ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143479 topics in this forum
-
இராணுவ புலனாய்வு பிரிவும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியும் இணைந்து சதி முயற்சி! | 22. 04. 2013, திங்கட்கிழமை, தமிழீழ நேரம் 20:07 மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 5 வருடங்களாக முன்னாள் முதலமைச்சர், தற்போதைய மாகாண சபை உறுப்பினர் சி.சந்திரகாந்தன் (பிள்ளையான்) தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் கீழ்தான் எட்டு பிரதேச சபைகளும் இயங்கியது. மாநகர சபை அரசாங்க ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இயங்கியது. கடந்த மார்ச் 17ம் திகதியுடன் இச்சபைகள் கலைக்கப்பட்டு அதன் செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. 2012.03.17இல் கலைக்க வேண்டிய சபைகளை ஒரு வருடத்துக்கு அரசாங்கம் நீடித்தது. அப்போது தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளுராட்சி சபைகளில் மட்டக்களப்பில் போட்டியிடவி…
-
- 1 reply
- 540 views
-
-
மாணவியை வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்தார் காத்தான்குடி நகரசபை உறுப்பினர் - பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு! [Monday, 2013-04-22 18:49:18] காத்தான்குடி நகர சபை உறுப்பினரொருவர் மாணவியொருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முயற்சித்துள்ள சம்பவம் ஒன்று இன்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் பொலிஸில் இன்று திங்கட்கிழமை காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஓட்டமாவடி பிரதேசத்தை சேர்ந்த இந்த மாணவி காத்தான்குடி பிரதேசத்தில் தங்கி கல்வி பயின்று வருகின்றார். குறித்த மாணவியை நகர சபை உறுப்பின் தனது காரில் கல்முனை பிரதேசத்திலுள்ள தனியார் கல்வி நிலையமொன்றுக்கு இன்று அழைத்துக் சென்றுள்ளார். அங்கிருந்து காத்தான்குடிக்கு திரும்பி வரும்போதே அம…
-
- 3 replies
- 473 views
-
-
இலங்கையில் நீதித்துறை சுதந்திர மீறல்களை ஆராய சட்டத்தரணிகள் குழு Sunday, Apr 21, 2013 2:59 pm இலங்கையில் நீதித்துறையின் சுதந்திரத்துக்கும் சட்டத்தின் ஆட்சிக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும்படியாக இடம்பெறும் சம்பவங்கள் பற்றி ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் நிலையியற் குழுவொன்றை நியமித்துள்ளது. நாடுமுழுவதிலும் நடக்கின்ற இவ்வாறான சம்பவங்கள் பற்றி அந்தந்த பிரதேசங்களைச் சேர்ந்த தமது பிரதிநிதிகள் ஊடாகவும் பொதுமக்கள் ஊடாகவும் தகவல்களைப் பெற்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் நிறைவேற்றுக்குழுவுக்கு அறிவிக்கப்படும் என்று நிலையியற் குழுவின் தலைவர் மூத்த சட்டத்தரணி லால் விஜேநாயக்க தெரிவித்தார். நீதித்துறையின் சுதந்திரத்தையும் சட்டத்தின் ஆட்சியையும…
-
- 0 replies
- 529 views
-
-
தற்போது மக்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பியதும் கலந்துரையாடப்பட்டு உடனடி தீர்வு எட்டப்படும் என அக் கட்சி அறிவித்துள்ளது. மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டமையின் காரணமாக மக்கள் பெரும் சுமைக்குள் தள்ளப்பட்டுள்ளதாகவும் இதற்கு எதிராக மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து தாம் கவனம் செலுத்தி வருவதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டமையினால் ஏற்படும் விளைவுகள் குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்துதல், நாடு முழுவதிலும் மக்கள் போராட்டங்களை ஏற்படுத்துதல் என மன்சார கண்டன அதிகரிப்பிற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தமது கட்சி தயாராக இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியி…
