ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143483 topics in this forum
-
இந்தியன் வீட்டுத்திட்டத்திப் படி மண்டைதீவில் முதற்கட்டமாக 186 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். மண்டைதீவில் ஜே/07, ஜே/08, ஜே/09 உட்பட்ட கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த 186 பயனாளிகளே இவ்வாறு தெரிவுடி செய்யப்பட்டுள்ளனர். அதன்படி ஒரு குடும்பத்திற்கு 5 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா வீதம் வழங்கப்படவுள்ளது. இது 4 கட்டங்களாக வழங்கப்படவுள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஒரு இலட்சம் ரூபா வங்கியில் இடப்படும். அதனையடுத்து 2ஆம் 3ஆம் கட்டங்களில் 2 இலட்சம் ரூபா வழங்கப்படும். இறுதியாக 50ஆயிரம் ரூபா வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் பயனாளிகள் 6 மாதங்களில் முழுமையாக வீட்டினைக் கட்டி முடித்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. http://onlineuthayan.com/News_Mor…
-
- 0 replies
- 261 views
-
-
நெடுந்தீவு மக்களின் போக்குவரத்து நன்மை கருதி வட தாரகை கப்பலானது தனது சேவையினை மீளவும் இன்று அரம்பித்துள்ளது. நெடுந்தீவு கடற்படையினரதும் வீதி அபிவிருத்தி அதிகார சபையினதும் அனுசரனையுடன் இன்று நீண்ட கால இடைவெளியின் பின்னர் தனது சேவையை மீள ஆரம்பித்துள்ளது. அதன்படி குறிகட்டுவான் துறைமுகத்தில் இடம் பெற்ற வடதாரகை கப்பல் பயணத்திற்க்கான ஆரம்ப நிகழ்வுகள் புங்குடுதீவு கடற்படைத் தலைமையில் இடம் பெற்றது. சுமார் 100 மில்லியன் ரூபா செலவில் மீளமைப்புச் செய்யப்பட்டு சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. நிகழ்வில் வட மாகாண கடற்படைகளின் கட்டளைத்தளபதி ரியல் அட்மிரல் டி.எஸ்.உடவத்த, யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், யாழ் மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபை பிரதம பொறியியலாள…
-
- 0 replies
- 339 views
-
-
யாழ்ப்பாணம் வலிகாமம் பகுதியில் பொது மக்களின் நிலங்களை இராணுவம் கையப்படுத்த எடுத்து வரும் முயற்சிகளுக்கு எதிராக பாதிகப்பட்டுள்ளவர்களின் சார்பில் ஐயாயிரம் வழக்குகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு கட்டமாகவே நேற்றைய தினம் தெல்லிப்பழையில் 400 குடும்பங்கள் வழக்குத்தாக்கல் செய்ய பதிவுகளை மேற்கொண்டனர். இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டு இருக்கின்ற வலிகாமம் பகுதிக் காணிகளை விடுவித்து மக்களை தமது சொந்த நிலங்களில் மீள்குடியேற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி கடந்த 29ஆம் திகதி தெல்லிப்பழையில் போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய தமிழ் தேசிக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஐயாயிரம் வழக்குகளை ந…
-
- 0 replies
- 239 views
-
-
முள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகளைத் தோற்கடித்து, சிறிலங்காப் படைகள் போரில் ஈட்டிய வெற்றியின் நான்காவது ஆண்டை பெரும் எடுப்பில் கொண்டாட அரசு தயாராகி வருகிறது. எதிர்வரும் மே 19ஆம்திகதி நடத்தப்படவுள்ள இந்த வெற்றிநாள் கொண்டாட்டத்துக்கு இப்போதே கொழும்பு தயாராகத் தொடங்கியுள்ளது. வெற்றிநாள் அணிவகுப்பின் ஒத்திகை நேற்றுத் தொடக்கம் காலிமுகத்திடலில் ஆரம்பமாகியுள்ளன. முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் பின்னர் வடக்கில் தமிழ் மக்களின் காணிகளை அபகரித்து கண்ணீரும் கம்பலையுமான வாழ்வை அனுபவித்துள்ள நிலையில் இலங்கை அரசு இந்த வெற்றி விழாவை ஏற்பாடு செய்து வருகிறது. வடக்கு கிழக்கு முழுவதும் இராணுவ ஆதிக்கம் நிறைந்து இராணுவ ஆட்சி நிலவி வரும் சூழலில் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொட…
