ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143501 topics in this forum
-
கூட்டமைப்பு மீது சிறிலங்கா அரசு கடும் அதிருப்தி – கறைபடிந்த வரலாற்றைக் கொண்டவர்களாம் [ திங்கட்கிழமை, 28 ஒக்ரோபர் 2013, 01:11 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] கொழும்பில் நடக்கவுள்ள கொமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிக்க, தமிழ் தேசியக் கூட்டமைப்பு எடுத்துள்ள முடிவு, சிறிலங்கா அரசாங்கத்துக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கருத்து கருத்து வெளியிட்டுள்ள, சிறிலங்கா அமைச்சர், தினேஸ் குணவர்தன, கொமன்வெல்த் மாநாடு, நெருங்கும் நேரத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எடுத்துள்ள முடிவு தவறானது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒரு பகுதியினர், அன்று தொடக்கம் தாய்நாடுக்கும் மக்களுக்கும் எதிராக செயற்பட்டு வருகின்றனர். 53 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கவுள்ள, கொமன்வெல்…
-
- 0 replies
- 434 views
-
-
தமிழைப் பாதுகாக்க வேண்டிய காலத்தில் உள்ளோம்: முன்னாள் அரச அதிபர் இராசநயாகம்:- 28 அக்டோபர் 2013 குளோபல் தமிழ்ச் செய்திகளின் விசேட செய்தியாளர் தமிழைப் பாதுகாக்க வேண்டிய காலத்தில் உள்ளதாக முன்னாள் அரச அதிபரும் மகோதேவ சைவச் சிறுவர் இல்லத்தின்; (குருகுலம்) தலைவருமான தி. இராசநாயகம் தெரிவித்தார். கடந்த கால நிகழ்வுகள் மாத்திரமின்றி நிகழ்கால நிகழ்வுகளும் இந்தத் தேவைiயை வலியுறுத்தி நிற்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கிளிநொச்சியில் ஜெயந்தி நகரில் உள்ள குருகுலம் சிறுவர் இல்லத்தின் வளரும் 12 குழந்தைகளுக்கு தமிழ் முறைப்படி கொண்டாடப்பட்ட பிறந்தநாள் நிகழ்வில் தலமை தாங்கிப் பேசிய பொழுதே அவர் இவ்வாறு தெரிவித்தார். கிளிநொச்சி மாவடட்ட அரசாங்க அதிபராக இருந்த காலத்தில் அரச அலு…
-
- 0 replies
- 478 views
-
-
வடக்கில் சிவிலியன் ஒருவரே ஆளுனராக நியமிக்கப்பட வேண்டும் - ஐ.தே.க 28 அக்டோபர் 2013 வடக்கில் சிவிலியன் ஒருவரே ஆளுனராக நியமிக்க வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. இராணவத் தொடர்பு அற்றவர் ஒருவர் வடக்கில் ஆளுனராக நியமிக்கப்பட வேண்டியது அவசியமானது ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். சிவிலியன் ஒருவர் ஆளுனராக நியமிக்கப்பட வேண்டும் என்ற தமி;ழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கை நியாயமானது என அவர் சுட்டிக்காட்யுள்ளார். முன்னாள் இராணுவ அதிகாரியொருவர் ஆளுனராக நியமிக்கப்படுவதனை விரும்பவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். வட மாகாணத்தில் தமிழ் பேசும் காவல்துறை உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் ஏற்றுக் கொள…
-
- 0 replies
- 305 views
-
-