-
- 4 replies
- 436 views
-
-
வடக்கில் இராணுவ ஆக்கிரமிப்பு, ஊடக அடக்குமுறைகள் உட்பட அரசாங்கம் மேற்கொண்டு வரும் அராஜகங்களைக் கண்டித்து மாபெரும் போராட்டங்களை முன்னெடுப்பதற்கு ஏதுவாக ஜனநாயக இயக்கம் ஒன்றை அமைக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், குடியியல் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோரை உள்ளடக்கியே இந்த இயக்கம் அமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த இயக்கம் இன்னும் சில தினங்களில் அமைக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகமும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, யுத்தம் முடிவுக்கு வந்துவிட் டது எனஅரசாங…
-
- 0 replies
- 433 views
-
-
"வலிவடக்கு ஆக்கிரமிப்புக்கு எதிரான போருக்கு ஆதரவு கூடுகிறது!" வலி.வடக்கு நில ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டத்திற்கு அனைத்து தரப்புக்களும் தமது ஆதரவை வெளியிட்டுவருகின்றன. நாளை மறுதினம் புதன்கிழமை யாழ்.செயலகத்திற்கு முன்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டினில் கண்டன ஆர்ப்பாட்மொன்றிற்கு ஏற்பாடாகியுள்ளது. இக்கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு இடம்பெயர்ந்த மக்கள் உள்ளடங்கியுள்ள வலிவடக்கு பிரதேச சபை மற்றும் வலிகிழக்கு பிரதேச சபைகள் தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளன. இது பற்றி தகவல் வெளியிட்ட கூட்டமைப்பு சார்பு வலிவடக்கு பிரதேச சபை தலைவர் தமது முழுமையான ஆதரவை வெளியிட்டுள்ளதுடன் நாளை இடம்பெயர்ந்த மக்களை தான சந்தித்து உரையாடி புதன்கிழமை போராட்டத்தி;றகான ஆதரவை …
-
- 11 replies
- 584 views
-
-
இலங்கையில் உள்ள கடற்படையினரில் சுமார் 80 வீதமானவர்கள், ஏதோ ஒரு வகையில் இந்தியாவில் பயிச்சி எடுத்தவர்கள் என்று ஜயந்த கொலம்பகே தெரிவித்துள்ளார். இலங்கை கடற்படையின் கமாண்டர் ஜயந்த மேலும் தெரிவிக்கையில், இவர்கள் கேரளாவிலும் மற்றும் நீலகிரியிலும் தமது பயிற்சிகளை முடித்துள்ளார்கள் என்று தெரிவித்துள்ளார். மேலும் 250 இலங்கை கடற்படையினர் இந்தியாவுக்கு பயிற்ச்சிக்காக செல்லவுள்ளார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இந்தியா கோரளாவிலும் மற்றும் நீலகிரியில் வைத்தும் இலங்கை கடற்படையினருக்கு பாரிய அளவில் பயிற்ச்சிகளை வழங்கிவருகிறது. இச் செய்திகளானது அவ்வப்போது அரசல் புரசலாக வெளியே வந்தாலும், இவ்வளவு தொகையான படையினருக்கு எவ்வாறு இந்தியா பயிற்சிகளை வழங்கியது என்று பலர் வாயைப் பிழக்…
-
- 2 replies
- 1.7k views
-
-
முப்பதாண்டு கால யுத்தச் சூழலில் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை, அறுபதாண்டு கால அரசியல் நெருக்கடிகளிலும் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்ற தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வ காண்பதற்குரிய சரியான, ஆளுமையும், செயலாற்றலுமிக்க அரசியல் தலைமை இருக்கின்றதா என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றது. இந்த நிலைமை நீண்ட காலமாகவே நிலவி வந்து கொண்டிருக்கின்றது. இலங்கை அந்நியரிடமிருந்து சுதந்திரம் பெற்றதன் பின்னர் தமிழ் மக்கள் அரசியல் ரீதியாகப் படிப்படியாக ஒடுக்கப்பட்டே வந்திருக்கின்றார்கள். இதனை இந்த நாட்டின் இனப்பி;ரச்சினைக்கான அரசியல் வரலாறு தெட்டத் தெளிவாகக் காட்டி நிற்கின்றது. மிதவாத அராசியல் கொள்கைகளைக் கொண்டிருந்த தமிழ் அரசியல்வாதிகள் தம்மால் இயன்ற அளவில் தமிழ் மக்களின் அரசியல்…
-
- 0 replies
- 454 views
-
-
