Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கை அரசை இன அழிப்பு அரசாக அறிவித்து அவர்களுக்கு தண்டனை நிறைவேற்ற கோரியும் ,தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பை நடத்தக்கோரயும் ஸ்ரீ வில்லிபுத்தூர் கலசலிங்கம் பலகலைகழக நுழைவாயலில் 1500 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் போராட்டம் நடத்தினார்கள். பின்னர் இன்று கலை 500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் உண்ண விரத போராட்டத்தை மேற்கொண்டு வருகிறார்கள். http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13605:srivallu-puthur&catid=36:tamilnadu&Itemid=102

  2. சீனா மீதான இலங்கையின் நம்பிக்கை வீண் போகிறதா?! 24/03/2013 at 6:22 pm நாட்டில் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்ப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சீனா வலிறுத்தியுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.அத்துடன் இந்தியாவுடன் முரண்பாட்டினை வளர்த்துக் கொள்ளாது நல்லுறவை பேணுமாறும் சீனா இலங்கையை வலியுறுத்தியுள்ளதுடன் இது தொடர்பில் உயர்மட்ட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. இலங்கைக்கு சீனா தொடர்சியாக ஆதரவை வெளியிட்டு வந்த நிலையில் இந்த வலியுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை, சீனாவின் புதிய ஜனாதிபதியாக க்சீ ஜின்பின் நியமனம் பெற்றதன் பின்னர், இலங்கை தொடர்பில் அந்த நாட்டின் கொள்கையில் மாற்றம் ஏற்படுத்தப்ப…

    • 5 replies
    • 1.4k views
  3. By Farhan மத்திய கிழக்கு நாடுகளில் காய்த்துக் குலுங்கும் பேரீச்சம் மரங்களைப் போன்று கிழக்கு மாகாணத்தில் காத்தான்குடி பிரதான வீதியில் உள்ள 79 பேரீச்சம் மரங்களும் பூத்துக் காய்க்க ஆரம்பித்துள்ளன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மஹிந்த சிந்தனை கிழக்கின் உதயம் வேலைத்திட்டத்தில் வீதிகளை அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்தில் காத்தான்குடி பிரதான வீதியில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் முயற்;சியினால் 79 பேரீச்சம் மரங்கள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. கிழக்கு மாகாணத்தில் தற்போது அதிகம் உஷ்ணம் நிலவுவதால் பிரதான வீதியிலுள்ள அதிகமான பேரீச்சம் மரங்கள் பூத்தும், காய்த்தும் வருவத…

    • 1 reply
    • 572 views
  4. ரணில் - சந்திரிகா - மங்கள வெளிநாட்டவர்களுடன் இணைந்து ரகசிய பேச்சுவார்த்தை 26 மார்ச் 2013 காலியில் உள்ள பிரபல விடுதியொன்றில், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க, ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர ஆகியோர் வெளிநாட்டவர்களுடன் இணைந்து ரகசியமான பேச்சுவார்த்தைகளை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 23 ஆம் திகதி குறித்த விடுதிக்கு சென்ற இவர்கள் நீண்ட கலந்துரையாடலை நடத்தியுள்ளதுடன், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க அவர்கள் மத்தியில் உரையாற்றியுள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவித்தன. இந்த பேச்சுவார்த்தையில் 25 வெளிநாட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இது குறித்து அரசாங்கம் கூடிய கவ…

  5. தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்குலக நாடுகளில் ஆதிக்கத்தை செலுத்தியதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.யுத்தம் இடம்பெற்ற காலத்தில் மேற்குலக நாடுகளின் அரசியல் தலைமைகள் மீது புலிகள் பல்வேறு வழிகளில் தாக்கம் செலுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார். காலியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். யுத்தத்தை தடுத்து நிறுத்த பல்வேறு தரப்பினர் முயற்சி மேற்கொண்டதாகவும் அரசாங்கம் அந்தச் சாவல்களை வெற்றிகரமாக எதிர்நோக்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.பிரித்தானியா, பிரான்ஸ் போன்ற நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களும், ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் விசேட பிரதிநிதி ஒருவரும் இறுதி நேரத்தில் யுத்தத்தை நிறுத்தும் நோக்கில் இலங…

