ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143483 topics in this forum
-
"பிரபாகரன் தனிச்சிறப்புக் கொண்டவர். அவருடன் என்னை ஒப்பிடவேண்டாம். பச்சைப் பொய்களைக் கூறி தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களின் ஒற்றுமையைக் குழப்புவதற்கும், நாட்டுக்குத் தீமை செய்யவுமே பொதுபலசேனா என்ற இனவாத அமைப்பு முளைத்துள்ளது. இதை நாட்டு மக்கள் முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும்.'' இவ்வாறு கடும் ஆவேசத்துடன் தெரிவித்தார் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப். "இனவாதிகளின் கருத்துகளுக்குச் செவிசாய்க்காமல் வடக்கில் மாகாணசபைத் தேர்தலை அரசு உடனடியாக நடத்தியே ஆகவேண்டும். அங்கு வாழும் தமிழ் மக்களுக்கு சகல உரிமை களையும் வழங்கவேண்டும். அதேவேளை, வடக்கு, கிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்புக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்' என்றும் அவர் குறிப்பிட்டார். பொதுபலசேனாவின் தலைமை அலுவலகத்தில் நேற்ற…
-
- 14 replies
- 1.4k views
-
-
அரசாங்கத்தின் போர் வெற்றியின் 4ஆவது ஆண்டு நிறைவு விழா ஒத்திகைகள் நடைபெற்ற நாட்களில் கொழும்பு சனநெரிசல் மிக்க பிரதேசங்களில் நடமாடியதாகக் கூறப்படும் விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவரை தாம் கைதுசெய்துள்ளதாக கொள்ளுப்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும்,, http://tamilworldtoday.com/?p=12227
-
- 0 replies
- 503 views
-
-
மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்கினால் பாதுகாப்புத் தரப்பினருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார். எனவே மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்கப்படுவதனை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்கள் வழங்கக் கூடாது. அவ்வாறு வழங்கினால் அது பாதுகாப்புத் தரப்பினருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும். அரசாங்க அதிகாரி என்ற ரீதியில் நாட்டின் பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பில் ஆலோசனை வழங்குவது தமது கடமையாகும். எனினும் மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதா அல்லது இல்லையா என்பதனை அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும். மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட்டால் சட்டம…
-
- 2 replies
- 521 views
-
-
காணி, பொலிஸ் அதிகாரங்களை இரத்துச் செய்யாது வட மாகாண சபை தேர்தலை அரசாங்கம் நடத்தினால் அதுவே அரசாங்கத்தின் ‘‘அஸ்தமனமாக’’ அமையும் என்று எச்சரிக்கை விடுக்கும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் இந்தியாவின் தேவையை நிறைவேற்ற இலங்கை இந்தியாவின் காலனித்துவ நாடல்ல என்றும் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் டாக்டர் குணதாசஅமரசேகர மேலும் கருத்துத் தெரிவிக்கையில்; 13ஆவது திருத்தம் முழுமையாக இல்லாதொழிக்கப்பட வேண்டும் அல்லது காணி, பொலிஸ் அதிகாரங்களை இரத்துச் செய்து வட மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும். இதனைச் செய்யாது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தேர்தலை நடத்தினால் அதுவே இந்த அரசாங்கத்தின் ‘அஸ்தமனமாக’ அமையும். அத்தோடு இவ் அதிகாரங்களை பறிக்காது தேர்தலை வட…
-
- 1 reply
- 440 views
-
-
