Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கடந்த ஜனவரி 31 பெப்ரவரி 1 ம் தேதிகளில் லண்டனில் பிரித்தானிய தமிழர் பேரவை சார்பாக ‘இலங்கை நடைபெறும் நில அபகரிப்பை பற்றிய சர்வதேச மாநாடு’ நடைபெற்றது. இதில் மேதா பட்கர், நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் டெனிஸ் ஹலேடெய் உட்பட உலகளவில் பல்வேறு தரப்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இதில் அண்மையில் இலங்கையில் கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்ட பத்திரிகையாளர் மகா.தமிழ்ப் பிரபாகரனும் கலந்து கொண்டு தனது ஆவணப்படத்தை வெளியிட்டார். இந்த ஆவணப்படத்தில் வெளியானவைகள் இப்பொழுது இலங்கைத் தரப்பை பதற்றத்துக்கு உள்ளாக்கி இருப்பதாக தெரிகிறது. இது தொடர்பாக சிங்கள பத்திரிகையில் எழுதப்பட்டுள்ள செய்தியில், சமீபத்தில் பூநகரி பகுதியில் கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு திருப…

  2. சிறீலங்காவிற்கு போர் கப்பல்கள் விற்க இந்திய மத்திய அரசுக்கு தடை விதிக்கக்கோரி, உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கறிஞர் ஸ்டாலின் வழக்கு தாக்கல் செய்துள்ளார். குறித்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு பதில் மனுத் தாக்கல் செய்தது. அதில், கோவா கப்பல் கட்டும் நிறுவனம் சிறீலங்காவிற்கு 2 ரோந்து கப்பல் விற்க உள்ளது. அந்த கப்பலில் தற்காப்பு ஆயுதங்கள் தவிர, போருக்கான ஆயுதங்கள் இருக்காது. இந்த வர்த்தக ஒப்பந்தம் நூறு மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புடையது. இந்த ஒப்பந்தத்தால் இந்தியாவின் மதிப்பு சர்வதேச அளவில் உயரும். கப்பல் விற்பனையில் மத்திய அரசுக்கு தொடர்பு இல்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் சுதாகர், வேலுமணி ஆகியோர் முன்பு கடந்த 30ம் திகதி மீ…

  3. தமிழ் மக்களுடைய கலாச்சாரம் பக்தி பூர்வமானதும் மதிப்பு மிக்கதுமாகும் எனவே யாழ்.மாவட்டத்தில் கலாச்சார சீரழிவினை ஏற்படுத்த நாம் இடமளிக்க மாட்டோம் என யாழ்.சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் டவுள்யூ.பி விமலசேன தெரிவித்தார். யாழ்ப்பாணம் பொலிஸ் தலைமையகத்தில் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு இன்று இடம்பெற்றது. அதில் கலந்து கொண்ட ஊடகவியலாளர் ஒருவர் யாழ்.மாவட்டத்தில் கலாச்சார நிலையின் தற்போதைய நிலை குறித்து எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நான் மட்டக்களப்பில் 25 வருடங்களுக்கு மேலாக கடமையாற்றி இருக்கின்றேன். அங்கு மூவின மக்களும் வாழ்கின்றனர் எனினும் அங்குள்ள தமிழ் மக்களுடைய செயற்பாடுகள் அவர்களது கலாச்சாரத்தின் மதிப்பினை எடுத்து…

  4. முள்ளிவாய்க்கால் போரின்போது இலங்கை ராணுவம் தடை செய்யப்பட்ட ரசாயன குண்டுகளை பயன்படுத்தியது உள்ளிட்ட அத்துமீறல்களை இலங்கை வீரர் ஒருவரே ஒப்புக்கொள்ளும் 'இந்த நிலம் ராணுவத்துக்கு சொந்தமானது' This Land Belongs to Army) என்ற தமிழக பத்திரிகையாளர் மகா. தமிழ்ப் பிரபாகரனனது ஆவணப்படம், இங்கிலாந்து நாடாளுமன்ற வளாகத்தில் வெளியிடப்பட்டது. ராணுவமயமாக்கப்பட்ட பகுதிகளில் இன்றைய நிலையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நில அபகரிப்பு பற்றியும் போரின் போது இலங்கை ராணுவம் எப்படி நடந்து கொண்டது என்பதை மையப்படுத்திய இந்த ஆவணப்படம், கடந்த ஜனவரி 30 - பிப்ரவரி 1 அன்று பிரிட்டன் தமிழர் பேரவை மற்றும் தமிழர்களுக்கான அனைத்து கட்சி நாடாளுமன்ற குழு ஏற்பாட்டில் நடைபெற்ற 'இலங்கையில் நடைபெறும் நில அபகரிப்ப…

