ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143516 topics in this forum
-
திருகோணமலையின் முக்கிய பிரதேசங்களை சிங்கள மயமாக்கும் முயற்சியில் அரசாங்கம் ஈடுவட்டு வருகின்றது. தமிழர்கள் தொன்று தொட்டு வாழந்த பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு; வருவதுடன் தமிழ் பிரதேசங்களுக்கு சிங்களப் பெயர் மாற்றும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. வடமாகாணத்தில் இவ்வாறான செயற்பாடுகள் குறைவடைந்துள்ள போதும் கிழக்கு மாகாணத்தில் இவ்வாறான செயற்பாடுகள் அதிகரித்துள்ளது குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் மக்கள் வாழந்த பிரதேசங்கள் தற்போது சிங்களமயமாக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோன்று திருகோணமலையில் கிராமங்களிற்கு சிங்கள பெயர் மாற்றும் நடவடிக்கையில் சிறிலங்கா அரசாங்கம் இறங்கியுள்ளது இதிலும் மகிந்தவின் பெயரை இணை…
-
- 0 replies
- 414 views
-
-
இந்த வருடத்தில் மனிதஉரிமை மீறல் தொடர்பில் பொலிஸார் மீதே அதிக முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இரண்டாவதாக கல்வி அமைச்சுக்கு எதிரான முறைப்பாடுகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.2013ம் ஆண்டில் இன்றுவரை 7765 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதில் அதிக முறைப்பாடுகள் அரச நிறுவனங்கள் தொடர்பானது என கூறப்பட்டுள்ளது. செயற்திறனின்மை, உரிய வகையில் சேவை செய்யாமை, பதவி உயர்வு, பலவகை இடையூறு தொடர்பில் அதிக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதென இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தலைவர் பிரதீபா மகாநாமஹேவா குறிப்பிட்டார். http://www.seithy.com/breifNews.php?newsID=100363…
-
- 0 replies
- 223 views
-
-
இலங்கையில் உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 2013 ஆம் ஆண்டு 10 ஆயிரம் வீடுகளை இந்திய அரசாங்கம் கட்டிக் கொடுத்துள்ளது. இலங்கைக்கான இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் உள்நாட்டுப் போரால் இடம்பெயர்ந்த மக்களுக்கு 2-வது கட்டமாக 43 ஆயிரம் வீடுகள் கட்டிக் கொடுக்க இந்திய அரசு திட்டமிட்டது. இதன்படி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 2013 ஆம் ஆண்டு 10 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. 2013 ஆம் ஆண்டில் 10 ஆயிரம் வீடுகளைக் கட்டும் இலக்கு நிறைவேறும் தருவாயில் உள்ளது. இதன் தொடர்ச்சியாக 2014 ஆம் ஆண்டு 16 ஆயிரம் வீடுகளும், 2015 ஆம் ஆண்டு 17 ஆயிரம் வீடுகளும் கட்டிக் கொடுக்கப்படும். கடந்த மே மாதம் கிழக்குப் பகுதியில் தொடங்கப்பட்ட வீடு கட்டும் திட்ட…
-
- 0 replies
- 341 views
-
-
தற்கொலை தாக்குதல் நடத்த வந்த பெண்ணுக்கும் தனக்கும் இடையில் கள்ள தொடர்பு இருந்ததாக பிரதியமைச்சர் சரண குணவர்தன சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்கு எதிராக தாம் வழக்கு தொடர போவதாக ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்தார். இதற்கு எதிராக வழக்கு தொடராமல் இருக்க வேண்டுமாயின் 14 நாட்களுக்குள் 500 மில்லியன் ரூபாவை செலுத்துமாறு கோரி சட்டத்தரணி ஊடக கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்.. பிரதியமைச்சர் சரண குணவர்தனவுக்கு கடந்த 19 ஆம் திகதி சட்டத்தரணி ஊடாக வழக்கு தொடர போவதாக கடிதம் அனுப்பியுள்ளோம். முன்னாள் இராணுவ தளபதியான தனக்கு ஏற்படுத்திய …
