ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143496 topics in this forum
-
யாழ் கொக்குவில் பகுதியில் இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக யாழ் பொலிஸ் நிலையத்தில் இன்று புதன்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கொக்குவில் பிடாரி அம்மன் கோயிலடியைச் சேர்ந்த தேவாராசா தினேஸ் வயது 26 என்பரே காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 04 ஆம் மாதம் 10ஆம்திகதியில் இருந்து இவர் காணாமல் போயுள்ளதாக அவரின் சசோதரனால் இன்று இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. http://www.sankathi24.com/news/31957/64//d,fullart.aspx
-
- 0 replies
- 587 views
-
-
புத்தளம், கருவலகஸ்வெவ பிரதேசத்தில் இன்று புதன்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் கடற்படை உயர் அதிகாரிகள் இருவர் மரணமடைந்துள்ளனர். பூநகரியிலிருந்து கொழும்பு நோக்கி வந்துகொண்டிருந்த கடற்படையினரின் காரும் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த லொறியும் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக கருவலகஸ்வெவ பொலிஸார் தெரிவித்தனர். கொமாண்டர் ஜானக்க பிரியந்த, லெப்டினட் கொமாண்டர் சரித் கலுதந்திரி ஆகிய கடற்படை உயர் அதிகாரிகளே இந்த விபத்தில் மரணமடைந்தவர்கள் ஆவர். சடலங்கள் புத்தளம் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த விபத்து தொடர்பில் கருவலகஸ்வெவ பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். http://www.sankathi24.com/news/31951/64//d,fullart.aspx
-
- 0 replies
- 730 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் மல்லாவியில் தொழில் வாய்ப்பற்ற நிலையில் எத்தனையோ தமிழ் இளைஞர் யுவதிகள் பெரும் துன்பங்களை எதிர்நோக்கி வருகின்ற நிலையில் இங்குள்ள இலங்கை வங்கிக் கிளையில் சிங்கள இனத்தவர் ஒருவர் காசாளராக நியமிக்கப்பட்டுள்ளமை இங்குள்ள தமிழ் மக்களை விரக்தியடையச் செய்துள்ளது. குறித்த காசாளருக்கு தமிழ் மொழி தெரியாது. அதனால் அந்த வங்கிக்கு செல்கின்ற பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் இங்குள்ளவர்கள் தெரிவிக்கின்றனர். தாங்கள் தமது வைப்பிலிருந்து பணத்தை எடுப்பதற்கு உரிய சிட்டைகளை பூர்த்தி செய்துகொண்டு செல்கின்ற போது குறித்த சிங்கள காசாளர் தடுமாறுவதாகவும் இதன்போது அது தொடர்பில் அங்குள்ள தமிழ் உத்தியோகத்தர்களை பொதுமக்கள் நாடுகின்ற போது அவர்கள் பொதுமக்களை கண்டபடி …
-
- 0 replies
- 332 views
-
-
சுகு சிறிதரனது பாரியார் ஞானசக்தி சிறீதரன் இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்து வடக்கு தேர்தலை எதிர்கொள்ள முடிவு செய்துள்ளது. அவ்வகையில் அவ்வமைப்பின் முக்கியஸ்தரான சுகு சிறிதரனது பாரியார் ஈபிடிபி சார்பில் இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். யாழ்.மாவட்டத்திற்கு ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் ஒரே ஒரு பெண் வேட்பாளராக ஞானசக்தி சிறீதரன் மட்டுமே களத்தில் குதித்துள்ளார். முன்னதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பினுடன் இணைந்து போட்டியிட பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி முற்பட்டிருந்தது.அவ்வகையில் ஆனந்த ச…
-
- 0 replies
