ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143499 topics in this forum
-
மட்டக்களப்பு மரப்பாலம் கிராமத்தைச்சேர்ந்த தமிழ் யுவதி ஒருவருடன் காதல் கொண்டிருந்த முஸ்லீம் ஆசிரியர் ஒருவருக்கு இன்று இந்துமத முறைப்படி ஊரவர்களால் திருமணம் செய்துவைக்கப்பட்டுள்ளது. ஏறாவூர் 1ம் குறிச்சியில் வசிக்கும் புகாரி முகமது நஜீம் லாபீர் கான்(28வயது) என்ற முஸ்லீம் ஆசிரியருக்கும் மரப்பாலத்தைச் சேர்ந்த நல்லதம்பி சாந்தி(23வயது) என்ற பெண்னுக்கும் இன்று ஏறாவூர் 4ம் குறிச்சி ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தில் இந்துமத முறைப்படி திருமணம் செய்து வைக்கப்பட்டது. குறித்த முஸ்லீம் ஆசிரியர் இந்துமதத்தை தழுவிக்கொண்டதோடு அவர் தனது பெயரை சிவக்காந்தன் எனவும் மாற்றிக்கொண்டுள்ளார். இவருக்கு செங்கலடி வர்த்தக சங்கத் தலைவர் அவர்களின் தலமையில் பதிவாளர் திருமதி.கமலேஸ்வரி தம்பிராஜா அவர்களினால் பதிவ…
-
- 14 replies
- 1.5k views
-
-
அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் - யாழ். ஆயர் சந்தித்து பேச்சு (படங்கள்) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் ரொபின் மூடி யாழ். ஆயர் தோமஸ் சௌந்தரநாயகத்தை சந்தித்து கலந்துரையாடினார். எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள வடக்கு மாகாண சபை தேர்தல் நிலவரங்கள் பற்றி ரொபின் மூடி பல்வேறு தரப்பினரை சந்தித்து கலந்துரையாடி உள்ளார் முன்னதாக யாழ். மாவட்ட செயலகத்தில் யாழ். மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் அச்சுதன் மற்றும் அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் ஆகியோருடன் சந்தித்து கலந்துரையாடியுள்ளார் அதனை தொடர்ந்து நேற்று (10) மாலை யாழ். ஆயர் இல்லத்தில் ஆயரை சந்தித்து கலந்துரையாடினார் அதன் பின்னர் ஜக்கிய தேசிய கட்சியின் வடமாகாண சபை முதன்மை வேட்பாளரான தியாகராஜா…
-
- 0 replies
- 452 views
-
-
வட பகுதி மக்களின் உண்மையான உணர்வுகள்..!
-
- 0 replies
- 484 views
-
-
கடவுச் சீட்டில் விரல் அடையாள முறையை அறிமுகப்படுத்த சிறீலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 679.7 மில்லியன் ரூபா செலவில் இந்த புதிய முறை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் 629.7 மில்லியன் ரூபா நிதி உதவி வழங்கியுள்ளது. குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தினூடாக இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படும். http://www.sankathi24.com/news/33049/64//d,fullart.aspx
-
- 0 replies
- 390 views
-
-
