ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143496 topics in this forum
-
எதிர்வரும் வடமாகாண சபைத் தேர்தலின் போது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். வடமாகாண சபைக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் இன்று அரசாங்க கட்சிகள் வேட்பு மனுவினைத் தாக்கல் செய்தனர். இந்நிலையில் இன்று மாலை யாழ்.கொழும்புத்துறைப் பகுதியில் துவிச்சக்கர வண்டியில் சிவில் உடையில் சென்ற இராணுவத்தினர் பொது மக்களிடம் அரசாங்கத்திற்கு வாக்களிக்குமாறு பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர். ஏன்? மக்கள் அரசாங்கத்திற்கு வாக்களிக்க மாட்டார்களா? என்று அச்சுறுத்தும் தொனியில் மக்கள் மத்தியில் கொச்சைத் தமிழிலில் இராணுவத்தினர் அச்சுறுத்தியுள்ளனர். சில இடங்களில் வெற்…
-
- 0 replies
- 388 views
-
-
ஆறு தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்ட மா அதிபர் திணைக்களம் இந்தக் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. கடற்படைக் கப்பல் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தியமைக்காக இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கப்பலைத் தாக்கி, கடற்படை உத்தியோகத்தர்களை படுகொலை செய்ய முயற்சி எடுக்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த முயற்சி தோல்வியடைந்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 2006ம் ஆண்டு கடற்படையினரின் சயுரா என்ற கப்பல் மீது இந்த ஆறு புலி உறுப்பினரும் தாக்குதல் நடாத்த முயற்சித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. சந்தேக நபர்களுக்கு எதிராக 27 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. இதற்கான ஆதாரங்களும், சாட்சியங்களும் கொ…
-
- 1 reply
- 788 views
-
-
கொழும்பு, கொம்பனித்தெரு அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி ஆலய வருடாந்த மஹோற்வத்தையொட்டி இன்று வியாழக்கிழமை இரதோற்சவம் இடம்பெற்றது. இதன்போது அலங்கரிக்கப்பட்ட தேரில் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேதரராக ஸ்ரீ கந்தசுவாமி எழுந்தருளி வீதி உலா வலம் வந்தார். (படங்கள்:பிரதீப் டில்ருக்ஷன) http://tamil.dailymirror.lk/--main/77245-2013-08-01-09-14-44.html
-
- 0 replies
- 271 views
-
-
தெரனியகல சம்பவங்கள் குறித்து அமெரிக்கா கவனம் செலுத்தி வருவதாக அறிவித்துள்ளது. தெரனியகல பிரதேச நூரி தோட்டத்தில் அண்மையில் தோட்ட முகாமையாளர் படுகொலை செய்யப்பட்டமை, பாலியல் வன்முறைச் சம்பவங்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் அமெரிக்கா கேள்வி எழுப்பியுள்ளது. தெரனியகல நூரித் தோட்டத்தின் முகாமைத்துவ நடவடிக்கைகளை அமெரிக்க நிறுவனமொன்று மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. குறித்த தோட்டத்தில் இடம்பெற்று வரும் குற்றச் செயல்கள் தொடர்பில் உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருவதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது. குற்றச் செயல்கள் விசாரணை செய்யப்பட்டு உரிய தண்டனை விதிக்;கப்பட வேண்டியது அவசியம் என தூதரகத்தின் தகவல் அதிகாரி ஜூலியன் ஸ்பேவன் தெரிவித்துள்ளார். …
