Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நாசகார வெளிநாட்டுப் படைகளிடம் இருந்து, நாட்டின் போர் வீரர்களைப் பாதுகாக்க தாம் ஜெனிவா செல்லவுள்ளதாக, சிறிலங்கா அமைச்சரும், சிறிலங்கா அதிபரின் மனிதஉரிமை விவகாரங்களுக்கான சிறப்புத் தூதுவருமான மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். இன்று ஜெனிவா செல்லவுள்ள அவர், நேற்று நடந்த தேர்தல் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். ஈராக் மீது படையெடுத்து குழப்பத்தை உருவாக்கிய நாடு, தனது எண்ணெய் நலன்களுக்காக லிபியாவுக்குச் சென்று அந்த நாட்டின் அதிபரை அகற்றிய நாடு, இஸ்ரேலிய அரசுக்கு உதவுவதற்காக எகிப்திய அதிபரை வெளியேற்றிய நாடு, இப்போது சிறிலங்காவுக்கு மனிதஉரிமைகள் குறித்துப் போதிக்கிறது. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், அமெரிக்க, மற்றும் பிரித்தானிய தூதுவர்கள் எனக்கு முன்ப…

  2. மஹிந்த ராஜபக்ஷ லண்டனுக்கு வருகிறார்! கண்டனக் குரலை எழுப்பத் தாயாராகுங்கள் மக்களே! பிரித்தானியர் தமிழர் பேரவை அழைப்பு [saturday, 2014-03-08 11:32:21] எதிர்வரும் திங்கட்கிழமை 10-ஆம் திகதி இலண்டன் மல்பரோ-ஹவுசில் நடைபெற உள்ள கொமன்வெல்த் மாநாட்டில் இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்ள உள்ளதாகவும் அவரது பிரயாண ஏற்பாடுகள் இரகசியமான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அறியக் கிடைக்கப் பெற்றுள்ளது. 53 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் குறித்த மாநாட்டில் இலங்கை அதிபர் பங்கு கொள்ளும் பட்சத்தில் மாநாடு நடைபெற உள்ள லண்டன் மல்பரோ - ஹவுசின் முன்னிலையில் தமிழினப் படுகொலையில் ஈடுபட்ட இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிரான தமிழர்களின் கண்டனக்…

  3. தீர்மான வரைவு இலங்கையின் அரசியலமைப்புக்கு விரோதமானது! – ஜெனிவாவில் ரவிநாத் ஆரியசிங்க குற்றச்சாட்டு. [saturday, 2014-03-08 09:40:47] ஐ.நாள் மனித உரிமைப் பேரவையில், அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றவுள்ள தீர்மானத்தின் வரைவு அரசியல் சாசனத்திற்கு விரோதமான முறையில் அமைந்துள்ளதாக ஐ.நாவுக்கான இலங்கைப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை மக்களின் இறைமையை மீறும் வகையிலான விடயங்கள் இந்த தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. தீர்மான வரைவு பிழையான முன்னுதாரணத்தை வழங்கும் வகையில் அமைந்துள்ளது. அபிவிருத்தி அடைந்து வரும் உறுப்பு நாடுகளுக்கு குறுகிய மற்றும் நீண்ட கால அடிப்படையில் பாதிப்புக்களை ஏற்படுத்தக் கூடிய வக…

  4. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா முன்வைத்துள்ள தீர்மான வரைவை, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச நிராகரித்துள்ளார். நேற்று தொலைக்காட்சி நேரலை நிகழ்ச்சி ஒன்றில் கருத்து வெளியிட்டுள்ள அவர், இந்த தீர்மானம் குறித்த வாக்கெடுப்பை முக்கியமானதாக கருதவில்லை என்றும் கூறியுள்ளார். “இந்த தீர்மானம் குறித்தோ, அதன் வாக்கெடுப்பின் முடிவு குறித்தோ கவலைப்படவில்லை. ஜெனிவாவில் இத்தகைய குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவது ஒன்றும் எமக்குப் புதியதல்ல. இதுபோன்ற குற்றச்சாட்டுகள் போர் முடிவுக்கு வந்து பின்னர் எழுப்பப்பட்டன. ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை, ஜெனிவாவில் சமர்ப்பித்துள்ள அறிக்கையும் புதியதல்ல. அவர் விமர்சிக்கும் அறிக்கை ஒன்றை அளிப்பார் என்பது எதி…

