Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் கவனயீர்ப்புப் போராட்டம் பல்வேறு தடைகளை தாண்டி யாழ் நகரில் இடம்பெற்றுள்ளது. இன்று காலை 10.30 மணிக்கு யாழ்.முனியப்பர் ஆலயத்திற்கு முன்பாக இக் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றுள்ளது. நூற்றுக் கணக்கான மக்கள் இப்போராட்டத்தில் கலந்து கொண்டு தமது எதிர்ப்பை வெளியிட்டனர். குடியேற்று குடியேற்று சொந்த நிலத்தில் குடியேற்று, எங்கள் இடத்தை ஆக்கிரமிப்பு செய்யாதே!, எங்கள் இடத்தை எங்களிடம் தா!,காணாமல் போன உறவுகள் எங்கே? எமது வளங்களை பறிக்காதே!,விலை வாசியை ஏற்றாதே!அன்நிய மீனவர்களை வெளியேற்று எங்கள் மீனவரை வாழ விடு, வலி.வடக்கில் மீள்குடியேற்று, எங்கள் சொந்த நிலங்களுக்குச் செல்லவிடு, போன்ற கோசங்கள், மற்றும் பதாதைகளை தாங்கி…

  2. மனைவி சாட்சியம்- காணாமல் போன நபர் ஒருவரை இராணுவத்தினர் இராணுவ முகாம்களின் வேலைகளுக்காக பயன்படுத்திவந்தமை தொடர்பிலான சாட்சியம் ஒன்று இன்று சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் அளிக்கப்பட்டுள்ளது. வாகனச் சாரதியாகச் செயற்பட்ட சாவக்சேரி மட்டுவில் பகுதியைச் சேர்ந்த தம்பையா தர்மராஜன் என்பவர் கடந்த 2006-08-08 அன்று சிற்றூர்தி ஒன்றில் பருத்தித்துறை கனகம்புளியடிப் பகுதிக்கு சென்றிருக்கின்றார். இந்நிலையில் அவர் காணாமல் போயுள்ளதாக அவருடைய மனைவி தெரிவித்துள்ளார். அவர் தனது சாட்சியத்தில், 2006-08-08 அன்று பருத்தித்துறை கனகம்புளியடிக்குச் சென்ற கணவரை மணற்காடு இராணுவ முகாமுக்கு முன்பாக பிற்பகல் 3மணி முதல் மாலை 6 மணிவரையில் தமக்குத் தெரிந்தவர்கள் கண்…

  3. அனந்திக்கு இரண்டு முறை வீசா வழங்க மறுத்தது சுவிஸ்? – சிங்கள ஊடகம் கூறுகிறது. [saturday, 2014-02-15 08:26:29] வட மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரனுக்கு இரண்டு தடவைகள் சுவிஸ் வீசா மறுக்கப்பட்டதாக சிங்களப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சுவிட்சர்லாந்து செல்வதற்காக அனந்தி இரண்டு தடவைகள் விண்ணப்பித்த போதிலும் வீசா வழங்கப்படவில்லை. இதற்கு முன்னதாக அனந்தி அரசியல் தஞ்சம் கோரியிருந்தார். 2013ம் ஆண்டு மனித உரிமைப் பேரவை மாநாட்டில் பங்கேற்கபதற்கு முயற்சித்திருந்தார்.அரச சார்பற்ற நிறுவனமொன்றின் ஊடாக இவ்வாறு சுவிட்சர்லாந்து செல்ல முயற்சித்தார். அதேவேளை, இம்முறை ஐ.நா மனித உரிமைப் பேரவை மாநாட்டில் அனந்தி சசிதரன் பங்கேற்க சுவிஸ் சென்றுள்ளார் என்பது …

