Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கை கப்பல் கூட்டுத்தாபனத்துக்கு மீண்டும் உயிர் கொடுப்பதற்காக, சீனாவிடம் இருந்து, இரண்டு சரக்குக் கப்பல்களை சிறிலங்கா அரசாங்கம் கொள்வனவு செய்யவுள்ளது. இதற்கான அனுமதியை சிறிலங்கா அமைச்சரவை கடந்த திங்கட்கிழமை வழங்கியுள்ளது. இந்தக் கப்பல்களைக் கொள்வனவு செய்வதற்கு அனுமதி கோரும் பத்திரங்களை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச சமர்ப்பித்திருந்தார். இதற்கு, அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில், இந்தக் கப்பல்களை கொள்வனவு செய்வதற்கான கடன்களை பெறுவதற்குரிய ஏற்பாடுகளை மேற்கொள்ளும்படி, வெளியக வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார். 70 மில்லியன் டொலர் செலவில் இந்தக் கப்பல்கள் இரண்டும் சீனாவிடம் கொள்வனவு செய்யப்படவுள்ளன. இவை 64 ஆயிரம் தொன் எடை க…

  2. புகழ்பெற்ற 'சிலோன் தேயிலையில்' தயாரிக்கப்பட்ட ஒவ்வொரு தேநீர்க் குவளைக்குப் பின்னரும், ஆண்டு முழுவதும் சிறிலங்காவின் தேயிலைத் தோட்டங்களில் மிகக் கடுமையாக உழைக்கின்ற முகம்தெரியாத தொழிலாளிகள் உள்ளனர். சிறிலங்காவில் வாழும் தோட்டத் தொழிலாளர் சமூகம் தொடர்பாக 'இங்கிருந்து' [From Here] என்கின்ற திரைப்படத்தை சிவமோகள் சுமதி இயக்கியுள்ளார். இந்தத் திரைப்படம் வெகுவிரைவில் கொழும்பு திரையரங்குகளில் காட்சிப்படுத்தப்படவுள்ளன. "சிறிலங்காவில் இடம்பெற்ற இனப் பிரச்சினை தொடர்பான திரைப்படங்களுக்குள் மலையகத் தமிழ்த் தொழிலாளர்களின் கதைகள் ஒருபோதும் உள்வாங்கப்படவில்லை" என்கிறார் இயக்குனர் சுமதி. தென்னிந்தியாவிலிருந்து பிரித்தானியாவால் சிறிலங்காவுக்கு கொண்டு வரப்பட்ட மலையகத் தமிழர்கள் அல்லது த…

  3. தமிழர் ஒருவருக்கு அவர் தமிழ் என்று தெரிந்தும் தனிச் சிங்களத்தில் கடிதம் அனுப்புவது அவரை கத்தியால் குத்துவதற்கு சமனாகும் என்று அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். மொழி அமுலாக்கல் மற்றும் அரச மொழிகள் அமைச்சு உட்பட தெரிவுக்குழுவுக்கு ஆற்றுப்படு த்தப்பட்ட 10 சிரேஷ்ட அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீட்டு குழுநிலை விவாதம் நேற்று நடைபெற்ற போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், அரச அலுவலகங்களில் தமிழ், சிங்கள மொழி பெயர்ப்பாளர்கள் இருக்க வேண்டும். அரச அலுவலகங்களில் வெளியிடப்படும் சுற்று நிருபங்கள் விண்ணப்பப்படிவங்கள் அனைத்தும் மும்மொழிகளிலும் இருக்க வேண்டும்.அரச அலுவலகங்களுக்கு செல்லும் மக்கள் அங்கு சென…

