Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இந்திய தூதரகத்திலுள்ள நூலகத்தை பொதுமக்கள் பயன்படுத்த முடியும்; 400 இற்கும் மேற்பட்ட தமிழ்நூல்களும் உள்ளன யாழ்ப்பாணம், நல்லூர் மருதடியில் அமைந்துள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் அமைக்கப்பட்டுள்ள நூலகத்தை பொதுமக்களும் பயன்படுத்தலாம் என்று இந்திய துணைத்தூதரகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நூலகத்தில் ஆங்கிலம், தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளிலான ஆயிரத்துக்கு மேற்பட்ட நூல்கள் உள்ளன. இவற்றில் இந்து மதம், வரலாறு, தத்துவம், வெளிநாட்டுக் கொள்கைகள், யோகா, சாஸ்திரிய நடனம், சித்திரம் மற்றும் சமையற்கலை போன்ற விடயதானங்களில் 400 இற்கும் அதிகமான தமிழ் நூல்கள் உள்ளன. மேலும் சிறு தொகை ஆவணப்படங்கள் மற்றும் குறுந்திரைப்பட இறுவட்டுக்களும் உள்ளன. பொதுமக்கள்…

    • 3 replies
    • 592 views
  2. தமிழீழத்தை பெறுவதற்கான வாக்கெடுப்பை நடத்த தலையிடுமாறு புலம்பெயர் புலிகள் நோர்வேயுடன் பேச்சுவார்தை 06 ஜூலை 2013 இலங்கையை இரண்டாக பிரித்து, தமிழ் மக்களுக்கு தனித் தமிழீழத்தை பெற்றுக்கொள்வதற்காக ஐக்கிய நாடுகளின் தலையீட்டின் அடிப்படையில், இலங்கையில் மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பை நடத்த தலையீடுகளை மேற்கொள்ளுமாறு, புலம்பெயர் புலிகள் நோர்வே மற்றும் அந்த நாட்டின் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக திவயின தெரிவித்துள்ளது. இந்த பேச்சுவார்த்தையில், சர்வதேச ஈழ பேரவை, பிரித்தானியா தமிழர் பேரவை, நோர்வேயின் கிறிஸ்தவ ஜனநாயக கட்சி, தொழிலாளர் கட்சி, இடதுசாரி கட்சி ஆகியவற்றின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இலங்கை இராணுவத்தின் மீது சுமத்தப்பட்ட…

  3. நியமனக்குழுவே முதலமைச்சர் வேட்பாளரை தீர்மானிக்கும்! - கூட்டமைப்பின் நேற்றைய கூட்டத்தில் முடிவு!! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிகளும் இணைந்து அனைத்து விடயங்களையும் ஆராய்ந்து இறுதி முடிவெடுக்கும் வகையில் ஒருங்கிணைப்புக் குழுவொன்றை அமைத்துள்ளன. கொழும்பு பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகத்தில் நேற்று மாலை 5 மணியிலிருந்து இரவு 7.30 மணிவரை இடம்பெற்ற கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு இடையிலான முக்கிய கூட்டத்திலேயே இக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் தமிழரசுக் கட்சியின் சார்பில் அதன் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி., செயலாளர் மாவை சேனாதிராஜா எம்.பி., எம்.ஏ.சுமந்திரன் எம்.பி., ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்…

  4. தயா மாஸ்டருக்கு மட்டும் வாய்ப்பு – ஏனைய முன்னாள் புலிகளை கைகழுவுகிறது சுதந்திரக் கட்சி [ சனிக்கிழமை, 06 யூலை 2013, 00:40 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] வடக்கு மாகாணசபைக்கு வரும் செப்ரெம்பர் மாதம் நடைபெறவுள்ள தேர்தலில், போட்டியிடும் வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் பணிகளை சிறிலங்கா சுதந்திரக் கட்சி தீவிரப்படுத்தியுள்ளது. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதான கட்சியான, சிறிலங்கா சுதந்திரக் கட்சி வடக்கு மாகாணசபைத் தேர்தலில், போட்டியிடவுள்ள வேட்பாளர்களைத் தெரிவு செய்வதற்கான முதலாவது கட்ட நேர்முகத் தேர்வை ஏற்கனவே நடத்தியுள்ளது. முதற்கட்டமாக சுமார் 40 பேர் வரை நேர்காணல் செய்யப்பட்ட நிலையில் இன்று இரண்டாவது கட்ட நேர்முகத் தேர்வு நடத்தப்படவுள்ளதாக, சிறிலங்கா …