-
- 0 replies
- 366 views
-
-
தமிழகத்திலிருந்து சென்ற பிரபல வார இதழ் ஒன்றின் செய்தியாளர் கைது செய்யப்படடுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள கிராஞ்சி என்ற இடத்திலேயே இவ்வாறு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தின் மிக பின்தங்கியிருக்கும் வேரவில்இ கிராஞ்சி பகுதிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன், மாகாணசபை உறுப்பினர், பிரதேசசபை உறுப்பினர்கள் ஆகியோர் தம்முடன் குறித்த தமிழக பத்திரிகையாளரையும் அழைத்துச் சென்றுள்ளனர். செல்லும் வழியில் சேதமடைந்து குன்றும் குழியுமாக இருந்த வீதியின் மோசமான நிலையினை அவர் புகைப்படம் எடுத்துள்ளார். இதனை படையினர் அவதானித்துள்ளனர். இதனையடுத்து, அவர்கள் கிராமத்திற்குச் சென்று மக்களோடு உரையாடிக் கொண்டிருக்கையில் அங்கு சென்ற படையினர், பத்திரி…
-
- 77 replies
- 4.6k views
-
-
காணாமற்போனோர் தொடர்பில் வடக்கு மக்களிடம் சாட்சியங்களைத் திரட்டுவதற்காக காணாமற்போனோர் பற்றி விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு எதிர்வரும் ஜனவரியில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களுக்குப் பயணம் செய்யவுள்ளது. மூவரடங்கிய இந்தக் குழுவுடன் சட்டமா அதிபர் திணைக்களத்தின் விசாரணைக்குழுவொன்றும் அங்கு செல்லவுள்ளது. காணாமற்போனோர் பற்றி விசாரணை நடத்தும் ஆணைக்குழுவின் தலைவராகச் செயற்படும் மெக்ஸ்வெல் பராக்கிரம பரணகமவின் பேச்சாளராகச் செயற்படும் அதிகாரியொருவர் இந்தத் தகவலை நேற்று "உதய'னிடம் உறுதிப்படுத்தினார். ஜனவரி 15ஆம் திகதியளவில் வடக்குப் பயணத்தை ஆரம் பிக்கும் இந்தக் குழு 5 மாவட்டங்களிலும் மக்கள் அமர்வுகளை (Public sittings) நடத்திக் காணாமற…
-
- 1 reply
- 340 views
-
-
போர் முடிவுக்கு வந்து நான்கரை ஆண்டுகள் கழிந்துள்ள நிலையிலும், சிறிலங்கா இராணுவம் தொடர்ந்து ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சிறிலங்கா இராணுவம் வெளிப்படையாக ஊடகங்களின் மூலம் விளம்பரங்களைக் கோரி ஆட்சேர்ப்பு செய்வதற்குப் பதிலாக, சிறிலங்காவின் தென்பகுதியில், சுவரொட்டிகள் மூலம் விளம்பரம் செய்து ஆட்சேர்ப்புகளை மேற்கொண்டு வருகிறது. களுத்துறைப் பகுதியில், சிறிலங்கா இராணுவத்தின் கொமாண்டோ படைப்பிரிவுக்கு ஆட்சேர்ப்புச் செய்வது தொடர்பான சுவரொட்டிகளை சிறிலங்கா படையினர் ஒட்டி வருகின்றனர். வடக்கில் நிலை கொண்டுள்ள சிறிலங்கா இராணுவத்தினரைக் குறைத்துக் கொள்ளுமாறு கோரிக்கைகள் விடுக்கப்பட்ட போது, படையினரை எங்கு கொண்டு போய் நிறுத்துவது என்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக…
-
- 1 reply
- 360 views
-
-
