ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143491 topics in this forum
-
கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நாச்சிக்குடா சந்தியில் தமிழர்களுக்குச் சொந்தமான நிலம் தெற்கை சேர்ந்தவர்களுக்கு அடாத்தாக வழங்கப்பட்டுள்ளமை அம்பலத்திற்கு வந்துள்ளது. குறிப்பாக பூநகரிப்பிரதேச செயலாளரால் அந்த மண்ணுக்கு உரித்தில்லாத அரசியல் செல்வாக்கு உள்ளவர்களுக்கும் தனவந்தர்களுக்கும் இக்காணிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கட்டடம் கட்டுவதற்கான அனுமதியோ, காணி உரித்தோ இல்லாத பலர் பிரதேச செயலாளரின் செல்வாக்கைப் பயன்படுத்தி இக்காணிகளை அபகரித்து மரக்காலை, பேக்கரி, மற்றும் மூன்று நிரந்தரக் கட்டடங்களை அமைத்துள்ளனர். ஆனால் அப்பகுதி ஏழைச் சிறு வாணிப வியாபாரிகள் தங்களுக்கென சிறிய அளவிலான கடைகளை அமைக்க முற்பட்டபோது பிரதேச செயலரினா…
-
- 0 replies
- 457 views
-
-
காணாமற்போனோரைக் கண்டறியும் குழுவைச் சேர்ந்த லலித், குகன் ஆகிய இருவரும் பொலிஸாராலும் புலனாய்வுப் பிரிவினராலுமே கடத்தப்பட்டுள்ளனர். இருவரும் தற்போது படையினரின் பொறுப்பிலேயே இருப்பார்கள் என்றுதான் கருதுகின்றேன்'' என்று அந்த வழக்கின் 6 ஆவது சாட்சி நேற்று நீதிமன்றில் தெரிவித்தார். லலித், குகன் ஆகிய இருவரும் காணாமற்போனமை தொடர்பில் 6 ஆவது சாட்சியான, முற்போக்கு சோசலி சக்கட்சியின் உறுப்பினர்களில் ஒருவரான ஜனபே குமாரகே யாழ். நீதிமன்றில் நீதிவான் பெ.சிவகுமார் முன்னிலையில் நேற்று சாட்சியமளித்தார். அவர் தனது சாட்சியத்தில் தெரிவித்ததாவது; அரசியல் கைதிகளை விடுதலை செய், ஜனநாயகத்தைப் பாதுகாப்போம் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகளை யாழ். நகரில் ஒட்டிக்கொண்டிருந்த போது யாழ். பொலி…
-
- 0 replies
- 569 views
-
-
பம்பலப்பிட்டியில் கோடீஸ்வர முஸ்லிம் வர்த்தகரை கடத்தப் படுகொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிறிலங்கா காவல்துறை அதிகாரிகள் மேலும் எட்டுக் கொலைகளுடன் தொடர்புபட்டுள்ளது விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த ஒப்பந்தக் கொலை தொடர்பாக, சிறிலங்கா காவல்துறையின் மூத்த அதிகாரியான கொழும்பு வடக்கு பிரதி காவல்துறை மா அதிபர் வாஸ் குணவர்த்தன மற்றும் 6 சிறிலங்கா காவல்துறையினர் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் நடத்தப்பட்டு வரும் விசாரணைகளிலேயே மேலும் எட்டுக் கொலைகளுடன் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. வாஸ் குணவர்த்தனவின் நெருங்கிய நண்பர் ஒருவரையும் சிறிலங்கா காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதையடுத்து கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகன…
-
- 0 replies
- 750 views
-
-
யாழ். மாவட்டத்தில் சிங்கள மக்கள் தொடர்பான விபரங்களை சேகரிக்கும் நடவடிக்கைகளில் யாழ்.மாவட்ட செயலகம் ஈடுபட்டு வருகின்றது. யாழ். மாவட்டத்தில் 1983ஆம் ஆண்டுக்கு முன்னர் வாழ்ந்த சிங்கள மக்கள் தொடர்பான விபரங்களும் தற்போது வாழ்ந்துகொண்டிருக்கும் சிங்கள மக்கள் தொடர்பான விபரங்களுமே சேகரிக்கப்படுகின்றன. இது தொடர்பான சுற்றுநிரூபம் யாழ்.மாவட்ட பிரதேச செயலகத்தினால் தங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக கிராம அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். கிராம அலுவலர் பிரிவு ரீதியாக தற்போது குறிப்பிட்ட விபரங்களை பெறுவதில் கிராம அலுவலர்கள் ஈடுபட்டுள்ளார்கள். ஆனாலும் 1983 ஆம் ஆண்டுக்கு முன்னரான விபரங்களை பெறுவதில் பெரும் சிரமங்களுக்கு முகம்கொடுப்பதாகவும் முன்னர் வாழ்ந்த சிங்கள மக்கள் பற்றிய விபரம்…
