Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சிறிலங்காவில் இந்திய தூதுவராகக் கடமையாற்றும் அசோக் கே. காந்த் சிறிலங்காவுக்கான தூதுவர் பதவியிலிருந்து விலகிச் செல்கிறார். அவர் பதவி விலகவுள்ளதனையடுத்து கண்டிக்கு விஜயம் செய்து மகாநயக்க தேரர்களைச் சந்தித்து ஆசிபெற்று உரையாடியுள்ளார். தமிழகத்தில் பெளத்த துறவி ஒருவர் அண்மையில் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு மீண்டும் மன்னிப்புக் கோரிய அவர், தனது காலத்தில் இந்தியாவிலிருந்து சிறிலங்காவுக்கு கபில வஸ்து கொண்டு வரப்பட்டதற்காக மகிழ்ச்சியடைவதாகவும் கூறியுள்ளார். சிறிலங்காவுடனான தனது நாட்டு உறவு தொடர்ந்தும் கட்டியெழுப்பப்படுவதுடன் தேவையான உதவிகளையும் இந்தியா சிறிலங்காவுக்குத் தொடர்ந்து வழங்குமென்றும் அவர் மகாநாயக்க தேரர்களிடம் உறுதியளித்தார். http://www.eelanatham.net/story/%E0%AE…

  2. வடமாகாண சபைத் தேர்தலை அரசாங்கம் ஒருபோதும் நடத்தக்கூடாது. அதனை நாம் அனுமதிக்கவும் மாட்டோம் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் பொது வசதிகள் அமைச்சருமான விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். பத்தரமுல்லை கட்சி அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில், புலிகள் யுத்தத்தினால் பெற்றுக்கொள்வதற்கு முயன்றதை உத்தியோகபூர்வமாக வழங்கும் நடைமுறையாகவே வடமாகாண சபைத்தேர்தலை நான் கருதுகின்றேன் என்றார். மின்சார கட்டண அதிகரிப்பானது மக்களுக்கு தாங்கிக்கொள்ள முடியாத ஒன்றாகவே இருக்கின்றது. மின்சார துறை முழுமையாக அரசு அதிகாரத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்ற…

    • 4 replies
    • 415 views
  3. அணுவாயுதங்களை முற்றாக இல்லாதொழிக்க வேண்டுமென இலங்கை அரசாங்கம் கோரியுள்ளது. மனிதத்தை நிலைநாட்டக் கூடிய ஓரே வழி அணுவாயுதங்களை இல்லாதொழித்தலாகும் என ஐக்கிய நாடுகளின் ஜெனீவாவிற்கான இலங்கை நிரந்தரப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க தெரிவித்துள்ளார். கொரிய தீபகற்பத்தில் நிலவி வரும் பதற்ற நிலைமை அணுவாயுத ஒழிப்பையே வலியுறுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த உலக்திலிருந்து அணுவாயுதங்களை ஒழிப்பதே மிகவும் அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார். அணுவாயுதக் களைவு தொடர்பில் சர்வதேச சட்டங்கள் இயற்றப்பட வேண்டுமெனவும், அனைத்து தரப்பினரும் இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டியது அவசியமானது எனவும் ரவினாத் ஆரியசிங்க சுட்டிக்காட்டியுள்ளார். http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/a…

  4. முள்ளியவளையில் தமிழ் மக்களின் குடியிருப்புக்கள் தீ வைத்து எரிக்கப்பட்டமையின் பின்னணியில் உள்ள சூழ்ச்சிக்காரர்களை கண்டுபிடித்து அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டுமென ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு. இவ்விடயம் தொடர்பாக இலங்கையிலுள்ள ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவின் வதிவிடப் பிரதிநிதியுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாகவும் அறிவித்தது. முல்லைத்தீவு முள்ளியவளையில் தமிழ் மக்களின் குடியிருப்புக்கள் தீ வைத்து எரிக்கப்பட்டமை தொடர்பில் கேட்ட போதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இதனைத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அபகரிக்கப்படும் சூழ்நிலை…

