Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தென்னாசியாவுக்குப் பொறுப்பான பிரித்தானிய வெளிநாட்டமைச்சின் செயலக அமைச்சர் பாராளுமன்ற உறுப்பினர் அலிஸ்ரர் பேட் அவர்களுடன் அண்மையில் பிரித்தானிய தமிழர்கள் நடத்திய சந்திப்பின்போது, எதிர்வரும் நவம்பர் 2013ல் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் கலந்துகொள்வதையிட்டு தமது அதிருப்தியை வெளியிட்டனர். பிரித்தானிய தமிழர் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கூட்டத்தில,; பிரித்தானியாவில் உள்ள பல அமைப்புக்கள் கலந்து கொண்டு இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மகாநாட்டில் பிரித்தானியா கலந்து கொள்வது என்ற முடிவினை மீள்பரிசீலனை செய்யவேண்டும் என்று வலியுறுத்தினர். இலங்கையில் இந்த மகாநாடு நடைபெறுவதானது பொதுநலவாய மற்றும் இவ்வாண்டு மகாராணி…

    • 1 reply
    • 438 views
  2. எதிர்வரும் 21 ஆம் திகதி தமிழக மீனவர்கள் இலங்கையின் வடக்கு கடல் பகுதியை ஆக்கிரமித்தால், அது தமிழக மீன்பிடி தொழிலின் முடிவாக அமைந்து விடும் என மீன்பிடி மற்றும நீரியல்வள அமைச்சர் ராஜித சேனாரட்ன தமிழக மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இலங்கையின் கடல் எல்லையில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்களை விடுதலை செய்யவில்லை என்றால்,எதிர்வரும் 21 ஆம் திகதி ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீன்பிடி படகுகளில் வெள்ளை கொடியுடன் வந்து இலங்கை தஞ்சம் கோர போவதாக தமிழக மீனவர்கள் அண்மையில் தெரிவித்திருந்தனர். இதற்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார். தமிழக மீனவர்கள் இலங்கை கடலில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுவது தொடர்பாக இந்திய கடல் வள ஆணையகத்திடம் அறிவித்தால், மீ…

    • 1 reply
    • 518 views
  3. இலங்கையில் விழுந்த எரிகல்லில் உயிர். மெலதிக விபரங்களுக்கு.. http://rt.com/news/british-researchers-meteorite-fossils-167/

    • 2 replies
    • 1.7k views
  4. -எஸ்.கே.பிரசாத்,சுமித்தி தங்கராசா யுத்தக்காலத்தில் சரணடைந்து காணாமல் போன உறவுகளின் நலனிற்காகவே வடமாகாண சபைத் தேர்தலில் நான் போட்டியிடுகின்றேன் என்று நடைபெறவுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் எழிலனின் மனைவி அனந்தி தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். யுத்த காலத்தில் பலர் காணமல் போயியுள்ளனர். அவர்களுக்காகவும் தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலையையும் கருத்திக்கொண்டே நான் போட்டியிடுகி;றேன். பாதிக்கப்பட்டவர்கள் எனக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்வார்கள் எனற நம்பிக்கை எனக்கிருக்கிறது என்றார். கடந்த காலத்தில் காணாமல் போனவர்…

    • 1 reply
    • 563 views
  5. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க அடுத்தவாரம் இந்தியாவுக்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இவ்விஜயத்தின்போது அவர் இந்திய அரச அதிகாரிகள் சிலருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸிம் அடுத்த வாரம் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். அவர் இந்திய பிரதமர் மன்மோஹன் சிங்கிற்கு பொதுநலவாய தலைவர்களின் மாநாட்டுக்கான உத்தியோகபூர்வ அழைப்பினை வழங்கும் பொருட்டே அங்கு செல்கின்றமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/local.php?vid=6492