- 499 views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச ஆதரவில் சிங்கள குடியேற்றங்கள் அதிகரிக்கப்படுவதாகவும் மாவட்டத்தை சிங்கள மயமாக்குவதில் மும்முரம் காட்டப்படுவதாகவும் த.தே.கூ நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா தெரிவித்துள்ளார். அம்பாறையிலிருந்து அழைத்து வரப்படும் சிங்கள குடும்பங்கள் பாரம்பரிய தமிழ் விவசாய கிராமங்களான கெவுலிய மடு போன்ற பிரதேசங்களில் குடியேறுவதாகவும் நீதி மன்ற உத்தரவுகள் மாவட்ட செயலகத்தின் முயற்சிகள் அனைத்தும் புறந்தள்ளப்பட்டு அரச ஆதரவில் குடியேற்றங்கள் நிகழ்வதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். அண்மையில் திருகோணமலை மாவட்டம், புல்மோட்டை எனும் 95 வீத முஸ்லிம்கள் வாழும் பிரதேசத்திலும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் நிகழ்வதாக தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. …
-
- 0 replies
- 487 views
-
-
தன்னை அடிக்கடி சந்திக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களின் பெயர்களை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வெளியிடுவாரா என பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் வாசிக்க..http://tamilworldtoday.com/?p=25698
-
- 0 replies
- 422 views
-
-
பரீட்சையின் விடைத்தாளுடன் பணநோட்டுக்களை இணைத்து கொடுக்கும் பரீட்சார்த்திகளைக் கண்டறிந்து அவர்கள் விசாரணைக்காக பரீட்சை திணைக்களத்துக்கு அழைக்கப்படுவார்கள் என பரீட்சை ஆணையாளர் டபிள்யூ. எம்.என்.ஜே. புஷ்பகுமார தெரிவித்தார். கடந்த முறை நடைபெற்ற பரீட்சையின் பல விடைத்தாளுடன் 5000 ரூபா பண நோட்டுக்கள் இணைக்கப்பட்டிருந்தது.அதுமட்டுமல்ல. மிகவும் மனமுருகக் கூடியவாறு வசனங்களையும பரீட்சார்த்திகள் எழுதியிருந்தனர்.இவ்வாறு செய்வதால் எவரும் சித்தியடையப் போவதில்லை. விடைத்தாள்களை நன்கு படித்து விளங்கிக் கொண்ட பின்னர் பதில் அளித்தால் மட்டுமே போதுமானது என்றும் தெரிவித்தார். விடைத்தாளுடன் இணைக்கப்படும் ரூபா நோட்டுக்கள் அரசின் கணக்கில் வைப்பிலிடப்படுமே தவிர பரீட்சார்த்திக்கு எதுவும் நடைபெ…
-
- 0 replies
- 231 views
-
-
இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளை புறக்கணிக்கப் போவதில்லை என பிரித்தானியா அறிவித்துள்ளது. பிரித்தானிய தமிழர் பேரவை, குறித்த அமர்வுகளை புறக்கணிக்குமாறு பிரித்தானியாவிடம் கோரியுள்ளது. எனினும் இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது. கள நிலவரங்களை நேரடியாக பார்வையிடவும், பொதுநலவாய நாடுகள் கொள்கைகளை அமுல்படுத்தவும் பிரித்தானியா நிச்சயமாக அமர்வுகளில் பங்கேற்கும் என அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் அலிஸ்டயர் பர்ட் தெரிவித்துள்ளார். இதேவேளை, பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்களில் பங்கேற்பதற்கு பிரித்தானியா எடுத்தத் தீர்மானம் தமிழ் மக்களை வருத்தமடையச் செய்யவுள்ளதாக பிரித்தானிய …
-
- 0 replies
- 232 views
-
-
பிரிட்டனில் தஞ்சம்கோரிய போர் குற்றவாளிகள் கண்டுபிடிப்பு - பி.பி.சி பிரிட்டனில் குடியேற விண்ணப்பம் செய்த சுமார் 100 பேர், போர் குற்றத்தோடு தொடர்புடையவர்களாக இருக்கலாம் என்று பிரிட்டிஷ் உள்துறை அமைச்சு பிபிசிக்கு அளித்த தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆப்கானிஸ்தான், இரான், இராக், லிபியா, ருவாண்டா, செர்பியா மற்றும் இலங்கையைச் சேரந்த சுமார் 100 பேர், போர் குற்றங்களோடு தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்துக்குள்ளாகியுள்ளனர். இவர்களில் பலர், ஏற்கனவே பிரிட்டனில் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். போர் குற்றவாளிகளுக்கு புகலிடம் கொடுக்கும் நாடாக பிரிட்டன் மாறக்கூடாது என்பதில் தாம் உறுதியாக இருப்பதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. அதேநேரம் போர் குற்றங…
-
- 1 reply
- 525 views
-
-