  5. எதிர்ப்புக்கு அஞ்சி தமிழகத்துக்கு வர தயங்கிய ரணில்! [Friday, 2014-02-07 12:09:14] தமிழ் நாட்டில் நிலவும் எதிர்ப்பு காரணமாக தமிழகத்துக்கு வர தயக்கமாக உள்ளதாக இலங்கை எதிர்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கே சென்னை விமான நிலையத்தில் தெரிவித்துள்ளார். எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்கு பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். அவர் சற்று முன்னதாக சென்னை விமான நிலையம் சென்றடைந்தார். தமக்கு எதிராக கருத்துகளை தமிழக அரசியல் கட்சிகள் வெளிப்படுத்துவதாகவும் ரணில் விக்கிரமசிங்க மேலும் குற்றஞ்சாட்டியுள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=103102&category=TamilNews&language=tamil

  6. அமெரிக்க அதிகாரிக்கும் முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி போராளிகளுக்கும் இடையில் இரகசிய பேச்சுவார்த்தை நடாத்த ஐக்கிய நாடுகள் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் துணை நிறுவனமான சர்வதேச குடிபெயர்வு அமைப்பு இந்த இரகசிய ஏற்பாடுகளை செய்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. கிளிநொச்சியில் இந்த இரகசிய சந்திப்பு நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சர்வதேச குற்றச் செயல்கள் தொடர்பிலான அமெரிக்காவின் விசேட பிரதிநிதி ஸ்டீவன் ரெப், தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்த சந்திப்பில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மிச்சல் ஜே சிசனும் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஐக்கிய நாடுகள் அப…

  7. (இலங்கை என்பது சர்வதேசத்திற்குள் தான் இருக்கிறது.) இலங்கைக்கு எதிராக சர்வதேச சுயாதீன விசாரணையை ஏற்றுக்கொள்வதாக கோட்டை நாகவிகாரையின் விகாராதிபதி மாதுலுவாவே சோபித தேரர் தெரிவித்துள்ளார். இலங்கைத் தலைநகர் கொழும்பிலிருந்து வெளியாகும் தமிழ் பத்திரிகை ஒன்று வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நாங்களே செய்து கொண்ட பிழை தான் ஜெனீவா. இலங்கை அரசாங்கம் முன்வைத்த கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை நிறைவேற்ற வேண்டுமென்பதே சர்வதேச நாடுகளின் வேண்டுகோளாக இருக்கிறது. இலங்கைக்கு வருகை தந்த சர்வதேச பிரதிநிதிகளிடம் பல வாக்குறுதிகளை அளித்துள்ளார். அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக தெரியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். 18ஆவது திருத்தச் சட…

  8. சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்த குற்றச்சாட்டுகள் மீதான அனைத்துலக விசாரணை குறித்து முடிவெடுக்க வேண்டியது உறுப்பு நாடுகளினது விவகாரமே என்று, ஐ.நா பொதுச்செயலரின் பதில் பிரதி பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார். அண்மையில் அவுஸ்ரேலியாவைத் தளமாக கொண்ட அமைப்பு ஒன்று வெளியிட்ட ஆய்வு அறிக்கையில், போரின் போது இடம்பெற்ற பெரும்பாலான போர்க்குற்றங்களுக்கு சிறிலங்கா இராணுவமே பொறுப்பு என்று கூறப்பட்டுள்ளது குறித்து, ஐ.நா பொதுச்செயலரின் பதில் பிரதி பேச்சாளரிடம் கேள்வி எழுப்பட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்த குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்புக்கூறப்பட வேண்டும் என்ற ஐ.நா பொதுச்செயலரின், நிலைப்பாட்டில் தான் ஐ.நா தொடர்ந்தும…