மண் டிப்பரில் பயணிக்கும் மக்கள் - குளோபல் தமிழ் செய்திகளின் விசேட செய்தியாளர் 28 அக்டோபர் 2013 கொழும்பு கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை நேற்று (27.10.13) திறந்து வைக்கப்பட்ட நிலையில் மண் டிப்பர்களில் பயணம் செய்யும் தமது வாழ்க்கையை கவனப்படுத்துமாறு முல்லைத்தீவு மக்கள் குளோபல் தமிழ் செய்திகளிடம் கேட்டுக்கொண்டதாக குளோபல் தமிழ் விசேட செய்தியாளர் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்டத்தில் மாங்குளத்திலிருந்து முல்லை நகரத்திற்கான பேரூந்துகள் மிகவும் குறைவாகவே செல்லுகின்றன. அவ்வப்போது செல்லும் வரும் பேரூந்துகளை எதிர்பார்த்தபடி நாள் முழுவதும் மக்கள் காத்திருப்பது தொடர் கதையாக நடந்து கொண்டிருக்கின்றது. மாங்குளம் சந்தியிலிருந்து ஒலுமடு, கரிபட்டமுறிப்பு, ஒட்டுசுட்டான், முள்ளியவளை …
-
- 0 replies
- 335 views
-
-
'தமிழ் மக்களின் ஆணையைப் பெற்ற நான் கூறி வருவதினை அரசாங்கம் கேட்கவேண்டிய தேவையிருக்கின்றது' 28 அக்டோபர் 2013 முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் 'தனிப்பட்ட ரீதியில் எனக்கும் ஆளுநருக்கும் எந்தவிதமான பிரச்சினையும் இல்லையென்பதனாலேயே நான் அவருடன் சிரித்துப்பழகி வருகின்றேன்' என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 'வடமாகாண ஆளுநருக்கு அளிக்கப்பட்டுள்ள சலுகைகள் வடமாகாண சபையை திறமையாக வழி நடத்துவதற்கு முட்டுக்கட்டையாக அமைந்துள்ளது' என்றும் அவர் தெரிவித்துள்ளார். நல்லூர் பிரதேச சபை வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை (27) நடைபெற்ற மாகாண சபை உறுப்பினர்களை கௌரவிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 'ஜனாதிபதியின்…
-
- 0 replies
- 376 views
-
-
விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளை, திருமலை மனித உரிமை அமைப்பின் தலைவர் அருட்தந்தை யோகேஸ்வரன் அடிகளார் இரகசியமாக சந்தித்துப் பேசியுள்ளதாக ''திவயின'' என்ற சிங்கள பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தற்போது புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அந்தப் பத்திரிகை செய்தி கூறுகிறது. இதுகுறித்து அந்தப் பத்திரிகை மேலும் தெரிவித்துள்ளதாவது, திருகோணமலை மனித உரிமை அமைப்பின் தலைவர் அருட்தந்தை யோகேஸ்வரன் அடிகளார், முன்னாள் விடுதலைப் புலி போராளிகளை இரகசியமாக சந்தித்துப் பேசியுள்ளனர். இந்த இரகசிய சந்திப்பு குறித்த அருட்தந்தையின் வீட்டில் நடந்துள்ளது. இந்தச் சந்திப்பு குறித்து புலனாய்வுப் பிரிவினர் தற்போது விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந்த நிலையில், பொது…
-
- 0 replies
- 1.1k views
-
-
யாழ்ப்பாணம், கொடிகாமம் பகுதியில் இளைஞன் ஒருவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். மனநலம் குன்றிய 25 வயது இளைஞனை மயானமொன்றுக்கு அழைத்துச் சென்று குறித்த நபர் பாலியல் வன்புணர்ந்துள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. சந்தேக நபரை பொலிஸார் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தத் தயாராகி வருகின்றனர்.