-
- 0 replies
- 331 views
-
-
பாகிஸ்தான் பிரஜையால் கொண்டுவரப்பட்ட 30 ஆயிரம் கருத்தடை ஊசிகள் குறித்து சோபித தேரர் கேள்வி:- உருளைக்கிழங்கு ஏற்றி வரப்பட்ட கொள்கலன் வண்டி ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டு, பாகிஸ்தான் பிரஜை ஒருவரினால் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ள சுமார் 30 ஆயிரம் கருத்தடை மருத்து ஊசிகள் யாருடைய தேவைக்காக, கொண்டு வரப்பட்டது, அதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதை நாட்டுக்கு உடனடியாக தெரியப்படுத்த வேண்டும் என கோட்டை நாகவிகாரையின் விகாரதிபதி மாதுளுவாவே சோபித தேரர் தெரிவித்துள்ளார். இது குறித்து விரிவான விசாரணைகளை நடத்த வேண்டியது அரசாங்கத்தின் கடமை என தெரிவித்துள்ள அவர், சிங்கள பெண்களைகுளந்தைப் பேறற்றவர்களாக்கும் ரகசிய வேலைத்திட்டம் ஒன்று நாட்டிற்குள் செயற்படுத்தப்படுவதாக நாடு முழ…
-
- 0 replies
- 338 views
-
-
ஜனாதிபதி வீதிகளை புனரமைத்து, விமான நிலையங்கள், துறைமுகங்களை நிர்மாணித்து வருகிறார். அன்று செய்ய முடியாததை தற்பொழுது செய்யும் போது, சந்திரிக்காவுக்கு பொறுத்து கொள்ள முடியவில்லை. சந்திரிக்கா நித்திரையில் இருந்து எழுந்தவர் போல் சத்தம் போகிறார். பொன்சேக்கா சந்தையில் விற்பனை செய்ய முடியாத அழுகிய பொருளாக மாறியுள்ளார் என அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தற்போது மேடைகளில் ஏறி, நாட்டில் தற்போது தலைவர் இல்லை நாடு அழிவை நோக்கி சென்றுள்ளது, நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டும் எனக் கூறுகிறார். 11 வருடங்கள் ஆட்சியில் இருந்து செய்ய முடியாததை செய்ய போவதாக இன்று பேசுகிறார். இது நித்திரையில் இருந்து எழுந்தது போன்ற வேலையாகும். அண்மையில் மத்துக…
-
- 0 replies
- 432 views
-
-
"வடக்கில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்த முஸ்லிம், சிங்கள மக்களை விடுதலைப் புலிகள் வடக்கில் இருந்து விரட்டியடித்தனர். சமாதான சூழ்நிலை ஏற்பட்டு இடம்பெயர்ந்து வாழும் அம்மக்களை அரசாங்கம் மீளகுடியேற்ற முற்படும்பொழுது தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் இதனை இன ரீதியாக சிந்திக்கின்றனர்" என்று வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார். கொழும்பு மாவட்டத்தில் வாழும் 1000 வறிய குடும்பங்களுக்கு 175 மில்லியன் ரூபா நிதியினை வீடமைப்புக் கடனாக வழங்கி வைக்கும் வைபவம், பிலியந்தலை மத்திய மகா வித்தியாலயத்தில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் விமல் வீரவன்ச மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய…
-
- 2 replies
- 359 views
-
-
இலங்கைக்கான புதிய இந்திய உயர் ஸ்தானிகராக வை.கே.சிங் இந்திய அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ள அசோக் கே. காந்தா இந்திய வெளிவிவகார அமைச்சின் கிழக்கு ஆசிய பிரிவின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் மிக விரைவில் அசோக் கே. காந்தா இலங்கையை விட்டு செல்லவுள்ளார். இதனால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கே புதிய உயர் ஸ்தானிகராக வை.கே.சிங் இந்திய அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ளார் இந்திய ராஜதந்திர சேவையில் சிரேஷ்ட அதிகாரியான வை.கே.சிங், தற்போது இந்திய வெளிவிவகார அமைச்சில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு பொறுப்பான செயலாளராக கடமையாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது. http://tamil.dailymirror.lk…