    • 1 reply
    • 337 views
  6. இந்தியாவுக்குள் ஊடுருவ, பாகிஸ்தான் சக்திகள் சில, சிறிலங்காவை தளமாகப் பயன்படுத்தி வருவதாக, இந்தியாவின் உள்ளகப் புலனாய்வு அமைப்பான ஐ.பி எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் ஐ.பி எச்சரித்துள்ளது. மேலும், லஷ்கர்-இ-தொய்பா, தெஹ்ரிக்-இ- தலிபான் மற்றும் விடுதலைப் புலிகளின் சக்திகள் இணைந்து கொள்ளக் கூடும் என்றும் ஐ.பி எச்சரித்துள்ளதாக, ரைம்ஸ் ஒவ் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. எனினும், இதுபற்றி எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என்றும் இந்தியா உள்துறை இணையமைச்சர் ஆர்.பி.என்.சிங் தெரிவித்துள்ளார். அதேவேளை, சிறிலங்கா பின்னணியைக் கொண்டுள்ள, இந்தியாவில் உள்ள தமிழ்த் தேசிய சக்திகள் குறித்து உன்னிப்பாக அவதானிக்கும்படியும், ஐ.பி கேட்டுக் கொண்…

    • 2 replies
    • 373 views
  7. ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கை செல்லும் முன்னர், 47 அரசசார்பற்ற நிறுவனங்கள், அவருக்கு அவசர மகஜர் ஒன்றை அனுப்பியுள்ளதுடன் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடங்களுக்கு சென்று விசாரணை நடத்துமாறும், வடக்கில் உள்ள மக்களை தனிப்பட்ட ரீதியாக சந்தித்து தகவல்களை கேட்டறியுமாறும் கோரிக்கை விடுத்துள்ளன. இதனை மேலும் சில விடயங்கள் குறித்து ஆராய்ந்து பார்க்குமாறும் இந்த அமைப்புகள் மனித உரிமை ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளன. நீதிமன்ற ஆவணங்கள், காவற்துறை அறிக்கைகள், அரசாங்கத்தின் ரகசிய ஆவணங்கள் குறித்தும் விசாரணை நடத்துமாறு இந்த அமைப்புகள் கோரியுள்ளன. இதனை தவிர நவநீதம்பிள்ளை வடக்கு பகுதிக்கு விஜயம் செய்யும் போது, இராணுவம் அல்லது காவ…

    • 1 reply
    • 440 views
  8. எதிர்வரும் 25 ஆம் திகதி இலங்கை செல்லும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கும் முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நடைபெறவுள்ளது. கடந்த மார்ச் மாதம் நம்பிக்கையில்லாத தீர்மானம் ஒன்றின் மூலம் ஷிராணி பண்டாரநாயக்க பிரதம நீதியரசர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதன் பின்னர் அவர் கலந்து கொள்ளும் உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தை இதுவாகும்.அத்துடன் ஷிராணி பண்டாரநாயக்க பதவியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர், சந்திக்கும் முதல் சர்வதேச ராஜதந்திரி நவநீதம்பிள்ளை என்பதும் குறிப்பிடதக்கது. இதற்கு முன்னர் ஸ்கைப் மூலமாக சர்வதேச நீதிபதிகள் சங்கத்தின் கூட்டத்தில் உரையாற்ற பண்டாரநாயக்க தயாராக இருந்த போதிலும் தொழிற்நுட்ப தடைகள் காரண…

    • 1 reply
    • 377 views
  9. யாழ்ப்பாணத்தில் முதல் தடவையாக மோட்டார் பந்தய நிகழ்வுகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 14 மற்றும் 15ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக யாழ். பொது நூலக கேட்போர் கூடத்தில் நேற்று(17.08.2013) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நிகழ்வின் ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது. இந்த மோட்டார் பந்தைய நிகழ்வினை மோட்டார் பந்தய அமைப்பு, ஆசிய மோட்டார் கழகம் ஆகியவற்றுடன் இணைந்து கால்டன் மோட்டார் விழையாட்டுக் கழகம் நடாத்துவதுடன் இதற்கான ஏற்பாடுகளை யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகம் செய்கிறது. இந்த நிகழ்வுகளில் துவிச்சக்கர வண்டி ஓட்டம், மரதன் ஓட்டம், மோட்டார் பந்தயம் ஆகிய பிரிவுகளாக இடம்பெறவுள்ளதுடன் துவிச்சக்கர வண்டி ஓட்டத்தில் பங்கு பற்ற விரும்பும், ஆண் பெண் எதிர்வரும் (10.09.2013) திகதிக்கு முன்…

