ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143496 topics in this forum
-
மாகாண இராணுவ அதிகாரங்களுக்கு இடமில்லை – பசில் ராஜபக்ஷ 19 ஜூலை 2013 இலங்கையில் மாகாண இராணுவ அதிகாரங்களை வழங்குவதற்கு சந்தர்ப்பம் கிடையாது என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 13ம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் மாகாண சபைகளுக்கு காணி காவல்துறை அதிகாரங்கள் வழங்குவது தொடர்பில் இந்திய ஊடகமொனன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மாகாண காவல்துறை அதிகாரங்களின் அடிப்படையில் தனியான இராணுவ அலகுகளை உருவாக்க எவ்வித சாத்தியமும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 1988ம் ஆண்டு ஈ.பி.ஆர்.எல்.எப். வடக்கு கிழக்கு மாகாணத்தில் தமிழ்த் தேசிய இராணுவமொன்றை அமைக்க முயற்சித்தது என அவர் தெரிவித்துள்ளார். வடக்கிற்கு காவ…
-
- 2 replies
- 432 views
-
-
13-வது தந்திரம்! - ஆனந்தவிகடன் [ வியாழக்கிழமை, 18 யூலை 2013, 07:13 GMT ] [ அ.எழிலரசன் ] ராஜபக்ஷே அரசியலுக்கு வருவதற்கு முன்பு சினிமாவில் நடித்தவர். இப்போது ஜனாதிபதியாக ஆன பிறகும், வசனங்களில் வெளுத்து வாங்குகிறார். புதுசு புதுசாகப் பொய்களைச் சொல்வதில் சமர்த்தர். இந்தியா வந்திருந்தவரிடம் ஈழத் தமிழர் பிரச்னை பற்றிக் கேட்டபோது, ''என் நாட்டுப் பிரஜைகளைக் காப்பாற்ற எனக்குத் தெரியும்'' என்று சொன்னார். ''யாரும் இங்கே இருந்துகொண்டு பேசாதீர்கள். என் சொந்த செலவில், உங்களுக்கு இலங்கையைச் சுற்றிக்காட்டுவேன்'' என்று சிரித்தார். ''புலிகள் அமைப்பை மொத்தமாக முடித்து விட்டது என்னுடைய சாதனை'' என்றார். அப்புறம் எதற்காக வடக்கு, கிழக்கில் இத்தனை ராணுவ வீரர்கள் என்று கேட்டால், ''புலிகளின்…
-
- 0 replies
- 364 views
-
-
சபாஸ் நல்ல போட்டி - மாநில காவற்துறையின் இயலாமையே புத்தகாயா தாக்குதல் - விமல் - 19 ஜூலை 2013 ஜனாதிபதி ஆட்சியில் இலஞ்ச ஊழல் தலைவிரித்தாடுகிறது மஹிந்த திருடரா - றவி - மாநில காவற்துறையின் இயலாமையை இந்தியாவின் புத்தகாயா தாக்குதல் எடுத்து காட்டுவதாக அமைச்சர் விமல் வீரவங்ச கூறுவாரேயானால், ஐக்கியமான நாட்டில், நிறைவேற்று அதிகாரம் கொணட ஜனாதிபதி ஒருவரின் கீழ், இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு இருக்கும் போது, நாட்டில் அப்படியான சம்பவங்கள் தொடர்ந்தும் நடைபெறுவது, ஜனாதிபதி ஒரு திருடர் என்ற காரணத்தினாலா என ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார். நாட்டில் தற்போது, ஊழல் மோசடிகள் தலைவிரித்தாடி வருகிறது. அவற்றில் அதிகளவான ஊழல், மோ…
-
- 0 replies
- 328 views
-
-
வட மாகாணசபைத் தேர்தலுக்கு கண்காணிப்பாளர்களை அனுப்பி வைக்கப் போவதில்லை – ஐரோப்பிய ஒன்றியம் 19 ஜூலை 2013 எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள வட மாகாணசபைத் தேர்தலுக்கு தமது கண்காணிப்பாளர்களை அனுப்பி வைக்கப் போவதில்லை என ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. தற்போது இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் குழுவின் தலைவி ஜேன் லம்பார்ட் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஐரோப்பிய ஒன்றியம் பாரிய தேர்தல்களை கண்காணிக்கும் எனவும், வட மாகாணசபைத் தேர்தல்களை கண்காணிப்பதற்கு போதியளவு கால அவகாசம் கிடையாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். வட மாகாணசபைத் தேர்தல்களின் மூலம் நல்லிணக்க…