-
- 0 replies
- 283 views
-
-
-ரொமேஸ் மதுசங்க இலங்கை தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் இடம்பெற்ற மே தின கூட்டத்தின் போது உரையாற்றிக்கொண்டிருந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா சுகவீனமுற்றுள்ளார். சுமார் 45 நிமிடங்கள் தொடர்ந்து உரையாற்றியதால் அவருக்கு மயக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. மேடையில் மயங்கிய அவரை, அவரது பாதுகாவலர்கள் பாதுகாப்பான முறையில் ஓரிடத்தில் தங்கவைத்து அவருக்கான முதலுதவியினை வழங்கினர். இது தொடர்பில் தமிழ்மிரருக்கு கருத்து தெரிவித்த மாவை எம்.பி, 'அரை மணித்தியாலங்களுக்கும் மேலாக வெயிலில் நின்று உரையாற்றிய போது தனக்கு லேசான மயக்கம் ஏற்பட்டதாகவும், சற்றுநேர ஓய்வின் பின் அது சரியானதாகவும்' குறிப்பிட்டார். http://tamil.dailymirror.lk/201…
-
- 0 replies
- 269 views
-
-
கிழக்கின் முக வெற்றிலையாக இருந்த கல்முனை இப்போது கழிசடையாக மாறியுள்ளது: முபாறக் அப்துல் மஜீத் By Farhan 2013-04-30 16:32:39 கல்முனை மாநகர சபையில் ஊழல் என்ற ஆளுந்தரப்பு குற்றச்சாட்டின் மூலம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசினரால் கல்முனை மாநகரை கட்டி எழுப்ப முடியாது என்ற எமது வாதம் உறுதியாகியுள்ளது என ஸ்ரீலங்கா முஸ்லிம் மக்கள் கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் மேலும் தெரிவித்ததாவது, கல்முனை கடந்த 1994 முதல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஆட்சிலேயே உள்ளது. ஒரு காலத்தில் கிழக்கின் முக வெற்றிலையாக இருந்த கல்முனை இப்போது கிழக்கின் கழிசடையாக மாறியுள்ளது. அது பிரதேச சபையாக இருந்த போது ஆரம்பித்…
-
- 4 replies
- 664 views
-
-
http://www.kickstarter.com/projects/599171067/no-fire-zone-impact-distribution
-
- 0 replies
- 548 views
-
-
அவுஸ்திரேலியாவிலிருந்து 819 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளார்கள் பலவந்தமாக நாடு கடத்தப்பட்டுள்ளனர் அவுஸ்திரேலியாலிருந்து 819 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் பலவந்தமான முறையில் நாடு கடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.கடந்த ஆகஸ்ட் மாதம் 13ம் திகதி முதல் இதுவரையில் 1029 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.புலம்பெயர் தமிழர்களின் ஒத்துழைப்புடன் அதிக எண்ணிக்கையிலானவர்கள் அவுஸ்திரேலியாவில் புகலிடம் பெற்றுக்கொள்ள முயற்சிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.போலியான முறையில் சட்டவிரோதமாக நாட்டுக்குள் பிரவேசிப்போரை நாடு கடத்த தொடர்ச்சியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது. போலி புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் தொடர்ந்தும் அமுலில் இருக்கு…
-
- 2 replies
- 569 views
-
-
மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு வன்னிய கலாச்சார விழா என்ற பெயரில் ஆண்டு தோறும் நடத்தப்படும் பா.ம.கவின் வன்னிய சாதிவெறியூட்டல் அரசியல் விழாவிற்கு இவ்வாண்டு சென்ற பா.ம.க வன்னியர் சங்க குண்டர்களின் அராஜக நடவடிக்கையின் விளைவாக நடைபெற்றதே மரக்காணம் கலவரம் ஆகும். பாமக இராமதாசின் தலித் மக்களுக்கு எதிராக ஆதிக்க சாதி வெறியர்களை ஒருங்கிணைக்கும் நடவடிக்கைகளை கண்டித்து சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் சார்பாக இன்று உயர்நீதிமன்ற ஆவின் கேட்டிற்கு முன்பாக மதியம் 1.30 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் சென்னை கிளை ஒருங்கிணைத்திருந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50 மேற்பட்ட வழக்குரைஞர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் துவக்கமாக மனித உரிமை பா…