    • 2 replies
    • 472 views
  10. வடக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பகிறது. கிளிநொச்சி, வவுனியா, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களிலேயே இந்த துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டுள்ளது. இரட்டை இலை சின்னத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எனும் பெயரில் வட மாகண சபை தேர்தலில் போட்டியிடுவதாகவும் குறித்த துண்டுப் பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கம் – ஜனநாயக ஜக்கிய முன்னனி எனும் கட்சியினாலேயே இந்த துண்டுப்பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் விடியலுக்காகவும், சுதந்திரத்திற்காகவும் மறைந்த ஈழ தமிழர் தந்தை செல்வாவின் வழியில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் இ…

    • 0 replies
    • 419 views
  11. யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இருவேறு விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளார்கள். ஏ9வீதி பளைப்பகுதியில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் பளை பிரதேச சபையின் எதிர்கட்சி உறுப்பினர் உயிரிழந்துள்ளதுடன் மற்றும் ஒருவர் காயமடைந்துள்ளார்.55 அகவையுடைய வி.தியாகராச என்பவரே உயிரிழந்துள்ளார். வடமராட்சி அம்பன் பகுதியில் நேற்று முன்னர் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வல்வெட்டித்துறையினை சேர்ந்த 33அகவையுடைய ஆறமுகம் மதியழகன் என்பவரே உயிரிழந்துள்ளார் . http://www.sankathi24.com/news/32349/64//d,fullart.aspx

  12. கஞ்சா வைத்திருந்த போது கைதுசெய்யப்பட்ட இராணுவ மேஜரை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி அனுராதபுரம் பதில் மஜிஸ்திரேட் அமரசிறி உத்தரவிட்டுள்ளார். குறித்த இராணுவ மேஜர்அனுராதபுரத்தில் வைத்து நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார். மேஜர் உபயோகித்த வாகனத்திலிருந்து 15 கிலோ கிராம் கஞ்சாவினை பொலிஸார் கைப்பற்றியிருந்தனர். பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலொன்றை அடுத்தே குறித்த மேஜர் கைதுசெய்யப்பட்டார். அதேபோல் 10 கிலோ கஞ்சா வைத்திருந்த வர்த்தகர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரையும் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி நீதவான் உத்தரவிட்டார். இவர்கள் இருவரும் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. http://www.vir…

  13. வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை குழப்பும் வகையில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கிளிநொச்சி, வவுனியா, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களிலேயே இந்த துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டுள்ளது. இந்த கட்சியே இரட்டை இலை சின்னத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எனும் பெயரில் வட மாகண சபை தேர்தலில் போட்டியிடுவதாகவும் குறித்த துண்டுப் பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கம் - ஜனநாயக ஜக்கிய முன்னனி எனும் கட்சியினாலேயே இந்த துண்டுப்பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது. வடமாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை வெற்றி பெறவிடாது தடுக்கும் நோக்கில் இவ் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்படுவதாக மக்கள்…

