Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கிளிநொச்சி மாவட்டத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு தாய் தந்தையர்களை இழந்த சிறுவர்களின் எதிர்கால நலனிற்காக பன்னாட்டு மனித நேய நிறுவனம் ஒன்று வழங்கிய ஐம்பது லட்சம் ரூபாவுக்கான காசோலையை வலயக்கல்வி அலுவலகத்திலிருந்து கிளிநொச்சி இராணுவத்தளபதி அபகரித்து சென்றுள்ளார். மேலும், http://tamilworldtoday.com/?p=17758

  2. தமிழ்த் தேசிய இனத்தின் மீது தொடர்ச்சியான இனவழிப்புப் போரை கட்டவிழ்த்து விட்டுள்ள சிங்கள இனவெறியாளர்களின் ஆட்சியரங்காகவுள்ள சிறிலங்காவினை புறக்கணிக்கக் கோரி புலம்பெயர் தமிழீழ மாணவர்களினால் 17.06.2013 அன்று ஓவல் துடுப்பாட்ட மைதானம் முன்பாக ஒழுங்கு செய்யப்பட்ட அமைதிவழியான கவனயீர்ப்புப் போராட்டம் சிங்கள இனவெறியாளர்களின் காட்டுமிராண்டித்தனமான வன்முறைத் தாக்குதலுக்குள்ளானது. தாயகத்தில் பல்வேறுபட்ட ஒடுக்குமுறைகளுக்குள் அடக்கி ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் எமது தமிழீழ மக்கள் தமது அடிப்படை உரிமைகள் யாவும் மறுக்கப்பட்டு திறந்த வெளிச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். தாயகத்தில் தமிழீழ மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ள இன அடக்குமுறைக்கு எதிராக எழுப்பப்படும் எந்தவகையான குரல்களு…

  3. காவல்துறை அதிகாரங்களை வழங்க முடியாது என இந்தியாவிற்கு தெளிவுபடுத்தப்பட்டது : கோதபாய காவல்துறை அதிகாரங்களை வழங்க முடியாது என்பதனை இந்தியாவிற்கு தெளிவுபடுத்தியுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். யுத்தம் இடம்பெற்ற காலத்தில் இது தொடர்பிலான விளக்கம் அளிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.மாகாணசபைகளுக்கு காணி அதிகாரங்களை வழங்குவதனால் ஏற்படக் கூடிய பாதிப்புக்கள் இந்திய மத்திய அரசாங்கத்திற்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தேசிய பாதுகாப்பிற்கும் அரசியல் ஸ்திரத்தன்மைக்கும் குந்தகம் ஏற்படக் கூடிய அபாயம் காணப்படுவதனால் இவ்வாறு காவல்துறை அதிகாரங்களை பகிர முடியாது என தெளிவுபடுத்தப்பட்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அனைத்து இ…

    • 0 replies
    • 452 views
  4. ஆயுத போராட்டத்தின் மூலம் அடைய முயற்சித்தவற்றை TNA ஜனநாயக ரீதியாக அடைய முயற்சிக்கின்றது : லக்ஸ்மன் யாபா தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுத போராட்டத்தின் மூலம் அடைய முயற்சிக்கப்பட்ட விடயங்களை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனநாயக ரீதியில் அடைய முயற்சித்து வருவதாக அமைச்சர் லக்ஸ்மன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார். இதனை அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 13ம் திருத்தச் சட்டத் திருத்தம் தொடர்பிலான பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு அழைப்பு விடுப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காத்திரமான முறையில் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முனைப்பு காட்டத் தவறியுள்ளது என அவர் சுட்டிக்காட்டுள்ளார். …

    • 0 replies
    • 1k views
  5. மாகாணங்களுக்கு காவல்துறை அதிகாரங்களை வழங்கப் போவதில்லை என இந்தியாவுக்கு அறிவித்துள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். மேலும், http://tamilworldtoday.com/?p=17728

    • 1 reply
    • 488 views
  6. இந்தியத் தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் மூத்த இராஜ தந்திரியுமான சிவ்சங்கர் மேனன் இந்திய அரசின் ஏற்பாட்டில் முக்கிய பயணமொன்றை மேற்கொண்டு ஜூலை 7ஆம் திகதி கொழும்பு வரவுள்ளார். முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பயணத்தின் போது மேனன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்களைச் சந்திப்பாரெனத் தெரிகிறது. பிராந்தியப் பாதுகாப்பு குறித்த பேச்சுகளை நடத்தும் நோக்கிலேயே மேனன் கொழும்பு வருவதாகக் கூறப்பட்டாலும், அவர் இலங்கை அரசுடன் 13 ஆம் திருத்தச் சட்டச் சர்ச்சைகள் குறித்துப் பேசும் நோக்கிலேயே கொழும்புக்கு வருவதாக இந்திய உயர்மட்ட வட்டாரங்கள் நேற்றுத் தெரிவித்தன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குழுவினர் இந்தியாவுக்க…