-
- 0 replies
- 295 views
-
-
மனித உரிமை விவகாரங்கள் குறித்து பிரித்தானியா தொடர்ந்தும் கவனம் 19 ஜூலை 2013 இலங்கையின் மனித உரிமை விவகாரங்கள் குறித்து பிரி;;த்தானியா தொடர்ந்தும் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் சாதக பாதக தன்மைகளை உள்ளடக்கியதாக அமைந்துள்ளதாக பிரித்தானிய வெளிவிவகாரத் திணைக்களம் அறித்துள்ளது. செனல்4 ஊடகத்தின் ஆவணப்படம் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என ஐரோப்பிய ஒன்றியத்திற்கான இலங்கைப் பிரதிநிதி வாக்குறுதி அளித்தமை வரவேற்கப்பட வேண்டியது என தெரிவித்துள்ளது. வடமாகாணசபைத் தேர்தல் நடத்தப்படுவது வரவேற்கப்பட வேண்டியது என குறிப்பிட்டுள்ளது. எவ்வாறெனினும், கருத்துச் சுதந்திரம் தொடர்பிலான நிலைமைகள் குறித்து திர…
-
- 0 replies
- 182 views
-
-
இலங்கையுடனான உறவுகளில் விரிசல் ஏற்படவில்லை - இந்தியா 19 ஜூலை 2013 இலங்கையுடனான உறவுகளில் விரிசல் ஏற்படவில்லை என இந்தியா அறிவித்துள்ளது. இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் மிக நெருங்கிய தொடர்புகள் காணப்படுவதாக வெளிவிவகார அமைச்சர் சல்மன் குர்ஷித் தெரிவித்துள்ளார். இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அணு விவகாரப் பேச்சுவார்த்தைள் குறித்த செய்தி தொடர்பில் பதற்றமடையத் தேவையில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையுடன் பல்வேறு விடயங்களில் ஒத்துழைப்பு ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இலங்கையில் தமிழர்களுக்கான புனர்வாழ்வு நடவடிக்கைகளில் இந்தியா காத்திரமான பங்களிப்பை வழங்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையுடன் மிக நெருங்கிய பிணைப்பு காணப்படு…
-
- 0 replies
- 550 views
-
-
இராணுவத்திற்கு அவமதிப்பை ஏற்படுத்தும் திரைப்படங்களை தயாரிக்க உதவும் அமைப்புகள் குறித்த விசாரணைகள் ஆரம்பம் : 19 ஜூலை 2013 இலங்கை இராணுவத்திற்கு அவமதிப்பை ஏற்படுத்தும் வகையில் திரைப்படங்களை தயாரிப்பதற்காக உதவிகளை வழங்கும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அரசசார்பற்ற அமைப்புகள் குறித்து அரசாங்கமும், பாதுகாப்பு அதிகாரிகளும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். ரோடர்டோம் ஹியுபேர்ட் சார்ள்ஸ் என்ற அமைப்பின் இலங்கையின் முகவர்கள் குறித்து ஏற்கனவே விசாரணைகளை ஆரமபித்துள்ளதாக அரசாங்கத்தின் உயர் மட்டத்தரப்பின் தகவல்கள் தெரிவித்தன. இலங்கை இராணுவத்தினர் போர் குற்றவாளிகள் என்று சர்வதேச சமூகத்திற்கு மத்தியில், இராணுவத்தினருக்கும் அவமானமான நிலைமையை ஏற்படுத்தும், வகையில், ஏற்கனவே 04 திரைப்பட…
-
- 0 replies
- 246 views
-
-
கூட்டமைப்பு சீ.வி.விக்னேஸ்வரனை தெரிவு செய்தமை அன்டன் பாலசிங்கம், மீண்டும் உயிர்த்தெழுந்தது போன்றது 19 ஜூலை 2013 சம்பிக்க: தமிழீழத்தை உருவாக்கும் மற்றுமொரு மாற்று நடவடிக்கையாகவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் சீ.வி.விக்னேஸ்வரனை வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக தெரிவுசெய்துள்ளதாக ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கூட்டமைப்பின் இந்த நடவடிக்கையானது விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம், மீண்டும் உயிர்த்தெழுந்தது போன்றது என தெரிவித்துள்ள அமைச்சர், இதன் மூலம் கூட்டமைப்பு இரண்டு விடயங்களை நிறைவேற்ற முயற்சிப்பதாகவும் வடக்கு மாகாண சபையின் அதிகாரங்கள் தொடர்பாக அரசாங்கத்துடன் ச…
