ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143299 topics in this forum
-
19 AUG, 2024 | 08:12 PM அமெரிக்கக் கடற்படைக்குச் சொந்தமான 'USS Spruance' என்ற கப்பல் இன்று திங்கட்கிழமை (19) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. இந்த கப்பலானது விநியோகம் மற்றும் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 160 மீற்றர் நீளம் கொண்ட இந்த கப்பலில் சுமார் 338 பணியாளர்கள் கடமை புரிகின்றனர். Commander Thomas Adams இந்த கப்பலின் கட்டளை அதிகாரியாவார். இந்த கப்பலானது நாளை செவ்வாய்க்கிழமை (20) கொழும்பு துறைமுகத்தை விட்டு மீண்டும் புறப்படவுள்ளதாக இலங்கை கடற்படை மேலும் தெரிவித்துள்ளது. …
-
- 0 replies
- 333 views
- 1 follower
-
-
19 AUG, 2024 | 12:45 PM கொழும்பு - புத்தளம் வீதியில் மஹவெவ நகருக்கு அருகில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு இன்று திங்கட்கிழமை (19) தெரிவித்துள்ளது. மஹாவெவ தனிவெல்ல தேவாலயத்திலிருந்து மஹாவெவ நகரம் வரையிலான பகுதிகளில் நீர் நிரம்பிக் காணப்படுகின்றது. சில பகுதிகளில் மூன்று அடிக்கு மேல் நீர் தேங்கியிருப்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குளியாபிட்டிய பிரதேசத்தில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக மஹாவெவ லுனு ஓயா மற்றும் ஹெமில்டன் கால்வாயில் நீர் நிரம்பி வழிவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 306 views
- 1 follower
-
-
Published By: VISHNU 18 AUG, 2024 | 06:11 PM மட்டக்களப்பு நகரில் இயங்கிவரும் பிரபல உணவகம் சுகாதார ஒழுங்கு விதிகளை மீறி கழிவு நீரை வெளியில் திறந்துவிட்ட மற்றும் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற கோழி இறைச்சியை களஞ்சியப்படுத்தி வைத்திருந்தமை தொடர்பாக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உணவகத்தை எதிர்வரும் 22ம் திகதிவரை தற்காலிகமாக மூடுமாறு ஞாயிற்றுக்கிழமை (18) உத்தரவு பிறப்பித்ததையடுத்து உடன் பொது சுகாதார பரிசோதகர்கள் உணவகத்தை மூடி சீல் வைத்தனர். குறித்த பிரபல உணவகத்தின் கழிவு நீர் வெளியேறி வீதிகளிலும் வடிகான்களிலும் தேங்கி நிற்பதுடன் அந்த பகுதியில் தூர்நாற்றம் வீசி வருவதாக பொதுமக்கள் தொடர்ச்சியாக பொது சுகாதார பரிசோதகர்களுக்கு முற…
-
- 1 reply
- 299 views
- 1 follower
-
-
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை முற்றாக ஒழிப்போம்! தான் ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை முற்றாக ஒழிக்கப்படுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் நான்காவது வெற்றிப் பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் ருவன்வெல்ல தெஹியோவிட்ட பிரதேச சபை மைதானத்தில் நடைபெற்றது. குறித்த நிகழ்வில் உரையாற்றிய போதே சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” இந்த நாட்டை அடி பாதாளத்துக்குள் தள்ளிய ராஜபக்ஷாகளுக்கு பிரதான பாதுகாவலராக இந்த நாட்டின் ஜனாதிபதி இருந்து வருகிறார். நான் இந்த ஜனாதிபதி கதிரைக்கு மக்களின் வாக்குகளால…
-
- 2 replies
- 188 views
- 1 follower
-
-
ஆபிரிக்க நாடுகளில் பரவிய Mpox சர்வதேச அளவில் பரவக்கூடிய ஒரு பொது சுகாதாரப் பிரச்சினை என விசேட வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார். சர்வதேச அளவில் கவனம் செலுத்த வேண்டிய சுகாதார தொற்று என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஆப்பிரிக்க நாடுகளில் கிட்டத்தட்ட 15ஆயிரம் பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் கடந்த ஆண்டில் கிட்டத்தட்ட அறுநூறு பேர் இறந்துள்ளனர் என்று அவர் குறிப்பிடுகிறார். மேலும், கொவிட் தொற்று காரணமாக சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இதே எச்சரிக்கை கொடுக்கப்பட்டதாக மருத்துவர் கூறினார். அங்கு பேசிய கலாநிதி சமல் சஞ்சீவ, “மேலும் Mpox எனப்படும் நோய் மனிதர்களுக்கு வைரஸ் குழுவால் ஏற்படும் நோயாகும். ம…
-
- 1 reply
- 219 views
- 1 follower
-
-