விக்னேஸ்வரன் முதலமைச்சர் ஆனால் தமிழருக்கு கண்ணீரும் சுடுகாடும் உறுதியாகும் என்று அமைச்சரும் ஜாதிக ஹெல உறுமயின் பொதுச் செயலாளருமான சம்பிக ரணவக்க எச்சரித்திருப்பது எதிர்காலத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசில் பிணமெரிக்கும் பொறுப்பை பெற்றுக்கொள்வதற்கான திட்டமா என ஐக்கிய தேசிய கட்சியின் உதவித் தவிசாளரும் ஊவாமாகாண சபை உறுப்பினருமான கே.வேலாயுதம் வினா எழுப்பியுள்ளார். சம்பிக்க ரணவக்கவின் கருத்து குறித்து கே.வேலாயுதம் இன்று (31) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இவ்வாறு கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, வட, கிழக்கில் மாகாணசபைத் தேர்தலை நடாத்தக்கூடாது நடாத்தினால் பாரிய விளைவுகளையெல்லாம் சந்திக்க நேரிடும் என வாய்கிழிய வீராப்பு பேசிய சம்பிக்க இந்திய …
-
- 1 reply
- 482 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் வடக்கு மாகாணசபைக்கான முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள, முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன், வடஇந்தியாவின் சிதார் இசைக்கருவியை வாசிக்கும் பயிற்சியைப் பெற்ற ஒரே இலங்கைத் தமிழராவார். இந்தத் தகவலை இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் வெளியிட்டுள்ளது. சிதார் இசைக்கருவியைத் தான், கொழும்பில் சித்ரசேன நடன,இசைப் பாடசாலையில் ரைடஸ் நொனிஸ் என்ற ஆசிரியரிடம் 40 ஆண்டுகளுக்கு முன்னர் கற்றுக் கொண்டதாக, விக்னேஸ்வரன் இந்தியன் எக்ஸ்பிரசிடம் தெரிவித்துள்ளார். பொது நிகழ்வு என்று, 1979 அல்லது 80இல் நீதிபதிகளின் கூட்டம் ஒன்றில் ஒன்றில் சிதார் இசைக்கருவியை, இசைத்ததை முக்கியமாகக் குறிப்பிடலாம் என்றும் அவர் கூறியுள்ளார். நீதிபதியான பின்னர், சிதார் கருவியுடன்…
-
- 2 replies
- 706 views
-
-
வடக்கு மாகாணசபை தேர்தலின் முக்கிய திருப்பு முனைதர்சானந் யாக பலம் வாய்ந்த மூன்றாவது அணியொன்று சுயேட்சையாக களமிறங்க தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னாள் ஊடகவியலாளர் ந.வித்தியாதரனை முன்னிறுத்தி கூட்டமைப்பினில் நிராகரிக்கப்பட்ட தரப்புக்கள் ஒன்றிணைந்து இத்தேர்;தலில் சுயேட்சையாக களமிறங்கவே முடிவு செய்துள்ளதாக தெரியவருகின்றது. கூட்டமைப்பின் வேட்பாளர் தெரிவு தொடர்பினில் அதிருப்தி அடைந்திருக்கும் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனின் உதயன் பத்திரிகை குறித்த சுயேட்சைக்குழுவிற்கு முழுமையான ஆதரவை வழங்க முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்நிலையினில் வித்தியாதரன அவசர அவசரமாக சந்திப்புக்களை நடத்த கொழும்பு சென்றுள்ளாதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. …
-
- 14 replies
- 1.5k views
-
-
இலங்கையில் மாகாணசபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலிருந்தே காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் மாகாணசபைகளுக்கு வழங்கப்படவில்லை. இந்த நிலையில் தற்போது மட்டும் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டியதில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்களுக்கான சந்திப்பு இன்று அலரி மாளிகையில் இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், இலங்கையில் மாகாணசபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலிருந்து காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் மாகாணசபைகளுக்கு வழங்கப்படவில்லை. இந்த நிலையில் தற்போது மட்டும் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டிய அவசியமில்லை. அத்துடன் மாகாண…
-
- 4 replies
- 406 views
-
-
முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் ஒருவரை இலங்கைக்கு திருப்பி அனுப்ப இந்திய அரசு தீர்மானித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க..http://tamilworldtoday.com/?p=25604