  4. பின் குறிப்பு:- இதற்கு முன்னர் எம்மால் ஆசிய அபிவிருத்தி வங்கி கொழும்பு கிளைக்கு அனுப்பப்பி வைக்கப்பட்ட கடிதத்தில் எமக்கு அதிகாரிகளின் அழுத்தங்களும் அரசியல்வாதிகளின் அச்சுறுத்தல்களும் இருக்கும் என்று மறைமுகமாக சுட்டிக்காட்டி இருந்தோம். அதன் அடிப்படையில் தற்போது விவசாய பிரதிநிதிகளாகிய எம்மை தனித்தனியே இருப்பிடங்களுக்கு வந்து சந்தித்து முளைச்சலவை செய்கின்றார்கள். இதன்போது பணம், பதவி அச்சுறுத்தல் என்பன பயன்படுத்தப்படுகின்றன. தனித்தனியே சென்று இவ்வாறு பணத்தைக் கொடுப்பதன் மூலமும், பதவிதருவதாக ஆசை காட்டுவதன் மூலமும், இதற்கு இணங்காதவர்களை அச்சுறுத்துவதன் மூலமும் எமது விவசாயப் பிரதிநிதிகளின் ஒற்றுமையைக் குலைத்து அவர்களை வேறுவேறாக்கி எங்களிடம் இருந்து சம்மதக் கையொப்பம் பெறும் முய…

    • 7 replies
    • 1.3k views
  5. தகவல் தொழில்நுட்பத்தில் உலகின் மிக இளவயது பட்டதாரியாக, கண்டியைச் சேர்ந்த 11வயது தமிழ்ச் சிறுமியான வாசின்யா பிறேமானந்தா அறிவிக்கப்பட்டுள்ளார். பிரித்தானிய கணினிச் சமூகம் (British Computer Society ) இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கண்டியிலுள்ள கொழும்பு அனைத்துலகப் பாடசாலையில் 8ம் வகுப்பில் கல்வி கற்று வரும் வாசின்யா, பிரித்தானிய கணினிச் சமூகத்தின் தகவல் தொழில்நுட்ப பட்டத்தை (BCS IT)பெற்றுள்ளார். இவரே உலகில் தகவல் தொழில்நுட்பத்தில் ஆகக்குறைந்த வயதில் பட்டம் பெற்றவராவார். இவர் எட்டு வயதில் இருக்கும் போதே, இவர் கபொத சாதாரணதரப் பரீட்சையில் ஆங்கிலப் பாடத்தில் ஏ தரச் சித்தியைப் பெற்று சாதனை படைத்திருந்தார். அத்துடன், எட்டு வயதிலேயே கணினி அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்…

  6. எங்கள் அம்மாவுக்கும் கமலுக்கும் தொடர்பு என்றுகூறி எங்கள் வாழ்க்கையையே நாசமாக்கிவிட்டார்கள் என்று கோபத்தில் கொந்தளிக்கிறார் றெக்‌சியனின் 16 வயது மகள். தற்போது ஜி.சீ.ஈ. சாதாரணதரப் பரீட்சை எழுதி வரும் றெக்சியனின் மகள் தொடர்ந்து கூறியதாவது, அப்பாவைக் கொன்றது மட்டுமல்லாமல் அம்மாவையும் கேவலப்படுத்தி எங்கள் வாழ்க்கையை எதிர்காலத்தையே நாசப்படுத்திவிட்டார்கள். கட்சியை விட்டு விலகச் சொல்லி அவர்கள் அப்பாவைக் கட்டாயப்படுத்திய போது கூட்டமைப்பில் போய் சேருங்கள் என்று அவரிடம் சொன்னோம். ஆனால் அவர் மறுத்துவிட்டார். அப்படிச் செய்தால் கொன்று விடுவார்கள் என்று சொன்னார். அதே நேரம் இருந்தாலும் கொன்றுவிடுவார்கள் என்றும் சொல்லியிருக்கிறார். அப்போது அதன் பாரதூரம் எனக்குப் புரியவில்ல…

