ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143491 topics in this forum
-
மாடுகளை அறுப்பதை நிறுத்தக் கோரி கதிர்காமத்தில் இருந்து கொழும்புக்கு ஊர்வலமாக வரும் சிங்கள ராவய அமைப்பினரை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழ்-முஸ்லிம் கூட்டமைப்பின் தலைவரான அசாத் சாலி அவர்கள் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைக் கோரியுள்ளார். ஊர்வலமாக வந்த இவர்கள் கடந்த இரவு தங்காலை என்னும் இடத்தில் (ஜனாதிபதியின் பகுதியில்) ஒரு மாட்டிறைச்சிக் கடையை உடைத்து, தீ வைத்ததாகக் குற்றஞ்சாட்டும் அசாத் சாலி அவர்கள், அந்தத் தாக்குதல் நடந்தபோது பொலிஸார் பார்த்துக்கொண்டிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்ட போதிலும், எந்த விதமான நடவடிக்கையையும் அவர்கள் எடுக்கவில்லை என்றும் அவர் கூறினார். இதேவேளை, மாத்தறை, கந்தர என்னும் இடத்தில் முஸ்லிம் ப…
-
- 0 replies
- 565 views
-
-
வடக்குத் தேர்தலுக்கு எதிராக கூக்குரல் போடும் சம்பிக்க, விமல், பொதுபல சேனா, ராவணா பலய மற்றும் ராவய போன்றோர் ஜனாதிபதியின் திட்டத்தையே முன்னெடுக்கின்றனர் என கொழும்பு மாநாகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலி தெரிவித்தார். கொழும்பு பான்ஸ் பிளேஸில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற அதிகாரத்தை பகிர்ந்து நாட்டைக் கட்டியெழுப்பும் அமைப்பின் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ஜாதிக ஹெல உறுமய, தேசிய சுதந்திர முன்னணி, பொதுபல சேனா, ராவணா பலய மற்றும் ராவய ஆகியன நாட்டுப் பற்று எனக் கூறி வடக்குத் தேர்தலுக்கு எதிராக பல கதைகளைக் கூறுகின்றன. இனவாதத்தை தூண்டி விடுகின்றனர். உண்மையில் அவர்களு…
-
- 0 replies
- 460 views
-
-
இராணுவத்தினர் சுவீகரித்துள்ள கெற்பேலிக் காணியில் தாம் முன்னர் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் என்றும், அந்தக் காணியைத் தமக்கு வழங்குமாறும் பொதுமக்கள் சிலர் சாவகச்சேரி பிரதேச செயலகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். சாவகச்சேரி பிரதேச செயலகத்தினால் காணிக் கச்சேரி நேற்று செவ்வாய்க்கிழமை (18.06.13) நடத்தப்பட்டது. இதில் பெரும்எண்ணிக்கையான பொதுமக்கள் பங்கெடுத்தனர். இதில் பங்கெடுத்த பொதுமக்கள் சிலர், இராணுவத்தினர் கைப்பற்றியுள்ள கெற்பேலிக் காணியை மீட்டுத்தருமாறு கோரியுள்ளனர். காணிச் சீர்திருத்த ஆணைக் குழுவுக்குச் சொந்தமான 60 பரப்புக் கொண்ட இந்தக் கெற்பேலிக் காணியில் இராணுவத்தினர் தற்போது நிரந்தர இராணுவ முகாம் அமைத்து வருகின்றனர். குறித்த காணியைச் சுவீகரிப்பதற்கான அறிவித்தலும…
-
- 0 replies
- 331 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் இலங்கை இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட கிராமங்களை மீட்பதற்காக தொடர் போராட்டங்களை முன்னெடுக்கப் போவதாக மக்கள் தெரிவித்துள்ளனர். அதன் முற்கட்டமாக இன்றைய தினம் வெலிஓயா பிரதேச செயலகத்திற்கு மக்கள் திரண்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்கிளாய், கறுக்காக்கேணி, கொக்குத்தொடுவாய் முதலிய கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களை இராணுவத்தினர் இன்னமும் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் இப்பகுதி மக்கள் விவசாய நடவடிக்கையில் ஈடுபட முடியாத நிலையில் உள்ளனர். அதேவேளை இப்பகுதிகளில் சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டுள்ளதுடன் பௌத்த பிக்கு ஒருவர் குடியேற்றப்பட்டு புத்த விகாரை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் தென்னிலங்கையிலிருந்து வந்த சிங்கள மக்கள் மீன்பிடியில்…