  5. மூதூரில் அக்சன் பெய்ம் நிறுவனத்தின் 17 தொண்டுப் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு அது தொடர்பான உண்மை வெளிச்சத்துக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்று பிரான்ஸ் வலியுறுத்தியுள்ளது. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் நேற்றைய அமர்வில், பிரான்ஸ் வெளியிட்டு அறிக்கையில், “எல்லா இடங்களிலும் தண்டனையில் இருந்து தப்பித்தலுக்கு எதிரான போராட்டம் முக்கியமானது. சிறிலங்காவில், தண்டனையில் இருந்து தப்பித்தலுக்கு எதிரான போராட்டம், தேசிய நல்லிணக்கத்துக்கு அவசியமானது. இதற்கு எப்போதும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். நல்லிணக்க ஆணைக்குழுவின பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறும், மனிதஉரிமை ஆர்வலர்களுக்கு எதிரான அடக்குமுறைகளை முடிவுக்குக் கொண்டு வருமாறும் நாம் சிறிலங்கா…

  6. விடுதலைப் புலிகளின் குரலாகவே நவநீதம்பிள்ளை ஜெனிவாவில் செயற்படுகின்றார். விடுதலைப்புலி தீவிரவாதிகளை ஆதரிப்பதற்காக இலங்கையை பழிவாங்க நினைப்பது அர்த்தமற்ற செயற்பாடாகும் என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் முன்னாள் மேல் மாகாண அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார். மேலும் இலங்கை விடயத்தில் இந்தியா எதிரான தீர்மானங்களை மேற்கொள்ளாது. இலங்கையின் வளங்கள் இந்தியாவிற்கு தேவைப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார். இலங்கை விடயத்தில் தொடர்ந்தும் முன்வைக்கப்படும் நவநீதம்பிள்ளையின் அறிக்கை மற்றும் இந்தியாவின் ஆதரவு தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில் :- இலங்கை தொடர்பில் சர்வதேச குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட போதிலும் ஜெ…

  7. நான், வெளியில் இறங்கினால் வெளியில் இருக்கின்ற நாய்கள் என்னைப்பார்த்து குறைக்கின்றன. வீட்டுநாய் என்னை கடித்துவிட்டது என்று பொதுமக்கள் உறவுகள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். நுகேகொடையிலுள்ள அழகுகலை நிலையத்தை திறந்து வைக்கும் வைபவத்தில் கலந்துகொண்டு அங்கிருந்த தன்னுடைய நண்பர்களிடமே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். வெளியில் இறங்கினால் வெளியிலிருக்கின்ற நாய்கள் என்னைப்பார்த்து குறைக்கின்றன. என் வீட்டுநாய் என்னை கடித்துவிட்டது நான் அதற்கு சிகிச்சை பெற்றுக்கொண்டேன். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/102428-2014-03-07-06-27-24.html

  8. தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்குமாறு அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சரிடம் சுமந்திரன் கோரிக்கை ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்துக்கு அவுஸ்ரேலியா ஆதரவு வழங்க வேண்டும் என்று, அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜுலி பிசப்பிடம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவுஸ்ரேலிய நாடாளுமன்றக் கட்டடத்தில், வெளிவிவகார அமைச்சர் ஜுலி பிசப்பை சந்தித்து, இந்த வேண்டுகோளை அவர் விடுத்துள்ளார். அத்துடன், அவுஸ்ரேலியாவின் பிரதான கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்து, ஆதரவு கோரியுள்ளார். இந்தச் சந்திப்புத் தொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள எம்.ஏ.சுமந்திரன், “சிறிலங்காவில்…