  14. அவுஸ்ரேலியாவுக்கு அகதிகளை ஏற்றிச் சென்ற படகு, இந்தோனேசியாவின் மேற்கு ஜவாகி சியான்ஜர் கடற்பரப்பில் கடந்தமாதம் 23 ம் நாள் விபத்துக்குள்ளாகி கடலில் மூழ்கிய சம்பவத்தில் உயிரிழந்த சிறிலங்காவைச் சேர்ந்தவர்கள் என்று சந்தேகிக்கப்படுபவர்களின் விபரங்களையே சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்த சுன்னாகத்தைச் சேர்ந்த அல்பிரட் பன்கன் செலான் என்பவரது சடலம் அவரது உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும், திவ்யா (ஒன்றரை வயது) , றொனால்ட் (33 வயது), இனியா (7வயது), டனிசன் (5 வயது ஆண்) ஆகியோரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன. மேலும் சிறிலங்காவைச் சேர்ந்தவர் என்று கருதப்படும் 20 வயதுடைய பெண் ஒருவரின் சடலமும் இன்னமும் அடையாளம் காணப்படவில்லை. இவர்களின்…

  15. -தேவ அச்சுதன் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்பினரொருவர் ஏறாவூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்திவெளி பிரதேசத்தில் கடந்த 2007ஆம் ஆண்டு இடம்பெற்ற பூசகரொருவரின் கொலைச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபரே கைது செய்யப்பட்டுள்ளார். இவரை ஏறாவூர் நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்தபோது எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த நான்கு பேர் காணப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இவர்களில் இரண்டு பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நில…

  16. ஒரு சமூகத்தில் வாழும் ஒவ்வொருவருக்குள்ளும் சில விடயங்கள் நெருடிக் கொண்டிருக்கும் சிலர் அதை வெளிக்காட்டிக் கொள்வார்கள் பலர் தமக்குள் வைத்துக் கொள்வார்கள் அந்தவகையில் வழமையாக எழுத்துக்களால் விதைக்கப்பட்டவை சில காட்சிகளால் நகைச்சுவையுடன் விபரித்துள்ளது தான் “துலைக்கோ போறியள்“ என்ற இக்குறும்படமாகும். இத்தலைப்பானது வடக்கில் மிகவும் அருகிப் போய்க் கொண்டிருக்கும் ஒரு பேச்சு மொழியாகும். ஒருவர் போய்க் கொண்டிருக்கும் போது “எங்கே போகிறீர்கள்“ என்பது ஒரு அபசகுணமாககக் கருதப்படுவதால் இப்படி அழைத்து வினாவுவார்கள். உடுப்பிட்டி நாவலடி, நெல்லியடி, நவிண்டில், வதிரி போன்ற 5 களங்களில் உருவாக்கப்பட்ட 8 காட்சிகளுடன் இக்குறும்படம் உருவாக்கம் பெற்றுள்ளது. இக்குறும்படத்திற்கான திரைக்கதை,…

    • 5 replies
    • 468 views
  17. அநுராதபுரம், மல்வத்து ஓயா லேன் பள்ளிவாசல் தொடர் பில் பல மாதங்களாக அனுராதபுரம் மாநகர சபைக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் பேச்சு இடம்பெற்று வந்தநிலையில், குறித்த பள்ளிவாசல் அநுராதபுரம் மாநகர சபையினரால் அகற்றப்பட்டுள்ளது. குறித்த பள்ளிவாசல் தொடர்பில் பேச்சுவார்த்தை கடந்த ஜுலை மாதத்தில் தோல்வியில் முடிவடைந்துள்ளதை அடுத்தே இந்த பள்ளிவாசலினை அகற்ற அநுராதபுரம் மாநகர சபை தீர்மானி த்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பள்ளிவாசல் உள்ள பிரதேசம் புனித பூமி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் உள்ளடக்கப்படுகின்ற காரணத்தினால் இந்த பள்ளவாசல் அகற்றப்பட்டுள்ளதுடன் இதற்கு குறித்த பிரதேச முஸ்லிம்களும் இணக்கம் தெரிவித்துள்ளனர். குறித்த பள்ளிவாசல் அகற்றல் தொடர்பில் கடந்த ஒரு வார காலத்திற்க…