1988 ம் ஆண்டு சித்திரை மாதம் 19ம் நாள் உலக வரலாற்றில் ஒரு தமிழ் தாய் நான்காவது வல்லரசு நாட்டுக்கு எதிராக உண்ணா நோண்பிருந்து சாவைத்தழுவிக்கொண்டார். இந்நிகழ்வு உலகத் தமிழர்களையும் தமிழீழ மக்களையும் சாத்வீகப் போராட்டத்தை கற்றுத்தந்த தேசத்திற்கு எதிராக மீண்டும் ஒருமுறை கிழர்ந்தெழ வைத்தது. ஏப்ரல் 19 தென் தமிழீழ அன்னையர் முன்னணியின் போராட்டத்தை உலகறியச் செய்தநாள். உலகத் தமிழ் மக்களுக்கு அன்னை பூபதி என்கின்ற தியாகச் செம்மலை அறிமுகப்படுத்திய நாள் இந் நாளையே தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் தேசிய நாட்டுப்பற்றாளர் நாளாக பிரகடனம் செய்து மகிமைப்படுத்தினார். 2009 ம் ஆண்டு எமது விடுதலைப் போராட்டம் மிக இக்கட்டான நிலையை சந்தித்து நின்றவேளை இறுதிக்கட்ட முறியடிப்பிற்கு தயார் …
-
- 0 replies
- 385 views
-
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடும்ப ஆட்சி அதிகாரத்தின்கீழ் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மேலோங்குகின்றன என அமெரிக்கா முன்வைத்துள்ள குற்றச்சாட்டு முற்றிலும் உண்மையானது எனத் தெரிவித்து அறிக்கையை வரவேற்றுள்ளது பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி. அநீதியான ஆட்சியை நடத்திக் கொண்டு சர்வதேசத்தின் பலமிக்க நாடுகளைப் பகைத்துக்கொள்வதால் நாடுதான் அபாய நிலைக்குள் தள்ளப்படுகிறது. எனவே, சர்வதேச சமூகத்துடனான முறுகல் நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க அதனுடன் சமரசப் பேச்சு நடத்த அரசு தயாரெனில், தாமும் அதற்கான முழுமையான ஒத்துழைப்பையும் வழங்குவோம் என்று ஐ.தே.கவின் சிரேஷ்ட உப தலைவரும், கண்டி மாவட் நாடாளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். 'மனித உரிமைகள் தொடர்பான நாடுகளின்…
-
- 0 replies
- 258 views
-
-
வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்குத் தனியான ஆட்சிமுறை என்பது நடைமுறைச் சாத்தியமற்றது என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். அண்மையில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்ட இந்திய நாடாளுமன்றக் குழுவிடமே அவர் இவ்வாறு கூறியுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது. இந்தச் சந்திப்பின் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுட்டிக்காட்டிய, 13வது அரசியலமைப்புத் திருத்தம் நடைமுறைப்படுத்தப்படாமை, வடக்கு, கிழக்கில் சிங்களக் குடியேற்றங்கள் என்பன குறித்து இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள், சிறிலங்கா பாதுகாப்புச் செயலரிடம் கேள்வி எழுப்பியிருந்தனர். அதற்கு சிறிலங்கா பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச, 13வது திருத்தம் குறித்தோ, 13வது திருத்தத்துக்கு…
-
- 3 replies
- 468 views
-
-
தன்னைப் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியவர்களில் ஒருவர் ஜனாதிபதிக்கு நெருக்கமானவர்: விக்ரோரியா By General 2013-04-22 10:19:36 தன்னைப் பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய – தனது நண்பரை கொலை செய்த குற்றவாளிகளில் ஒருவரின் குடும்பம் இலங்கை ஜனாதிபதிக்கு மிகவும் நெருக்கமானது என்பதால், குற்றவாளிகள் ஒருபோதும் நீதியின் முன் நிறுத்தப்படப் போவதில்லை என்று ரஸ்யப் பெண்ணான விக்ரோரியா கச்சேவா தெரிவித்துள்ளார். தங்காலையில் உள்ள விடுதி ஒன்றில் கடந்த 2011ஆம் ஆண்டு இலங்கையின் ஆளும்கட்சி உள்ளூர் தலைவர் ஒருவரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட விக்ரோரியா கச்சேவா இந்தச் சம்பவத்துக்குப் பின்னர் முதல் முறையாக – சண்டே ரைம்ஸ் வாரஇதழுக்கு செவ்வி அளித்துள்ளார். 24 வயதான விக்ரோரியா கச்சேவா ரஸ்…
-
- 1 reply
- 663 views
-
-