தமிழ் மக்களுக்கு நீதி வேண்டி ஜெனிவாவில் கடந்த 5 ஆம் திகதி தீக்குளித்து தியாக மரணத்தைத் தழுவிக்கொண்ட இரட்ணசிங்கம் செந்தில்குமரனுக்கு யாழ்.மாவட்ட தமிழ் மக்கள் பேரவை தமது வீர வணக்கத்தைத் தெரிவித்துள்ளது. தமிழீழத்துக்காக போராடிய தியாகச் செம்மல்களின் வரிசையில் செந்தில்குமரனும் தனது பெயரைப் பதித்துக்கொண்டுள்ளார். இவரது சாவு சாதாரணமானதல்ல. அசாத்தியமான துணிச்சல் நிறைந்தவர்களே இந்த தியாகத்தை மேற்கொள்ள முடியும் என்றும் யாழ்.மாவட்ட தமிழ் மக்கள் பேரவை தெரிவித்துள்ளது. செந்தில்குமரனுக்கு வீர வணக்கத்தை தெரிவிக்கின்ற அதேவேளை அவரை இந்து துயரத்தில் வாடுகின்ற அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர், நண்பர்களின் துயரத்தில் தாங்களும் பங்கெடுத்துக்கொள்வதாகவும் மேற்படி பேரவை தெரிவித்துள்ளது. ஆன…
-
- 1 reply
- 548 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் இல்லை. அவர்கள் தமிழ் இனத்தின் விடுதலைக்காக போராட்டிய புனிதர்கள் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதி எளிலனின் மனைவியும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் வடக்குமாகாணசபைத் வேட்பாளருமான ஆனந்தி தெரிவித்தார். தமிழ் தேசிக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் போற்க்குற்றச்சாட்டுகளை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று கூறிப்பிட்டிருக்கும் விடையத்திற்கு நாம் முற்றாக எதிர்ப்புத் தெரிவிக்கின்றேன் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடைய் தொடர்பாக அவர் மேலும் தெரிவி…
-
- 1 reply
- 551 views
-
-
இலங்கையில் ஐ.நா ஆணையாளரைச் சந்திதித்தவர்கள் அச்சுறுத்தப்பட்ட விவகாரம் ஆதாரமற்ற குற்றசாட்டென தெரிவித்துள்ள ஜெனிவாவுக்கான சிறிலங்கா பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க, புலம்பெயர் தமிழ் பிரிவினைவாத சக்திகளின் குற்றச்சாட்டே அதுவென மறைமுகமாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மீது பாயந்துள்ளார். ஐ.நா ஆணையாளர் நவநீதம்பிள்ளை அம்மையாரது இலங்கைத்தீவுக்கான பயணத்தின் போது, முள்ளிவாய்க்கால் பகுதியில் அம்மையாரைச் சந்தித்தவர்கள் மீதான சிறிலங்கா படையினரின் அச்சுறுத்தல் விவகாரத்தினை, ஆதாரபூர்வமாக ஐ.நா ஆணையாளரின் உடனடிக் கவனத்திற்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கொண்டு சென்றிருந்ததோடு, இவ்விவகாரத்தினை அனைத்துலக வெளியில் அம்பலப்படுத்தியிருந்தது. http://fema.einnews.com/pr_news/165269527/t…
-
- 0 replies
- 1k views
-
-
இலங்கையில் நடக்கவிருக்கும் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் இலங்கை இராணுவம் ஆளும் கட்சிக்கு ஆதரவாக தலையிடுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. இலங்கை இராணுவம் இது தொடர்பாக அந்தக் கட்சியின் தலைவரான இரா. சம்பந்தன் அவர்கள் இலங்கை ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதேவேளை வடமாகாண தேர்தலில் இராணுவ தலையீடுகள் இருப்பதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ரல் அமைப்பும் கூறியுள்ளது. ஆனால், இதனை இலங்கை இராணுவம் மறுத்துள்ளது. இலங்கையின் வடமாகாண தேர்தலிலோ அல்லது வேறு எந்த தேர்தலிலோ இலங்கையின் முப்படைகளுக்கு எந்தவிதமான சம்பந்தமும் கிடையாது என்றும் இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்றும் இலங்கை இராணுவத்தின் சார்பில் பேசவல அதிகாரி கூறியுள்ளார். http://www.bbc.co.uk/ta…