  9. வடக்கில் கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள சிறிலங்கா இராணுவத்தின் பொறியியல் படைப்பிரிவின் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பிரிவுக்கு அமெரிக்க படையினர் அளித்து வந்த பயிற்சி இன்றுடன் நிறைவு பெற்றுள்ளது. வவுனியா பூவோயா சிறிலங்கா இராணுவ முகாமில் கடந்த மாதம் 27ம் நாள் தொடக்கம், இந்தப் பயிற்சி வழங்கப்பட்டு வந்தது. அமெரிக்காவின் பசுபிக் இராணுவத்தின், நான்காவது மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பிரிவு சிறிலங்கா படையினருக்கு இந்தப் பயிற்சிகளை வழங்கியது. இதன்போது, அமெரிக்க இராணுவத்தின் மருத்துவ, கால்நடை மருத்துவ, வெடிபொருள் நிபுணர்களும் பயிற்சிகளை வழங்கினர். 2003ம் ஆண்டு தொடக்கம் சிறிலங்காவில், கண்ணிவெடிகளை அகற்றும் பணிக்கு அமெரிக்கா உதவிகளை வழங்கி வருகிறது. 2003 தொ…

  10. போரால் பாதிக்கப்பட்ட சிறிலங்காவின் வடக்கில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது விதைக்கப்பட்ட நிலக்கண்ணிவெடிகளை முற்றாக அகற்றுவதற்கு இன்னமும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் ஆகும் என சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். "நிலக்கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு மிகக் கடினமான பிரதேசங்கள் தற்போது எஞ்சியுள்ளன. இவற்றை அகற்றுவதற்கு சிறப்புத் தேர்ச்சியும் காலமும் தேவைப்படுகின்றன. இவை ஆபத்து மிக்கதாகக் காணப்படுவதால் இந்த நிலக்கண்ணிகளை அகற்றுவதற்கு மிகக் குறைந்தளவு இயந்திரங்களைப் பயன்படுத்தி அதிகளவான மனிதவலுக்கள் பயன்படுத்தப்பட வேண்டும்" என சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் றுவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார். "மக்களை மீள்குடியேற்றுவதற்கு அனுசரணை வழங்குவதுடன், வாழ்…

  11. யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைதூதுவர் வெங்கடாசலம் மகாலிங்கம் தென்னாபிரிக்காவிலுள்ள கயானா கூட்டுறவுக் குடியரசுக்கான இந்திய உயர் ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளார். யாழில் இந்தியத் துணைத்தூதரகம் நவம்பர் 2010இல் ஆரம்பிக்கப்பட்ட போது முதலாவது துணைத்தூதராக நியமனம் பெற்று கடமையாற்றி வந்த மகாலிங்கத்திற்கு இராஜதந்திர துறையில் இருபது வருடத்திற்கு மேற்பட்ட அனுபவம் உள்ளது. மேலும் இவர் வெகு விரைவில் இந்திய உயர்ஸ்தானிகராக தனது கடமைகளை கயானாவில் பொறுப்பேற்க போவதாக இந்திய துணைத்தூதுவர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது. http://www.onlineuthayan.com/News_More.php?id=696622630507336970

  12. வெளிநாட்டிலிருந்து வரும் திடீர் பணப்புழக்கம், எமது மக்களிடையே இருந்து வந்த கடின உழைப்பு முறை, சிக்கன முறை, பண்பாட்டு முறைகளையெல்லாம் ஆட்டம் காண வைத்துள்ளது என முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். வரணி மத்திய கல்லூரியின் பரிசளிப்பு விழாவும் வைர விழாவும் இன்று காலை 9 மணிக்கு நடைபெற்றது. இந் நிகழ்வில் உரையாற்றிய முதலமைச்சர் இதனைத் தெரிவித்தார். மேலும் அவர் தனது உரையில், அண்மைக்கால அரசியல் பிரச்சினைகள் எமது மக்களிடையே ஒரு புதிய கலாசாரத்தையே புகுத்தியுள்ளது. எம் மக்கள் பெருவாரியாகப் பிற நாடுகளில் தஞ்சம் புகுந்தார்கள். ஆனால் அவர்களின் உறவினர்கள் பலர் இங்கு தொடர்ந்து தங்கியிருந்தார்கள். தங்கியிருந்த அவர்களுக்கு வெளிநாட்டுப்பணம் படிப்படியாக வரத் தொடங்கியது. நான் இ…