April 20, 2013 இலங்கையின் சில முக்கியமான பகுதியில் எதிர்பாராத தாக்குதல்கள் நிகழ்த்தப்படலாம் என்ற வதந்திகள் வெளிவந்த நிலையில், தமிழீழத்தின் ஆனையிறவுப் பகுதியில் மீண்டும் வாகனப் பதிவுகளைப் படையினர் கடந்த வாரம் முதல் ஆரம்பித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் ஏ-9 வீதி ஊடாகக்குடாநாட்டுக்கு வெளியே செல்லும் பயணிகள் பேரூந்துகள், உல்லாசப் பயணிகளின் வாகனங்கள் உட்படச் சகல வாகனங்களும் ஆனையிறவு சோதனைச் சாவடியில் வைத்துச் சோதனை செய்யப்படுகின்றன. கடந்த வாரம் முதல் இந்த நடவடிக்கையில் படையினர் ஈடுபட்டுள்ளனர். கடந்த சில மாதங்களாக அனையிறவுப் பகுதியில் வாகனப் பதிவு நிறுத்தப்பட்டிருந்தது, இதனால் வாகனங்கள் சிரமமின்றியும்இ தாமதமின்றியும் பயணிக்கக் கூடிய நிலை ஏற்பட்டிருந்தது. இதேவேளை, கடந்த…
-
- 24 replies
- 2.6k views
-
-
செங்கலடி நகரில் இடம்பெற்ற இரட்டைக் கொலை தொடர்பாக சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்ட செங்கலடி மத்திய கல்லூரி மாணவர்கள் நால்வரும் எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி கருணாகரன் முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். இதனையடுத்து நீதிபதியினால் இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காதல் விவகாரமே இந்த இரட்டைக் கொலைக்குக் காரணம் என பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. செங்கலடியைச் சேர்ந்த பிரபல வர்த்தகர் சிவகுரு ரகு மற்றும் அவரது மனைவி சுந்தரமூர்த்தி விப்ரா ஆகியோர் கடந்த 7ஆம் திகதி நள்ளிரவு படுக்கையறையில் கோரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக சொலை செய்யப்பட்டவர்…
-
- 2 replies
- 1.5k views
-
-
சிலின்டர் வெடித்ததில் யாழ். பெண் கொழும்பில் பலி திங்கட்கிழமை, 22 ஏப்ரல் 2013 10:14 கொழும்பு – 15, மோதர பிரதேசத்திற்குட்பட்ட வீடொன்றில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற கேஸ் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் பெண்ணொருவர் பலியாகியுள்ளார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த இப் பெண் தற்போது கொழும்பு – 15, மோதர பிரதேசத்தில் வசித்து வருகின்றார். இந்த நிலையிலேயே அவர் வசித்து வந்த வீட்டில் கேஸ் சிலின்டர் வெடித்துள்ளது. இச்சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை மோதர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-09-21-10-46-55/64652-2013-04-22-04-46-18.html
-
- 0 replies
- 442 views
-
-
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவிற்கும், முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கும் இடையில் விசேட பேச்சுவார்த்தைகள் நடத்தப்படவுள்ளன. எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து இந்த சந்திப்பின் போது கவனம் செலுத்தப்படவுள்ளது. எதிர்வரும் காலங்களில் நடைபெறவுள்ள தேர்தல்களின் போது ஐனநாயகத் தேசியக் கூட்டமைப்புடன் சந்திரிக்காவை இணைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகளுடன் சந்திரிக்கா தனித்தனியாக சந்திப்புக்களை நடாத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://www.seithy.com/breifNews.php?newsID=80915&category=TamilNews&language=tamil
-
- 6 replies
- 1k views
-
-
வடக்கில் சிங்கள குடியேற்றத்தை யாராலும் தடுக்க முடியாது: மஹிந்த திங்கட்கிழமை, ஏப்ரல் 22, 2013 வடக்கில் இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் அனைவரையும் நாம் குடியேற்றி விட்டோம். அது போன்றே சிங்கள மக்களையும் குடியேற்றவுள்ளோம். இதனை யாராலும் தடுக்க முடியாது. அத்துடன் முஸ்லிம் மக்களும் அங்கு குடியேற்றப்படுவர் என ஜனாதிபதி மஹிந்தையர் தெரிவித்துள்ளார். முலைத்தீவு மாவட்டத்தின் வெலிஓயா பகுதியில் மீள்குடியேற்றப்பட்ட சிங்களவர்களுக்கு காணிகள் வழங்கும் நிகழ்விலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நாங்கள் வெளிநாட்டு உதவிகளை நம்பி வாழ வேண்டிய அவசியம் இனி இல்லை. அந்த நிலை இப்போது மாறிக் கொண்டிருக்கிறது. நாங்கள் யாருக்கும் அடிபணியும் தேவையும் இல்லை. வெளியார் சொல்வதனைக் கேட்க வேண்டிய…