ஆனால் பலரது தலைகளுக்கு மேல் கத்தி - குளோபல் தமிழ்ச் செய்திகளின் விசேட செய்தியாளர்:- அண்மையில் இலங்கை அரசாங்கத்தினால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட இந்திய ஊடகவியலாளர் மகா தமிழ் பிரபாகரனது விடுதலையின் பின், அவருடன் தொடர்புபட்டிருந்தவர்களுக்கு சங்கடமான அல்லது ஆபத்தான நிலமைகள் தோன்றக்கூடுமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் மகா பிரபாகரனது கைத்தொலைபேசி மற்றும் புகைப்படக்கருவிகளை இலங்கை பயங்கரவாதக் குற்றத்தடுப்பு பிரிவு கைப்பற்றி தம்வசம் வைத்துக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து பெறப்படும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு மகா பிரபாகரனுடன் தொடர்புகளைப் பேணிய மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளை இலங்கையரசின் புலனாய்வுப்பிரிவு நெரு…
-
- 0 replies
- 751 views
-
-
கரும்பு உற்பத்தியை மேற்கொள்வதற்கென வடக்கில் பெருமளவான காணிகளை சுவீகரிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், கிளிநொச்சி மாவட்டங்களில் 71 ஆயிரத்து 716 ஏக்கர் காணிளை சுவீகரிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் எதிர்வரும் 3ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளது. கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் லக்ஷ்மன் செனவிரத்ன இந்த அமைச்சரவைப் பத்திரத்தை அமைச்சரவையில் சமர்ப்பிக்க உள்ளார். எதிர்வரும் 3ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் கூடும் அமைச்சரவையில் இதுகுறித்து இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது. இதற்கிணங்க வவுனியா மாவட்டத்தில் வவுனியா வடக்கு, வவுனியா தெற்கு, செட்டிகுளம், ஓமந்தை, கனகராயன்குளம், நயினாமடு, தந்திரிமலை ஆகிய பகுதிகளில் 42 ஆயிரத்து 111 ஏக்கர் கா…
-
- 0 replies
- 348 views
-
-
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நத்தார் விடுமுறையை யால தேசிய பூங்காவில் தமது குடும்பத்தினருடன் கழித்துள்ளார். சில நாட்கள் புட்டுவ பங்களாவில் தங்கியிருந்த போது அவர், யானைகள் மற்றும் சிறுத்தைகளைப் படம் பிடிப்பதில் ஈடுபட்டிருந்தார். இதனால் யால தேசிய பூங்காவில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிருந்தது.படத்தில் மகிந்த ராஜபக்ச கமராவில் சுட்ட சிறுத்தையும், அவர் சிறுத்தையை கமராவில் சுட்ட காட்சியும் பதிவாகியுள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=100332&category=TamilNews&language=tamil
-
- 1 reply
- 478 views
-
-
கொழும்பு துறைமுகத்தில் அவதானத்துடன் இருந்த சுங்க அதிகாரிகள் கதிரியக்கம் படிந்திருந்த ஒரு கொள்கலனை சரியான வேளையில் கண்டுபிடித்ததனால் கொழும்பு மாநகரமே கதிரியக்க பாதிப்பில் இருந்து தப்பியது. ஜப்பானின் யொக்கோ ஹோமா துறைமுகத்தில் இருந்து கொழும்பு துறைமுகத்திற்கு சமீபத்தில் கொள்கலன்களை ஏற்றிவந்த கப்பலிலேயே இது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தக் கப்பலில் வாகனங்களின் உதிரிப் பாகங்கள் பெருமளவில் கொண்டு வரப்பட்டது. இதனை அவதானித்த சுங்க அதிகாரிகள் சிசியம் 137 (Caesium 137) என்ற கதிரியக்க சக்தியைக் கொண்ட பொருட்கள் இருப்பதை அவதானித்தார்கள். இது வெளியில் இருந்தால் மனிதர்களின் உடலில் தீப்புண்கள் ஏற்படுவதுடன், மரணத்தை ஏற்படுத்தக்கூடிய பாரதூரமான கதிரியக்க தாக்கமும் ஏற்படும் என்று …
