ கிஹாரவை சந்தித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான சர்வதேச விசாரணைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். http://globalt…

    • 1 reply
    • 360 views
  3. புதுடில்லியின் பாதுகாப்புப் பொறிமுறையின் கீழ் சிறிலங்காவும், மாலைதீவும் கண்காணிப்பு! - இந்திய ஊடகம் தகவல்!! இந்தியாவின் பாதுகாப்புப் பொறிமுறையின் கீழ் சிறிலங்காவும், மாலைதீவும் கண்காணிக்கப்பட்டு வருவதாக இந்திய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. சென்னையில் வைத்து சிறிலங்காவைச் சேர்ந்த சகீர் ஹூசைன் என்பவர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டிருந்தார். சென்னை மற்றும் பெங்களுர் ஆகிய இடங்களில் உள்ள அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தூதரகங்களை தீவிரமாகக் கண்காணித்தார் என இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதனை அடுத்து சிறிலங்கா மற்றும் மாலைதீவில் இருந்து இந்தியாவுக்குள் பிரவேசிப்போர் குறித்து இந்தியா அதிகம் கவனம் கொண்டுள்ளதாக இவ்வூடகம் குறிப்பிட்டுள்ளது. தீவிரவாதிகளின் இடைத்தங்…

  4. இலங்கையில் புலனாய்வுப் பிரிவுகள் எந்நேரமும் செயற்படும் - கோத்தபாய:- 10 மே 2014 இலங்கையில் தீவிரவாதத்துக்கு மீண்டும் உயிர் கொடுக்க எந்தவொரு தனிநபருக்கோ அல்லது அமைப்புக்கோ இடமளிக்கப்படமாட்டாது என்று பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார். பாதுகாப்பு அமைச்சில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை நடந்த உயர்மட்டக் கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார். நாட்டில் தீவிரவாதம் தோற்கடிக்கப்பட்டுள்ள போதிலும், படையினர், தீவிரமான விழிப்பு நிலையில் வைக்கப்பட்டிருப்பர் என்றும் அவர் கூறினார். படையினர் தற்போது, அபிவிருத்தி மற்றும் மீள்கட்டுமானப் பணிகளில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். ஆனால், தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அவர்களின் முக்கியமான ப…

  5. தென்கிழக்காசியாவில் மலரும் புதிய சுயாதீன பிரதேசங்கள் - சாந்தி சச்சிதானந்தம்:- 2008ம் ஆண்டு இலங்கையில் தம்புள்ளவில் உள்ள உல்லாச விடுதியொன்றில் ஓர் சுவாரசியமான சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆசியாவிலேயே நீண்ட காலமாகத் தொடர்ந்த இந்தோனேஷியாவின்; ஓர் மாகாணமாகிய ஆசேயின் மக்களின் விடுதலைப் போராட்டம் 2005ம் ஆண்டு பின்லாந்தில் கைச்சாத்திடப்பட்ட ஒரு சமாதான உடன்படிக்கையுடன் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டிருந்தது. இச்சமாதான உடன்படிக்கையின் வரைவாளர்களான இந்தோனேஸிய அமைச்சரும் இராணுவத்தளபதிகளும் அலுவலர்களும், ஆசேயின் விடுதலைப் போராட்டக் குழுவின் (குசநந யுஉநா) தலைவரும் சில உறுப்பினர்களும், எமது ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சுதந்திரக்கட்சி இடைநிலை தலைவர்களுடன் மே…

    • 0 replies
    • 473 views
  6. இலங்கையிலிருந்து சென்னை நகருக்குள் உளவாளியை அனுப்பி சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக, பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் இருவர் மீதும் வழக்கு போடப்பட்டுள்ளது. அவர்களை கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. சென்னையில் சமீபத்தில், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யுடன் தொடர்பு வைத்திருந்ததாக, இலங்கையைச் சேர்ந்த ஜாகீர் உசேன் (வயது 37) என்பவர் கைது செய்யப்பட்டார். இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் இருவர் தன்னை சென்னைக்கு உளவு பார்க்க அனுப்பியதாக ஜாகீர் உசேன் தெரிவித்ததாக தெரிவிக்கப்பட்டது. 3 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து, கியூ பிரிவு போலீசார் ஜாகீர் உசேனிடம் விசாரணை நடத்தினார்கள். இந்த விசாரணையில் ஜாகீர் உசேன், மேலும் திடுக்…