-
- 0 replies
- 235 views
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் கந்தையா சிவநேசனின் ஆதரவாளர்கள் முல்லைத்தீவு சேடமடு மற்றும் வசந்தபுரம் பகுதியில் தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டுவிட்டு திரும்பிக் கொண்டிருக்கையில் இராணுவத்தினர் அவர்களை மிரட்டியுள்ளதாக குளோபல் தமிழ் செய்தியாளர் தெரிவிக்கிறார். குறித்த கிராமங்களுக்கு தேர்தல் பிரசாரத்திற்கு சென்றபின் கற்சிலைமடுச் சந்தியில் இருந்து தேனீர் அருந்திய ஆதரவாளர்களை இராணுவத்தினர் அழைத்துள்ளனர். அப்பொழுது அவர்களின் பெயர் விபரங்கள் விசாரித்ததுடன் அடையாள அட்டையும் வாங்க முற்பட்டுள்ளனர். இதன்பொழுது சிங்களத்தில் ஒரு ஆதரவாளர் விளக்கமளிக்க முற்ப்ட்ட பொழுது உனக்கு எப்படிச் சிங்களம் தெரியும் எனவும் இராணுவம் மிரட்டியுள்ளனர். தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட தம்மை குற்…
-
- 0 replies
- 232 views
-
-
த.தே.கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை - ஒரு வரலாற்று ஆவணம் [ செவ்வாய்க்கிழமை, 10 செப்ரெம்பர் 2013, 11:56 GMT ] [ நித்தியபாரதி ] தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கையானது கொழும்பைத் தளமாகக் கொண்டியங்கும் ஆய்வாளர்களுக்கான ஆவணம் அல்ல. இது வேட்டையாடப்பட்ட, பாதிக்கப்பட்ட, அவமானப்பட்ட, பட்டினியால் வாடிய, விமானக் குண்டுகளால் அழிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான ஆவணம். இவ்வாறு Colombo Telegraph ஊடகத்தில் மனிதஉரிமை செயற்பாட்டாளரும் ஆய்வாளருமான Dr. Paul Newman எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. கடந்த வாரம் உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்கள், தமது எதிர்காலத்தில் நேரடியாக அல்லது மறைமுகமாக தாக்கத்தை விளைவிக்கக்…
-
- 0 replies
- 532 views
-
-
பயங்கரவாதத்தை அழிப்பதற்கு இந்தியா உதவி செய்தது - புலிகளை நாமே அழித்தோம் வாசுதேவ 10 செப்டம்பர் 2013 இலங்கையில் பயங்கரவாதத்தை அழிப்பதற்கு இந்தியா உதவி செய்தது ராஜீவ் காந்தியை கொலை செய்த விடுதலை புலிகளை நாமே ஒழித்தோம் எனவே இரு நாட்டு உறவை தமிழ் நாட்டு அரசியல்வாதிகளால் இல்லாது செய்து விட முடியாது என்று சமூக, ஒருமைப்பாடு மற்றும் தேசிய மொழிகள் தொடர்பான அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். தமிழ் நாட்டில் உள்ள மக்கள் செல்வாக்கற்ற அரசியல் கட்சிகளே இரு நாடுகளுக்கு இடையேயும் மோதல்களை ஏற்படுத்த முயற்சிக்கின்றன என்றும் அமைச்சர் குற்றம் சாட்டினார். இலங்கையுடனான நல்லுறவை முறித்துக் கொள்ள வேண்டுமென புதிய கம்யூனிஸ்ட் கட்சி கூறவில்…
-
- 0 replies