-
- 1 reply
- 710 views
-
-
ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பாக மற்றுமொரு பிரேரணை கொண்டு வரப்படும் ஆபத்துள்ள நிலையில் அரசாங்கமோ யுத்தத்தினால் பாதிக்கபபட்ட மக்களின் காயங்களை ஆற்றாமல் மேலும் காயங்களை உருவாக்கவே முயற்சித்து வருகின்றது என்று ஜே.வி.பி. பிரசாரச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜித்த ஹேரத் குற்றம்சாட்டியுள்ளார். "ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் 25 வது கூட்டத் தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் மனித உரிமைப் பேரவைக் கூட்டத தொடரில் இலங்கைக்கு எதிராக புதிய யோசனை வரலாம் என்ற அச்சம் காணப்படுகின்றது. அமெரிக்கத் தரப்பில் இவ்வாறு எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இவ்வாறான நிலைமை ஒன்றை அரசாங்கமே உருவாக்க…
-
- 0 replies
- 333 views
-
-
உள்நாட்டுப் போரின் முடிவில் பொதுமக்கள் மீது இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக நம்பகமான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமென இவ்வாண்டு முழுவதும் சிறிலங்கா மீது அனைத்துலக அழுத்தங்கள் இடப்பட்டுள்ளன. இவ்வாறு இந்திய ஊடகமான Hindustan Times இந்திய செய்தி நிறுவனமான PTI யினை மேற்கோள் காட்டி எழுதியுள்ளது. அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாதி. 2013ல் இந்திய சிறிலங்கா உறவானது, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட யுத்தத்தில் இடம்பெற்ற பல்வேறு யுத்த மீறல்கள் மற்றும் தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமைகள் மறுக்கப்பட்டமை போன்ற பல காரணங்களால் பாதிக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவின் வடக்கில் மீளிணக்கப்பாட்டின் ஒரு பகுதியாக 25 ஆண்டுகளுக்குப் பின்னர் முதன்…
-
- 0 replies
- 380 views
-
-
காணாமற்போனோர் தொடர்பில் வடக்கு மக்களிடம் சாட்சியங்களைத் திரட்டுவதற்காக காணாமற்போனோர் பற்றி விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு எதிர்வரும் ஜனவரியில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களுக்குப் பயணம் செய்யவுள்ளது. மூவரடங்கிய இந்தக் குழுவுடன் சட்டமா அதிபர் திணைக்களத்தின் விசாரணைக்குழுவொன்றும் அங்கு செல்லவுள்ளது. காணாமற்போனோர் பற்றி விசாரணை நடத்தும் ஆணைக்குழுவின் தலைவராகச் செயற்படும் மெக்ஸ்வெல் பராக்கிரம பரணகமவின் பேச்சாளராகச் செயற்படும் அதிகாரியொருவர் இந்தத் தகவலை நேற்று "உதய'னிடம் உறுதிப்படுத்தினார். ஜனவரி 15ஆம் திகதியளவில் வடக்குப் பயணத்தை ஆரம் பிக்கும் இந்தக் குழு 5 மாவட்டங்களிலும் மக்கள் அமர்வுகளை (Public sittings) நடத்திக் காணாமற…
-
- 0 replies
- 256 views
-
-
நாடாளுமன்ற உறுப்பினர்களை மாத்திரம் உயர் மட்ட நிலையைக் கொண்டிருந்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இப்போது மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களையும் உள்ளடக்கியதாக விரிவு பெற்றிருக்கின்றது. கிறிஸ்மஸ் தினத்திற்கு முதல் நாள் வவுனியாவில் நடைபெற்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உயர் மட்டக் கூட்டத்தின்போது இந்த விடயம் வெளிப்பட்டிருக்கின்றது. இவ்வாறு உறுப்பினர்களின் எண்ணிக்கையில் கூட்டமைப்பு விரிவடைந்து பெரிதாகியிருக்கின்றபோதிலும், அதன் செயற்பாடுகள், எதிர்காலத்து நடவடிக்கைகள் குறித்த அக்கறையான போக்கு என்பன விரிவு பெற்றிருப்பதாகத் தெரியவில்லை. வடமாகாண சபை செயற்படத் தொடங்கி இரண்டு மாதங்களாகின்றன. ஆயினும் மாகாண சபையும் அதன் முதலமைச்சர், மாகாண அமைச்ச…