    • 3 replies
    • 635 views
  9. பாடசாலை பேருந்து சேவை சீரின்மையால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் இன்று திடீர் போராட்டத்தில் குதித்தனர். தமக்கு நீதி வழங்க உதவுமாறு கோரி உதயனுக்கு முன்னால் நூற்றுக் கணக்கான மாணவர்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக மாணவர்கள் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் இருந்த அச்சுவேலி வரையிலான பகுதிகளுக்கு சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான மாணவர் பேருந்துக்கள் இரண்டு வாரமாக சேவையில் ஈடுபடவில்லை வாரத்தில் புதன்கிழமைகளில் மாத்திரம் குறித்த வழியினுடான சேவையில் ஈடுபடுவதற்காக ஒரு பேருந்தே அனுமதிக்கப்படுகின்றது. ஏனைய நாட்களில் நாம் பேருந்திற்காக மாலை வரை காத்திருந்து பணம் செலுத்தி வீடு செல்லவேண்டியுள்ளது. இது தொடர்பாக நடத்துநர் மற்றும் சாரதியோடு முர…

    • 2 replies
    • 659 views
  10. ஆலையடிவேம்பு பிரதேசத்திலுள்ள இளம் தமிழ் யுவதிகளை இலங்கை இராணுவத்தில் இணைத்துக் கொள்வதற்கான நேர்முகப் பரீட்சையானது எதிர்வரும் 2014.10.03, திங்கட்கிழமை ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் நடைபெறவுள்ளது. உரிமைக்காகவும், இன கௌரவத்துக்காகவும், விடுதலைக்காகவும் ஆயுதம் தூக்கியவர்கள் வழி வந்த உறவுகள் நாம் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் இலங்கையின் முக்கியமாக கிழக்கின் இன்றைய நிலையில் இளைஞர், யுவதிகள் இராணுவத்தில் இணைவதினை பெரிய விடயமாக பார்க்க வேண்டிய அவசியமில்லை காரணம்: .. 1 தகுதிக்கேற்ற தொழில் இன்மை .. 2 வறுமை . 3 அரச தொழில் வழங்களில் இனப்பாகு பாடு – முக்கியமாக கிழக்கு மாகாண சபை . 4 உயர்தரம் கற்பதற்க்கு வசதி இன்மை . 5 அரசியல் ரீதியில் பழிவாங்கல் 6 மாற்று. இனத்தாரின் வர்த்தக நிலை…

  11. பொதுநலவாய நாடுகளின் அழைப்பையேற்று இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவினர் நாளைமறு தினம் 9ஆம் திகதி, ஞாயிற்றுக்கிழமை ஜெனீவா பயணமாகவுள்ளது. மனித உரிமை ஆணைக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சிப்பட்டறையொன்று 9ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை ஜெனீவாவிவ் நடைபெறவுள்ளது. பொதுநலவாய நாடுகளிலிருந்து இப்பட்டறைக்கு பங்கு பற்றுநர்கள் வருகை தரவுள்ளனர். இலங்கையிலிருந்து செல்லும் குழுவினர் ஜெனீவாவில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் மனித உரிமைகள் பேரவை மாநாட்டில் 11ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கலந்துகொள்வார்கள். மனித உரிமை ஆணைக்குழு தவிசாளர் பிரியந்த பெரேரா தலைமையிலான குழுவில் 10 பிரதிநிதிகள் இடம்பெறுகின்றனர். வடக்கு மாகாணத்திலிருந்து ஆணைக்குழுவின் யாழ். மாவட்ட இணைப்பாளர் த.கனகராஜாவும், கிழக…

    • 0 replies
    • 416 views
  12. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம்:- தமிழ தேசியக்கூட்டமைப்பு சார்பில் ஜெனீவாவிற்கு அனுப்பப்பட்ட தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் எந்தவொரு சந்திப்பிலும் சர்வதேச போர்க்குற்ற விசாரணை தொடர்பில் கோரிக்கைகளை முன்வைக்கவில்லை. என்னையும் எதும் பேச அனுமதிக்கவில்லை என வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். யாழ்,ஊடக அமையத்தில் இன்று (06.03.14) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு ஊடகவியலாளர்களது கேள்விகளிற்கு பதிலளிக்கையிலேயே அவர் இந்;தத் தகவலை வெளியிட்டுள்ளார். வடமாகாணசபையில் சர்வதேச போர்க்குற்ற விசாரணை வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்ததுடன் அங்கு வடமாகாணசபை சார்பில் என்னையே ஜெனிவாவிற்கு அனுப்புவதென தீர்மானிக்கப…