  5. பிரெட்ரிக்கா ஜேன்ஸ் அமெரிக்காவில் அரசியல் தஞ்சம்? பாதுகாப்புச் செயலாளரின் கடும் அச்சுறுத்தல் காரணமாக நாட்டைவிட்டு வெளியேறியிருந்த ஊடகவியலாளர் பிரெட்ரிக்கா ஜோன்ஸ், அமெரிக்காவில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சண்டே லீடர் பத்திரிகையில் ஆசிரியராக இருந்து பிரெட்ரிக்கா ஜோன்ஸ் போர்கால நெருக்கடிகளை பத்திகையில் எழுதிவந்தார். இந்தநிலையில், வெள்ளைக் கொடிகளுடன் சரணடைய வந்த விடுதலைப் புலிகளின் தலைவர்களை படுகொலை செய்யுமாறு பாதுகாப்புச் செயலாளர் உத்தரவிட்டதை சரத் பொன்சேகாவின் வாயால் வரவழைத்து, தனது பத்திரிகையில் அவர் எழுதியதால் பிரச்சினையில் மாட்டிக்கொண்டார். இதனையடுத்து அவர் தனது பாதுகாப்புக் கருதி நாட்டைவிட்டு வெளியேறினார். இந்நிலையில் அவர் அமெரிக்காவில் அ…

  6. சில வெளிநாட்டு தூதரகங்களும் புலனாய்வு அமைப்புகளுமே தொலைபேசி உரையாடல்களை செவிமடுப்பதில் சம்பந்தம் 06 ஜூலை 2013 தான் கையடக்க தொலைபேசியை பயன்படுத்தும் அனைத்து சந்தர்ப்பங்களிலும், அலைவரிசை மாத்திரமின்றி, அழைப்பின் நிலைமையும் குறைவதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கையடக்க தொலைபேசி உரையாடல்களை செவிமடுக்கும் இயலுமை சில வெளிநாட்டு தூதரக அலுவலங்களுக்கு இருப்பதாக தெரிவித்துள்ள கோத்தபாய, தனது தொலைபேசி உரையாடல்களை எவரே செவிமடுக்கின்றனர் என்ற கடும் சந்தேகம் தனக்கு இருப்பதாகவும் கூறியுள்ளார். பாதுகாப்புச் செயலாளர் தனது கையடக்க தொலைபேசி இனந்தெரியாதவர்களினால் செவிமடுக்கப்படுவதாக ஏற்கனவே புலனாய்வுப் பிரிவினரிடம் முறைப்பாடு செய்திருந்தார். அத்துடன் சில ம…

  7. ஜனாதிபதி 13 பிளஸ் அதிகார பரவலாக்கத்தை வழங்குவதாக இந்தியாவுக்கு உறுயதிளித்திருந்தார் - திஸ்ஸ விதாரண 06 ஜூலை 2013 ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ 13வது அரசியல் அமைப்புத் திருத்ததிற்கு அப்பால் சென்று 13 பிளஸ் என்ற அதிகார பரவலாக்கத்தை வழங்குவதாக இந்தியாவுக்கு உறுதிளித்திருந்தாக சிரேஷ்ட அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். இது தொடர்பான செய்திகள் பல ஊடகங்களிலும் பத்திரிகைகளிலும் வெளியாகியதாகவும் அதனை ஜனாதிபதி மறுக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற விவாதம் ஒன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார். சர்வக்கட்சி குழுவில் தாம் பணியாற்றிய போது, அதிகாரப்பரவலாக்கம் தொடர்பாக தற்காலிக அறிக்கை ஒன்றை வழங்குமாறு ஜனாதிபதி தம…

  8. வட மாகாணசபைத் தேர்தலை ஒத்தி வைக்குமாறு தேப்பற்றுடைய அமைப்புக்கள் கோரிக்கை 06 ஜூலை 2013 வட மாகாணசபைத் தேர்தலை ஒத்தி வைக்குமாறு தேசப்பற்றுடைய அமைப்புக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளன. தேசப்பற்றுடைய அமைப்புக்களின் ஒன்றிணைந்த கூட்டணி இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது. காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் 13ம் திருத்தச் சட்டத்திலிருந்து நீக்கப்படும் வரையில் இவ்வாறு மாகாணசபைத் தேர்தல் ஒத்தி வைக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரதான கூட்டணி கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, 13ம் திருத்தச் சட்டத்தின் பிரிவினைவாத சரத்துக்களை நீக்குமாறு கோரியுள்ளதாக குறித்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. நாட்…

