Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஆயுதமின்றி முன்னெடுக்கப்பட்டு வரும் ஈழப் போரை தோற்கடிக்க படையினரால் முடியாது அது நாட்டு மக்களினால் தான் முடியும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். 13ம் திருத்தச் சட்டத்தை இரத்து செய்வது தொடர்பிலான கையெழுத்து போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், 30 வருடகால பயங்கரவாதம் படையினரின் அர்ப்பணிப்புக்களினால் தான் ஒழிக்கப்பட்டது. எனினும் ஆயுத போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ள போதிலும், ஈழம் தொடர்பான கருத்துக்களும் பிரச்சாரங்களும் இன்னமும் முடிவுக்குக் கொண்டுவரப்படவில்லை. பிரிவினைவாதிகள் தொடர்ந்தும் நாட்டுக்கு எதிராக செயற்பட்டு வருகின்றனர். அத்துடன் இவர்கள் வட மா…

  2. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கரைச்சிப் பிரதேச சபை உறுப்பினர் நேற்றுக் காலை அவர் கற்பிக்கும் பாடசாலையில் வைத்து மிரட்டப்பட்டுள்ளார். சுந்தரமூர்த்தி தயாபரன் (வயது38) என்ற பிரதேச சபை உறுப்பினரே அச்சுறுத்தப்பட்டுள்ளார். கரைச்சிப் பிரதேச சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினரான இவர், ஸ்கந்தபுரம், கண்ணகைபுரம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இன்று (நேற்று) காலை 10.50 மணிக்கு பாடசாலைக்கு வந்த இராணுவத்தினர் பாடசாலை வாசலில் நின்றுகொண்டு என்னை வருமாறு அழைத்தனர். பாடசாலை அதிபர் இன்று வரவில்லை. என்னுடன் மூன்று ஆசிரியர்கள் மட்டுமே கடமையில் இருந்தனர். இராணுவத்தினரில் ஒருவர் என்னிடம் வந்து உங்களை கப்டன் சந்திக்க வேண்டும். பாடசாலை வாசலுக்கு …

  3. டெங்கு நோய் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீட மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்தில் கல்வி கற்று வந்த 21 வயதுடைய மாணவியே நேற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீடத்தில் டெங்கு நுளம்பு பெருகும் இடங்கள் காணப்பட்டதையடுத்து நேற்று அந்த பீடம் தற்காலிகமாக மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/local.php?vid=5041

  4. ஈரானிடமிருந்து எரி பொருள் இறக்குமதி செய்வது குறித்த சலுகையை அமெரிக்கா நீடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை உள்ளிட்ட சில நாடுகளுக்கு அமெரிக்கா இவ்வாறு சந்தர்ப்பம் அளித்துள்ளது. மேலும் ஆறு மாத காலத்திற்கு ஈரானிடமிருந்து எரிபொருட்களை இறக்குமதி செய்ய அனுமதியளிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ஈரானிடமிருந்து எரிபொருள் இறக்குமதி செய்வதனை வரையறுக்குமாறு அமெரிக்கா கோரியிருந்தது. இவ்வாறு இறக்குமதிகளை வரையறுக்கும் நாடுகளுக்கு அமெரிக்கா சில உதவிகளை வழங்கி வருகின்றது. ஈரானிடமிருந்து எரிபொருளை இறக்குமதி செய்யக் கூடாது என அமெரிக்கா தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது, எனினும் இந்தியா இலங்கை சீனா உள்ளி;ட்ட சில நாடுகளுக்கு தொடர்ந்தும் எரிபொருள் இறக்குமதி செய்ய அனுமதியளித…

