ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143507 topics in this forum
-
கனேடிய வெளிவிவகார அமைச்சின் நாடாளுமன்றச் செயலர் தீபக் ஒப்ராய் போரில் இறந்தவர்களுக்கு மலர் வளைய அஞ்சலி செலுத்தினார் பொதுநலவாய மாநாட்டிற்கு இலங்கை சென்றிருந்த கனேடிய வெளிவிவகார மற்றும் அனைத்துலக மனிதஉரிமைகள் அமைச்சின் நாடாளுமன்றச் செயலர் தீபக் ஒப்ராய் மற்றும் அவரது அணியினர் ஆனையிறவில் போரில் இறந்தவர்களின் நினைவாக மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளார். இன்;று மாலை அவர் தனது அணியினர் சகிதம் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு திரும்புகையில் எவரும் எதிர்பாராத வகையில் ஏற்கனவே திட்டமிட்டவாறு தமது அஞ்சலியை அனைவரிற்கும் செலுத்தியுள்ளனர்;. ஏ-9 வீதியோரமாக ஆனையிறவிற்கும் பரந்தனிற்கும் இடைப்பட்ட பகுதியில் அவர்கள் இவ்வஞ்சலியை செலுத்தியுள்ளனர் ஏற்கனவே வடக்கிற்கு விஜயம் செய்த நவநீத…
-
- 0 replies
- 630 views
-
-
யாழ் வலி. வடக்கு போராட்டத்தை தனது ஒளிப்பட கருவியில் பதிவிடுகிறார் சர்வதேச ஊடகவியலாளர்:- 12 நவம்பர் 2013 படம் மயூரப்பிரியன் வலி. வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து வாழும் மக்கள் தம்மை தம் சொந்த இடங்களில் குடியமர்த்துமாறு கோரி மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய முன்றலில் இன்று காலை 8 மணி முதல் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த மக்களின் போராட்டத்தை தனது தனது ஒளிப்பட கருவியில் பதிவிடுகிறார் வெளிநாட்டு ஊடகவியலாளர் ஒருவர் .. http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/98881/language/ta-IN/article.aspx
-
- 1 reply
- 298 views
-
-
கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டை முன்னிட்டு சர்வதேச ஊடகவியலாளர்கள் படையெடுத்துள்ளனர். அவர்களது ஆரம்ப வருகை வடக்கை தளமாகவே அமைந்தது. அதன்படி சர்வதேச ஊடகவியலாளர்கள் யாழ்.குடாவிற்குள் வந்து இறங்கி அனைவரையும் பரபரப்படைய வைத்துள்ளனர். அத்துடன் அவர்களது தேடல் அனைத்தும் பாதிக்கப்பட்ட மக்கள் வாழும் இடங்களும் இராணுவ ஆக்கிரமிப்புக்கு அண்டிய பகுதிகளுமேயாகும். இவர்களின் வருகையினை அடுத்து இராணுவ முகாம்களும் அகற்றப்பட்டு பொய்த் தோற்றத்தினை காட்டுவதில் இராணுவ தலைமை மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது. அந்தவகையில் கடந்த 23 வருடங்களாக இராணுவ கட்டுப்பாட்டில் உயர்பாதுகாப்பு வலையம் என்ற ரீதியில் வலி.வடக்கு மக்களது நிலங்கள் இராணுவத்தினால் சுவீகரிக்கப்பட்டுள்ளது. அதனை ம…
-
- 1 reply
- 627 views
-
-
வடக்கில் கடந்த 10 மாதங்களில் 24 பெண்கள் பலாத்காரம் மற்றும் கொலை செய்யப்பட்டமை தொடர்பாக சந்தேகநபர்களை குற்றம்சாட்டுவதிலும் கைது செய்வதிலும் பொலிஸார் பாராமுகமாக இருப்பதாக வடக்கிலுள்ள பெண்கள் அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன. சில சந்தர்ப்பங்களில் மட்டுமே சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டும் கைது செய்யப்பட்டும் உள்ளனர். பொலிஸாரின் அசமந்தப் போக்கினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது உறவினர்களுக்கும் பாரிய அநீதி இழைக்கப்படுகின்றன என அவர்கள் தெரிவித்தனர். இவ்வாறான 24 சம்பவங்களில் பாதிக்கப்பட்ட 11 பெண்கள் யாழ் மாவட்டத்தை சேர்ந்தவர்களாவர். மன்னார் தவிர்ந்த சகல மாவட்டங்களிலிருந்தும் பலாத்காரம் மற்றும் கொலைச் சம்பவங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது பற…
-
- 0 replies
