Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வவுனியா மேல் நீதிமன்றத்தினால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட சந்தேக நபரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு மார் 23, 2013 போதைப்பொருள் வைத்திருந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டு தொடர்ந்து மேல் நீதிமன்ற நீதிபதி விசாரனைகளின் பின் பிணையில் செல்ல அனுமதித்த நபரை வவுனியா மேல் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் பிணையில் விடுவிக்கப்பட்ட நபரை உடன் கைது செய்யுமாறு மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி எஸ்.தியாகேந்திரன் நேற்று முந்தினம் வியாழக்கிழமை (2103-2013) உத்தரவிட்டார். சுமார் ஒரு கோடி 50 இலட்சம் ரூபாய் பெருமதியுடைய 514.1 கிராம் நிறைகொண்ட ஹொரோயின் போதைப்பொருளுடன் கடந்த 08-11-2004 அன்று தலைமன்னார் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சதாசிவம் ரவீந்திரன் என்பவர் உடன் மன்னார் மாவட்ட நீதிமன்ற…

  2. வேலூரில் உள்ள காங்கிரஸ் அலுவலகம் முன்பு விடுதலைப்புலிகளை குற்றம் சாட்டி பேனர் வைக்கப்பட்டிருந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த தமிழ் ஆர்வலர்கள் காங்கிரஸ் அலுவலகத்தை சூறையாடினர். காங்கிரஸ் நிர்வாகிகள் அளித்த புகாரின் பேரில், இதுதொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13540:congeras-veelur&catid=36:tamilnadu&Itemid=102

  3. இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவைச் சந்தித்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் பலமிக்க மாற்று அரசியல் சக்தி ஒன்றினை உருவாக்குவது தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மந்திராலோசனையின் போது மகிந்தவின் முக்கிய அமைச்சர்கள் சிலர் உட்பட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 15 நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டதாகவும், இவ்வாறான பலமிக்க இரண்டாவது சக்தியை உருவாக்குவதற்கான தங்களது முழுமையான ஒத்துழைப்பினை வழங்கவும் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் விமல் வீரவன்சவின் அனுசரணை கொண்ட இணையமான லங்கா சீ நியுஸ் இன்று சனிக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது. அடுத்த ஜனாதிபதி தேர்தலில் சந்திரிகா பண்டார…

  4. 'இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை கண்டிப்போர் அமெரிக்கா, இந்திய தூதரகங்களுக்கு முன்னால் ஆர்பாட்டம் செய்வதற்கு பதிலாக நாடாளுமன்றம் மற்றும் ஜனாதிபதி இல்லத்துக்கு முன் ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும்' என ஐக்கிய தேசியக் கட்சியின் உபதலைவர் லக்ஷ்மன் கிரியெல்ல இன்று தெரிவித்தார். இது அரசாங்கத்துக்கு எதிரான ஒரு தீர்மானமே அன்றி இலங்கைக்கு எதிரானது அல்ல எனவும் அவர் கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 'சர்வதேச சமூகத்துக்கும் இந்த நாட்டுக்கும் இலங்கை அரசாங்கம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு மட்டுமே இந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. அதற்கு மேலாக அதில் எதுவுமில்லை. யுத்த குற்றச்சாட்டுக்கு எதிராக சுயாதீன விசாரணை நடைபெறுமென கூறியதும் 17 ஆவத…

  5. முல்லைத்தீவில் காணிகள் அற்ற நிலையில் 11206 குடும்பங்கள் - கிளிநொச்சி 12000 மேற்பட்ட மக்கள் காணிகள் இன்றித் தவிப்பு – முல்லைத்தீவு மாவட்டத்தில் குடியிருப்பதற்க காணிகள் அற்ற நிலையில் 11206 குடும்பங்கள் பிரதேச செயலங்கள் ஊடாக பதிவுகளை மேற்கொண்டிருப்பதாக முல்லைத்தீவு மாவட்டச்செயலகத்தின் தகவல்கள் மூலம் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிய வந்துள்ளது. மேற்படி 11206 குடும்பங்களும் நீண்ட காலமாக காணிகள் அற்ற நிலையில் வாழ்ந்து வருவதாகவும் இதனால் மீள்குடியேற்றத்திற்கு பின்னர் அரசு மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் நிரந்தர உதவிகளை பெற்றுக் கொள்ளமுடியாது வாழ்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது எனவே முல்லைத்தீவில் உள்ள அரச காணிகளை காணியற்ற இம்மக்களுக்கு பகிர்ந்தளிப்பதற்க அரசு உர…