-
- 0 replies
- 660 views
-
-
இலங்கை மனித உரிமை நிலமைகளில் முன்னேற்றம் ஏற்படவில்லை என மனித உரிமை கண்காணிப்பகம் அறிவித்துள்ளது. மூதூர் தன்னார்வ தொண்டர் படுகொலைச் சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் இன்னமும் பூர்த்தியாகவில்லை என சுட்டிக்காட்டியுள்ளது. விசாரணைகளை கிரமமாக நடாத்துமாறு சர்வதேச நாடுகள் பல தடவைகள் கோரிக்கை விடுத்த போதிலும் இதுவரையில் விசாரணைகள் சரியான முறையில் நடாத்தப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 2006 ஆகஸ்;ட் 4ம் திகதி மூதூரில் அக்செய்ன் பார்ம் நிறுவனத்தின் தன்னார்வ தொண்டர்கள் 17 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். பல்வேறு ஆணைக்குழுக்களின் மூலம் விசாரணைகள் நடத்தப்பட்ட போதிலும் இதுவரையில் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளது. அரசாங்கப் படையினரும், தமிழீழ விடுதலைப் பு…
-
- 0 replies
- 480 views
-
-
2 பெரும்பான்மைக் கட்சிகளதும் 1 சுயேட்சைக் குழுவினதும் மனுக்கள் நிராகரிப்பு- இணைப்பு 2 வடமாகாண சபைத் தேர்தலுக்காக கட்சிகள் சுயேட்சைகள் என 23 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.13 கட்சிகளும் 10 சுயேட்சைக் குழுக்களும் இவ்வாறு வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளதாக யாழ் செயலகத்தில் உள்ள குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தெரிவித்துள்ளார். இவற்றில் யாதிக சங்வர்த்தன பெரமுண, எமது தேசிய முன்னணி ஆகிய கட்சிகளதும், முருகன் குமாரவேல் என்பவர் தலைமையிலான சுயேட்சைக் குழுவினதும் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் 11 கட்சிகளும் 9 சுயேட்சைக் குழுக்களும் தேர்தல் களத்தில் குதித்துள்ளன. இதன் மூலம் யாழ்ப்பாணத்தின் 16 ஆசனங்களுக்காக 380 பேர் போட்டியிடவுள்ளனர். 526 வாக்களிப…
-
- 0 replies
- 385 views
-
-
நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலில் சுயேட்சையாகக் களமிறங்கும் முயற்சியில் முன்னாள் ஊடகவியலாளர் ந.வித்தியாதரன் தீவிரமாக ஈடுபட்டுவருவதாகவும் அவருக்கு துணையாக உதயன் பத்திரிகை நிர்வாகம் களத்தில் இறங்கியிருப்பதாகவும் தெரியவருகின்றது.இது குறித்து மேலும் தெரியவருவதாவது, மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில், முன்னாள் ஊடகவியலாளர் ந.வித்தியாதரன், மற்றும் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் தலைவர் தர்சானந் உட்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் வேட்பாளர் பட்டியலில் இருந்து நிராகரிக்கப்பட்டவர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்காக தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுவருவதாக தெரியவருகின்றது. இந்த முயற்சியின் தொடராக, உதயன் ஆசிரியர் பீ…
-
- 12 replies
- 812 views
-
-
வட மாகண சபைக்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சார்பாக யாழ் மாவட்ட வேட்பாளராக வேட்புமனுத்தாக்கல் செய்துள்ள நிலையில் தனது தனிப்பட்ட விபரங்களை இனந்தெரியாத நபர்கள், அயலர்களை மிரட்டி பெற்றுச் சென்றுள்ளதாக யாழ் மாநகர சபை உறுப்பினர் விந்தன் கனகரட்னம் தெரிவித்துள்ளார். குரல் : http://tamilworldtoday.com/?p=25819