  9. இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார் 06 ஜூலை 2013 இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வுத் திட்டம் காண்பது தொடர்பில் பேச்சுவார்த்தை நடாத்த, குர்ஷித் இலங்கைக்கு விஜயம் செய்வார் என தெரிவிக்கப்படுகிறது. பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ, நேற்றைய தினம் வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷிதை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். இதன் போது 13ம் திருத்தச் சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் எனவும் அதற்கு அப்பாலான தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க வேண்டுமெனவும் குர்ஷித், பெசில் ராஜபக்ஷவிடம் கோரியிருந்தார். http://www.globaltamilnews.net/…

  10. யாழ்தேவி இரண்டு மாதங்களுக்குள் கிளிநொச்சி வரை தனது பயணத்தை மேற்கொள்ளும் 05 ஜூலை 2013 யாழ்தேவி தொடருந்து எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் கிளிநொச்சி வரை தனது பயணத்தை மேற்கொள்ளும் என போக்குவரத்து அமைச்;சு தெரிவித்துள்ளது. அத்துடன் இந்த வருட இறுதிக்குள் யாழ்தேவி தொடருந்து தனது சேவைகளை யாழ்ப்பாணம் வரை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வட பகுதிக்கான தொடருந்து பாதையை அமைக்கும்இ பணிகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு போக்குவரத்து அமைச்சர் குமார் வெல்கமவுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் போது இந்த விடயம் பேசப்பட்டுள்ளது. இந்த தொடருந்து பாதை நிர்மாணிக்கப்படுவதன் மூலம் பாதிக்கப்பட்டுள்ள தெற்கு மற்றும் வடக்கு இடையிலான உறவுகள் மேன்படும் என…

  11. தஞ்சம் கோரிகள் தொடர்பில் பிரிட்டனில் முக்கியத் தீர்ப்பு அரசியல் போராட்டங்கள் பல புலம் பெயர் தமிழர்களால் நடத்தப்படுகின்றன ஐக்கிய ராஜ்ஜியத்தில் அரசியல் தஞ்சம் கோரும் இலங்கையர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்கும்போது, போரின்போது அவர்களின் செயல்பாடு மற்றும் புலம் பெயர்ந்த நாடுகளில் அரசியல் நடவடிக்கைகளில் அவர்கள் காட்டிய ஈடுபாடு போன்ற காரணிகளை கருத்தில் கொள்ள வேண்டும் என்று பிரிட்டிஷ் நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ளது. தஞ்சம் கோரிகளின் மனுக்களை தீர்மானிக்கும் முக்கிய அம்சமாக மனுதாரரின் நாடு குறித்த பரிந்துரையின்படி (country guidance) அதிகாரிகள் செயல்பட வேண்டும். சமீபத்தில் அளிக்கப்பட்ட தீர்ப்பில் விடுதலைப் புலிகள் அமைப்போடு தொடர்புடையவர்கள் மட்டுமல்லாது வெளிநாடுகளிலிருந்…

  12. எஸ்.கே.பிரசாத், சுமித்தி தங்கராசா யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனநாயக் கட்சியின் தலைவருமான சரத்பொன்சேகா இன்று வெள்ளிக்கிழமை நல்லூர் கந்தசாமி கோவிலில் விசேட வழிபாடுகளில் ஈடுபட்டார். http://tamil.dailymirror.lk/--main/73789-2013-07-05-08-21-47.html

  13. காணாமல் போனவர்கள் தொடர்பில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ள போதிலும் இதுவரை எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என காணாமல் போனோரின் பெற்றௌர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க...http://tamilworldtoday.com/?p=20738

    • 0 replies
    • 327 views
  14. என்றும் ஈழத்தமிழனுக்காக ஆறுதல் கரம் தந்து ஆதரவு தரும் தமிழக உறவுகளுக்கு வணக்கம், நாம் நிமிர்வாக எழுந்து நின்றபோதும் எமது தோள்களோடு தோள் நின்றவர்கள் நீங்கள், நாம் இரத்தச் சகதிக்குள் அமிழ்ந்தபோதும் துடித்தவர்கள் நீங்கள். எங்கள் வலிகளை புரிந்து கொள்வதற்கு இடையே இன்னொரு மொழி தேவையில்லை என்கின்ற ஆறுதலுடன் உங்களுடன் எங்கள் உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ள முற்படுகின்றோம். ஈபிடிபியின் ஆளுகையின் கீழ் உள்ள யாழ்.மாநகரச சபை மற்றும் யாழ்.இந்தியத் துணைத் தூதரகம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் வெளியீட்டார்கள் சங்கத்தினால் புத்தகக் கண்காட்சி நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக அறியமுடிகின்றது. தமிழகத்தில் விற்பனையாகின்ற பு…