-
- 0 replies
- 594 views
-
-
கொழும்பு றோயல் கல்லூரியின் ஆசிரியை ஒருவர் பாடசாலையின் கூரை மீதேறி இன்று செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். தனக்கு வழங்கப்பட்டுள்ள இடமாற்றத்திற்கு எதிராகவே இவர் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். (படங்கள்: கித்சிறி டி மெல்) http://tamil.dailymirror.lk/--main/76979-2013-07-30-10-17-13.html
-
- 21 replies
- 1.2k views
-
-
வட மாகாணசபை தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சிலவேளை, வெற்றி பெற்று சி.வி. விக்கினேஸ்வரன் முதலமைச்சரானால் தமிழ் மக்களுக்கு கண்ணீர், இரத்தம் மற்றும் சுடுகாடு என்பவையே உறுதியாகும் என்று அமைச்சரும் ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளருமான சம்பிக்க ரணவக்க எச்சரித்தார். மேலும், http://tamilworldtoday.com/?p=25463
-
- 0 replies
- 611 views
-
-
யுத்தக் குற்றங்களைப் புரிந்த பெரும்பாலானோர் பிரிட்டனில் தங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. யுத்தக் குற்றங்களுடன் தொடர்புடைய நூற்றுக்கும் அதிகமானோர் தஞ்சம் கோரி விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு விண்ணப்பித்தவர்களில் அநேகர் நீண்டகாலமாக பிரிட்டனில் வாழ்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை, ஆப்கானிஸ்தான், ஈரான், ஈராக், லிபியா, ருவான்டா மற்றும் சேர்பியா ஆகிய நாடுகளைச் சேரந்த யுத்தக் குற்றவாளிகளாக சந்தேகிக்கப்படுவோர் பிரிட்டனில் தங்கியிருப்பதாக தெரியவருகிறது. இந்த நிலையில் பிரிட்டன் யுத்தக் குற்றவாளிகளுக்கு தஞ்சம் வழங்கும் நாடில்லை என அந்நாட்டு உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. பிரிட்டனில் தஞ்சம் கோரி விண்ணப்பித்துள்ளவர்களில் நூற்றுக்கும; அதிகமானோர் யுத்தக் …
-
- 1 reply
- 424 views
-
-
கொழும்பு வோக்ஷல் வீதியில் அமைந்துள்ள கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சின் ஊடகப் பிரிவிலும் மற்றும் ச.தொச. பணிப்பாளரின் அலுவலகத்திலும் இன்று (31) அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும், http://tamilworldtoday.com/?p=25395
-
- 0 replies
- 275 views
-
-
நடைபெறவுள்ள வடமாகாண சபை தேர்தலுக்கான வேட்பு மனுக்களை இன்று தாக்கல் செய்யவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னிணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார். தொடர்ந்த வாசிக்க, கேட்க, http://tamilworldtoday.com/?p=25353
-
- 0 replies
- 310 views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லை கிராமமான கெவிலியா மடுவில் 100 சிங்கள குடும்பங்கள் அத்து மீறி மீள்குடியேற்றப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராஜா தெரிவித்தார். மேலும், http://tamilworldtoday.com/?p=25345
-
- 0 replies
- 319 views
-
-
நவநீதம்பிள்ளை இலங்கைக்கு வரலாம், ஆனால் யுத்தம் இடம்பெற்ற இடங்களுக்குச் சென்று மக்களைச் சந்திப்பது, விசாரணைகளை மேற்கொள்வது, ஊடகவியலாளர் மாநாடு நடத்துவது என்பவற்றை அனுமதிக்க முடியாது என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் வசந்த பண்டார மேலும் தெரிவிக்கையில், ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவானது சர்வதேசத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அமைப்பாகும். எனவே, அதன் ஆணையாளர் நாயகம் என்ற ரீதியில் நவநீதம்பிள்ளை இலங்கை வருவதையோ, அரசாங்கம் உட்பட அரசியல் தலைவர்களை சந்திப்பதையோ, பேச்சுவார்த்தைகளை நடத்துவதையோ நாம் எதிர்க்கவில்லை. அதை விடுத்து யுத்தம் இடம்பெற்ற இடங்களுக்குச் சென்று மக்களைச் சந்திப்பது…