- 371 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளில் பாயும் வரிப்புலிச் சின்னத்தைப் பார்த்தாலே எனக்கு பயம் என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஒத்துக் கொண்டுள்ளார். இன்று காலை 9 மணியளவில் யாழ்ப்பாணத்தில் உள்ள கிறீன் கிராஸ் விடுதியில் வடக்குமாகாணசபைத் தேர்தல் கால நிலவரங்கள் தொடர்பாக ஊடகவியலாளர்களைச் சந்தித்துக் காலந்துரையாடும் போதே அவர் மேற்கண்டவாறு தனது அனுபவத்தினைத் தெரிவித்துள்ளார். இவ்விடையம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில். கடந்த 2010 ஆம் ஆண்டு வவுனியாவில் கதிர்காம முகாமிற்குச் சென்றிருந்தேன். அங்கு என்னிடம் ஒரு வயதுபோன தாய் ஓடி வந்திருந்தார். அவர் தன்னுடைய பெருந்தொகையான தங்கம் வன்னிப் பகுதியில் உள்ளது அதனை மீட்டுத்தாருங்கள் என்று கேட்டிருந்தார். வன்னியில் எங்கு உள்ளது எ…
-
- 1 reply
- 566 views
-
-
வடக்கு மாகாண சபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து முகப்புத்தகத்தினூடாகவும் பல்வேறு இணையத்தளங்களுடாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மீது பலத்த விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. தமிழர்கள் விடிவு பெற்று வாழ வேண்டும் என்ற வேணவா கொண்ட பலர் கூட இந்த விமர்சனத் தாக்குதலில் குதித்திருப்பதைக் காணக் கூடியதாக இருக்கிறது. தமிழ் தேசியக் கூட்டமைப்புக் குறித்த பல விமர்சனங்கள் பலருக்கும் இருக்கின்ற போதிலும் தேர்தல் நேரத்தில் இத்தகைய விமர்னங்களை முன்வைப்பதன் மூலம் என்ன பலனை அடைடய முடியும்? தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கெதிரான கருத்துக்களை விதைப்பதன் மூலம் அதன் எதிராளிகளான அரசு+ஒ. குழுக்களுக்கு ஆதரவான வகையில் காய் நகர்த்தப்படுவதை விடுத்து வேறென்ன …
-
- 10 replies
- 866 views
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தலைமையிலான அரசியல் கூட்டமைப்பினருக்கும் இடையில் 2013.09.21ம் திகதியில் நடைபெறவுள்ள வடக்கு மாகாணசபை தேர்தலை முன்னிட்டு நேற்று திங்கட்கிழமை மாலை (09.09.2013) மன்னாரில் வைத்து புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டது. எட்டு அம்சங்கள் உள்ளடங்கிய மேற்படி புரிந்துணர்வு உடன்படிக்கையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாக அதன் பொதுச்செயலாளர் திரு. மாவை.சோ. சேனாதிராஜா (பா.உ) அவர்களும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தலைமையிலான கூட்டமைப்பு சார்பாக அதன் மத்திய நிறைவேற்றுக் குழுவின் தலைவர் அஷ்ஷெய்க். எம்.பி.எம்.பிர்தௌஸ் (நளீமி) அவர்களும் கையொப்பமிட்டனர். மேற்படி புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நி…
-
- 0 replies
- 415 views
-
-
வடமாகாண சபைக்கான தமிழ் தேசிய கூட்டமைப்பின் மன்னார் மாவட்ட வேற்பாளர்களை ஆதரித்து நேற்று திங்கட்கிழமை மாலை மன்னார் நானாட்டான் கடைத்தொகுதியில் மாபெரும் பிரச்சாரக்கூட்டம் இடம் பெற்றது. நேற்று மாலை 4.30 மணியளவில் ஆரம்பமான குறித்த பிரச்சாரக்கூட்டத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும்,தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மன்னார் மாவட்ட வேட்பாளர்களுக்கும் நானாட்டான் மக்கள் அமோக ஆதரவை வழங்கி வரவேற்றனர். ஆரம்ப நிகழ்வாக ,மன்னார் மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிடும் 8 வேற்பாளர்களான வைத்திய கலாநிதி என்.குணசீலன், சட்டத்தரணி டெணிஸ்வரன், சட்டத்தரணி பிறிமுஸ் சிராய்வா, அயுப் அஸ்மி, சாள்ஸ் நிர்மலநாதன், விமலசேகரம், சிவகரன், யூட் ஆகியோர் அறிமுக உரையாற்றினர். இதனைத் தொடர்ந்து தமிழ் தேசியக்கூட்டமைப…