-
- 16 replies
- 1k views
-
-
இன்றைய இலங்கைச் சூழலில் சிங்கள பௌத்த மேலாதிக்க சிந்தனை கொண்டோர் திட்டமிட்ட வகையில், ஓர் ஒழுங்கமைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலின் அடியொற்றி சிறுபான்மைச் சமூகங்களின் மீது மேற்கொள்ளும் கருத்தியல் மற்றும் பௌதீகத் தன்மை வாய்ந்த தாக்குதல்களைக் கிஞ்சித்தேனும் குறைத்து மதிப்பிட முடியாது. இலங்கையில் வாழும் தமிழ், முஸ்லிம் சமூகங்களின் மீதான இத்தகு தாக்குதல்களுக்கு அரசாங்கத்தின் அதியுயர் பீடம் தொடக்கம் சாதாரண தரத்திலுள்ள இனவெறி இதயம் தாங்கிகளினால் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் ஆதரவளிக்கப்படுகின்றதென்பதும் மறுக்க முடியாத உண்மையே. தன்னுடைய எதிர்கால அரசியல் இருப்பை இலங்கையின் அரச சிம்மாசனத்தில் இருத்தி அழகு பார்க்கும் கற்பனைகளையும் கனவுகளையும் நெஞ்சில் சுமந்து கொண்டிருக்கும் ஒரு தனி நபரின…
-
- 2 replies
- 831 views
-
-
-கெலும் பண்டார இலங்கையின் நட்பு நாடுகளில் ஒன்றான கியூபா, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் மார்ச் அமர்வின்போது வரக்கூடிய இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை தோற்கடிக்க உதவுவதாக உறுதியளித்துள்ளது. கொள்கை அடிப்படையில் எந்த ஒரு நாட்டுக்கும் எதிரான குறிப்பான தீர்மானங்கள் சர்வதேச சட்டங்களுக்கு எதிரானவையாதலால் கியூபா அதை எதிர்க்கின்றது என கியூப தூதுவர் இந்திரா லோப்பஸ் கூறினார். இப்படி ஒரு நாட்டைத் தனியாக தேர்ந்தெடுத்து தீர்மானம் கொண்டுவருவது ஒத்துழைப்பாகாது. இது அந்த நாட்டின் இறைமையை மீறுவதாகும். இது ஒரு நாட்டின் உள்நாட்டு விவகாரத்தில் தேவையின்றி தலையிடுவதாகும். இது ஒரு நாட்டின்மீது தேவையில்லாத அழுத்தத்தை பிரயோகிப்பதாகும் இது சர்வதேச சட்டத்தின் உண்மைப் பொருளாகாது என அவர் கூறினார். இர…
-
- 2 replies
- 537 views
-
-
தமிழக முகாம்களில் தமிழ் இளைஞர்களுக்கு இரகசிய பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழகத்தின் ராமநாதபுரம் கரையோரப் பகுதிகளில் தமிழ் இளைஞர்கள் இரகசிய பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. குறித்த இளைஞர்கள் விசேட உடற் பயிற்சிகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. 34 ஆண்டுகளுக்கு முன்னதாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இவ்வாறான பயிற்சி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. தமிழக அகதி முகாம்களில் தங்கியிருந்த பல இலங்கை இளைஞர்கள் தலைமறைவாகியுள்ளதாகவும், இவர்கள் குறித்த புலி ஆதரவு குழுக்களுடன் இணைந்து கொண்டுள்ளதாகவும் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கைக்கு எதிரான போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்களிலும் இந்த இளைஞர்கள் ஈ…