  6. இந்தியாவின் இனத்துரோகத்தைக் கண்டித்து தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சென்னை,திருச்சி, தஞ்சை,ஓசூர்,கடலூர் பகுதமிகளில் நடத்திய இந்திய அரசின் உற்பத்தி வரி அலுவலகம் முற்றுகை போராட்டம் சிங்கள பௌத்த இனவெறி அரசு ஈழத் தமிழர்களை இலட்சக்கணக்கில் கொன்று குவித்ததை ஐ.நா. செயலாளர் அமைத்த மூவர் குழு அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது. சேனல்-4 உள்ளிட்ட அனைத்துலக முன்னணி ஊடகங்கள் இதற்கான ஆதாரங்களை வெளியிட்டுள்ளன. இவை அனைத்தும் உலகம் முழுவதிலும் பேசப்பட்டாலும் 7 கோடித் தமிழர்கள் உள்ள தமிழ்நாட்டை ஆளும் இந்திய அரசுஇ ஒன்றரை இலட்சம் ஈழத்தமிழ்ப் பொதுமக்கள் சிங்களப் படையால் கொல்லப்பட்ட கொடுமையை இனப்படுகொலை என்று இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை தமிழீழப் படுகொலையை 'இனப்படுகொலை' என்று தீர்மனம…

    • 0 replies
    • 464 views
  7. தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை மதித்தும், இந்தியாவின் தேசிய நலனை முன்னிறுத்தியுமே, ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக வாக்களிக்க இந்தியா தீர்மானித்தது என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்சித் தெரிவித்துள்ளார். இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள சிறப்பு செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். "நாம் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்திருக்க முடியும் அல்லது வாக்களிக்காமல் விட்டிருக்க முடியும். தமிழ்நாட்டின் தீவிர உணர்வுகளை கருத்தில் கொள்வது முக்கியம் என்று நான் நினைக்கிறேன். அதனை முற்றிலும் புறக்கணித்து விடமுடியாது. ஆனால் அது வெளிநாட்டுக் கொள்கையை முற்றிலுமாக தீர்மானிக்க முடியாது. அமெரிக்கத் தீர்மானத்தை இந்தியா நீர்த்துப் போகச் செய்யவில்லை. நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துர…

  8. 'தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் அல்ல. ஏனெனில் கூட்டமைப்பினர் வட மாகாணத்தில் 63 ஆயிரம் வாக்குகள் பெற்றபோது சரத் பொன்சேகா யாழ்ப்பாணத்தில் ஒரு இலட்சத்து 13 ஆயிரம் வாக்குகளை பெற்றுள்ளார். அவ்வாறு இருக்கையில் த.தே.கூ.வினர் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளா?' என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்த சங்கரி கேள்வி எழுப்பினார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பதிவு விடயத்தில் உள்ள இழுபறி நிலைமை தொடர்பில் கருத்து தெரிவித்த ஆனந்த சங்கரி, 'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள நான்கு கட்சிகளும் என்ன நடந்தாலும் ஒற்றுமையை சீர்குலைக்க கூடாது என்றும் அக்கட்சிகள் கூட்டமைப்பில் அர்ப்பணிப்போடு செயற்படுவதாகவும்' சுட்டிக்காட்டினார். இது தொடர்பில் தொடர்ந்தும…