-
- 0 replies
- 277 views
-
-
அமெரிக்க நிறுவனத்துக்கு சொந்தமான அவிசாவளை, தெரணியகல, நூரி என்ற தேயிலை பெருந்தோட்டத்தின் முகாமையாளர் கொல்லப்பட்டமை தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று அமெரிக்கா கோரியுள்ளது. இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது. வோல்ட்டர்ஸ் பே என்ற அமெரிக்க நிறுவனமே இந்த தோட்டத்தின் முகாமையை மேற்கொண்டு வந்தது. இந்தநிலையில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் இந்த தோட்டத்தின் முகாமையாளர் கொல்லப்பட்டார். இதற்கிடையில் ஏற்கனவே இந்த தோட்டத்தில் பிரச்சினை குறித்து பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட போதும் பொலிஸார் உரிய நடவடிக்கையை எடுக்கவில்லை என்று மனித உரிமை அமைப்புக்கள் குற்றம் சுமத்தியுள்ளன. http://www.seithy.com/breifNews.php?newsID=88936&category…
-
- 0 replies
- 345 views
-
-
வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்கான தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இன்று தெரிவித்தார். வட மாகாணத்தில் யாழ்ப்பாணம் கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களிலும் வடமேல் மாகாணத்தின் புத்தளம் மற்றும் குருணாகல் மாவட்டங்களிலும் மத்திய மாகாணத்தில் நுவரெலியா, கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் தேர்தல்கள் இடம்பெறவுள்ளன. வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகளுக்கு மொத்தமாக 142 உறுப்பினர்களை தெரிவுசெய்யும் நோக்கில் 43 இலட்சத்து 58 ஆயிரத்து 261 பேர் வாக்களிப்பதற்கு தகுதிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/…
-
- 0 replies
- 437 views
-
-
இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகள் குறித்து கருத்துக்களை வெளியிடுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் அச்சம் கொண்டுள்ளது. சிறிலங்கா அதிபர் மற்றும் அமைச்சர்கள் இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகள் குறித்து வெளியிடும் கருத்துகள், சிறிலங்கா அரசாங்கத்துக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது. கொழும்பில் கொமன்வெல்த் மாநாட்டை நடத்த தயாராகி வரும் சிறிலங்கா, எந்தவொரு நாட்டுடனும் முரண்பாடு ஏற்படுவதைத் தவிர்க்க முடிவு செய்துள்ளது. இதனால், இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகள் குறித்த எந்தவொரு கேள்விகளுக்கும் பதிலளிப்பதைத் தவிர்க்குமாறும், கருத்துகளை வெளியிட வேண்டாம் என்றும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு, சிறிலங்கா அதிபரிடம் கேட்டுக் கொண்டுள்ளதாக தெரியவருகிறது. நேற்றுமுன்தினம் அலரி மாளிகையில், ஊடக ஆசிரியர்களை சி…
-
- 0 replies
- 386 views
-
-
மூன்று மாகாண சபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை வியாழக்கிழமையுடன் நிறைவடையவுள்ள நிலையில், வட மாகாணத்திலுள்ள மாவட்ட செயலகங்களில பல அரசியல் கட்சிகள் இன்று புதன்கிழமை வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணம் - சுமத்தி தங்கராசா, எஸ்.கே.பிரசாத் முல்லைத்தீவு - ஆர்.ரஸ்மின் மன்னார் - எஸ்.றொசேரியன் லெம்பேட் கிளிநொச்சி - எஸ்.சிவகருணாகரன்