    • 14 replies
    • 1.3k views
  13. தமிழ் மரபுத்திங்கள் பிரேரணை அரசியல் பந்தாட்டத்தில் மீண்டும் சிக்கியது! [Friday, 2014-03-07 12:07:11] தமிழ் மரபுத்திங்கள் அங்கீகாரம் கோரும் பிரே‌ரணை மீண்டுமொருமுறை ஒன்டாரியோ மாநில சட்டசபையில் நிராகரிக்கப்பட்டுள்ளது. ஒன்டாரியோ கன்ஸவேடிவ் கட்சியினரால் (Ontario PC) நேற்று (06-03-14) மீண்டும் கொண்டு வரப்பட்ட இந்தப் பிரேரணையை இம்மு‌றை என்டிபி (NDP) கட்சியினர் ஆதரித்தனர். ஆனால் லிபரல் கட்சியினர் சென்றமுறை போலவே இம்முறையும் அதை கடைசி நிமிடத்தில் ஆதரிக்க மறுத்து முற்றாக நிராகரித்துவிட்டனர். ஜனவரி மாதத்தை தமிழ் மரபுத்திங்கள் மாதமாக அறிவிக்கும் இந்த பிரேரணை லிபரல் கட்சியினரால் கடந்த ஆண்டு முதலில் முன்மொழியப்பட்டது. ஆனால் மாநிலசபைக் கூட்டத் தொடர் இடை ந…

  14. ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான நாடுகளால் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானத்தை, பலவீனப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட வேண்டாம் என்றும், இந்தியாவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரவுள்ளது. கடந்த புதன்கிழமை, நாடாளுமன்றக் கட்ட்டத்தொகுதியில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் போதே, இது தொடர்பான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஜெனிவாவில் அமெரிக்கா முன்வைத்துள்ள தீர்மான வரைவு குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. இதையடுத்தே, விரைவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குழுவொன்று புதுடெல்லிக்குச் சென்று, இந்திய அதிகாரிகளை சந்திக்கவும், முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது முன்வைக்கப்பட்டுள்ள …

  15. அமெரிக்க பிரேரணையின் கடுமையான தன்மை குறைக்கப்பட்டது மகிழ்ச்சி - இந்தியாவின் பங்களிப்பும் கிடைத்திருக்கலாம் - வாசுதேவ அமெரிக்காவின் இலங்கைக்கு எதிரான பிரேரணையின் கடுமையான தன்மை குறைக்கப்பட்டது மகிழ்ச்சியளிக்கின்றது. இதற்கு இந்தியாவின் பங்களிப்பும் கிடைத்திருக்கலாம் எனத் தெரிவித்த அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, காலம் தாழ்த்தாது தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க முன்வர வேண்டுமென்றும் அமைச்சர் தெரிவித்தார். தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் கடுமையான தொனியுடன் அமெரிக்கா முன்வைக்கவிருந்த பிரேரணை இறுதி நேரத்தில் அதன் 'கடும் தொனி' குறைக்கப்பட்டு முன்வைக்கப்பட்டமை மகிழ்ச்சியளிப்பதோடு இது ஜனாதிபதி மஹிந…

  16. அமைதியை நிலைநாட்ட இலங்கையை முன்னுதாரணமாக கொள்ளப் போகிறதாம் ஆப்கானிஸ்தான்! – அந்நாட்டு அதிபர் கொழும்பில் தெரிவிப்பு. [Friday, 2014-03-07 09:51:44] சமாதானத்தை நிலைநாட்டுவதில் இலங்கையை, ஆப்கானிஸ்தான் முன்னுதாரணமாகக் கொள்ள முடியும் என இலங்கைக்கு விஜயம் மேற் கொண்டிருக்கும் அந்நாட்டு ஜனாதிபதி ஹமீட் கர்சாய் தெரிவித்தார்.கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நேற்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இலங்கையும், ஆப்கானிஸ்தானும் வன்முறைச் செயற்பாடுகளால் பாதிக்கப்பட்ட நாடுகள். எனினும் இலங்கையில் தற்பொழுது சமாதானம் ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானிலும் சமாதானம் ஏற்பட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாக உள்ளது. …

