Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழ் இன அழிப்பு நாள் நடந்தேறி நான்கு வருடங்கள் ஆகியும் தற்பொழுதும் போர் குற்ற ஆதாரங்கள் வெளிவந்தவண்ணமே உள்ளது. அதி உச்ச போர் குற்றமாக வெள்ளைக்கொடியுடன் வந்தவர்களை இலங்கை அரச படைகள் கைது செய்து சுட்டு கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டு வந்தது அனால் இதை சிங்கள் அரசு மறுத்துள்ளது அவர்ர்களுடைய வழைமையான மறுப்புக்களுடன் இதுவும் ஒன்று தற்பொழுது வெளிவந்து இருக்கும் போர் குற்ற ஆதார வீடியோவில் ஒருவர் வெல்லைகொடியுடன் சரண் அடைகிறார் .அவர் பின் அழைத்து செல்வதும் கட்டிவைக்கும் படங்கள் முதலே வெளியாகின. வீடியோ தற்பொழுது வெளியாகியுள்ளது இந்த ஆதார வீடியோ வெள்ளைக்கொடியுடன் விடுதலைப்புலிகளும் மக்களும் சரண் அடைத்ததுக்கான ஆதாரங்களாகும் http://www.vivasaayi.com/2013/05/blog-post_9515.html

    • 6 replies
    • 1.6k views
  2. கோதாபய ராஜபக்ச தன்னை உபஜனாதிபதியாக நினைத்து கொண்டு அரசியல் பேசி நாட்டை குழப்பக்கூடாது ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கோதாபய ராஜபக்ச இன்று ஒரு அமைச்சின் செயலாளர். வேறு எந்த ஒரு அமைச்சின் செயலாளரும் பகிரங்கமாக அரசியல் பேசுவதில்லை. ஜனாதிபதியின் சகோதரர் என்ற ஒரே அந்தஸ்த்தின் காரணமாக கோதாபய தன்னை ஒரு உப ஜனாதிபதியாக உருவகித்து கொண்டுள்ளார். இதன் காரணமாகவே அவர் இன்று வரம்பு மீறி பகிரங்கமாக அரசியல் பேசுகிறார். இவருக்கு நான் கடந்த மாதமே ஒரு பிரபல சிங்கள ஊடகம் மூலமாக ஒரு ஆலோசனை சொன்னேன். அதை மீண்டும் இப்போது சொல்கிறேன். கோதாபய ராஜபக்ச ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேசிய பட்டியல் மூலமாக பாராளுமன்ற உறுப்பினாராக பதவி ஏற்கட்டும். அதன் பிறகு பாதுகாப்பு அமைச்சர் ஆகட்டும்.…

  3. எமது கட்சி அரசுடன் இணைந்து செயற்பட்டாலும், இந்த அரசுமீது எனக்கு நம்பிக்கை இல்லை! - அமைச்சர் ஹக்கீம் 'மஹிந்த ராஜபக்ஷ அரசுடன் எமது சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கூட்டணியான இணைந்து செயற்பட்டு வருகிறது. எனினும், இந்த அரசு மீது எமக்குப் போதியளவு நம்பிக்கை இல்லை. இதை நான் வெளிப்படையாகக் கூற விரும்புகின்றேன். 13வது அரசமைப்பு திருத்தத்தை நீக்காது வடக்கு மாகாணசபைத் தேர்தலை அரசு நடத்தியே ஆகவேண்டும். இந்தத் தேர்தலில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும்' இவ்வாறு 'பொங்குதமிழ்' இணையத்தளத்திற்குத் தெரிவித்தார் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம். இனவாதிகளின் கருத்துக்களுக்கு செவிசாய்க்காமல் வடக்கு மாகாணசபைத் தேர்தலை வன்முறை எதுவும…

  4. http://www.periyarthalam.com/2013/05/25/%E0%AE%85%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA/ கவித்துவமான வார்த்தைகளும் கலையம்சம் நிரம்பிய செயல்களும் சமூக விடுதலைக்கு எதிரானவை என்று தமிழர்களுக்கு எங்கோ அடிப்படையில் ஒரு சந்தேகம் இருக்கிறதோ என்று தோன்றுகிறது. ஒவ்வொரு முறை விடுதலைப் பாடலுக்கான தன் எழுச்சியையும் இச் சந்தேகத்துடனேயே கடந்து போகிறான். அல்லது, தனக்குத்தானே இறுமாப்புடன் கவிஞன் என்று கூறிக் கொள்கிறான்.இரண்டிலும் நிரம்பிய சிக்கல்கள் தாம் விடுதலைக்கான வேகத்தை மட்டுப்படுத்துகின்றன என்று கொள்ளலாம் . கவிதையெங்கும் அர…