  4. போரை முடிவுக்குக் கொண்டு வந்ததன் பிரதிபலன் ஜெனிவாவில் இருந்து வருகிறது! – மஹிந்த ராஜபக்ஷ. [Friday, 2014-02-14 08:03:42] பயங்கரவாதம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதன் பயனை மக்கள் அனுபவிக்கின்ற சூழலில் அதற்கான எதிர் பிரதிபலன் தமக்கு ஜெனீவாவிலிருந்து வருவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இத்தகைய எதிர்ப்புகளை எதிர்கொள்ள நேரும் போதும் பயங்கரவாதத்திலிருந்து நாட்டையும் மக்களையும் மீட்டமை பெரிதெனக் கருத முடிவதாகவும், பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டிருக்காவிட்டால் நாட்டில் இன்றைய நிலையைக் கட்டியெழுப்ப முடிந்திருக்காது எனவும் அவர் தெரிவித்தார். நேற்று கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றி அவர்- முப்பது வருட …

  5. றீகனின் மனைவி துளசிகா LLRC இன் முன் சாட்சியம்

  6. போதைப் பொருள், புகைத்தல் ஆகியவற்றில் யாழ் மாவட்டம் முதல் இடத்தில்! [saturday, 2014-02-15 12:08:38] இலங்கையில் திட்டமிட்ட கலாச்சாரச் சீரழிவுகளுக்கு உள்ளாகி வருகின்றது தமிழ்மக்கள் அதிகமாக உள்ளதும் கலாச்சாரத்திற்குப் பெயர் போனதுமான வடமாகாணம்.இலங்கையில் புகைப்பிடிக்கும் பழக்கத்திலும் போதைப்பொருள் பாவினையிலும் யாழ் மாவட்டமே முதலாவது இடத்தில் இருப்பதாக இலங்கை தேசிய போதைப்பொருள் மற்றும் புகைத்தலுக்கு எதிரான அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. புகை பிடிக்கும் பழக்கத்தில் முதல் இடத்தில் யாழ் மாவட்டமும் இரண்டாம் இடத்தில் கொழும்பு மாவட்டமும் காணப்படுவதாக அந்த ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. யாழ் மாவட்டத்தில் 43 வீதமானவர்களும் கொழும்பு ம…

  7. அனந்தியின் ஜெனிவா பயணத்தால் நாட்டுக்கு ஆபத்து! – எச்சரிக்கிறார் வசந்த பண்டார. [saturday, 2014-02-15 09:01:53] வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனின் ஜெனிவா பயணம் நாட்டுக்கு விபரீதமாகவே அமையும் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் வசந்த பண்டார எச்சரித்துள்ளார். இது தொடர்பாக டாக்டர் வசந்த பண்டார மேலும் தெரிவிக்கையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் முதலமைச்சரின் அனுமதியுடன் 3 மாத விடுமுறையில் வெளிநாடு செல்ல முடியும். அதற்கான உரிமை அவருக்கு உள்ளது. இதனை தடுக்க அரசாங்கத்தால் முடியாது. ஏனென்றால் அவர் பயங்கரவாத அமைப்பொன்றின் உறுப்பினர் அல்ல. மக்களால் தேர்தலில் ஜனநாயக ரீதியில் மாகாண சபைக்கு தேர்ந்தெடுக்கப்…

  8. மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் பஞ்சரத பவனி இன்று சனிக்கிழமை காலை ஆரம்பமானது. (படங்கள்:-ஷண்) http://tamil.dailymirror.lk/--main/100230-2014-02-15-06-38-58.html

  9. -சொர்ணகுமார் சொரூபன் தாங்கள் கருணா குழுவைச் சேர்ந்தோர் என்றும் விசாரணைக்காகவே அழைத்து செல்வதாகவும் கூறி தங்களின் தெளிவில்லாத தொடர்பு அட்டை ஒன்றிணை தந்துவிட்டு 2006 ஆம் ஆண்டு என் மகனை ஒரு குழுவினர் அழைத்துச்சென்றனர். அவ்வாறு அழைத்துச்செல்லப்பட்ட என் மகனை இன்று வரையிலும் காணவில்லை என்று அவரது தாயாரான பிரேமபாலன் உதயரஜனி நேற்று சாட்சியமளித்தார். காணாமற்போனோர் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவினர் யாழ்.கோப்பாய் பிரதேச செயலகத்தில் காணாமற்போனோர் தொடர்பிலான விசாரணைகளை நேற்று மேற்கொண்டனர். இதில் சாட்சியமளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ். கோப்பாய் இருபாலை பகுதியிலுள்ள தமது வீட்டிற்கு 7 பேர…