  17. இலங்கை தொடர்பாக விசேட விசாரணைக்குழு! – 28ம் திகதி நவிபிள்ளை அறிவிக்கலாம். [Friday, 2014-03-07 08:05:54] இலங்கை தொடர்பாக விசாரணை நடத்த ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையால், விசேட குழுவொன்று நியமிக்கப்படலாம் என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஜெனீவாவில் தற்போது நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றவுள்ளன. இந்த தீர்மானம் தொடர்பாக விசாரணை நடாத்த உரிய அதிகாரி ஒருவரையோ அல்லது நிபுணர் குழு ஒன்றையோ ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை நியமிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்வரும் 28ம் திகதி நவனீதம்பிள்ளை தனது தீர்மானத்தை அறிவிக்கலாம். …

  18. எங்களை நாமே உதாசீனம் செய்யும் நடவடிக்கைக்கு எம்மை பயன்படுத்துகின்றார்கள்: தமிழ் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என்கிறார் அரியநேந்திரன் [Friday, 2014-03-07 12:00:29] எமது பிரச்சனை சர்வதேச ரீதியில் ஜெனீவா தீர்மானத்திற்கு சென்றுகொண்டிருக்கும் காலத்தில் தமிழ் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும். எங்களை நாமே உதாசீனம் செய்யும் நடவடிக்கைக்கு எம்மை பயன்படுத்துகின்றார்கள் இந்த நடவடிக்கைக்குப் பின்னால் செல்லாமல் விழிப்பாக இருந்து தொடர்ச்சியாக எமது போராட்டத்தின் இலக்கை அடையும் வரை உறுதியாக இருக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார். நேற்று கல்முனை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்…

  19. இந்தியா, இலங்கை மற்றும் மாலத்தீவு ஆகிய மூன்று நாடுகளின் கடல்வழி பாதுகாப்பில் ஒத்துழைப்பு தொடர்பான தேசிய பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் டெல்லியில் வியாழக்கிழமை நடைபெற்றது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர்மேனன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாலத்தீவின் தேசிய பாதுகாப்பு மந்திரி முகமது நஜிம், இலங்கை பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜபக்சே ஆகியோர் கலந்து கொண்டனர். மொரீஷியஸ் மற்றும் செஷல்ஸ் நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் இந்தியா, இலங்கை மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகளுக்கு இடையே பரஸ்பரம் கடற்படை வீரர்களுக்கு பயிற்சி அளித்தல், தகவல் பரிமாற்றம், ஒத்துழைப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர்மேனனுடன் இலங்கை பாதுகாப்…

  20. -சொர்ணகுமார் சொரூபன் யாழில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (02) இடம்பெற்ற விடுதி சுற்றிவளைப்பு தொடர்பாக என் மீது செய்யப்பட்டுள்ள முறைப்பாடு திட்டமிட்ட செயல் என வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் வியாழக்கிழமை (06) தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் வியாழக்கிழமை (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், 'கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்திலுள்ள யாழ்.அரியாலை ஆனந்தபுரத்திலுள்ள விடுதி மற்றும் யாழ்.அம்மன் வீதியில் அமைந்துள்ள மசாஜ் நிலையம் ஆகியன யாழ்ப்பாணப் பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டதுடன் கூடவே நானும் இருந்தேன். அந்த விடுதிகளில் 5 பெண்கள் உட்பட 8 பேர் கைதுசெய்யப்பட்டிருந்தனர். அவர்கள் தற்போது நீதிமன்றத…