  5. 13ஆவது திருத்தம் குறித்து கருத்துக்களை வெளியிடும், அதிகாரமும், உரிமையும் பாதுகாப்புச் செயலாளருக்கு இல்லையென வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். மேலும்,,, http://tamilworldtoday.com/?p=12504

    • 1 reply
    • 691 views
  6. ஜோர்தானில் இலங்கைப் பணிப்பெணின் மரணத்தில் சந்தேகம் ஜோர்தானில் இலங்கைப் பணிப்பெண் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அவரது பெற்றோர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். குறித்த பெண் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துள்ளதாக உறவினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது தாயாரான நாகேந்திரன் மங்களேஸ்வரி ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் ஆகியவற்றின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். மட்டக்களப்பு, வாழைச்சேனையைச் சேர்ந்த நாகேந்திரன் காந்திமதி (21 வயது) என்ற பெண்ணின் மரணம் தொடர்பாக சந்தேகம் வெளியிட்டுள்ள தாயார் நாகேந்தி…

    • 0 replies
    • 618 views
  7. மலையகத்தில் வேலையற்ற இளைஞர்களுக்கு காணி பகிர்ந்தளிப்பு எதற்காக ? பயன்படுத்தப்படாத காணிகள் என்று சொல்லி, 25,000 ஏக்கர் மலையக தோட்டப்புற காணிகளை தோட்ட நிறுவனங்களிடமிருந்து மீளப்பெற்று, அவற்றை தெரிவு செய்யப்பட்ட வேலையற்ற இளைஞர்களுக்கு, ஆளுக்கு இரண்டு ஏக்கர்களாக பிரித்து வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. காணிகளை பெறுகின்ற வேலையற்ற இந்த இளைஞர்களுக்கு, இந்த காணிகளில் விவசாயம் செய்வதற்காக கடன் வழங்கவும், காணிகளில் பயிரிட நாற்றுகளை, விதைகளை வழங்கவும், உரவகைகளை வழங்கவும் அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இதற்காக முதற்கட்டமாக 100 மில்லியன் ரூபாவை திறைசேரி ஒதுக்கியுள்ளது. இந்த தோட்டப்புற காணிகளையும், கடன் உதவிகளையும் பெறுகின்ற 12,500 வேலையற்ற இளைஞர்கள் பட்டியலில், வேலையற்ற …

    • 0 replies
    • 468 views
  8. இலங்கை, இந்திய பிரஜைகள் இரு நாடுகளுக்கும் பயணிப்பதற்கு இனி முன்கூட்டிய வீசா பெறும் நடைமுறையை இரத்துச் செய்து ''on Arrival'' வீசா நடைமுறையைக் கொண்டுவருவது குறித்து தூதரக மட்டத்தில் பேச்சு நடத்தப்படுகிறது. மேலும் http://tamilworldtoday.com/?p=12494

    • 0 replies
    • 631 views
  9. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடதுசாரி கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. 13ம் திருத்தச் சட்ட அமுலாககம் தொடர்பில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. இடதுசாரி கட்சித் தலைவர்களான திஸ்ஸ விதாரண, டியூ.குணசேகர மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்துள்ளனர். 13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்தோ அல்லது வலுவிழக்கச் செய்தோ வட மாகாணசபைத் தேர்தல் நடத்தக் கூடாது என இடதுசாரி கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். வடக்கு காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் குறித்தும் இந்தப் பேச்சுவார்த்தைகளின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் ரத்து செய்யப்படுவதனை ஏற…