  13. இலங்கையில் இடம்பெற்ற 30 வருடப் போரின் வடுக்கள் - தழும்புகள் - மாறுவதற்கு ஆகக் குறைந்தது 10 ஆண்டுகளாவது தேவை என்று ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார். அத்துடன் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் பெரும்பாலானவற்றை நடைமுறைப்படுத்தி முடிப்பதற்கு இன்னமும் ஓர் ஆண்டு கால அவகாசம் வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். "இலங்கையின் நல்லிணக்கமும் மீள்கட்டுமானமும்' என்ற தலைப்பில் இலங்கை அரசி னால் காணொலி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்க நிறுவனமொன்றுக்குப் பணம் செலுத்திக் குறித்த காணொலி தயாரிக்கப்பட்டுள்ளது. ஜெனிவா அமர்வை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள இந்தக் காணொலியிலேயே லலித் வீரதுங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அபிவிருத்தி தமிழீழ விடுதலைப் புலிகள் சிற…

  14. போர்க்குற்றங்கள் நடந்ததை அமெரிக்காவில் ஒப்புக்கொண்டாரா லலித் வீரதுங்க? [Thursday, 2014-02-06 08:07:44] இலங்கையில் போர்க்குற்றங்கள் இடம்பெற்றதை ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, அமெரிக்காவில் ஒப்புக்கொண்டதாக கூறப்படும் தகவல்களில் எந்தவித உண்மையும் கிடையாது என்று வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் பீரிஸ், இந்தக் கூற்றை முற்றாக மறுக்கின்றேன். எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுவது போன்று ஜனாதிபதியின் செயலாளர் வாய் மூலமாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்த ஒரு குற்றச்சாட்டையும் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை வெளிவிவகார அமைச்சர் என்ற வகையில் மிகவும் பொறுப்புடன் கூறிக்கொ…

  15. கிளிநொச்சி அறிவியல் நகரில் யாழ்.பல்கலைக்கழக பொறியியல், விவசாய பீடங்களின் ஆரம்ப நிகழ்வு! யாழ் பல்கலைக்கழகத்தின் பொறியியல் மற்றும் விவசாய பீட வளாக, திறப்பு விழா தொடர்பான, சமய நிகழ்வுகள் இன்று கிளிநொச்சி அறிவியல்நகரில் அமைந்துள்ள விவசாய பீட வளாகத்தில் இடம்பெவுள்ளது. யாழ்.பல்கலைகழக பொறியியல்பீடம் கிளிநொச்சி அறிவியல்நகரில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இவ்வருடம் முதலாவது வருட மாணவர்கள் பொறியியல்பீடத்திற்கு உள்வாங்கப்படவுள்ளனர். யுத்தத்திற்கு முன்னர் கிளிநொச்சியில் இயங்கிய விவசாய பீடமும் மீண்டும் கிளிநொச்சி அறிவியல்நகரில் ஆரம்பிக்கப்படுகிறது. யாழ் பல்கலைகழகத்தின் கிளிநொச்சி வளாகத்திற்கு 560 ஏக்கர் காணி அறிவியல் நகரில் ஒதுக்கப்பட்டு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இன்று காலை 8…

  16. அமெரிக்காவின் இரட்டை வேடம் அம்பலமாகியுள்ளதாக ஜீ.எல்.பீரிஸ் தெரிவிப்பு! [Thursday, 2014-02-06 15:18:42] அமெரிக்காவின் இரட்டை வேடம் அம்பலமாகியுள்ளது என சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்திய ராஜதந்திரி தெவ்யாணி அமெரிக்காவில் துன்புறுத்தப்பட்டதாக வெளியான வீடியோ காட்சிகள் போலியானவை என அமெரிக்கா தெரிவித்துள்ளது எனவும், பிரித்தானியாவின் செனல்4 ஊடகம் இலங்கை தொடர்பில் வெளியிட்ட ஆவணப்படம் உண்மையானது என குறிப்பிட்டுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இதன் மூலம் அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாட்டுத் தன்மை உலகிற்கு அம்பலமாகியுள்ளது எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். சர்வதேச ஊடகங்களில் இலங்கைக்கு எதிராக பிரச்சாரம் செய்யப…