  6. இலங்கையில் மொத்தம் 43 இந்திய நிறுவனங்கள்: எப்படி கொக்கி போடறார் இலங்கை தூதர் பாருங்க! Posted by: Mathi Published: Saturday, March 23, 2013, 10:26 [iST] மும்பை: இலங்கையில் செயல்படும் 46 சர்வதேச நிறுவனங்களில் 43 நிறுவனங்கள் இந்தியாவைச் சேர்ந்தவை என்று இந்தியாவுக்கான இலங்கை தூதர் பிரசாத் கரியவாசம் கூறியுள்ளார். மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இந்தியாவும், இலங்கையும் நட்பு நாடுகள்தான். தற்போது ஏற்பட்டுள்ள சில அரசியல் பிரச்சினைகள் தற்காலிகமானதுதான். இதனால் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் எந்த பாதிப்பும் ஏற்படாது. இலங்கையின் அமைவிட உத்தியை பயன்படுத்தி இந்தியா ஏராளமான ஆதாயங்களை அடைய முடியும். இலங்கையை சிறந்த வர்த்தக மையமாக பயன்படுத்திக்கொள்ள முடியும். இலங்க…

  7. தனித் தமிழ் ஈழத்தை வலியுறுத்தி வைகோவின் சொந்த ஊரான‌ கலிங்கப்பட்டியில் நடக்கும் உண்ணாவிரத போராட்டத்தில் வைகோவின் தாயார் மாரியம்மாளும் கலந்து கொண்டு உண்ணாவிரதம் இருந்து வருகிறார். . இலங்கை தமிழர்களை இனப்படுகொலை செய்த ராஜபக்‌ஷேவை குற்றவாளி கூண்டில் ஏற்ற வேண்டும், இனப்படு கொலை தொடர்பாக சுதந்திரமான பன்னாட்டு விசாரணை மேற்கொள்ள வேண்டும், தனி ஈழம் தொடர்பாக பொது வாக்கெடுப்பு நடத்த ஐ.நா நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கலிங்கப்பட்டியில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. கலிங்கபட்டி கிராமத்தை சேர்ந்த பொது மக்கள், பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்றுள்ள இந்த போராட்டம் காலை 9.05 மணிக்கு தொடங்கியது. உண்ணாவிரத போராட்டத்தை ம.தி.மு.கவின் அரசியல்…

    • 0 replies
    • 341 views
  8. பேய்க்கு பயம் வந்தால் மயானத்தில் வீடு கட்டுவதில்லை-ராஜபக்ச வெள்ளி, 22 மார்ச் 2013( 14:11 IST ) அவரைப் பயன்படுத்தி இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்க சதி நடக்கிறதாம் இவ்வாறு கூறுகிறார் ராஜபக்ச. அவர் பேசியுள்ளதன் விவரம் வருமாறு: நமக்கு மிகவும் நெருக்கமான இந்தியா இன்று பல நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. என்னை பயன்படுத்தி இந்தியாவில் ஆட்சியைக் கவிழ்க்க முயற்சிக்கிறார்கள். இது குறித்து நாம் ஒருபோதும் அச்சப்படத் தேவையில்லை. பேய்க்கு பயம் வந்தால் மயானத்தில் வீடுகள் கட்டுவதில்லை. பயங்கரவாதத்தை ஒழித்தது. பிளவடைந்த நாட்டை ஒரே தேசமாக ஆக்கியுள்ளோம். பொய் மற்றும் வதந்திகளுக்கு பெரிய அளவில் சக்தி இருப்பது தெரிகிறது. ஆனால் இவற்றை எல்லாம் வெல்ல கட்சி என்ற முறையில் எங்களால் முடிய…