-
- 1 reply
- 542 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெற்றாலும் அதிகாரங்கள் வழங்கப்படமாட்டாது – மஹிந்த வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெற்றாலும் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை என்னிடம் இருந்து பறித்துக்கொள்ள முடியாது என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊடகங்களின் பிரதானிகளுடனான சந்திப்பொன்று இன்று (30) இடம்பெற்றது. இதன்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றியீட்டினால், பாரிய சவால்கள் ஏற்படுமா என கேட்டதற்கு கருத்து தெரிவிக்கையிலேயே மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார். 13ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்திலுள்ள பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் மத்திய அரசின் கீழ் தொடர்ந்தும் இருக்குமென மஹிந்த ராஜபக்ஷ இதன்போது கூறினார். என்றபோதிலும், தாம் எண்ணியதற்கும்…
-
- 1 reply
- 845 views
-
-
தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகமான அறிவகத்தில் தேர்தல் விதிமுறைகள் பற்றிய கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது. இக்கலந்துரையாடலில் இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், யாழ்ப்பாணத்தின் முதன்மை வேட்பாளரும் வடமாகாணத்துக்கான முதலமைச்சர் வேட்பாளருமான சீ.வி. விக்னேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர்கள் சி.சிறீதரன், எம்.ஏ.சுமந்திரன், கிளிநொச்சி மாவட்ட வேட்பாளர்கள் த. குருகுலராஜா, ப.அரியரத்தினம், சு.பசுபதிப்பிள்ளை கரைச்சிப் பிரதேச சபை உப தவிசாளர் வ.நகுலேஸ்வரன், கிளிநொச்சி மாவட்ட இளைஞரணிச் செயலாளர் கு.சர்வானந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர். http://www.seithy.com/breifNews.php?newsID=…
-
- 1 reply
- 652 views
-
-
அக்கரைப்பற்று இராமகிருஷ்ணமிஷன் மகாவித்தியாலயத்தில் உள்ள பழமை வாய்ந்த விபுலானந்தரின் சிலை முஸ்லீம் விசமிகளால் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது. பாடசாலையில் இரவு நேரக் காவலாளி இல்லாத நிலையில், விளக்குகளைப் போடுவதற்காக கடந்த சனிக்கிழமை இரவு 8 மணியளவில் ஆசிரியரொருவர் பாடசாலைக்குள் சென்றுள்ளார். சிலை உடைக்கப்பட்டிருப்பதை அவதானித்த அவர், பாடசாலையின் உப அதிபருக்கு இச்சம்பவம் தொடர்பாக தெரிவித்துள்ளார். சிலை உடைக்கப்பட்டமை குறித்து பெற்றோர்களும் இந்து அமைப்புக்களும் இது விஷமிகளால் மேற்கொள்ளப்பட்ட செயல் என தெரிவித்துள்ளனர். இச் சிலை உடைக்கப்பட்டது தொடர்பாக அதிகாரிகளிடம் முறைபாடு தெரிவித்தும் அவர்கள் அசமந்தபோக்கில் உள்ளனர் என இந்து அமைப்புக்கள் விசனம் தெரிவித்துள்ளன. இப் பாடசாலையி…
-
- 4 replies
- 612 views
-
-
இனப்படுகொலைக்கு எதிரான மாணவர் போராட்ட வரலாற்று ஆவணப்படமான அறப்போர் ஆவணப்படம் சென்னையில் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றம் பொது அவர் இதனை தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டு மாணவர்களை தமிழ்நாட்டு மாணவர்கள் என்று சொல்லுவதை விட தமிழ்நாட்டு மக்களுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்கள் என்று நான் சொல்லுகின்றேன்.உண்மையிலேயே தமிழ்நாட்டு மக்களின் சிந்தனையில் ஒரு பெரிய மாறுதலை கொண்டுவந்தவர்களாக மாணவர்கள் போராட்டத்தை நடத்தி அவர்கள் யார் என்பதை வரலாற்றில் பதிவு செய்திருக்கின்றார்கள். அவர்களின் ஆற்றல் மறைந்து கிடந்தது மாணவர்கள் போராளிகள் என்பதை நிறுவினார்கள் நிலைநாட்டினார்கள் அதனை நாங்கள் பார்த்தோம் மாணவர்கள் அப்படித்தான் வரலாற்றில் பெரிதும் இருந்திருக் கின்றார்கள்…
-
- 30 replies
- 3.1k views
-