  5. கிராம சேவையாளர்களிடமிருந்து வாக்காளர் பெயர்ப் பட்டியலைக் கோரும் நடவடிக்கைகளை யாழ். மாவட்டத்திலும் படையினர் ஆரம்பித்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் இராணுவப் புலனாய்வாளர்களால் வாக்காளர் பெயர்ப்பட்டியல் கோரப்பட்டிருந்தது. அதன் பின்னர் கிளிநொச்சி மாவட்டத்திலும் யாழ். மாவட்டத்திலும் இராணுவத்தினரால் வாக்காளர் பெயர்ப்பட்டியல் கோரும் நடவடிக்கைகள் கடந்த சில தினங்களாக இடம்பெற்று வருகின்றன. 2013 ஆம் ஆண்டு வாக்காளர் பெயர்ப் பட்டியல் பதிவுக்காக கிராம சேவையாளர்களுக்கு 2012 ஆம் ஆண்டுக்குரிய வாக்காளர் பெயர்ப்பட்டியல் வழங்கப்பட்டுள்ளது. கிராம சேவையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த வாக்காளர் பெயர்ப்ப பட்டியலை இராணுவத்தினர் தமக்குத் தருமாறு கேட்டு அதனை போட…

  6. 7 வயது சிறுமியின் வாழ்க்கையை சீரழித்த இராணுவ வீரர் கைது வவுனியா நெடுங்கேணி பிரதேசத்தில் 7 வயதுடைய சிறுமியை பாலியல் பலாத்தகாரத்திற்கு உட்படுத்திய சந்தேகத்தரில் இராணுவ வீரரொருவர் நேற்று (22ம் திகதி) மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக நெடுங்கேணி பொலிஸார் தெரிவத்தனர். நெடுங்கேணி இராணுவ முகாமைச்சேர்ந்த இராணுவ வீரர் ஒருவரையே பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்ததோடு சந்தேகநபரை இன்று (23ம் திகதி) காலை வவுனியா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக அறிவித்தனர். ஆனால் மதியம் வரை சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தபடவில்லை என எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். இதேவேளை, இராணுவ பொலிஸார் சம்பவம் இடம்பெற்ற நெடுங்கேணி சேனப்பலவு பகுதிக்கு சென்றிருந்ததுடன் அப்பகுதியில் …

    • 17 replies
    • 1.9k views
  7. ஆளில்லா உளவு விமானமொன்று இலங்கையில் முதல் முறையாக தயாரிக்கப்பட்டுள்ளது. மொறட்டுவ பல்கலைக்கழ பொறியியல் பீடத்தினாலேயே இந்த விமானம் ஆளில்லா உளவு விமானம தயாரிக்கப்பட்டுள்ளது. யூ.ஏ.வீ என்ற பெயரிலான இந்த ஆளில்லா உளவு விமானத்தை மொறட்டுவ பல்கலைக்கழக பேராசிரியர் சுதத் ரோஹன முனசிங்கவும் பல்கலைக்கழக பொறியியல் பீடத்தைச் சேர்ந்த நான்கு மாணவர்களும், இணைந்து தயாரித்துள்ளனர்.என்று அரசாங்க தகவல் திணைக்களத்தின் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. 200 மீற்றர் உயரத்தில் பறந்து 12 நிமிட நேரத்திற்கு உளவுப் பணியில் ஈடுபட்டு தகவல்களை வழங்கக் கூடிய வகையில் இந்த விமானம் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/69595-2013-06-…

    • 5 replies
    • 1.2k views
  8. புதுக்குடியிருப்பில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டவர்களில் 3,956 பேர் வீடுகள் இன்றி தற்காலிக கொட்டகைகளில் வசித்து வருகின்றனர். மீள்குடியேற்றம் செய்யப்பட்டு பல வருடங்கள் ஆகியும் இதுவரை தங்களுக்கு எவ்விதமான நிரந்தர வீட்டு வசதிகள் செய்து தரப்படவில்லை என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத.தரைத்த புதுக்குடியிருப்பு பிரதேச செயலக அதிகாரிகள் '2013 மார்ச் மாதம் வரையான காலப் பகுதியில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் 11,500 குடும்பங்களைச் சேர்ந்த 36,811 பேர் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 3,402 பேருக்கு நிரந்தர வீடுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர் 'இதில் 2,691 பேருக்கு இந்திய வீட்டுத்திட்டத்தின் ஊடாகவும் 671 பேருக்க…