  21. சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் குறித்து விசாரணை செய்ய, சொந்தமான விசாரணைப் பொறிமுறை ஒன்றை ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை உருவாக்க வேண்டும் என்று, ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை கேட்டுக் கொண்டுள்ளார். ஐ.நா மனித உரிமகள் பேரவையின் 25வது கூட்டத்தொடரில் நேற்று, அவர் சமர்ப்பித்த ஆண்டறிக்கையிலேயே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவில் போர் முடிவுக்கு வந்து ஐந்து ஆண்டுகளாகி விட்ட நிலையில், மோசமான மனிதஉரிமை மீறல்கள் குறித்த நம்பகமான - சுதந்திரமான விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்ற பேரவையின் அழைப்பை சிறிலங்கா திருப்திப்படுத்த தவறிவிட்டது. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை சொந்தமான ஒரு விசாரணைப் பொறிமுறையையை உருவாக்க நேரம் வந்து விட்டது என்று நான் பரிந்துரைக்கிறேன். உள்நாட…

  22. சிறிலங்காவில் அனைத்துலக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதையே தாம் இன்னமும் வலியுறுத்தி வருவதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக்கு, இந்த தகவல் எடுத்துச் செல்லப்படும் என்று, பிரித்தானிய வெளிவிவகாரப் பணியக மற்றும் கொமன்வெல்த் விவகாரங்களுக்கான இணை அமைச்சர் ஹியூகோ சுவைர் தெரிவித்துள்ளார். ஜெனிவாவில் அமெரிக்கா சமர்ப்பித்துள்ள தீர்மான வரைவு, அனைத்துலக விசாரணைக்கு அழுத்தம் கொடுக்காதது குறித்து சில தமிழ் அமைப்புகள், ஏமாற்றம் வெளியிட்டுள்ள நிலையில், பிரித்தானிய அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். டுவிட்டர் மூலம் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள ஹியூகோ சுவைர், “பிரித்தானிய அரசாங்கம், அனைத்துலக விசாரணை அழைப்புக்கு பக்கபலமாக இருக்கிறது. அமெரிக்க…

  23. இலங்கை அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையே சர்வதேச மத்தியஸ்தத்துடன் பேச்சு நடக்கவேண்டும் மற்றும் போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்த சர்வதேச விசாரணை வேண்டும் ஆகிய விடயங்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இம் முறை நிறைவேற்றப்பட உள்ள தீர்மானத்தில் உள்ளடக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது தமிழ்த் தேசியக் கூட் டமைப்பு. இதனை வலியுறுத்துவதற்காக அமெரிக்கா, பிரிட் டன், இந்தியா ஆகிய நாடுகளு டன் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு தொடர் பேச்சுக்களை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் பிற்பகல் கூடிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இந்த முடிவை எடுத்துள்ளது என்று கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன்…

  24. இலங்கை இராணுவத்தின் மகளிர் படையணிக்கு வட மாகாணத்தைச் சேர்ந்த மேலும் 44 தமிழ் யுவதிகள் இணைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு இணைக்கப்பட்ட யுவதிகளில் 20பேர் முல்லைத்தீவு பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் ஏனைய 24பேரும் புதுக்குடியிருப்பைச் சேர்ந்தவர்கள் என இராணுவத்தினர் தெரிவித்தனர். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/102410---44---.html

  25. கிழக்கு பல்கலை மிக மோசமான நிலைக்கு சென்றமைக்கு கடந்த 30 வருட கால குழுக்களின் நடவடிக்கைளே காரணம்:- 'பலம்வாய்ந்த ஆசிரியர் சங்கமாயின் எனக்கெதிராக எதுவும் செய்ய முடியுமா? சவால் விடுகிறேன்' உபவேந்தர் கலாநிதி கிட்ணன் கோவிந்தராஜா கிழக்கு பல்கலைக்கழகம் மிக மோசமான நிலைக்கு சென்றமைக்கு கடந்த 30 வருட கால குழுக்களின் நடவடிக்கைளே காரணம் என கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கலாநிதி கிட்ணன் கோவிந்தராஜா தெரிவித்துள்ளார். அந்த நிலை மீண்டும் தலைதூக்காத வகையில் செயற்பட வேண்டிய நிலையில் தாம் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கிழக்கு பல்கலைக்கழகத்தின் தற்போதை நிலை மற்றும் அதன் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் செய்தியாளர்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வு…

    • 1 reply
    • 325 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.