-
- 1 reply
- 763 views
-
-
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மீது அரசு பாய்ச்சல்! அமெரிக்கத் தூதுவர் மிச்சல் ஜே. சிசனின் இரகசிய பேச்சுவார்த்தைகள் தொடர்பில் அரசாங்கம் விசாரகைளை ஆரம்பித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இராஜதந்திர நியதிகளை மீறி அமெரிக்கத் தூதுவர் மிச்சல் ஜே. சிசன் மட்டக்களப்பு முஸ்லிம் பிரதிநிதிகள் 25 பேரை கொழும்பிற்கு அழைத்து இரகசிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்த இரகசிய பேச்சுவார்த்தை குறித்து வெளிவிவகார அமைச்சிற்கு அறிவிக்கப்படவில்லை. கிழக்கு மாகாண முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் குறித்து அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.இந்த இரகசிய பேச்சுவார்த்தையானது 1961ம் ஆண்டு வியன்னா பிரகடனத்திற்கு முரணானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. http://www.pathivu.com/ne…
-
- 1 reply
- 459 views
-
-
அமைச்சர்களது மின்கட்டணத்தையும் அரசே செலுத்துகின்றது! கெஹலிய ரம்புக்வெல்லவின் மாத கட்டணம் 61 ஆயிரம்!! இலங்கையின் ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட ஆளும் கட்சி அமைச்சர்கள் பலரின் உத்தியோகபூர்வ இல்லங்களுக்கான மின்சாரக்கட்டணத்தை அரசாங்கமே செலுத்தி வருகின்றது. ஊடக அமைச்சரின் ஜனவரி மாத மின் கட்டணம் 61ஆயிரம் ரூபா எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்தக் கட்டணம் அரசாங்கப் பணத்தில் செலுத்தப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாத மின் கட்டணம் 51ஆயிரம் ரூபாவென எனக்கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது. அரசாங்க அமைச்சர்களின் ஒரு சிலரைத் தவிர ஏனைய அனைத்து அமைச்சர்களினதும் உத்தியோகபூர்வ இல்லங்களுக்கான மின்சாரக் கட்டணத்தை அரசாங்கமே செலுத்துகின்றது. இவை பொதுமக்கள் பணத்திலிருந்து செலுத்தப்படுகின்…
-
- 0 replies
- 321 views
-
-
இலங்கையின் உள்விவகாரங்களில் ஏனைய நாடுகள் தலையீடு செய்ய முடியாது; பீரிஸ் திட்டவட்டம் இலங்கையின் உள் விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிடுவது எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். ஏனைய நாடுகளின் உள்விவகாரங்களில் நாம் எந்தக் கருத்துகளையும் கூறுவதில்லை. நாம் அந்த நாடுகளின் இறையாண்மையை மதிக்கிறோம். அதுபோலவே எமது உள்விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிட வேண்டியதில்லை என்றே இலங்கையும் எதிர்பார்க்கிறது” . ஆனால் சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது என்ற போர்வையில்,இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிடுவது எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார். http://onlineuthayan.com/Ne…
-
- 0 replies
- 313 views
-
-
முன்னாள் பிரதம நீதியரசருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவை மே மாதம் 29 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உயர்நீதிமன்றத்தினால் நோட்டீஸ் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான விஜித்த ஹேரத் மற்றும் இரா.சம்பந்தன் ஆகிய இருவரையும் அன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட விசேட மேன்முறையீட்டு மனுவை விசாரிப்பதற்கு இன்று செவ்வாய்க்கிழமை அனுமதியளித்ததன் பின்னரே உயர்நீமன்றம் மேற்கண்டவாறு நோட்டீஸ் அனுப்பிவைத்துள்ளது. முன்னாள் பிரதம நீதியரசரை குற்றவாளியாக இனங்கண்ட நாடாளுமன…