-
- 9 replies
- 589 views
-
-
வடக்கு, வடமேல், மத்திய மாகாண சபைத் தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் 21ஆம் திகதி நடத்தப்படும் என தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார். மேலும், http://tamilworldtoday.com/?p=25805
-
- 0 replies
- 312 views
-
-
வடமாகாண சபைத் தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் சிங்கள வேட்பாளர் ஒருவரை நிறுத்தாமையானது அங்கு வாழும்சிங்கள மக்களிடையே அதிருப்தியைத் தோற்றுவித்துள்ளதாக ஆளுந்தரப்பான சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மன்னார் மாவட்ட இணைப்பாளரான பத்மசிறி தெரிவித்துள்ளார். இதனை நோக்கும் போது மன்னார் சிங்களவர்களுக்கு இந்த அரசாங்கமே துரோகம் செய்துள்ளதாகவே நினைக்கத் தோன்றுகிறது என்றும் அவர் கூறியுள்ளார். இதே வேளை மன்னார் மாவட்டத்தில் ஆளுங்கட்சியில் சிங்கள இனத்தவரை போட்டியிட வைக்க முயற்சி செய்த போதும் அது வெற்றியளிக்கவில்லை என பிறிதொரு செய்தி கூறுகின்றது.http://goldtamil.com/?p=3769
-
- 0 replies
- 283 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் மல்லாவியில் தொழில் வாய்ப்பற்ற நிலையில் எத்தனையோ தமிழ் இளைஞர் யுவதிகள் பெரும் துன்பங்களை எதிர்நோக்கி வருகின்ற நிலையில் இங்குள்ள இலங்கை வங்கிக் கிளையில் சிங்கள இனத்தவர் ஒருவர் காசாளராக நியமிக்கப்பட்டுள்ளமை இங்குள்ள தமிழ் மக்களை விரக்தியடையச் செய்துள்ளது. குறித்த காசாளருக்கு தமிழ் மொழி தெரியாது. அதனால் அந்த வங்கிக்கு செல்கின்ற பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் இங்குள்ளவர்கள் தெரிவிக்கின்றனர். தாங்கள் தமது வைப்பிலிருந்து பணத்தை எடுப்பதற்கு உரிய சிட்டைகளை பூர்த்தி செய்துகொண்டு செல்கின்ற போது குறித்த சிங்கள காசாளர் தடுமாறுவதாகவும் இதன்போது அது தொடர்பில் அங்குள்ள தமிழ் உத்தியோகத்தர்களை பொதுமக்கள் நாடுகின்ற போது அவர்கள் பொதுமக்களை கண்டபடி ஏ…
-
- 0 replies
- 337 views
-
-
மத்திய வடக்கு மற்றும் வடமாகாணசபைத் தேர்தல்கள் நடைபெறும் திகதி இன்று அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க...http://tamilworldtoday.com/?p=25751
-
- 0 replies
- 233 views
-
-
சிங்கள ராணுவத்தின் உதவியுடன் குடியிருப்பாளரை வெளியேற்றிய புலத்து உரிமையாளர். புலம்பெயர்ந்த குடும்பம் ஒன்று யாழிற்கு சென்று ராணுவத்தின் உதவியுடன் தமது வீட்டில் குடியிருந்த குடும்பம் ஒன்றை பலாத்காரமாக வெளியேற்றியுள்ளது. . நேற்றுச் செவ்வாய்க்கிழமை மதியம் பொன்னையா வீதி, ஆறுகால்மடம், ஆனைக்கோட்டைப் பகுதியில் இடம்பெற்றது. . வெளியேற்றப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த இரு சிறுவர்கள் பாடசாலைச் சீருடையில் வீதியில் நின்றிருந்ததோடு மற்றைய சிறுவர்கள் பசியினால் அழுதவண்ணம் வீதியில் நின்றிருந்தனர். குறிப்பிட்ட வீட்டில் வாடகைக்கு குடி யிருந்து வந்த குடும்பத்தை அந்த வீட்டுக்கு முன்னால் வசிக்கும் குடும்பத்தினரே அங்கு குடியமர்த்தியுள்ளனர். . உரிமையாளர்கள் வெளிநாட்டில் வசிப்பதாகவும் அவர்களி…
-
- 2 replies
- 656 views
-
-