-
- 0 replies
- 169 views
-
-
யாழ்ப்பாணம் பஸ் நிலையப் பகுதியில் குழந்தையுடன் பிச்சையெடுத்து வந்த பெண்ணொருவர் யாழ்ப்பாணம் பிரதேச செயலக ஊழியர்களினால் பிடிக்கப்பட்டு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் பஸ் நிலையப் பகுதியில் சுமார் ஒரு வயது மதிக்கத்தக்க குழந்தைப் பிள்ளையுடன்; கடந்த சில நாட்களாக நாற்பது வயது மதிக்கத் தக்க பெண் கொதிக்கும் வெய்யிலில் பி;ள்ளையையும் கொண்டு இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று பகல் பஸ் நிலையத்தை திறக்க வந்த யபாழ்ப்பாணம் பிரதேச செயலக ஊழியர்கள் குறித்த பெண்ணைப் பிடித்து யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய சிறுவர் மகளிர் விவகார பொலிஸ் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர். இதனையடுத்து குறித்தப் பெண்ணை யாழ்ப்பாணம் சிறுவர் நீதிமன்றத்தில் ஆஜர…
-
- 19 replies
- 1.4k views
-
-
சிறீலங்காவின் இனப்படுகொலையில் இருந்து உயிர்தப்பிய தமிழ் மக்களில் 50 ஆயிரம் பேருக்கு இந்தியா வீடு கட்டிக்கொடுக்கப்போவதாகக் கூறப்பட்டு நான்கு ஆண்டுகள் கடந்துவிட்டன. இதுவரை ஒரு சில வீடுகளே கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன. கட்டிக்கொடுக்கப்பட்ட ஒரு சில வீடுகளும் இடிந்து விழுந்து, அதன் கட்டுமானத் திறனை வெளிப்படுத்தி தமிழர்களை அச்சப்படுத்தியுள்ள நிலையில், இந்த வீட்டுத் திட்டத்தில் தமிழர்களைவிட போரில் பாதிக்கப்படாத முஸ்லீம்களும் சிங்களவர்களும் அதிகளவில் அடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போது முல்லைத்தீவு, கரைதுறைப்பற்றுப் பிரதேச செயலர் பிரிவில் காணிகளே இல்லாத 450 முஸ்லிம் குடும்பங்களுக்கு இந்திய வீட்டுத்திட்டமும் கூடவே காணியும் வழங்கப்படவுள்ளதாகத் தெரிய வருகிறது. …
-
- 4 replies
- 747 views
-
-
ஓர் நடுநிலையான அரசியல் விமர்சகராக சொல்லுங்கள். இலங்கை எப்படி இருக்கிறது? ''காங்கேசன் துறையில் ஆரம்பித்து காலி வரை இலங்கை முழுவதும் ராணுவமே வியாபித்திருக்கிறது. எங்கெங்கும் ராணுவ உடைகளும் துப்பாக்கிகளும் காட்சியளிப்பதாலே ஒருவித அச்ச உணர்வு மக்கள் மத்தியில் விதைக்கப்பட்டிருக்கிறது. மேலும், http://tamilworldtoday.com/?p=23325
-
- 0 replies
- 541 views
-
-
வடக்கு, மத்திய, வடமேல் மாகாண தேர்தல்கள் தொடர்பிலான முறைப்பாடுகளை பதிவு செய்ய 10 மாவட்டங்களிலும் நேற்று முதல் தேர்தல் இணைப்பு அலுவலகங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும் http://tamilworldtoday.com/?p=23293
-
- 0 replies
- 293 views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பின் வட மாகாண முதலமைச்சர் வேட்பாளாரக முன்னாள் சி.வி விக்னேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளமையானது, தமிழக அரசியல் வாதிகளின் அழுத்தத்தினாலேயே அன்றி இந்திய மத்திய அரசாங்கத்தின் அழுத்தம் எதுவும் இல்லையென அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க... http://tamilworldtoday.com/?p=23287
-
- 0 replies
- 519 views
-
-