    • 2 replies
    • 2.7k views
  9. காணாமற்போன 37 பேர் மீண்டனர்; தகவலில் இரகசியம் பேணிய அரசு ஜெனிவாவுக்கு மட்டும் அறிவிப்பு?; உண்மையைக் கண்டறிய உறவுகளின் உதவி நாடல் வடக்கில் காணாமற்போன தமிழர்கள் 36 பேர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக 5 மாதங்களுக்கு முன்னர் இலங்கை அரசு ஜெனிவாவுக்கு அறிவித்துள்ளது. எனினும் அந்த விடயம் இதுவரையில் இலங்கையில் உள்ள உறவினர்கள் எவருக்கும் தெரியப்படுத்தப்படாமல் மறைக்கப்பட்டிருந்த நிலையில் இப்போது அம்பலத்துக்கு வந்துள்ளது. மதவாச்சியைச் சேர்ந்த சிங்களவர் ஒருவருக்கும் இதே நிலைமை ஏற்பட்டுள்ளமையும் தெரிய வந்துள்ளது. வன்னியில் நடைபெற்ற இறுதிப் போரின் போதும் அதற்கு முன்னரும் போரின் பின்னரும் ஆயிரக்கணக்கானவர்கள் இலங்கையில் காணாமற்போயுள்ளனர். இவர்களுக்கு என்ன நடந்தது என்…

  10. கொழும்பு : இந்தியா- இலங்கை உறவு ஒருபோதும் குறையாது என்றும் , இந்தியா நம்மை விட்டு விலகிப்போகாது என்றும் இது தொடர்பான சூழ்ச்சிக்கு நாம் அச்சப்படத்தேவையில்லை என்றும் இலங்கை அதிபர் ராஜபக்சே கூறியுள்ளார். மேலும் இந்த பேச்சில் ஒரு பழமொழியை கோடிட்டு காட்டினார். அதாவது ; பேய்க்கு அஞ்சுபவர்கள் மயானத்தில் வீடு கட்ட மாட்டார்கள் என்றார். இந்த பழமொழியில் சஸ்பென்சை வைத்தார். இது குறித்து விரிவாக எதுவும் கூறவில்லை. இவரது லங்கா சுதந்திர கட்சியின் கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகளிடம் பேசுகையில் இவ்வாறு அவர் குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் பேசியதாவது: ‘ இந்தியா-இலங்கை உறவு குறையாது’- எங்களுக்கு மிகவும் நெருக்கமான இந்தியா, இன்று நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றது.இது த…

  11. இந்தியாவின் நிலைப்பாடு ஏமாற்றமளிக்கின்றது: கோட்டாபய ஐ.நா. மனித உரிமை பேரவையில் இலங்கை குறித்த இந்தியாவின் நிலைப்பாடானது ஆச்சரியமளிக்கும் அதேவேளை மிகவும் ஏமாற்றமடைய செய்துள்ளது என பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஐ.நா. மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்க கொண்டுவந்த பிரேரணைகளை இந்தியா ஆதரவளித்து வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/61274-2013-03-22-03-47-59.html

  12. சங்கதி24 இணையத்தளத்துக்காகவும், ஈழமுரசு இதழுக்காகவும் நாம்தமிழர் கட்சித் தலைவர் செந்தமிழன் சீமான் அவர்களை ஊடகஇல்லாத்தினர் ஜெனீவாவில் கண்ட பிரத்தியேகச் செவ்வி. http://www.sankathi24.com/news/28293/64//d,fullart.aspx

  13. -ஏ.எச்.ஏ. ஹுஸைன் 'அன்பான பிள்ளைகளே கல்விதான் பெரிய செல்வம். அறிவுதான் பெரிய ஆயுதம். நான் தமிழில் சொன்ன இந்த அற்பு வார்த்தைகளை நீங்கள் மனப்பாடம் செய்து வைத்துக் கொண்டாலும் அது தகும். எனவே, நீங்கள் கல்வி கற்க வேண்டும். அதைத்தான் நான் உங்களுக்குத் திரும்பத் திரும்பச் சொல்லுவேன். பயங்கரமான இருள் சூழ்ந்த ஒரு யுகம் இனித் தோன்றப் போவதில்லை என்று உங்களுக்கு நான் உறுதியளிக்கின்றேன்' என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். ஏறாவூர் அலிகார் தேசியக் கல்லூரிக்கு வருகை தந்து அதன் நூற்றாண்டு விழா நிகழ்வுகளில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், இன்று அலிகார் தேசியக் கல்லுயின் நூறு வருடப் பூர்த்தி விழாவ…