    • 4 replies
    • 532 views
  7. ஐ.நா விசாரணை அறிக்கையை ஜப்பான் நிராகரிக்கும்? – சிறிலங்கா அதிபரிடம் வாக்குறுதி. [ சனிக்கிழமை, 10 மே 2014, 02:02 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானம், சிறிலங்காவுக்கு உதவியாக அமையாது என்று ஜப்பான் தெரிவித்துள்ளது. சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள, ஜப்பானிய வெளிவிவகார உதவி அமைச்சர் செய்ஜி கிஹாரா (Seiji Kihara) நேற்றுமாலை அலரி மாளிகையில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்த போதே இவ்வாறு கூறியுள்ளார். “ஜெனிவாவில் கொண்டு வரப்படும் தீர்மானம் சிறிலங்காவுக்கு உதவியாக அமையுமா என்று ஆலோசனை நடத்தினோம். அது சிறிலங்காவுக்கு உதவியாக இருக்காது என்று முடிவு செய்தோம். அதனால் தான், வ…

  8. தொண்டர்கள் என்ற போர்வையில் தமிழ் இளைஞர், யுவதிகளை படைத்தரப்பில் இணைக்க நடவடிக்கை! சிறிலங்கா படைத்தரப்பில் உள்ள வெற்றிடங்களுக் தொண்டர்கள் என்ற போர்வையில் யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் இளைஞர், யுவதிகளை இணைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. சிறிலங்காவின் படைத் தலைமையகத்தினால் ஏற்பாட்டில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திபபில் இதற்கான அறிவித்தலை யாழ்.மாவட்ட படைத்தரப்பின் ஊடக இணைப்பாளர் மல்லவராட்சி வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 'வயதின் அடிப்படையில் ஓய்வு பெற்றவர்கள், சேவை அடிப்படையில் ஓய்வு பெற்றவர்கள் மற்றும் வேறு தொழில் தேடி இடைவிலகிச் சென்றவர்கள் என்ற அடிப்படையில் யாழ்ப்பாணத்தில் தொண்டர்களாக கடமையாற்றுவதற்கு 70…

  9. மே-18 அஞ்சலி நிகழ்வை யாராலும் தடுக்க முடியாது-செல்வம் அடைக்கலநாதன் : 10 மே 2014 மே-18 ஆம் திகதியை எல்லோரும் எதிர்பார்த்துள்ள நிலையில் முள்ளி வாய்க்காலில் உயிர் நீத்த உறவுகளை நினைவு கூறுகின்ற இந்த வேளையிலே அந்த நினைவு கூறும் நிகழ்வுகளை தடுக்கின்ற செயற்பாட்டில் இந்த அரசாங்கம் செயற்பட்டு வருகின்றமையினை நினைக்கின்ற போது கவலையையும்,வேதனையையும் ஏற்படுத்தியுள்ளதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,, முள்ளிவாய்க்காலிலே நடாத்தப்பட்ட அனர்த்தங்கள்களின் போது குழந்தைகளுக்கு பால்மா வேண்டுவதற்காக வரிசையில் நின்றவர்கள் கொல்…

  10. இந்திய - இலங்கை மீனவர்களுக்கு இடையிலான இரண்டாம்கட்ட பேச்சுவார்த்தை நாளை மறுதினம் திங்கட்கிழமை கொழும்பில் இடம்பெறவுள்ளது. இதனை முன்னிட்டு தமிழக, ஆந்திர கடலோர மீனவ பிரதிநிதிகள் நாளை இலங்கை வரவுள்ளனர். இது குறித்து இலங்கை மீன்வளத்துறை அமைச்சகத்தின் ஊடகப்பேச்சாளர் கருத்து தெரிவிக்கையில், இந்திய கடற்படையால் கைது செய்யப்பட்ட 24 மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகள் கைப்பற்றப்பட்ட விவகாரம் இந்த பேச்சுவார்த்தையை பாதிக்காது. ஏற்கனவே முடிவான நிலையிலே இம் மாதம் 12ஆம் திகதி இரண்டாம்கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும். இந்திய மீனவ பிரதிநிதிகளின் வருகைக்காக நாங்கள் காத்திருக்கிறோம். இரண்டாம்க்கட்ட பேச்சுவார்த்தையை முன்னிட்டு தமிழக மீனவ பிரதிநிதிகள் கொண்ட ஆலோசனை கூட்டம் சென்னையில் இ…