  7. எம்.டி.லூசியஸ் புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்ட மன்னார் மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப்பு ஆண்டகை இடம்பெற்றுள்ள கத்தோலிக்க ஆயர் பேரவை முன்வைத்துள்ள யோசனைகளை நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை எமக்கு கிடையாது என அமைச்சரவை பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். ஊடகத்துறை அமைச்சில் இன்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். மன்னார் மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப்பு ஆண்டகை புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டவர். இவர் புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டதுக்கு என்னிடம் பல உதாரணங்கள் உண்டு. அதில் ஒன்று தான் மன்னார் மடு மாதா தேவாலயத்தின் திருச்சொரூபத்தை பாதுகாப்பதற்கு இராணுவத்தினர் முன்வந்த போது பல கிலோ மீற்றர…

  8. சிறிலங்காவின் அண்மைய நிலவரங்களில் இருந்து பாடம் கற்றுள்ளதாக, ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் நேற்று நியுயோர்க்கில் இந்த ஆண்டின் இறுதி செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். இதன்போது, “2013ம் ஆண்டில் உங்களால் முன்னெடுக்கப்பட்ட கொள்கை நகர்வுகளில் ஒன்றான, போருக்குப் பின்னர் சிறிலங்காவின் முன்னிலைத் திட்டம் குறித்து, நீங்களும், பிரதிப்பொதுச்செயலரும் பேசியிருந்தீர்கள். தற்போது இந்த திட்டம் செயற்பாட்டில் உள்ளதா? அது ஐ.நாவின் கொள்கையா? இன்றுகாலை பிரதிப்பொதுச்செயலரும் சிறிலங்காவின் பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்சவும் சந்தித்துள்ளது குறித்து விபரம் தேவை? இருவருக்கும் இடையிலான எந்த உறவும் இருக்கிறதா? என்று செய்தியாளர் …

  9. இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்திலிருந்து பாடங்கள் கற்றுக் கொண்டதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். இலங்கையில் ஏற்பட்ட நிலைமையைப் போன்று வேறும் எந்த நாட்டிலும் இடம்பெறாமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். வருட இறுதியில் நடைபெறும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். உரிமைகளைப் பாதுகாக்கக் கூடிய வகையிலான ஓர் செயற் திட்டமொன்று உருவாக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். எந்தவொரு தனிப்பட்ட நாட்டையும் இலக்கு வைத்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். உலகின் எந்த ஓரு நாட்டிலும் இடம்பெறக்கூடிய முரண்பாட்டு நிலைமைகளின் போது காத்திரமான முறையில் மனிதாபிமான உதவிகளை வழங்கும் நோக்…

    • 5 replies
    • 869 views
  10. (பழுலுல்லாஹ் பர்ஹான்) அரச பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் ஆட்களைப்பதிவு செய்யும் திணைக்களத்தினால் ஏதிர்வரும் 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதமளவில் புதிதாக வழங்கப்படவுள்ள் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டையில் முஸ்லிம் மக்கள் அவர்களுடைய கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் தொப்பியோ,பர்தாவோ அணிந்தால் ஆள் அடையாள அட்டை வழங்கப்படமாட்டாது என திணைக்களத்தின் பொது ஆணையாளர் ஆர்.எம்.எஸ்.சரத் குமார தெரிவித்துள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை மாலை மட்டக்களப்பு கல்லடி ஓசானிக் ஹோட்டலில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டிலேயே மேற்கண்டவாறு கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர் எதிர்வரும் 2014 ஆண்டு ஜுன் மாதத்தின் பின்னர் புதிதாக வழங்கப்பட…

  11. காணொளி : 'தமிழ் ஈழம்' ஆவணப்பட வெளியீடு - சீமானின் உரை http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=10633:2013-12-17-15-30-26&catid=1:latest-news&Itemid=18