  9. இந்தியன் பிரீமியர் லீக் போட்டித் தொடரின் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் இருந்து இலங்கை வீரர்களை நீக்க அணியின் உரிமையாளர் தீர்மானித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழகத்தில் இடம்பெறுகின்ற மாணவர்களின் போராட்டகளைத் தொடர்ந்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை சுப்பர் கிங்ஸில் நுவான் குலசேகர மற்றும் அகில தனஞ்செய ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அவர்களை அணியில் இருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. போட்டிகளில் இருந்து இலங்கை வீரர்களை நீக்க முடியாது என்று ஐ.பி.எல் அணிகளின் உரிமையாளர்கள் முன்னதாக அறிவித்திருந்தனர். எனினும் தற்போது சென்னை சுப்பர் கிங்ஸ் மேற்கொண்டுள்ள இந்த தீர்மானத்தை தொடர்ந்து ஏனைய ஐ.பி.எல…

    • 1 reply
    • 684 views
  10. http://youtu.be/F2uLY-dh5O0 Buddhists target Sri Lanka's Muslims. Muslims in Sri Lanka have voiced concerns about a growing number of anti-Muslim protests and attacks, carried out by hardline Buddhist groups. It comes four years after the army in this mainly Sinhalese Buddhist country defeated Tamil separatists. Charles Haviland reports from Colombo. http://www.bbc.co.uk/news/world-asia-21920735

    • 4 replies
    • 912 views
  11. தேசிய அடையாள அட்டையை தமிழ், சிங்கள மொழிகளில் விநியோகிக்கக் கோரி நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுத்தாக்கல்! [Tuesday, 2013-03-26 11:10:56] தேசிய அடையாள அட்டையை தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் விநியோகிக்குமாறு கோரி அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மஹரகம பகுதியில் உள்ள நபர் ஒருவரால் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தனக்கு வழங்கப்பட்டுள்ள தேசிய அடையாள அட்டை சிங்களத்தில் அச்சிடப்பட்டுள்ளதாகவும் இதனால் வடக்கு, கிழக்கு பகுதிகளுக்கு சென்றபோது பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியதாகவும் அவர் தனது மனுவில் தெரிவித்துள்ளார். சிங்கள மொழியில் தயாரிக்கப்பட்டுள்ள ஆவணங்களை வடக்கு, கிழக்கு பகுதிகளுக்கு கொண்டு செல்வது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என கூறியுள்ள மனுதாரர்…

  12. ஆழிப்பேரலை இடர் வீட்டுத் திட்டத்தில் குடியமராதோரின் வீட்டு உரிமை ரத்து; வீடற்றோருக்கு அவற்றை வழங்கத் திட்டம் பருத்தித்துறை வடமராட்சி வடக்கு பிரதேச செயலர் பிரிவில் ஆழிப்பேரலை இடர் திட்டத்தின் கீழ் வீடுகளைப் பெற்ற 31 குடும்பங்களின் வீட்டு உரிமை இரத்துச் செய்யப்பட்டு வீடற்றவர்களுக்கு அவற்றை வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. ஆழிப்பேரலை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரச சார்பற்ற நிறுவனங்களின் நிதி உதவியுடன் இந்தப் பிரதேச செயலர் பிரிவில் உள்ள கற்கோவளம், ஸ்கந்தாபுரம் கிராம சேவையாளர் பிரிவுகளில் காணிகளுடன் நூற்றுக் கணக்கான வீடுகள் கட்டப்பட்டு வழங்கப்பட்டிருந்தன. இந்த வீடமைப்புத் திட்டத்தின் கீழ் கற்கோவளம், வல்லிபுரம் கிராம சேவையாளர் பிரிவுகளில் 2006 ஆம் கட்ட…

  13. பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டில் மஹாராணி பங்கேற்க மாட்டார் 26 மார்ச் 2013 இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டில் பிரித்தானிய மஹாராணி பங்கேற்க மாட்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது. 54 நாடுகள் அங்கம் வகிக்கும் பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தலைவியாக இரண்டாம் எலிசபத் மஹாராணி கடமையாற்றி வருகின்றார். எதிர்வரும் நவம்பர் மாதம் 15 – 17ம் திகதி வரையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டில் மஹாராணி பங்கேற்கக் கூடிய சாத்தியமில்லை என இந்திய ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கை மனித உரிமை நிலைமைகளை கருத்திற் கொண்டு, மாநாட்டை வேறும் நாட்டில் நடாத்துமாறு சில நாடுகள் கோரி வருகின்றன. குறிப்பாக 2015ம் ஆண்டில் மொரிசியஸ் தீ…