  14. முத்துக்குமார் தொடங்கி ஈழத்துக்காக இதுவரை 22 உயிர்கள் பலி... தமிழர்கள் வேதனை Posted by: Sudha Published: Friday, March 22, 2013, 15:27 [iST] சென்னை தமிழ் ஈழம் அமைய வேண்டும், ஈழத்துத் தமிழர்களின் இன்னல்கள் களையப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்காக இதுவரை 22 தமிழர்கள் தீக்குளித்து உயிர் நீத்துள்ளனர்.இது தொடர் கதையாகி வருவது தமிழ் ஆர்வலர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. தமிழ் ஈழத்துக்கான போராட்டம் முன்பு ஈழத்தில் மட்டுமே நடந்து வந்தது. இன்று ஈழத்தை சுடுகாடாக்கி விட்டது சிங்களம். இதனால் ஈழத்துக்கான போராட்டத்தை உலகத் தமிழர்கள் கையில் எடுத்துள்ளனர். உலகின் பல பாகங்களிலும் ஈழத்துக்கான போராட்டங்கள் நடந்து கொண்டே உள்ளன. இதை அடக்கமுடியாமல், திணறிக்கொண்டிருக்கிறது இலங்கை. மறுபக்கம் தீக்குளிப…

  15. ஈழத்தமிழர்களுக்காக அனைத்துக்கட்சிகளும் குரல் கொடுக்கும் நிலையினை தமிழக மாணவர்கள் போராட்டம் ஏற்படுத்தியுள்ளது: பழ.நெடுமாறன் [காணொளி] உலகத்தமிழர்கள் அனைவருக்கும் புதிய நம்பிக்கையை தமிழக மாணவர்கள் போராட்டம் ஏற்படுத்தியுள்ளது. ஈழத்தமிழர்களுக்காக அனைத்துக்கட்சிகளும் குரல் கொடுக்கும் நிலையினை தமிழக மாணவர்கள் போராட்டம் ஏற்படுத்தியுள்ளது. நீங்கள் சுதந்திர தமிழீழம் மலர்வதை உங்கள் கண்களால் கண்டு உங்கள் தாயகத்திற்கு நீங்கள் திரும்பிச் செல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை. ஒன்றுபட்டு போராடுவோம் வெற்றி பெறுவோம் என்று சென்னையில் நடைபெற்ற தமிழகவாழ் ஈழத்தமிழர் பட்டினிப்போராட்டத்தில் கலந்துகொண்ட பழ.நெடுமாறன் அவர்கள் தெரிவித்துள்ளார். பழ.நெடுமாறன் அவர்களின் உரையின் முழும…

  16. இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடாத்த கால அவகாசம் தேவைப்படும் என ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இலங்கை நிரந்தரப் பிரதிநிதி டொக்டர் பாலித கொஹணே தெரிவித்துள்ளார். அல்ஜசீரா ஊடகத்திற்கு அளித்த விசேட செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், அமெரிக்கா உள்ளிட்ட உலகின் ஏனைய நாடுகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை போன்று இலங்கை விவகாரம் விசாரணை நடாத்தவும் போதிய அவகாசம் தேவைப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். முழுமையான விசாரணைகளை நடாத்துதவற்கு கால அவகாசம் தேவைப்படுகின்றது. சில வகை குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சரியான விசாரணை நடத்தாமல் எந்தவிதமான தீர்மானங்களையும் எடுக்க முடியாது. இலங்கையில் குற்றச் செயல்களுக்கு தண்…