  12. நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் டானியல் றெக்சியனின் கொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைதான குற்றவாளிகள் மூவருக்கும் டிசம்பர் 31ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இந்த கொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைதான கமலேந்திரன்,றெக்சியன் மனைவி அனிதா மற்றும் யசிதரன் ஆகிய மூவருக்குமே விளக்கமறியல் டிசம்பர் 31ம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைதான றெக்சியனின் மனைவி அனிதா,யசிதரன் மற்றும் கமல் ஆகியோரை சிறையில் சென்று பார்ப்பதற்கு இதுவரை காலமும் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. ஆனால் ஊர்காவற்றுறை திறந்த நீதி மன்ற நீதவான் மகேந்திரராஜா உத்தரவின் படி எதிர்காலத்தில் அவர்களை சிறையில் சென்று பார்வையிட இன்று அனுமதி வழங்கப்பட்டது. அத்…

  13. நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் தானியேல் றெக்‌ஷயனை ஈ.பி.டி.பியினரே திட்டமிட்டுக் கொலை செய்தனர் என்று அவரது மாமியாரான கருணானந்த சிவம் தனலட்சுமி "உதயன்' பத்திரிகையிடம் நேற்றுத் தெரிவித்தார். தனது மகளும் றெக்ஷயனின் மனைவியுமான அனித்தாவுக்கும் ஈ.பி.டி.பியின் யாழ். மாவட்ட அமைப்பாளரான கமல் எனப்படும் கந்தசாமி கமலேந்திரனுக்கும் இடையில் சட்டரீதியற்ற தொடர்பு இருந்ததாகப் பொலிஸார் கூறுவதையும் அவர் அடியோடு மறுத்தார். எனது மகளுக்கும் கமலுக்கும் இடையில் தொடர்போ உறவோ கிடையாது. அவர்கள் (ஈ.பி.டி.பி.) எனது வீட்டுக்குள் வந்ததே கிடையாது. வீட்டின் அருகே றெக்ஷயன் தனக்கென ஏற்பாடு செய்து வைத்திருந்த கொட்டகைக்குத்தான் அவர்கள் வந்து செல்வார்கள். அவர்கள் வந்து செல்லக்கூடிய வகையில் தனி வாசல் இரு…

  14. தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுத பலம் சிதைக்கப்பட்டு ஐந்து வருடங்களாகின்ற நிலையில்தான் புலிகளின் இராஜதந்திர பலத்தைச் சிங்கள தேசம் உணரத் தொடங்கியுள்ளது. புலிகளின் இராஜதந்திர நடவடிக்கையின் காரணமாக சர்வதேச ரீதியாக ஏற்பட்டு வருகின்ற கடும் அழுத்தங்களால் இன்று சிங்களம் சிக்கித் தவிக்கின்றது. தென்னிலங்கை சிறிதும் எதிர்பார்க்காத அளவுக்கு மேற்குலகின் அழுத்தம் அதிகரித்து வருகின்றது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் மகிந்த ராஜபக்ச குடும்பம் தவிக்க ஆரம்பித்துள்ளது. புலிகளைத் தவறாக எடைபோட்டதன் விளைவை சிங்களம் இன்று அனுபவிக்க தொடங்குகிறது. தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் தொடர்பாகச் சர்வதேசம் இதுவரை கொண்டிருந்த தவறான மாயை இப்போது களையப்பட்டிருக்கின்றது. புலிகளின் போராட்டம் நியாயமா…

    • 28 replies
    • 2.5k views
  15. "முதலமைச்சர் விக்னேஸ்வரன் பதவியில் இருக்க வேண்டும். அவர் பதவி விலகும் சாத்தியம் ஏற்பட்டால் அது நாட்டுக்கு நல்லதல்ல என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசனிடம் தெரிவித்துள்ளார். வட மாகாண சபை தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறும் என்று தெரிந்துகொண்டுதானே நான் வடக்கு தேர்தலை நடத்தினேன் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இதேவேளை, வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறியின் கீழ் கடமையாற்ற முடியாது என முதலமைச்சர் விக்னேஸ்வரன் தனது பதவியை இராஜினாமா செய்து விடுவாரோ என அச்சப்படுகிறேன் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன், ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் தெரிவிதுள்ளார். தனது 54ஆவது பிறந்த தினத்தினை ஜனநாயக மக்கள் முன்னணி…