-
- 0 replies
- 532 views
-
-
சிறார் கடத்தல் தொடர்பான தகவல் ஒன்று தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு கிடைத்துள்ளது. 10, 11 மற்றும் 14 வயதுகளை உடைய ஆண் பிள்ளைகள் அவுஸ்திரேலியாவிலிருந்து மீண்டும் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட போதே இந்த தகவல் வெளியாகியுள்ளதாக அதிகாரசபையின் விசாரணை பிரிவு காவல்துறை அதிகாரி பீ.டபிளியு. போபிடியகொட தெரிவித்துள்ளார். சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியாவுக்கு சென்று பின்னர் நாடுகடத்தப்பட்ட சிலர் அண்மையில் தாயகம் திரும்பினர். அவர்களுள் குறித்த மூன்று சிறார்களும் இருந்துள்ளனர். பின்னர் கட்டுநாயக்க சர்வதேச வானூர்தி தள அதிகாரிகளினால் அவர்கள் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையிடம் ஒப்படைக்கப்பட்டனர். சிறார்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, அவர்கள் யாழ்ப்பாணத்த…
-
- 0 replies
- 486 views
-
-
அமெரிக்க இராஜாங்கத் திணைக்கத்தின் கடுமையான எச்சரிக்கை செய்தி ஒன்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவிடம், நேரடியாக கையளிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தெரிவித்துள்ளது. கடந்தவாரம், அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே சிசன் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் சிறப்புச் செய்தி ஒன்றுடன் அலரி மாளிகைக்குச் சென்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்தார். ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை சிறிலங்கா நிறுத்தத் தவறினால் பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அதில் எச்சரித்துள்ளது. ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. அதேவேளை, ஈரானுடன் சிறிலங்கா நெருக்கமான இராஜதந்திர உறவுகளை வைத்துள்ளது. அமெரிக்காவின் தடைக…
-
- 6 replies
- 893 views
-
-
வடக்குத் தேர்தலில் நான் தோல்வியுற்றமைக்கு சதித்திட்டமே காரணம்! - மன்னார் ஆயருக்கு ஆனந்தசங்கரி கடிதம்!! கடந்த மாதம் இடம்பெற்ற வடமாகாணசபைத் தேர்தலில் தான் தோல்வி அடைந்தமைக்கு மேற்கொள்ளப்பட்ட சதித்திட்டமே காரணம் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி குற்றம் சுமத்தியுள்ளார். வடமாகாணசபைத் தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்த ஆனந்தசங்கரி, மன்னார் ஆயர் வணக்கத்திற்குரிய இராயப்பு ஜோசப் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார். இக்கடிதத்தின் முழுமையான வடிவத்தை இங்கே தருகின்றோம் 'இனப்பிரச்சனைத் தீர்வுக்கு குறிப்பாக அதற்கு முன்னோடியாகிய தமிழ் மக்களின் ஒற்றுமை பற்றித் தாங்கள் எடுக்கும் பெருமுயற்சி சம்பந…
-
- 0 replies
- 542 views
-
-
கோத்தாபயவை கண்டிப்பாராம் - நாராயணசாமி 27 அக்டோபர் 2013 கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்காவிடில், இந்தியா தனிமைப்படுத்தப்படும் எனக் கூறிய இலங்கைத் தூதர் கரியவசத்துக்கு மத்திய இணை அமைச்சர் வி. நாராயணசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். குறிப்பாக இந்திய உள்விவகாரங்களில் தலையிட அவருக்கு எந்தவித உரிமையும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். தமிழகத்தின் காரைக்காலில் நேற்று (26.10.13) ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர் 'இலங்கை சிறையில் உள்ள காரைக்கால் மீனவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மீனவர் பிரச்னை தொடர்பாக அடுத்த வாரம் இந்தியாவுக்கு வரும் இலங்கை ஜனாதிபதியின் சகோதரர் கோத்தாபய ராஜபக்ஷவிடம் விரிவாக பேசப்படும். இலங்கை கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்ப…
-
- 0 replies
- 337 views
-
-