கல்கிஸை - ஹூலுது கொட பகுதியில் நேற்றிரவு (18) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் குழுவினரை கைது செய்ய சென்ற பொலிஸார் மீது மறைந்திருந்த குழுவினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்திலேயே குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான விசாரணைகளை கல்கிஸ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். http://tamilworldtoday.com/?p=23269
-
- 0 replies
- 373 views
-
-
போதை தலைக்கு ஏறியதால் மகனை கடித்த சம்பவம் ஒன்று நேற்று இரவு அச்செழு மேற்கு சட்டக்கார பகுதியில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது. அளவுக்கு அதிகமாக மதுபாணம் அருந்தி விட்டு மனைவியை தாக்கியதனை அவதானித்த மகன் இடையில் சென்று தந்தையை தடுக்க முட்பட்டுள்ளார். தடுக்க வந்தது மகன் தான் என்பதுகூட தெரியாதளவுக்கு போதையில் நின்ற தந்தை மகனை பலமாக கடித்துக்குதறியுள்ளார். குறித்த சம்பவத்தால் பலத்த கடிகாயங்களுக்குள்ளான கஜன்சன் (வயது 13) யாழ் போதனை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அச்சுவேலி பொலிஸாhருக்கு வழங்கிய தகவலைஅடுத்து கடித்துக்குதறிய தந்தையை குற்றத்தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.இதனையடுத்து பொலிஸாரிடம் குறித்த தந்தை,…
-
- 6 replies
- 678 views
-
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பை மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப்பு ஆண்டனை நிராகரித்துள்ளார் எனத் தெரியவருகிறது. மேலும் http://tamilworldtoday.com/?p=23246
-
- 0 replies
- 325 views
-
-
அரசாங்கத்திற்கு எதிரான அரசியலில் ஈடுபடுபவர்களுக்கு ''புலி முத்திரை''க் குத்தி, மக்களை ஏமாற்றும் ராஜபக்ஷ அரசாங்கத்தினால் ஜனநாயகத்திற்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதென ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க.. http://tamilworldtoday.com/?p=23240
-
- 0 replies
- 405 views
-
-
சுரேஸின் வாகனம் விபத்துக்குள்ளானது! இளைஞர்கள் இருவர் காயம்!! தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற அங்கத்தவர் கந்தையா சுரேஸ்பிறேமச்சந்திரனது வாகனம் இன்றிரவு விபத்திற்குள்ளாகியுள்ளது.யாழ்- பருத்தித்துறை வீதியினில் வல்லைப்பகுதியினில் எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி அவரது கையஸ் ரக வாகனம் விபத்திற்குள்ளாகியுள்ளது.விபத்தினில் மோட்டார் சைக்கிளினில் பயணித்த இரு இளைஞர்கள் காயத்திற்குள்ளாகியிருந்தனர்.அவர்கள் மந்திகை அரசினர் வைத்தியசாலையினில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதனை வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தின. எனினும் நாடாளுமன்ற அங்கத்தவர் கந்தையா சுரேஸ்பிறேமச்சந்திரனோ அவரது சக பாடிகளோ காயங்களிற்குள்ளாகியிருக்கவில்லை.எதிர்வரும் மாகாணசபை தேர்தலிற்கான வேட்பாளர்கள…
-
- 0 replies
- 445 views
-
-
யாழ்.மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படுகின்ற பழவகைகளுக்கு வெளிநாடுகளில் சிறந்த சந்தை வாய்ப்பை எற்படுத்திக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆஸ்திரியா நாட்டின் இலங்கை மற்றும் இந்திய நாடுகளுக்கான தூதுவர் ரைமுன்ட் மாஜில் உறுதியளித்துள்ளதாக யாழ்.அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட தூதுவர் நேற்று மதியம் மாவட்டச் செயலகத்தில் அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தைச் சந்தித்து கலந்துரையாடினார். யுத்தத்திற்குப் பிந்திய காலத்தில் யாழ்.மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி தொடபாகவும் இங்குள்ள நிலமைகள் குறித்து ஆஸ்திரியா நாட்டின் தூதுவர் கேட்டறிந்ததுடன் யாழ்.மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படுகின்ற பழவகைகளை வெளிநாடுகளிற்கு ஏற்றுமதி செய்து…