-
- 0 replies
- 386 views
-
-
சாவகச்சேரி மக்களை முட்டாள்களாக்க நினைத்த சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் மகிந்த ராஜபக்சவின் சகோதரருமான பசில் ராஜபக்ச தானே முட்டாளாகிக்கொண்ட சம்பவமொன்று நேற்று திங்கட்கிழமை நடைபெற்றுள்ளது. சாவகச்சேரியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திலேயே பசில் இந்த முட்டாள்தனத்தை அரங்கேற்றினார். அதாவது குறித்த கூட்டம் நடைபெற்ற ஏ-9 வீதியூடாக ஒரு மணித்தியாலத்தில் 280 வாகனங்கள் மட்டுமே சென்றதாகவும் அதில் ஒரு வாகனமும் படையினருடையது அல்ல என்றும் அவர் தெரிவித்து தனது முட்டாள்தனத்தை வெளிப்படுத்தினாhர். ஐக்கிய மக்கள் சுதந்திக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சார கூட்டம் நேற்று திங்கட்கிழமை சாவகச்சேரியில் நடைபெற்றது. அந்தக் கூட்டம் மாலை 6 மணிக்கு ஆரம்பமாகுவதாக இருந்தது. இதற்காக…
-
- 0 replies
- 500 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்திகளின் விசேட செய்தியாளர்... பாதுகாப்பு செயலாளாரை விமா்சித்தமையினால் வட்டரெக்க விஜித தேரா் பேராதனை கன்டி வீதியில் வைத்து தாக்கப்பட்டதாக தா்மத்தின் குரல் அமைப்பு கண்டத்துள்ளது. பொதுபலசேன தொடா்பாகவே அதிகளவு தேரா் விமா்சித்ததாகவும் அதனால் திட்டமிட்ட முறையில் தாக்குதல் நடத்தப்பட்டது என்றும் தா்மத்தின் குரல் அமைப்பு கூறியுள்ளது. கொழும்பில் இன்று முற்பகல் நடத்தப்பட்ட ஊடகயவியலாளா் மாநாட்டில் வட்டரெக்க விஜித தேரா் தாக்கப்பட்டமை குறித்தும் சமாகல அரசியல் செயற்பாடுகள் தொடா்பாகவும் தா்மத்தின் குரல் அமைப்பின் பிரதிநிதிகள் விளக்கமளித்தனா். பத்தேகம சமித்த தேரா், புத்தியாகம சிந்திராரத்ன தேரா், கொழும்பு கல்கலைக்கழ விரிவுரையாளா் சங்கத் தலைவா் கலாநிதி…
-
- 0 replies
- 433 views
-
-
தமிழர் பூமி இலங்கை என மத்திய இணை அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மத்திய இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் சென்னை விமான நிலையத்தில் அளித்த பேட்டி, இலங்கை தமிழர்களுக்கு சொந்தமான பூமி இலங்கை, தமிழர் பூமியான இலங்கையை கைப்பற்ற வேண்டும். தமிழீழக் கனவு நனவாக வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். இஸ்ரேல் ,பாலஸ்தீனம் போன்று இலங்கையில், தமிழர் பகுதியான இலங்கையை கைப்பற்ற வேண்டும். என்றார். http://www.seithy.com/breifNews.php?newsID=92435&category=IndianNews&language=tamil
-
- 22 replies
- 1.5k views
-
-