போர்க்குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒரு நாட்டில் சர்வதேச நாடுகள் கலந்துகொண்டு ஒரு மாநாட்டை நடத்துவது தவறு: 27 அக்டோபர் 2013 சுரேஷ் பிரேமச்சந்திரன் சர்வதேச ரீதியில் போர்க்குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒரு நாட்டில் சர்வதேச நாடுகள் கலந்துகொண்டு ஒரு மாநாட்டை நடத்துவது தவறானது. இந்தத் தவறை ஒருபோதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்வது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் 'கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புறக்கணிக்கவுள்ளது. யுத்தத்திற்குப் பின்னர் ஐக்கிய நாடுகள் சபைய…
-
- 0 replies
- 662 views
-
-
வட மாகாண ஆளுனரை அகற்றுமாறு TNA கோரவில்லை – கோத்தாபய 27 அக்டோபர் 2013 வட மாகாண ஆளுனர் மேஜனர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறியை பதவியிலிருந்து அகற்றுமாறு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உத்தியோகபூர்வமாக கோரவில்லை என பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். வட மாகாண ஆளுனர் பதவிக்கு சிவிலியன் ஒருவர் நியமிக்கப்பட வேண்டுமென பல தடவைகள் மாகாண முதலமச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆளுனர் பதவி குறித்து தீர்மானிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு மட்டுமே காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார். http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/98169/language/ta-IN/article.aspx
-
- 0 replies
- 508 views
-
-
மாவீரர் துயிலும் இல்லங்களை கோரும் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் கைது செய்யப்படுவர் 27 அக்டோபர் 2013 கோத்தாபய ராஜபக்ஸ மாவீரர் துயிலும் இல்லங்கள் அமைக்க்பபட வேண்டுமென கோரும் முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் கைது செய்யப்படுவர் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தடை செய்யப்பட்ட ஓர் பயங்கரவாத இயக்கமாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, புலிகளின் உயிரிழந்த போராளிகளுக்காக நினைவுத்தூபிகளை அமைப்பது சட்டத்திற்குப் புறம்பானது என அவர் குறிப்பிட்டுள்ளார். காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் தொடர்பில் வட மாகாணசபைக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டிய அவசியமில்…
-
- 0 replies
- 470 views
-
-
இராணுவத்திற்கான உணவு விநியோகம் செய்தமைக்கான பல மாத கொடுப்பனவு நிலுவையிலுள்ளதாக உணவு விநியோகம் செய்யும் குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இது பாரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாகவும் இந்த நிலை தொடருமானால் எதிர்காலத்தில் உணவு விநியோகத்தை நிறுத்த வேண்டி ஏற்படும் எனவும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து இராணுவத் தளபதிகளுக்கு குறித்த நிறுவனம் எழுத்துமூலம் அறிவித்துள்ளது. எவ்வாறாயினும், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அமைச்சராகவும், அவரது சகோதரர் கோதாபய ராஜபக்ஷ செயலாளராகவும் பதவி வகிக்கும் பாதுகாப்பு அமைச்சுக்கே வரவு செலவுத் திட்டத்தில் அதிக நிதி கடந்த வருடம் ஒதுக்கப்பட்டது. உணவு விநியோகம் செய்ததில், இராணுவத்திற்காக ஒரு வருட கால கொடுப்பனவும், கடற்படையினருக்கு 9 மாதகால கொட…
-
- 1 reply
- 690 views
-
-