  17. இலங்கையர்களுக்கு ஒன் அரைவல் வீசா வசதி வழங்க முடியாது என்று இந்தியா அறிவிப்பு! [Thursday, 2014-02-06 09:28:03] இலங்கை உள்ளிட்ட எட்டு நாடுகளுக்கு ஒன் அரைவல் வீசா வசதி வழங்க முடியாது என்று இந்தியா அறிவித்துள்ளது. இந்திய சுற்றுலாக் கைத்தொழிலை மேம்படுத்தும் நோக்கில் உலகின் 180 நாடுகளுக்கு ஒன் அரைவல் வீசா வசதி வழங்கப்படவுள்ளது. இதுவரை காலமும் சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட பதினொரு நாடுகளுக்கு மட்டுமே ஒன் அரைவல் வீசா வசதி வழங்கப்பட்டுள்ளது. எனினும், சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் இவ்வாறு 180 நாடுகளின் பிரஜைகளுக்கு ஒன் அரைவல் வீசா வழங்க இந்தியா தீர்மானித்துள்ளது. ஆனால், பாகிஸ்தான், இலங்கை, ஈரான், ஈராக், சோமாலியா, நைஜீரியா, ஆப்கானிஸ்தான் மற்றும் சூடான் …

  18. இனப்படுகொலை நிரூபிக்கபட்டால் - பிரிந்து சென்று தனியரசை நிறுவுவதற்கான வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும்: - சிவாஜிலிங்கம் [Thursday, 2014-02-06 15:31:13] தமிழினத்தின் மீது திட்டமிட்ட இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டமை குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் , அந்த விசாரணையில் குற்றம் நிரூபிக்கபடுமிடத்து , தமிழ் மக்கள் பிரிந்து சென்று தனியரசை நிறுவுவதற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என வட – மாகாண சபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சிவாஜிலிங்கம் வலியுறுத்தியுள்ளார். உலகளாவிய ரீதியில் இனப்படுகொலை நடந்த நாடுகளில் அது இனப்படுகொலையே என நிரூபிக்கப்பட்டு , பாதிக்கப்பட்ட மக்கள் பிரிந்து செல்வதற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது , இதுவே உலக நியதியாகும்…

  19. அமெரிக்காவின் ஜெனிவா தீர்மானம் அவுஸ்ரேலியா எதிர்க்கும். சிறிலங்காவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்குச் சர்வதேச விசாரணை ஒன்று தேவையில்லையென தெரிவித்துள்ள அவுஸ்திரேலிய அரசாங்கம், அமெரிக்காவினால் சிறிலங்காவுக்கு எதிராகக் கொண்டு வரப்படவுள்ள பிரேரணைக்கும் ஆதரவு வழங்கப் போவதில்லை என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலிய வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜுலி பிஷோப், சிட்னி மோர்னிங் ஹெரல்ட் பத்திரிகைக்கு வழங்கியுள்ள பேட்டியில் மேலும் தெரிவித்துள்ளதாவது, வன்னி போரின் போது தமிழ் மக்கள் கொல்லப்பட்டமை, யுத்த சூனிய வலயத்தின் மீது தாக்குதல் நடத்தியமை போன்ற குற்றச்சாட்டுகளை சிறிலங்கா அரசு ஏற்கனவே நிராகரித்து விட்டது. இருப்பினும் இருதரப்புக்கும் எதிராக முன்வைக்கப்பட…

  20. இலங்கைத் தமிழர் விவகாரத்தில் காங்கிரஸ் இளைஞர் அணித் தலைவர் ராகுல் காந்தி தலையீடு செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு இந்திய மத்திய அரசாங்கம் ஆதரவளிக்க வேண்டும், இலங்கைத் தமிழர் இனச் சுத்திகரிப்பிற்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பில் பக்கச்சார்பற்ற சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கை என அவர் குறிப்பிட்டுள்ளார். நல்லெண்ண அடிப்படையில் அமைந்த இந்தச் சந்திப்பின்போது, ஐந்து கோரிக்கைகள் அடங்கிய மனுவொன்றையும் ராகுல் காந்தியிடம் கையளித்துள்ளார்.ராகுல் காந்தியை சந்தித்த போதே அவர் இந்தக் கோரிக்கையினை வ…