-
- 0 replies
- 344 views
-
-
வலி. வடக்கில் சுவீகரிப்புக்கு உட்படுத்தப்படவுள்ள காணிகளை உடனடியாகத் தன்வசப்படுத்தும் அறிவித்தலை அரசு மீளாய்வு செய்யுமாறு அறிவுரை வழங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர் கே.ஸ்ரீபவன், காணி உரிமையாளர்களின் ஆட்சேபனைகளுக்கு இடமளித்து அதன் பிரகாரம் காணிச் சுவீகரிப்பை முதலில் முறைப்படுத்துமாறும் கூறினார். வலி.வடக்கில் 6 ஆயிரத்து 381 ஏக்கர் காணியை அரசு சுவீகரிக்கவுள்ளமை தொடர்பில் காணி உரிமையாளர்கள் சிலர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சில சட்டத்தரணிகளின் உதவியுடன் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு உயர் நீதி மன்ற நீதியரசர் ஸ்ரீபவன், நீதியரசர் சத்தியா ஹெட்டிகே முன்னிலையில் நேற்றுப் புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது நீதியரசர் ஸ்ரீபவன், …
-
- 0 replies
- 480 views
-
-
கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்தில் வருடாந்த திருவிழா இன்று வெகுசிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இன்று காலை 4 மற்றும் 6 மணிக்கு தமிழ் மொழியிலான திருப்பலிகள் இடம்பெற்றதோடு 5 மற்றும் 7 மணிக்கு சிங்கள மொழியிலான திருப்பலியும் இடம்பெறவுள்ளன. காலை 8.00 மணிக்கு தமிழ் மொழியிலான திருவிழா திருப்பலியும் 10 மணிக்கு சிங்கள மொழியிலான திருப்பலியும் 12 மணிக்கு ஆங்கில மொழியிலான திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டன. இதனையடுத்து இன்று மாலை 5.30 மணிக்கு புனித அந்தோனியாரின் திருச்சொரூப பவனி வழமையாக இடம்பெறும் வீதி வழியாக நடைபெற்று ஆலயமுன்றலில் நற்கருணை ஆசீர்வாதத்துடன் புனிதரின் திருச் சொ ரூப ஆசிருடன் திருவிழா இனிதே நிறைவு பெறும். இம்மாதம் 3ஆம் திகதி கொடிய…
-
- 0 replies
- 491 views
-
-
பொசன் போயாதினத்தில் பிரிட்டிஸ் கவுன்ஸில் நிறுவனம் நடத்தவிருந்த ஒரு பரீட்சை விடயமாக பொதுபல சேனாவின் கண்டி மாவட்ட அமைப்பாளர் தலைமையில் ஒரு குழு கண்டியிலுள்ள பிரிடிஸ் கவுன்ஸில் நிறுவனத்தை முற்றுகையிட்டது. பொதுபல சேனாவின் கண்டி மாவட்ட அமைப்பாளர் மடவல ஜினமங்களாராமாதிபதி நியங்கொட சாசனரத்ன தேரர் தலைமையில் கண்டி கொடுகொடெல்ல வீதியில் உள்ள என்.எஸ்.பி.கட்டிடத்தில் உள்ள பிரிட்டிஸ் கவுன்சில் நிறுவனத்திற்கே குறித்த அமைப்பினர் உட்பிரவேசித்தனர். இது குறித்து ஜினமங்ளாராமாபதி நியங்கொட சாசனாரத்ன தேரர் கருத்துத் தெரிவிக்கையில், பௌத்த மதம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட புனித தினமான எதிர்வரும் 23ஆம் திகதி பொசன் போயா தினத்தில் 7முதல் 12 வயதுடைய சிறுவர்களுக்கான யங்லேனர்ஸ் என்ற ஆங்க…
-
- 0 replies
- 527 views
-
-
கசினோ சூதாட்ட மையங்களை ஆரம்பிக்கும் திட்டமி;ல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. எதிர்க்கட்சியினர் போலிக் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாக அமைச்சர் லக்ஸ்மன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார். கசினோ சூதாட்ட மையங்கள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக எதிர்க்கட்சிகள் பிரச்சாரம் செய்து வருவதாகத் தெரிவித்துள்ளார். உண்மை நிலவரம் குறித்து மாஹா நாயக்க தேரர்களுக்கு விளக்கம் அளிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்க்க பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட உள்ள போதிலும் கசினோ சூதாட்ட மையங்கள் ஆரம்பிக்கப்பட மாட்டாதுஎன அவர் தெரிவித்துள்ளார். http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/92850/language/ta-IN/artic…