  17. பிரிவினையை உருவாக்குவதற்கான புதிய உத்தியை சர்வதேச சமூகம் இலங்கையில் பரீட்சித்துப் பார்க்க முயற்சிப்பதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. தற்கொலைக் குண்டுதாரிகள் மூலம் நாட்டின் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்க எடுக்கப்பட்ட முயற்சிகளை முறியடித்த இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கையை ருவான்டாவில் நடந்த மக்கள் படுகொலைகளுடன் ஒப்பிட்டுப் பேசுவது நியாயமற்றது என்று இலங்கை அரசாங்கத்தின் மூத்த அமைச்சர் டலஸ் அலகப்பெரும ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார். 'பழைய வாக்குறுதிகள்': ஐதேக முப்பது ஆண்டுகால யுத்தத்திலிருந்து மீண்டு இருக்கின்ற இலங்கையின் மீது ஐநாவின் மனித உரிமைகள் கவுன்சில் தேவையற்ற அழுத்தங்களைக் கொடுப்பதாகவும் இலங்கை அரசாங்கம் குற்றஞ்சாட்டுகிறது. ஆனால் இலங்கை அரசாங்கம…

  18. இலங்கை தொடர்பான தீர்மானத்தை ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவந்து நிறைவேற்றுவதற்கு இந்தியாவிடமிருந்து கிடைத்த ஒத்துழைப்பு தொடர்பில் திருப்தியடைவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஆரம்பம் முதல் தீர்மானம் நிறைவேற்றப்படும் வரை இந்தியாவோடு மிகவும் நெருக்கமாகச் செயற்பட்டதாகவும் அமெரிக்காவின் மத்திய ஆசிய மற்றும் தெற்காசியப் பிராந்தியத்துக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் ராபர்ட் பிளேக் பிபிசிக்கு அளித்த பிரத்தியேகச் செவ்வியில் தெரிவித்தார். இலங்கை விவகாரத்தில் குறிப்பிடத்தக்க செல்வாக்கை செலுத்தக்கூடிய இந்தியாவின் ஒத்துழைப்போடே சர்வதேச சமூகம் இந்த விடயத்தில் செயற்பட முடியும் என்றும் ராபர்ட் பிளேக் தெரிவித்தார். மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தில் இலங்கைக்கு நெருக்கடி …

  19. சிறீலங்கா ஆதரவினை இந்திய அரசு நிறுத்தாவிட்டால் இந்திய ஒருமைப்பாட்டுக்கு மத்திய அரசு கொள்ளி வைக்கும்: வைகோ தமிழீழத்திற்கு இந்திய அரசு உதவாவிட்டாலும் சிங்கள அரசுக்கு மத்திய அரசு உதவுவதை நிறுத்தாவிட்டால் இந்திய ஒருமைப்பாட்டுக்கு மத்திய அரசு கொள்ளி வைக்கும்… அரசியல் கட்சிகளை கடந்து மாணவர்கள் பட்டாளம் இந்திய அரசினை தலைவணங்க வைப்பார்கள்.. விடியல் கண்ணுக்கு தெரிகிறது. உங்கள் காலத்தில் ஈழத்தை நீங்கள் காண்பீர்கள் என்று தமிழகவாழ் ஈழத்தமிழர்கள் சென்னையில் நடத்திய பட்டினிப்போராட்டத்தில் கலந்துகொண்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். வைகோ அவர்களின் உரையினை கீழே காணொளியாக காணவும்.. http://www.periyarthalam.com/2013/03/23/%E0%AE%9A%E0%AE%BF%…

  20. தமிழ் இன அழிப்புக்கு நீதி கேட்டும்,எமக்காக குரலெழுப்பும் தமிழ்நாட்டு மாணவர்களின் எழுச்சிப் போராட்டங்களுக்கு அதரவு தெரிவிக்க ஐ . நா முன்றலில் பெரும் தொகையான மக்கள் கூடியிருந்தனர். தமிழீழ விடியலுக்காய் போராடிவரும் தன் மான தமிழன் சீமான் சிறப்புரையாற்றினார் . மேலதிக செய்திகளை விரைவில் எதிர்பாருங்கள்.... http://www.eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=19746:2013-03-22-17-07-01&catid=1:aktuelle-nachrichten&Itemid=50