-
- 5 replies
- 797 views
-
-
மனித உரிமை பிரச்சினைகள் உட்பட வடக்கின் நிலைமைகள் குறித்து கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசனிடம் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் பிறந்த ராதிகா கனடாவின் ஸ்கார்பரே ரூஜ் ரிவர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராவார். வடக்கில் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களை சந்தித்த அவர் அங்குள்ள தற்போதைய நிலைமைகள் குறித்து கேட்டறிந்து கொண்டார். இந்த சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனும் கலந்து கொண்டார். இது குறித்து கருத்து வெளியிட்ட அனந்தி சசிதரன், வடக்கில் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினை, மனித உரிமை மீறல்கள் குறித்து கனேடிய நாடாளுமன்ற உறுப்பினருக்கு தெளிவுப்படுத்தப்பட்டது. அத்துடன் வடக்கில் கா…
-
- 2 replies
- 855 views
-
-
வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட தயாராகவே உள்ளார். ஆனால் சம்பந்தனின் பிடிவாதமே விக்னேஸ்வரனை தடுக்கின்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பை அரசாங்கத்துடன் இணைத்தால் அதுவே ஜனநாயகத்தின் பெரிய வெற்றியாகும் என்று ஜனநாயக இடது சாரி முன்னணியின் தலைவரும் தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். கூட்டமைப்பின் கோரிக்கைகள் யதார்த்தத்திற்கு அப்பாற்பட்டன. நிறைவேறாத வாக்குறுதிகளுக்காக போராடுவதை விடவும் அரசாங்கத்துடன் இணைந்து தமிழர்களின் உரிமைகளை பெற்றுக் கொள்வதே புத்திசாலித்தனமான விடயமாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். இரண்டா…
-
- 3 replies
- 790 views
-
-
இனவாத சிறீலங்கா அரசு 1 ஒன்றரை லட்சம் தமிழ் மக்களை கொன்றுள்ளது. இதை மறைக்க சிறீலங்கா அரசு இசை மற்றும் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை இந்திய கலைஞர்களை அழைத்து நடத்த எண்ணுகிறது. அதன் சதியை புரிந்துகொண்டு திரையுலகினரும், இசையுலகினரும் விழாவை புறக்கணித்து வருகின்றனர். இந்த நிலையில் பின்னணி பாடகர் காண பாலா அவர்களை அழைத்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்கிறார்கள். இந்த நிகழ்வில் கலந்து கொள்ளது உடனடியாக தமிழ் மக்களின் உணர்வுகளை புரிந்து இசை நிகழ்ச்சியை பாடகர் காண பாலா ரத்து செய்யவேண்டும். இதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் அவரை தொடர்பு கொள்ள Ontact @ Gana Bala M.BALA MURUGAN No: 3, Kannigapuram 2nd Street, Kannigapuram,chennai - 600 012. 98400 20125 98411 20125 9884…
-
- 24 replies
- 2.3k views
-
-
யுத்தத்தினால் பாதிப்புகுள்ளாகிய வறுமை கோட்டின் கீழ் வாழும் வறிய மாணவர்களுக்கு பாடசாலை உபகருணங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல கிராமங்களில் நடைபெற்றது. குறித்த நிகழ்விளை சமூக சேவகரும் பிரபல வர்த்தகருமான இருதயநாதன் சாள்ஸ் ஏற்பாடு செய்திருந்தார். இதன் போது வறுமை கோட்டின் கீழ் வாழும் வறிய மாணவர்களுக்கு சமூக சேவகரும் பிரபல வர்த்தகருமான இருதயநாதன் சாள்ஸ் அவர்களினால் பாடசாலை உபகருணங்கள வழங்கிவைக்கப்பட்டது. நெடு நாட்களாக மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சில மீள்குடியோற்ற கிராமங்களில் உள்ள வறிய மாணவர்கள் தமது பாடசாலை கல்வி கற்றலுக்கு தேவையான உபகருணங்களின்றி அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்த…