    • 1 reply
    • 402 views
  5. இந்திய மீனவர்களிடம் இலங்கைக் கடற்படை மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்று இந்தியபாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோனி தெரிவித்துள்ளார். இந்திய மீனவர்மீது இலங்கைக் கடற்படையினர் கண்மூடித்தனமான தாக்குதல்களை மேற்கொள்வதுடன் அவர்களைக் கைது செய்து மனிதாபிமானமற்ற முறையில் நடத்துவது தொடர்பாக நேற்று மக்கள் அவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவித்ததாவது: மீனவர்கள் பாதிக்கப்படுவது தொடர்பாக மத்திய அமைச்சு அவ்வப்போது இலங்கை அரசின் கவனத்துக்கு கொண்டு வருகிறது. ஆனால் மீனவர்கள் குறிப்பிட்ட கடல் எல்லையயைத் தாண்டிச் செல்லும் போது இலங்கைக் கடற்படையினர் மனிதாபிமானத் தன்மையுடன் நடந்து கொள்ள வேண…

    • 1 reply
    • 536 views
  6. முள்ளிவளையில் மக்களுடைய வீடுகள் இனந்தெரியாத நபர்களினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. முள்ளியவளையில் உள்ள மக்களுடைய வீடுகளை நேற்று இரவு ஒரு மணியளவில் இனந்தெரியாத நபர்கள் குழுவொன்று தீக்கிரையாக்கி விட்டுச் சென்றுள்ளது. இந்த சம்பவத்தில் 4 வீடுகள் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளதுடன் உடமைகளும் தீக்கிரையாகியுள்ளன. எனினும் குறித்த வீடுகளில் உள்ளவர்கள் அருகில் உள்ள ஆலயத்திற்குச் சென்றிருந்தமையினால் அவர்கள் எதுவித பாதிப்பும் இன்றி தப்பிக் கொண்டனர். சம்பவத்தையடுத்து இன்று காலை அமைச்சர் றிசாட் பதியூதினிடம் நேரடியாக சென்று சம்பவம் குறித்து கூறிய போது, பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக தற்காலிக வீடுகள் அமைத்துத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்ப…

  7. ஈழத்தமிழன் என்றாலே அவனை அடையாளப்படுத்தும் முக்கியமான ஒரு சொல் தான் அகதி. அவன் இல்லாத நாடு ஒன்று இந்த உலகத்தில் இல்லை. ஏனோ ஈழத்தமிழர்களாகிய எஙகளை எவருக்கும் பிடிப்பதில்லை. நாங்கள் கதைத்தால் அது தீவிரவாதம் என்கிறார்கள். இதே எங்களை தினம் தினம் கொன்று குவித்தால் அது பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்கிறார்கள். நாங்கள் என்ன பாவம் செய்தோம் இப்படி நாடு நாடாக அலைவதற்கு. நாங்களும் மனிதர்கள் தான் என்பதை இந்த உலகுக்கு தெரியப்படுத்த வேண்டும் போலிருக்கிறது. ஈழத்தமிழர் சிங்களவர் மீதுள்ள கோபம் அதே அளவு சர்வதேசத்தின் மத்தியில் வைத்திருக்கிறார்கள். உங்கள் பூகோள அரசியல் புண்ணாக்கு அரசியல் எதுவும் எங்களுக்கு தெரியாது. ஆனால் எங்களுக்கு எப்படி கேட்டால் நியாயம் கிடைக்கும் என்பது தெரியும். …

  8. -எஸ்.கே.பிரசாத் 'வலி வடக்கில் இருந்து நாங்கள் இடம்பெயர்ந்து 23 வருடங்காக பல்வேறு நெருக்கடிகளில் முகாம்களில் வாழ்ந்து வருகின்றறோம் இந்த முகாம்களில் கைத்தொழில் மற்றும் சிறு தொழில் முயற்சி அமைச்சர் டக்ளஸ் தேவாந்தா மற்றும் யாழ். கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்க ஆகியோரால் வாழ முடியுமா' என்று வலிகாமம் வடக்கு மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இன்று செவ்வாய்கிழமை வலிகாமம் வடக்கு பிரதேச சபை அலுவலகத்தில் நடைபெற்ற வலிகாமம் வடக்கு காணி அபகரிப்பு தொடர்பான கலந்துரையாடலின் போதே அப்பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பினர். வலிகாமம் வடக்குப் பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை ஒட்டுப்பட்டுள்ள காணி சுவீகரிப்பு நோட்டிஸ் உடனடியாக அகற்றப்பட்டு அப்பகுதியில் தங்களை இட…