இலங்கையில் பயங்கரவாதத்தை அழிப்பதற்கு இந்தியா உதவி செய்தது ராஜீவ் காந்தியை கொலை செய்தவிடுதலை புலிகளை நாமே ஒழித்தோம் எனவே இரு நாட்டுஉறவை தமிழ் நாட்டு அரசியல்வாதிகளால் இல்லாது செய்துவிட முடியாது என்று சமூக, ஒருமைப்பாடு மற்றும் தேசியமொழிகள் தொடர்பான அமைச்சர் வாசுதேவ நாணயக்காரதெரிவித்தார். தமிழ் நாட்டில் உள்ள மக்கள் செல்வாக்கற்ற அரசியல் கட்சிகளே இரு நாடுகளுக்கு இடையேயும் மோதல்களை ஏற்படுத்த முயற்சிக்கின்றன என்றும் அமைச்சர் குற்றம் சாட்டினார். இலங்கையுடனான நல்லுறவை முறித்துக் கொள்ள வேண்டுமென புதிய கம்யூனிஸ்ட் கட்சி கூறவில்லை. அதன் தமிழ்நாட்டு மாநில செயலாளரான பாண்டியனே தெரிவித்துள்ளார். எனவே இது பெரிதாக எடுத்துக் கொள்ள வே…
-
- 1 reply
- 534 views
-
-
ஐக்கிய இராஜியத்தில் கார்டிஃப் நகர மைதானத்தில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் போது புலிக்கொடியுடன் ஓடிய சந்தேகநபரை இலங்கைக்கு கொண்டுவருவது பற்றி பிரித்தானிய பொலிஸாருடன் பேசிவருவதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை தெரிவித்தனர். இந்த வழக்கு விசாரணை கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் நேற்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டபோதே சி.ஐ.டியினர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அத்துடன் குறித்த சந்தேகநபரை மான்செஸ்டர் பொலிஸின் சர்வதேச குற்றச்செயல் கிளை தேடிவருவதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் கொழும்பு நீதவானிடம் அண்மையில் தெரிவித்திருந்தனர். சந்தேகநபரான லோகேஸ்வர்ன மணிமாறன் இன்னும் கைது செய்யப்படாது ம…
-
- 5 replies
- 801 views
-
-
"TNA மீண்டும் யுத்தப்பிரகடனம் என்கிறார் சம்பிக்க றணவக்க" வட மாகாண சபைத் தேர்தலுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன் வைத்துள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தின் ஊடாகஎம்மீது மீண்டும் யுத்தம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.அந்த யுத்தத்தை ஏற்றுக்கொள்ளவும் அதனை எதிர்கொள்ளவும் நாங்கள் தயாராகிவிட்டோம். பிரபாகரனுக்கே அச்சப்படாத நாங்கள் விக்கினேஸ்வரனுக்கு அச்சப்பட மாட்டோம் என்று சம்பிக்க றணவக்க தெரிவித்தார். எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முயற்சிகளைதோற்கடிக்க நாட்டு மக்களை இணைத்துக்கொண்டு களத்தில்இறங்க தயாராகிவிட்டோம் என்று ஜாதிக ஹெல உறுமயதெரிவித்துள்ளது. இவ்வளவு அழிவுகள் இடம்பெற்றபின்னர் கூட தமிழ்க் கூட்டமைப்பு மாற்றமடைய…
-
- 1 reply
- 622 views
-
-
யாழ்ப்பாணம், கே.கே.எஸ் வீதி, தட்டாதெரு சந்திக்கு அண்மையில் அமைக்கப்பட்டு வருகின்ற நல்லூர் கிறான்ஹோட்டல் எனும் பெயர் கொண்ட நான்கு நட்சத்திர ஹோட்டல் தொடர்பாக சுற்றாடலில் வசிக்கும் சிவில் சமூகத்தினர் தமது அதிர்ச்சியையும், வேதனையையும், வெளிப்படுத்துவதோடு இது தொடர்பாக அதிகாரிகள், கவனத்திற்கும் மக்கள் கவனத்திற்கும் பின்வரும் விடயங்களை முன்வைக்கின்றார்கள். • மக்களது ஒழுக்கம் கலாசாரம் தொடர்பானது. இப்பாரிய ஹோட்டல் நீச்சல் தடாகத்தை உள்ளடக்கிய நான்கு நட்;சத்திர ஹோட்டல் என்று அறியவருவதால் இதனுள் மதுபான சாலைகள், நீச்சல் தடாகங்கள் என்பன அமைய இருப்பதால் நெருக்கமான குடியிருப்பு உள்ள இப்பகுதியில் இதனை அமைப்பது பொருத்தமற்றது என மக்கள் கருதுகிறார்கள். இவ் அமைவிடத்திலிருந்து 100 யார் த…