  10. காணாமல் போனவர்கள் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாட்சியப்பதிவுகள் இன்று சாவகச்சேரி பிரதேச செயகத்தில் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. அதன்படி சாவகச்சேரி பிரதேச செயலகர் பிரிவின் கீழ் உள்ள கிராமசேவகர் பிரிவில் இருந்து 13 கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த 59பேர் இன்றைய அமர்விற்கு அழைக்கப்பட்டனர். எனினும் அவர்களில் 40 பேரே இன்றைய தினம் வருகைதந்துள்ளனர். இதுவரை 35 பேர் சாட்சியம் அளித்துள்ளனர். இதேவேளை, இன்று வருகை தந்தவர்களுக்கான பதிவுகள் நிறைவுபெற்றதும் புதிய விண்ணப்பங்களில் இருந்தும் சாட்சிப்பதிவுக்கு அழைக்கப்படுவர் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. http://www.onlineuthayan.com/News_More.php?id=725…

  11. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அடுத்த மாதம், மனிதஉரிமை மீறல்கள் மதிப்பீடு கள் வரும் போது இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக, இந்திய அதிகாரி ஒருவர் தி ஹிந்து நாளிதழிடம் தெரிவித்துள்ளார். தனது பெயரை வெளியிட விரும்பாத அந்த மூத்த அதிகாரி, இதுதொடர்பாக மேலும் தகவல் வெளியிடுகையில், அரசியல் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் உறுதியான முயற்சியாக, தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு மாகாணத்தில் தேர்தலை நடத்தும் வாய்ப்பை சிறிலங்கா அரசாங்கம் பயன்படுத்திக் கொண்டது. ஆனால், கொழும்பு அதை வீணடித்து, புதிதாக தெரிவு செய்யப்பட்ட மாகாணசபையுடன், முரண்டு பிடிப்பதாகத் தெரிகிறது. சிறிலங்காவின் நிலைப்பாட்டை மாற்றும் நோக்கில், கடந்த ஆண்டு இந்தியா உள்ளிட்ட நாடுகள் அத…

  12. சர்வதேச போர்க்குற்ற விசாரணைத் தீர்மானத்தை ரஷ்யாவும் நிராகரிப்பு! [saturday, 2014-02-15 09:11:18] இலங்கையில் நடந்த போர்க்குற்றங்களுக்காக மேற்கு நாடுகள் சர்வதேச விசாரணை கோருவதை ரஷ்யா நிராகரித்துள்ளது. இறுதிப்போரின் போது மனிதஉரிமைகள் மீறப்பட்டமை தொடர்பில் ஜெனீவாவில் சர்வதேச விசாரணையை கோரப்போவதாக அமெரிக்காவும் பிரித்தானியாவும் தெரிவித்து வருகின்றன. இந்தநிலையில் சர்வதேச விசாரணை காரணமாக நல்ல விடயங்கள் எதுவும் நடக்கப்போவதில்லை என்று இலங்கைக்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டிருந்த ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சு பணிப்பாளர் அனட்டொலி விக்டோரோவ் கொழும்பில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். மனிதஉரிமை மீறல்கள் யார் பொறுப்பு என்பதை கண்டுபிடிப்பதில் பாரிய சிரமங…

  13. நாடு மிகவும் ஆபத்தான நிலைமையை எதிர்நோக்கியுள்ளது. இந்த நிலைமைக்கு மஹிந்த ராஜபக்­ அரசே முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. இந்தத் தகவலை ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் ஐக்கிய தேசியக் கட்சி வெளியிட்டுள்ளது. நாடு படுபாதாளத்தில் வீழ்ந்துள்ளது. இறுதிக்கட்டப் போரின் போது இடம்பெற்றதாக சுமத்தப்படும் உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரப்படுகின்றது. சர்வதேசம் இது தொடர்பில் பல தடவைகள் கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. எனினும், இதுவரை அரசு காத்திரமான விசாரணைகளை நடத்த நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஐக்கிய தேசியக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நம்பகமான உள்ளக விசாரணைகளை நடத்த நடவடிக்கை …