17 AUG, 2024 | 06:13 PM நாட்டில் எச்.ஐ.வி தொற்று நூற்றுக்கு முன்னூறு வீதம் அதிகரித்துள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில், அதன்படி, நாடளாவிய ரீதியில் இதுவரை 3,500 எச்.ஐ.வி தொற்று நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 52க்கும் மேற்பட்ட சிறுவர்கள் காணப்படுகின்றனர். அடையாளம் காணப்பட்ட எச்.ஐ.வி தொற்று நோயாளர்களில் நூற்றுக்கு 81 வீதமானோர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் இருந்து அதிகளவான எச்.ஐ.வி தொற்று நோயாளர்கள் அடையாளம் கா…
-
- 1 reply
- 208 views
- 1 follower
-
-
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் 39 வேட்பாளர்களின் பெயர் பட்டியல்! 2024 ஜனாதிபதி வேட்பாளர்களின் வேட்புமனுக்களை ஏற்றுக்கொண்டதன் பின்னர் மூன்று ஆட்சேபனைகள் முன்வைக்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஆனால் தேர்தல் சட்டத்தின்படி அந்த ஆட்சேபனைகளை நிராகரிக்க தேர்தல் ஆணைய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன்படி 39 வேட்பாளர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தகுதி பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 01. திலித் சுசந்த ஜயவீர 02. சரத் மனமேந்திர 03. அபூபக்கர் முகம்மது இன்பாஸ் 04. ஏ. எஸ். பி. லியனகே 05. பானி விஜேசிறிவர்தன 06. பிரியந்த புஸ்பகுமார விக்கிரமசிங்க 07. அஜந்தா டி சொய்சா 08. பத்தரமுல்லை சிரலதன தேரர் 09. ச…
-
-
- 6 replies
- 703 views
-
-
18 AUG, 2024 | 03:03 PM யாழ்ப்பாணத்தில் மனவளர்ச்சி குன்றிய யுவதியை பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சிறிய தந்தை உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், கைதான மூவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார். சுகவீனம் காரணமாக இந்த யுவதியை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தவேளையில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் யுவதி கர்ப்பமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்தபோது தாயின் சகோதரியினது கணவர் (சித்தப்பா) மற்றும் இரு இளைஞர்கள் என மூன்று பேர் இணைந்து யுவதியை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளா…
-
- 0 replies
- 369 views
- 1 follower
-
-
16 AUG, 2024 | 01:27 PM காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தினால் யாழ். மாவட்டத்தின் மூன்று பிரதேச செயலக பிரிவுகளை சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட உறவுகளிடம் இன்று வெள்ளிக்கிழமை (16) விசாரணைகள் இடம்பெற்றது. உடுவில், கோப்பாய் மற்றும் தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மக்களிடையே விசாரணைகள் இடம்பெற்றது. இவ்விசாரணைகள் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தினால் உடுவில் பிரதேச செயலகத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. நாளை 17 ஆம் திகதி பருத்திதுறை, மருதங்கேணி, கரவெட்டி பிரதேச செயலக பிரிவுகளை சேர்ந்த மக்களுக்கு பருத்தித்துறை பிரதேச செயலகத்திலும், நாளை மறுதினம் 18 ஆம் திகதி யாழ்ப்பாணம், சங்கானை, சண்டிலிப்பாய், காரைநகர், ந…
-
- 2 replies
- 493 views
- 1 follower
-
-
அண்மையில் திருத்தப்பட்ட கடற்றொழில் விதிமுறைகள் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதாலும், இலங்கை கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபடும் தமிழக கடற்றொழிலாளர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டதாலும், அண்மைய மாதங்களில் இலங்கை கடலுக்குள் இந்திய மீன்பிடிக்கும் இழுவை படகுகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளதை வடக்கின் கடற்றொழிலாளர்கள் அவதானித்துள்ளனர். அண்மையில் கைது செய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்களுக்கு எதிராக ஊர்காவற்துறை நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டமை, இரண்டாவது தடவையாக குற்றமிழைத்தவர்களுக்கு பாரிய தண்டனைகள் மற்றும் சிறைத்தண்டனைகளை வழங்கியமை என்பன இதற்கான காரணமாக இருக்கலாம் என்று ஊர்காவற்துறை கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் செயலாளர் அன்னலிங்கம் அன்னராசா கருத்து தெரிவித்த…