இலங்கையில் போர் முடிவடைந்தாலும் போர்க்குற்ற முறையீடுகள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் ஆகியவை விசாரணைக்குட்படுத்தப்படவில்லை. சம்பந்தப்பட்டவர்கள் சுதந்திரப் பறவைகளாக உலாவுகிறார்கள் என லண்டனை தலைமையகமாகக் கொண்டு செயற்படும் சர்வதேச மன்னிப்புச் சபை அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது. கட்டாயத்தின் பேரில் காணா மற்போகச் செய்யப்பட்ட இருபதுக்கு மேற்பட்டோர் குறித்து இலங்கையில் கடந்தஆண்டு முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு காணாமற் போகச் செய்யப்பட்டோரில் அரசியல்வாதிகள், வர்த்தகப் பிரமுகர்கள், சந்தேகத்துக்குரிய குற்றவாளிகள் ஆகியோர் அடங்குவர் என்றும் மேற்படி சபை அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. சர்வதேச மன்னிப்புச் சபையால் நேற்று வியாழக்கிழமை விடுக்கப்பட்டுள்ள இந்த …
-
- 0 replies
- 554 views
-
-
வடக்கு மாகாண சபைக்கு 13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள காணி மற்றும் காவற்துறை அதிகாரங்களை வழங்க வேண்டும் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள இந்த மாகாண சபைத் தேர்தல் 13வது அரசியல் அமைப்புத் திருத்தத்தின் கீழ் நடைபெறும் எனவும் அந்த மாகாணத்திற்கு அனைத்து அதிகாரங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு எனவும் அவர் கூறியுள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், வட மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக அமைச்சரின் நிலைப்பாடு குறித்து கேட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அதேவேளை 13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தின் கீழ் தேர்தலை நடத்துவதே அரசாங்கத்தினதும் நிலைப்ப…
-
- 0 replies
- 547 views
-
-
அம்பாறை, திருக்கோவில் பிரதேசத்தைச் சேர்ந்த 33 பேர் உணவு ஒவ்வாமை காரணமாக திருக்கோவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள ஆலயம் ஒன்றில் வழங்கப்பட்ட பிரசாதத்தை உண்டவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். http://www.virakesari.lk/article/local.php?vid=4769
-
- 0 replies
- 434 views
-
-
செப்டெம்பரில் வடக்கு மாகாண சபை தேர்தல் – அரசு உறுதி செய்தது -சந்துன் ஏ ஜயசேகர- 13 வது அரசியல் திருத்தச் சட்டம் தொடர்பாக சில மாதங்களாக நீடித்த ஐயப்பாடு காரணமாக உறுதிப்படுத்தப் படாமல் இருந்த வடக்கு மாகாண சபை தேர்தல் இந்த வருடம் செப்டெம்பர் மாதம் நடக்கும் என அரசாங்கம் உறுதி செய்துள்ளது. அமைச்சரவை பேச்சாளர், பெட்ரோலியத்துறை அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தகவல்கள் திணைக்களத்தில் நடைபெற்ற வாராந்த அமைச்சரவை பத்திரிகையாளர் சந்திப்பில் உத்தேச வடக்கு மாகாண சபை தேர்தலை பின்போடும் எந்த நிலைப்பாடும் அரசுக்கு இல்லை என்று கூறினார். அத்துடன் 13 வது திருத்தச்சட்டத்தை ரத்து செய்யவோ அல்லது மாகாண சபைகளின் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை நீக்கவோ அரசு எண்ணவில்லை என்றும் கூறினார். மாக…
-
- 2 replies
- 837 views
-
-
கொழும்பு துறைமுகத்தில் பாரிய தீ விபத்து [Friday, 2013-05-24 09:58:24] கொழும்பு துறைமுகத்தின் (CFS 1) களஞ்சியசாலையில் இன்று அதிகாலை பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் பாரிய சேதசங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போது பொலிஸாரும், தீயணைப்புப் படையினரும் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இதேவேளை இச்சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். http://seithy.com/breifNews.php?newsID=83403&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 621 views
-
-
யாழில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கடலூர் மீனவர்கள் 26 பேர் நாடு திரும்பினர் யாழ்பாணம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 26 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். விடுதலையான மீனவர்கள் இந்திய எல்லைப் பகுதிக்கு சென்றடைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் காலை 8 மணியளவில் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் 5-ம் திகதி இலங்கை எல்லைப்பகுதிக்குள் சென்று மீன் பிடித்து கொண்டிருந்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். http://www.adaderana.lk/tamil/news.php?nid=39410