    • 0 replies
    • 413 views
  9. விடுதலைப் புலிகளினால் கொழும்புக்குக் கடத்தப்பட்ட தலா 500 கிலோகிராம் எடையுடைய இரண்டு பாரிய குண்டுகளும், பெருமளவு ஆயுதங்களும் இன்னமும் கொழும்பு புறநகர் பகுதியொன்றில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலை அடுத்து பாதுகாப்புத் தரப்பினர் அதிர்ச்சியடைந்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், http://tamilworldtoday.com/?p=14369

  10. வடக்கு கிழக்கு இணைப்பைத் தடுக்கும் வகையில் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை மறுசீரமைப்பதற்கு ஆளும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் இணக்கம் வெளியிட்டுள்ளனர். அரச தலைவர் மகிந்த ராஜபக்‌ஷ தலைமையில் அலரிமாளிகையில் நேற்றிரவு (04) நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் போது இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கை இணைப்பதற்கான சட்ட ஏற்பாடுகளை நீக்குவதை மையப்படுத்தியே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. விரிவான விபரங்களுக்கு, http://tamilworldtoday.com/?p=14356

    • 0 replies
    • 622 views
  11. இலங்கையில் பாடசாலை மாணவர்களில் 6 வீதமானவர்கள் மதுபானத்திற்கு அடிமையாகியுள்ளதாக தேசிய கல்வி ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதேவேளை, யாழ்ப்பாணத்திலும் இந்த நிலை தலைதூக்க ஆரம்பித்துள்ளதாக தமிழ்ச் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். மேலும், http://tamilworldtoday.com/?p=14350

    • 0 replies
    • 356 views
  12. இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பழ வகைகளில் பெரும்பாலானவை உணவுப் பயன்பாட்டுக்கு உகந்ததல்ல என தேசிய நச்சுப் பதார்த்த தகவல் மத்திய நிலையம் எச்சரித்துள்ளது. மேலும், http://tamilworldtoday.com/?p=14340

    • 0 replies
    • 563 views
  13. பிக்குவின் வாய்க்கு பிளாஸ்டரை ஒட்டிவிட்டு விஹாரையிலிருந்த ஐந்து சந்திரவட்டக்கற்களையும் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவமொன்று கெப்பத்திக்கொல்லாவையில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது. கெப்பத்திக்கொல்லாவா, ஹேரத் ஹில்மிலேவ விஹாரையிலேயே இந்த கொள்ளைச்சம்பவம் இன்று அதிகாலை 1 மணியிலிருந்து மூன்று மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விஹாரைக்குள் புகுந்த கொள்ளை கோஷ்டியினர் விஹாராதிபதி மற்றும் சிவில் பாதுகாப்பு படை வீரர் ஆகிய இருவரின் வாய்களுக்கும் பிளாஸ்டரை ஒட்டிவிட்டே பெறுமதிவாய்ந்த ஐந்து சந்திரவட்டக்கற்களையும் கொள்ளையிட்டு சென்றுள்ளதாக தெரிவித்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்திவருவதாகவும் தெரிவித்தனர். http://tamil.dailymir…

  14. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி பிரச்சினைகளுக்கு தீர்வு காண விரும்புவதில்லை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நாட்டின் பிரச்சினைகளுக்கோ அல்லது தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கோ தீர்வுகளை வழங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முனைப்பு காட்டத் தவறியுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டால் தங்களது அரசியல் இருப்பை தக்க வைத்துக்கொள்ள முடியாது என்ற காரணத்தினாலயே, கூட்டமைப்பு இவ்வாறு நடந்து கொள்கின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தங்களது அரசியல் இருப்பிற்காக பிரச்சினைகளை நீட்டிக்க வேண்டுமென்றே கூட்டமைப்ப விரும்புகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் மக்கள் சமாதானமாக வாழ்வதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் விரும்பவில்லை என அ…