- 458 views
-
-
இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கிடையில் நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ணப் போட்டி நடந்த கார்டிப் நகர மைதானத்தில் புலிக்கொடியுடன் ஓடிய சந்தேகநபரை இலங்கைக்கு நாடு கடத்த பிரித்தானியா நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் (சி.ஐ.டி) நீதிமன்றத்தில் இன்று தெரிவித்தனர். இந்த வழக்கு விசாரணை கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் இன்று செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டபோதே சி.ஐ.டியினர் மேற்கண்டவாறு தெரிவித்தனர். மேற்படி கிரிக்கெட் போட்டி ஐக்கிய இராஜ்ஜியத்தில் கார்டிப் நகர மைதானத்தில் கடந்த யூன் மாதம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=342412440112718967#sthash.aAqOBDC4.dpuf
-
- 0 replies
- 660 views
-
-
வடமாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட தம்பிராசா என்பவரை கைது செய்வதற்காக பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக திவயின சிங்கள நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பாளர் பொட்டம்மான் ஆகியோருடன் நெருக்கமான தொடர்புகளை கொண்டிருந்த இந்த சந்தேக நபர் கொழும்பு பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்டவர் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. பொலிஸாரினால் கைது செய்யப்படுவதை தவிர்ப்பதற்காக இவர் பல்வேறு முறைகளை பின்பற்றி வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். விடுதலைப் புலிகளின் சந்தேக நபர்களை விடுதலை செய்வது மற்றும் அவர்களின் பாதுகாப்பு தொடர்பில் குரல் கொடுத்து வரும் இவர்…
-
- 0 replies
- 382 views
-
-
தெற்காசியாவின் வல்லரசு என்ற ரீதியில் பொது நலவாய மாநாட்டில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்ளாமையானது வெட்கப்பட வேண்டிய விடயமாகும். இதனால் இலங்கைக்கு எதுவிதமான பாதகமும் கிடையாது என ராவணா சக்தியின் தலைவர் இத்தேகந்த சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்தார். தமிழ் மக்கள் மீது உண்மையான அக்கறை இருக்குமானால் மாநாட்டில் கலந்து கொண்டு பிரச்சினைகளை பேசியிருக்க வேண்டுமென்றும் தேரர் தெரிவித்தார். இது தொடர்பாக இத்தேகந்த சத்தாதிஸ்ஸ தேரர் மேலும் தெரிவிக்கையில், மாநாட்டில் இந்திய பிரதமர் கலந்து கொள்ளாமையானது இலங்கைக்கு பாதகமானது அல்ல. இதனை அரசாங்கம் பொருட்படுத்தாது மாநாட்டை கோலாகலமாக ஆரம்பித்துள்ளதோடு பல்வேறு நாடு…
-
- 4 replies
- 764 views
-
-
பொதுநலவாய உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரித்தானியா பிரதமர் டேவிட் கமெரூன் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். இவ்வாறு உகண்டா , ஜமெய்க்கா மற்றும் புறூணை ஆகிய நாடுகளின் பிரதானிகளும் பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இலங்கை வந்தடைந்துள்ளனர். http://www.virakesari.lk/?q=node/359107
-
- 0 replies
- 497 views
-
-
சட்டவிரோதமான முறையில் சிறுநீரகங்கள் இலங்கைக்கு கடத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிரித்தானிய பிரஜைகளுக்கு இவ்வாறு சட்டவிரோதமான முறையில் சிறுநீரகங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இலங்கையின் தலைநகர் கொழும்பில் அமைந்துள்ள வைத்தியசாலைகளில் சிறுநீரக உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்படுகின்றது. பெருந்தொகைப் பணத்திற்காக இவ்வாறு சிறுநீரகங்கள் விற்பனை செய்யப்படுவதாக பிரித்தானிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. தெற்காசிய நாடுகளைச் சேர்ந்தவர்களின் சிறுநீரகங்கள் இவ்வாறு சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவின் பெங்களுரைவைச் சேர்ந்த காணிக்கைராஜ் என்பவர் சட்டவிரோதமான முறையில் சிறுநீரகங்களை விற்பனை செய்யும் நடவடிக்கையின் தரகராக செயற்பட்…