-
- 1 reply
- 369 views
-
-
வடக்குத் தேர்தலை நடத்துவதாக அரசாங்கம், மக்களையும், சர்வதேசத்தையும் ஏமாற்றி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. தேர்தலை நடத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியான பின்னர் அரச தரப்பில் சிலர் நீதிமன்றம் சென்று தடையுத்தரவைப் பெறும் முயற்சிகளும் இடம்பெற்று வருவதாகவும் அந்தக் கட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்தக் கட்சி மேலும் கூறுகையில், http://tamilworldtoday.com/?p=12005
-
- 6 replies
- 976 views
-
-
13ஆவது திருத்தச் சட்டத்தை அரசாங்கம உடனடியாக இரத்துச் செய்ய வேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமய வலியுறத்தியுள்ளது. அத்துடன், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைக் கொன்றதுபோல... தொடர்ந்து வாசிக்க... http://tamilworldtoday.com/?p=11996
-
- 5 replies
- 867 views
-
-
இலங்கை போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக இந்தியா 50 ஆயிரம் வீடுகள் கட்டிக்கொடுக்கிறது. இதில் பட்டிகோலா பகுதியில் கட்டப்பட்ட 4 ஆயிரம் வீடுகள் திறப்பு விழா நிகழ்ச்சி நடந்தது. அதில் அதிபர் ராஜபக்சேவின் தம்பியும், இலங்கை மந்திரியுமான பசில் ராஜபக்சே கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:- இலங்கைக்கு இந்தியா மிகவும் நட்பு நாடாக உள்ளது. எங்களது வளர்ச்சியில் இந்தியா எப்போதும் அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது. இலங்கைக்கு ஒன்று என்றால் உதவி செய்வதில் முதன்மை நாடாக இந்தியா உள்ளது. போருக்கு பிறகு நாங்கள் செய்த மறுவாழ்வு திட்டங்களை இந்தியா பாராட்டி உள்ளது. இலங்கையில் இந்தியா தூதராக இருந்த அசோக் கந்தா இலங்கைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் சிறப்பாக செய்துள்ளார். இவ்வாறு அவர் …
-
- 2 replies
- 560 views
-
-
கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் சிலாவத்தை கிராம அபிவிருத்திச் சங்க உத்தியோகத்தர்கள் தெரிவு நீண்டகால இழுபறியின் பின்னர் நேற்று முன்தினம் முறையாக இடம்பெற்றது. முல்லைத்தீவு மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர், கரைதுறைப் பற்று பிரதேச செயலக கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் கரைதுறைப்பற்று கிராம அபிவிருத்திச் சங்கங்கள், மகளிர் அபிவிருத்திச் சங்கங்களின் சமாசத் தலைவர் ஆகியோர் முன்னிலையில் தெரிவு இடம் பெற்றது. இந்தத் தெரிவின்போது சிலாவத்தை கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவராக இருந்து புதிய நிர்வாகத் தெரிவுக்கு முட்டுக்கட்டை போட்டு வந்தார் என மக்கள் குற்றஞ்சாட்டிய திருச்செல்வம் டக்ளஸ் பங்குபற்றவில்லை. புதிய நிர்வாகத் தலைவராக அ.வேதா ரணியம்பிள்ளையும், செயலாளராக ச.இ…
-
- 2 replies
- 687 views
-
-
நேற்று சிவசக்திக்கு ஆனந்தனுக்கு நாளை எனக்கா? - நான்காம் மாடி விசாரணை குறித்து சம்பந்தன் கேள்வி!! 'சிவசக்தி ஆனந்தனை நேற்று விசாரணை செய்தீர்கள். நாளைக்கு என்னையும் நான்காம் மாடியில் வைத்து விசாரணை செய்வீர்களா? ஏன் நீங்கள் இப்படி தான்தோன்றித்தனமாகச் செயற்படுகின்றீர்கள்? தமிழர்களும், அவர்களின் பிரதிநிதிகளான தமிழ்க் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மனிதர்களே தானே' இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் இன்று வியாழக்கிழமை சிறிலங்கா அமைச்சர்கள் முன்னிலையில் கேள்வி எழுப்பினார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் நேற்றுப் புதன்கிழமை நான்காம் மாடியில் பயங்கரவாதத் தடுப்புப் பி…