  9. முஸ்லிம் தமிழ் தேசிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி நேற்று குற்றப் புலனாய்வு தரப்பினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இன வன்முறைகளை தூண்டும் வகையில் அவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டதாக கூறி, அவருக்கு எதிராக இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அத்துடன் முஸ்லிம் மக்களிடையே இன வன்முறையை ஏற்படுத்தும் வகையிலான குறுந்தகவல்கள் அனுப்பப்பட்டு வருகின்றமை தொடர்பிலும் அவரிடம் கேள்வி கேட்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆங்கில ஊடகம் ஒன்றின் ஆசிரியர், இவ்வாறு 17 குறுஞ்செய்திகளை அனுப்பி இருப்பதாகவும், அவர் தொடர்பான தகவல்களையும் அசாத் சாலியிடம் குற்றத்தடுப்பு பிரிவினர் கேட்டறிந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=81065&category=TamilNews…

  10. கிளிநொச்சி பூநகரி பிரதேச செயகத்தில் கடமையாற்றும் ஒரு சில உயரதிகாரியினால் அங்கு கடமையாற்றும் பெண் உத்தியோகத்தர்கள் மீது பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் பாதிக்கப்பட்டுள்ள பெண்களில் ஒருவர் சக உத்தியோகத்தர்களிடம் முறையிட்ட நிலையில் இது குறித்து அறிந்துகொண்ட பிரதேச செயலர் குறித்த பெண் உத்தியோகத்தரையும் பாலியல் துன்புறுத்தல்களை மேற்கொண்ட பிரதேச செயலகத்தின் ஒரு உயரதிகாரியினையும் அழைத்து விசாரணை செய்து இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் நிர்வாக பிரிவில் உயரதிகாரியாக கடமையாற்றும் அவர் தொடர்ந்தும் சம்மந்தப்பட்ட பெண் உத்தியோகத்தர் மற்றும் அவரோடு நெருங்கிய ஊழியர்களையும் பழிவாங்…

  11. 'காணிகளை படைத்தரப்பிற்கு சுவீகரிக்கும் நடவடிக்கையினை தனிப்பட்ட ரீதியில் வன்மையாக கண்டிக்கிறேன்':சிவசுவாமி நில ஆக்கிரமிப்பிற்கு எதிராக தமிழ் மக்கள் கிளர்ந்து எழத்தொடங்கியுள்ள நிலையில் தமிழ் மக்களது உணர்வுகளுக்கு மதிப்பளித்து யாழ்;.மாவட்ட காணி மற்றும் காணி சுவீகரிப்பு அதிகாரி தனது சுவீகரிப்பு அதிகாரி பதவியை ராஜினாமாச்செய்து வெளியேறுகின்றார். சுமார் ஒரு மாத கால அவகாசத்தினுள் மாற்று ஏற்பாடுகளை செய்ய ஆலோசனை வழங்கி தனது ராஜினாமா கடிதத்தை அவர் சமர்ப்பித்துள்ளதாக தொடர்புடைய தரப்புக்கள் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிவித்துள்ளன. தாம் ஆசை காட்டி ஏமாற்றப்பட்டே இப்பதவிக்கு கொண்டுவரப்பட்டு உள்ளதாக கவலை வெளியிட்டுள்ள அவர் தமிழ் மக்களது காணிகளை படைத்தரப்பிற்கு சுவீக…

  12. ஊடகவியலாளர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரித்தானிய அரசாங்கம் இலங்கையிடம் கோரியுள்ளது. ஊடகவியலாளர் பாதுகாப்பு மற்றும் கருத்து சுதந்திரம் ஆகியவற்றை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் அலிஸ்டர் பர்ட் தெரிவித்துள்ளார். இலங்கை மனித உரிமை நிலைமைகள் குறித்து பிரித்தானியாக உன்னிப்பாக கண்காணித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். பிபிசி சர்வதேச ஊடகத்தின் ஒலிபரப்பு தொடர்பில் ஏற்பட்டுள்ள சர்ச்சை குறித்தும் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். பக்கச்சார்பற்ற செய்திகள் மக்களை சென்றடைவதற்கு தடைகள் ஏற்படுத்தப்படக் கூடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 2012 நவம்பர் மாதம் ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பே…

  13. -சுமித்தி தங்கராசா, எஸ்.பிரசாத்,நா.நவரத்தினராசா தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கு முன்பாக எதிர்வரும் 29 ஆம் திகதி திங்கட்கிழமை எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்படவுள்ளது. அன்று காலை 8 மணிமுதல் தொடக்கம் இந்த போராட்டம் நடத்தப்படவிருக்கின்றது. தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றக்கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. இந்தக்கூட்டத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் மற்றும் தெல்லிப்பழை பிரதேச சபையின் தவிசாளர் சோ.சுகிர்தரன் ஆகியோர் கலந்துக்கொண்டனர். இராணுவப் பாதுகாப்பு பட்டாலியன் தலைமையம் அமைப்பதற்கு வலிகாமம் வடக்கில் 6381 ஏக்கர் காணி அரசாங்கத்தினால் சுவிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந…