  14. இலங்கை மீது போர்க்குற்றச்சாட்டுகள் ஏன்? – லண்டனில் விளக்கமளிக்கப் போகிறாராம் மஹிந்த. [saturday, 2014-02-15 08:08:43] போர்க்குற்றச் குற்றச்சாட்டுக்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ச லண்டனில் விளக்கம் அளிக்க உள்ளதாக சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அடுத்த மாதம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ச லண்டனுக்கு விஜயம் செய்ய உள்ளார். பொதுநலவாய நாடுகள் தினத்தை முன்னிட்டு நடைபெறும் நிகழ்வில் அவர் பங்கேற்கவுள்ளார். இந்த நிகழ்வில், எந்த நோக்கத்துடன் இலங்கை மீது சில தரப்பினர் போர்க்குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றார்கள் என்று அவர் விளக்கவுள்ளார். பல்வேறு நாடுகளின் அரச தலைவர்கள் உள்ளிட்ட 300 முக்கிய பிரமுகர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்க உள்ளனர். இலங்கைக்கு எ…

  15. இலங்கையைத் தனிமைப்படுத்தக் கூடாது! - வக்காலத்து வாங்குகிறது அவுஸ்ரேலியா. [saturday, 2014-02-15 08:03:01] இலங்கையை தனிமைப்படுத்த வேண்டாம் என அவுஸ்திரேலிய அரசாங்கம், சர்வதேச சமூகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்தத் தருணத்தில் இலங்கையை தனிமைப்படுத்துவது பொருத்தமானதல்ல என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிஷொப் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற இலங்கையின் 66ம் சுதந்திர தின நிகழ்வுகளில் பங்கேற்ற போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் சமாதானத்தையும், பொருளாதார அபிவிருத்தியையும் ஏற்படுத்த முழு அளவில் ஆதரவு அளிக்கப்படும் என்றும்,இலங்கையுடனான உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள தமது நாடு விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். …

  16. ஐ.நா. வின் முன்னாள் உயரதிகாரி இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவு திரட்டும் முனைப்பில்... 15 பெப்ரவரி 2014 ஐ.நா. வின் முன்னாள் உயரதிகாரி இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவு திரட்டும் முனைப்பில்... ஐக்கிய நாடுகள் அமைப்பின் முன்னாள் உயரதிகாரியொருவர் இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவு திரட்டும் முனைப்புக்களில் தீவிரம் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் முன்னாள் துணைப் பொதுச் செயலாளர் டெனி;ஸ் ஜே. ஹால்லிடே (Denis J. Halliday) இவ்வாறு இலங்கைக்கு எதிராக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்…

    • 2 replies
    • 913 views
  17. சர்வதேச சுயாதீன விசாரணையை வலியுறுத்தி பிரித்தானிய தமிழர் பேரவையின் தொடர்ச்சியான பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பு. [Friday, 2014-02-14 12:05:28] இலங்கை இனவாத அரசுகளினால் தொடர்ச்சியாக தமிழ் மக்கள் மீது மேற் கொள்ளப்பட்டுவரும் திட்டமிட்ட இன அழிப்பு, போர்குற்ற நடவடிக்கைக்கு சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரி பிரித்தானிய பாராளுமன்ற உறுபினர்களை தொடர்ச்சியாக சந்திக்கும் நிகழ்சி நிரலை பிரித்தானியா தமிழர் பேரவை முன்னெடுத்து வருகிறது . பிரித்தானிய வாழ் அனைத்து தமிழ் மக்களும் தாங்கள் வசிக்கும் தங்கள் பிரதேச பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து எதிவரும் மார்ச் மாதம் ஐநாவில் நடைபெற இருக்கும் மனித உரிமை கூட்டத்தொடரில் இலங்கை அரசா…