-
- 1 reply
- 900 views
-
-
இந்தியாவின் வெளியக உளவு அமைப்பான ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுத் துறையின் [Research and Analysis Wing - RAW] முன்னாள் அதிகாரியான ஜோதி சிங்க [Jyoti Sinha] அயல்நாடுகளான மியான்மார், பூட்டான், நேபாளம், பங்களாதேஸ், சிறிலங்கா போன்றவற்றில் 1999-2004 வரை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சிக்காலத்தில் இந்தியா தனது செல்வாக்கை அதிகரிப்பதில் மிக முக்கிய பங்களிப்பு வழங்கியிருந்தார். அத்துடன் 2001-2004 வரையான காலப்பகுதியில், சிறிலங்காவில் இந்தியா தனது செல்வாக்கை அதிகரிப்பதற்கான கொள்கை வகுத்தலில் இவர் சிறப்பான பங்களிப்பை வழங்கியிருந்தார். 'சிறிலங்காவில் இடம்பெறும் தற்போதைய அபிவிருத்திகள் - இந்தியாவின் நலனும் அக்கறையும்' என்கின்ற தலைப்பில் பெங்களுரில் நடாத்தப்பட்ட கருத்தரங்கில் ஜோதி சிங்க…
-
- 2 replies
- 393 views
-
-
முஸ்லிம் காங்கிரஸ் அரசை விட்டு வெளியேறத் தீர்மானம் : வாக்கு வங்கியைப் பாதுகாக்கும் தீர்மானம்? ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி, அரசாங்கத்தை விட்டு வெளியேறத் திட்டமிட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் மே தினத்தின் பின்னர் ஆளும் கட்சியில் நீடிப்பதா இல்லையா என்பது தீர்மானிக்கப்பட உள்ளது. முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கி வரும் நெருக்கடி நிலைமைகள் குறித்து முஸ்லிம்க காங்கிரஸ் அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளது. இது தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. எனினும், அரசாங்கம் இதுவரையில் இந்தக் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே தொடர்ந்தும் ஆளும் கட்சியில் நீடிப்பதா, இல்லையா என்பதனை விரைவில் தீர்மானிக்க நேரிட்டுள்ளதாக…
-
- 5 replies
- 798 views
-
-
சிறிலங்கா படையினர் மேற்கொண்ட போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான ஆவணப்படம் இலண்டனில் வெளியிடப்படவுள்ளது. சனல் 4 தொலைக்காட்சி தயாரித்துள்ள 'போர் தவிர்ப்பு வலயம்' என்ற ஆவணப்படத்தின் முன்னோட்டக்காட்சி மீண்டும் லண்டனில் திரையிடப்படவுள்ளது. இந்நடவடிக்கையால் சிறிலங்கா அரசு பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதி 138 நாட்களில் இடம்பெற்ற சம்பவங்களை அடிப்படையாக வைத்து, போர் தவிர்ப்பு வலயம் ஆவணப்படத்தை கல்லும் மக்ரே தயாரித்துள்ளார். இந்த ஆவணப்படத்தின் ஒரு பகுதி, கடந்த மார்ச் மாதம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையிலும், புதுடெல்லியிலும் வெளியிடப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிறிலங்காவுக்கு எதிராக…
-
- 3 replies
- 1.2k views
-
-
கணவன் செலுத்திய லொறியில் நசுக்குண்டு மனைவி பலியான சம்பவம் ஒன்று பண்டாரகம கிதல்பிட்டியவில் இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. வர்த்தகரரின் மனைவியே (வயது 35 இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவர், லொறியை இயக்கியபோது அந்தலொறி அவரது மனைவி நின்றுக்கொண்டிருந்த குழாய் கிணற்று பக்கத்தை நோக்கி பாய்ந்துள்ளது. லொறியை அவரால் கட்டுப்படுத்த முடியாமல் போனமையினால், மனைவி குழாய் கிணற்றுடன் நசுக்குண்டு பலியாகியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர் http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/64632-2013-04-21-17-06-10.html