    • 0 replies
    • 341 views
  11. வடக்கு மாகாணசபைக்கு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க மறுத்துவருகின்றது என்று இந்திய வெளிவிவகாரத்துறையின் உயரதிகாரி திருமதி சுஜித்ரா துரை உள்ளிட்ட அந்நாட்டு உயரதிகாரிகள் குழுவினருடனான சந்திப்பின்போது வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை தெரிவித்துள்ளார். யாழ்.கோவில் வீதியிலுள்ள வடக்கு மாகாண சபை முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் சந்தித்து கலந்துரையாடிய இந்தியக்குழுவினருடனான சந்திப்பில் முதலமைச்சர் மேலும் தெரிவிக்கையில், போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் தற்போது மீள்குடியேற்றப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு நிரந்தர வீடுகள் தேவைப்படுகின்றன. இந்திய அரசாங்கமானது இன்னும் 20 ஆயிரம் வீடுகளைக் கட்டிக்கொடுக்க முன்வரவேண்டும். அதேவேளை இங்குள்ள இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்புக…

    • 0 replies
    • 247 views
  12. யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படுவது இலங்கை இராணுவத்திற்கான ஆட்சேர்ப்பே – மல்லவராட்சி: "எனக்கு தெரியாமல் ஆட்களை செர்க்க முடியாது" – சுந்தரம் அருமைநாயகம் - எது உண்மை? எது பொய்? - குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படுவது இலங்கை இராணுவத்திற்கான ஆட்சேர்ப்பே என இராணுவத்தலைமை ஏற்றுக் கொண்டுள்ளது. அவ்வகையில் இராணுவத்தினருக்கான 800 வெற்றிடங்களை நிரப்புவதற்கு யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் இளைஞர் யுவதிகளை இணைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக இராணுவத்தின் ஊடக இணைப்பாளர் மல்லவாராச்சி இன்று (10.05.14) யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ளார். இன்று காலை 9.30 மணிக்கு யாழ். சிவில் அலுவலகத்தில் படைத்தலைமையகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்த…

  13. சீனாவிற்கு எதிராக நடந்துகொள்ளும் இலங்கை? சீனாவிற்கு எதிராக இலங்கை அரசாங்கம் கருத்து வெளியிட்டுள்ளது. வியட்நாமிற்கும் சீனாவிற்கும் இடையிலான முரண்பாட்டு நிலைமை ஒன்றின் போது, இலங்கை அரசாங்கம் வியட்நாமிற்கு ஆதரவாக கருத்து வெளியிட்டுள்ளது. 1982ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் அமைப்பின் கடல் பிரகடனத்திற்கு அமைவாக சீனா செயற்பட வேண்டுமென வியட்நாம் கோரியுள்ளது. இந்த கோரிக்கை நியாயமானது என இலங்கை அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான கடற்பரப்பு தொடர்பில் முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளது. அமைதியான வழிகளில் பிரச்சினைகளுக்கு காத்திரமான தீர்வினை எட்ட வேண்டுமென இலங்கைப் பிரதமர் டி.எம். ஜயரட்ன தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பின் வெசாக் தினம் இம…

  14. ஆளுங்கட்சியை எதிர்த்து அடிவாங்கிய பிக்கு! தாக்கியது இன்னோர் பிக்கு! ரதுபஸ்வல தெரிபெஹெ என்ற பெயருடைய இந்த பிக்கு கம்பஹா மாவட்டத்தின் வெலிவேரிய பகுதியில் உள்ள விகாரையில் பிரதம மதகுருவாக உள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் நீண்டகாலமாக கடுமையான குடிதண்ணீர்ப் பிரச்சினை நிலவி வருகிறது. இது தொடர்பில் அரசின் அலட்சியப் போக்கு குறித்து எதிர்ப்புத் தெரிவிக்கும் நோக்கில் ஆர்ப்பாட்டமொன்றுக்கு இந்த பிக்கு ஆட்களைத் திரட்ட முயன்றுள்ளார். இது தொடர்பாக கேள்வியுற்ற பொதுபல சேனா பிக்கு ஒருவர் நன்சாக்கு எனும் குங்பூ ஆயுதம் கொண்டு தெரிபெஹெ தேரரை கடுமையாகத் தாக்கியுள்ளார். இதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தேரர், சம்பவம் தொடர்பில் பொலிசில் முறைப்பாடு ஒன்றையும் செய்துள்ளார். http:…