இலங்கையில் 1980ம் ஆண்டு முதல் யுத்தம் முடிவடையும் காலப்பகுதி வரை வடக்கு , கிழக்கில் இடம்பெற்ற விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளால் படைகளைச் சேர்ந்த 28,158 பேர் உயிரிழந்திருப்பதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாவின் போது ஐ.தே.க. எம்.பி. புத்திக பத்திரன எழுப்பிய கேள்விக்கு அளித்த பதிலிலேயே இது தெரிவிக்கப்பட்டுள்ளது. 1980 ஆம் ஆண்டு தொடக்கம் யுத்தம் முடிவுக்கு வரும் வரை வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் இடம்பெற்ற புலிகளின் செயற்பாடுகளினால் முப்படைகளையும் சேர்ந்த 24,992 பேரும் பொலிஸ் படையில் 2,159 பேரும் விசேட அதிரடிப் படையில் 462 பேரும் சிவில் பாதுகாப்புப் படையில் 545 பேருமாக மொத்தம் 28,158 பேர் உயிரிழந்துள்…
-
- 2 replies
- 1.3k views
-
-
இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்சித் கலந்துக் கொள்வார் என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர் இந்திய தொலைகாட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த மாநாட்டில் இந்தியா கலந்துக் கொள்வதற்கு, தமிழ்நாட்டில் எதிர்ப்புகள் வெளியிடப்படுகின்ற போதும், இந்தியாவை தாம் பிரதிநிதித்துவப்படுத்தவிருப்பதாக சல்மான் குர்சித் தெரிவித்துள்ளார். எனினும் இந்த மாநாட்டுக்கான இந்தியாவின் குழு, யாரின் தலைமையில் இலங்கை வரும் என்பது இன்னும் உறுதியாகவில்லை. இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன் சிங் அல்லது துணை ஜனாதிபதி ஹமிட் அன்சாரி ஆகிய மூவரில் ஒருவர் இந்த குழுவுக்கு தலைமை தாங்குவார் என்று எதிர…
-
- 1 reply
- 662 views
-
-
இலங்கையில் குண்டுகள் வெடிப்பது நிறுத்தப்பட்டுள்ளபோது ஜெனிவாவில் வெடிக்கத் தொடங்கியுள்ளதாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். கொழும்பு - கட்டுநாயக்கா அதிவேக நெடுஞ்சாலையை திறந்து வைத்து அங்கு பேசும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். ஜனாதிபதி மேலும் பேசுகையில், 2009ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பின்னர் நாட்டில் ஒரு குண்டு வெடிப்பு சம்பவமோ, பயங்கரவாத செயலோ இடம்பெறவில்லை. ஆனால் இது பற்றி யாரும் கதைப்பதில்லை. இதன்காரணமாக இந்த சம்பவங்களை மக்கள் மறக்கின்றார்கள். அதுவும் நன்மைக்குத் தான். 30 வருடகாலம் யுத்ததால் பாதிக்கப்பட்ட நாட்டை 3 வருடத்தில் அபிவிருத்தி என்ற சவாலை ஏற்றுக் கொண்டோம். அதனை வெற்றிகரமாக செயற்படுத்தி வருகிறோம். உலகில் வேற எந்த நாட்டிலும் இப்படியான அபிவிருத்தி இடம்பெற்றிரு…
-
- 2 replies
- 477 views
-
-
கொழும்பில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்து கொள்ளாதபோதும், இந்த மாநாட்டில் பங்குகொள்ள வருகை தரும் வெளிநாட்டுத் தலைவர்களை அது பிரத்தியேகமாகச் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளது. இந்தப் பேச்சின்போது இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள், இறுதிப்போர்க் குற்றங்கள் ஆகியன தொடர்பில் சர்வதேச விசாரணையை வலியுறுத்துவதுடன், இவை தொடர்பில் ஆவணம் ஒன்றையும் கூட்டமைப்பு அந்தத் தலைவர்களிடம் கையளிக்கவுள்ளது என்று அதன் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சித் தலைவர்களின் கூட்டம் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை யாழ். பொதுநூலகத்தில் இடம்பெற்றது. இதன்போது அடுத்த மாதம் கொழும்பில் இடம்…
-
- 0 replies
- 248 views
-
-
நாட்டின் அடுத்த பிரதான எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே பிரதிநிதித்துவம் செய்யும் என அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் கருத்துரைத்த அமைச்சர் ''ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் சிலர் விரட்டுவதற்கு முயற்சிக்கின்றனர். சிலர் அவரைக் காப்பாற்ற முயற்சிக்கின்றனர். அந்தத் தலைவரை விரட்ட முயற்சித்தாலும், காப்பாற்ற முயற்சித்தாலும் அந்தத் தலைவர் எவ்விதப் பிரயோசனமும் அற்றவர். இன்னும் குறிப்பிட்ட காலத்திற்கு எதிர்க்கட்சிக்கு நல்லதொரு தவைலர் உருவாகப் போவதில்லை. எதிர்க்கட்சியின் அதிகாரம் ஐக்கிய தேசியக் கட்சியிடமிருந்து கைநழுவிச் சென்றுகொண்டிருக்கிறது. எதிர்காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து எதிர்க்கட்சித் தலைவர் உருவாகும் நிலை…