-
-
- 1 reply
- 462 views
- 1 follower
-
-
வாக்காளருக்கு செலவிடக்கூடிய அதிகபட்ச தொகை? – பிரதான வேட்பாளா்கள் கோாிக்கை! ஜனாதிபதித் தேர்தலில் வாக்காளர் ஒருவருக்கு செலவிடக்கூடிய அதிகபட்ச தொகை 1000 ரூபா வரை வழங்கப்பட வேண்டுமென பிரதான வேட்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், இது தொடர்பான முன்மொழிவுகள் குறித்த இறுதித் தீர்மானம் எதிர்காலத்தில் வர்த்தமானியில் வெளியிடப்படும் எனவும்; அவர் கூறியுள்ளார். தேர்தல் செலவு ஒழுங்குமுறைச் சட்டத்தின்படி, வேட்புமனுக்கள் பெறப்பட்ட 5 நாட்களுக்குள் ஒரு வாக்காளருக்குச் செலவிடப்படும் அங்கீகரிக்கப்பட்ட தொகை வர்த்தமானியில் வெளியிடப்பட வேண்டும் எனவும், அது குறித்து முடிவெடுப்பதற்காக வேட்பாளர்களுக்கும் தேர…
-
- 0 replies
- 169 views
-
-
18 AUG, 2024 | 10:37 AM உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகளில் ஏற்படும் முன்னேற்றங்கள் குறித்து கண்காணித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் மேலாண்மை மற்றும் வளங்களுக்கான அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் துணை செயலாளர் ரிச்சர்ட் ஆர் வெர்மா இதனை தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியை வழங்குவதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகளிற்கு அமெரிக்காவின் அர்ப்பணிப்பை அவர் மீள வலியுறுத்தியுள்ளார். வலுவான விசாரணை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதில் சிவில் சமூகத்தின் பங்களிப்பின் அவசியத்தை அவர் வலியுறுத்தியுள்ளார். …
-
- 0 replies
- 172 views
- 1 follower
-
-
வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 5 வயது சிறுவன் கடத்தல் - சிறுவனை மீட்டு கடத்தியவரை மடக்கிப் பிடித்த பொதுமக்கள் 17 AUG, 2024 | 05:59 PM வீடொன்றில் தூங்கிக்கொண்டிருந்த 5 வயது சிறுவனை கடத்தல்காரர் ஒருவர் கடத்தி, காட்டுக்குள் கொண்டு சென்றதையடுத்து, சிறுவனை மீட்டு, கடத்திய நபரை பிரதேச மக்கள் மடக்கிப் பிடித்து நையப்புடைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவம் இன்று சனிக்கிழமை (17) அதிகாலை மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் இடம்பெற்றது. இதனால் அப்பகுதியில் இன்று பெரும் பரபரப்பான சூழ்நிலை நிலவுவதாகவும் கைதான நபரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். வாகரை 5ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 5 வயது ச…
-
- 0 replies
- 427 views
- 1 follower
-
-
இலங்கை இராஜதந்திரி ஹிமாலி அருணதிலகவுக்கு எதிரான அவுஸ்திரேலிய பெடரல் நீதிமன்றத் தீர்ப்பு - வெளிவிவகார அமைச்சு 18 AUG, 2024 | 06:58 AM (நா.தனுஜா) இலங்கை இராஜதந்திரி ஹிமாலி அருணதிலக அவுஸ்திரேலியாவுக்கான பிரதி உயர்ஸ்தானிகராகப் பணியாற்றிய காலப்பகுதியில் அந்நாட்டு நியாய ஊழியச் சட்டத்தை மீறி செயற்பட்டிருக்கிறார் எனவும், அதற்காக அக்காலப்பகுதியில் அவரது வீட்டுப்பணிப்பெண்ணாகப் பணியாற்றிய பிரியங்கா தனரத்னவுக்கு அவர் 543,000 டொலர்களைச் செலுத்தவேண்டும் எனவும் அவுஸ்திரேலிய பெடரல் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கின்றது. இருப்பினும் இதுகுறித்து விளக்கமளித்திருக்கும் இலங்கையின் வெளிவிவகார அமைச்சு, அப்பணிப்பெண்ணுக்கு அமைச்சின் ஊடாக அன…
-
- 0 replies
- 154 views
- 1 follower
-
-
தமிழரசுக் கட்சியும் பிளவுபடுகிறதா? இலங்கைத் தமிழரசுக் கட்சியை விட்டு சிலர் வெளியேறி புதிய கட்சியையோ அல்லது புதிய தமிழரசுக் கட்சி என்ற பெயரில் கட்சியையோ ஆரம்பிக்க முயன்றால் பொது வேட்பாளரை விட மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என வட மாகாண சபை அவை தலைவரும் தமிழரசு கட்சியின் சிரேஷ்ட தலை வருமான சி. வி.கே.சிவஞானம் தெரிவித்தார். வெள்ளிக்கிழமை யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவரால், தமிழரசு கட்சியில் உள்ள சிலர் வெளியேறி புதிய கட்சியை ஆரம்பிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கே அவர் இவ்வாறு பதிலளித்தார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழரசுக் கட்சியை விட்டு சிலர் வெளியேறி புதிய கட்சி ஒன்றை ஆரம…