  10. 13வது அரசியல் அமைப்புச் சட்டத்தில் திருந்தங்களை கொண்டு வருமாறு கோரி, அமைச்சர் சம்பிக்க ரணவக்க நாடாளுமன்றத்தில் யோசனை ஒன்றை முன்வைத்தால், அரசாங்கம் பெரும் நெருக்கடியை சந்திக்கும் என சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார். இதனால் இந்த யோசனையை நாடாளுமன்றத்தில் சமர்பிப்பதை தடுக்க அரசாங்கம் அதிகளவிலான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். போருக்கு பின்னர், இலங்கை சர்வதேச ரீதியில் பல சவால்களை எதிர்நோக்கியுள்ளது. இந்த பின்னணியில், அரசாங்கம் இப்படியான யோசனைக்கு ஆதரவு வழங்கினால் தேவையற்ற பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதேவேளை யோசனை முன்வைக்கப்படுவதன் மூலம் அரசாங்கத்திற்கு ஏற்படும் அசௌகரியம் குறித்து மீண்டும் ஒரு முறை …

  11. யாழ்ப்பாண சனத்தொகைப் பரம்பலில் மாற்றம் ஏற்படுத்த முயற்சிக்கப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். சனத்தொகைப் பரம்பலில் மாற்றம் ஏற்படுத்தும் அரசாங்கத்தின் முனைப்புக்களுக்கு முஸ்லிம் தலைவர்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆதரவளித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் சட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் எதிர்வரும் வட மாகாணசபைத் தேர்தல் முடிவுகளை மாற்றங்களை ஏற்படுத்த முயற்சிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் திட்டமிட்ட வகையில் சிங்களவர்களை குடியேற்றி சனத்தொகைப் பரம்பலில் மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த உத்தேச திருத்தச் சட்டம் பற்றிய தகவல்கள் இதுவரையில் கிடைக்க…

  12. யாழ்ப்பாணத்தில் புதிய இராணுவ குடியிருப்புகளை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள இராணுவ முகாம்களில் மூன்றை மாத்திரம் வைத்து கொண்டு ஏனைய முகாம்கள் இருந்த இடங்களில் இராணுவ குடியிருப்புகளை ஏற்படுத்த உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அகற்றப்பட உள்ள முகாம்கள் இருந்த காணிகள், அவற்றின் உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் எனவும் பலாலி இராணுவ முகாம் அமைந்துள்ள காணிகளின் உரிமையாளர்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாண இராணுவத் தலைமையகம் அமைந்துள்ள பகுதியிலும் விமான நிலையம் அமைந்துள்ள பலாலி பிரதேசத்திலும் புதிய இராணுவ குடியிருப்புகள் ஏற்படுத்தப்படும். அத்துடன் காங்கேசன்துறை துறைமுகம்…

  13. மீண்டும் தமரா குணநாயகத்தை ஜெனீவா அனுப்புவது குறித்து கவனம் செலுத்துகின்றது அரசு! [sunday, 2013-05-26 08:37:27] இலங்கையின் சிரேஸ்ட இராஜதந்திரிகளில் ஒருவரான தமரா குணநாயகத்தை மீளவும் ஜெனீவா அனுப்பி வைப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஜெனீவாவிற்கான இலங்கை வதிவிடப் பிரதிநிதியாக மீளவும் குணநாயகத்தை நியமிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜெனீவாவிற்கான இலங்கை வதிவிடப் பிரதிநிதியாக தற்போது ரேனுகா செனவிரட்ன கடமையாற்றி வருகின்றார். இவரை ஐரோப்பிய நாடொன்றின் தூதுவராக நியமித்து அந்தப் பதவியை குணநாயகத்திற்கு வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை…

  14. விடுதலைப்புலிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என்ற கருணாவின் கோரிக்கை நிராகரிப்பு : 25 மே 2013 கைதுசெய்யப்பட்டுள்ள விடுதலைப்புலிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) விடுத்துள்ள கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது. விமானங்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியவர்கள், இராணுவ முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள், கிராமங்களுக்குள் புகுந்து கொலைகளை செய்தவர்கள் என பல வன்முறைச் செயல்களுடன் சம்பந்தப்பட்ட சுமார் 200 விடுதலைப்புலிகள் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சிறிய குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்ட விடுதலைப்புலிகளுக்கு மாத்திரம் மன்னிப்பு வழங்கப்பட்டு, அவர்கள் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக திவயின தெரிவித்து…