-
- 3 replies
- 711 views
-
-
திக்கம் பிரதேசத்தில் படையினரின் தேவைக்காகச் சுவீகரிக்கப்படும் காணியை அளவீடு செய்வதற்காக கடந்த திங்கட்கிழமை அங்கு சென்ற நில அளவை திணைக்களத்தினர் காணி உரிமையாளர்கள் காட்டிய எதிர்ப்பினால் நில அளவைப் பணியைக் கைவிட்டுத் திரும்பினர். பருதித்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவில் ஜே/400 கிராம சேவையாளர் பிரிவில் திக்கம் பகுதியில் 31 பேருக்கு உரித்தான 8 ஏக்கர் காணியை இராணுவத்தின் 16 ஆவது விஜயபாகு காலாட் படைமுகாம் அமைப்பதற்கு சுவீகரிப்பதற்கான அறிவித்தல்கள் கடந்த மாதம் 12 திகதி அங்கு ஒட்டப்பட்டன. இந்த நிலையில் மேற்படி காணியை எதிர்வரும் 20 திகதி அளவீடு செய்வதற்கு நில அளவை திணைக்கள அதிகாரிகள் வருவார்ள் என்று கடந்த 9 ஆம் திகதி காணி உரிமையாளர்களுக்கு எந்தவித ஒப்பமும் இன்றி அநாமதேயமாகக் க…
-
- 0 replies
- 580 views
-
-
காணி சுவீகரிப்பில் அரசு உறுதி ஐ.நா. பிரதிநிதிகளிடம் ஹத்துருசிங்க தெரிவிப்பு:- வடக்கு காணி விவகாரங்களில் ஐக்கிய நாடுகள் அமைப்பு தலையீடு செய்வதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. வடக்கு காணிப் பிரச்சினை தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனிதாபிமான இணைப்புச் செயலக இலங்கைப் பிரதிநிதி அசென்கேயா ஓயூ, யாழ்ப்பாண கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். யுத்தத்தின் பின்னரான அபிவிருத்திப் பணிகளுக்காக காணிகள் சுவீகரிக்கப்பட்டு வருவதாக யாழ் கட்டளைத் தளபதி விளக்கமளித்துள்ளார்.பலாலி விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகத்தை விஸ்தரிப்பதற்கு வலிகாமம் காணிகள் சுவீகரிக்கப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். சில தரப்பினரும் ஊடகங்…
-
- 0 replies
- 506 views
-
-
சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட இலங்கையர்கள் பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரித்தானிய மற்றும் பிரான்ஸ் காவல்துறையினர் கூட்டாக இணைந்து மேற்கொண்ட தேடுதலில் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தெற்காசிய வலய நாடுகளைச் சேர்ந்த மக்களை சட்டவிரோதமான முறையில் ஐரோப்பிய நாடுகளுக்கு கடத்தும் நடவடிக்கைகளில் குறித்த கும்பல் ஈடுபட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. பிரித்தானியாவில் 11 பேரும், பிரான்ஸில் 7 பேரும் மொத்தமாக 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவரைத் தவிர ஏனையவர்கள் அனைவரும் இலங்கையர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சந்தேக நபர்களிடமிருந்து பணம், கையடக்கத் தொலைபேசிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களும் மீட்க…
-
- 0 replies
- 476 views
-
-
13ம் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்பட மாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஜே.என்.பி மற்றும் ஜாதிக ஹெல உறுமய ஆகிய கட்சிகள் 13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்யுமாறு கோரியிருந்தன. 13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்வது குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனித்து தீர்மானம் எடுக்க மாட்டார் என அரசாங்க பதில் பேச்சாளர் அனுர பிரியதர்சன யாபா தெரிவித்துள்ளார்.13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்வது தொடர்பில் இதுவரையில் எவ்விதத் தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்வதற்காக ஜே.என்.பி.யும் ஜாதிக ஹெல உறுமய கட்சியும் பல்வேறு வழிகளில் முயற்சி எடுத்து வருகின்றமை குறிப்…
-
- 0 replies
- 383 views
-
-