  16. சிறப்பு அதிரடிப்படையைப் பலப்படுத்தும் வகையில், புதிய படையினர் சேர்க்கப்பட்டு விரைவில் பயிற்சி அளிக்கப்படவுள்ளதாக, சிறப்பு அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி எம்.சி.ரணவான தெரிவித்துள்ளார். கட்டுக்குருந்தவில் தற்போது நடைபெற்று வரும் பயிற்சிகள் முடிவுக்கு வந்த பின்னர், 300 பேருக்கான பயிற்சி ஆரம்பமாகும். அடுத்த ஆண்டில், சிறிப்பு அதிரடிப்படைக்கு 600 பேர் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர். 2009 மே மாதம் போர் முடிவுக்கு வந்த பின்னர், சிறப்பு அதிரடிப்படையினர் எல்லா மாவட்டங்களிலும் நிறுத்தப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் கோட்டைக்கு அருகிலுள்ள பண்ணைப் பகுதியில், ஒரு தொகுதி சிறப்பு அதிரடிப்படை கொமாண்டோக்கள் நிலை கொண்டுள்ளனர். தற்போது சிறப்பு அதிரடிப்படையில் 7800 அதிகாரிகளும் படையினரு…

  17. இலங்கை மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை முன்வைக்க மேற்குலக நாடுகள் இனியும் முயற்சித்தால், அந்நாடுகளில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்த தகவல்களை வெளியிட நேரிடும் என மனித உரிமை விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியும் அமைச்சருமான மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். மனித உரிமைகள் விவகாரத்தில் இலங்கைக்கு எதிராகக் குரல் கொடுக்கும் சில நாடுகளின் அரசமைப்பில் ஏனைய சமயங்களுக்கு இடமில்லை என்றும் சுட்டிக் காட்டியுள்ளார். பயாகல பிரதேசத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், மேலும் தெரிவித்தவை வருமாறு: அண்மையில் இங்கு பயணம் செய்திருந்த ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, சுதந்திர சதுக்கத்திலுள்ள முன்னாள் பிரதமர் டி.எஸ்.…

  18. சமாளிக்கும் பொறுப்பு முஸ்லீம் தலைவர்களிடம்:- (ஆவணப்படம்) கொழும்பிலுள்ள மூன்று பள்ளிவாசல்களில் தொழுகைகளை இடைநிறுத்துமாறு பொலிஸார் உத்தரவிட்டுள்ளனர். தெஹிவளை, அத்திடிய மஸ்ஜிதுல் ஹிபா, களுபோவில மஸ்ஸிதுல் தாருல் சாபீய், தெஹிவளை தாருல் அர்க்கம் ஆகிய பள்ளிவாசல்களுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் குறித்த பள்ளிவாசல்களுக்கு சென்ற பொலிஸார் தொழுகைகளை நடத்த வேண்டாம் என உத்தரவு பிறப்பித்துள்ளனர். இந்த உத்தரவு தொடர்பில் பொலிஸ் மா அதிபர், பிரதி பொலிஸ் மா அதிபர் மற்றும் கொழும்பு பிரதேச சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரின் கவனத்திற்கு முஸ்லீம் தலைவர்கள் கொண்டு சென்றுகொண்டு இருக்கின்றனர் என ஊடக அறிக்கைகளும் பறக்கத் தொடங்கியிருக்க…