-
- 0 replies
- 471 views
-
-
Tamils injured at Oval after Sri Lankan fan mobs assault on peaceful protest (Update -Video) GenocideGottabayaprotests agitations Sri LankaSri LankaSri Lanka GenocideSri Lanka war crimesSri Lankan governmentSri Lankan Tamils issueTamilTamil Nadu politicsUNUNHRC resolution London today saw ugly scenes of violence against democratic protests by Tamil activists at entrance of Oval grounds , as Sri Lankan ethnic Sinhala fan mobs gathered an assaulted Tamils, as they do in Sri Lanka. The fans came out as excited after victory of Sri Lanka over Australia turned angry denying the rights of Tamil’s campaign to bring awareness of atrocities, ethnic Tamils are going …
-
- 7 replies
- 1k views
-
-
தமிழீழத்தில் விடுதலைப் புலிகளால் அமைக்கப்பட்டு, சிறிலங்கா விமானப்படையினரால் புனரமைக்கப்பட்ட இரணைமடு விமான ஓடுதளத்தை சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று திறந்து வைத்துள்ளார். இரணைமடுவில் விடுதலைப் புலிகள் சுமார் 600 மீற்றர் நீளம் கொண்ட விமான ஓடுபாதையை அமைத்திருந்தனர். இந்த ஓடுபாதை வான்புலிகளின் விமானங்களின் பறப்புக்காக பயன்படுத்தப்பட்டு வந்தது. 2009 ஜனவரி 14ம் நாள் இந்த ஓடுபாதையை சிறிலங்கா இராணுவத்தினர் கைப்பற்றியிருந்தனர். அதையடுத்து, அங்கு சிறிலங்கா விமானப்படையின் அணியொன்று நிறுத்தப்பட்டு அதனை விரிவுபடுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர் அங்கு நிரந்தரமாக விமானப்படைத் தளம் ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது 1500 மீற்றர் நீளமும் 25 மீற்றர் அ…
-
- 52 replies
- 3.9k views
-
-
அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் சன்ஷைன் பகுதியில் வசிக்கும் இரண்டு இலங்கைத் தமிழர்கள் இனந் தெரியாத நபர்களினால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர். மேலும், http://tamilworldtoday.com/?p=17428
-
- 0 replies
- 730 views
-
-
13ஆவது அரசமைப்பு அமுல்படுத்தப்பட்டால் நாட்டில் ரத்த வெள்ளம் பெருக்கெடுத்தோடும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க எச்சரித்துள்ளார். மேலும், http://tamilworldtoday.com/?p=17246
-
- 2 replies
- 792 views
-
-
புதுடில்லி சென்றிருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற குழு இன்று இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷி தலைமையிலான குழுவினரை சந்தித்து பேசினர். மேலும், http://tamilworldtoday.com/?p=17342
-
- 0 replies
- 667 views
-
-
13ஆவது திருத்தச் சட்டத்தில் மாற்றம் கொண்டு வருவதா இல்லையா என்பதை தீர்மானிப்பது ஜெனிவாவோ ஜெயலலிதாவோ அல்லது வை.கோ.வோ அல்ல இந்த நாட்டு மக்களே அதனைத்தீர்மானிக்க வேண்டும். ஏனென்றால் இந்த நாட்டின் இறைமையைக் கட்டிக் காக்கும் பாரிய பொறுப்பு அவர்களையே சார்ந்ததாகும். இந்த நாடு எக்காரணம் கொண்டும் இந்தியாவின் ஒரு பிராந்தியமாகவோ அல்லது அமெரிக்காவின் ஒரு பிராந்தியமாகவோ மாறுவதை நாம் எக்காரணம் கொண்டும் அனுமதிக்கத் தயாரில்லை என்று ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். ஞாயிற்றுக்கிழமை மாத்தளை வாடிவீட்டில் நடைபெற்ற வைபவமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அகில இலங்கை பிரதேச சபைத் தலைவர்களின் சம்மேளனத் தலைவரும் - புரசிரிவர சமூக சேவை அமைப்பின் பண…