  14. அவுஸ்திரேலியா மெல்பேணில் "தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள் - 2013" நினைவு நிகழ்வுகள் கடந்த 21-04-2013 ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடந்தேறின. மெல்பேணில் அமைந்துள்ள பிறிஸ்டன் நகர மண்டபத்தில் சரியாக 5.10 மணிக்கு தேசியக் கொடியேற்றலுடன் தொடங்கிய இந்நினைவு நிகழ்வு இரவு 7 மணியளவில் நிறைவடைந்தது, அவுஸ்திரேலியக் கொடியை விக்ரோறிய ஈழத்தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு. பரமநாதன் அவர்களும், தமிழீழத் தேசியக்கொடியை திரு. இராஜா இளங்குமரன் அவர்களும் ஏற்றியதைத் தொடர்ந்து நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்களுக்கான ஈகச்சுடரேற்றும் நிகழ்வு இடம்பெற்றது. நாட்டுப்பற்றாளரான அன்னை பூபதி, கலாநிதி மகேஸ்வரன் ஆகியோருக்கும் மாமனிதர்களான திரு தில்லை ஜெயக்குமார், பேராசிரியர் எலியேசர் ஆகியோருக்கும் அவர்களது குடும்பத்தைச…

  15. தமிழ் நாட்டின் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவும், கலைஞர் கருணாநிதியும் இப்போது தேர்தலை மையமாக வைத்து இலங்கைக்கு எதிரான பிரசாரத்தை முடுக்கி விட்டிருக்கிறார்கள். நாம் அவற்றைப் பற்றி அலட்டிக் கொள்ளவில்லை. இதனால் இந்திய மத்திய அரசாங்கத்திற்கு இடையிலான நல்லுறவுக்கு பாதிப்பு ஏற்படாது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். நேற்று கொழும்பில் நடைபெற்ற பத்திரிகை ஆசிரியர்களுடனான சந்திப்பின் போதே ராஜபக்சே இதனைத் தெரிவித்தார். http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=14201:rajapakse-india&catid=36:tamilnadu&Itemid=102

    • 0 replies
    • 488 views
  16. அமெரிக்கா 2012 ஆம் ஆண்டுக்கான தனது மனித உரிமை அறிக்கையில் இலங்கையை குற்றவாளியாக்கியுள்ளது 23 ஏப்ரல் 2013 இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள போர் குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை கட்டமைபொன்றை ஆரம்பிக்கும் முதல் நடவடிக்கையாக அமெரிக்க அரசாங்கம் 2012 ஆம் ஆண்டுக்கான தனது மனித உரிமை அறிக்கையில் மனித உரிமை மீறல் தொடர்பில் இலங்கையை குற்றவாளியாக்கியுள்ளது. இந்த அறிக்கை நேற்று முன்தினம் அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தினால் வெளியிடப்பட்டது. இந்த மனித உரிமை அறிக்கையின் மூலம், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையை தாண்டி இலங்கை எதிராக செயற்பட அமெரிக்க திட்டமிட்டுள்ளது. விடுதலைப்புலிகளி செயற்பட்டாளர்கள் குறித்து விசாரணை நடத்துவது, வெளிநாட்டு தூதுவர்களுடன் தொடர்புகளை கொண்டுள்ளவர்களை கண்டுப்பிடி…

  17. வெள்ளவத்தையில் ரயிலுடன் மோதுண்டு தமிழர் பலியானார்! [Tuesday, 2013-04-23 09:20:08] வெள்ளவத்தையில் ஓடும் ரயிலில் மோதுண்டு தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளார். களுத்துறையில் இருந்து மருதானை நோக்கி பயணித்த ரயிலில் குறித்த நபர் மோதுண்டதாக தெரியவருகிறது. நேற்றையதினம் (22-04-12) மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் கிருளபனை கொலம்பகே மாவத்தையில் வசிக்கும் 32 வயதுடைய முத்தையா மனோகரன் என்பவரே உயிரிழந்துள்ளார். சடலம் களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. http://seithy.com/breifNews.php?newsID=81071&category=TamilNews&language=tamil