-
- 0 replies
- 404 views
-
-
தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்காவின் பிரதி இராஜாங்கச் செயலர் நிஷா தேசாய் பிஸ்வால் தலைமையிலான அமெரிக்க உயர்மட்டக் குழு தைப்பொங்கலுக்கு முன்னர் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது. ஜனவரி இரண்டாம் வாரம் இந்தக் குழுவினர் கொழும்பு வரத் திட்டமிட்டுள்ளதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன. றொபேட் ஓ பிளேக்கிற்குப் பதிலாக, தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான பிரதி இராஜாங்கச் செயலராக அண்மையில் நியமிக்கப்பட்ட நிஷா தேசாய் பிஸ்வால் சிறிலங்காவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். எனினும், இவரது பயணம் தொடர்பான தகவல்களை கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகமோ, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களமோ இன்னமும் உறுதிப்படுத்தவில்லை. ஆனால், நிஷா தேசாய் பி…
-
- 2 replies
- 523 views
-
-
தற்பொழுது ஊடகவியலாளராக இருக்கின்ற தயா மாஸ்ரர் போன்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகள் பலர் அரசாங்கத்தின் சூழ்நிலைக் கைதிகளாக இருக்கின்றனர் எனவும் அவர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாக்கப்பட்டுள்ளது எனவும் வடக்கு மாகாண சபை உறுப்பினர் திருமதி அனந்தி சசிதரன் இன்று தெரிவித்தார். சுனாமி கடல்கோள் அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் 9 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு வடமராட்சி கிழக்கு உடுத்துறை சுனாமிச் சதுக்கத்தில் இடம்பெற்ற பொழுது அங்கு தயாமாஸ்ரருடன் நீண்டநேரமாக உரையாடிய பின்னர் ஊடகவியலாளருக்கு தமது சந்திப்புத் தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கும் பொழுதே அவர் இவ்வாறு தெரிவித்தார் . இருவரும் நீண்ட நேரம் உரையாடியமை தொடர்பாக ஊடவியலாளர்கள் திருமதி அனந்தியிட…
-
- 61 replies
- 4k views
-
-
கூட்டமைப்பின் வலி.கிழக்கு பிரதேச சபையினது வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றப்பட்ட போது இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் வடமாகாண உள்ளுராட்சி அமைச்சின் ஆணையாளர் தனது விசாரணைகளை ஆரம்பித்துள்ளார். இன்று அங்கு நேரில் சென்றிருந்த அவர் பணியாளர்களது வாக்குமூலங்களை பதிவு செய்ததுடன் அனைத்து ஆவணங்களையும் பார்வையிட்டுள்ளார். குறித்த வரவு-செலவுத்திட்ட வாக்கெடுப்பின் போது கூட்டமைப்பின் அதிருப்தி குழுவினருக்கோ எதிர் கட்சியான ஈபிடிபியினருக்கோ தகவல்கள் வழங்கப்பட்டிருக்கவில்லை. தற்போதைய தவிசாளர் அன்னலிங்கம் உதயகுமார் தனது ஆதரவாளர்களான எண்மரை மட்டுமே அக்கூட்டத்திற்கு அழைத்துள்ளார். தனது கட்சி சார்ந்த ஏனைய அதிருப்தி குழுவினை சார்ந்த எழுவரையும் மற்றும் எதிர்கட்சியான ஈபிடிபியின் ஆறு உறுப்பி…
-
- 0 replies
- 532 views
-