-
- 0 replies
- 374 views
-
-
வடக்கில் மாகாணசபைத் தேர்தல்நடைபெறக்கூடிய சாத்தியங்கள் கிடையாது என முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் சி.வீ. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் வட மாகாணசபைத் தேர்தல் குறித்த அறிவிப்பானது வெறும் மாயையே என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். வடக்கு மக்களுக்கு பிரச்சினை ஏற்படக் கூடிய வகையிலான பல்வேறு திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இதனால் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படக் கூடிய சாத்தியம் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார். தற்போதைய காலச் சூழ்நிலையில் வட மாகாணசபைத் தேர்தல் நடத்தினால் அது அரசாங்கத்திற்கு பாதக முடிவுகளை கொண்டு வரும் எனவும், இதனால் இந்த ஆண்டில் தேர்தல…
-
- 1 reply
- 437 views
-
-
ஒரு செயல் அல்லது சம்பவம் இயற்கையாக நடந்தாலும் செயற்கையாக நடத்தப்படாலும் அதை பதிவு செய்து மீள்நிகழ்த்தலுக்குள்ளாக்கி மக்கள் மத்தியில் கொண்டு செல்வதே ஊடகங்களின் பணியாகும்;.இது பிரபலமானவர்களின் பேச்சுக்கள் மற்றும் அவர்களின் செயற்பாடுகளுக்கும் பொருந்தும்.’ ஒரு செயலோ அல்லது சம்பவமோ ஒரு இடத்தில் நடந்தால் அல்லது நடத்தப்பட்டால்,அல்லது பிரபலமான ஒருவர் ஒரு இடத்தில் உரையாற்றினால் அதை ஊடகங்கள் மீள் நிகழ்த்தலுக்கு உள்ளாக்கவில்லை என்றால் அந்தச் செயலும் சம்பவமும் உரையும் பற்றிய தகவல் அது நடந்த அல்லது நிகழ்த்தப்பட்ட இடத்துடன் அல்லது வட்டாரத்துடன் நின்றுவிடும். இந்த மீள்நிகழ்த்தல் என்பது கருத்தியல் சார்ந்தது.கருத்தியல் என்கிறபோது ஒரு சம்பவத்தின் அல்லது செயலின் அல்லது ஒரு உரையின் செய்தி …
-
- 0 replies
- 413 views
-
-
யாழ் - மானிப்பாய் பிரதான வீதியில் உள்ள கூழாவடிப் பகுதியில் இராணுவத்தின் 11ஆவது சிங்க படைப்பிரிவுக்கான நிரந்தர முகாம் அமைப்பதற்கு தனியாருக்குச் சொந்தமான சுமார் இரண்டு ஏக்கர் கொண்ட காணி படையினரால் சுவீகரிக்கப்பட்டுள்ளது. காணி சுவிகரிப்புச் சட்டத்தின் அத்தியாயம் 460 இரண்டாம் பிரிவின் கீழ் இக்காணி சுவிகரிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட காணி சுவிகரிப்பு உத்தியோகஸ்தர் சிவசுவாமியினால் கையொப்பமிடப்பட்ட துண்டுப்பிரசுரமொன்று அக்காணி அமைந்துள்ள பகுதியில் ஒட்டப்பட்டுள்ளது. குறித்த காணியில் நீண்ட காலமாக இராணுவத்தின் முகாம் இருந்து வருகின்ற நிலையில், அதில் நிரந்தர படைமுகாம் அமைக்கும் நோக்கில் இந்த காணி சுவீகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த காணியின் உரிமையாளர்கள…
-
- 1 reply
- 377 views
-
-
விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் உறவினர்களால் ஏற்க மறுப்பு விபத்தில் உயிரிழந்த வயோதிபரின் சடலத்தை அவரது மனைவி, பிள்ளைகள் உள்ளிட்ட உறவினர்கள் ஏற்க மறுப்பதாக யாழ். போதனா வைத்தியசாலையின் நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர். யாழ். நகரில் நேற்று இடம்பெற்ற விபத்துச் சம்பவமொன்றில் புங்குடுதீவு 12 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த ஆறுமுகம் தனபாலசிங்கம் (வயது 68) என்ற வயோதிபர் உயிரிழந்துள்ளார். இவரின் சடலத்தை மனைவி உள்ளிட்ட உறவினர்கள் ஏற்க மறுத்துள்ளனர். இச் சம்பம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, குறித்த வயோதிபர் நல்லூர் பகுதியில் வசிக்கும் தனது மனைவி, பிள்ளைகளை விட்டுப் பிரிந்து 13 வருடங்களாக யாழ். பண்ணை பஸ்தரிப்பு நிலையத்தில் வசித்து வந்துள்ளார். சம்பவதினமான நேற்று அதிக…