-
- 4 replies
- 1.1k views
-
-
"என் தலைவன் பிரபாகரனையே கொன்று விட்டனர். இனிமேல் காமன்வெல்த் மாநாட்டில் இலங்கைத் தமிழர்கள் பிரச்சினை பற்றி பேசி என்ன நடக்கப் போகிறது" என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் நேற்று (26.10.13) விஜயகாந்த்தை ஊடகவியலாளர்கள் சந்தித்தனர். அதன்போது இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாடு தொடர்பாக கேள்வி எழுப்பினர். கேள்வி - காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதே? பதில் - நான் என்ன சொல்ல வேண்டும். கனடா கலந்து கொள்ளாது. ஆனால் அந்நாட்டு பிரதிநிதி பங்கேற்பார் என்றும், இலங்கை தமிழர்களுக்கு நடந்த கொடுமைக்கு எதிர்ப்பை பதிவு செய்வார் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் தற்போது பேசி என்ன …
-
- 1 reply
- 802 views
-
-
இந்திய பிரதமர் மன்மோகன் சிங், பொதுநலவாய நாடுகள் அரச தலைவர்கள் மாநாட்டின் ஆரம்ப நிகழ்வுகளில் மட்டும் பங்கேற்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது, எதிர்வரும் நவம்பர் மாதம் 15ம் திகதி பொதுநலவாய நாடுகள் அரச தலைவர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. மாநாட்டின் பிரதான ஆரம்ப நிகழ்வுகளில் மட்டும் பங்கேற்கத் திட்டமிட்டுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலய தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, பிரதமரின் விஜயம் ஒரு நாளுக்கு வரையறுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், பிரதமர் மாநாட்டில் பங்கேற்பாரா இல்லையா என்பது குறித்து உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. http://www.seithy.com/breifNews.php?newsID=95867&category=TamilNews&la…
-
- 0 replies
- 184 views
-
-
-
வடக்கு தமிழர்களை பொலிஸில் இணைத்துக்கொள்ள முடியாது - பொலிஸ் பேச்சாளர் [sunday, 2013-10-27 08:14:39] இலங்கை அரசியலமைப்பின் 13-ம் திருத்தப்படி மாகாணசபைகளுக்கு காவல்துறை அதிகாரங்கள் உள்ளன. ஆனால் அவற்றை மாகாணசபைகளுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் இன்னும் முன்வரவில்லை. இந்நிலையில், வடக்கு மாகாணத்தின் முதலாவது முதலமைச்சராக பதவியேற்றுள்ள சி.வி. விக்னேஸ்வரன், வடக்கு பிராந்திய மக்களின் மொழியையும் கலை, கலாசார, வாழ்க்கை முறையையும் புரியாத காவல்துறையினர் தொடர்ந்தும் அங்கு இருப்பது, அங்கு ஜனநாயகம் ஏற்பட தடையாக இருப்பதாக வெள்ளிக்கிழமை கூறியிருந்தார். உள்ளூரில் உள்ள இளைஞர்களுக்கு பயிற்சியளித்து காவல்துறையில் சேர்த்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் அவர் தெரிவித்திருந்தார். …
-
- 2 replies
- 510 views
-
-
இலங்கை பொதுநலவாய மாநாட்டில் 13 நாடுகளே பங்கேற்பு [saturday, 2013-10-26 16:20:23] கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் உச்சி மாநாட்டில் பங்கேற்பதாக இதுவரை 13 நாடுகளின் தலைவர்களே உத்தியோகபூர்வமாக உறுதியளித்திருப்பதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன. பொதுநலவாய நாடுகள் அமைப்பில் 53 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இவற்றில் 32 நாடுகள் சிறிய நாடுகளாகும். இலங்கைக்கு அருகில் இருக்கும் மிகப் பெரிய பொதுநலவாய நாடான இந்தியாவின் அரச தலைவர் மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டார் என இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ள நாடுகளில் பிரதான நாடுகளில் ஒன்றாக இருக்கும் இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில…
-
- 0 replies
- 428 views
-