  19. வடக்கு,கிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்படுவதை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விரும்பவில்லை என்று முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்படுவதனை ஜனாதிபதி எப்போதும் விரும்பவில்லை. தீர்ப்பிற்கு ஜனாதிபதி நேரடியாகவே எதிர்ப்பை வெளியிட்டார். உத்தியோகப்பற்றற்ற சந்திப்பொன்றின் போது தீர்ப்பு குறித்து ஜனாதிபதிக்கு அறிவித்த போது, அதற்கு ஜனாதிபதி கடும் எதிர்ப்பை வெளியிட்டார்.' உங்களுக்கு பைத்தியமா' என ஜனாதிபதி என்னிடம் கேட்டார். வடக்கு கிழக்கு மாகாணங்களை பிளவுபடுத்தினால் யுத்தத்தை முன்னெடுக்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார். தீர்ப்பு அளிக்கப்பட்ட சில தினங்களில், மாவிலாறு அணையை புலிகள் மூடியனர். அதன் பின்னரே யுத்தம் ஆரம…

  20. டெல்லி சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி இரண்டாம் இடத்தை வசப்படுத்துகிறது. டெல்லியை பாஜக கைப்பற்றவுள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் எழுச்சி பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. புது டெல்லி தொகுதியில், முதல்வர் ஷீலா தீட்சித்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, அரவிந்த் கெஜ்ரிவால் முன்னிலையில் உள்ளார். முதன்முதலாக தேர்தல் களம் கண்டுள்ள ஆம் ஆத்மி கட்சி, மொத்தமுள்ள 70 தொகுதிகளில் சுமார் 25 இடங்களில் வெற்றி பெறும் நிலையில் உள்ளது. இந்தத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி கடும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த எதிர்பார்ப்பை உறுதிபடுத்தும் வகையிலேயே ஆம் ஆத்மி கட்சி…

    • 39 replies
    • 3.3k views
  21. 'தமிழீழம் நீண்ட தொலைவிலில்லை' என பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த உறுப்பினரும் இந்தியாவின் முன்னாள் வெளியுறவு அமைச்சருமான ஜஸ்வந்த் சிங் தனது கட்சியின் கூட்டம் ஒன்றில் புதனன்று தெரிவித்துள்ளார். ஒன்றுபட்ட சிறிலங்காவுக்குள் தமிழ் மக்களுக்கான அரசியற் தீர்வை எட்டுதல் தொடர்பாக பாரதிய ஜனதாக் கட்சியின் ஒன்றுகூடலில் விவாதிக்கப்பட்ட போது, தற்போது இந்த நிலை வேறுபட்டுள்ளது என்பதை ஜஸ்வந்த் சிங் வலியுறுத்தியுள்ளார். "ஈழம் என்பது மிகக் கிட்டிய தூரத்தில் உள்ளது. தற்போது பங்களாதேஸ் சுதந்திர நாடாக மாறிவிட்டது. இதேபோன்று வடசூடான் மற்றும் தென்சூடான் ஆகியனவும் தற்போது சுதந்திரமடைந்துவிட்டன" என ஜஸ்வந்த் சிங் தனது விவாதத்தின் போது சுட்டிக்காட்டியுள்ளார். தனது உரையின் போது, கச்சதீவை இந்தியா …

    • 5 replies
    • 815 views
  22. அண்மையில் மிகப் பெரும்பான்மை வாக்குகளுடன் வடமாகாண சபை அங்கத்தவராக தெரிவு செய்யப்பட்ட அனந்தி சசிதரன் நோர்வே பாராளுமன்ற அங்கத்தவரும், வெளிநாட்டுறவு, பாதுகாப்பு குழு அங்கத்துவருமான கிரிஸ்டியான், நூர்கயும், ஆளும் கட்சி அங்கத்தவர் ஹெல்கே ஊர்டென், வெளிநாட்டுறவுகள் அமைச்சின் அதிகாரி ஆகியோரைச் சந்தித்து யுத்த முடிவிலும் அதற்கு முன்னரும் காணாமற் போனோர், சரணடைந்த தன் கணவர் அடங்கலான விடுதலைப் போராளிகள், அரசியல் கைதிகள் நிலைமை, போர் நிமித்தம் விதவைகளான பெண்கள் மீது கட்டவிழ்த்துப்பட்டுள்ள சிறீலங்கா இராணுவ அடக்குமுறை, பாலியல் துஷ்பிரயோகம் ஆதிய குற்றங்கள்பற்றி எடுத்துரைத்தார். வடமாகாண ஆளுநரான முன்னைநாள் சிறீலங்கா இராணுவ அதிகாரி ஜனநாயக முறையில் தெரிவு செய்யப்பட்ட தங்கள் அரசுக்கு முட்டு…