  18. கொட்டக்கலையில் இடம்பெற்ற அமைதி ஆர்ப்பாட்டத்தின் போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸும் அதன் உறுப்பினர்களும் மலையக தொழிற்சங்க கூட்டமைப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் குறித்து ஜனாதிபதியிடம் முறையிடவுள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். கொழும்பு நிப்போன் ஹோட்டலில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், கொட்டகலையில் நேற்று முன்தினம் சனிக்கிழமை இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் நான் ஜனாதிபதியிடம் முறையிடவுள்ளேன். குறித்த சம்பவத்திற்கு யார் காரணம் என்பதை அனைவரும் அறிவர். எனவே இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கும் அதன் உறுப்பினர்களுக்கும் எதிராக நான் ஜனாதிபதியி…

    • 3 replies
    • 540 views
  19. நடிகையாக இருந்த ஜெயலலிதா தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஆக முடியுமெனின் தன்னால் ஏன் முடியாதென ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பெந்தர- எல்பிடிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிரதம அமைப்பாளரும், நடிகையுமான கீதா குமாரசிங்க கேள்வி எழுப்பியுள்ளார். கீதா குமாரசிங்க , ஜெயலலிதா போல ஆக முயற்சிசெய்கிறார் என தென்மாகாண சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் பந்துலால் பண்டாரிகொட அண்மையில் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளிக்கும் முகமாகவே கீதா குமாரசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தனதுக்கு முதலமைச்சர் ஆகும் கனவு என்றுமே இருந்ததிலையெனவும் ஆனால் பந்துலால் இவ்வாறு கூறியுள்ளதால் ஏன் அவ்வாறு வரக்கூடாது என ஆசை வந்துள்ளதாகவும் இதற்காக அவருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர…

    • 5 replies
    • 2.6k views
  20. அரசுடன் கலந்தாலோசிக்காமல், எவ்வித இராஜதந்திர தீர்மானங்களையும் எடுக்கக்கூடா தென வெளிநாடுகளில் சேவையாற்றும் தனது அனைத்து இராஜதந்திரிகளுக்கும் இலங்கை அரசு அறிவுறுத்தல் விடுத்துள்ளது. இவ்விடயம் தொடர்பாக பூரண விளக்கத்துடன் வெளிவிவகார அமைச்சினூடாக இராஜதந்திரிகளுக்கு அரசு அவசர சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி வைத்துள்ளது என தெரியவருகின்றது. அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்கிரமசூரிய கடந்த வாரம், கொழும்பு நிர்வாகத்துடன் கலந்துரையாடாமல் இலங்கையின் பாதுகாப்பு நிலவரங்கள் சம்பந்தமாக அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சு நடத்தியிருந்தார். இதன் போது, சீனாவுக்கு எதிராகவும் அவர் கருத்து வெளியிட்டார் எனவும், அமெரிக்காவுடன் பாதுகாப்பு உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திடத் தயாராக இருந்தார் என்றும் …

  21. பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபகஷ இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர். இதன்போது, கொடிகாமம் 52ஆவது படைப்பிரிவின் தலைமையகத்தில் நடைபெற்ற பாடசாலை மாணவர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் கலந்துகொண்டார். கனடா வாழ் மக்களின் நிதியுதவியுடன் தென்மராட்சி வலயத்திலுள்ள 24 பாடசாலைளின் 1, 500மாணவர்களுக்கும் 100 ஆசிரியர்களுக்கும் 24 அதிபர்களுக்கும் இந்த சீருடை வழங்கப்பட்டது.தென்னிலங்கைகையை பிறப்பிடமாகக் கொண்ட கனடாவில் வசித்து வரும் மொறி சோடஸ் ஜயதிலக்க என்பவரால் இதற்காக 20 லட்சம் ரூபா நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் யாழ் மாவட்ட பாதுகாப்பு படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க, …