  15. வவுனியா, பம்பைமடுவில் உள்ள முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களின் பராமரிப்பு இல்லமான வைகறையில் சிகிச்சை பெற விரும்புவோர் அந்தந்தப் பகுதி சுகாதார வைத்திய அதிகாரியுடன் தொடர்புகொள்ளுமாறு வவுனியா பொது வைத்தியசாலையின் அத்தியட்சகரும் வைகறையின் பொறுப்பதிகாரியுமான வைத்திய கலாநிதி கே.அகிலேந்திரன் தெரிவித்தார். வடமாகாணசபையின் சுகாதார அமைச்சின் அனுசரணையுடன் செயற்படும் வைகறையில் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்கள் இலவசமாக பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், வடபகுதியில் மேலும் பலர் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டு பராமரிக்கமுடியாத நிலையில் உள்ளனர் என அறியப்படுகின்றது. இவர்கள் வைகறையில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதற்கு வசிதிகள் செய்து கொடுக்கப்படும்; என்பதால், தாம் வச…

    • 0 replies
    • 411 views
  16. ஆயுத விவகாரம்; இந்திய காங்கிரஸ் அரசைக் காப்பாற்ற முயல்கிறது இலங்கை அரசு?! சிறிலங்காவிடம் இருந்து இந்தியா ஆயுதங்கள் வாங்கியதா என்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, இந்திய நாடாளுமன்றத் தேர்தலைக் காரணம் காட்டி, பதிலளிக்காமல் நழுவியுள்ளது சிறிலங்கா அரசாங்கம். இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அன்ரனி, இந்திய நாடாளுமன்றில் சில மாதங்களுக்கு முன்னர் சமர்ப்பித்திருந்த அறிக்கை ஒன்றில், சிறிலங்காவிடம் ஆயுதங்கள் வாங்கப்பட்டதாக கூறியிருந்தார். இதுகுறித்து. நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில், ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள, சிறிலங்கா பிரதமரிடம் கேள்வி எழுப்பினார். இந்த ஆயுத விற்பனை எப்போது நடந்தது – எந்த வகையான ஆயுதங்களை இந்தியா வாங்கியது- சிறிலங்காவ…

    • 0 replies
    • 430 views
  17. ஐ.நா மனித உரிமைப் பேரவை தீர்மானம் இலங்கைக்கு உதவியாக அமையாது – ஜப்பான் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானமானது இலங்கைக்கு உதவியாக அமையாது என ஜப்பான் தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இலங்கைக்கு உதவியளிக்காது எனத் தீர்மானித்த காரணத்தினாலேயே வாக்களிப்பில் பங்கேற்கவில்லை என ஜப்பானிய வெளிவிவகார துணை அமைச்சர் செஜீ கிஹாரா (Seiji Kihara) தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாக கிஹாரா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை, அலரி மாளிகையில் சந்தித்த போது இதனைக் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச அரங்கில் இலங்கைக்கு முழு அளவில் ஒத்து…

    • 0 replies
    • 422 views
  18. அபிவிருத்தி சவால்களை இலங்கை வெற்றி கொண்டுள்ளது – உலக வங்கி 10 மே 2014 அபிவிருத்தி தொடர்பான சவால்களை இலங்கை வெற்றி கொண்டுள்ளதாக உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. வறுமை உள்ளிட்ட பல்வேறு முக்கிய சவால்கள் வெற்றிகொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது,உலக வங்கியின் இலங்கைக் கிளைப் பணிப்பாளர் பிரான்கோயிஸ் க்ளோடிஸ் (Francoise Clottes) தெரிவித்துள்ளார். நகரமயமாக்கள் திட்டங்களின் ஊடாகவும் சமூகப் பொருளாதார அபிவிருத்தி ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இலங்கைப் பொருளாதாரம் சரியான பாதையில் நகர்வதாகத் தெரிவித்துள்ளார்.http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/106685/language/ta-IN/article.aspx