-
- 2 replies
- 430 views
-
-
17 AUG, 2024 | 04:32 PM கடலுடன் கலக்கின்ற நீரை குளத்திற்கு வழங்கி மக்களுடைய விவசாயத்திற்கும் நாட்டின் அபிவிருத்திக்கும் பங்காற்ற உதவுமாறு தென்னமரவடி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். திருகோணமலை மாவட்டத்தின் எல்லைப்புற கிராமமாக இருக்கின்ற தென்னமரவடி கிராம மக்கள் அடிப்படை வசதிகள் பல பூர்த்தி செய்யப்படாத நிலையில் அக்கிராமத்தில் வாழ்ந்து வருவதாகவும், வாழ்வாதாரத்திற்காக மீன்பிடி மற்றும் விசாயத்தை பல சவால்களுக்கு மத்தியில் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கின்றார்கள். தென்னமரவடி கிராமத்தில் விவசாயத்தை வாழ்வாதார தொழிலாக மேற்கொண்டுவரும் மக்கள் விவசாயத்திற்கான நீர் இன்றி பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றார்கள். இந்நில…
-
- 0 replies
- 234 views
- 1 follower
-
-
“ரூ.60 கோடி வாங்கினார் சாணக்கியன்” ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், தனிப்பட்ட முறையில் 60 கோடி ரூபாயைப் பெற்றுக்கொண்டுள்ளதாக ரெலோ அமைப்பின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் குற்றஞ்சாட்டியுள்ளார். எவ்வாறாயினும் குறித்த குற்றச்சாட்டுக்குப் பதிலளித்துள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், மாவட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்காக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியே தமக்கு வழங்கப்பட்டதாகக் குறிப்பிட்டார். தம்மால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகளைக் கருத்திற்கொண்டு, வழங்கப்பட்ட அந்த நிதியில் தற்போது மாவட்டத்தில் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள…
-
- 2 replies
- 482 views
-
-
பிரபாகரனை முதலில் நானே படம் பிடித்தேன் : அவர் கடும் சீற்றமடைந்தார் - இந்தியா டுடேயின் சிரேஸ்ட ஊடகவியலாளர் ராஜ் செங்கப்பா Published By: RAJEEBAN 17 AUG, 2024 | 02:48 PM ரஜீபன் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை முதன்முதலில் படம்பிடித்தது தான் என இந்தியா டுடே குழுமத்தின் ஆசிரியபீட இயக்குநர் ராஜ் செங்கப்பா கொழும்பில் தெரிவித்துள்ளார். இலங்கை இந்திய ஊடக நட்புறவு சங்கம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இலங்கைக்கு 15 வருடங்களின் பின்னர் மீண்டும் வந்துள்ளேன் . இறுதியாக 2009ம் ஆண்டு இலங்க…
-
- 0 replies
- 455 views
- 1 follower
-
-
படைப்பாளிகளுக்கு அரசாங்கம் அச்சுறுத்தல் – தீபச்செல்வன் சர்வதேச மன்னிப்புச் சபைக்கு கடிதம்! இலங்கையில் தன்னைப் போன்ற படைப்பாளிகளுக்க அரசாங்கம் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி வருவதாகத் தெரிவித்துள்ள இலங்கை தமிழ் எழுத்தாளர் தீபச்செல்வன் அறிவு வெளிப்பாடு மீதான ஒடுக்குமுறையை தடுக்குமாறு யுனஸ்கோ மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில் ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பின் (UNESCO) பணிப்பாளர் நாயகம் ஓட்ரி அஸூலே மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் ஆக்னஸ் காலமர்ட் ஆகியோருக்கு இலங்கை எழுத்தாளர் தீபச்செல்வன் கடிதங்களை எழுதியுள்ளார். இக் கடிதங்களின் பிரதிகளை கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ். முர…
-
- 1 reply
- 186 views
-
-