  14. பொள்ளாச்சியில் நூதான முறையில் நடந்த மாணவர் போராட்டம் [படங்கள்] பொள்ளாச்சியில் நேற்று நூதான முறையில் நடந்த மாணவர் போராட்டம் நடை பெற்றது இதில் 500க்கு மேல் மாணவ மாணவியர் கலந்துகொண்டனர். மாணவ மனைவியர் காயகட்டுகளுடன் ஊர்வலம் சென்றதால் மக்கள் மத்தியில் ஒரு எழுச்சி காணப்பட்டது. http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13602:pollachy&catid=36:tamilnadu&Itemid=102

    • 0 replies
    • 531 views
  15. பதவி இழக்கப்போறார் சோமவன்ச!? 24/03/2013 at 1:05 pm நீண்ட காலமாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவராக இருந்து வரும் சோமவன்சவை அப்பதவியிலிருந்து நீக்கிவிட்டு புதிய ஒருவரை அப்பதவியில் அமர்த்துவதற்கான நடவடிக்கைகளை மக்கள் விடுதலை முன்னணி மேற்கொண்டு வருவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.மக்கள் விடுதலை முன்னணியின் புதிய தலைவர் ஒருவரை நியமிப்பது தொடர்பான கலந்துரையாடல்களும் விவாதங்களும் தற்பொழுது கட்சியின் உயர்பீடத்தில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. சோமவங்ச அமரதுங்க நீண்ட காலமாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவராக செயற்பட்டு வந்துள்ளார். அவர் தற்போது வயதாகியுள்ளதாகவும் அடுத்த தலைமுறையினருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்பதற்காகவுமே புதிய தலைமைத்துவம் தொ…

  16. உறவுகளுக்காக உறவுகள் எனும் இக் காணொலிக் கவிதை தமிழகம் நோக்கி பறக்கத் துடிக்கும் ஈழத்தின் குரல் http://youtu.be/bWfTECSsFN8 http://tamilleader.com/?p=8830

  17. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்பில் முக்கிய முடிவு நாளை... [Monday, 2013-03-25 18:50:22] தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இப்போதுள்ளதைப் போல ஐந்து கட்சிகளைக் கொண்ட கூட்டமைப்பாகச் செயற்படப்போகின்றதா அல்லது அதில் பிளவு ஏற்படப்போகின்றதா என்ற கேள்விக்கு இன்னும் இரு தினங்களில் பதில் கிடைத்துவிடும்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்காலம் தொடர்பாக ஆராய்வதற்காக கூட்டமைப்பிலுள்ள கட்சித் தலைவர்களிடையே கடந்த புதன்கிழமை கொழும்பில் இடம்பெற்ற சந்திப்பு வழமைபோல முடிவு இன்றியே முடிவடைந்துள்ளது. கூட்டமைப்பின் தலைவர்களிடையே கடுமையான வாக்குவாதங்களை மட்டுமே அன்றும் கேட்க முடிந்தது. இந்த நிலையில்தான் சந்திப்பு நாளை மறுதினம் 26 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாளை மறுதினம் மிக…