  19. கொக்குத்தொடுவாயில் தமிழர்களின் காணிகள் சிங்களவர்களுக்கு பகிர்ந்தளிப்பு! - ஆங்கில ஊடகம் கூறுகிறது. [saturday, 2014-05-10 10:05:07] முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் பகுதியில் உள்ள தமிழ்மக்களுக்கு சொந்தமான விவசாய காணிகள் சிங்கள மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக, ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இந்த பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து நூற்றுக்கணக்கான குடும்பங்களில், சில குடும்பங்கள் மாத்திரம் கடந்த 2011ம் ஆண்டளவில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டனர். எனினும் அவர்கள் இன்னமும் தற்காலிக கூடாரங்களை அமைத்தே வாழ்ந்து வருகின்றனர். அத்துடன் அவர்கள் கொக்குத்தொடுவாயில் மூன்று கிராம சேவகர் பிரிவில் மாத்திரமே குடியேற்றப்பட்டுள்ளனர். ஏனைய காணிப் பகுதிகள் அனைத்தும் சிங்கள மக்களுக்கு…

  20. ஜே.வி.பியின் நொண்டிச்சாட்டு: யாழ்ப்பாணத் தம்பி அண்மையில சுமந்திரன் எம்.பியும் மனோ கணேசனும் எதிர்கட்சியளின்ட பொதுவேட்டபாளராய் வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரனை நிப்பாட்டுறதப் பற்றி பகிரமங்காக கேட்டிருந்திச்சினம். விக்கினேஸ்வரன் ஒரு தமிழர் எண்டுறதால மட்டும் அவர் வேண்டாம் எண்டு சொல்லாதிங்கோ எண்டும் சொல்லிச்சினம். முக்கியமாய் ஜே.வி.பியையும் ஐ.தே.கவையும் நோக்கித்தான் இந்த பகிரங்க வேண்டுகோள் விடுத்தவை. ஆக்கள் பகிரங்க கேள்விக்கு பதில் அளிக்கேல்ல. கடுமையாய் குழம்பியிருப்பினம். விக்கினேஸ்வரன் வாசுதேவன்டா சம்பந்தியாய் இருக்கலாம். விக்கினேஸ்வரன்ட பிள்ளை ஒரு சிங்களவர கலியாணம் முடிச்சிருக்கலாம். இதுகளவிடவும் அவர் ஸ்ரீலங்காவின்ட முன்னாள் நீதியரசராய் இருந்…

    • 0 replies
    • 352 views
  21. ஐ.நா தீர்மானத்துடன் ஒத்துழைக்கவும்: பிரித்தானியா வெள்ளிக்கிழமை, 09 மே 2014 22:01 ஐ.நா தீர்மானத்துடன் ஒத்துழைக்குமாறு இலங்கை அரசாங்கத்திடம் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக பிரித்தானியா கூறியுள்ளது. இந்த தீர்மானம் சரியாக நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்கு எமது முழு ஆதரவை வழங்க உள்ளோம். மனித உரிமை பேரவை மற்றும் சர்வதேச பங்குதாரர்களுடன் சேர்ந்து வேலை செய்யவும் உள்ளோம். மனித உரிமை ஆணையாளரின் அலுவலகம் உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை சுயாதீனமாக விசாரிக்கும் என்றார். வெளிநாட்டலுவல்கள், பொதுநலவாய அலுவலகம் ஆகியவைகளினால் இராஜாங்க அமைச்சர் ஹியூகோ ஸ்வையர் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் கூறினார். ஜெனீவாவிலுள்ள அலுவலர்கள் மனித உரிமை ஆணையாளரின் அலுவலகத்துடான் மார்ச் 2014 ஐ.ந…