-
- 0 replies
- 479 views
-
-
தமிழ் மக்கள் மத்தியில் சில எதிர்பார்ப்புக்களோடு நோக்கப்படும், ஜெனிவாவில் இன்று ஆரம்பமாகியுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையத்தின் 24ம் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக பிரித்தானியத் தமிழர் பேரவையின் மனித உரிமைக்கான குழுவொன்று ஜெனீவாவுக்கு நேற்றைய தினம் சென்றடைந்துள்ளது. கனடியன் தமிழ் காங்கிரஸ் (CTC ), ஐக்கிய அமெரிக்காவை சேர்ந்த தமிழ் அரசியல் நடவடிக்கை மன்றம் (USTPAC) ஆகிய தோழமை அமைப்புகளோடு இணைந்து பிரித்தானியத் தமிழ் பேரவையானது பல அரசியல் நுண் நகர்வுகளை செயற்படுத்தி வருகிறது. எதிர்வரும் 27ம் திகதி நிறைவு பெறவிருக்கும் இக் கூட்டத்தொடரில், அண்மையில் இலங்கை சென்று வந்துள்ள மனித உரிமை ஆணையத்தின் உயர் ஸ்தானிகர் நவிப் பிள்ளை அவர்கள் வாய் மூல அறிக்கை ஒன்றை சமர…
-
- 0 replies
- 463 views
-
-
இலங்கைத்தீவுக்கான ஐ.நா மனித உரிமைச் சபையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அவர்களது பயணத்தினை தொடர்ந்து நேற்று தொடங்கிய ஐ.நா மனித உரிமைச்சபையின் 24வதுகூட்டத் தொடர் தமிழர் பரப்பில் பெரும் எதிர்பார்ப்பினைத் தோற்றுவித்திருந்தது. திங்கட்கிழமை (09-09-2013) தொடங்கிய கூட்டத் தொடரில் தற்காலத்தில் அனைத்துலக அரசியல் அரங்கில் பேசுபொருளாகவுள்ள சிரியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளின் விவகாரமே பெரும்பாலான நாடுகளின் கவனத்தினை பெற்றிருந்தாலும், சிறிலங்கா விவகாரமும் அமெரிக்கா ஜேர்மனி ஒஸ்றியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தினால் முன்வைக்கப்பட்டுள்ளதென நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஐ.நா மனித உரிமைச் சபை விவகாரங்களுக்கான பிரதிநிதி சுகிந்தன் தெரிவித்துள்ளார். இலங்கைத்தீவுக்கான பயணம் குறித்த தனது கவனிப்பினை…
-
- 0 replies
- 262 views
-
-
தம்புள்ளையில் பத்திரகாளி அம்மன் சிலையை தகர்த்தவர்களை கண்டுபிடிக்க முடியாதது அரசாங்கத்திற்குப் பெரிய அவமானம் என நீதியமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் மன்னார் புதுக்குடியிருப்பு கிராமத்தில் நடைபெற்ற கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போது தெரிவித்தார். அந்த படுமோசமான செயலை மிகவும் வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் கூறினார். மன்னார், மாந்தை மற்றும் முசலி பிரதேசங்களில் நடைபெற்ற சில தேர்தல் பிரசார கூட்டங்களிலும் அமைச்சர் ஹக்கீம் இதுபற்றி பிரஸ்தாபித்தார். அமைச்சர் புதுக்குடியிருப்பில் உரையாற்றும் போது இதுபற்றி மேலும் தெரிவித்ததாவது, தம்புள்ளையில் சில தமிழ் குடும்பங்கள் நீண்ட காலமாக வசித்து வருகின்றன. அங்குள்ள கோயிலி…
-
- 0 replies
- 432 views
-