  18. மன்னார் அந்தோனியார் ஆலயத்தினுள் தாக்குதல்-மனித மலக்கழிவு வீச் மன்னார், சாவற்கட்டு புனித அந்தோனியார் ஆலயத்தில் அந்தோனியார் சொரூபம் வைக்கப்பட்டிருந்த கண்ணாடிக்கூடு இனம் தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டதோடு ஆலயத்தினுள் மனித மலக்கழிவு வீசப்பட்ட நிலையில் காணப்பட்டதாக மன்னார் செபஸ்ரியார் பேராலயத்தின் உதவி பங்குத்தந்தை அருட்தந்தை அன்றன் தவராஜ் தெரிவித்தார். நேற்று (24) மாலை மழை பெய்து கொண்டிருந்த சமயம் ஆலயத்திற்குச் சென்ற இனம் தெரியாத நபர்கள் அந்தோனியார் சொரூபம் வைக்கப்பட்டிருந்த கண்ணாடிப்பெட்டிடை உடைத்ததோடு சில பொருட்களை இழுத்து கீழே வீசியுள்ளனர். ஆலயப் பகுதியினுள் மனித மலம் வீசப்பட்டு கிடந்துள்ளது. இந்த நிலையில் ஆலயத்திற்கு நேற்று மாலை வந்த மக்கள் குறித்த சம்பவத்தை …

    • 1 reply
    • 670 views
  19. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அமர்வில் சிறீலங்காவுக்கு எதிராக அமெரிக்காவால் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளதாக வடபகுதி சிவில் சமூகம் வருத்தம் வெளியிட்டுள்ளது. வடகிழக்கில் காணப்படும் நிலைமைகள் குறித்து, சர்வதேசத்திடம் எவ்வளவோ எடுத்துக் கூறியும், சர்வதேசத் தலையீடு மிகவும் அவசியமான தொன்றாக காணப்படுகின்றது என்பதை விளக்கிக் கூறியும், அமெரிக்கத் திட்ட வரைபில் எவையும் உள்ளடக்கப்படாமையானது மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளதாக மன்னார் மறைமாவட்ட பேராயர் ராயப்பு ஜோசப் ஆண்டகை குறிப்பிட்டுள்ளார். அத்துடன் கள்வனிடமே களவு தொடர்பில் விசாரணை செய்யும் படி கோருவது எந்தவிதத்தில் நியாயமாகும் என்று ஆண்டகை கேள்வி எழுப்பியுள்ளார். முதன்முதலாக உள்ளக இடப் பெய…

  20. விடுதலைப் புலிகள் இல்லாத விடுதலை வேண்டாம். அவர்களே விடுதலைக்காக போராடியவர்கள் அவர்கள் பெற்றுக் கொடுப்பார்கள் என்பதை இன்று உலகம் நம்புகிறது. விடுதலைப் புலிகள் இயக்கம் தொடங்கும் போது அவர்களிடம் ஆயுதம் எதுவும் இல்லை. அப்போது பிரபாகரன் தனது அக்காவின் வளையல்களை வாங்கி விற்றார். கூட வந்தவர் தனது உழவு மாடுகளை விற்று அதில் கிடைத்த பணத்தை வைத்து ஒரு துப்பாக்கி தான் வாங்கினார்கள். அந்த ஒரு துப்பாக்கியை வைத்துக் கொண்டு ஒரு சிங்கள காவல் நிலையத்திற்குள் புகுந்த போது காவலர்கள் ஓடிப் போனார்கள். அங்கிருந்த 303 என்ற ரகத்தில் உள்ள 8 துப்பாக்கிகளை எடுத்து வந்தனர். அதில் 2 மட்டும் வேலை செய்தது. அடுத்து இந்த துப்பாக்கிகளுடன் இராணுவ முகாமிற்கள் நுழைந்து ஆயுதங்களை கைப்பற்றி ஆயுத…

  21. முள்ளியவளையில் குடியேற்றத்துக்கு தமிழர் எதிர்ப்பு முல்லைத்தீவு, முள்ளியவளைப் பகுதியில் முஸ்லிம் மக்களைக் குடியேற்றும் பொருட்டு அந்தப்பகுதியில் நில அளவை செய்ய முயன்ற அதிகாரிகள் அங்குள்ள தமிழ் மக்கள் திரண்டு நடத்திய எதிர்ப்பை அடுத்துப் பின்வாங்கிச் சென்றனர் எனத் தெரிக்கப்படுகிறது. முள்ளியவளைப் பகுதியிலுள்ள 540 ஏக்கர் தேக்கம் காட்டை அழித்து அந்தப் பகுதியில் ஆயிரத்து 445 முஸ்லிம் குடும்பங்களைக் குடியேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரியவருகிறது. முள்ளியவளை 6 ஆவது மைல் கல் அருகிலுள்ள இந்தத் தேக்கங்காட்டுப் பகுதி இன்னமும் வனப் பரிபலனத் திணைக்களத்தால் பிரதேச செயலகத்திடம் ஒப்படைக்கப்படவில்லை. முஸ்லிம் மக்கள் மீள்குடியேற்றப்படவுள்ள காணியை நில அளவைத் திணைக்களத்…