  18. எமது மக்களின் பண்பாட்டு கலாசாரங்களை அழித்து சாம் பராக்கிய அரசுடன் இணைந்து ஆட்சிப்பீடத்திலுள்ள கட்சி வேட்பாளர்கள் இன்று எமது மக்களுக்குச் சேலை வழங்குகின்றார்கள். யாருக்குத் தேவை இவர்களின் சேலைகள்? இவ்வாறு தெரிவித்தார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணித் தலைவரும் வடமாகாணசபை வேட்பாளருமாகிய பா.கஜதீபன். வலி.தெற்கு பிரதேச சபையின் தவிசாளர் தி.பிரகாஷ் தலைமையில் ஏழாலையில் நடைபெற்ற தோதல் பரப்புரைக் கூட்டத்தில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது: எங்களுக்கு வாக்களித்தால் பலாலியில் மக்களை மீளக் குடியமர்த்துவோம் என்று கூச்சலிடுகிறார்கள் அரச கட்சியில் போட்டியிடுபவர்கள். தமக்கு தேர்தல் காலங்களில் வாக்குகளைப் பெறுவதற்காகவ…

    • 5 replies
    • 424 views
  19. ஐக்கிய தேசியக்கட்சி தேசிய அளவில் மட்டுமின்றி பிரதேச அளவிலும் வலுவிழந்துள்ளது என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். தம்பதெனிய மாரச்சுமுல்ல பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் அவர் இதனை கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஐக்கிய தேசியக்கட்சி தேர்தல் பிரசாரங்களை முன்னெடுக்க முடியாத அளவில் வலுவிழந்து போயுள்ளது. தற்போது அங்குமிங்கும் சத்தமிட்டு எதிர்க்கட்சிகளை, ஊடகங்களில் மட்டுமே மக்கள் காணமுடிகிறது. மக்கள் மத்தியில் இல்லாத எதிர்க்கட்சியே தற்போதுள்ளது. எமது வாழ்நாளில் எதிர்க்கட்சியின் அரசாங்கம் ஒன்றை காணமுடியாத நிலைமையே உள்ளது. எதிர்ககட்சித் தலைவரிடம் பலமில்லாதது மட்டும் இதற்கு காரணமல்ல ஜனாதிபதியின் தூரநோக்…

    • 1 reply
    • 295 views
  20. சிலாபம் முன்னேஸ்வரம் ஆலயத்திற்கு அருகாமையில் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிலாபம் மேலதிக நீதவான் கே.கே. லியனகே இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார். ஆகஸ்ட் மாதம் 13ம் திகதி முதல் 22ம் திகதி வரையில் போராட்டங்களையோ அல்லது ஆர்ப்பாட்டங்களையோ நடத்தக் கூடாது என உத்தரவிட்டுள்ளார். சிலாபம் காவல்துறையினரால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த உத்தரவிப்பு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னேஸ்வரம் ஆலயத்தில் எதிர்வரும் 21ம் திகதி மிருக பலி பூஜைகள் நடத்தப்பட உள்ளதாக வெளியான வதந்தியைத் தொடர்ந்து, சில தரப்பினர் போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் நடாத்த உத்தேசித்திருந்தனர். எவ்வாறெனினும் இந்த ஆண்டில் இவ்வாறான மிருக பலி பூஜைகள் நடத்தப்பட மாட்டா…

    • 1 reply
    • 467 views
  21. ரயில் பாதை புனரமைப்புப் பணிகளுக்காக வட இந்தியாவிலிருந்து வந்துள்ள இரண்டு பணியாளர்களுக்கு மலேரியா தொற்றுநோய் கண்டறியப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிளிநொச்சி வைத்தியசாலையிலே சிகிச்சை பெற வந்த பொழுதே இவ்வாறு மலேரியா உயிர்கொல்லி நோய் இருப்பது மருத்துவ பரிசோதனை மூலம் கண்டுபிடிக்கப்பட்;டுள்ளது. வன்னியில் பெரும் அச்சுறுத்தலாக மலேரிய உயிர்கொல்லி நோய் இருந்துள்ளது. கிளிநொச்சிப் பகுதியில் மலேரியா நேயினால் பெருமளவு மக்களின் மரணங்களும் பெரும் இடப்பெயர்வு ஏற்பட்டதாகவும் இடம்பெற்றுள்ளது. வன்னிப் பகுதியின் வெப்பநிலைக்கு மலேரியா அச்சுறுத்தலான நோயாகும். தொடர்ச்சியான இடப்பெயர்வுகளும் போரினால் மக்கள் காடுகளில் வசித்தமையும் வன்னிப் பகுதியின் காலநிலையும் இதற்குக…