-
- 0 replies
- 343 views
-
-
தென் ஆபிரிக்க ஜனாதிபதி ஜாகொப் சூமா இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் பங்கேற்கும், தென் ஆபிரிக்க பிரதிநிதிகள் குழுவிற்கு ஜனாதிபதி சூமா தலைமை தாங்குவார் எனத் தெரிவிக்கப்படுகிறது. க்ளோபல் தமிழ் போரம் உள்ளி;ட்ட பல்வேறு அமைப்புக்கள் இலங்கை அமர்வுகளை புறக்கணிக்குமாறு தென் ஆபிரிக்க ஜனாதிபதியிடம் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது. எவ்வாறெனினும், தென் ஆபிரிக்கா அமர்வுகளில் பங்கேற்கத் தீர்மானித்துள்ளது. தென் ஆபிரிக்க ஜனாதிபதி உள்ளிட்ட பிரதிநிதிகள் விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்;ய உள்ளனர். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/98853/language/ta-IN/article.aspx
-
- 0 replies
- 440 views
-
-
இந்திய பிரதமர் டொக்டர் மன்மோகன் சிங், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. என்ன காரணத்தினால் தம்மால் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் பங்கேற்க முடியவில்லை என்பதனை பிரதமர், ஜனாதிபதி மஹிந்தவிற்கு தொலைபேசி ஊடாக விளக்குவார் என குறிப்பிடப்பட்டது. எனினும், இந்தியப் பிரதமர் தொலைபேசி அழைப்பு எதனையும் மேற்கொள்வில்லை. என்ன காரணத்திற்காக தம்மால் அமர்வுகளி;ல் பங்கேற்க முடியவில்லை என்பதனை விளக்கி பிரதமர் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு விளக்கமளிக்க முதலில் தீர்மானிக்கப்பட்ட போதிலும் பி;ன்னர் கடிதமொன்றை அனுப்பி வைக்கத் திட்டமிடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. http://glob…
-
- 0 replies
- 263 views
-
-
பொதுநலவாய மாநாட்டிற்கு இலங்கை செல்லும் சர்வதேச தலைவர்கள் மற்றும் ராஜதந்திரிகள் ஊடகவியலாளர்கள் வடக்கிற்கு செல்வதனை தடுக்க அல்லது இடர்களை ஏற்படுத்த இலங்கை அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி யாழ்ப்பாணம் - கொழும்பு மார்க்கத்திற்கான விமான சேவை நேற்று 11 ம் திகதி திங்கட்கிழமை முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. விமான சேவை நிறுத்தப்பட்டதிற்கான காரணம் தங்களுக்கு தெரியாதென்றும், உள்நாட்டு விமானப் போக்குவரத்து சபையினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் குறித்த விமான நிலையங்களுக்கு இடையில் சேவையிலீடுபட்டுள்ள தனியார் விமான சேவை நிலையம் தெரிவித்துள்ளது. விமான ஓடுபாதை புனரமைப்பு இடம்பெறுவதாக அதிகாரிகள் தரப்பில் ஊடகங்களிற்கு தெரிவிக்கப்பட்டிருந்தது. ஏனினும் விமான …
-
- 0 replies
- 289 views
-
-
tweeted by Duncan Stone Sri Lankan 'welcome' for Ch 4 News. For once it's not the BBC taking the flak. tweeted by Duncan Stone Channel 4 News team surrounded by local media on available at Colombo airport in Sri Lanka tweeted by Jonathan Miller nofirezone director Callum Macrae mobbed by lka press accusing him of being anti sri lanka (twitter)
-
- 19 replies
- 1.5k views
-
-