  22. இலங்கை தமிழர் பிரச்சினையில் திராவிட முன்னேற்றக் கழகம் தூரோகம் இழைத்துவிட்டது என்ற அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் குற்றச்சாட்டை கண்டித்து தி.மு.க உறுப்பினர்கள் இன்று சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர். தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று 2013 - 2014ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை தொடர்பில் உரையாற்றிய அ.தி.மு.க பெண் எம்.எல்.ஏ.வும் துரையூர் சட்டமன்ற உறுப்பினருமான இந்திரா காந்தி, இலங்கை தமிழர்களுக்கு தி.மு.க தலைவர் முகருணாநிதி தூரோகம் இழைத்துவிட்டதாக குற்றஞ்சாட்டினார். அ.தி.மு.க.வின் இந்த குற்றச்சாட்டிற்கு தி.மு.க உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தி.மு.க சார்பில் பேசிய உறுப்பினர் சக்கரபாணி, '1956ஆம் முதல் இலங்கை தமிழர்கள் பிரச்சினையில் தி.மு.க பல்வேறு…

    • 1 reply
    • 616 views
  23. ஊடகவியலாளர் ஒருவர் டொலர்களுக்கு ஆசைப்பட்டு நாட்டைக் காட்டிக் கொடுத்து விட்டார் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் குருநாகலில் இடம்பெற்ற இராணுவ நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இறுதிக் கட்டத்தில் நடைபெற்றதான மனித உரிமை மீறல் குற்றங்கள் தொடர்பிலான புகைப்படங்கள் பல திடுக்கிடும் வகையில் வெளிவந்துள்ளன. இதனால் இலங்கைக்கு சர்வதேச நாடுகளினால் அழுத்தங்கள் பாரிய அளவில் பிரயோகிக்கப்பட்டு வருகின்றது. அதன்படி களமுனைப் படங்களை வெளிநாடுகளில் உள்ள விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களுக்கு வழங்கியவரைத் தாம் கண்டறிந்துள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதற்கமைய சிங்கள ஊடகம் ஒன்றைச் சேர்ந்த இவர், 2009ஆம் ஆண…

  24. யாழில் நடந்த கூத்து: மாட்டிக்கொண்ட இராணுவத்தினர் ! யாழில் நேற்றைய தினம் அமெரிக்காவுக்கு எதிராக ஒரு ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தாங்கிச் சென்ற பதாதைகளை இங்கே போட்டிருக்கிறோம். இதனை சற்று உற்றுப்பாருங்கள். தமிழில் மட்டும் எத்தனை பிழைகள் என்று தெரியும். நிச்சயம் இது தமிழர்களால் எழுதப்படவில்லை என்பதனை எவரும் இலகுவாக அறிந்துகொள்வார்கள். இதனை விட மிகவும் வேடிக்கையான விடையம் ஒன்றும் நடந்துள்ளது. தமிழைத்தான் இவ்வாறு பிழையாக எழுதிக்கொண்டு சென்றிருக்கிறார்கள் என்றால்... அங்கே இலங்கையின் கொடியைக் கூட ஒருவர் தலைகிழாகப் பிடித்துள்ளார் என்றால் பாருங்களேன். யாழ் இந்தியத் தூதுவர் மகாலிங்கத்துக்கு எதிராகவும் சிலர் பதாதைகளை தாங்கிச் சென்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.