  7. "மத்திய அரசினது தலையீடு இல்லாத எங்கள் அலுவல்களை நாங்களே பார்த்துக் கொள்ளக்கூடிய சமஸ்டி தீர்வொன்றே எமக்கு பொருத்தமானது" என தெரிவித்தார் புளொட் அமைப்பின் தலைவரான தர்மலிங்கம் சித்தார்த்தன். இன்று யாழப்பாணத்தினில் அவர் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். "எமக்கான நியாயமான தீர்வாக சமஸ்டி தீர்வே அமைய முடியும். ஆனால் இந்த இனவாத அரசு அவ்வாறான தீர்வொன்றை தரப்போவதில்லை என்பது நிச்சயம்" எனவும் அவர் தெரிவித்தார். 26 வருடங்களிற்கு முன்னதாக தமிழ் தரப்புக்கள் நிராகரித்த 13வது திருத்தச்சட்டத்தின் கீழான மாகாணசபையை தப்ப வைத்துக்கொள்ள நாம் இப்போது போராட வேண்டியிருக்கின்றது.கூட்டமைப்பினர் இந்தியாவிற்கு சென்று …

    • 10 replies
    • 1.3k views
  8. மாகாண சபைகளுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை பெற்றுக் கொடுத்தால் நடைபெறவுள்ள வட மாகாண சபைத் தேர்தலில் தமது கட்சி பங்கேற்காது என தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது. எனினும், பொலிஸ், காணி அதிகாரங்களுடன் வடக்குத் தேர்தல் நடத்தப்பட்டால் தாம் அமைச்சுப் பதவிகளைத் துறந்துவிட்டு அரசாங்கத்திலிருந்து வெளியேறுவோம் என அமைச்சர் வீரவங்ச கடந்த மேதினப் பொதுக் கூட்டத்தில் கெக்கரித்திருந்தார். தற்போது மாகாண சபைகளில் பங்கேற்கமாட்டோம் எனத் தெரிவித்துள்ளார். அரசாங்கத்திலுள்ள சில சிரேஷ்ட அமைச்சர்கள் 13ஆவது திருத்தத்திற்கு வலுவாக எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் அமைச்சர் வீரவங்சவை சற்று அடங்கிப் போகத் தீர்மானித்துள்ளாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. வடமாகாண சபைத் தேர்தலில் பங்கேற்…

  9. விடுதலைப் புலிகள் துப்பாக்கிகளின் மூலம் அடைய நினைத்ததை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனநாயக ரீதியாக அடைவதற்கு சிறிலங்கா அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது என முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் செய்யக் கூடியது ஒன்றுமில்லை. ஆனால், இந்த விவகாரத்தை பின்தள்ளிப் போடலாம். அது தமிழ் மக்களுக்கு தீங்கானது. எதைச் செய்ய வேண்டுமானாலும், அவர்கள் தெரிவுக்குழு முன் தோன்ற வேண்டும். தற்போதைய பிரச்சினைக்கு சிறிலங்கா அரசாங்கத்தினாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினாலும் தனித்து தீர்வு காணமுடியாது. அவர்கள் ஒரு ஜனநாயக வழிமுறைக்கு வந்தால், அந்த வழியிலேயே தொடர்ந்து நிற்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். விடுதலைப் புல…

  10. 4 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 68 வயது முதியவரை கைதுசெய்துள்ளதாக யாழ்.சிறுவர் பெண்கள் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார். கொக்குவில் கிழக்கு பகுதியைச் சேர்ந்த 4 வயது சிறுமி ஒருவரே இத்தகைய நிலையை எதிர்கொண்டுள்ளார். இச்சிறுமி அதே இடத்தில் ஆங்கில வகுப்பிற்கு சென்று வரும்போது, மேற்படி முதியவர் சிறுமியை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுவதை கண்டவர்கள் இதுதொடர்பில் சிறுமியின் பெற்றோருக்கு தெரிவித்ததை அடுத்து சிறுமியின் பெற்றோர் யாழ்.சிறுவர் பெண்கள் பிரிவு பொலிஸ் பிரிவில் முறைப்பாடு செய்தனர். இதனை தொடர்ந்து குறித்த முதியவரை கைதுசெய்துள்ளதாக பொறுப்பதிகாரி தெரிவித்தார். http://tamil.dailym…