    • 2 replies
    • 847 views
  23. தன்னை ஆளுனர் பதவியில் இருந்து நீக்கக்கோரி, வடக்கு மாகாணசபை நிறைவேற்றிய தீர்மானத்தை மாகாண ஆளுனர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி நிராகரித்துள்ளார். தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நல்ல முறையிலேயே பணியாற்றி வருவதாகவும் அவர் கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றிடம் கூறியுள்ளார். “மாகாணசபையில் இவர்களின் அழுத்தங்களுக்கு அடிபணிந்தோ, அச்சத்துடனோ பணியாற்ற முடியாது. ஒவ்வொரு எதிர்ப்பையும், அவர்கள் வெளிப்படுத்தும் கருத்தையும், நான் கேட்டுக் கொண்டிருந்தால், என்னால் வேலை செய்ய முடியாது. எனக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் எந்த பிரச்சினையும் இல்லை. மாகாணசபையில் நாம் நல்ல முறையிலேயே பணியாற்றி வருகிறோம். நாம் ஒவ்வொருவரும் பேசிக்கொண்டால், எந்தப் பிரச்சினையும் இல்லை. தமிழ்த் தேசிய…

  24. யாழ்பல்கலைக்கழக முன்னாள் விரிவுலையாளர் மு.திருநாவுக்கரசு BBCக்கு வழங்கிய செவ்வி எழுத்துருவில் முழுமையாக:- நெல்சன் மண்டேலா ஆபிரிக்க விடுதலைப் போராட்டத்தை சர்வதேச அரங்கில் சரிவர ஒருங்கிணைத்திருந்தார் என்பது முதலாவது உலகப் பொது உண்மை. உலகலாவிய கண்ணோட்டம், சர்வதேச பார்வை களநிலை யதார்த்தம், இந்த நான்கையும் ஒருசேர நேர்கோட்டில் இணைத்து அவர் ஆபிரிக்க தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தார். ஆபிரிக்க தேசிய விடுதலையை சர்வதேசக் கண்கொண்டு பார்க்க ஒருபோதும் அவர் தவறவில்லை. சர்வதேச போராட்ட ஒழுங்கில் அவர் அந்தப் போராட்டத்தை ஒருங்கிணைத்திருந்தார். முக்கியமாக மண்டேலா கைது செய்யப்பட்ட 1965 ஆம் ஆண்டின் பின்பு களநிலை யதார்த்தத்திற்கு ஏற்ப அவர் தன்னை புதுப்பித்துக்கொண்டார். …

  25. NEWS ARTICLES தென்மராட்சி வலயக்கல்வி அலுவலகம் நடாத்திய மார்கழித் திங்கள் முழுநிலா கலைநாள் நிகழ்ச்சி:- 16 டிசம்பர் 2013 வடமாகாணக் கல்வித் திணைக்களத்தின் அனுசரணையுடன் தென்மராட்சி வலயக்கல்வி அலுவலகம் நடாத்திய மார்கழித் திங்கள் முழுநிலா கலைநாள் நிகழ்ச்சி இன்று திங்கட்கிழமை (16.12.2013) சாவகச்சேரி கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. தென்மராட்சி வலயக் கல்விப்பணிப்பாளர் சு.கிருஷ்ணகுமார் தலைமையில் நடைபெற்ற இக்கலைவிழாவில் பிரதம விருந்தினராக முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனும், சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண விவசாய, கமநலசேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை. சோ.சேனாதிராஜா, சி.சிறீதரன்,…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.