    • 2 replies
    • 910 views
  15. [ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 05:29 GMT ] [ கார்வண்ணன் ] சிறிலங்கா அரசாங்கத்தின் அனுமதியைப் பெறாமல், திருகோணமலையில் அமெரிக்கன் நிலையத்தை அமைப்பதற்கு திருகோணமலை நகரசபையுடன் அமெரிக்கத் தூதரகம் புரிந்துணர்வு உடன்பாடு செய்து கொண்ட விவகாரம், சிறிலங்கா அரசுக்கு விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. திருகோணமலை நகரசபையுடன் இணைந்து பொது தகவல் மற்றும் செயற்பாட்டு நிலையத்தை அமைப்பதற்கு கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் புரிந்துணர்வு உடன்பாட்டை செய்து கொண்டுள்ளது. இந்த உடன்பாட்டில் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரக கலாசார, கல்வி, ஊடக விவகாரங்களுக்கான பணிப்பாளர் கிறிஸ்ரொபர் டீலும், திருகோணமலை நகரசபை முதல்வர் கே. செல்வராசாவும் கையெழுத்திட்டனர். கொழும்பிலுள்ள அமெரிக…

  16. 13ஆவது திருத்தச் சட்டம் குறித்தோ, காணி, பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பிலோ கருத்துக்கூறுவுதற்கு பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்‌ஷவிற்கு அதிகாரம் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். பொலிஸ் அதிகாரங்கம் வழங்கப்படுவது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார். மேலும் : http://tamilworldtoday.com/?p=12305

    • 1 reply
    • 568 views
  17. மத முரண்பாட்டுக்கு பௌத்தர்கள் காரணமானவர்கள் இல்லை; ஜனாதிபதி இலங்கையில் உள்ள பௌத்தர்கள் கடும்போக்காளர்கள் அல்ல. மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கவே சிலர் முயற்சிகளை மேற்கொள்கின்றனர் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கண்டி தலதா மாளிகையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் உள்ள பௌத்தர்கள் கடும் போக்கானவர்கள் அல்ல. எனினும் சில அரச சார்பற்ற நிறுவனங்கள் மதத்தின் அடிப்படையில் நாட்டை சீர்குலைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் பௌத்தர்கள் ஏனைய மதத்தவர்களைத் துன்புறுத்துவதாக குற்றம் சுமத்தப்படுகின்றது. எனினும் ஏனைய மத வழிபாட்டுத் தளங்களை அமைத்துக் கொள…

  18. கைதுசெய்யப்பட்டவர்களில் ஏழு ஆண்களும், ஆறு பெண்களும், எட்டு சிறுவர்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். http://tamilworldtoday.com/?p=12263

    • 0 replies
    • 489 views
  19. மட்டக்களப்பு நகரின் வடக்கு நுழைவாயில் நெடுஞ்சாலையோரத்தில் புத்தர் சிலை நிறுவுவதற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி குறித்து நகர மக்கள் பலரும் தமது கவலையை வெளியிட்டுள்ளார்கள். மட்டக்களப்பு நகரிலுள்ள மங்களராமய விகாரையின் விகாராதிபதியினால் முன் வைக்கப்பட்ட கோரிக்கையின் பேரில் புத்தர் சிலை வைப்பதற்கான அனுமதி நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி வாரியத்தினால் அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பௌத்த மக்கள் வசிக்காத பகுதியில் புத்த சிலை வைக்கப்படுவது எந்த வகையிலும் நியாயம் அல்ல என்றும் இது அப்பகுதியில் வாழும் குறிப்பாக, இந்து மக்களை புண்படுத்தும் செயலாகவே தாம் கருதுவதாகவும் நகர மக்கள் பலரும் தமது கருத்துக்களை வெளியிட்டனர். வடக்கு பிரதான நுழைவாயிலில் ஏற்கனவே நிறுவப்பட…

    • 2 replies
    • 712 views
  20. வேப்ப மரத்தில் இருந்து பால் வடியும் அதிசயம் முல்லைத் தீவு, வற்றாப்பளை பகுதியில் வேப்பமரம் ஒன்றில் இருந்து அதிசயிக்கத்தக்க முறையில் பால் வடிகின்றது. இதனை பெருந்திரளான மக்கள் பார்வையிட்டுவருவதுடன் பக்திபரவசத்துடன் வழிபட்டும் வருகின்றனர். http://www.virakesari.lk/article/local.php?vid=4780