-
- 0 replies
- 385 views
-
-
13வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் உறுதியாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது, இந்தியாவுக்கு ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளதாக, நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. சிறிலங்காவில் தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கு முக்கியமான இந்த அரசியலமைப்புத் திருத்தத்தை நீர்த்துப் போகச்செய்யும் முயற்சிகள், வடக்கு மாகாணசபைத் தேர்தல் மீதான நம்பகத்தன்மையின் மீது நிழலைப் படியச் செய்துள்ளதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. மாகாணசபைகளின் அதிகாரங்கள் எந்த வகையிலேனும் குறைக்கப்பட்டால், தாம் தேர்தலைப் புறக்கணிக்க நேரிடும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர்கள் ஏற்கனவே பகிரங்கமாக எச்சரித்துள்ளனர். அது ராஜபக…
-
- 2 replies
- 243 views
-
-
இலங்கை அகதிகளுடன் அவுஸ்திரேலியா சென்ற படகை காணவில்லை அவுஸ்திரேலியா நோக்கி பயணித்த இலங்கை அகதிகள் படகு ஒன்று காணாமற்போயுள்ளது. இப்படகை ஏழு நாட்களாக காணவில்லை என அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த படகில் இலங்கை அகதிகள் 30 பேர் பயணித்துள்ளனர். இந்த படகு கடலில் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. 55 புகலிடக்கோரிக்கையாளர்களை ஏற்றிச் சென்ற படகு விபத்துக்குள்ளாகி அவர்கள் உயிரிழந்து ஒருவார காலப்பகுதிக்குள் மற்றுமொரு படகு காணாமற்போயுள்ளது. தமது கடற்பரப்பிற்குள் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றதையிட்டு அவுஸ்திரேலியா கவலை வெளியிட்டுள்ளது. இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 1,644 இலங்கை புகலிடக்கோரிக்கையாளர்கள் அவுஸ்திரேலியாவை செ…
-
- 6 replies
- 782 views
-
-
ஆயுதப் போராட்டத்தில் சிறுவர்களை இணைக்கும் நாடுகள் பட்டியலிலிருந்து இலங்கை நீக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. அறிவித்துள்ளது. http://tamilworldtoday.com/?p=16175
-
- 0 replies
- 507 views
-
-
மீன்பாடும் தேன் நாட்டை கசக்க வைக்கும் பாலியல் வன்முறைகள்! நேற்று செவ்வாய்கிழமை மாலை ஏறாவூரைச் சேர்ந்த 55 வயதுடைய முஸ்லிம் இரும்பு வியாபாரியொருவர் சித்தாண்டி பொது மயான காட்டுப்பகுதியில் 15 வயது சிறுமியை பாலியல் வல்லுறவிற்குட்படுத்திய நிலையில் பொதுமக்களால் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். சித்தாண்டி விநாயகர் கிராமத்தைச் சேர்ந்த குறித்த சிறுமி வீட்டில் வீதியால் வந்து கொண்டிருந்தவேளை குறித்த வியாபாரி காட்டிற்குள் அழைத்துச் சென்று வல்லுறவிற்குட்படுத்தியதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர். இவ்வியாபாரி அடிக்கடி அந்த பிரதேசத்திற்கு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட சிறுமி சட்ட வைத்தியதிகாரியின் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைததியசாலையில…
-
- 1 reply
- 644 views
-
-