  21. தமிழ்மக்களுக்கு புத்தாண்டுப் பரிசாக யாழ்தேவி ரயிலை யாழ்ப்பாணத்திற்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை கிளிநொச்சி வரை சேவையில் ஈடுபடும் யாழ்தேவி ரயில், இந்த மாத இறுதிக்குள் பளை வரையிலான சேவையில் ஈடுபடுத்தப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.தற்போது யாழ் ரயில் மார்க்கத்தின் நிர்மாணப் பணிகள் பூர்த்தியடைந்து வருவதாக ரயில்வே திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார். இதேவேளை எதிர்வரும் சித்திரை வருடப் பிறப்புக்குள் யாழ்ப்பாணம் வரை யாழ்தேவி பயணிப்பதற்கான அனைத்து கட்டட நடவடிக்கைகளும் இறுதி கட்டத்தை அடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். http://seithy.com/breifNews.php?newsID=102972&category=TamilNews&language=tamil

    • 2 replies
    • 473 views
  22. சீனாவால் அண்டை நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் உட்கட்டமைப்பு திட்டங்களை இந்தியா உன்னிப்பாக அவதானித்து வருவதாக இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். இலங்கை, பங்களாதேஸ், மியன்மார், பாகிஸ்தான் மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகளில் உட்கட்டமைப்பு பணிகளை சீனா மேற்கொண்டு வருகிறது இது தொடர்பில் இந்தியா உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும், இந்த திட்டங்கள், இந்தியாவின் பாதுகாப்புக்கு பிரச்சினையை ஏற்படுத்தும் ஏதுக்கள் குறித்தும் அவதானிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். http://www.onlineuthayan.com/News_More.php?id=539442628006439447

  23. சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதற்கான காரணிகள், அவற்றிற்கான மாற்று வழிகள் குறித்த கலந்துரையாடல் இன்று காலை 10 மணியளவில் வடமாகாண விவசாய அமைச்சு அலுவலகத்தில் இடம்பெற்றது. மாகாண சுற்றாடல் அமைச்சிற்கும் வணிக சங்கங்களுக்குமிடையில் இக் கலந்துரையாடல் இடம்பெற்றது. இக் கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றிய வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஜங்கரநேசன் இலங்கையில் சூழல் பாதிப்பென்பது அதிகமாக காணப்படுகிறது. அதிலும் யாழ்ப்பாணத்திலே கூடுதலாக சுற்றாடல் பாதிக்கப்படுகிறது. அதற்கான பிரதான காரணி பொலித்தீன் பாவனை ஆகும். இங்கு மக்களின் அன்றாட வாழ்வின் பெரும்பங்கு பொலித்தீன் பாவனையை சார்ந்துள்ளது. இதனால் சூழல் பாதிப்பை விட மக்கள் பாதிக்கப்படுவதே அதிகம் எனலாம். இலங்கை வர்த்தமானி அறிவிப்பின் ப…

  24. பாதுகாப்பு வலயம் (NO FIRE ZONE) பிரான்சு பாராளுமன்றத்தில் காண்பிக்கப்படுகிறது. [Thursday, 2014-02-06 11:59:21] பிரான்சில் எதிர் வரும் வெள்ளிக்கிழமை (07/02/2014) மாலை தமிழருக்கான அனைத்துக்கட்சி பாராளுமன்றக் குழுவின் ஏற்பாட்டில் சேனல 4வும் திரு Callum Macraeயும் தயாரித்து உலக அரச பீடங்கள், ஐக்கிய நாடுகள் சபை போன்ற இடங்களில் காண்பிக்கப்பட்ட « பாதுகாப்பு வலயம் »(NO FIRE ZONE) பிரான்சு பாராளுமன்றத்தில் காண்பிக்கப்படுகிறது. இந்த நிகழ்வில் இந்த ஆவணப்படத்தை தயாரித்து தமிழர்களுக்கான நீதியை பெற்று தர வேண்டும் என்று உலகமெங்கும் பயணிக்கும் திரு Callum Macraeயும் கலந்து கொள்கிறார். பொதுநலவாய மாநாட்டின் பொது சிறி லங்கா சென்று சிறி லங்கா அரசை இவர் எதிர்கொண்டதும் நாம் அறிந…

  25. “நான் அழுத கண்ணீரு ஆறு நிறைஞ்சிருக்குமே அய்யா. என்னென்டு சொல்ல.”

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.