  21. 13ஆவது திருத்தச் சட்டம் குறித்தோ காணி, பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பிலோ கருத்துக்கூறுவதற்கு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு அதிகாரம் இல்லை. அவர் அரசாங்க அதிகாரியேயாவார். அரசியல் விடயங்கள் குறித்து பேசவேண்டுமானால் அவர் பாதுகாப்புச் செயலாளர் பதவியை இராஜினாமா செய்து விட்டு வரவேண்டும் என்று தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளரும், யாழ். மாவட்ட எம்.பி.யுமான சுரேஷ்பிரேமச்சந்திரன் தெரிவித்தார். மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரத்தை வழங்குவது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும் என்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆங்கில ஊடகங்களுக்கு நேற்று கருத்துத் தெரிவித்திருந்தார். இந்த விடயம் குறித்து கேட்டபோதே சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார். h…

  22. பராக்கிரமபாகு போன்று ஜனாதிபதி மஹிந்தவும் குளத்தை கட்டியிருக்கலாம் மத்தளயில் சர்வதேச விமான நிலையத்தை கட்டியதற்கு பதிலாக அங்கு குளம் ஒன்று கட்டியிருந்தால் மஹா பராக்கிரமபாகு போன்று ராஜபக்ஷ பெயரும் வரலாற்றில் பதிவாகியிருக்கும் என்று தெரிவித்துள்ள பொதுபலசேனா ஜனாதிபதியை சூழவுள்ள ஆலோசகர்கள் இவ்வகையான பயனற்ற திட்டங்களை ஜனாதிபதிக்கு கூறி மக்களின் நிதிக்கு ஆப்பு வைக்கக் கூடாது என்றும் அவ்வமைப்பு குறிப்பிட்டுள்ளது. பொதுபலசேனாவின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டின்போது மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது. இங்கு உரையாற்றிய அவ்வமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கூறுகையில், ஜனாதிபதியை சூழவுள்ள ஆலோசகர்கள் புதுமையானவர்கள். விசித்திரமான ஆலோசனைகள…

    • 3 replies
    • 985 views
  23. துணுக்காய் கல்வி வலயத்தில் மீள்குடியமர்வின் பின்னர் மாணவர்களின் கல்வியில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக துணுக்காய் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி எல்.மாலினி வெனிற்றன் தெரிவித்துள்ளார். இதற்குச் சான்றாக கடந்த காலங்களில் நடைபெற்ற பரீட்சைகளின் பெறுபேறுகள் எடுத்துக்காட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். துணுக்காய் கல்வி வலயத்தில் மூன்று கல்விக் கோட்டங்கள் உள்ளன. இதில் ஒட்டுசுட்டான் கல்விக் கோட்டத்தில் 11 பாடசாலைகளும், மாந்தை கிழக்கு கல்விக் கோட்டத்தில் 4 பாடசாலைகளும், துணுக்காய் கல்விக் கோட்டத்தில் 5 பாடசாலைகளும் க.பொ.த. சாதாரண வகுப்புக்களைக் கொண்டுள்ளன. மற்றும் 2011, 2012 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற பரீட்சைகளின் பெறுபேற்றின் அடிப்படையில் ஒட்டுசுட்டான் கோட்டம் 19 வீதத்தி…

    • 1 reply
    • 855 views
  24. சவேந்திர சில்வா கூறுவதில் மாற்றுக்கருத்து இல்லைதான். இலங்கையின் போர் வெற்றிக்கு மிகப்பாரிய விலை கொடுக்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்ட குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்களின் கணக்குகள் இவர்களுக்குத் தானே உண்மையாகத் தெரியும். மேலும் வாசிக்க... http://tamilworldtoday.com/?p=12117

  25. பசு மாடு தன்சல்.... வெசாக் தினத்தையொட்டி யாழ்ப்பாணத்தில் எட்டு குடும்பங்களுக்கு படையினரால் பசு மாடுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. வெசாக் தினத்தையொட்டி யாழ்ப்பாணம் மானிப்பாய் மருதடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் 511ஆவது படையணியினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில்;, 511 ஆவது படையணின் கட்டளைத் தளபதி ஜெனரல் சமரசிங்க மற்றும் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க ஆகியோர் மாடுகளை வழங்கி வைத்தனர். http://www.virakesari.lk/article/local.php?vid=4774

    • 7 replies
    • 1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.