-
- 2 replies
- 1.3k views
-
-
எதிர்வரும் வடக்கு மாகாண சபைத் தேர்தலின் போது, மக்களை அச்சுறுத்தி வாக்குகளைக் கொள்ளையிட்டத் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சுமத்தியுள்ளது. மேலும், http://tamilworldtoday.com/?p=23224
-
- 0 replies
- 619 views
-
-
இறுதிக் கட்ட யுததத்தின் போது பொதுமக்களின் மனித உரிமைகள் மீறப்பட்டமை குறித்து வடக்கிலுள்ள மக்களிடம் அரச சார்பற்ற நிறுவனமொன்ற தகவல்களைத் திரட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், http://tamilworldtoday.com/?p=23219
-
- 0 replies
- 502 views
-
-
வட மாகாணசபை தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள ஐந்து கட்சிகளுக்கும் இடையிலான வேட்பாளர் பங்கீடு பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் வாசிக்க...http://tamilworldtoday.com/?p=23205
-
- 0 replies
- 504 views
-
-
முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதியாகக் கடமையாற்றிய சீ.எம். விக்னேஸ்வரன், ஓய்வுபெற்ற நீதிபதி பீ.பீ. வராவெவ ஆகியோர் நீதிமன்றில் சேவைபுரிந்த காலத்தில் வழங்கிய தீர்ப்புக்கள் பற்றி சந்தேகம் எழுந்துள்ளதாக அரசாங்கம் தெரிவிக்கிறது. முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி சீ.வீ. விக்னேஸ்வரன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் வட மாகாணத்திற்கும், ஓய்வுபெற்ற நீதிபதி பீ.பீ. வராவெவ ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து மத்திய மாகாண சபைக்கும் முதலமைச்சர் வேட்பாளர்களாக போட்டியிட முன்வந்துள்ளது தொடர்பில் இச்சந்தேகம் எழுந்துள்ளதாக பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எஸ்.எம். சந்திரசேன குறிப்பிடுகிறார். தேர்தல் வேட்பாளர்களாக அவர்களின் பெயர்கள் முன்மொழியப்படுவதற்கு முன்னரேயே அவர்கள் அரசியல் ஆழக் காலூன்றிய…
-
- 2 replies
- 637 views
-
-
வடமாகாணசபை தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள ஐந்து கட்சிகளுக்கும் இடையிலான வேட்பாளர் பங்கீடு பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு வட்டாரங்கள் தினக்கதிருக்கு தெரிவித்தன. யாழ் மாவட்டத்தில் தமிழரவுக்கட்சிக்கு 10 வேட்பாளர்களும், ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ, புளொட், தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய கட்சிகளுக்கு தலா 3 வேட்பாளர்களும் ஒதுக்குவது என தீர்மானிக்கப்பட்ட போதிலும் ஈ.பி.ஆர்.எல்.எவ் தனக்கு 5 வேட்பாளர்களை ஒதுக்க வேண்டும் என கோரியிருப்பதாகவும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும் இந்த பிரச்சினைக்கு இன்று தீர்வு காணப்படும் என தெரிகிறது. மன்னார் மாவட்டத்தில் ரெலோவுக்கு 3 வேட்பாளர்களும், தமிழரசுக்கட்சி ஈ.பி.ஆர்.எல்.எவ் ஆகியவற்றி…
-
- 0 replies
- 685 views
-
-
யாழ்தேவி ரயில்சேவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் கிளிநொச்சி வரை சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், http://tamilworldtoday.com/?p=23136
-
- 0 replies
- 760 views
-