  15. வடமாகாண சபை தேர்தல் குறித்த திகதி இன்னும் 7 நாட்களுக்குள் அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க...http://tamilworldtoday.com/?p=20721

    • 0 replies
    • 432 views
  16. குமரன் பத்மநாதன் பற்றிய தகவல்களை அரசாங்கம் அம்பலப்படுத்த வேண்டும் - ஐ.தே.க 05 ஜூலை 2013 தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் எனப்படும் கே.பி.யின் விபரங்களை அரசாங்கம் அம்பலப்படுத்த வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. எதிர்வரும் வட மாகாணசபையில் குமரன் பத்மநாதன் போட்டியிட்டால், குமரன் பத்மநாதன் பற்றிய விபரங்கள் அம்பலப்படுத்தப்பட வேண்டியது அவசியமானது என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பின ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். பயங்கரவாத நடவடிக்கைகள் மற்றும் ஏனைய சகல விபரங்கள் பற்றியும் அம்பலப்படுத்தப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர்…

  17. வட மாகாண சபை தேர்தலுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவிற்கு உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க... http://tamilworldtoday.com/archives/20678

  18. யாழில் இருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த இரு தனியார் பஸ்கள் மீது நேற்று இரவு இனம் தெரியாத நபர்கள் கல் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். யாழில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு கொழும்பு நோக்கி ஒன்றன்பின் ஒன்றாக சென்று கொண்டிருந்த பஸ்கள் மீதே எழுதுமட்டுவாழ் பகுதியில் வைத்து இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இரு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் இத் தாக்குதலை நடத்தியதாகவும் தாக்குதல் காரணமாக ஒரு பஸ்ஸின் முன் பக்க கண்ணாடி முற்றாகச் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் இச் சம்பவம் பற்றி தெரியவருவது யாழ். நகரில் இருந்து குறித்த பஸ் புறப்பட முன்னர் அதன் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் ஆகியோருடன் வேறு சிலர் வாக்குவாதப்பட்டதாகவும் அதன் பின்னர் பஸ் …

    • 1 reply
    • 452 views
  19. 006 ஆம் ஆண்டு இராணுவத்தினரால் கடத்தப்பட்ட தனது மகனை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவிடம் தாயொருவர் கதறியழுத சம்பவம் இன்று யாழில் நிகழ்ந்தது. வடமாகாண சபைத் தேர்தலை இலக்கு வைத்து யாழ்பாணத்திற்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகா, கலட்டி இராமநாதன் வீதியில் அமைந்துள்ள மிலேனியம் விருந்தினர் விடுதியில் இன்று மக்களை சந்தித்து கலந்துரையாடினார். அதன்போதே தாயொருவர் 2006 ஆம் ஆண்டு காணாமல் போன தனது 15 வயது மகனை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கண்ணீருடன் தெரிவித்தார். தொடர்ந்தும் அந்த தாய் கூறியதாவது, சாவகச்சேரி தான் எனது ஊர். எனக்கு 5 பிள்ளைகள். கணவரின் உதவிகள் எதுவும் இன்றி அவர்களை வளர்த்து வந்தேன…

  20. சீனாவின் கடல்சார் நடவடிக்கைகள் அடுத்த பத்து ஆண்டுகளில் இந்திய மாக்கடல் பிராந்தியத்தில் அதிகரிப்பதால் ஏற்படுகின்ற ஆபத்தை தவிர்ப்பதற்கு, சீனா மற்றும் சிறிலங்கா தொடர்பான தனது மூலோபாயக் கொள்கைகளில் இந்தியா மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும். இவ்வாறு சண்டேலீடர் ஆங்கில வாரஇதழுக்கு அளித்துள்ள செவ்வியில் குறிப்பிட்டுள்ள இந்திய இராணுவத்தின் முன்னாள் புலனாய்வுத்துறை அதிகாரியான கேணல் ஆர்.ஹரிகரன். அவரது செவ்வியை 'புதினப்பலகை'க்காக மொழியாக்கம் செய்துள்ளவர் 'நித்தியபாரதி'. கேள்வி: சிறிலங்காவின் தேசிய பிரச்சினையில் இந்தியா கடந்த பல பத்தாண்டுகளாக ஆர்வத்துடனும் சில நேரங்களில் கண்டுகொள்ளாதும் நடந்துள்ளது. தற்போது சிறிலங்காவில் 13வது திருத்தச் சட்டம் மற்றும் வடக்கு மாகாண சபைத் தேர்தல் போன்றன …