-
- 0 replies
- 275 views
-
-
அரசின் சிறந்த முகாமைத்துவமின்மையால் அரச திணைக்களங்களிலும் பொதுத் துறைகளிலும் ஊழல் நிறைந்த ஊதாரித்தனமான செயல்களினால் வரிச்சுமை அதிகரித்து, உற்பத்தி குன்றி, கடன்கள் அதிகரித்து மக்கள் வதைக்கப்படுவதற்கு எதிராக போராடவேண்டியுள்ளோம். எனவே மனித உரிமைகளுக்கெதிராக ஜனநாயக விரோதமாக ஆட்சி செய்யும் இந்த அரசுக்கு எதிராக ஒருமித்துக் குரல் கொடுக்க ஜனநாயக வழிகளில் அணிதிரண்டு வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மே தின நிகழ்வுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே நாள் நிகழ்ச்சி தொடர்பாக அக் கட்சியின் பொதுச் செயலாளரும் யாழ். மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை. சோனாதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் தெரிவிக்…
-
- 0 replies
- 236 views
-
-
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் சட்டவிரோத ரகசிய நடவடிக்கை ஒன்றுக்காக மட்டக்களப்பு காரைத்தீவு பிரதேசத்தில் அமைந்துள்ள அதிரடிப்படை முகாமில் இருந்து நேற்றிரவு 11.45 அளவில் குழுவொன்று வெளியில் சென்றுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த குழுவில் அதிரடிப்படை சாரதி ஒருவருடன் 3 அதிரடிப்படையினர், கருணாவுடன் தொடர்புடைய மூன்று முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் உட்பட 6 அடங்குகின்றனர். இவர்கள் அனுராதபுரத்தில் உள்ள பிம்பரத்வௌ நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளனர். இவர்கள், இரண்டு ரி 56 ரக துப்பாக்கிகள், அதிரடிப்படையினர் பயன்படுத்தும் எம்.16 ரகத்தை சேர்ந்த மூன்று துப்பாக்கிகள், ஒரு கைதுப்பாக்கி, இரண்டு கைக்குண்டுகள், ஒரு மெட்டரோ…
-
- 0 replies
- 265 views
-
-
அதிகரிக்கப்பட்ட மின்சார கட்டணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர் 'கோவணத்தை கட்டிக்கொண்டு பந்தம் ஏந்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்' ஈடுபட்டுள்ளார். அனுராதபுரம், ஏலயாபத்து பிரதேச சபையின் ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினரான அனுர பண்டார என்பவரே கோவணத்தை கட்டிக்கொண்டு பந்தத்தை ஏந்தியவாறு மானியகமுவையிலிருந்து ஏலயாபத்து பிரதேச சபை வரை சென்றார். அவருடன் ஐக்கிய தேசியக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான பி.ஹரிசன் மற்றும் சந்திராணி பண்டார ஆகிய இருவரும் பந்தத்தை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் இணைந்துக்கொண்டனர். கோவணத்துடன் பந்தத்தை ஏந்தியவாறு அவர் பிரதேச சபையின் வாசலுக்கு அருகில் சென்றபோது பிரதேச சபையின் படலையை பிரதேச சபையின் தலைவர்; இழுத்து மூடிவிட்டார். சபைக்கு ஒவ்வாத ஆட…
-
- 3 replies
- 731 views
-
-
வட மாகாணசபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் முதன்மை வேட்பாளராக, ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவே நிறுத்தப்படவுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமிழர்கள் பெரும்பான்மையாக உள்ள வடக்கு மாகாணத்தில் வெற்றி பெறுவதற்கு டக்ளஸ் தேவானந்தா நல்லதொரு வாய்ப்பைக் கொண்டுள்ளதால், அவரையே முதல்வர் வேட்பாளராக நிறுத்துவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மத்திய குழு உத்தேசித்துள்ளதாக கட்சியின் உயர்மட்ட வட்டாரங்கள் கூறியுள்ளன. டக்ளஸ் தேவானந்தாவை முதல்வர் பதவிக்கு நிறுத்துவதை, இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான மத்திய குழுக் கூட்டத்தில் உறுதிப்படுத்தப்படும் என்றும், அரசாங்கத் தரப்புக்கு டக்ளஸ் த…
-
- 2 replies
- 642 views
-