12 நவம்பர், 2013 இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் உச்சி மாநாட்டுக்கு மொரிஷியஸ் பிரதமர் நவீன் சந்திர ராம்கூலம் செல்லமாட்டார் என்று அந்த நாடு அறிவித்துள்ளது. இலங்கை, மனித உரிமைகளை மதிக்கும் விஷயத்தில் பெரிய முன்னேற்றம் எதுவும் காணப்படவில்லை என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று பிரதமர் ராம்கூலம் மொரிஷியஸ் நாடாளுமன்றத்தில் தெரிவித்ததாக ஏ.எப்.பி செய்தி நிறுவனம் தெரிவித்தது. இது குறித்து பிபிசி தமிழோசையிடம் கருத்து தெரிவித்த மொரிஷியஸ் நாட்டின் வெளியுறவு அமைச்சர் அர்வின் பூலெல் மொரிஷியஸ் எப்போதுமே கொள்கைகளின் அடிப்படையில்தான் முடிவுகளை எடுத்து வந்திருக்கிறது. மொரிஷியஸ் காமன்வெல்த் பிரகடனத்தின் அடிப்படையிலும், மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலும், இந…
-
- 1 reply
- 671 views
-
-
நவம்பர் 11, 2013 சிறீலங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவில் மிகப்பெரிய விரிசல் ஏற்பட்டிருப்பதாக ஐக்கிய தேசிய கட்சி கருதுகிறது. அந்த கட்சியின் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். சிறீலங்காவும், இந்தியாவும் அண்டைய நாடுகள் என்ற வகையில், இரண்டு நாடுகளுக்கும் இடையில் சிறந்த உறவு காணப்பட வேண்டும். ஆனால் சிறீலங்காவில் நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் கலந்துக் கொள்ளப் போவதில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளமையானது, சிறீலங்காவின் வெளியுறவு கொள்கையில் காணப்படும் பலவீனத்தையே எடுத்துக் காட்டுகிறது என்று அவர் தெரிவித்துள்ளார். சர்வதேசத்துக்கு சிறீலங்கா அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிகள் இன்னும் நிறைவேற்றப்பட்டாமையே, இந…
-
- 1 reply
- 672 views
-
-
சற்று நேரத்திற்கு முன்னதாக , வெளியாகியுள்ள அறிக்கையின் படி இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை செல்லமாட்டார் என்று அறியப்படுகிறது. இந்திய அரசாங்கத்தின் வெளியுறவுத்துறையின் சுட்டறிக்கை ஒன்றை ஆதாரம் காட்டி இந்திய ஊடகம் ஒன்று இச் செய்தியை வெளியிட்டுள்ளது. தமிழ் நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய அழுத்தம் காரணமாகவும், காங்கிரஸ் கட்சியில் உள்ள சிலரின் அழுத்தம் காரணமாகவுமே இம் முடிவு எட்டப்பட்டதாக கூறப்படுகிறது. http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=9937:2013-11-09-16-21-26&catid=1:latest-news&Itemid=18
-
- 20 replies
- 1.5k views
-
-
அம்பாறை மாவட்டம் முஸ்ஸிம் பகுதிகளுக்குச் வேலைக்காக செல்லும் தமிழ் வறிய குடும்பங்களை கட்டாயப்படுத்தி மதமாற்றும் நடவடிக்கையில் முஸ்ஸிம் பள்ளிவாசல்களைச் சார்ந்தவர்கள் ஈடுபட்டுவருகின்றனர். கல்முனைஇ அட்டப்பள்ளம் சாய்ந்தமருது நிந்தவூர் சம்மாந்துறை போன்ற பகுதிகளுக்கு அரிசி ஆலை வேலை செங்கல் அறுப்பு வேலை சில பகுதிகளில் துணிக்கடைகளில் வேலைக்கு செல்பவர்களை அவர்களின் வறுமையை ஒழிப்பதாக தெரிவித்து இஸ்ஸாம் மதத்திற்கு மாற்றியுள்ளதாக தெரியவருகிறது. நைனாக்காடு பகுதியில் செங்கல் அறுப்புத் தொழிலுக்கு சென்ற குடும்பங்கள் இவ்வாறு மதம் மாற்றப்பட்டு அவர்களுக்கு அப்பகுதியில் சிறிய வீடுகளை அமைத்துக் கொடுத்த பள்ளிவாசலும் அமைக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தில் கூடுதலான மக்கள் வறுமைக் கோட்டி…
-
- 32 replies
- 4.6k views
-
-