  11. யாழ்.குடாநாட்டில் மீண்டும் கப்பம் அறவிடும் நடவடிக்கைகள் சத்தமின்றி தலைதூக்க தொடங்கியுள்ளதாக யாழ்.வணிகர் கழக தரப்புக்கள் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிவித்துள்ளன. குறிப்பாக வர்த்தகர்களை இலக்கு வைத்தே இக்கப்பக்கும்பல்கள் செயற்படுவதாக அத்ததரப்பினர்; மேலும் தெரிவிப்பதுடன் இச்சம்பவத்தின் பின்னணியில் பாதுகாப்பு தரப்பை சேர்ந்தவர்களே இருப்பதாக சந்தேகிக்கப்படுவதால் எவரிடம் முறைப்பாடு செய்வதென தெரியாதிருப்பதாக கவலை வெளியிட்டுள்ளனர். கப்பம் வாங்குவதற்கும் புதிய புதிய உத்திகளை அமுல்படுத்தும் கும்பல்கள் தற்போது இலங்கையின் முன்னணி தொலைபேசி வழங்கும் நிறுவனம் பயன்படுத்தும் ஈசிகாஸ் EZ Cash எனும் உத்தியை பயன்படுத்துவதாக கூறப்படுகின்றது. ஆகக்கூடியதாக இலங்கை பணத்தில் பத்தாயிரம் ரூ…

  12. துறைமுக தீ விபத்து : பணிப்பாளர்கள் இருவருக்கு விளக்கமறியல் வியாழக்கிழமை, 20 ஜூன் 2013 02:41 0 COMMENTS 60 கோடி ரூபாய் நட்டத்தை ஏற்படுத்திய கொழும்பு துறைமுக களஞ்சியசாலை தீ விபத்து தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பணிப்பாளர்கள் இருவரையும் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பணிப்பாளர்கள் இருவருரையும் கொழும்பு மேலதிக நீதவான் சந்திம பெர்னாண்டோ முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்திய போதே அவ்விருரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். விரைவாக தீ பற்றக்கூடிய இராசாயன பொருட்களை அனுமதியின்றி களஞ்சியப்படுத்தியிருந்தனர் என்ற குற்றச்சாட்டு இவ்விருவருக்கும் எதிராக சுமத்தப்பட்ட…

  13. இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் ராஜீவ் காந்தியைக் கொலை செய்த புலிகளின் அரசியல் குழுவையும், நாடாளுமன்றக் குழுவையும் அழைத்து தற்போது பேச்சு நடத்தி வருவதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். மேலும், http://tamilworldtoday.com/?p=17681

    • 0 replies
    • 497 views
  14. 2009ல் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக சிறிலங்கா பாதுகாப்புப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாக குற்றம் சாட்டப்பட்ட போர்க் கால மீறல்களை உள்ளடக்கி பிரித்தானியாவின் சனல் 04 தொலைக்காட்சி சேவையால் வெளியிடப்பட்ட காணொலிகளை கலும் மக்றே [Callum Macrae] தயாரித்திருந்தார். இவர் சிறிலங்காவில் தொடரப்பட்ட இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இந்நாட்டுப் பாதுகாப்புப் படைகளால் இழைக்கப்பட்ட குற்றங்களை ஆவணப்படுத்தி தனது முதலாவது காணொலியை வெளியிட்டதைத் தொடர்ந்து சிறிலங்காவில் அதிகம் பேசப்படும் ஒருவராக மாறியுள்ளார். 'சிறிலங்காவின் கொலைக் களங்களில்' இடம்பெற்ற மீறல் குற்றச்சாட்டுக்களை முதன்மைப்படுத்தி, 'சிறிலங்காவின் கொலைக் களங்கள் - தண்டிக்கப்படாத போர்க் குற…