  18. கொழும்பு தேசிய வைத்தியசாலையில் புதிதாக மீள் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட முஸ்லிம்களுக்கான வணக்க ஸ்தலகூடத்தை மூடுமாறு குறித்த வைத்தியசாலையில் உள்ள பெளத்த பிக்குகள் சுகாதார பணிப்பாளர் சுனில் ஜயசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நேற்று முன்தினம் வைத்திய பேராசிரியர் றிஸ்வி சரிப் தலைமையில் 41ஆம் இலக்க அறையினை புனர்நிர்மாணம் செய்யப்பட்டு அமைச்சர் பௌசியினால் திறந்து வைக்கப்பட்ட தொழுகை அறையினையே மூடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேவை புரியும் முஸ்லிம் ஊழியர்கள், வைத்தியர்கள் மற்றும் நோயாளிகளுக்காக 1994 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த தொழுகை அறை இடைக்காலங்களில் குறித்த அறை உடைக்கப்பட்டு …

  19. உரிய நிகழ்ச்சி நிரலை சமர்ப்பித்தால் தெரிவுக்குழுவில் பங்கேற்கலாம்! – வடமாகாண முதல்வர் விக்னேஸ்வரன் கூறுகிறார். [Friday, 2014-02-14 07:46:09] தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் உரிய நிகழ்ச்சி நிரல் சமர்ப்பிக்கப்பட்டால், பாராளுமன்ற தெரிவுக் குழுவில் பங்கேற்பதில் எவ்வித பிரச்சினையும் இருக்காது என்று வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார். “அரசாங்கத்தின் அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப தேசிய கொள்கையின் படியே எமக்கு தற்போது செயற்பட வேண்டியுள்ளது. அந்த நிகழ்ச்சி நிரல் வடமாகாண மக்களின் எவ்வித பங்கேற்பும் இன்றியே தயாரிக்கப்பட்டது. யுத்தத்தின் பின்னரான தேவைகள் குறித்து அவ…

  20. வடக்கு மாகாணசபையின் உறுப்பினரான அனந்தி எழிலன் தேர்தலில் போட்டியிடுவதற்காக முன்வந்த நாளிலிருந்து ஊடகக் கவனத்தை அதிகமாக ஈர்க்கும் ஒருவராக விளங்கி வருகின்றார். தமிழ் ஊடகங்களை மாத்திரமன்றி சிங்கள ஊடகங்களையும் இவர் தொடர்பான செய்திகள் ஆக்கிரமித்து வருகின்றன. இவர் கூறிய விடயங்கள் செய்திகளாக வெளிவருகின்ற அதேவேளை இவர் கூறாத விடயங்களும் செய்திகள் ஆக்கப்படுகின்றன. மறுபுறம், சிங்களப் பேரினவாதத்தைக் கக்கும் ஊடகங்களோ ‘அனந்தி சிரித்தால் குற்றம், கதைத்தால் குற்றம், நடந்தாலும் குற்றம்” என்ற பாணியில் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இந்த வரிசையில் அனந்தி அவர்களின் அண்மைக்காலச் செயற்பாடுகளைக் கருத்தில் எடுத்து, விடுதலைப் புலிகளின் முன்னைநாள் போராளிகளைப் போன்று, அவர் தடுத்து வைக்கப்பட்டுப் …

    • 15 replies
    • 1.7k views
  21. 13வது திருத்தத்தை இந்தியா திணிக்கவில்லை;அதனை மறுபரீசீலனை செய்யும் உரிமை இலங்கைக்கு உள்ளது! - சல்மான் குர்ஷித் [Thursday, 2014-02-13 08:06:09] 13ஆவது திருத்தத்தை இலங்கை மீது இந்தியா ஒருபோதும் திணிக்கவில்லை என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித், தெரிவித்தார். இலங்கை ஊடகவியலாளர்கள் 20 பேர் அடங்கிய குழு, இந்திய அரசின் அழைப்பின் பேரில் புதுடில்லியை சென்றுள்ளது. இவர்களை இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் நேற்றுமாலை சந்தித்துப் பேசினார். அப்போது அவர், 13ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் இந்தியா ஆரம்பத்தில் உறுதியாக இருந்தது. இச்சட்டத்திருத்தம் என்பது ஓர் ஆரோக்கியமான ஆலோசனைதானே தவிர, இது திணிக்கப்பட்ட விடயமல்ல. அன்றைய காலத்தில் இருநாட்டு அரசாங்கமு…