-
- 1 reply
- 551 views
-
-
அணுமின் சக்தி அதிகாரசபை நாடாளாவிய ரீதியில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளது. இலங்கையில் தரைப்பரப்பில் ஏதாவது கதிர்வீச்சு காணப்படுகின்றதா? என்பது தொடர்பிலேயே ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆய்வு கூடங்குளம் அணுசக்தி நிலையத்திலிருந்து கசிவு ஏற்படுமாயின் அதை கண்டுப்பிடிக்க ஏதுவாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகின்றது என்று அதிகார சபையின் தலைவர் கலாநிதி ரஞ்சித் விஜயவர்தன தெரிவித்தார். தகவல்களை அறிந்துக்கொள்ள இது ஒரு முன்னேற்பாடான செயல் ஏனெனில் கூடங்குளம் அணுமின்சக்தி நிலையத்திலிருந்து கசிவு ஏற்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக வெளியான செய்திகளின் படி இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகின்றது என்றும் அவர் தெரிவித்தார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/64612-2013-04-21-12-26-41.h…
-
- 0 replies
- 420 views
-
-
தலித்துகளின் நல் வாழ்வுக்காகப் போராடுவதனால் நெதர்லாந்து அரசினால் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. நெதர்லாந்து அரசினால் 2008ம் ஆண்டு உருவாக்கப்பட்ட மனித உரிமைகள் துல்ப் என்ற அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் உலகெங்கும் உள்ள மனித உரிமைப்போராளிகளில் ஒருவரைத் தெரிவு செய்து விருதுகளை வழங்கி வருகிறது. இந்த வகையில் சென்ற ஆண்டு இப்பரிசு சீனாவைச்சேர்ந்த நீ யுலான் என்பவருக்கு வழங்கப்பட்டது. இம்முறை 2012ம் ஆண்டுக்கான மனித உரிமைகள் துல்ப் விருதை இந்தியாவைச்சேர்ந்த மாரிமுத்து பரதன் என்னும் தமிழர் பெற்றுக்கொண்டுள்ளார். சாதிய ஒடுக்குமுறையினால் மிகுந்த ஒடுக்குமுறைக்கும் உடல் உள இன்னல்களுக்களுக்கும் உள்ளாகும் தலித்துகளின் நல்வாழ்வுக்காகப் போராடிக் கொண்டிருப்பதனாலேயே அவருக்கு இந்த விருது வழங்க…
-
- 0 replies
- 464 views
-
-
[காணொளி] ஈழமண்ணில் எரியும் நெருப்பாய்… தமிழீழ பெண்கள் – இயக்கம் பாண்டிமாதேவி நாடு கடந்த தமிழீழ அரசின் தோழமை மய்யம் சார்பில் “ஈழமண்ணில் எரியும் நெருப்பாய்… தமிழீழ பெண்கள்” என்ற ஆவணப்படத்தை வழக்கறிஞர் பாண்டிமாதேவி இயக்கியுள்ளார். இவ் ஆவணப்படத்தில் 2009ன் பின்னர் தமிழீழம் சென்று வந்த ஊடகவியலாளர்கள், வழக்கறிஞர்கள், தன்னார்வ தொண்டர்கள் ஆகியோரின் பேட்டிகளும், சிங்களக்கொடுங்கோல் முகாமிலிருந்து மீண்டுவந்த தமிழீழப்பெண்களின் சாட்சிகளும் பேட்டிகளும் உள்ளன. http://www.periyarthalam.com/2013/04/21/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%88%E0%AE%B4%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%…
-
- 0 replies
- 588 views
-
-
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொட்டகலை, பத்தனை சந்தியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டமொன்றில் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரான மனோ கணேசன் கலந்துகொண்டபோதே கல் வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் சிலமணிநேரம் பதற்றம் நிலவியது. தோட்டத் தொழிலாளர்களுக்கு கூட்டு ஒப்பந்தம் மூலம் பெற்றுக்கொடுக்கப்பட்ட சம்பளம் போதாது என்றும் அந்த சம்பள உயர்வை எதிர்த்து கொட்டக்கலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது. 16 தொழிற்சங்கங்களை உள்ளடக்கிய மலையக பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பே இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மலையக மக்கள் முன்னணி, தொழிலாளர்…
-
- 8 replies
- 935 views
-