மட்டக்களப்பு புல்லுமலை, உறுகாமக் கிராமங்களுக்கு இந்திய வீட்டுத் திட்டத்தை ஆரம்பித்து வைப்பதற்காக சென்ற பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில்ராஜபக்ச தலைமையிலான குழுவினரிடம் துண்டுப்பிரசுரம் கையளித்த இருவரை இலங்கை புலனாய்வுத் துறையினர் கைது செய்துள்ளனர். கிழக்கு மாகாணத்திற்கு இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள வீட்டுத் திட்டத்தில் மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட உறுகாமக் கிராமத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் என்று கூறி 25 முஸ்லீம் குடும்பங்களுக்கு வீடுகள் வழங்குவதைக் கண்டித்து நேற்றைய தினம் (22.05.2013) சென்றிருந்த இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அசோக்காந்தா மற்றும் பசில்ராஜபக்ச தலைமையிலான குழுவினரிடம் உறுகாமம் வாழ் தமிழர்கள் என்ற பெயரில…
-
- 0 replies
- 615 views
-
-
சிறிலங்காவில், பொதுமக்களின் காணிகள் படையினரால் சுவீகரிக்கப்படுவது குறித்து ஆராய்வதற்கு ஐ.நாவின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு பணியக அதிகாரிகள் யாழ்ப்பாணம் சென்றுள்ளனர். மேலும் http://tamilworldtoday.com/?p=12062
-
- 0 replies
- 498 views
-
-
இதனுடன் சீனா இலங்கைக்கு வழங்கியுள்ள கடன்தொகை 1.4 பில்லியன் டொலர்களாக உயர்கிறது. http://tamilworldtoday.com/?p=12035
-
- 1 reply
- 411 views
-
-
ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது காலத்தின் தேவை - சம்பந்தனுக்கு அஸாத் சாலி கடிதம்! [Wednesday, 2013-05-22 16:27:37] தமிழ் முஸ்லிம் சமூகங்கள் சில முக்கிய பொதுவான விடயங்களில் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது என்று தேசிய ஐக்கிய முன்னணியின் பொது செயலாளர் அஸாத் சாலி தெரிவித்துள்ளார். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தனுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அந்த கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது, இந்த நாட்டில் தமிழ் பேசும் சிறுபான்மை சமூகங்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளன. எந்தவொரு பிரச்சினைக்கும் ஆட்சியா…
-
- 1 reply
- 421 views
-
-
தனி ஈழத்துக்கான வாக்கெடுப்பே வடமாகாணத் தேர்தல்:ஹெல உறுமய கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 22 மே, 2013 - 16:46 ஜிஎம்டி ஹெல உருமயத் தலைவரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க இலங்கையின் வட மாகாண சபைக்கான தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளிப்படையாக அறிவித்திருந்தாலும் அந்தத் தேர்தல் நடைபெறுமா என்று கேள்விக் குறிகளும் எழுந்துள்ளன. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி, தேசப்பற்றுள்ள மக்கள் முன்னணியின் தலைவர் குண்தாச அமரசேகர ஆகியோர் இதற்கு முதலில் எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்தனர். பின்னர் பௌத்த கடும்போக்கு அமைப்பு என்று கருதப்படும் பொதுபல சேனா எதிர்ப…
-
- 0 replies
- 324 views
-
-
நீடித்து நிலைக்கக்கூடிய தீர்வே தமிழரின் தேவை; நாடாளுமன்றில் சம்பந்தன் முழக்கம் சமாதானத்தை விரும்பும் தமிழர்களுக்கு நீடித்து நிலைக்கக்கூடிய அரசியல் தீர்வொன்றே தேவையாகவுள்ளது. எனவே, நேர்மையான முறையில் நடந்துகொண்டு தீர்வை வழங்குவதற்கு அரசு முன்வர வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் நேற்று நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார். சுதந்திரம் என்பது நாட்டில் தவறான வழியில் கடைப்பிடிக்கப்படுகின்றது என்றும், ஜெனிவா தீர்மானத்தை நேர்மையான முறையில் அரசு நடைமுறைப்படுத்தவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துதல் தொடர்பில…
-
- 0 replies
- 362 views
-