  21. -மொஹொமட் ஆஸிக் மத்ரஸா ஒன்றில் கடமையாற்றும் மௌலவி ஒருவர் அணிந்திருந்த தொப்பியை பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த ஒருவர் பலவந்தமாக அபகரித்து அதனை கீழே போட்டு மிதித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கண்டி கல்ஹின்னை பிரதேச மத்ரஸா ஒன்றில் கடமையாற்றும் மௌலவி ஒருவரின் தொப்பியையே குறித்த நபர் இவ்வாறு அவமதித்துள்ளார். பூஜாப்பிட்டிய நகரில் வைத்தே இவ்வாறான இக்கட்டான நிலைமைக்கு அவர் முகம் கொடுத்துள்ளார். மௌலவி ஒருவர் இவ்வாறான நிலைமைக்கு முகம் கொடுத்ததாக பூஜாப்பிட்டிய பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியின் உறுப்பினர் ஏ.எல்.எம். ரஸான் தெரிவித்துள்ளார். பூஜாப்பிட்டிய பிரதேச சபையின் மாதாந்த கூட்டத்தில் உரையாற்றும் போதும் அவர் இதனை குறிப்பிட்டார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற…

    • 4 replies
    • 764 views
  22. ஐ.நா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் இந்திய அரசு நடந்துகொண்ட முறைமையை இலங்கை அரசாங்கம் போற்றுகிறதா? அல்லது தூற்றுகிறதா? என்ற சந்தேகம் இலங்கை மக்கள் மத்தியில் எழுந்துள்ளது என்று ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அமெரிக்க தீர்மானத்தின் கடுமையை குறைத்து இந்தியா செய்த உதவிக்கு, அரசாங்க அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல பகிரங்கமாக நன்றி தெரிவித்துள்ளார். அதேவேளையில், பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அமைச்சர்கள் சம்பிக்க ரணவக்க, விமல் வீரவன்ச ஆகியோர் இந்தியாவை கண்டித்து உள்ளனர். இது இந்தியா தொடர்பில் இலங்கை அரசாங்கத்துக்கு உள்ளே இருக்கும் இரண்டு முகங்களை காட்டுகின்றது என்றும் அவர் சு…

    • 2 replies
    • 291 views
  23. இலங்கை அதிபர் ராஜபக்சவை போர்குற்றவாளியாக அறிவித்து அவரை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டிக்க வேண்டும்” என்ற கோரிக்கை வலுவடைந்து வரும் நிலையில், மதுரையில் இன்று மாவட்ட நீதிமன்ற வளாகத்தில், மதுரை வழக்கறிஞர் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட‌ சர்வதேச மாதிரி நீதிமன்றத்தில் ராஜபக்சவுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. மதுரை கோர்ட் வளாகத்தில் சாமியானா பந்தல் போட்டு, நீதிபதிகள் இருக்கை, வழக்கறிஞர்கள் மேஜை, குற்றவாளிக் கூண்டு என்று பக்கா அசல் போல் ‘மாதிரி நீதிமன்றம்’ அமைக்கப்பட்டிருந்தது. வழக்கறிஞர் சங்க செயலாளர் ஏ.கே.ராமசாமி, மூத்த வழக்கறிஞர் காராளன் ஆகியோர் சிறப்பு நீதிபதிகளாக நியமிக்கப்பட்டிருந்தார்கள். சர்வதேச விசாரணைக் குழுவால் கைது செய்யப்பட்ட ராஜபக்சவை (கொடும்பாவி…

    • 2 replies
    • 586 views
  24. உலக அரங்கில் தமிழர்களுக்கு நீதியும், தீர்வும் கிடைக்கும் காலம் நெருங்கி வருகின்றது! – சுமந்திரன் நம்பிக்கை!! ஐ.நாவில் இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த இரண்டாவது பிரேரணையும் வெற்றியடைந்ததன் மூலம் உலக அரங்கில் தமிழர்கள் இரண்டாவது வெற்றிப்படியில் ஏறி நிற்கின்றார்கள். இந்தப் பிரேரணையைக் கொண்டுவந்த அமெரிக்காவுக்கும், பிரேரணையை ஆதரித்த இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுக்கும் நன்றியைத் தெரிவிக்கிறோம். பிரேரணை விடயத்தில் இந்திய அரசை வற்புறுத்தி தமிழகத்தில் பேரெழுச்சி கொண்ட மாணவர்களுக்கும் நன்றி தெரிவிக்கிறோம். இவ்வாறு அமெரிக்க பிரேரணை நிறைவேற்றப்பட்டது தொடர்பில் தமிழ்த் …

    • 5 replies
    • 932 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.