யாழ்ப்பாணத்தின் புங்குடுதீவுக்கடற்பகுதியில் உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று புதன்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உருக்குலைந்த நிலையில் புங்குடுதீவு 10ம் வட்டார கடற்பரப்பில் கரையொதுங்கிய இந்த சடலத்தை கடற்படையினர் மீட்டு பொலிஸாரிடம் ஒப்படைத்திருந்தனர். அடையாளம் காணமுடியாதவாறு உருக்குலைந்துள்ள நிலையில் மீட்கப்பட்டுள்ள இந்த சடலம் தற்போது யாழ் போதனா வைத்திய சாலையின் சவச்சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனிடையே யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலையத்தில் இன்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கொக்குவில் பிடாரி அம்மன் கோயிலடியைச் சேர்ந்த தேவாராசா தினேஸ் என்ற 26 வயது இளைஞரே இவ்வாறு காணாமல் போயுள்ளா…
-
- 1 reply
- 516 views
-
-
வட மாகாணத்தில் கடந்த சில வாரங்களாக போலி நாணயத்தாள் புழக்கம் அதிகரித்துள்ளது. வங்கி ஊழியர்களே போலி நாணயத்தாள்களை இனங்காண்பதில் சிரமப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை, வடக்கில் போலிநாணயத்தாள் வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டில் வங்கி ஊழியர்கள் சிலர் கைது செய்யப்பட்டிருந்தனர். அதற்கு மேலதிகமாக போலி நாணயத்தாள் அச்சிட்ட ஒருவர் யாழ் மாவட்டத்தில் கைது செய்யப்பட்டிருந்தார். இதனையடுத்து பணம் கொடுக்கல் வாங்கல்களுடன் தொடர்புடைய சகல உத்தியோகத்தர்களுக்கும் போலி நாணயத்தாளை இனங்காண்பது தொடர்பான செயலமர்வு இலங்கை மத்திய வங்கியின் வடபிராந்தியக் கிளையினால் நடத்தப்படவுள்ளது. வடமாகாணத்திலுள்ள சகல வங்கிகள், நிதி நிறுவனங்கள், லீசிங் நிறுவனங்கள் என்பவற்றின் ஊழியர்களுக்கே இந்தச் செயல…
-
- 1 reply
- 349 views
-
-
வடமாகாணசபை தேர்தலில் சுயேச்சைக்குழுவாக போட்டியிடும் எண்ணம் தனக்கு கிடையாது என்றும் தான் சுயேச்சைக்குழுவாக போட்டியிடுவதற்கு முயற்சி செய்வதாக வெளிவந்த செய்திகளில் எந்த வித உண்மையும் கிடையாது என்றும் ஊடகவியலாளர் ந.வித்தியாதரன் தெரிவித்துள்ளார். இதேவேளை, யாழ். பல்கலைக்கழக மாணவர் பேரவையின் முன்னாள் செயலாளர் ப.தர்சானந் சுயேச்சைக்குழுவில் போட்டியிடப்போவதாக வெளிவந்த செய்திகளில் எந்த வித உண்மையும் இல்லை என தர்சானந் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க... http://tamilworldtoday.com/?p=25713
-
- 8 replies
- 532 views
-
-
எஸ்.கே.பிரசாத் 'நடைபெறவுள்ள வடமாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட முன்னாள் போராளிகள் பலர் விண்ணப்பித்திருந்த போதும் நேர்முகத் தேர்வுக்கு சமூகம் தராததால் அவர்கள் வேட்பாளர்களாக இணைத்துக்கொள்ளப்படவில்லை' என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந் தெரிவித்தார். யாழ்.கிறீன் கிராஸ் ஹோட்டலில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதலளிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'இந்தத் தேர்தலில் சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்கு 50 முன்னாள் போராளிகள் தங்கள் விருப்பத்தை தெரிவித்திருந்தனர். இவ்வாறு விண்ணப்பத்திர…
-
- 1 reply
- 422 views
-
-