-
- 1 reply
- 915 views
-
-
இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த ஒத்துழைப்பு வழங்கப்படும் என இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். அனைத்து இன மக்களுக்கும் சகல உரிமைகளும் கிடைக்கக் கூடிய பின்னணி ஒருவாக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதி அண்மையில் இலங்கைத் தமிழர் குறித்து அனுப்பி வைத்திருந்த கடிதத்திற்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 13ம் திருத்தச் சட்டம் தொடர்பிலான தமது நிலைப்பாட்டை இலங்கைக்கு தெளிவுபடுத்தத் தீர்மானித்துள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங்க தெரிவித்துள்ளார் http://www.virakesari.lk/article/local.php?vid=5345
-
- 1 reply
- 687 views
-
-
இந்தியாவிடம் தொட்டதற்கெல்லாம் ஓடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கொழும்பில் தான் வாழ வேண்டும் என்பதை மறந்து விடக்கூடாது என ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சம்பிக ரணவக்க எச்சரிக்கை விடுத்துள்ளார். இலங்கை - இந்திய ஒப்பந்தம் காலாவதியாகி பல வருடங்களாகி விட்டது. இனி அது குறித்து எவ்விதமான பேச்சுக்கும் இடமில்லை. சம்பந்தன் குழுவினருக்கும் பிரிவினைவாத கொள்கைகளைக் கொண்ட 13 ஆவது திருத்தத்தை ஆதரிப்பவர்களுக்கும் இரண்டு வழிகள் மாத்திரமே காணப்படுகின்றன. ஒன்று முள்ளிவாய்க்கால் அழிவுப் பாதை, இரண்டாவது ஏ-9 சமாதான பாதை. இதில் எதனை அவர்கள் தெரிவு செய்தாலும் எமக்கு பிரச்சினையில்லை, வடக்கை துண்டாட ஒருபோதும் இடமளிக்க போவதில்லை அத்துடன் தமிழீழக் கனவை இல்லதொழிக்க அ…
-
- 1 reply
- 996 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள், இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். இந்திய பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் ஆகியோருடன் தமி;ழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் சந்திக்கவுள்ளனர். இந்த சந்திப்பு நாளைய தினம் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவ் ஷங்கர் மேனனை இன்றைய தினம் சந்திக்க உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான பிரதிநிதிகள் குழு இந்திய மத்திய அரசாங்கத்தின் முக்கிய தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இலங்கை அரசாங்கம் இந்திய - இலங்கை உடன்படிக்கையை மீறிச் செயற்பட்டு வருவதாக த…
-
- 0 replies
- 555 views
-
-
அசாத்சாலி கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் தேசிய ஐக்கிய முன்னணியின் செயலாளரும் முன்னாள் கொழும்பு மாநகர பிரதிமேயருமான அசாத் சாலி இம்மாத இறுதியில் கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டபின் முதன்முறையாக கிழக்கு மாகாணத்திற்கு இவர் மேற்கொள்ளும் முதலாவது விஜயம் இதுவாகும். இதற்கிணங்க 28ஆம் திகதி அம்பாறை மாவட்டத்திற்கு 29ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் 30ஆம் திகதி திருமலை மாவட்டத்திற்கும் அவர் விஜயம் செய்யவுள்ளார். இதன்போது ஓட்டமாவடியில் சாய்ந்தமருதிலும் கிண்ணியாவிலும் பொதுக்கூட்டங்கள் நடாத்த ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. http://www.virakesari.lk/article/local.php?vid=5353
-
- 0 replies
- 619 views
-
-