    • 3 replies
    • 383 views
  22. யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் பொது மக்கள் காணாமல் போனதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களை இலங்கை அரசாங்கம் முற்றாக மறுக்கின்றது என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். ஊடகத்துறை அமைச்சில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அமைச்சர் மேற்கண்ட விடயங்களை குறிப்பிட்டார். அமைச்சர் அங்கு மேலும் கூறியதாவது யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் காணாமல் போனதாகக் கூறப்படும் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்தக் குழுவில் பராக்கிரம பரன்னகம மனோ ராமநாதன் மற்றும் பிரியந…

    • 9 replies
    • 457 views
  23. வெளிநாடுகளில் புலம் பெயர்ந்திருப்போர் கோடை கால விடுமுறையில் யாழ்ப்பாணம் உட்பட வடக்கு கிழக்கிற்கு பெருந்தொகையில் சென்று வருகின்றனர். தொடர்ந்து வாசிக்க...http://tamilworldtoday.com/?p=27765

    • 103 replies
    • 7.9k views
  24. இந்த நூற்றாண்டின் முதல் 13 ஆண்டுகளில் வந்த மிகச்சிறந்த திரைப்படம்.. இலக்கியத்தை திரைப்படமாக எடுக்கப் புறப்பட்ட பலர் அதை சரியாக தயாரிக்கத் தெரியாமல் மசாலாவாக்கியது எண்ணற்ற தமிழ்ப்படங்களில் நடந்து முடிந்த சோகங்கள்.. ஆனால் ஒரு மசாலாவை படமாக்கப் புறப்பட்டு, தமக்குத் தெரியாமலே அதி உன்னதமான தமிழ் இலக்கிய உணர்வுகளை படமாகத் தந்துவிட வாய்ப்புண்டு என்பதற்கு உதாரணம் மரியான். அது திரைப்படமல்ல…. திரைப்படமாக வந்துள்ள பழம் பெரும் காவியம்… சங்க இலக்கியத்தின் சுவைகளை சுவைத்தறியாமல் மரியானை சுவைப்போருக்கு அது பலாப்பழத்தின் சுளை இருக்குமிடம் தெரியாமல் முள்ளைக் கடித்தவன் கதைபோல ஆகிவிடும்.. பாவம் தமிழ் நாட்டில் பலர் மரியானை அப்படித்தான் கடித்து காயப்பட்டிருக்கிறார்கள். கடலும் கடல் சார்ந்…

  25. தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மாவட்டத் தலைமைச்செயலகம் கடந்த 04.08.2013 அன்று கிளிநொச்சியில் திறந்து வைக்கப்பட்டது. தலைமைச்செயலகத்தின் பெயர்ப்பலகையினை கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ பேச்சாளர் சுரேஸ் க.பிறேமச்சந்திரனும், கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவருமாகிய ஈ.சரவணபவனும் திரைநீக்கம் செய்து வைத்திருந்தனர். இந்த நிகழ்வு 04.08.2013 அன்று முற்பகல் 11.00 மணியளவில் பல ஊடகங்களினதும் ஊடகவியலாளர்களின் பிரசன்னத்தோடு, கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் மற்றும் மாவட்ட மக்களின் பங்களிப்போடு, கூட்டமைப்பின் வடமாகாணசபைக்கான கிளிநொச்சி மாவட்ட வேட்பாளர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சகிதம் நடைபெற்றிருந்தது. குறித்த நிகழ்வு தொடர்பான செய்தியை அன்றே மின்னியல் ஊடகங்களும், …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.