அம்பிட்டியே சுமணரத்ன தேரர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு மட்டக்களப்பு பிள்ளையாரடி வளைவில் புத்தர் சிலை நிறுவும் நடவடிக்கைக்கு தடை விதிக்கப்பட்டமை தொடர்பில் மட்டக்களப்பு மங்களராமய விஹாரையின் விஹாராதிபதி அம்பிட்டியே சுமணரத்ன தேரர் மட்டக்களப்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளார். இது விடயமாக செவ்வாய்க்கிழமை, எழுத்து மூலமான முறைப்பாடொன்றை மட்டக்களப்பு மங்களராமய விஹாரையின் விஹாராதிபதி அம்பிட்டியே சுமணரத்ன தேரர், தன்னிடம் கையளித்துள்ளதாக மட்டக்களப்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் இ.மனோகரன் தெரிவித்தார். இதனிடையே இந்த விவகாரம் ஏற்கெனவே மட்டக்களப்பு நீதிமன்றத்தின் கவனத்திற்கு பொலிஸாரினால் கொண்டுவரப்பட்டு குறித்த இடத்த…
-
- 1 reply
- 481 views
-
-
''பொட்டு அம்மானின் புதிய புகைப்படம்'' எனக் குறிப்பிட்டு இணையத்தளத்தில் புகைப்படமொன்றை வெளியிட்டுள்ளது. மேலும் http://tamilworldtoday.com/?p=16166
-
- 1 reply
- 2k views
-
-
தமிழகத்தின் இத்தகைய எதிர்ப்பையும் மீறி, சிறிலங்கா படை அதிகாரிகளுக்கான 10 மாதகாலப் பயிற்சி கடந்த ஜுன் 10ஆம் திகதி ஆரம்பமாகியுள்ளது. இந்த நிலையில், http://tamilworldtoday.com/?p=16151
-
- 0 replies
- 705 views
-
-
13ஆம் அரசமைப்பில் திருத்தம் கொண்டுவர எடுக்கப்பட்டுள்ள முயற்சிக்கு ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது எதிர்ப்பை எழுத்துமூலம் அரச தலைவர் மகிந்த ராஜபக்ஷவிடம் இன்று (12) சமர்ப்பிப்பதாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஹசன் அலி தெரிவித்தார். மேலும், http://tamilworldtoday.com/?p=15898
-
- 3 replies
- 432 views
-
-
13ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்வதற்கு இலங்கை அரசாங்கம் உறுதியாக செயல்பட்டு வருவது, இந்தியாவுக்கு ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளதாக, நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், http://tamilworldtoday.com/?p=16128
-
- 0 replies
- 375 views
-
-
திருத்த சட்டமூலத்தை தெரிவுக்குழுவுக்கு அனுப்பவும்:ஈ.பி.டி.பி 13 ஆவது திருத்தத்தை திருத்துவதற்கான சட்டமூலத்தை நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு அனுப்பவேண்டுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழமக்கள் ஜனநாயக கட்சி தெரிவித்துள்ளது. அவ்வாறு அனுப்பினால் இந்த சட்டமூலம் பற்றி அரசியல் கட்சி பிரதிநிதிகள் தமது கருத்துகளை தெரிவிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கும் என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது. இந்த சட்டமூலம் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டதன் பின்னர் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி இதனைப்பற்றி ஆராய்வதற்கு குழுவொன்றை நியமித்தது. இந்த சட்டமூலத்தை ஆராய்வதற்கு நீண்ட காலம் தேவையென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். இந்த சட்டமூலத்த…
-
- 11 replies
- 759 views
-
-
செப்டெம்பர் மாதம் அரசாங்கம் வட மாகாண சபைத் தேர்தலை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளமை வெறும் கண்துடைப்பு நாடகம் என சிறிதுங்க ஜயசூரிய தெரிவித்துள்ளார். மேலும், http://tamilworldtoday.com/?p=16086
-
- 0 replies
- 370 views
-
-