நவம்பர் 11, 2013 இந்திய பிரதமர் மன்மோகன் சிங் இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்துக் கொள்ளாமையானது, வருத்தமளிக்கின்ற விடயம் இல்லை என்று, இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல இதனைத் தெரிவித்துள்ளார். மன்மோகன் சிங் இந்த மாநாட்டில் கலந்துக் கொள்ள மாட்டார் என்பதை ஜனாதிபதிக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். எனினும் இது வருத்தப்பட கூடிய விடயம் இல்லை. இலங்கை மொத்தமாக 51 நாடுகளின் அரச தலைவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது. அவர்களில் ஒருவர் அல்லது இருவர் கலந்துக் கொள்ளவில்லை என்பதால் எந்த நட்டமும் ஏற்படப்போவதில்லை என்றும் அமைச்சர் கெஹெலிய தெரிவித்துள்ளார். http://www.pathivu.com/news/28029/57//d,article_full.aspx
-
- 2 replies
- 558 views
-
-
2014 ஆம் ஆண்டுக்கான வடக்கு மாகாண சபையின் செலவீனங்களுக்கான நிதிக்கூற்று வடக்கு முதலமைச்சரினால் முன்வைக்கப்பட்டது. வடக்கு மாகாண சபையின் முதலாவது அமர்வுகள் இன்று நடைபெற்ற போதே முதலமைச்சர் இதனை முன்வைத்தார். அதன்படி முதலமைச்சர் வெளியிடுகையில், 2014ஆம் ஆண்டின் வடக்கு மாகாண சபை செலவீனங்களுக்காக மத்திய அரசிடம் இருந்து தொகுதிக் கொடையாக 11ஆயிரத்து 500 மில்லியன் ரூபாவும், மத்திய அரசிடமிருந்து 1750 மில்லியன் ரூபாவும்,மாகாண சபையிடமிருந்து 400 மில்லியன் ரூபா கிடைக்கும் என நிதி ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மூலதன செலவிற்காக 1315 மில்லியன் ரூபாவும் பிரமான அடிப்படையிலான கொடை 280 மில்லியன் ரூபாவும் மாகாணத்திற்கு குறித்து ஓதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடைக்கு 1035 மில…
-
- 1 reply
- 543 views
-
-
நவம்பர் 11, 2013 வடமாகாண சபையின் இரண்டாவது அமர்வு நடைபெற்றுக்கொண்டிருந்த வேளை பேரவைச்செயலகத்திற்கு முன்னால் யாழ்.மாவட்ட தொண்டர் ஆசிரியர்கள் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.அவ்வேளையினில் உள்ளே வடக்கின் ஆளுநர் சந்திரசிறி தனது உரையினை ஆற்றிக்கொண்டிருந்தார். யாழ். மாவட்டத்தை சேர்ந்த தொண்டர் ஆசிரியர்கள் தமக்கு நிரந்தர நியமனத்தை வழங்குமாறு கோரியே இக்கவனயீர்ப்புப்போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். இந்த போராட்டத்தில் யாழ்.மாவட்டத்தை சேர்ந்த இருநூறிற்கும் அதிகமான தொண்டர் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.தற்போதுள்ள தொண்டர் ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கி எதிர்வரும் காலங்களில் தொண்டர் ஆசிரியர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். கடந்த கால அரசியல் பழிவாங்…
-
- 0 replies
- 510 views
-
-
தமிழர் தாயகப் பகுதியில் சிறிலங்கா அரசாங்கம் நடத்திய தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில் சிறிலங்கா அரசியலமைப்பிற்குட்பட்ட வடமாகாண சபையின் முதலாவது அமர்வு இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறியின் உரை நிகழ்ந்தினார். ஆளுநரின் உரையை எதிர்த்து அனந்தி சசிதரன், சிவாஜிலிங்கம், சுகிர்தன் ஆகிய மூன்று மாகாண சபை உறுப்பினர்கள் சபையில் இருந்து இன்று வெளிநடப்பு செய்தனர். ஆளுநரின் உரைக்கு எதிர்ப்பை வெளியிட்டு தானும் மேலும் இரண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களும் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தாக அனந்தி சசிதரன் கூறினார். சந்திரசிறி இர…
-
- 3 replies
- 828 views
-
-