அரச ஊழியர்களின் சம்பளத்தை 2025 ஆம் ஆண்டு முதல் 25,000 ரூபாவால் அதிகரிக்கும் அமைச்சரவையின் அண்மைய தீர்மானத்திற்கு எதிராக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அரசின் குறித்த முடிவானது ஜனாதிபதித் தேர்தலில் அரச ஊழியர்களின் சுதந்திரமான வாக்களிப்பில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுக்களை சுயாதீன கண்காணிப்பாளர்கள் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் (Election Commission) முன்வைத்துள்ளனர். வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு கடந்த செவ்வாய்க்கிழமை கூடிய அமைச்சரவை, அரசாங்க ஊழியர்களுக்கு வாழ்க்கைச் செலவு கொடுப்பனவாக 25,000 ரூபாவை வழங்குவதுடன், 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் இருந்து அவர்களின் சம்பளத்தில் 24 வீத அதிகரிப்பையும…
-
- 0 replies
- 118 views
- 1 follower
-
-
Rajee Rajeevan 1h · Saba Vije 14h · பாடசாலை ஆசிரியை ஒருவர் ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் காலை கூட்டத்தில் மயங்கி விழுந்தார் அத்தோடு தொடர்ச்சியாக வாந்தி எடுத்தார் உடனடியா…
-
- 3 replies
- 476 views
-
-
திருகோணமலையில் நாற்பதாயிரம் ஏக்கருக்கு மேல் மக்களின் காணிகள் அபகரிப்பு: ச.குகதாசன் எம்.பி August 6, 2024 அரசின் ஓர் அங்கமான வனத் துறை திருக்கோணமலை மாவட்டத்தில் ஏறத்தாழ நாற்பதாயிரம் ஏக்கர் நிலைத்தையும் தொல்பொருள்துறை 2600 ஏக்கர் நிலைத்தையும் கையகப் படுத்தி வைத்துள்ளனர் என திருகோணமலை மாவட்ட இலங்கை தமிழ் அரசு கட்சியின பாராளுமன்ற உறுப்பினர் ச.குகதாசன் சுட்டிக்காட்டியுள்ளார். நாடாளுமன்றில் இன்று (06)தனது முதலாவது கன்னியுரையின் போதே இவ்வாறு தெரிவித்த ச.குகதாசன், தொடர்ந்தும் உரையாற்றுகையில், திருக்கோணேச்சரம் வரலாற்று புகழ்மிக்க ஒரு புனிதத் தலம் இக்கோவிலுக்கு பெருமளவு சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இவர்கள் இந்த இடத்தின் அழகைக் கண்டு களிக்க விரும்புகின்றன…
-
- 1 reply
- 341 views
- 1 follower
-
-
Published By: VISHNU 16 AUG, 2024 | 09:08 PM கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக, கொழும்பின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. இதன்படி, மேல், சப்ரகமுவ மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் மக்கள் அக்கறையுடன் இருக்க வேண்டுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் அந்தப் பகுதிகள். 100 மீட்டருக்கும் அதிகமான கனமழை பெய்யும். கொழும்பின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளமையினால், கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இலங்கையை அண்மித்துள்ள தாழ்வான வள…
-
- 0 replies
- 154 views
- 1 follower
-
-
யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த மாதம் கை துண்டிக்கப்பட்ட நிலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞன் ஒருவருக்கு நெடுநேர சத்திர சிகிச்சையின் பின்னர் மீண்டும் கை பொருத்தப்பட்டு சிகிச்சைகள் பெற்று வீடு திரும்பியுள்ளார். குறிப்பிட்ட சத்திர சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்ட வைத்திய நிபுணர்கள் ,வைத்தியர்கள், தாதியர்கள், மற்றும் உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் வைத்தியசாலை சமூகம் சார்ந்த நன்றிகளை தெரிவித்து முகநூலில் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/307980
-
- 0 replies
- 401 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 10 AUG, 2024 | 01:30 PM ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ இன்று சனிக்கிழமை (10) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைச் சந்தித்தார். இந்த சந்திப்பில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் நாமல் ராஜபக்ஷ வெற்றி பெற்றால் வடக்கு கிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் மாவட்டங்களின் அபிவிருத்தி குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளன. இந்தச் சந்திப்பு கொழும்பு தயாவீதியில் உள்ள சுமந்திரனின் இல்லத்தில் நடைபெற்றுள்ளது. பொதுஜனபெரமுனவின் பொதுச்செயலாளர் சாகரகாரியவசமும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்தார். https://www.v…
-
-
- 29 replies
- 1.9k views
- 2 followers
-