  21. புத்தளம், முள்ளிபுரம் காற்றுமின் உற்பத்தி நிலையத்திலுள்ள காற்றாடிகள் ஒன்றில் பாரிய தீ விபத்து ஏற்பட்டள்ளது. 15 ஆவது காற்றாடியிலேயே இந்த தீ விபத்து இன்று மாலை மூன்று மணியளவில் ஏற்பட்டுள்ளது. தீ ஏற்பட்டமைக்கான காரணம் உடனடியாக கண்டுப்பிடிக்கப்படவில்லை. என்பதுடன் அந்த பகுதியில் மின்சாரமும் தடைப்பட்டுள்ளது. காற்றாடி கடும் உயரத்தில் இருப்பதனால் அதில் ஏற்பட்ட தீயை அணைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. எனினும், சில மணிநேரத்திற்கு பின்னர் அந்த தீ தானாகவே அணைந்துவிட்டது. இந்த தீ விபத்து தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-09-21-10-47-44/73809-2013-07-05-10-29-42.html

  22. அண்மைக்காலமாக பல இடங்களில் இவ்வாறு ஆயுதங்களும், துப்பாக்கிகளும், துப்பாக்கி ரவைகளும் மீட்கப்பட்டு வருகின்றமை பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், http://tamilworldtoday.com/?p=20656

    • 0 replies
    • 338 views
  23. வட மாகாண சபை தேர்லை நடத்துவதற்கான அனுமதியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தேர்தல் ஆணையாளருக்கு இன்று வெள்ளிக்கிழமை வழங்கியுள்ளார். புதிதாக மாகாணசபை ஒன்றுக்கு தேர்தல் நடத்துவதாக இருந்தால் ஜனாதிபதியின் அனுமதி தேர்தல் ஆணையாளருக்கு கிடைக்க வேண்டும். இதன் படி இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. 1988ஆம் ஆண்டு இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு தேர்தல் நடத்தப்பட்ட போதிலும் வடக்கு கிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்பட்ட பின்னர் வடமாகாணத்திற்கு முதன்முறையாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. 1988ஆம் ஆண்டிலும் வடமாகாண மக்கள் மாகாணசபை தேர்தலில் வாக்களிக்கவில்லை. இந்திய இராணுவம் இருந்த காலத்தில் ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியை தவிர ஏனைய கட்சிகள் வேட்புமனு தாக்கல் செய்ய இந்திய அடாவடி இராணுவம் அனுமதி வழங்கவில்லை. …

  24. சுமித்தி தங்கராசா 'இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவை வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக தெரிவு செய்யாவிடின் தீக்குளிக்க தயங்கமாட்டேன்' என யாழ். மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் சிறிகரன் நிஷாந்தன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சபை தேர்தல் தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'நீண்டகால அரசியல் அனுபவமும், ஆயுதம் தூக்காத மாறாத கொள்கையுடன் அகிம்சை பேராட்டத்தை நடத்திய அனுபவமும் தூரநோக்குச் சிந்தனை, செயல்திறன், பேச்சாற்றல், கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சோ.சேனாதிராஜாவை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வடமாகாண முதலமைச்சர் வேட்ப…

  25. தமிழர் தாயக உரிமை மீட்பிற்காக தம்முயிர்களை தற்கொடையாக்கிய கரும்புலிகள் நாள் இன்று. இந்த நாளை ஒட்டி தமிழீழப் பகுதிகளில் ஏதாவது நினைவு நிகழ்ச்சிகள் நடந்தால் அதனை உடனடியாக தடுத்து நிறுத்த படைகள் சிங்களப் படைகள் உசார்படுத்தப்பட்டுள்ளன. தமிழர் தாயகப் பகுதிகளில் கறுப்புக் கொடிகள் கட்டப்பட்டிருந்தால் அவற்றை அறுத்தெறியும் நடவடிக்கைகளிலும் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினால் 1987 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 5 ஆம் திகதி முதலாவது கரும்புலித் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலுக்கும், இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கும் நெருக்கமான தொடர்பும் உள்ளது குறிப்பிடத்தக்கது. நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் அமைந்திருந்த இராணுவ முகாம் மீது வெடிபொருள…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.