ஆளும் கட்சி எம்பி தாக்கியதால் அரசியலில் இருந்தே விலகுகிறேன்! ஆளும்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும் அவரது அடியாட்களுமே தன்னை தாக்கியதாக வில்கமுவ பிரதேச சபையின் தலைவர் ஜயந்த விஜேசேகர தெரிவித்தார். இந்த தாக்குதல் காரணமாக தான் அரசியலில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வில்கமுவ - கும்புக்ஓயா பகுதியில் திவிநெகும திட்டம் தொடர்பில் தெளிவுபடுத்தும் கூட்டமொன்று நடைபெற்றுக் கொண்டிருக்கையில் தன் மீது தாக்குதல் நடாத்தப்பட்டதாக அவர் கூறினார். மாத்தளை மாவட்ட ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் வசந்த பெரேரா இந்த தாக்குதலை நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இது குறித்து அத தெரண செய்திப் பிரிவு லக்ஷமன் வசந்த பெரேராவிடம் வினவியப…
-
- 1 reply
- 289 views
-
-
இலங்கை இந்திய ஒப்பந்தத்தை இலங்கை மீறுவதாக இந்தியா கருதுமானால் அது பெரும் கேலிக்கூத்து. முதலில் இலங்கை இந்திய ஒப்பந்தத்தை மீறியதே இந்தியாதான். இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அவர்கள் அழைத்து ஒப்பந்தத்தைப் பற்றித்தான் பேசுவார்களாக இருந்தால் அதைவிடக் கேலிக்கூத்து வேறெதுவும் இருக்கமுடியாது.'' இவ்வாறு கருத்துத் தெரிவித்தார் வீடமைப்புத் துறை, நிர்மாண அமைச்சரும், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ஸ. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தியாவிற்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளமை குறித்தும் "13' ஆவது திருத்தம் குறித்தும் அங்கு பேசப்படவுள்ளமை தொடர்பிலும் வெளிவந்திருக்கும் செய்திகள் பற்றிக் கருத்து வெளியிட்ட அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது: இந்…
-
- 2 replies
- 800 views
-
-
நாட்டில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில் பாரிய அளவில் கெசினோ மத்திய நிலையம் ஒன்றை ஆரம்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக பொதுபல சேனா குற்றம்சாட்டியுள்ளது. மேலும், http://tamilworldtoday.com/?p=16043
-
- 1 reply
- 348 views
-
-
2012ஆம் ஆண்டு இலங்கை இந்தச் சுட்டெண்ணில் 107ஆவது இடத்தில் இருந்த போதிலும் இந்த ஆண்டு மூன்று இடங்களுக்கு பின்தள்ளப்பட்டுள்ளது. மேலும், http://tamilworldtoday.com/?p=16061
-
- 1 reply
- 388 views
-
-
13ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட மூலத்தை திருத்தி அமைக்கும் நடவடிக்கையிலிருந்து விலகிக்கொள்ளுமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிஸ் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும், http://tamilworldtoday.com/?p=16049
-
- 0 replies
- 294 views
-
-
2014ஆம் ஆண்டு இறுதிக்குள் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மக்களுக்கும் மின்சாரம் வழங்கப்படும் என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். கொலன்ன பிரதேசத்தில் மக்களுக்கு மின்சாரம் வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஆசிய வலயத்தில் உள்ள நாடுகளுடன் ஒப்பிடும் போது 24 மணித்தியாலமும் மின்சாரம் வழங்கும் நாடாக இலங்கை உள்ளது. இலங்கையில் நூற்றுக்கு 94 வீதமான மக்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அடுத்த வருட இறுதிக்குள் அனைத்து மக்களுக்கு மின் இணைப்பு வழங்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை நல்நிலைப்படுத்துவதே அரசாங்க…
-
- 2 replies
- 629 views
-