    • 4 replies
    • 662 views
  22. குளோபல் தமிழ்ச் செய்திகளின் விசேட செய்தியாளர்- யாழ்ப்பாணத்தின்;. வலிகாமம் வடக்கு மற்றும் வலிகாமம் கிழக்கில் தமிழ் மக்களுடைய நிலங்களை இராணுவத் தேவைக்கென ஆக்கிரமிப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக அந்த நிலங்களை ஆக்கிரமிப்பதற்கான துண்டுப் பிரசுரங்கள் இராணுவத்தின் ஏற்பாட்டில் இன்று காலை முதல் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளில் ஒட்டும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஆக்கிரமிக்கப்பட்டுள்ள 24 கிராம சேவையாளர் பிரிவுகளில் முதல் கட்டமாக ஏழு கிராமசேவகர் பிரிவுகளில் இன்று காணி சுவீகரிப்பு தொடர்பான அறிவித்தல் சுவரொட்டிகள் கிராம சேவையாளர்களினால் ஒட்டப்பட்டது. முன்னதாக தெல்லிப்பளை பிரதேச செயலகத்தை தமது கட்டுப்பாட்டினுள் வைத்துக்கொண்ட பாதுகாப்பு தரப்பு வெளியார் எவரையும் உட்…

    • 5 replies
    • 599 views
  23. நிதி நெருக்கடியினில் இலங்கை! வரி அறவிட ஏதுவாக வருமான எல்லையும் குறைப்பு!! இலங்கையிலுள்ள குறைந்த வருமானம் ஈட்டுவோரிடமிருந்தும் வருமான வரியை அறவீடு செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இலங்கை இறைவரித் திணைக்களத்தின் யோசனைக்கு அமைய இவ்வாறு வரி அறவீடு செய்யப்பட உள்ளது. இதன்படி, இதுவரை காலமும் வரி அறவீடு செய்வதற்கான வருமான எல்லையாக நிர்ணயிக்கப்பட்ட தொகை மேலும் குறைக்கப்பட்டுள்ளது. குறைந்த வருமானம் ஈட்டுவோரும் வரி செலுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படக் கூடுமெனத் தெரிவிக்கப்படுகிறது. 600,000 ரூபா வருடாந்த வருமானம் ஈட்டுவோருக்கே இதுவரை காலமும் வருமான வரி அறவீடு செய்யப்பட்டது.எனினும், தற்போது இந்தத் தொகை 400,000 ரூபாவாக குறைக்கப்பட உள்ளது.இந்த உத்தேசத்திட்டத்திற்கு அரசாங்கம் அனுமதி…

  24. முன்னாள் நிதியமைச்சர் ரொனி டி மெலின் வீட்டில் வைக்கப்பட்டிருந்த சுமார் 62 இலட்சம் ரூபா பெறுமதியான கடிகாரம் உள்ளிட்ட இன்னும் சில பெறுமதியான பொருட்களை பொலிஸார் இரும்பு கடையிலிருந்து மீட்டுள்ளனர். அவருக்கு சொந்தமான கீகியனகந்த தோட்டத்திலுள்ள பங்களாவில் இருந்தே இந்த பொருட்கள் திருடப்பட்டு பழைய இரும்பு கடைகளுக்கு விற்கப்பட்டுள்ளன. 300 வருடங்கள் பழமையான மேசை கடிகாரம், ஆறரை அடி உயரமான விளக்கு உள்ளிட்ட பெறுமதியான பொருட்களே இவ்வாறு விற்கப்பட்டுள்ளன. பங்களாவில் கதவை உடைத்துக்கொண்டு உட்புகுந்து திருடப்பட்ட கடிகாரத்தை குறித்த நபர் பழைய இரும்பு கடைக்கு 8000 ரூபாவிற்கு விற்றுள்ளார். விளக்கு மற்றுமொரு இரும்பு கடைக்கு விற்கப்பட்டுள்ளது. பொருட்கள் கைப்பற்றப்பட்டதையடுத்து பழைய இரும்பு க…

  25. -டியென் சில்வா எதிர்வரும் 26ஆம் திகதி லண்டனில் நடைபெறவுள்ள பொதுநலவாய அமைச்சர்கள் நடவடிக்கை குழுவின் நிகழ்ச்சி நிரலில் இலங்கை பற்றிய விடயம் சேர்க்கப்படவில்லை. இதனால் இலங்கை சங்கடமான நிலைமையிலிருந்து தப்பிக்கொண்டுள்ளது என்று வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம தெரிவித்தார். இலங்கை – பங்களாதேஷ் வெளிநாட்டு செயலாளர் மட்ட இரு தரப்பு கலந்தாலோசனையின் இரண்டாம் சுற்று கூட்டத்தின் பின்னர் ஊடகங்களை சந்தித்தபோதே வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், "வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் பொதுநலவாய செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மாவை பெப்ரவரியில் சந்தித்து பொதுநலவாய அமைச்சர்கள் நடவடிக்கை குழுவின் நிகழ்ச்சி நிர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.