  15. இலங்கை அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தினை அமுல்படுத்துவதன் மூலமே நாட்டு மக்களிடையே சுமூகமான நிலையை ஏற்படுத்த முடியும் என அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். மேலும், http://tamilworldtoday.com/?p=14262

    • 1 reply
    • 536 views
  16. சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் கல்வி மேம்பாட்டிற்கானது - அமெரிக்கா சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தமானது கல்வி செயற்பாடுகளை மேம்படுத்துவதற்காக செய்துக்கொள்ளப்பட்டதொன்றாகும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. திருகோணமலை நகரசபையின் கீழ் இயங்கும் திருகோணமலை பொது நூலகத்தில் அமெரிக்க நிலையம் ஒன்றினை ஆரம்பிப்பதற்கான ஒப்பந்தம் அண்மையில் கைச்சாத்திடப்பட்டது. திருகோணமலை நகரசபையின் தலைவரும் இலங்கைக்கான அமெரிக்க நிலையத்திற்கான பணிப்பாளர் கிருஸ்கோபர் ஸ்டீல் ஆகியோருமே இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர். இளைஞர் யுவதிகளின் தொழில்நுட்ப அறிவினை விருத்தி செய்வதற்காகவும் நூலகத்தில் வாசிப்பில் ஈடுபடுபவர்களின் அறிவு மற்றும் ஆற்றலை வளர்க்கும் செயற்பாடுகளும…

    • 0 replies
    • 467 views
  17. கனடா தமிழ் மக்களினால் நடாத்தப்படும் ரொறன்ரோ மனிதாபிமானத்தின் குரல் எனும் அமைப்பினால் 18 லட்சம் ரூபா பெறுமதியான வாகனம் நேற்று முன்தினம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்களினால் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் நா.வை. குகராசா மற்றும் உப தவிசாளர் வ. நகுலேஸ்வரன் ஆகியோரிடம் கையளிக்கப்பட்டது.. கிளிநொச்சி, முல்லைத்தீவு, மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் சுகயீனம் காரணமாக யாழ்ப்பாண வைத்தியசாலை செல்பவர்கள் சிகிச்சை பலனின்றி இறக்கும் சந்தர்ப்பங்களில் அவர்களின் பூத உடல்களை கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாண மாவட்டங்களுக்கு கொண்டு செல்வதற்கு வறிய ஏழை மக்கள் பாரிய சவால்களை எதிர்நோக்குகின்றனர். இதனை நிவர்த்த செய்ய பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களின் வேண்…

  18. வடக்குத் தேர்தல் நடத்தப்படும் பட்சத்தில் அரசாங்கத்தின் தோல்வியைக் குறைத்துக் கொள்வதற்கு இந்த சிங்கள வாக்காளர்களைப் பயன்படுத்த முடியும் என்ற திட்டத்தில் இந்த செயல்பாடு முன்னெடுக்கப்படுகிறது. மேலும், http://tamilworldtoday.com/?p=14236

  19. 2013ஆம் ஆண்டிற்கான வாக்காளர் பட்டியலின் திருத்தப் பத்திரங்களை சேகரிக்கும் நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், http://tamilworldtoday.com/?p=14296