வீடு ஒன்றில் குழந்தையையும் மனைவியையும் பணயமாக வைத்து மூன்று கொள்ளையர்கள் தங்க நகையையும் பணத்தையும் கொள்ளையிட்டுள்ளனர். இந்த துணிகரச் சம்பவம் அல்வாய் கிழக்கு இலகடியில் நேற்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில் தெரு மூடி மடத்தடிக்கும் மாலிசந்திக்கும் இடையில் அமைந்துள்ள ஆழ்வாப்பிள்ளை பாரதிதாசன் என்ற இளம் குடும்பத்தினரின் வீடு அமைந்துள்ளது. சம்பவ நேரம் பாரதிதாசன் மலசல கூடத்துக்குச் சென்றுள்ளார். இதனை அவதானித்த கொள்ளையர்கள் அவரை மண்வெட்டியால் தாக்கி உள்ளனர். இந்தச் சத்தம் கேட்டு எழுந்து அங்கு ஓடிச் சென்ற வீட்டு வேலை செய்பவரும் கொள்ளையர்களால் தாக்கப்பட்டார். பின்னர் பாரதிதாசனை வீட்டுக்குள் இழுத்துச் சென்ற கொள்ளையர்கள். அவரது மனைவியையும் குழந்தைய…
-
- 1 reply
- 573 views
-
-
விடுதலைப் புலிகளின் அமைப்பு பல சமூகநல நிறுவனங்கள் என்ற பெயரில் ஜேர்மனியில் இன்னமும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன என்று இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். ஐரோப்பிய நாடுகளுக்கான பயணத்தை மேற்கொண்ட அவர் ஜேர்மனியின் தலைநகர் பேர்லினில் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் கலாநிதி கைடோ வெஸ்டர் வெல்லுடன் நடத்திய பேச்சுக்களின் போதே இந்தத் தகவலை அவரிடம் கூறியுள்ளார். பிரசாரத்துக்காகவும் நிதி திரட்டலுக்காகவும்விடுதலைப் புலிகளின் நிறுவனங்களால் ஏராளமான பாடசாலைகள் ஜேர்மனியில் செயற்படுத்தப்பட்டு வருவதாக இலங்கை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்திருக்கிறது எனவும் பீரிஸ் இந்தச் சந்திப்பின் போது கூறியுள்ளார். "ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகளுக்குத் தட…
-
- 0 replies
- 834 views
-
-
இடம்பெயர்ந்தவர்கள் வாக்களிக்கும் வகையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலம் சில திருத்தங்களுடன் நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (18.06.13) நிறைவேற்றப்பட்டுள்ளது. எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் வடமாகாணசபைத் தேர்தலை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், 1983ஆம் ஆண்டு மே முதலாம் திகதிக்கும் 2009 மே 18ஆம் திகதிக்கும் இடையில் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்தவர்கள் வாக்களிப்பதற்கு வாய்ப்பளிக்கும் சட்டத்தைக் கொண்டுவர அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது. வேறு எந்த இடத்திலும் வாக்காளர்களாகப் பதிவு செய்யாதவர்களுக்கே இந்த வாய்ப்பு வழங்கப்பட உள்ளதுடன் அதற்கான சட்டமூலமும் நீதியமைச்சரினால் நாடாளும…
-
- 0 replies
- 563 views
-
-
பிரபாகரன் மதிவதனி யாழ்ப்பாணத்தில் ஜூன் 15, 2013 பிரபாகரன் மதிவதனி என்ற பெயருடைய ஒருவருக்கு நேற்று யாழ்ப்பாணத்தில் அரச நியமனம் வழங்கப்பட்டது. அந்தப் பெயரை நியமனத்திற்காக அழைத்தபோது ஒட்டுக்குழு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் முன்னாள் யாழ். மாவட்ட இராணுவத் தளபதியும் வடக்கு ஆளுநருமான சந்திரசிறியும் அச்சமடைந்தனர். வடக்கு மாகாண சபையின் கீழுள்ள திணைக்களங்களில் சிற்றூழியர்களாக பணியாற்றிய 300 வரையானோருக்கு நேற்று சனிக்கிழமை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் வைத்து அரச நியமனங்கள் வழங்கப்பட்டன. இதன்போது பிரபாகரன் மதிவதனி என்னும் பெயருடைய பெண்மணியொருவருக்கும் நியமனக் கடிதம் வழங்கப்பட்டது. குறித்த பெண்ணின் பெயரை ஒலிவாங்கியில் அழைத்தபோது ஒட்டுக்குழு அமைச்சர் டக்ளஸ் அச்சமடைந்தார். …