எஸ்.கே.பிரசாத் 'ஜனாதிபதி கேட்டுக்கொண்டதற்கு இணங்க நான் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை' என்று ஈழமக்கள் ஜனநாயக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். யாழ்.கிறீன்கிராஸ் ஹோட்டலில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், 'வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடமால் ஒதுங்கிக்கொண்டது ஏன்?' என்று ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் தெரிவித்த அவர், 'ஜனாதிபதி என்னிடம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கவும் இந்த தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதற்காகவும் நான் வெளியில் நின்று முழுமுயற்சிகளை மேற்கொண்டு வருகின்றேன். இந்த தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் ஜனாதிபதியுடன் கதைத்து யார் முதலம…
-
- 2 replies
- 772 views
-
-
இலங்கை இராணுவத்தின் புதிய தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரத்னாயக்கவிடம் இராணுவ தளபதிக்கான கடமைகள் இன்று உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன. இலங்கை இராணுவத்தின் 19 ஆவது இராணுவத்தளபதியான ஜெனரல் ஜகத் ஜயசூரிய இராணுத்தளபதி பதவியிலிருந்து இன்றுடன் ஓய்வு பெற்றுக்கொண்டார். இராணுவத் தலைமையகத்தில் வைத்து அவருக்கு அளிக்கப்பட்ட மரியதை அணிவகுப்பை ஏற்றுக்கொண்ட ஜெனரல் ஜகத் ஜயசூரிய இராணுவ தளபதிக்கான கடமைகளை ஒப்படைத்ததுடன் இராணுவ தளபதியின் உத்தியோபூர்வமான வாளையும் கையளித்தார். www.irruppu.com
-
- 2 replies
- 637 views
-
-
2013ம் ஆண்டு முஸ்லிம்களுக்கு தரப்பட்ட மேலும் ஒரு அதிர்ச்சியாக மஹியங்கன விவகாரம் அமைந்திருந்தது. ஒரு சிலருக்கு கோபமும் மேலும் சிலருக்கு கவலையும் இன்னும் பலருக்கு குழப்பமுமாக அமைந்த இவ்விவகாரம் தற்போது ஒரு முடிவை எட்டியுள்ளது. எப்படி ? வழக்கம் போலவே தாம் நினைத்ததை சாதித்துள்ளது இனவாதம் என்பதுதான் கவலைக்குரிய விடயம். இன்றைய நிலையை பொறுத்தவரை இவ்விடயத்தை தூக்கிப்பிடிப்பதிலோ அல்லது மேலதிக ஆய்வுகளை செய்வதிலோ எந்த வித பிரயோசனமும் இல்லை. ஏனெனில் மஹியங்கன விவகாரம் முடிவுக்கு வந்து விட்டது என்பதே பிரதேசத்தில் தொழில் புரியும் வர்த்தகர்களின் ஒட்டு மொத்த கருத்தாக இருக்கிறது. இது தொடர்பாக சோனகர் வலைத்தளம் மேற்கொண்ட நேர்காணல்கள், விசாரணைகளின் போது பிரதேச வாதிகளும் ஏறத்தாழ இதே கருத…
-
- 3 replies
- 540 views
-
-
யாழ்பாண முஸ்லிம்கள் வடமாகாண சபை தேர்தலில் யாரை ஆதரிப்பது , யாரை ஆதரித்தால் பாதிப்புகள் குறைவாக இருக்கும் என்பதை ஆராய்ந்து பார்ப்போமானால் இறுதியில் வருவது தமிழர் கூட்டமைப்பே. இதனை ஆராய்வதற்க்கு முன்னர் எமது கடந்த காலங்ககளை கொஞ்சம் திரும்பிப்பார்த்து அதற்கேற்றாற்போல் நமது சகல நடவடிக்கைகளையும் அமைத்து நமது மண்ணில் நாம் ஐக்கியமாக வாழ நல்ல நிலைமையை உருவாக்குவது நமது கடமை. 1990ஆம் ஆண்டுக்கு முன்னர் சிவில் நிர்வாகம் இயங்கிக் கொண்டிருக்கும் போது எமது பிரதேசத்தில் பல தேர்தல்கள் நடைபெற்றது அந்த தேர்தல் காலங்களில் ஸ்ரீல.சு க, ஐ.தே.க, த.அ.க, த.கா.க, த.வி.கூ, மற்றும் வேறு சில கட்சிகளும் போட்டி போட்டன மக்கள் தத்தமது விருப்பத்திற்கேற்றாற்போல் வாக்களித்தார்கள். அந்த காலம் மாறி நாட்டி…
-
- 1 reply
- 2.6k views
-