நவம்பர் 11, 2013 தமிழ்தேசம் அங்கிகரிக்கப்படவேண்டும் அதற்காக தமிழக மக்கள் எழுச்சிகொள்ளவேண்டும் ஈழத்தமிழர்களுக்காக குரல்கொடுக்கவேண்டும் தமிழகம் ஈழத்தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கவேண்டும் அதனை உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம் என அழைப்பு விடுத்துள்ளார் செ.கஜேந்திரன். தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரான அவர் தமிழகத்தின் முள்ளிவாய்க்கால் நினைவு முற்ற பாலச்சந்திரன் அரங்கில் இறுதிநாள் நிகழ்வான பன்னாட்டவர் அரங்கில் ஆற்றிய உரையினில் மேலும் தெரிவிக்கையினில்: இந்தியாவின் உண்மையான நட்புசக்தியாக ஈழத்தமிழர்கள் என்றும் இருப்பார்கள்!!! இன்று முள்ளிவாய்க்காலில் போர் நடந்ததா என்று கேட்கும் அளவிற்கு சிறீலங்கா அரசு அந்த இடத்தினை மாற்றிவிட்டார்கள் மறைத்து விட்டார்கள் இன…
-
- 0 replies
- 321 views
-
-
வடமாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி மாற்றுவதற்கான தீர்மானம் ஒன்று வட மாகாண சபையில் நிறைவேற்றப்பட்டதாக செய்திகள் உண்மை இல்லையென வட மாகாண அவைத் தலைவர் சி.வீ.கே சிவஞானம் தெரிவித்துள்ளார். எனினும், வட மாகாண சபைக்கு நியமிக்கப்படும் ஆளுநரின் தகைமைகள் அல்லது அவர் குறித்து கவனிக்கப்பட வேண்டிய உள்ளீடுகள் குறித்து முன்மொழியப்பட்ட யோசனைகளுக்கமையவே இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அவர் தெரிவித்தார். அத்துடன், இந்தத் தீர்மானத்தில் தற்போதைய ஆளுநரின் பெயரோ, அவரை மாற்ற வேண்டும் என்றோ குறிப்பிடப்படவில்லை எனவும் சி.வீ.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் இரண்டாவது அமர்வு நேற்று திங்கட்கிழமை கைதடியில் உள்ள உத்தியோகபூர்வ அலுவலகத்தில் நடைபெற்றபோதே இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு…
-
- 0 replies
- 743 views
-
-
தமிழர் பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த வெளிநாட்டு எம்.பி.க்களை கைது செய்த இலங்கை அரசு! இலங்கையில் தமிழர் பகுதிகளை பார்வையிட்டு உண்மை நிலை குறித்து ஆய்வு செய்ய முயன்ற ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் தடுத்து வைக்கப்பட்டனர். ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் லீ ரைனோன் மற்றும் நியூஸிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஜான் லொகீ ஆகிய இருவருமே இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டனர். ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து நாடுகளின் பிரதமர்கள் பங்கேற்கும் காமன்வெல்த் மாநாடு இலங்கையில் தொடங்கியுள்ள இந்த நேரத்தில் சிங்கள அரசின் இந்த கைது நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தியது. விசா சட்டத்தை மீறி கொழும்பில் ஊடகவியலாளர் மாநாட்டை நடத்துவதற்கு முயன்றனர் என்ற குற்றச்சா…
-
- 19 replies
- 2.9k views
-
-
வலிவடக்கு பிரதேசத்தில் பொது மக்களின் மீள்குடியமர்வை வலியுறுத்தியும் தற்போது நடைபெறும் வீடழிப்பை தடுத்து நிறுத்த கோரியும் நாளை முதல் இடம்பெறவுள்ள தொடர் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்துக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போராட்டத்தில் பொதுமக்களை பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறும் வலிவடக்கு மீள்குடியேற்ற குழு தலைவரும் வலிவடக்கு பிரதேச சபை உபதவிசாளருமான சண்முகலிங்கம் சஜீவன் அழைப்பு விடுத்துள்ளார். வலிகாமம் வடக்கில் 24 கிராம சேவகர்பிரிவுகளை சேர்ந்த முப்பதாயிரத்துக்கும் அதிகமான பொதுமக்களுடைய காணிகள் வீடுகள் வர்த்தக நிறுவனங்கள் என உள்ளன இவற்றை மீளவும் பொதுமக்களுக்ககு வழங்கி மக்களின் இயல்பு வாழ்வுக்கு அனுமதிக்க இலங்கை அரசை வலியுறுத்தி 1…
-
- 3 replies
- 479 views
-