  15. கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீட் பதவியை இழக்கக் கூடுமென கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவிக்கு வேறும் ஒருவர் விரைவில் நியமிக்கப்படக் கூடுமென தெரிவிக்கப்படுகிறது. மாகாண முதலமைச்சர் பதவிக்கு பொருத்தமானவரை நியமிக்குமாறு ஆளும் கட்சி உள்ளிட்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் கோரி வருகின்றனர். அண்மையில் இது தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக ஆளும் கட்சியினர் கிழக்கு மாகாண சபை அமர்வுகளை பகிஷ்கரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆளும் கட்சியைச் சேர்ந்த பெரும்பான்மையான உறுப்பினர்கள் அமர்வுகளை பகிஷ்கரித்து வருகின்றனர். தற்போதைய மாகாண முதலமைச்சர் செயற்திறனற்றவர் என குற்றம் சுமத்தியு…

  16. முஸ்லிம் மக்களுக்கு சிங்கள ராவய அமைப்பு தொந்தரவு கொடுத்து வருவதாக தென் மாகாண முஸ்லிம்கள் கவலை தெரிவித்துள்ளனர். கதிர்காமம் கிரிவெறவில் இருந்து கொழும்பு அலரி மாளிகை நோக்கி நடைபயணத்தில் ஈடுபட்டவர்கள் தங்காலையில், இறைச்சி கடையொன்றின் கதவை திறந்து அங்கிருந்த தளபாடங்களை வெளியில் எடுத்து போட்டு எரித்துள்ளனர் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். அத்துடன் இறைச்சி கடையை எரித்து சேதப்படுத்தியுள்ளனர். சம்பவம் தொடர்பான பிரச்சினை முற்றாது தடுக்க தங்காலை காவற்துறையினர் தலையிட்டு நடவடிக்கை எடுத்தனர். சிங்கள ராவய அமைப்பு தங்காலையில் மாடு அறுக்கப்படுவதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றையும் நடத்தியிருந்தது. தங்காலை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் சொந்த கிராமம் அமைந்துள்ள பிரதேசம் என்பது கு…

  17. முள்ளிவாய்க்களில் எம் இனத்தை அடித்து கொன்றழித்த சிங்களம் நாடு கடந்தும் அடிக்கிறது என்றால் உலகத்தில் தமிழன் என்ன அனாதையா? பிரிந்து கிடக்கும் தமிழினமே ஒன்றாக நீயிருந்தால் காலால் உன் தங்கையை,அக்காவை உன் உடன் பிறந்தவளை இப்படி காலால் சிங்களவன் உதைவானா படை பெரிதென்றால் கிட்ட வந்திருக்க மாட்டான் ஒன்றுமை இருந்திருந்தால் இது நடந்திருக்குமா ? ஜனநாயக வழியை சிங்களதேசம் வன்முறை வழியால் எதிர்கிறது. தமிழன் அகிம்சையின் வழிவந்தவன் தீலீபனை ஈன்ற தமிழ் சிங்களவனின் வன்முறைக்கு ஜனநாயக வழியில் மீண்டும் மீண்டும் முறியடிப்போம்.அதற்க்கு எம்மை நாம் தாயார் படுத்த வேண்டும் அதாவது ஒன்றாக நாம் நிற்பதே தயார் படுத்தலாகும். 20ம் திகதி காடிஃப் நகரில் மீண்டும் ஒரு கிரிகெட் போட்டி நடைபெற இருக்கிறது. அதில் இ…

    • 0 replies
    • 692 views
  18. ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் குழுக்களாக பிரிந்து 13ஆம் அரசமைப்பு குறித்து வாத, விவாதங்களை முன்வைப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் என அந்தக் கட்சியின் செயலாளரும், அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் http://tamilworldtoday.com/?p=17415

  19. இன்று இலங்கையில் எங்கும் பதின்மூன்றாவது திருத்தச் சட்டம் பற்றியே பேச்சு! இது அரசியலமைப்பின் ஒரு திருத்தச் சட்டமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு 20 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் இப்போது அது பிறந்த போது கிடைக்காத பரபரப்பும் முக்கியத்துவமும் பெற்றுள்ளது. ஆட்சி பீடத்திலுள்ள கட்சிகளிடையெ கருத்துக்கள் வெடித்து ஒன்றுடன் ஒன்று மோதுகின்றன. விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திரமுன்னணி, ஜாதிக ஹெல உறுமய என்பன 13வது திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டால் தமிழீழம் அமைவதற்கு அடித்தளமாகிவிடும் எனத் துள்ளிக்குதிக்கின்றன. இடதுசாரிகள், முஸ்லிம்காங்கிரஸ் ஆகியன 13வது திருத்தச் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்படாமலே மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்துகின்…