    • 0 replies
    • 481 views
  20. வடமாகாணசபைத் தேர்தலை நடாத்துவற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வெளிவிவகார அமைச்சர் ஜி.ல்.பீரிசுக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார். எனினும் தேர்தல் நடைமுறைகளின் படி ஜனாதிபதி, தேர்தல்கள் ஆணையாளருக்கு யூன் மாதத்திற்கு முன்னர் தேர்தலை நடத்துவதற்கு உத்தரவிடவேண்டும். அத்துடன் மாகாண சபை தேர்தல்கள் சட்டம் 1988ஆம் ஆண்டின் பிரிவு 2இன் படி, ஒரு மாகாணசபையில் முதன்முதல் மாகாணசபைத் தேர்தல் நடைபெறும்போது அதனை ஜனாதிபதி தேர்தல்கள் ஆணையாளருக்குக் கட்டளையிடுவார். அந்த அறிவிப்பு தேர்தல்கள் ஆணையாளரால் ஒரு வாரத்திற்குள் வர்த்தமானியில் வெளியிடப்பட வேண்டும். அதன்பின்னர் இரண்டு வாரங்களுக்குள் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்படவேண்டும். எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வடமாகாண ச…

  21. இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தில் இராணுவ தேவைக்காகக் கையகப்படுத்தப்பட்டுள்ள கேப்பாப்பிலவு பிரதேச மக்களை அங்குள்ள ஆலயம் ஒன்றிற்கு, ஒரு தடவை சென்று வழிபடுவதற்கு இலங்கை இராணுவம் ஞாயிறன்று அனுமதி வழங்கியிருந்தது. இதனையடுத்து, தற்போது கேப்பாபிலவு மாதிரி கிராமம் என்றழைக்கப்படுகின்ற வேறிடத்தில் குடியமர்த்தப்பட்டுள்ள சுமார் 300 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பத்து உழவு இயந்திரங்கள் உள்ளிட்ட வாகனங்களில் அங்கு சென்று வழிபட்டுவிட்டுத் திரும்பியிருக்கின்றார்கள். கேப்பாப்பிலவு மாதிரி கிராமத்தில் கிறிஸ்தவ ஆலயம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள இந்துக்கள் தாங்கள் வழிபடுவதற்கு ஆலயம் ஒன்று தேவை என்பதை உணர்ந்து இராணுவத்தினர் ஆலயம் ஒன்றை அமைத்து அதில் வைப்பதற்கென பிள்ளை…

  22. இராணுவத்தினரின் பண்ணையில் வேலை செய்து வந்த கிளிநொச்சியைச் சேர்ந்த யுவதி ஒருவர் மாங்குளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி கிருஷ்ணபுரத்தை சேர்ந்த இவர் அண்மையில் காணாமல் போயிருந்தார். கிருஸ்ணபுரத்தைச் சேர்ந்த 24 வயதுடைய துரைச்சாமி - சரோஜா என்ற இவர் சீ.எஸ்.டி எனப்படும் சிவில் பாதுகாப்புப் படையில் பணியாற்றி வந்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பனிக்கன்குளம் பகுதியில் ஆளில்லாத வீடு ஒன்றிலிருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டிருந்தது. கிளிநொச்சி பொதுமருத்துவமனையில் இருந்த குறித்த சடலத்தை தனது மகளது சடல் என தாயார் அடையாளம் காட்டியுள்ளார். காவல்துறையினர் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்தி வருவதாக கூறுகின்றனர். http://www.globaltamilnews.net/GTMNEditorial…

  23. மட்டக்களப்பில் இடம்பெற்ற கோவில் உடைப்புச் சம்பவம் இலங்கையில் மீண்டும் ஒரு யுத்த சூழ்நிலையை ஏற்படுத்துவதாக அமைகிறது என இலங்கைக்கான சர்வதேச இந்து மத குருமார் ஒன்றியம் தெரிவித்துள்ளது. மேலும், http://tamilworldtoday.com/?p=14176

    • 1 reply
    • 662 views
  24. 13ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தை ரத்துச் செய்வது ஏன் முக்கியம் என்ற விடயங்கள் அடங்கிய தகவல்களும் தயார் நிலையில் இருப்பதாகவும் அந்த கட்சி தெரிவித்துள்ளது. எனினும், தனிநபர் பிரேரணை மூலம் அரசியலமைப்பில் மாற்றம் செய்ய முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், http://tamilworldtoday.com/?p=14044

    • 2 replies
    • 506 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.