-
- 24 replies
- 3.5k views
-
-
அவுஸ்திரேலியாவில் புகலிடக் கோரிக்கையாளர்கள் நடத்தப்படும் விதம் குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பு அதிருப்தி வெளியிட்டுள்ளது. http://tamilworldtoday.com/?p=17200
-
- 1 reply
- 418 views
-
-
இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த ஒத்துழைப்பு வழங்கப்படும் - மன்மோகன் 18 ஜூன் 2013 இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த ஒத்துழைப்பு வழங்கப்படும் என இந்திய பிரதமர் மனமோகன் சிங் தெரிவித்துள்ளார். அனைத்து இன மக்களுக்கும் சகல உரிமைகளும் கிடைக்கக் கூடிய பின்னணி ஒருவாக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதி அண்மையில் இலஙi;கத் தமிழர் குறித்து அனுப்பி வைத்திருந்த கடிதத்திற்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 13ம் திருத்தச் சட்டம் தொடர்பிலான தமது நிலைப்பாட்டை இலங்கைக்கு தெளிவுபடுத்தத் தீர்மானித்துள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங்க தெரிவித்துள்ளார். http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/arti…
-
- 0 replies
- 464 views
-
-
மக்களின் நம்பிக்கையை வெல்ல முடியாதவர்களே மாற்று வழிகளை யோசித்து சூழ்ச்சிகளை மேற்கொள்வார்கள் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். http://tamilworldtoday.com/?p=17168
-
- 0 replies
- 542 views
-
-
திருகோணமலை இயற்கைத்துறைமுகத்தைக்காண மக்கள் படையெடுத்து வருகின்றனர். நாட்டில் நிலவும் சமாதான சூழலையடுத்து நாலாபாகங்களிலுமிருந்தும் மக்கள் தினமும் சாரிசாரியாக வந்து அங்கு துறைமுகத்தைப்பார்வையிடுவதாக துறைமுக அதிகாரியொருவர் தெரிவித்தார். தற்போது 03 கப்பல்களே நங்கூரமிட்டு தரித்துள்ளன. இந்தியன் ஓசியன் எனும் கப்பலில் மக்கள் ஏறிப்பார்க்கக்கூடிய வசதிகளை அங்குள்ள பாதுகாப்புதர அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். காரைதீவு விபுலானந்தா மொன்டிசோரி மாணவர்கள் பெற்றோர்களுடன் கல்விச்சுற்றுலாவொன்றை மேற்கொண்டு அங்கு சென்றனர். கப்பலில் பயணிக்கும்போது பிரயாணிகள் அணியவேண்டிய பாதுகாப்பு கவசத்தின் முக்கியத்துவம் பற்றி துறைமுக உத்தியோகத்தர்கள் மக்களுக்கு விளங்கப்படுத்தினர். அதனால் மக்கள் மேல்தளம் கீழ்…
-
- 0 replies
- 770 views
-
-
13ஆவது அரசியல் திருத்தச் சட்டமூலத்தில் திருத்தம் ஏதாவது ஒன்றைச் செய்தால் நாட்டிற்குள் மொழிரீதியான பிரச்சினைகள் ஏற்படுமென பிரதியமைச்சர் கருணா அம்மான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு தெரிவித்துள்ளதாக தெரியவருகிறது. மேலதிக விபரங்களுக்கு http://tamilworldtoday.com/?p=17122
-
- 2 replies
- 962 views
-
-
வாக்குறுதிகளை மீறும் வகையில் இலங்கை தொடர்ந்து செயற்பட்டு வருவதால், அந்நாட்டிற்கு சிறப்பு தூதுவர் ஒருவரை நியமிப்பது குறித்து இந்தியா பரிசீலித்து வருவதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், http://tamilworldtoday.com/?p=16982
-
- 5 replies
- 922 views
-
-
ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் சபை, மற்றும் தென் மாகாண சபை உறுப்பினர்கள் உட்பட 13 உறுப்பினர்களை கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க கட்சியில் இருந்து நீக்கியுள்ளார். மேலதிக விபரங்களுக்கு http://tamilworldtoday.com/?p=17125
-
- 1 reply
- 497 views
-