  20. பாடசாலை மாணவர்கள் சென்ற பஸ் குடைசாய்ந்து விபத்து: இருவர் பலி, 70 பேர் காயம் நுவரெலியா - சீதா எலிய பிரதேசத்தில் மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 70 பேர் காயமடைந்துள்ளனர். பஸ் பாதையை விட்டு விலகி செங்குத்து சரிவு ஒன்றில் குடைசாய்ந்ததில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். http://www.adaderana.lk/tamil/news.php?nid=40581

    • 0 replies
    • 487 views
  21. சிவராமை கடத்தியவர்களை அடையாளம் காட்ட முடியும்: முச்சக்கர வண்டி சாரதி சாட்சியம் கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரான தர்மரட்ணம் சிவராமைக் கடத்திய நபர்களை தன்னால் அடையாளம் காட்ட முடியும் என முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் நீதிமன்றத்தில் சாட்சியமளித்துள்ளார். கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சிவராம் கொலை வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது, அங்கு சாட்சியமளித்த கொழும்பு பாமன்கடை பகுதியைச் சேர்ந்த ரஞ்சன் பிரியந்த என்னும் முச்சக்கர வண்டி சாரதியே இவ்வாறு கூறியுள்ளார். சிவராம் கடத்தப்பட்ட போது தான் பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்துக்கு அருகே தனது வண்டியுடன் நின்றிருந்ததாகக் அவர் கூறினார். சாம்பல் நிற ஜீப்பில் வந்த ஒரு குழுவே சிவராமைக் கடத்தியதாகவும், அவர்களை தான் தெளிவாகப் பா…

    • 0 replies
    • 559 views
  22. வட மாகாணத்தில் அனைத்து இன மக்களும் வாழக்கூடிய சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும் : கோதபாய வட மாகாணத்தில் அனைத்து இன மக்களும் வாழக் கூடிய சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டுமென பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். யுத்தத்தின் பின்னர் அனைத்து இனங்களுக்கும் இடையில் பிணைப்பை ஏற்படுத்த தாமதமின்றி வடக்கில் அனைத்து இன மக்களும் வாழக்கூடிய பின்னணி உருவாக்கப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா உள்ளிட்ட வட மாகாணத்தின் மாவட்டங்களில் சிங்கள மக்கள் காணி கொள்வனவு செய்யும் உரிமையை ஒடுக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் சிங்கள முஸ்லிம் அரசாங்க ஊழியர்கள் கடமையாற்ற அனும…

    • 0 replies
    • 472 views
  23. வட மாகாணத்தில் சிங்கள மக்கள் காணி கொள்வனவு செய்யும் உரிமையை ஒடுக்க முடியாது என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாட்டின் எந்தவொரு பிரதேசமும் தனியொரு இனத்திற்கான பிரத்தியேக இடமாக இருக்கக் கூடாது .யுத்தத்தின் பின்னர் அனைத்து இனங்களுக்கும் இடையில் பிணைப்பை ஏற்படுத்த தாமதமின்றி வடக்கில் அனைத்து இன மக்களும் வாழக்கூடிய பின்னணி உருவாக்கப்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் சிங்கள முஸ்லிம் அரசாங்க ஊழியர்கள் கடமையாற்ற அனுமதிக்கப்பட வேண்டும் இந்த நிலைமை குறித்து ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தியுள்ளதாகவும் யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா உள்ளிட்ட வட மாகாணத்தின் மாவட்டங்களில்…

  24. வருங்கால தளபதிகள் அதிசிறந்த விளைவை பெறுவதற்காக உழைக்கும் அதேசமயம், இனி வரக்கூடிய சவால்களையும் எதிர்கொள்வதற்கு ஆயத்தமாக இருக்க வேண்டும் என புதிததாக ஜெனரல் தரத்துக்கு உயர்த்தப்பட்ட ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார். பல உயர் இராணுவ அதிகாரிகள் இடையே உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், 'இராணுவத்தில் சேவையாற்றும் சகலரின் முயற்சியாலும் எட்டப்பட்டுள்ள தராதரம், பண்புத்தரம், என்பவற்றை பேணுதற்கு ஒவ்வொருவரும் உழைக்க வேண்டும். இராணுவத்தில் எப்போதும் கட்டுப்பாடு இருக்க வேண்டும் எனவும் இதை எக்காலத்திலும் தளரவிடக்கூடாது. இராணுவத்துக்கு வருங்காலத்தில் வெளிநாட்டு அனுபவங்களை வழங்குவதற்காக ஐ.நா. படையில் பணிபுரிய வாய்ப்புகளும் வெளிநாட்டுப் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.