  22. இலங்கைக் காடுகளிலிருந்து யானைக்குட்டிகள் கடத்தப்படுகின்ற பல சம்பவங்கள் அண்மைக் காலங்களில் நடந்துள்ளன. கடந்த காலங்களில் 65 யானைக்குட்டிகள் வரை இவ்வாறு கடத்தப்பட்டுள்ளதாக அரசாங்க அதிகாரிகளை மேற்கோள்காட்டி சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். 'யானைகள் காப்பகத்திலிருந்து காடுகளுக்குச் அனுப்பப்படும் யானைகளும் கடத்தப்படுகின்றன' (படம்- பின்னவல யானைகள் காப்பகம்) யானைக் கடத்தல்காரர்களை கைதுசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் குற்றம் சாட்டுகின்றனர்.இந்தக் கடத்தல்களின் பின்னணியில் ஆளும்கட்சி அரசியல்வாதிகளும் வன உயிர் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகளும் தொடர்புபட்டுள்ளதாக எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். …

  23. கனடாவின் தலைநகரான ஒட்டாவாவில் அமைந்துள்ள கனடியப் பாராளுமன்றத்தில் “மே 18” நினைவு தினத்தை அனுஷ்டிக்கும் ஏற்பாட்டை கனடிய மனிதவுரிமை மையம் ஏற்பாடு செய்துள்ளது. இந் நிகழ்வில் கலந்து கொள்ள விரும்புவர்கள் contact@chrv.ca மூலமாகவோ அல்லது 416-644-7287 என்ற தொலைபேசி இலக்கத்தின மூலமாகவோ தங்களது பெயர்களைப் பதிவு செய்து கொள்ளுமாறும் நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். 2009ம் ஆண்டில் இடம்பெற்ற இறுதிப்போரின் போது கொல்லப்பட்ட சகலரையும், அப் போரினால் அநாதரவாக்கப்பட்டவர்களிற்கான விடிவு வேண்டியும் பாராளுமன்றத்தின் மத்திய கட்டிடத் தொகுதியில் நடைபெறவுள்ள இந்த நிகழ்விற்கு சகல அரசியற் கட்சிகளைச் சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ளவுள்ளனர். மே மாதம் 18ம் திகதி ஞாயிற்றுகி…

    • 12 replies
    • 825 views
  24. இலங்கைத் தமிழரசுக்கட்சியின் நிறுவுனர் தந்தை செல்வா அவர்களின் 37ஆவது நினைவு நிகழ்வுகள் கொழும்பு பம்பலப்பிட்டி கதிரேசன் மண்டபத்தில் இடம்பெற்ற போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் ஆற்றிய உரையில் குறிப்பிடப்பட்ட சில விடயங்கள் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் தொடர்பில் இவரின் நிலைப்பாடு தொடர்பாகச் சில கேள்விகளை எழுப்பியுள்ளன. அது மட்டுமன்றி இவர் அலங்காரமான வார்த்தைப் பிரயோகங்கள் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இலட்சியங்களை திசை திருப்பி விடுவாரோ என்ற அச்சத்தைம் ஏற்படுத்தியுள்ளன. அவ்வுரையின் போது இவரால் அழுத்தம் கொடுக்கப்பட்ட இரு விடயங்கள் இவரின் நோக்கங்கள் தொடர்பிலான பல வேள்விகளை எழுப்பி நிற்கின்றன. இவர், விடுதலைப்புலிகள் …

  25. வடமாகாணசபை உறுப்பினர் இ.இந்திரராசா கண்டனம். வவுனியா மாவட்டத்தில் தமிழ் மக்களின் குடிநிலைப்பரம்பலை மாற்றியமைக்கும் வகையில் இராணுவத்தினரதும், இராணுவ குடும்பங்களினதும் குடியேற்றங்களுக்கென அரச கட்டளைப்படி காணி சுவீகரிப்புகள் இடம்பெற்று வருவதாகவும், முறையற்ற இத்தகைய காணி சுவீகரிப்புகளால் தமிழ் மக்கள் தமக்கு பரம்பரை ரீதியாக உரித்துடைய காணிகளை இழந்துள்ளதாகவும் வடமாகாணசபை உறுப்பினர் இ.இந்திரராசா தெரிவிக்கின்றார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, வவுனியா வெங்கலச்செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாவற்குளத்தில் நடைபெற்றுவரும் சிங்களக்குடியேற்றத்துக்கான வேலைத்திட்டங்களை தடைசெய்யக்கோரி கடந்த மார்ச் 18 அன்று என்னால் கொண்டு வரப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.