    • 10 replies
    • 755 views
  22. இராணுவப் புலனாய்வுப் பிரிவினால் கடத்தப்பட்டு, கருணா குழுவிடம் ஒப்படைக்கப்பட்ட ஊடகவியலாளர்! – ஆணைக்குழு முன் சாட்சியம். [Friday, 2014-02-14 17:07:38] வெள்ளவாயப் பகுதியில் வங்கி ஒன்றுக்கு பணப்பரிமாற்றம் செய்து விட்டு புத்தள வீதி ஊடாகப் பயணித்த போது, இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட தனது சகோதரன் சிவஞானம் பார்த்தீபன் இன்று வரை எங்கு உள்ளார் என்று தெரியாமல், தமது குடும்பம் தேடி அலைவதாக தினக்குரல் ஊடகவியலாளர் சிவஞானம் செல்வதீபன் சாட்சியம் அளித்துள்ளார். கோப்பாய் பிரதேச செயலகத்தில் காணாமற்போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் இன்று சாட்சியமளித்த அவர்- மொனராகலை மாவட்டம் வெள்ளவாய பகுதியில் வர்த்தக நிலையத்தில் பணியாற்றிய எனது சகோதரன் 2008.08.2…

  23. ஜெனீவாவுக்குப் பதிலடி கொடுக்க தேர்தலைப் பயன்படுத்த வேண்டும்! – ஆளும்கட்சிக்கு ஆதரவு கோருகிறார் கோத்தபாய. [Friday, 2014-02-14 07:32:43] ஜெனீவா அழுத்தங்களுக்கு பதிலடி கொடுப்பதற்கு நாட்டுமக்கள் மேல், தென் மாகாணசபைத் தேர்தல்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எதிர்வரும் தேர்தலில் ஆளும் கட்சிக்கு வாக்களித்து ஜனாதிபதியின் கரத்தை பலப்படுத்த மக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். மேல் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் உதய கம்மன்பிலவின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 12800 முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு புன…

  24. வருகை வீசா விடயத்தில் இலங்கை அவமதிப்பு! – இந்திய உறவில் பாதக விளைவு ஏற்படலாம் என்கிறார் கெஹலிய. [Friday, 2014-02-14 09:29:00] இந்தியாவின் வருகை வீசா திட்டத்தில் இலங்கை உள்ளடக்கப்படாதது இலங்கையை அவமதிப்பது போன்ற செயல் எனவும் இதனால் இருநாட்டிற்குமிடையிலான உறவில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தலாம் எனவும் அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். வந்தடைந்தவுடன் வழங்கும் வீசா திட்டத்தில் இலங்கை உள்ளடக்கப்படாதது குறித்து அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் வினவப்பட்டது. இதற்குப் பதிலளித்த அவர்- இந்த விவகாரத்தை அரசாங்கம் ஆழமாக கவனிக்க வேண்டும். வெளிவிவகார அமைச்சு ராஜதந்திர மட்டத்தில் பேசி இந்த பிரச்சினைக்க…

  25. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், தென்கொரியாவின் ஆதரவு கோரி, சிறிலங்கா அதிபரின் சிறப்பு தூதராக, அமைச்சர் பசில் ராஜபக்ச சியோலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். சியோல் சென்றுள்ள சிறிலங்கா அமைச்சர் பசில் ராஜபக்ச நேற்று, அந்தநாட்டின் பிரதமர் சுங் ஹொங்- வொன்னுடன் (Chung Hong-won) பேச்சுக்களை நடத்தியுள்ளதாக, தென்கொரிய செய்தி நிறுவனமான யொன்ஹாப் (Yonhap) செய்தி வெளியிட்டுள்ளது. இதன்போது, தென்கொரியாவின் அபிவிருத்தி அனுபவங்களை சிறிலங்காவுடன் பகிர்ந்து கொள்ளுமாறும், சிறிலங்காவின் பொருளாதார விருத்திக்கு பங்களிப்புச் செய்யுமாறும் பசில் ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார். ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானத்தை தோற்கடிப்பதற்கான ஆதரவைக் கோரியே பசில் ராஜபக்ச தென்கொ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.